Thursday 13 July 2017

சுஜாதாவின் வெளிநாட்டுக்குடை - சுந்தர ராமசாமி

சுஜாதாவின் வெளிநாட்டுக்குடை -
 சுந்தர ராமசாமி

AUTOMATED GOOGLE-OCR
 THANKS TO WWW.MAAMALLAN.COM FOR JPG IMAGES

1992 மார்ச் மாத சுபமங்களாவில் சுஜாதா, 'காலச்சுவடு சிறப்பிதழ் பற்றி அவருடைய பாணியிலான மதிப்புரை ஒன்றை எழுதியிருக்கிறார். மதிப்புரை என்ற பழைய சொல்லைப் பயன்படுத்துகிறேன். உண்மை யில் அவருடையது, மதிப்புரைக்கும் திறனாய்வுக்கும் இடைப்பட்ட நவீன சூட்சுமம் ஒன்றை மொழிவழிப்படுத்துவதாகும் இந்தச் சூட்சுமத் திற்கு இன்னும் வார்த்தை முளைத்தாகவில்லை என்றாலும் சுஜாதா வளர்த்து வரும் தமிழ் மூலமே நமக்கு எந்த நிமிடமும் அது இடைக்க வும் கூடும்.

சுஜாதாவின் மதிப்புரை, காலச்சுவடு மலரைப் படிக்கும் வாய்ப்புப் பெறாத வாசகரிடையே பல தவறான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடியது. வெகுஜன இதழ்களுக்குப் படிந்துபோன ஒரு வழக்கமான முகம் இருப்பது போலவே, சிற்றிதழ்களுக்கும் பழக்கப்பட்டுப்போன ஒரு மோஸ்தர் முகம் இருக்கிறது. ஏறத்தாழ அந்த முகத்தைத்தான் காலச்சுவடும் காட்டுகிறது என்பதுதான் சுஜாதாவின் மதிப்புரையின் சாரம் இது எந்த அளவுக்கு தன்மை? காலச்சுவடு மலரைக் கவன மாகப் படிக்கும் ஒரு வாசகனுக்கு சுஜாதாவின் முடிவுகளை ஏற்றுக் கொள்வது சாத்தியமில்லாமலே இருக்கும் வணிக சஞ்சிகைகளால் உருவாக்கப்பட்டுவரும் வாசகர் மத்தியில், சிற்றிதழ்கள் பற்றிப் பொது வாக இருக்கும் குறைகளைத் தொகுத்துக் காலச்சுவடு மலர் மீது பொறுப்பின்றிக் கவிழ்க்கும் தந்திரத்தை மட்டுமே சுஜாதா தம மதிப்புரையில் செய்திருக்கிறார். காலச்சுவடு மலரின் உள்ளடக்கத்தை நடுநிலையில் நின்று பார்த்து அதன் நிறைகுறைகளை அவருடைய பா. இக்கட் அவர் முன்வரவில்லை

காலச்சுவடு மலரில் வெளியாகி இருக்கும் விஷயங்கள் வறண்ட சிக்கலான, கடுமையான மொழியில் எழுதப்பட்டவை -9|al)ճմ, சுமார் முந்நூறு பக்கங்கள் கொண்ட இந்த ரின் பெரும்பகுதியை

