Friday 25 September 2015

அல்தூஸ்ஸரை மறுக்கும் பூக்கோ... - முனைவர் ந.முத்துமோகன்

(மார்க்சிய விவாதக் கட்டுரைகள் பலதந்த முனைவர் ந.முத்துமோகன் அவர்களின்  மிஷல் பூக்கோ  குறித்த மதிப்பீட்டை தெளிவுபடுத்துமுகமாக இக்கட்டுரை  இடம்பெறுகிறது.)
 *  அல்தூஸ்ஸரின் மாணவன்  நான்'  என்று முழங்கும் பூக்கோ 1967 பேட்டி ஒன்றில்:  "அவருடைய  மாணவன் என்ற முறையில் அதிகம் கடமைப்பட்டுள்ளேன். அவருக்கு சவால் விடும் வகையில் என்னுடைய முயற்சி ஒன்றை அவருடைய  கையெழுத்தின் கீழ் வைக்கிறேன். அவருக்குப் பிடித்தமான தளத்தில் என்னால் எதிர்வினை ஆற்றமுடியாது.  ஆனால் ஒன்று சொல்வேன்: 'அல்தூஸ்ஸரின்  புத்தகங்களை திறந்து பாருங்கள். எனக்கும் அவருக்குமான வேறுபாடு/ வித்தியாசம் அவற்றில் காண்பீர்;  மார்க்சை குறித்துச் சொல்லும்போது சூஎபிஸ்டமாலஜிக்கல் பிரேக்'    என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.    
(அதுகால வரைக்குமுள்ள மொத்த அறிவுத்தோற்ற கருத்தாக்கத்தையே மார்க்ஸ்தான் மாற்றியமைக்கிறார்)    நான் உறுதியாகச் சொல்வேன் மார்க்சிடம் அப்படியொரு அறிவுத்தோற்ற நிறுத்தம் / அறிவுத் திருத்தம் இல்லை"
* அல்தூஸ்ஸரின் சூலெனினும் தத்துவமும்' மற்றும் பூக்கோவின் அறிவு குறித்த தொல்லியலாய்வு' போன்ற படைப்புகளில் சொல்லாடல், சித்தாந்தம், விஞ்ஞானம் என்ற மூன்றையும் குறித்து வலுவான விமர்சனங்கள், வரையறைகள் இருவரிடமிருந்தும் கிளம்பின. அல்தூஸ்ஸரை  மறுத்துதான் பூக்கோ தன்னுடைய கருத்தாக்கங்களை வைக்கிறார்.  பிரெஞ்சு விஞ்ஞான தத்துவவாதி  ஜார்ஜ் கங்குயிலெமின் கருத்தாங்களால் கவரப்பட்ட அல்தூஸ்ஸருடைய படைப்புகளை,    ("கங்குயிலெமிற்கு நான் மிகுந்த கடமைப் பட்டுள்ளேன் "அல்தூஸ்ஸர்)   தீவிர மார்க்சிய பார்வையை கருத்துமுதல்வாதி பூக்கோ  நிராகரித்துவிட்டார். கங்குயிலெமின் நூலுக்கு முன்னுரை எழுத வந்த பூக்கோவினுடைய விஷமத்தனமான வார்த்தைகளில்:
 "கங்குயிலெமை எடுத்துவிட்டால் உங்களால் அல்தூஸ்ஸரை / அல்தூஸ்ஸரியத்தை, பிரெஞ்சு  மார்க்சியருக்குள் நடந்த மொத்த விவாதத்தையுமே  புரிந்துகொள்ளமுடியாது; சமூகவியலில் மிக வலுவான கருத்தாக்கங்களை பதித்த பூர்தியோ, காஸ்டெல், பாஸ்ஸரென் மற்றும் லகானியர்கள் சொல்லும் மொத்த உளவிய பகுப்பாய்வு முறையை உங்களால் நெருங்கவே முடியாது. மேலும் 68, மாணவர் எழுச்சிக்கு முன்னும் பின்னும் உயர்ந்த  கூர்மையான விமர்சன சிந்தனையாளர்கள் பலரும் கங்குயிலெமிடமிருந்து உருவானவர்களே.''
அமெரிக்க வரலாற்றாசிரியரும் விஞ்ஞான  தத்துவவாதியும் புகழ்பெற்ற "விஞ்ஞானப் புரட்சியின் அமைப்புகள்" நூலாசிரியருமான தாமஸ் குன் சொல்லும், 'ஒரு காலகட்டத்தில் கோலோச்சும் அறிவுச்சிந்தனை',/ விஞ்ஞானஅறிவின் நகர்வு' போன்ற கருத்தாக்கங்கள், விளக்கங்கள் மொத்த விஞ்ஞானிகளுக்குமே புதிய தேடலை / ஆய்வுக் களத்தை விரிவுபடுத்தியது.            
* மிக முக்கியமாக,: விஞ்ஞானம்  சித்தாந்தம் இரண்டுக்குமான வித்தியாசத்தை / பிரிவையே  பூக்கோ  நிராகரித்தார். உலகளாவிய விவேகம்/அறிவார்த்தம் என்ற கருத்தை மறுத்து அதோடு மனிதத்தன்னிலை (தனிநபர்/கூட்டு) என்ற கருத்தையும்  நிராகரிக்கும் பூக்கோ சித்தாந்தம்'  என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாக்கமாக இல்லையென்று அதையும் நிராகரிக்கிறார்.  விஞ்ஞானத் துறைகளின் அறிதல் பாத்திரத்தை முழுவதும் பூக்கோ மறுதலிப்பார். ஆனால் வரலாற்றுச் சட்டகத்திற்குள் மனிதத்தன்னிலை யினுடைய பங்கு/இடம் குறித்து பகுப்பாய்வு ஒன்றை வடிவமைக்க வம்சாவளி முறையில் ஆய்வுசெய்திருக்கிறார். மார்க்சியம்  ஒரு விஞ்ஞானம்  என்ற  கோரிக்கை/ குறிக்கோள்  இங்கு விமர்சிக்கப்படுகிறது: “புறவயத் தன்மை/பருண்மைத்தன்மை என்ற மாயத்தோற்றத்தைக் கருத்தாக்கமாகக் கொண்ட மார்க்சி யம், புறவயத்தன்மை (பொருள்முதல்வாத) மற்றும் விஞ்ஞானத்தன்மையை முன்னரே சுவீகரித் துக் கொண்டதால், முதலாளித்துவ சொல்லாடல்  அதிகாரத்தின் வலிமையை உதாசீனம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது”
அல்தூஸ்ஸருடைய மையப்பகுதியே, மார்க்சை வாசிக்க வலியுறுத்திய விதமே விஞ்ஞானம் சித்தாந்தம்  என்ற மையப்புள்ளியிலிருந்துதான்.  மார்க்சிய தத்துவம் என அல்தூஸ்ஸர்  குறிப்பது "இயக்கவியல் பொருள்முதல்வாதம்" ஆகும். சொல்லாடலின் நிறுவன மறு உற்பத்தி என்கிற கருத்தாக்கத்தை திருத்திச் சொன்னது  அல்தூஸ்ஸருக்கு; ஆனால் பூக்கோவிற்கு சொல்லாடலின் வலிமையே அதிகாரமும் அறிவுமே. நிறுவனங்களின் அதிகாரம் அறிவுத்துறை களை வளர்ப்பதும் மறு உற்பத்தி செய்வதிலுமே குறியாக இருக்கிறது', என இருவருமே சொல்கின்றனர். இதனால்தான் செயல்முறை வாதிகள் என  இவர்கள் பழிக்கப்பட்டனர்.
விஞ்ஞான அறிவுத்தோற்ற / கங்குயிலெம் (1970)   தாமஸ் குன் தத்துவவாதி காஸ்டன் பேச்சலர்டு   
* காஸ்டன் பேச்சலர்டு (1938) பின்னால்  கங்குயிலெம்(1970)  இருவரும் விஞ்ஞானத்தின்  வரலாறு மற்றும் தத்துவம் குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளனர்.  விஞ்ஞானத்தின்  வரலாறு என்பதே அறிவுத்தோற்ற  தடைகள் / சிக்கல்களை மீறி அறிவுத்துறை வளர்ந்திருக்கிறது என்பதே. யூகங்கள், தேடல்கள், கணிப்புகள் யாவும், அறிவுத்தோற்றத்தின் மூடிய கதவுகள் உதைத்துத் திறக்கப்பட்டன. மொத்த அறிவுத்துறை கருத்தாக்க மறுசீரமைப்பே அறிவுத்தோற்ற தடை குறிக்கிறது.  அதுகால வரைக்குமுள்ள மொத்த செவ்விய பொருளாதார  அறிஞர்களின் கருத்தாக்கங்களையே மாற்றி ஒரு புதிய விஞ்ஞான அறிவுப்பார்வையை கொடுத்த மார்க்சைதான் அல்தூஸ்ஸர் வலிமையாக முன்வைக்கிறார்.  ஆனால் பூக்கோ  அல்தூஸ்ஸரை/ மார்க்சையே நிராகரிக்கிறார். விஞ்ஞான  வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தைச் சொன்ன  மார்க்ஸ், ஹெகலுக்கும் பாயர்பாக்கிற்கும் பயணித்த அறிவுத்தோற்ற தடையை கண்டுபிடித்ததாகும். அப்படியொரு விஞ்ஞான அறிவார்ந்த கண்டுபிடிப்பு மார்க்சிடம் இல்லை என்கிறார் பூக்கோ.
* அல்தூஸ்ஸர் வேண்டுமானால் பூக்கோவின் ஆசிரியராக இருக்கலாம். ஆனால் பூக்கோ தெரிதாவிற்கு ஆசிரியர்.. இப்போது அல்தூஸ்ஸரை மறுத்தவர், எதிர்த்தவர் பூக்கோதான். இருவரின் படைப்புகளும் ஒரேசமயத்தில் வெளியாயின. அல்தூஸ்ஸருடைய உறுதியான மார்க்சிய நிலை நிறுத்தப் படைப்புக்கள் பூக்கோவுக்கு எரிச்சலூட்டின. அல்தூஸ்ஸரைவிட பூக்கோ கூர்மையான விமர்சனம் வைப்பவர். அல்தூஸ்ஸருடைய மாணவன் என்றால், பூக்கோவினுடைய மொத்த படைப்புகளையும்விட குறிப்பிட்ட படைப்பிற்கான விமர்சன அணுகுமுறை, ஆய்வு பயனுள்ளதாக இருக்கும். மார்க்சிய நிலைபாட்டிலிருந்து பூக்கோவை வாசித்தோமென்றால் ஹைடேக்கரின் கடிதம் வைக்கும் மனிதமையவாத எதிர்ப்பு கருத்தாக்கம் முக்கிய விஷயமாக எடுபடாது.