ஆளுமைகள் மதிப்பீடுகள் / 879________________




ஒரு வாசகன் எவ்விதச் சிரமமுமின்றிப் படித்துவிட முடியும் எந்த வாசகன் குமுதம், சரோஜா தேவி, சுஜாதா வாசகனா? இவர்களுக்கு மலர் போய்ச் சேராது. நவரச லேகியங்களுக்கு மட்டுமே வாய் திறக்கும் குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்டது அல்ல காலச்சுவடு மலர் பாரதி, புதுமைப்பித்தன் போன்றோர் படைப்பில் நிறுவியுள்ள தரத்தை எதிர்கொள்ள ஒரு தமிழ் வாசகனுக்கு மூளைத் திட்பம் இருக்குமென்றால் அவனால் காலச்சுவடு மலரைப் படிக்க முடியும் நேற்றைய படைப்புகளின் தரத்தை அறிந்த ஒரு வாசகன் காலத்தின் நவீன முகங்களை அறிந்துகொள்ளத் தவறியிருந்தால் அல்லது அறிந்துகொள்ளும் விருப்பமற்றவனாக இருந்தால் காலஒரு சில பகுதிகள் அவனுக்குச் சிரமத்தைத் தரக்கூடும். என் அதிருஷ்டம் மலரில் இரண்டு விஷயங்கள் சுஜாதாவுக்கு முழுமையாகவே பிடித்துப்போய்விட்டன. அண்ணாமலையின் கட்டுரையும் தமிழ்ச் செல்வனின் கதையும் மற்றவர்களுக்கெல்லாம் ஒரு ஷொட்டும் ஒரு நொள்ளையும் சிலருக்கு நொள்ளை மட்டும். சிற்றிதழ்களிலும், வணிக இதழ் போலவே திரும்பத்திரும்ப ஒரு சிலர்தான் எழுதுகிறார்கள் என்று புதுமுகங்களையும் ஆழங்களையும் காணத் துடிக்கும் சுஜாதா அங்கலாய்க்கிறார். ஆனால், அண்ணாமலை யும் தமிழ்ச் செல்வனும் சிற்றிதழ் வட்டத்திற்குப் புதியவர்கள் என்ற உண்மையைக் கவனமாக "ஒளித்து வைத்துக்கொள்கிறார். சுஜாதா பார்வையில் சுவாரஸ்யமான இவர்களுடைய எழுத்துகளை சுஜாதாவின் குமுதங்கள் வெளியிடுமா? அப்படியென்றால் வணிக எழுத்தைத் தாண்டிச் சில சுவாரஸ்யங்கள் சுஜாதாவுக்கும் தேவைப்படு கின்றன. தன்னுடைய சுவாரஸ்யம்தான் தமிழின் இறுதி எல்லை என்று சுஜாதா கற்பனை செய்துகொள்ள விரும்புகிறார். சுஜாதாக்களை யும் குமுதங்களையும் தாண்டி வந்தவர்களுக்காக நடத்தப்படுபவை சிற்றிதழ்கள். அண்ணாமலையின் கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது மிகக் கொஞ்சம் உணர்த்தப்படுவது மிக அதிகம் கட்டுரை முடியும் இடத்தில் நம் சிந்தனை தொடர்கிறது. சிந்திக்க வாய்ப்புப் பெறுவது சிலருக்கு சுவாரஸ்யம். இந்த சுவாரஸ்யத்திலிருந்து விவாதமும் செயல்பாடும் தொடர்ந்து தமிழ்க் கலாச்சாரம் செழுமை பெறலாம். வயது வந்தவர்களையும் மடியில் போட்டுக்கொண்டு அவர்களுக்குப் பாலூட்டி, இனிப்புத் தந்து தொடைகளை நீவிவிட்டு, காசும் புகழும் பறித்துக்கொள்வது மற்றொரு கலாச்சாரம் இரண்டு கலாச்சாரங்களும் அவரவர்க்கு சுவாரஸ்யமானவையே. இவற்றில் எதை ஒரு எழுத்தாளன் தேர்வு செய்கிறான் என்பது அவன் வியாபாரியா அல்லது படைப் பாளியா என்பதைப் பொறுத்தது.

காலச்சுவடில் படைப்புகள் நல்ல தமிழில்தான் எழுதப்பட்டிருக் கின்றன. இந்த உண்மையைச் சாகடிக்கப் பூரணச்சந்திரன் கட்டுரை யிலிருந்து தேடிக் கண்டுபிடித்து ஒரு வாக்கியத்தைத் தந்திருக்கிறார் சுஜாதா கட்டுரையிலிருந்து வெட்டி வெளியே வைக்கப்பட்டுள்ள

680 / சுந்தர ராமசாமி________________




-

அத 'நிழலாக இருக்கிறது. ஆனால், பூரணச்சந்திரன் கட்டுரை மிகத் தெளிவானது. அமைப்பியல் வாதத்தை மோஸ்தர் குணததுடன அணுகக்கூடாது எனபது குஜாதாவின் உபதேசம் இதே பார்வைதாश பூரணச்சந்திரனுக்கும் தமிழ்ப் பின்னணியைச் Frtřigy அமைப்பியல் வாதம முன வைக்கப்பட வேண்டும் என்றும் பிறரை பயமுறுதத ஒரு குண்டாந்தடியாக அதைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அமைப்பியல் வாதத்தின் தத்துவ சஞ்சாரங்களிலிருந்து மிக்கு வந்து தமிழ்ப் படைப்புகளை அமைப்பியல் பார்வையில் விண்டு சொல்லும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் பூரணச்சந்திரன் கூறுகிறார். தன் பார்வையில் நின்று திறந்த மனத்துடன் மதிப்பிடக்கூடிய மனம் சுஜாதாவுக்கு இருந்திருந்தால் பூரணச்சந்திரன் கட்டுரையை அவர் தமிழ் வாசகருக்குச் சிபாரிசு செய்திருக்கக்கூடும் சிற்றிதழ்களில் வழக்கமாக எழுதாத பலரும் காலச்சுவடில் எழுதியி ருக்கிறார்கள். இ.அண்ணாமலை என்.பி.ராமானுஜம் எம்.ஏ.நுஃமான், ஜி.ஆர்.பாலகிருஷ்ணன், ஹெப்சிபா ஜேசுதாசன், வேதசகாயகுமார், பாரதிபுத்திரன், சோலைக்கிளி, சேரன், வ.ஆறுமுகம் என்று பலரும் இவர்கள் எல்லோருமே சிற்றிதழ் வட்டத்திற்கு வெளியே இருப்பவர்கள் தீவிரமான எழுத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால், இன்று ஆழமான எழுத்தில் நம்பிக்கை கொண்ட பலருக்கும் சிற்றிதழ்கள் மட்டுமே இடம் தருகின்றன. ஆக, இவர்களுடைய படைப்புகள் காலச்சுவடிலும் இடம் பெற்றிருப்பது வெகு இயற்கையான காரியம் ஸ்லோ மோஷன்" என்பது இன்று செல்லுபடியாகாத பழைய வாதம் கதைக்கு ஸ்லோ மோஷன் நிறையும் அல்ல; குறையும் அல்ல. வேகம், வேகமின்மை எடுத்துக்கொள்ளும் விஷயத்தைப் பொறுத்தது. திரைப்படங்களில் ஸ்லோ மோஷன்" என்ற வகையில் படும் பதேர் பாஞ்சாலி தன்னிகரற்ற கலை, பல "ஸ்லோ மோஷன்" படங்கள் பெரிய அறுவைகள். பதேர் பாஞ்சாலி வேண்டாம்: எம்.ஜி.ஆர் படம் போதும் என்று கூறும் வணிக புத்தி இன்று தமிழ்க் கருத்துலகத்தில் செல்லுபடியாகாது. சுஜாதாவுக்கு დისე0:Bambrr மோஷன் பிடிக்காது என்றாலும் ஸ்லோ மோஷன் கதையான மாமல்லன் கதை பிடித்திருக்கிறது. அதை நான் சிறிது எடிட் செய்திருந்தால் மேலும் பிடித்திருக்கும். அனைவராலும் பாராட்டப் பட்டுள்ள ஸ்லோ மோஷன் கதையல்லாத ஜெயமோகனின் விறுவிறுப் பான கதையை அவர் கண்டு கொள்ளவே இல்லை. சுஜாதாவின் பார்வை ஒரு வெளி நாட்டுக் குடை அவர் விரும்பும்போது விரிக் கலாம் விரும்பாதபோது சுருக்கிக் கக்கத்திலும் இடுக்கிக்கொள்ளலாம் சாதத் ஹசன் மண்டோவின் கதைகள் பற்றியும் அவரை அறிமுகம் செய்யும் ட்டுரை பற்றியும் அவருக்குச் சொல்ல ஒன்றுமில்லை வ.கீதாவின் ஆல்பெர் காம்யு கட்டுரை பற்றி அவருக்குச் சொல்ல ஒன்றுமில்லை. காம்யுவைப் பற்றிய கூரான விமரிசனம் அது சுய படிப்பிலிருந்து உருவாகிவந்த விமரிசனம்