manidan_370மாறாக தவறாகிவிடும். இது அல்லது அது என்பதல்ல விஷயம். பூக்கோவும் லெவஃப்ரேயும் நீட்ஷே மற்றும் ஹைடேக்கரை மார்க்ஸினோடும், ஹெகலை எதிர்த்தும் ஆய்வு வைத்தனர். பூக்கோவினுடைய படைப்புகளை மார்க்சினுடைய குடிமைச்சமூகம், சித்தாந்தம் அல்லது அதிகார மேலாண்மை போன்ற ஆய்வுகளுக்குள் வைத்துப் பார்க்க முடியும். மொத்தத்துவ  அணுகு முறையிலோ, ஏன் மொத்தத்துவ மார்க்சிய அணுகு முறையிலோகூட பூக்கோவை மதிப்பிடுவதென் பது பொருத்தமாயிராது; ஏனெனில் அவை குறுக்கல் வாதப் பார்வையுடைய தாகையால் சில பிரத்தியேக சமூக அடுக்குகள், விசேஷ சமூகயதார்த்தங்கள் கவனத்திற்கே எடுத்துக்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டுமுண்டு. 
 * அதிகாரம்/அறிவு குறித்து விவாதிக்கையில் சொல்லாடலின் மேலேறும் பகுப்பாய்வை' விவரிக்கிறார். அறிவு சமூக ரீதியாகக் கட்டமைக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ  அறிவு, அறிவுப்பூர்வ அதிகாரம், அறிவே அதிகாரம் அல்தூஸ்ஸருக்கு இது பிரச்சினை  அதிகார உறவுகளைப் பற்றிய ஒரு புதிய ஒழுங்கமைவு தேவை.  பகுத்தறிவு மயமாக்கலுக்கும் அரசியல் அதிகார ஒடுக்குமுறைக்கும் இடயிலான உறவு வெளிப்படையானது. அல்தூஸ்ஸரையும் அவர் வைத்த "அரசு சித்தாந்த கருவி' என்ற கருத்தாக்கத்தையும் விமர்சித்துதான் பூக்கோ, ஒழுங்குமுறையும் தணடனையும்' என்ற நூலில் சமூகம் முழுக்க அதிகாரப் பரவல், அதிகார ஆதிக்கம் இருப்பதைச் சொல்லி, அரசு அதிகாரத்தை விமர்சிக்கும் மார்க்சியத்தை பூக்கோ விமர்சிக்கிறார்: "குடிமைச் சமூகத்திலும் அதே பிரச்சினைகள், சிக்கல்கள் இருக்கின்றன" என்று வலுவான தமது வாதத்தை வைத்து இரண்டு சமூகங்களுக்குமுள்ள வித்தியாசங்களை  நிராகரிக்கிறார்.
* 1968 மாணவர் எழுச்சிக்குப் பிறகு பிரெஞ்சு மார்க்சியரிடையே எழுச்சிக்காலத்தின் போது பேச்சாக இருந்த பொருள்முதல்வாதம் குறித்து "சொல்லாடலின் ஒழுங்கமைவு" நூலில் பூக்கோ விமர்சிக்கிறார். அல்தூஸ்ஸர் சொல்லித்தான் பூக்கோ பிரெஞ்சு கம்யூனிஸ்டுக் கட்சியில் 1950இல் சேர்ந்ததும், ஆனால் கட்சியில் எந்தப் பங்கெடுப்புமின்றியும், உNகு கட்சிக் கூட்டங்களைப் புறக்கணித்தும், சீக்கிரமே மாஸ்கோவிய கஇஊஇன் மாயையிலிருந்து விலகியும்விட்டார். சோவியத்யூனியனுடைய டாக்டர் பிளாட்'  "யூதஇன ஒதுக்கலை' எதிர்த்து வெளியேறினார். கட்சிக்குவெளியே மார்க்சியத்தின்பால் ஆர்வம் கொண்டிருந்தாலும், போலந்தில் மார்க்சிய அரசின் செயல்முறைகள்/ நடவடிக்கைகளைக் கண்ணுற்ற பூக்கோ, மார்க்சியத்தை எதிர்க்கத் தொடங்கினார். 
திடீரென்று 1969 படைப்புகளில் மார்க்சிய சொல்லாட்சியைப் பிரயோகித்த பூக்கோ, 1975இல் அவற்றையும் கைகழுவிவிட்டார். "மார்க்ஸ் ஓர் அரசியல் சாணக்யன்" என்று சொல்லமுடியாது; அரசியலை விமர்சனம் செய்வார்' என்று சொல்லும் பூக்கோ ஒருபுறம். கிராம்சி வைத்த வலுவான ஹெகலிய மார்க்சியத்தை மறுத்து மிகவலுவான மனிதமையவாத எதிர்ப்பு கோட்பாடுகளை உருவாக்கிய அமைப்பியலாள மார்க்சியர் அல்தூஸ்ஸர் மறுபக்கம் (அல்தூஸ்ஸருடைய பிற்கால படைப்புகள் வேறுவிதமாகப் பேசும்). "மேற்கட்டுமானத்தின் குறிப்பிட்ட தாக்கம் குறித்த விரிவான ஆய்வை வைத்ததில் மார்க்ஸ், ஏங்கல்ஸ்க்குப் பிறகு கிராம்சிதான் மிகமுக்கியமானவர்" என்று மார்க்சிய சிந்தனை மீளாய்வு செய்யும்போது சொன்ன அல்தூஸ்ஸர் கிராம்சியினுடைய வரலாற்றுவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இத்தாலிய தேச ஒற்றுமை. தேச அரசு என்ற கருத்தாக்கத்தினடிப்படையிலான இத்தாலிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதிலுள்ள பிரச்சினைகளுக்கான மாக்கியவல்லிய ஆய்வுசெய்த கிராம்சியின் சிந்தனைக்கட்டு அல்தூஸ்ஸருக்கு அரசியல் தளமமைத்துக் கொடுத்தது.
*  பூக்கோவிய மாயையில் கட்டுண்டு கிடந்த அல்தூஸ்ஸரிய மார்க்சியரான மார்க் ஆல்ஸ்ஸன், எடின் பாலிபர் போன்றோர் பூக்கோவை விட்டுக்கொடுக்காமல் தம்மிலொருவராக உரிமை கொண்டாடினர். "வரலாற்று மார்க்சிய பொருள்முதல்வாதக் கருத்தாக்கமுடையவர் பூக்கோ' என நிறுவவே "பூக்கோவின் வரலாற்றுப் பொருள்முதல்வாதம்' என எழுதினார். பொருள்முதல்வாதம் என்றால் என்ன? என்ற வரையறை செய்யாமலேயே அருகிலிருக்கும் தெரிதாவைவிட பூக்கோதான் அதிகம் பொருள்முதல்வாதி. ஏனெனில் வெறும் மொழி ஆய்வுக்குள் முடங்கிக் கிடக்கவில்லை பூக்கோ' என்றெல்லாம் எழுதினர். மொழியிய கருத்து முதல்வாதத்தில் ஊறிக்கிடக்கும் தெரிதா, பூக்கோவை தவறாகத் திட்டியிருந்தார்.
அல்தூஸ்ஸரின் மாணவரான பாலிபர், சக தோழனான பூக்கோவை மதிப்பிடுகையில்: "பூக்கோவினுடைய கருத்தாக்கங்கள், கோட்பாடுகளையெல்லாம் கவனிக்கும்போது அவற்றை சூவரலாற்றுப் பொருள்முதல்வாதமென'  வரையறை செய்வதில் தவறேதுமில்லை "பாலிபருக்கு இந்த  ஞானம்  எப்படி வந்ததென்றால் அதிகாரத்தின் கருவிகள், உடல்கள்' என்றெல்லாம் பூக்கோ பேசியதிலிருந்து வரலாற்றுப் பொருள்முதல்வாதி' என வரையறை செய்ததைத்தான் ஆல்ஸ்ஸன் மேற்கோள் காட்டியிருந்தார்.   1970 படைப்புக்களில் புறவயம் / புறப்பொருள் / பருண்மை குறித்து பூக்கோ எழுதினாலும் அகவய / பருண்மையற்ற பொருள் முதல்வாதத்தைதான்  வலியுறுத்தினார். உடல்களைப் பற்றிப்பேசும் பொருள்முதல்வாத மென்பது பருண்மையற்ற பொருள்முதல்வாத வகையைச் சேர்ந்ததல்ல. ஆக, பாலிபர் கொண்டாடும்  பூக்கோ வைத்ததாகச் சொல்லப்படும்  பொருள்முதல்வாதம் உண்மையில் ஒன்றுமல்ல / வரலாற்றாய்வைத்தான் முன்வைக்கிறார்.
*  பூக்கோவின் “மனிதமையவாத எதிர்ப்பு''
“சித்தாந்தமோ, சொல்லாடலோ உறுதிப்படுத்துதலை வலியுறுத்துகிறது. ஆனால் ஆளும் வர்க்க தேவைகளை எதிர்க்கிறது" என பூக்கோவும் அல்தூஸ்ஸருமே கருதினர்.  மனிதனின் மரணம் / மனிதத் தன்னிலையின் மரணம்  ஒரு வர்க்கத்தின் கூட்டு மனிதத் தன்னிலையின் மரணம்  முதலாளித்துவ சமூக அமைப்பின் ஒடுக்குமுறையால் நிகழும் "மனிதனின் மரணம்' என அமைப்பியல்வாதம் சொல்வதை பூக்கோவும் மறுக்கவில்லை. அனால் உலக உண்மையின் மனிதமையவாதம் என கருதுவதை இருவரும் எதிர்க்கின்றனர். 
இந்த மனிதமையவாத எதிர்ப்பு நிலைபாட்டை அல்தூஸ்ஸரிடமிருந்தல்ல, நீட்ஷே, ஹைடேக் கர் போன்ற மனிதமையவாத எதிர்ப்பாளரிடமிருந்து பெற்றவர் பூக்கோ. ஹைடேக்கரின் மனிதமையவாதம் குறித்த கடிதம், பின்யுத்த பிரெஞ்சு சிந்தனையில் பெரும்பேச்சாக இருந்ததது  தெரிதாவும் அல்தூஸ்ஸரும் பேசிக்கொண்டனர்  பூக்கோவோ பிரெஞ்சு சிந்தனையே அப்படித் தான் என்பதுபோல இருந்தார்.  இப்போது முக்கியமான சிந்தனையாளர் சார்த்தர். இருத்தலிய வாதிகளின் வாசிப்புப்பிடியிலிருந்து மார்க்சியத்தை மீட்டெடுத்து நிலை நிறுத்தியவர் அல்தூஸ்ஸரே. மார்க்சினுடைய 1844 கையெழுத்துப் படிகளைவிட பிற்கால விஞ்ஞான படைப்புகளுக்கு சார்த்தர் போன்றோர் அதிகம் அழுத்தம் கொடுத்துப் பேசினர்.