ஆளுமைகள் மதிப்பீடுகள் / 68________________




காலச்சுவடின் பக்கங்களில் பல உள் இணைப்புகள் இருக்கின்றன. நீல பத்மநாபனைப் பற்றியும் மீரானைப் பற்றியும் நுஃமான் எழுதியிருக் கும் கட்டுரைகள் ஒரே பார்வையின் இரண்டு பகுதிகள் இரு நாவலா சிரியர்களுமே தெரிந்தவர்களைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார்கள் ஒன்று அவதூறு மற்றொன்று படைப்பு ஏனென்று நுஃமான் விளக்குகிறார். எம். டி முத்துக்குமாரசாமியின் நாடகம் சிற்றிதழ் வாசகர்களுக்குக்கூடச் சற்று சிரமத்தைத் தரலாம். அந்த வகையில் அந்த ஒன்றுதான் மலரில் இடம்பெற்றிருக்கிறது. இந்த நாடகத்தை வாசகர்கள் தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்து அந்த நாடகம் சேர்க்கப்பட்டிருக்கிறது. அர்த்தத்தின் தளத்தில் மொழி இயங்கும் காலம் இலக்கிய வரலாற்றில் முடிந்துவிட்டதா? அமைப் பியல்வாதிகள் உலக விமரிசன வளத்திற்கு என்ன பங்கைச் சேர்த்திருக் கிறார்கள் அவர்களுடைய தமிழ் வாரிசுகள் என்ன பங்கை இப்போது ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள்? இந்த நாடகத்தையும் பூரணச்சந்திரன் கட்டுரையையும் இணைத்துப் பார்க்க வேண்டும் அவர்கள் மனத்தில் எண்ணற்ற சந்தேகங்கள் தோன்றலாம். அக்கேள்விகள் இன்று உரக்கக் கேட்கப்பட வேண்டியவை. அதற்கான ஒரு முகாந்திரத்தை இந்தப் படைப்பை வெளியிடுவதன் மூலம் காலச்சுவடு உருவாக்க முயல்கிறது. வ. ஆறுமுகத்தின் கருஞ்சுழி நாடகம் தில்லியில் அரங்கேறியபோது, அது அகில இந்திய கவனத்தைப் பெற்றது. பாண்டிச்சேரியிலும் சுற்று வட்டாரங்களிலும் இந்த நாடகத்தைப் பலரும் விரும்பிப் பார்த்திருக் கின்றனர். குழந்தைகள் மிகுந்த ஈடுபாட்டுடன் பார்த்திருக்கின்றன. அதன் எழுத்து வடிவம் காட்சி வடிவத்தைக் கேட்டு நிற்பதுதான். ஆனால், அந்த எழுத்து வடிவத்துடன் ஒரு வாசகன் முன்பரிச்சயம் ஏற்படுத்திக்கொண்டால் காட்சி வடிவம் பார்க்கக் கிடைக்கும்போது மேலும் தெளிவு பெறும் மற்ற மொழிகளில் நட்சத்திர மதிப்புப் பெற்றிருக்கும் நாடக ஆசிரியர்களுக்கு இணையான ஒரு நாடகத்தைக் குக்கிராமப் பின்னணி கொண்ட ஒரு தமிழ் விவசாயி உருவாக்கி இருக் கிறார். அந்தச் சாதனையை ஆமோதிக்கவும் அந்த வசனம் பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோன்ற புதிய முயற்சிகள் தோல்வி அடையும்போதுகூட அவை "க்ளிஷே' அல்ல. உண்மையில் "க்ளிஷேஐ வைத்துத் தொழில் நடத்துபவர்கள் வணிக எழுத்தாளர்கள்தான். நான் மிகவும் போற்றும் விஷயங்களை மட்டுமே காலச்சுவடு மலரில் தந்திருந்தால் மலர் ஐம்பது அறுபது பக்கங்களில் முடிந்திருக் கும். என்னுடைய ருசியைச் சார்ந்து தமிழிலக்கியத்தின் விதி தீர் மானிக்கப்படுகிறது என்ற கற்பனை எனக்கில்லை. தமிழில் இன்று பல போக்குகள் இருக்கின்றன. பல வகைகள் இருக்கின்றன. பல அலை வரிசைகளில் படைப்பாளிகள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். யதார்த்தத்தின் யந்திர ரீதியிலான பிரதிபலிப்பு என்ற அலைவரிசை யிலிருந்து யதார்த்தத்தை முற்றாகச் சிதைக்கும் அலைவரிசை வரை யிலும் எழுத்துகள் போய்க்கொண்டிருக்கின்றன. வேறு இந்திய மொழிகளில் படைப்பு சார்ந்த நம்பிக்கைகள் இவ்வளவு இருக்கின்