* அல்தூஸ்ஸர், கிராம்சி போன்றோருக்கும் பூக்கோவுக்குமான கோட்பாடாக்க முறை பற்றி பேசும்பொழுது நாம் கவனமாக இருத்தல்வேண்டும். பூக்கோ அல்தூஸ்ஸரை மறுப்பதை மூவருக்குமுள்ள படைப்பாய்வு சொல்லும். பூக்கோ மீதான ஹைடேக்கரின் தாக்கம் என்பது வலுவானது; பொதுவாக ஏற்றுக்கொள்வதை விட அதிகம் செல்வாக்குடையது, மனிதமைய வாதம் குறித்த ஹைடேக்கரின் கடிதம். பூக்கோவின் “ஆர்டர் ஆப் திங்க்ஸ்'' படைப்பின், மானுடவியல் என்ற இரண்டாம்பட்ச ஆய்வுக்கு கான்ட்டும் அனுபூதவிய / இயக்கமறுப்பிய பிரச்னைகளும் மையக்கருத்தாகிவிட்டன.  ஹைடேக்கருடைய நீட்ஷேய நூல் முக்கிய குறிப்புதவி செய்தது. பூக்கோவினுடைய சூடிஸ்பொஸிடிஃப்' = கருவி/ஒடுக்குமுறை = சிறை தண்டனை, நீதிமன்றம் போலீஸ், ராணுவம், அரசு மருத்துவமனை நிறுவனம், மற்றுமுள்ள மொத்த அறிவுத்துறை அமைப்புகள் யாவும் சமூக ஒழுங்கமைவுக்குள் முழு அதிகாரத்தை செலுத்துகிறது' . என்ற கருத்தாக்கம் மொழிநுட்ப சூக்குமமாக வைக்கப்பட்டது. 
ஹைடேக்கருடைய எழுத்துக்களை நேரடியாகப் படித்து உள்வாங்கினோமென்றால் பூக்கோ வைக்கும் காத்திரமான பல கேள்விகள் ஹைடேக்கருடைய படைப்புகளில் இருந்தமை புலப்படும். ஆனால் இருவருக்குமான வித்தியாசம்? வித்தியாசத்தால் எவ்வித பயனுமில. ஆனால் பூக்கோ குறித்து ஏராளமான ஆய்வுகள் வெளிவந்தாலும் மார்க்சிய மதிப்பீடு இன்னும் கூர்மையடையவில்லை. விஷயதானங்கள் எவரிடமிருந்து பெற்றாலும் அவற்றை நடைமுறையொட்டிய ஆய்வுத் தரவுகளாக இணைத்துவிடுபவர் பூக்கோ. வரலாற்று சமூகவியல் (இருப்பிய வரலாறு) ஆய்வுகளை உள்வாங்குவதைக் காட்டிலும் ஹைடேக்கரைப் (நீட்ஷேயேயும் சேர்த்து) படிப்பதன் மூலம் பூக்கோவினுடைய' ஜீனியாலஜி'யை (வரலாற்று இருப்பியல்) உள்வாங்குவது பயனுள்ளதாகும். வெளி சார்ந்த வரலாற்றாய்வு. பூக்கோ ஓர் அமைப்பிய மார்க்சியரோ நீட்ஷேயவாதியோ / பின் அமைப்பியவாதியோ அல்ல. மாறாக ஹைடேக்கரிய இருப்பியவாதி என்பது நிச்சயம். அதேசமயம் அல்தூஸ்ஸரை உறுதியாக மறுப்பவர் பூக்கோ.
* அல்தூஸ்ஸர், பூக்கோ, வரலாற்று இருப்பியல்:
அல்தூஸ்ஸரையும் அமைப்பிய மார்க்சியத்தையும் பூக்கோ பயன்படுத்திக்கொண்டது மார்க்சியத்தை எதிர்க்கவே. பூக்கோவின் படைப்புகளில் அல்தூஸ்ஸரிய தாக்கம் அதிகம் உண்டு; பின்னாளில் இருவருக்குமிடையில் கொடுக்கல் வாங்கல் உண்டு. மனிதமையவாத எதிர்ப்பு வரலாற்றுவரைவியலுக்கு முதன்முதலாக அடித்தளமிட்டுத் தொடங்கிய ("மார்க்சியமும் மனிதமைய வாதமும்")  அல்தூஸ்ஸரிடமிருந்துதான்  'தொல்லியலாய்வு'க்கும்', 'ஜீனியாலஜி'க்குமான தளம் பூக்கோவுக்குக் கிடைத்தது. அல்தூஸ்ஸர்தான் முதன்முதலாகத் தொடங்கிவைக்கிறார? வரலாற்றுவரைவியலும் பிரச்சினைக்குரியதா? பூக்கோ குறிவைத்த முக்கியமான ஏரியாவே அதுதான். ஆனால் இரண்டாம்கட்ட காலப்பொருத்தமற்ற சிந்தனை, 'நீதிகளின் வம்சாவளி' போன்ற படைப்புகள் என்ன ஆயிற்று? 'இருத்தலும் காலமும்' படைப்பின் இரண்டாம் பிரிவு என்ன ஆயிற்று? அல்தூஸ்ஸருடைய மனிதமையவாத எதிர்ப்பு என்பது ஹைடேக்கருடைய மனிதமையவாதம் குறித்து எழுதப்பட்ட கடிதத்தோடு தொடர்புடையது என்பதை மறந்துவிடக்கூடாது.
பிரெஞ்சு விவாதங்களுக்குள் அது ஒரு முக்கியமான தலையீடு ஆகும். பியுபிரெட், சார்த்தரின் விமர்சகர் போன்றோருக்கு அக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.  நீட்ஷேய ஜீனியாலஜியை மனிதமையவாத எதிர்ப்பு சொல்லாடலுக்கு பூக்கோவால் நுட்பமாகக்  கையாளப்பட்டது.  அதேசமயம் புகழ்பெற்ற பிரெஞ்சு கல்விக்கழக மேலாளராகப் பணியாற்றியபோது அல்தூஸ்ஸரின் தாக்கத்தால் பொருள்முதல்வாதப் பார்வையும் அவருக்கு வசப்பட்டது. பொருள் முதல்வாதப் பார்வைக்குத் தம்மை அர்ப்பணித்த மார்க்சியரான அல்தூஸ்ஸரும் பூக்கோவுமே அறிவுத்தோற்ற தடை / விஞ்ஞானச் சிந்தனையில் அறிவுப்பூர்வத் தலையீடு போன்ற கருத்தாங்களை உருவாக்கினர் தற்செயல் நிகழ்வு பொருள் முதல்வாதத்தில் முக்கிய காரணியாகத் தொழிற் படுவதை இணைத்தே ஆய்வுசெய்த அல்தூஸ்ஸரு டைய தற்செயல் நிகழ்வு சார்ந்த பொருள்முதல்வாதம், பூக்கோவினுடைய 'சொல்லாடலின் ஒழுங்கமைவு' வெளியானதற்குப் பிறகே வைக்கப்பட்டதென்றாலும் இருபெரும் சிந்தனையாளரும் சுயமாக வேறுவேறு தளத்திலிருந்து ஒரே கருத்தாக்கத்திற்கு வந்தடைந்தனர்.
englishman_370ஆனால் மார்க்சியரான அல்தூஸ்ஸரின் நோக்கம் வேறு. பூக்கோவின் நோக்கம் வேறு.  அமைப்பிய மார்க்சிய மரபில் வரலாற்றின் பொருளாயத விஞ்ஞான ஆய்வை பூக்கோ மேற்கொண்டது மனிதமையவாத எதிர்ப்பை  இன்னும் மெருகேற்றவே. ஹைடேக்கர் வைத்த பல வாதங்களை, மனிதத் தன்னிலையை புறக்கணித்து/ நிராகரிக்கும் வழிகளை பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அல்தூஸ்ஸர்தான் மனிதமையவாத  எதிர்ப்பு அணுகுமுறையில் வரலாற்றைப் பார்ப்பதை ஒரு மார்க்சிய சட்டகத்திற்குள் மாற்றினார். பூக்கோவினுடைய ஜீனியாலஜீஸ்இல் அந்தப் பார்வைதான் பயன்படுத்தப்பட்டது. பிரத்தியேக இடம் சார்ந்த சம்பவங்கள்  நிகழ்வுகளின்  சிதறல்களாக வரலாற்றை கட்டுடைத்துப் பார்க்கும் பூக்கோ, ஒரு பொத்தம் பொதுவான வரலாற்றாய்வை மறுக்கிறார்.
அறிவின் தொல்லியலாய்வில் நுட்பமாக, பிரத்தியேக இடம் சார்ந்த நிகழ்வுகளின் சிதறல்களாக நுண்வரலாற்றைக் கையாள்வதால்தான் மனிதமைய வரலாற்றுவரைவியலிலுள்ள பூடகத்தன்மையை இயக்கமறுப்பியல் தன்மையை அகற்றமுடியும் என வாதிடுகிறார். தாம் ஆய்வுசெய்த பல நிகழ்வுகள் சூபொதுவானவை' என்பதை ஒத்துக்கொள்ளும் பூக்கோ, ஒருவகையான மனிதமையவாத வரலாற்றாய்வை தவிர்ப்பதற்காகவே  மனிதமையவாதம் என்ற குறுக்கல்வாதப் பார்வையை நீக்கிய அடிமட்ட அணுகுமுறையிலான வரலாற்றாய்வை சூஒழுங்குமுறையும் தண்டனையும்' நூலில் விவரிக்கிறார். 1970களுக்குப் பிறகு நீட்ஷேய உத்திகளையும், ஆளுமைகளையும் தமது படைப்புகளில் அமைப்பிய மார்க்சிய சட்டகத்திற்குள் வைத்துக் காட்டுகிறார்.
உதாரணமாக, உண்மையின் வரலாறு' என்கிற நீட்ஷேய முறைப்படி பூக்கோ, "உண்மை', "உண்மையின் அரசாட்சி', போன்ற சொற்களை சித்தாந்தங்களுக்குப்' பதிலாக போடுகிறார். (ஏனெனில் சித்தாந்தம், கருத்தியல் போன்ற சொற்கள் மனிதவாத பொருள்கொண்டதால்). இந்தப் பதிலிகளை நாமும் போட்டுப்பார்த்தவுடனே சித்தாந்தங்களே மனிதத்தன்னிலையை  உருவாக்குகின்றன என்ற அல்தூஸ்ஸரிய கருத்தை (மார்க்சியம் சொல்லும் மேற்கட்டுமானம் அல்லது பண்பாடு என்ற அரசு சித்தாந்தக்கருவி (ISA) மூலம் மனிதத்தன்னிலை புடம் போடப்படுகிறது) பூக்கோவிய ஜீனியாலஜி'யின் தொடக்கப்புள்ளியாகப் பார்ப்பீர்கள். ஏன் நீட்ஷேய அல்லது ஹைடேக்கரியத்தின் தொடக்கப்புள்ளியாக இருக்கக்கூடாதா? இல்லை. ஏனெனில் இருவரும் அரசியலற்றவர்கள் மிக மோசமான பாசிஸ்டுகள்.  புரட்சிகரமான அரசியல் விமர்சனம் ஏதாவது அவர்களிடம் உண்டா? இல்லை. மார்க்சியப் பார்வையில் ஓர் நடைமுறையையாவது பூக்கோ ஆய்வு செய்திருக்கிறார்.
ஆனால் ஓர் உயர்தரமான விமர்சனம் அந்த இடத்தில்  வைக்கப்பட்டிருக்கவேண்டும். மனிதமைய வாதி, அல்தூஸ்ஸர், பூக்கோ  மூவரின் பிடிமானமும் இன்றைக்கு அரசியல் தளத்தில் வரலாற்றுவரைவியலில் பழமைவாதிகளாகப் பார்க்கப்படுகின்றனர். ஓர் அரசியல் நடைமுறை சார்ந்த மனிதமையவாத எதிர்ப்பு வரலாற்றுவரைவியலை நிறுவும் பெருமுயற்சியில் பூக்கோ இன்னமும் போராடிக் கொண்டுதானிருக்கிறார். அல்தூஸ்ஸர் உருவாக்கிய  கோட்பாட்டு நடைமுறையின் கோட்பாடு' உண்டாக்கிய விஞ்ஞானம் / சித்தாந்தம் பிரச்சினையை கையாள்வதற்காகவே பூக்கோ பகுப்பாய்வு முறையைத் தொடங்கினார். அல்தூஸ்ஸரும் பூக்கோவும் மனிதமையவாத எதிர்ப்பு, ஹெகலிய எதிர்ப்பு மற்றும் நிகழ்விய எதிர்ப்பு சிந்தனையுடையவர்கள். அல்தூஸ்ஸரின் பொருள்முதல்வாத இருப்பியல் என்பது: "அரசு கருவியின், நடைமுறை சித்தாந்தத்தில் பொருளாயத இருத்தல் வேறு. ஒரு நடுகல் அல்லது ஒரு கைத்துப்பாக்கி பொருளாக இருக்கிறது என்பது வேறு. இரண்டும் இருப்பதற்கான சாத்தியப்பாடு அர்த்தம் ஒன்றல்ல. ஒரு பொருளைப் பற்றி பல்வேறு தொனிகளில் பேசிக்கொள்ளமுடியும் பல்வேறு அர்த்தங்களில் ஒரு பொருளின் தன்மை உள்வாங்கப்படும்.
ஆனால் எல்லாமே கடைசி நிகழ்வில் பௌதிகப் பொருள் என்ற அடிப்படையில்தான் பொருள்படும். பூக்கோ பொதுவாக ஒரு சித்தாந்தம் குறித்து  கருத்துசொல்ல மறுப்பவர்; கருத்தியல் குறித்து அக்கறை கவலை கொள்ளாதவர். ஏனெனில் அடிப்படை பொருளாதார தேவைகளுக்குப் பிறகுதான் சொல்லாடல் சித்தாந்தம் எல்லாம் என்கிற மார்க்சிய புரிதலை வைத்திருக்கிறார். ஆனால் அல்தூஸ்ஸரோ சித்தாந்தம் கருத்தியல் போன்ற சமூக மேற்கட்டுமானம் குறித்து  மார்க்சிய பார்வையில் வலுவான கோட்பாடுகளை   வகுத்துள்ளார். ஏனெனில் தத்துவமோ சித்தாந்தமோ மக்களைக் கவ்விப்பிடிக்கையில் அது பௌதிகசக்தியாக மாறிவிடும் பொருளாயத இருத்தலாகிவிடும்.  இந்தப் பொருளாயத தன்மை கடைசி நிகழ்வாக  குறுகிய அர்த்தத்தில் பொருளில் இருக்கிறது. இப்படித்தான் ஒரு பொருள் முதல்வாதிக்குச் சொல்லப்பட்டிருக்கிறது புரிந்து கொள்ளப்பட்டது. இந்தக் கடைசி நிகழ்வில் வேர்கொண்டுள்ளது' என்கிற சொற்றொடர், "மேற்கட்டுமானத்தின் கடைசி நிகழ்வில் பொருளாதார அடித்தளமே நிர்ணயம் செய்யும் " என்ற ஏங்கல்ஸின் கோட்பாட்டிலிருந்து எடுக்கப் பட்டதாகும்.
ஏங்கல்ஸ் சொன்னது தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்கட்டுமானத்தில் ஏற்படுத்தும் மாற்றம் அவ்வளவாக இல்லை; ஆனால் கடைசியில் நிர்ணயிப்பு என்பது சில விஷயங்களில் நடக்கிறது" என அல்தூஸ்ஸர் விளக்கம் கொடுத்தார்.  கடைசி நிகழ்வாக பௌதிகப் பொருளில் வேர்கொண்டுள்ளது பொருள் முதல்வாதம் என்றெல்லாம் பூக்கோ சொல்லவில்லை. ஆனால் பொருள்முதல்வாதத்தை மறுக்கவுமில்லை தன்னை ஒரு பொருள்முதல்வாதி என சொல்லிக்கொள்ள விழையும் பூக்கோ: “எனக்கும் அல்தூஸ்ஸருக்குமான மைய வேறுபாடே அறிவுத்தோற்றம் குறித்துதான்'' (1967). 'மார்க்ஸுக்கு சமகால மற்றும் முந்தைய அறிஞர்கள், சமூகவியலாளர்கள் அறிவுத்தோற்ற வரிசையில் வருபவர்தானேயொழிய புதிய அறிவுப்பூர்வ விஞ்ஞான சிந்தனைத் தோற்றம் மார்க்சிடம் இல்லை;
அவருக்கு முந்தைய மொத்த அறிவுத்துறைக்கும் ஒரு திருத்தம் கொடுத்து புதிய அறிவொளியைக் காட்டியவர் மார்க்ஸ் என்று கூற இயலாது'  என வாதிடும் பூக்கோவும் அல்தூஸ்ஸரும் இருப்பியல் தளத்தில் வேறுபாடில்லை, மார்க்ஸை விமர்சிப்பதில்தான் இருவரும் வேறுபடுகின்றனர். "மார்க்ஸை மிகநெருங்கி வாசிக்கவேண்டும்;  மார்க்ஸினுடைய சிந்தனைக்கட்டுக்குள் நாம் புகவேண்டும்; என்னுடைய தத்துவ ஆய்வே  மார்க்ஸில்தான் வேர்பிடித்துள்ளது" அல்தூஸ்ஸர். ஆனால் பூக்கோவோ:" பழைய சிந்தனைக் கட்டுடையவர் மார்க்ஸ்; மார்க்ஸ் காலாவதியாகி விட்டார், இன்றைக்கு நாம் அவர் சிந்தித்ததையெல்லாம் தாண்டி ஆழ அகலத்துடன் நகர்ந்துள்ளோம்" என்றார்.
ஹைடேக்கர்
* விஞ்ஞானத்தின் புறவயத்தன்மை   பருண்மைத் தன்மை என்ற கருத்துக்கே இடமில்லை; இனிமேல்  பிரத்யட்ச பார்வை மட்டுமே;  பிரத்யட்ச அறிதல் மட்டுமே' என்பது பூக்கோவிய ஜீனியாலஜி.  வம்சாவளி ஆய்வாளரின் முதன்மை   முறையியல் வரலாற்று முறையியலைப் போன்றது;  உண்மையில் வம்சாவளி ஆய்வாளர்  என்பவர் ஓர் புதிய வரலாற்றாய் வளரேயாவார். நம்முடைய சமூகத்திலிருப்பது போன்ற ஒரு பக்கா  தாபனப்படுத்தப்பட்ட  விஞ்ஞான  சொல்லாடல்  செயல்படுவதிலும் நிறுவனத்தோடு தொடர்புடையதுமான மத்தியத்து வப் படுத்தப்பட்ட அதிகாரங்களை எதிர்த்து  ஒடுக்கப்பட்ட அறிவை  புரட்சிக்குத் தூண்டுவதே இந்தப் புதிய வரலாற்றாய்வாளரின் பொறுப்பாகும்.
விளிம்பு நிலைகுழுக்களின், ஒடுக்கப்பட்ட அறிவின் விடுதலைக்கான புரட்சியை நடத்தவேண்டி பூக்கோ போராடினார். இன்றையகால கட்டத்தில் விளிம்பு நிலை குழுக்கள் யார்? தேசியவாதிகள்.
பூக்கோவும், நீட்ஷேயும் சொன்னது: 
“யதார்த்தம் குறித்த நமதுபுரிதலும்,    நாம் புழங்கும்  கருத்தாக்க பிரபஞ்சமே  மொழியால் கட்டமைக்கப்படுகிறது,'' என்பது  சரியென்றால் உற்பத்தியின் சொல்லாடற் கருவி தரும் அதிகாரம் யார் கையிலிருக்கிறது?
 இன்றைக்கு உற்பத்தியின் சொல்லாடற் கருவியை  கட்டிமேய்க்கும் ஆதிக்கமேலாண்மை உடமஸ்தன் யார்?  உலகமயமாக்கல்வாதிகள்தான்.
அதிகாரமும் அறிவும் ஒன்றையொன்று சார்ந்தது என்றால்  வரலாற்று நடைமுறைகள் உற்பத்தி செய்யும் அறிவு நடுநிலைமையானதாக இருக்க முடியாது; அந்த அறிவை அப்படியே எடுத்துக்கொள்ளவும் முடியாது
அதிகார உறவுகளின் ஒரு தொகுதி அவசியம் இதில் ஈடுபட்டிருக்கிறது. இதுமாதிரியான சொல்லாடல்கள் மூலம் யார் யார் அரசியல் ரீதியாக  பயனடைகிறார்கள்; யார் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதைச் சொல்ல விளைகிறது ஜீனியாலஜி.
மரபு மார்க்சிய மற்றும் பின்மார்க்சிய  கொள்கைகளுக்கிடையிலான வித்தியாசத்தை வேறுபாட்டைச் சொல்வதற்கு  அல்தூஸ்ஸரிய து பூக்கோவிய கோட்பாடுகளைப் பயன் படுத்துவர். வரலாற்றை இயங்கியலற்றதாகப் பார்க்கும் பின்மார்க்சியர்  ஹெகலிய மார்க்சிய அடார்னோ'விய கருத்தாக்கத்திலிருந்தும் இன்றளவும் முக்கியத்துவமிக்க மரபு மார்க்சிய இயக்கவியலிலிருந்தும் விலகி நின்றனர். விமர்சன சிந்தனையுடைய ஹெகலியவாதிகள் ஒரு பிரிவு; நடைமுறை, நிறுவனம் சார்ந்த அணுகுமுறையை வலியுறுத்து வோர் மற்றொரு பிரிவு என பின்மார்க்சியர் இரண்டாகப் பிரிந்தனர். மரபுமார்க்சிய சொல்லாடலிலிருந்து முன் நகர்ந்த அல்தூஸ்ஸர் பூக்கோ இருவரின் கோட்பாட்டுத்தளம் பின்மார்க்சியத்திலல்ல. அல்தூஸ்ஸரு டைய வலுவான கொள்கை கோட்பாட்டுத்தளம்  பூக்கோவினுடைய "சொல்லாடற் நடைமுறை'யிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