682 / சுந்தர ராமசாமி________________




னும் எம். டி. எம்மும் பூரணச்சந்திரனு சாதத் ஹசன் மண்டோவும், ஆல்பெர் கிறார்கள். படைப்புக் கலை சார்ந்த வெவ்வேறு நம்பிக்கைகளை இவர்கள் முன்வைக்கிறார்கள். தமிழ் வாசகர்கள் இவர்களைத் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

சிற்றிதழ்களுக்குரிய மேற்கத்திய மயக்கங்களுக்கு எதிராகச் செயல் Htt இதழ் காலச்சுவடு, நமக்காகச் சிந்திக்கும் பொறுப்பை ஐரோப்பா விடம் ஒப்படைத்திருக்கும் தமிழ் அறிவுவாதிகளின் மறுபக்கம் இது நம்முடைய பிரச்சினைகளைப் பற்றி உலகச் சிந்தனையாளர்களுக்கு இணையாக நம்மாலும் சிந்திக்க முடியும் என்ற உண்மையைக் காலச்சுவடு உருவாக்க முயன்றது. என் வரையறைகளும் சூழலின் எதிர்மறையான அழுத்தங்களும் இணைந்துகொள்ள, பல காரியங்கள் நினைத்த அளவுக்குச் செய்ய இயலவில்லைதான். எம்.என். ராய் பற்றியும் கோசாம்பி பற்றியும் எம். கோவிந்தன் பற்றியும் காலச்சுவடு பேசிற்று. இவர்கள் உலகச் சிந்தனையாளர்களுக்கு இணையானவர்கள். மட்டுமல்ல, இந்திய மதங்களையும் இந்திய மனங்களையும் இந்தியச் சூழலையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நம் பிரச்சினைகளுக்கு விடை தேட முயன்றவர்கள். இந்த வரிசையில் ராம் மனோகர் லோகியா போன்ற வேறு பலரைப் பற்றியும் சொல்ல காலச்சுவடுக்கு யோசனை இருந்தும் நடைமுறைப்படுத்த முடியாமற்போயிற்று இந்தியப் படைப் பாளிகள் பலரையும் காலச்சுவடு தொடர்ந்து கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. சகல தேசங்களைச் சேர்ந்த தரமான தமிழ் எழுத்தாளர் களும் தமிழகச் சிற்றிதழ்களில் இணைய வேண்டும் என்பதற்கு அடையாளமாக ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களுக்குக் காலச்சுவடு தொடர்ந்து இடம் தந்துவந்திருக்கிறது.

காலச்சுவடு இதழின் எடிட்டராக என்னால் நிமிர முடியவில்லை. அதனால், நான் எடிட் செய்யவும் இல்லை. ஒரு சில படைப்புகளை எடிட் செய்திருந்தால் அவை மேலும் துலக்கம் பெற்றிருக்கும் என்பது உண்மைதான். ஆனால் 7 செ. மீ நீளம் இருக்கும் ஒரு கவிதையிலிருந்து அனாவசியமான ஒரு சொல்லை அகற்றினால் அந்தக் கவிஞருக்கும் எனக்கும் அன்று ஆரம்பிக்கிறது ஜென்மப் பகை தகவல ரீதியான ஒரு பிழையைத் திருத்தியதற்காக ஒரு தமிழ் அறிவுவாதி தன் வில்லை நாண் ஏற்றினார் எழுத்தாளர்களின் இரத்தக் கொதிப்புகளில் நான் இறு வயதில் மட்டும் கேட்டிருக்கும் வ"ை :* கடித குபங்களில் வந்து சேருகிறபோது அவற்றை என மனைவபடிககக கூடாது என்பதற்காக மறைத்து வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