Thursday 24 September 2015

கவிஞர் பிரமிள்-மு.வி.நந்தினி



இலக்கிய உலகின் மர்ம யோகி!

கவிஞர் பிரமிள்-மு.வி.நந்தினி

ஜூலை 16, 2013


சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது‘

தன் கவிதையைப் போலவே காற்றின் திசை வழி பறந்து, எங்கெங்கெல்லாமோ வாழ்ந்து, எப்படியோ முடிந்துபோன வாழ்க்கை கவிஞர் பிரமிளுடையது. இலக்கிய உலகின் மர்மயோகி. சுடும் விமர்சனங்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய விமர்சனங்களின் தாக்கத்தைத் தாக்குப்பிடிக்கமுடி யாமல் பிரமிளின் படைப்பாற்றல் குறித்து இலக்கியப் பரப்பில் போதுமான விவாதங்கள் நிகழாமலேயே இருக்கின்றன. ஏப்ரல் 20ல் தொடங்கும் பிரமிளின் 70வது பிறந்த தினத்தைக் கொஞ்சம் விமரிசையாகக் கொண்டாட இருக்கிறார் அவரது நண்பர் காலசுப்ரமணியம். பிரமிளின் புத்தகங்களை மறுபதிப்பு செய்யவும் அவரது ஓவியங்களைக் கண்காட்சிப்படுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன.

Piramil

”அதுவரை தமிழில் வந்துகொண்டு இருந்த கவிதைகளிலிருந்து மாறுபட்டு, பல பரிமாணங்களைக் கொண்டதாக இருந்தன பிரமிளின் கவிதைகள். நெருப்பைத் தீண்ட அஞ்சுவதைப் போல இலக்கியவாதிகள் அவரை நெருங்கத் தயங்கினார்கள்” என்கிறார் காலசுப்ரமணியம்.



”இலங்கை திரிகோணமலையின் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவருக்குப் பள்ளி இறுதி வரைதான் படிப்பு சாத்தியப்பட்டது. ஆனால், அங்கிருந்தபடியே அவர் தமிழ்நாட்டு இலக்கிய நடப்புகளை அறிந்துகொண்டு இருக்கிறார். 19 வயதிலேயே இலக்கிய இதழ்களில் அவர் படைப்புகள் பிரசுரமாகத் தொடங்கின. ஓவியத்தின் மீதிருந்த ஆர்வத்தால், ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்‘ல் ஓவியம் கற்றிருக்கிறார். ஒரே உறவான அம்மாவும் இறந்த பிறகு, இந்தியா வந்த பிரமிள், மதுரை, சென்னை, டெல்லி எனச் சுற்றியலைந்துவிட்டு சென்னையிலேயே தங்கிவிட்டார். பிரான்சுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியா வந்தவருக்கு அது இறப்பு வரை சாத்தியப்படவில்லை.

’’காசுக்காக எழுதமாட்டேன்’’ என்று பிடிவாதமாக இருந்தார். நண்பர்களின் உதவியில்தான் வாழ்ந்தார். ஜோதிடத்திலும் நியூமராலஜியிலும் அதிகமான நம்பிக்கை. அடிக்கடி பெயரை நியூமராலஜிப்படி மாற்றிக்கொண்டே இருப்பார். தர்மு சிவராம், டி.அஜித்ராம் பிரேமிள், பிரமிள் என அவர் மாற்றிக்கொண்ட பெயர்களின் பட்டியல் நீளமானது.



Piramil's painting

அபாரமான விமர்சனப் பார்வை உடையவர். போலித்தனமான இலக்கியவாதிகளை எப்போதும் விமர்சித்தபடியே இருப்பார். பலருக்கும் புரிபடாமல் இருந்த மௌனியின் எழுத்து எப்படிப்பட்டது என்று இவர் எழுதிய கட்டுரைதான், மௌனியைப் பலருடைய வாசிப்புக்குக் கொண்டுசென்றது. இவருடைய ’கடலும் வண்ணத்துப்பூச்சியும்’, ‘கண்ணாடியுள்ளிருந்து’ கவிதைகள் அபாரமான வீச்சு உடையவை. ஒரு மாத காலம் காய்ச்சலால் அவதிப்பட்டவரை நண்பர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போதுதான் அவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. வீரியமான பிரமிள் விரலசைக்க முடியாமல் செயலிழந்து கிடந்தார். எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் தனது 56வது வயதில் இறந்தார். இறப்புக்குப் பிறகும் கவனிக்கப்படாத கலைஞன் பிரமிள்!” வருத்தத்தோடு முடித்தார் காலசுப்ரமணியம்.

ஆனந்த விகடன் 23-04-08 இதழில் நான் எழுதிய கட்டுரை…

https://mvnandhini.wordpress.com/




Like Comment
Share


4 people like this.
1 share

Comments

Write a comment...







பிரமிளுக்குப் பிறகு பிரமிள்/pramil After Pramil
January 29, 2014 ·



ஒளிக்கு ஒரு இரவு

காக்கை கரைகிறதே
பொய்ப்புலம்பல் அது.
கடலலைகள் தாவிக் குதித்தல்
போலிக் கும்மாளம்.
இரும்பு மெஷின் ஒலி
கபாலம் அதிரும்.
பஞ்சாலைக் கரித்தூள் மழை
நுரையீரல் கமறும்.
அலமறும் சங்கு இங்கே
உயிர்ப்புலம்பல்.
தொழிலின்
வருவாய்தான் கும்மாளம்.
லாப மீன் திரியும்
பட்டணப் பெருங்கடல்.
தாவிக் குதிக்கும்
காரியப் படகுகள்.
இயற்கைக்கு ஓய்வு ஓயாத
மகத் சலித்த அதன்
பேரிரவு.


Raja Sundararajan


எழுத்துக் கலை பற்றி
______________________

கால சுப்ரமணியன்: உங்களுடைய படைப்பு மனோநிலை பற்றிக் கூற முடியுமா?


பிரேமிள்: படைக்கும் போது ஒரு ஒழுங்கமைப்பை நிறைவேற்றும் நோக்கம்தான் என்னால் உணரக்கூடிய என் மனோநிலை. கூடவே, சிருஷ்டிகரமான ஆழ்ந்த கருத்துகள் தோன்றும் நிலை. இதுதான் படைப்பியக்கத்தின் முக்கியமான களம். ஆனால் இப்படி கருத்துகள் பளீர் பளீரெனப் பிறக்கும் போது என் மனோநிலை என் அவதானத்துக்கு உட்படுவதில்லை. மீண்டும், இவ்விதம் தோன்றுகிற கருத்துகளை ஒரு ஒருமைப்பாட்டுக்குள் ஒழுங்கமைக்கும் இயக்கமாக மனம் செயல்படும். இதெல்லாம் திருப்திகரமாக நிறைவேறிவிட்டால், முடிவாக, ஒருவிதமான சுதந்திர உணர்வு பிறக்கிறது.

கா.சு.: எழுத்து மூலம் உண்மையை அடைதல் பற்றி உங்கள் பார்வை என்ன?

உண்மையை அடைவதற்கு ஒரே வழி மௌனம்தான். எல்லா மார்க்கங்களும் அகந்தையின் பரிபூர்ணமான அடக்கத்தை - ஒடுக்கத்தைத்தான் இந்த மௌனத்துக்கு முக்கியமான ஆதாரமாக்குகின்றன. சரி, எழுதுவது இந்த அகந்தையின் ஒடுக்கத்தைச் சாதித்துவிடுமா? ஒண்ணரைக் கவிதையை எழுதி அதை அச்சில் வரப் பார்த்துவிட்ட கவிஞர்களுக்கு அகந்தை எகிறிக் குதிப்பதுதான் தெரிகிறது. பெரிய கவிஞர்களையோ எழுத்தாளர்களையோ எடுத்துக்கொண்டால் அவர்களிடமும் பலரிடத்தில் அகந்தை நாசூக்காகக் கொலு வீற்றிருக்கக் காணலாம். எனவே, கவிதை மூலம், எழுத்து மூலம் உண்மையை அடைதல் என்பது எனக்கு அபத்தமான கூற்றாகவே தோன்றுகிறது. ஆனால் எழுதும் போது நேர்மையும் மனஒருமையும் உள்ள ஒருவன் தனது எழுத்தின் மூலம் வெளிப்படுகிறவற்றை - அதாவது தன்னை - அவதானிக்க ஒரு சாத்தியம் உண்டு. மனதின் களேபரமான ஓட்டத்தைச் சீராக்கும் வேலைக்குக் கூட எழுதுதல் ஒரு சாதனமாகும். (ஒவ்வொருவரும் காலையில் சில பக்கங்கள் எதையாவது எழுதி வருவது அன்றாட மனோவாழ்வைத் தெளிவுபடுத்த உதவும்.) இருந்தும் உண்மைத் தேட்டத்தைப் பொறுத்தவரை இது எல்லாம் வெறும் அ, ஆ தான். மிக மேலோட்டமான பயிற்சிதான்.

(இன்று, 6 ஜனவரி, கவிஞர் பிரமிள் நினைவு தினம்.)




முதல் முகத்தின் தங்கைக்கு-பிரமிள்

துடித்து
அன்று விழுந்த பகலை மீண்டும்
மிதித்து நடப்பவளே
கொலுசு சூழாத நிசப்தத்தில் நின்
வெண்பாதச் சதைகள் மெத்திட்ட
புல்தரையைக் கவனி


உன்முன் சென்றவள் என்னை
உதறிச் சிந்திய சுவடுகள்
அழுதழுது வரளும் என்
மன வெறுமையிலே
ஏழுவண்ணப் புதிர்கள்
அவிழ எனவா நின்
ஒருதுளிப் பார்வை?
அல்ல
தோற்றழியும் என் தவிப்பை
என் உடலின் இலைநரம்புகள்
உள்ளுரப் பரிகசித்துச்
சிரிக்க என் முகம்தேடி
பார்க்க நிமிர்ந்தனையோ?

உயர்ந்து வளர்ந்த சின்னவளே
அண்ணாந்து
என் மாடியைப் பார்ப்பதேன்?

அழியத் துணிந்தும்
அழியாது தடுமாறி
எரிந்தெழுந்து
சாம்பல் புழுதியில்
உயிர் உடலாகத் திரண்டு
மீண்டும் நிலைத்த நிழல் நான்.
உன் முன்னவளின்
ஜால மருந்து தொடுத்த
பார்வைமழை நுனிகளை
எதிர்பார்த்து மறுப்பின்
குரூர நுனிகள் தைக்க
துடித்திறக்கும் எனது நாட்களை
மீண்டும் நிகழ்விக்கவா
என் வாசலில் நின்று
முகம் திரும்பினை?
கவனி-
என் மாடி உப்பரிகையல்ல
உச்சியில் ஒருகுடில்
என்னுள் கவிதையின்
காலதீதச் சழலெனினும்
நாசியில்-
உன் நாசியிலும் தான்-
நம்மிருவர் தெருவின்
எல்லையில் குடிகொண்டு
வாழ்வின் மறுப்புக்கணை பாய
இறந்து வீழ்ந்த
இதயங்களைச் சூழ்ந்து
பிழம்பு வளர்க்கும்
சுடலையின் வீச்சம்.
எனவே,
விளையாடாதே!
என் இதயத்தை வளைக்கும்
இருள் முடிச்சு
உன் புன்னகை விரல்களில்
அவிழ்ந்து
கருநிற மெத்தைகளாய்
சிதறிச் சிரிக்க
மன நடு இரவு
பூ முகம் கொள்ளுமெனில்
சொல்,
சொல்லை இதயத்தின்
சொல்லற்ற சுனைதர
பேசு.
அது இன்றி
விளையாடினாயெனில்
ஹோம குண்டங்கள் கூட
வெற்றுப் புகைமுடிச்சாய் மண்ட
வேதனை மீண்டும்
அக்னியை உரிமைகொள்ளும்.






மோஹினி

கவிதை..ஓவியம்-பிரமிள்

‘உனக்கே
உனக்கு நான்’ என
சப்தித்த நின் பார்வைகள்
உன் முகம் நீங்கி
எட்டாத நிலவாயிற்று.
வக்கரித்துத் தரையில்
இலைப்பார்வை பரப்பிற்று.


வழிதொறும்
நிழல் வலைக் கண்ணிகள்
திசை தடுமாற்றும் ஓர்
ஆயிரம் வடுக்கள்.
வேதனை வேர் நரம்பெழுந்து
மூடியது கானகம்.
எதிரே
தலைமயிர் விரித்து
நிலவொளி தரித்து
கொலு வீற்றிருந்தாள்
உன் நிழல்.
என் மன விகற்பத்தின்
வெண் இருள்
நிழலை வளைத்து
துளி வேல்கள் ஏந்தின
கருநீல முட்கள்.
உயரத்தே ஒரு கணம்
பார்வையைப்
பறிகொடுத்து
ஊளையிட்டது நிலவு.
அது கணம்
வெண்நிழல் அழைத்தது.
அணுக
அவளை என்

பாதங்கள் துணிந்து
அணுகக் கருநீல
வேல் நுனிகளில் என்
உதிரத்தின் மலர்ச் செம்மை.
முட்கள்
மொக்க விழ்கின்றன.
விரிகிறது
இதழ் வேளை.
ஊன்றி எடுத்த என்
பாதத்தில் ஊறி
உதிரத்தில் ஒலித்ததுவோ
நிலவின் விஷ ஊளை.

நாநுனி தவித்து

துளியளவு தீண்டி
பதிவுகள் தொடர
திசையறும்
வெண் இருளில்
ரகஸியக் கிணறு.
அதில் எரிகிறது
ஈரநெருப்பு.
குனிந்து பறந்து
கீழ்நோக்கி எழுகிறேன்.
தத்தளித்து
தாகம் தணித்த
நீர்வெளி
பாறையாய் இறுகி
என் புதைவை
சிறையிடுகிறது
கல்பீடம் ஆகிறது.

நிலவின் ஊளை வெளிறி
பலிசிந்தி வீழ
அவளது தந்தங்கள்
வெறிக்கின்றன.

ஓ! என்
பணிவுகளை உறிஞ்சும்
பலி பீடமடி நீ!

பசிதணிந்து
பசிகொண்டு
பாறை தளர்ந்து
தசை வெளியாய்
தத்தளித்து
பசியேற்றி
அசைகிற சுழலே,
இன்று கொட்டும்
இருளின் தமுக்கில்
நம் இருவர் தசைகளில்
தீராத
தினவுகள் அடியே!



பசுந்தரை

கவிதை, ஓவியம்-பிரமிள்


கருகாத தவிப்புகள் கூடி
நாவின் திரி பிளந்து
அணையாது எரியும் ஒருபெயர்
நீ!
புதுநெருப்பில் இடைபுதைத்து
வெளியில் எரியும் வகிடெடுத்து
திரண்டு சிவந்தவள்
நீ!


என்நரம்பு வலைதொறும் விரியும்
உன்தீத் தளிர் வடிவுகளை
என் தழுவல்கள் கவ்வி
மின் நதியைப் புணரும்
சர்ப்பச் சுருணைகளாய்
எரிந்து சிந்த
மீண்டும் என்
பஸ்மத்திலிருந்தே
படம்புடைத்தெழுகிறேன்
உன்மீது சரிகிறேன்.

எரிவின் பாலையிலிருந்து மீண்டு
உன்தசைப் பசுந்தரையில்
என்வாய் பாதம் பதிக்கிறது.
பற்கள் பதிந்தகல
இதோ உன்மீதென்
முதிராத யுவ நடையில்
தத்தளித்த முத்தங்கள்.
நீ தரும் பதில் முத்தங்களின்
மதுர வெளியில் மீண்டும் என்
உதிரம் அலைகிறது.

பாலையில் படர்கிறது
பசுந்தரை.








Drawing by Pramil








பிரமிள் உருவாக்கிய சிற்பங்கள்




பியானோ

இதயச் துடிப்புச்
சுவட்டின் தோல்கீறி
முள் தைக்க விடாத
கல்நாரினால் செய்த
காலணிகள் பூண்டு
தசை மினுக்கி
தசை பார்த்து
அறையில் அமர்ந்திருந்த
உள்வட்டக் கூட்டத்தின்
இந்தியச் சலசலப்பினுள்
சிந்தித்தன மேற்றிசை
இசையின் கரங்கள்
நிலவின் நிலவெளிமேல்
சிறகெடுத்து விரல்நுனிகள்
மிதந்து தயங்கின


கைதொட எட்டி
கண்தொட எட்டாத
தொலைதூரம் வரை
கட்டமிட்டு நின்றன
ஸ்ருதி பாறைகள்
இசையின் வெளியில்
வட்டமிட்டது ஒருநிழல்

திடீரிட்டு
வெளிநீத்து வெளியேறி
கையை நிழல்
கவ்விக் குதறிற்று
வேதனையில்
சிலிர்த்த விரல்கள்
நிலவில் ஒடுங்க்கின.
நிலவெளிமேல்
ஸ்ருதிப் பாறைகள்
தத்தளிக்க துவங்கின.
"அடடா!- ஆனாலும்
இண்டியன் கர்நாடிக்
மியூசிக்கிற்கு
அப்புறம்தான் இது -
நம்ப கல்ச்சர்
ஸ்பிரிச்சுவல் ஆச்சே"
என்று உருண்டன
உள்வட்டது
அசட்டுக் கற்கள்

இந்தக் கல்நார்
தோல் வட்டத்துக்கு அப்பால்
அரை இருளில்
காலணியற்று நின்ற
யாரோ ஒருவனின்
இதயச் சுவடுகளில்
குத்திய முட்கள்
சிறகுகளாயின

துடிப்புகள் கூடி
கழுகுகளாகி
நிலவில் ஒடுங்கின

நிசப்தத்தின் இமைதிறந்து
கவனித்துக் கொண்டது
இசையின் வெளியினுள்
குடிகொண்ட பெரு மௌனம்

பிரமிள்



கலப்பு

ஒரு பாப்பாத்தி நகத்தோடு
என் பறைநகம் மோதி
மனம் அதிர்ந்தது.
கோபத்தில் மோதி
கலந்தன கண்கள்.
பிறந்தது
ஒரு புது மின்னல்.
ஜாதியின்
கோடைமேவிப் பொழிந்தது
கருவூர்ப் புயல்.....


கவிதை, ஓவியம் -பிரமிள்



பிரமிளுக்குப் பிறகு பிரமிள்/pramil After Pramil
August 14, 2014 ·



drawing by Pramil







பிரியும்போது - பிரமிள்

அவள் நாடகபாணியில் தலையை நிமிர்த்திக் கொண்டாள்
எனக்கோ களைப்பு. மாலை இருளினுள் புரண்டது. ஏதோ,
சம்பிரதாயமாகப் பேசிக் கொண்டிருந்தோம். பிரியுமுன்
கைகளைப் பற்றிக் கொண்டோம். சில வேளை, ஒரு
பார்வையின் விபத்து பழைய நினைவுகளைத் தொட்டு
மறைந்திருக்கலாம். விரல் நுனிகளை நோக்கி நழுவிய கைகள்
திடீரென விழித்த பாழ் நிலங்களாயின. உடன் ரத்தமும்
இந்திரியத் துளியுமாய் மலர்கள் வீசின........






கதவு

நிழல் விழுத்தும் அகாதம்
தட்டாது தானே திறக்கும் கதவு
ஆனால் தேனீ தட்டாது
மொட்டு திறக்காது
சுற்றும் விட்டிலும்
சுடருக்குக் கதவு தேடி
சிதறி விழும்- இதோ
இப்போ இப்பாறைச்சுடருள்
புகுந்தவன் யார்?
சுவர் நடுங்க உள் நின்று
உதைப்பவன்?
சுடரிதழ் விரிந்தது - தெரிந்தது
அகாதம்.




வித்தியாசமான கேள்வி - பதில்கள்

POSTED BY ஜ்யோவ்ராம் சுந்தர் ON FRIDAY, JUNE 6, 2008 / LABELS: கேள்வி பதில்

வெகு ஜன வாரப் பத்திரிகைகளில் தொடர்ந்து கேள்வி பதில் பகுதி வந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து, நம் வலைப் பதிவர்களும் கேள்வி பதில் எழுதத் துவங்கி விட்டனர். சில பதிவுகளைப் பார்த்தேன் - வெறும் மொக்கையாக இருக்கிறது.