n ஹெப்சிபா ஜேசுதாசனும் Tமயுவும் இடம் பெற்றிருக்

ஆளுமைகள் மதிப்பீடுகள் / 683________________




என் கவிதையை ஏன் திருப்பினீர்கள் என்று ஒரு கவிஞர் யுத்த சன்னதம் கொண்டபோதுதான் அவருக்கு உரைநடை எழுதத் தெரியாது என்ப தும் உரைநடை எழுதத் தெரியாததை "ஒளித்து வைத்துக் (சுஜாதாவுக்கு நன்றி!) கொள்ளவே அவர் கவிதைகள் எழுதிவருகிறார் என்பதும் வெளிப்பட்டது. தமிழ் எழுத்தாளர் எண்ணிக்கை மிக அதிகமாகவும் உழைப்பாளர் எண்ணிக்கை மிகக் குறைவாகவும் இருக்கிறது.

தமிழ்ச் சூழல் பற்றி அறிந்திருக்கும் சுஜாதா அவருடைய அறிவை ஒளித்து வைத்துக்கொண்டு காலச்சுவடை உற்சாகமாகக் கிழிக்கிறார்.

ஒரு கலாச்சாரச் சூழலில் ஒருவன் ஆசிரியராகச் செயல்படுவது அந்தச் சூழலில் நிகழும் நாகரிகம் சம்பந்தப்பட்டது. 'மிகச் சிறந்த எழுத்தை எனக்குத் தா' என்று வாசகர்களும் மிக சிறந்த எழுத்தை உனக்குத் தருகிறேன்' என்று எழுத்தாளரும் ஆசிரியரைப் பார்த்துச் சொல்லும் நாகரிகம் அது ஆசிரியருக்குரிய சுதந்திரங்களை தாட்சண்ய மின்றி அமல்படுத்து' என்று வற்புறுத்தும் கலாச்சாரம் அது நேற்று வந்த கடிதத்தில் ஒரு புகழ் பெற்ற அறிவுவாதி அவருடைய நூலுக்குக் காலச்சுவடு மலரில் மதிப்புரை எழுதியிருந்தவரைக் குறிப்பிட்டு அந்தத் திமிர் பிடித்த மடையனை விட்டு ஏன் விமரிசனம் எழுதச் சொல்லியிருக்கிறீர்கள்?' என்று கேட்டிருக்கிறார். திமிர் பிடித்த மடையன்' என அவர் அன்புடன் வருணிக்கும் சக தொழிலாளி டாக்டர் பட்டம் பெற்று ஒரு கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்று பவர் பண்டைத் தமிழ் இலக்கியமும் நவீனத் தமிழ் இலக்கியமும் கற்றவர். நவீனத் தத்துவங்களைக் கற்றவர். நேர்மையான எழுத்தாளர் என்ற மதிப்புப் பெற்றவர். அவருடைய மதிப்புரையில் சில குறைகள் இருக்கலாம். அந்தக் குறைகளைக் கண்டுகொள்ளும் அளவுக்கு எனக்குப் படிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், சக தொழிலாளியைத் திமிர் பிடித்த மடையன் என்று ஒருமையில் அழைக்கும் அறிவுவாதிகள் வாழும் கலாச்சாரத்தில் நான் தொகுப்பாசிரியராகச் சரிந்திருக்கிறேன். ஆசிரியராக நிமிர முடியவில்லை. மன்னிக்க வேண்டும் சுஜாதா.

வெகுஜனப் பத்திரிகைகளும் சிறு பத்திரிகைகளும் ஒன்றுக்கொன்று குறுக்கிடாது இயங்கும் விந்தை மலையாளத்தில் இல்லை என்று நீல பத்மநாபன் சுஜாதாவிடம் தெரிவித்திருப்பது சரிதான். ஆனால், வணிகச் சீரழிவின் நாயகனே நீதிபதி வேஷமும் போட்டுக்கொண்டு சீரழிவுக்கு எதிரான கலாச்சாரத்தை உருவாக்கத் திணறிக்கொண்டிருக் கும் குற்றவாளிகளைத் தண்டிக்க முற்பட்டால் அதை மலையாளக் கலாச்சாரம் எப்படி எதிர்கொள்ளும் -தூற்றுமா, போற்றுமா, கைகொட்டிச் சிரிக்குமா? இதற்கான விடையையும் சுஜாதா கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

சுபமங்களா, ஏப்ரல் 1992

684 / சுந்தர ராமசாமி