மீறல் இதழுக்காகப் பிரமிள் கேள்வி பதில் வெளியாக இருந்து, சில காரணங்களால் அப்பகுதி வரவில்லை. சில கேள்வி பதில்களை உயிர் எழுத்து ஏப்ரல் 2008 இதழில் பிரசுரித்திரிக்கிறார்கள். உயிர் எழுத்திற்கு நன்றியுடன், சிலவற்றை இங்கு பதிகிறேன். இப்படிப் பட்ட கேள்வி பதில்கள் வெளியிட்டால் படிக்க - குறைந்த பட்சம் - சுவாரசியமாகவாவது இருக்கும். பதிவர்கள் முயல்வார்களா ?

ரவி உதயன் : நிலையான ஒரு பெயரை வைத்துக் கொள்வதில் என்ன சிரமம் உங்களுக்கு ?
பிரமிள் : ‘பெயர் குறிப்பிடுவதே விமர்சனம்' என்று நினைப்போர் தரும் சிரமம் தான்.

ரவி : உங்களுக்குப் புரிந்த உங்களது கவிதை ஒன்றைச் சொல்லவும் ?
பிரமிள் : உங்கள் பெயரே ரவியை உதைக்கிறது, உங்களுக்கு நான் சொல்லலாமா ?

சாரு நிவேதிதா : சே குவாராவின் குசு அதிக வாசனையா ? அல்லது விசிறி சாமியாரின் குசு அதிக வாசனையா ?
பிரமிள் : உங்கள் எழுத்துக்களில் அடிக்கும் வாசத்தை எது தோழர் பீட் பண்ணும்!

சாரு : உங்களின் விந்து சக்தியை குண்டலினியாக மாற்றிக் கவிதை எழுதுகிறீர்களாமே, இது உண்மையா ?
பிரமிள் : என் கவிதைகளுக்கு சக்தி புத்தி. உங்கள் பேத்தல்களுக்கு பீத்திமிர்.

சாரு : குஷ்புவின் பின்னழகு - சுகன்யாவின் பின்னழகு ஒப்பிடுக.
பிரமிள் : ஒப்பிடுவது எப்படி ? பின்னழகு ஒப்பனைக்கு ஒப்பனை மாறுபடும் பிடரி மயிர் ஓய்!

சாரு : ஜெனெ - ஜே கே, இந்த இருவரில் தங்களை அதிகம் திருப்திப்படுத்தியவர் எவர் ? யாரிடம் அதிகபட்சம் உச்ச இன்பம் கிடைத்தது?
பிரமிள் : ஜெகன் மோஹினிப் பிரமையில் ஏதோ பேத்தி விட்டீர்கள். என் உச்ச இன்பம் எல்லாம் உங்கள் வாய்களைக் கிழிக்க அடிக்கும் போது தான்.

விக்ரமாதித்யன் : பாலிமிக்ஸ் நிற்குமா ? படைப்பு நிற்குமா ?
பிரமிள் : மிகப்பெரிய உலக இலக்கியங்கள் யாவும் பாலிமிக்ஸை உள்ளடக்கியவைதாம். வெறும் பாலிமிஸ் என்று பார்த்தால், காளமேகம், பிற்கால ஓளவை, கம்பன், திருவள்ளுவர் ஆகியோரின் தனிப் பாடல்கள் பாலிமிக்ஸாகவே இன்றும் நிற்கின்றன. வீர்யம் உள்ளவனின் குசுவும் படைப்பாகும். வீர்யமற்றவனின் படைப்பும் குசுவாகும்.

விக்ர : தேவதேவன் தவிர்த்து உங்கள் ஸ்கேலுக்குள் அடைபடும் பிற கவிஞர்கள் யார் யார் மிஸ்டர்?
பிரமிள் : நிச்சயமாக நீர் இல்லை, கவியாண்மையற்ற லிஸ்டர்!

விக்ர : நவீன கவிதையின் அனாவசியமான இயல்பற்ற இறுக்கம், கட்டமைப்பு, செறிவு, லொட்டு லொசுக்கையெல்லாம் உடைத்தெறிகிற கவிதைகளே நம் தமிழுக்கு வளம் சேர்க்கும் என்ற எண்ணத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? இதுதான் என் சிந்தை!
பிரமிள் : உமக்குண்டு ஆமாம் போட ஒரு மந்தை!

விக்ர : சில்க் ஸ்மிதாவின் அழகு, கண்ணிலா, உடம்பிலா?
பிரமிள் : நிச்சயமாக, நீர் காணும் அழகு உமது கண்ணில்தான் என்பது அழகியல் தத்துவம்.

இரா நடராஜன் : தருமு சிவராமு செத்துப்போய் விட்டானா?
பிரமிள் : ஆம். இருப்பது பிரமிள்.

இது போன்ற கேள்விகளுக்கு நம் சக பதிவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என யோசிப்பதும் சுவாரசியாமாகத் தான் இருக்கிறது !

http://jyovramsundar.blogspot.in/2008/06/blog-post_06.html





சென்னைக்கு மேல் நிலவு

குளிரின் விறைப்பில்
கதகதப்புத் தேடும்
கண்டத்துக்கு வந்துவிட்ட
உங்களுக்கும்,
எலிகளுடனே
சென்னையின் ஒரு
சிமிண்ட் பொந்தில்
குடியிருக்கும் எனக்கும்
எப்போதும் எரிகிறது
உள் மனத்தில்
தமிழகத்து வெயில்.


நெய்தல் மெரீனாவில்
சித்திரை நெருப்புக்கு
ஒத்தடம் தரும்
மாலைப் பொழுதும்
மனசுக்குள் எங்கோ
புகைகிறது.

கடல்கடல் என்று
பஸ்பஸ்ஸாய்
வந்திறங்கி
வந்திறங்கி
வரட்டுக் காற்றை வாங்கிவிட்டு
இப்போது
வீட்டுக்கு வீட்டுக்கு என்று
பஸ் நிறுத்தத்தில்
அடர்கிறது ஜனத்தொகை.
சற்றே வெற்றி என்று
சப்புக் கொட்டிய
குடும்பக் கட்டுப்பாட்டுப்
பிரசாரகர்களும்
பஸ் நெரிசலில் அகப்பட்டுத்
திணறுகிறார்களாம்;
அடேங்கப்பா
இவ்ளோ ஜனங்களா
என்ற அவர்கள் திரிசங்குக் குரல்
ஜனங்களைத் தாண்டி ஒலிக்கிறது.

கவிதை, ஓவியம்--பிரமிள்




பிரமிளின் ஓவியங்கள்//








ஒளிக்கு ஒரு இரவு-


காக்கை கரைகிறதே
பொய்ப்புலம்பல் அது.
கடலலைகள் தாவிக் குதித்தல்
போலிக் கும்மாளம்.
இரும்பு மெஷின் ஒலி
கபாலம் அதிரும்.
பஞ்சாலைக் கரித்தூள் மழை
நுரையீரல் கமறும்.
அலமறும் சங்கு இங்கே
உயிர்ப்புலம்பல்.
தொழிலின்
வருவாய்தான் கும்மாளம்.
லாப மீன் திரியும்
பட்டணப் பெருங்கடல்.
தாவிக் குதிக்கும்
காரியப் படகுகள்.
இயற்கைக்கு ஓய்வு ஓயாத
மகத் சலித்த அதன்
பேரிரவு.


நிழல்கள்

பூமியின் நிழலே வானத் திருளா?
பகலின் நிழல்தான் இரவா?
இல்லை,
பூமிப் பந்தின் பின்னே
இருளின் பிழம்பு,
இரவில் குளித்து
உலகம் வீசும்
வெளிச்சச் சாயை பரிதி.
ஆமாம்.
இரவின் நிழலே பகல்;
இருளின் சாயை ஒளி.







சைத்ரீகன்

வெண்சுவர்த் திரையிலென்
தூரிகை புரண்டது.
சுவரே மறைந்தது.
மீந்தது காட்சி.
ஓஹோ,
உயிர்த்தெழும் ஒளிக்கு
இருள் ஒரு திரையா?
பாழாம் வெளியும்
படைப்பினை வரையவோர்
சுவரா?


எழுத்து. டிச. 1961





Meenakshipuram Deivakumar Muthukumaraswamy
மிள் கூறியதை குறிப்பிட்டது, பிரமிளின் கல்லறையின் மேல் சுப்பிரமணியன் வைத்திருந்த எளிய உருவப்படத்தை விளையாட்டுப் பையன்கள் சிதைத்துவிட்டதைச் சொன்னது ஆகியவை என்னை வெகுவாக பாதித்தன; கால சுப்பிரமணியன் அவற்றை தகவல்களாக மட்டுமே குறிப்பிட்ட போதிலும். வீறாப்பாக சமரசங்கள் இன்றி கம்பீரமாக வாழ்ந்து மறைந்த கவிஞனை எந்தவித பச்சாதாபங்களும் இல்லாமல் நினைவு கூர வேண்டும், கொண்டாடவேண்டும் என்ற என் அந்தரங்கமான எண்ணம் தோல்வியடைந்தாக நினைத்தேன். பிரமிளின்

"காலத்தைத் திரித்து
நேற்று நாளை
இரண்டுக்கும் நடுவே
இன்று முடிந்திருக்கிறது
முடிச்சின் சிடுக்கு- நான்
அத்துவிதம் கணந்தோறும் நான்
செத்தவிதம்.
சொல்வேன் உண்டென்று
சொல்லில் இல்லாதது.
சொல்வேன் உண்டென்று சொல்லில்,
இல்லாதது.
சொல்வேன் உண்டென்று
சொல், இல்
இல்லாத
அது" என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வர ஆறுதலடைந்தேன்

Wednesday 23 September 2015

-Gevorg Emin---Chu--Giloba-Geldman ---Kuo-Wang--Chih- Kabir--Hakim Sanai- -Nuno Júdice-(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

எதுவாயினும் சரி ,ஆனால் நினது விழிநீரல்ல,
என்னைச் சபி, என்னைத் தூற்று ,என்னைத் துரத்திவிடு,
என்னைக் கடிந்துகொள்,பிரமாணம் செய் ,
கடுமையாய் மற்றும் நயமின்றி நடந்து கொள்,
நினது பார்வையிலிருந்து என்னை ஆண்டாண்டுகளுக்கு தடைசெய்,
“நான் உன்னை நேசிக்கவில்லை” என
என்னை நோக்கி கூச்சலிடு:
ஆயினும் அழாதே ,
அழாதே என் அன்பே,
எதுவாயினும் சரி, ஆனால் நினது விழிநீரல்ல!
நான் நிஜமாகவே பிழையனாக இருப்பினும்
நான் பத்துமுறை நேரானவனாக இருப்பினும்
எத்தகையக் குற்றவுணர்வையும் நான் முறையிடுவேன்.
எனது பார்வையில் நினது விழிநீர் வீழும்போது.


-Gevorg Emin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





வீதியில் பனி பறக்கிறது,
மெதுவாய் , உருகியே , மெல்ல உயிரிழக்கிறது,
மெதுவாய் , பேசாது , ஒரு யுவதி கடந்து போகிறாள்,
தனது கண்ணீரைத் தானே விழுங்கியபடியே பெருமூச்செறிகிறாள்,
அவள் ஏன் இன்பமிழந்து இருக்கிறாள்?
அவள் அவதியுற்று ஏன் அழுது -அரற்றுகிறாள்,
புத்தாண்டின் பனித்துகள்கள் பறந்திருக்க?
அவள் தனிமையில் விடபட்டிருக்கிறாள் -
வாழ்வு எத்தனை குரூரமானது, எத்தனை அழுத்தமானது.
உவகையும் மற்றும் இன்பமும் மறுதலிக்கப்பட,
ஆகையால்தான்,
அவள் திக்கின்றி திரிகிறாள்,
தனது கண்ணீரை விழுங்கியபடி பெருமூச்செறிகிறாள்,
காற்றில் அபகரித்தும் மற்றும் அழுதபடியிருகிறாள்,
யோசனையில் ,
அநேகமாய் - அவ்வண்ணமே யானும் யோசிக்கிறேன்.
இன்பம் என்பதோர் வெற்றுப் -பொய்மையே,
யாவுமே உருகித் தீரவேண்டும், பறந்திருக்கும் பனித்துகள் போல்,
யாவுமே, பனி நிகராய் படபடத்திருக்கும்...


-Gevorg Emin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்





வா இன்றெனக்கு நினது வருகையைத் தந்தருள்,
நானுன்னை இறுதியாகக் கண்டு எத்துனை நாளானது.
நினது பாடல் எனது சோகத்தை விரட்டியடிக்கட்டும்
அது காலம் நெடிதுற எனது விருந்தினனாகத் தங்கிவிட்டது ..
ஒப்பில்லா அமைதியில் ஒரு வெண்புறா மேவிச்சென்று
எனது சாளரத்தின் மீது செங்குத்துச் சுருள்களாக எழுகிறது.
நேசமே , எனது கனாக்களில் நின்னை ஒருவேளைக் காணக்கூடும்,
ஆயினும்,
அந்தோ ,எனது துயிலை ஏனோ தவறவிட்டேன்!


-Gevorg Emin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




நிசப்தத்துள் எனது நூலுடன் நீ அமர்,
எனது நூலின் மீது நினது நிழல் சாய்கிறது
நினது நேசத்தின் பிரதிபிம்பமாய்,
எனது நூலின் மீது நினது நிழல் சாய்கிறது.


இக்கணமுதல்;
ஒருவேளை நானுறையும் அவ்விடத்திற்குப் பிரயாணம் செய்,
நான் செய்யக் கூடிய கவிதைகள் எதுவாயினும் ,
நான் எவ்விடமெல்லாம் கடற்பயணம் செய்யினும் அன்றி சிறகடிப்பினும்,
நினது நிழல் ஒவ்வொரு பாடலிலும் சாய்ந்திருக்கும்.

-Gevorg Emin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







துயிலும் நுண் புற்கள்
இப்போது விழிப்புறுகிறது
கதிரொளியில் நிற்கிறது
நீண்டும் , தங்களது விழிகளைத் துடைக்கின்றன.


உலர்ந்த மஞ்சள் புற்கள்
இப்போது பச்சையமாகியுள்ளது,
சுகந்தம் பரப்பும் காற்றின் முன் சிரம் தாழ்த்துகிறது,
அவை முறுவலித்தபடியே ஒன்றுக்கொன்று முகமன் கூறுகிறது.

மங்கி மறைந்த நுண் புற்கள்
இப்போது சுதந்திரமாய் செழிக்கிறது.
பறவைகள் கிளர்ந்து இசைக்கின்றன,
”நண்பர்களே, நாம் வெகுநாட்களாய் பிரிந்திருந்தோம்!”

இளவேனிலின் ஆழுணர்வு எத்துனை வலியது!
வனப்பான நுண் புற்கள், எமது நண்பர்கள்,
இளவேனில் உன்னைத் வருவித்ததா?
அன்றி நீ தான் அவளை வருவித்தாயா?

-Chu-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)








காலைப் பொழுதில் ஞாயிறு
என்னோடும் என தந்தையோடும்
ஒருங்கே வனங்களில் உலவியது.
எனது வலதுகரம் அவரது இடது கரத்திலிருந்தது-
மின்னல் மரங்களினூடேவெட்டிப் பாயும் வாளாகிறது.
இலைகளின் மீதிருந்த குருதி கண்ட
விழிகளின் நடுக்கத்தில் பெரிதும அஞ்சினேன்.
- தந்தையே, தந்தையே, விரையுங்கள், ஈசாக்கை காப்பாற்றுங்கள்.
மதிய உணவுநேரத்தில் யாரும் விடுபடாதிருக்கவும்.
-எனது தனையனால் நான் கொலையுண்டேன், என் மகனே.
ஏற்கனவே எனதுக் குருதி இலைகளின் மீதிருக்கிறது,
தந்தையின் குரலோ நெறிக்கப் பட்டுள்ளது
அவரது முகம் வெளிறியுள்ளது
-நான் உரத்துக் கதற எத்தனித்தேன், அதை நம்பாதிருக்கவும் படபடத்தேன்,
எனது விழிகளைப் பிய்த்துத் திறந்தேன்.
நான் துயில் நீங்கினேன்.
-குருதியற்றிருக்கிறது எனது வலதுகரம்.


-Giloba-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







ஆபிரகாமைப் போல்
அந்நாட்களில் எனது தந்தையாரும்,
ஒவ்வொரு காலையும் விழித்தெழுந்து
தேவதைகளுக்கான ஆர்வம் பூத்த- விழிகளுடன்,
பொறுமையுடன் காத்திருப்பாரா.
அவரிடமிருந்து ஒரு திருவுளச் செய்தியைத் தாங்கி வந்துள்ளதை
அறிந்திருக்கிறார்.
ஒரு தந்தை தனது மகவை சுமப்பதைப் போலும்
வழியெங்கிலுமாக.
நாள்; நெடுந்தூர மலையொன்றில் வடிகிறது.
வருகையுறா மூன்று தேவதைகளாய் .
மாலை அவர்மீது நின்றது.
ஒளி விதைக்கப்பட்டுள்ளது.
அவரது கன்னங்களின் செவுள் பள்ளத்துள்.
இன்னுமொரு ஊதா தாணியமணி பொருத்தப்பட்டுள்ளது.
அவரது நெற்றிப் பொட்டில்,
அதுவொரு மாதுளை துண்டு போன்றிருந்தது.


-Geldman -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




நெப்பமாய், நெப்பமாய் உள்ளது நிலவொளி ,
கிராமங்களுக்கு அப்பாலுள்ள பைன்காடுகளை திரையிட்டு மூடுகிறது,
வட்டமாய், வட்டமாய் உள்ளன வெண் மேகங்கள்
அதனூடே சிலத் தாரகைத் துளிகளைச் சலிக்கின்றன.


பால்வெளி எங்குள்ளது?
தூரத்தே பனி கொண்ட ஆழி மூட்டம்;
ஒருவேளை;
ஆங்கோர் கடற்கரையில், கடற்கன்னி இருக்கக் கூடும்
நிலாவின் முன் முத்துக்களை அழுதவண்ணம்.

-Kuo-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)








இரு மஞ்சள்நிற வண்ணத்துப்பூச்சிகள்
இணையாக வானுக்கு பறந்தன;
எதற்கென நான் அறியேன்,
ஒன்று திடீரெனத் திரும்புகிறது
தனிமையிலும் மற்றும் இரக்கமின்றியும் .
மற்றொன்றை விடுத்து.
அதற்கும்கூட வானுக்குள் பறந்திட மனமில்லை ,
வானுலகும் மிகு- தனிமை அடர்ந்த இடமே.


-Hsih-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



பத்து வருடங்களுக்கு முன்பு
யாரோ ஒருவர் எனக்கொரு புன்னகையை ஈந்தார்,
அவ்வேளையில் - எதற்கென்று நான் அறிந்திருக்க்வில்லை -
அவர் இனிதே புன்னகைத்தார் என உணர்ந்தேன்.


அம்மனிதருக்கு நேர்ந்த்தை நான் அறிந்திருக்கவில்லை,
ஆயினும் அவரது புன்னகை மிஞ்சியது ;
அவரை மறக்கவும் என்னால் கூடவில்லை
புன்னகை நெடிதாய் நீடிக்க மேலும் நேசிப்புக்குரியதாய் மாறியது.

அபரிதமான காதல் கவிதைகளை அதன்மீதே புனைந்தேன்
பல-அமைவுகளை அதற்காகவே செய்துள்ளேன்,
அக்கவிதையை வாசித்த சிலர் சோகத்தை உணர்ந்தனர் ,
அக்கவிதையை வாசித்த பிறர் மகிழ்வை உணர்ந்தனர்,

மகிழ்வும் மற்றும் சோகமும்,
ஒற்றை புன்னகை மட்டுமே,
அவ்வாறு யார் புன்னகைத்தாரோ அவரைக் காணவே இயவில்லை,
ஆயினும்
அவரது நேசம் கனிந்த புன்னகைக்கு நான் நன்றியறிதலுடன் இருக்கிறேன்..

-Hu-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




அடிக்கடி நாம் உற்ற இரவைக் கழிக்கிறோம்,

ஒரு விசித்திரமான அறையில், காலைப் பொழுதில்,

அது எவ்வாறு தோற்றமளிக்கிறது என அறிந்துணர,

நமக்கு வழியேதுமில்லை,அதன் கடந்தகாலத்தையும் மற்றும்

வருங்காலத்தையும் , நாம் குறைவாகவே அறிந்திருக்கிறோம்.







எல்லையில்லா சமவெளியொன்று நமது சாளரத்திற்கு அப்பால் நீள்கிறது,

அந்திப் பொழுதில் நாம் வந்தடைந்த அந்தச் சாலையை ,

நாம் சற்றும் தெளிவின்றி ஞாபகமடைகிறோம், இவையே நாமறிந்தவை.

நாளை நாம் விடைபெறப் போகிறோம் , மீண்டும் திரும்பப் போவதில்லை.




ஓ; உனது விழிகளை சாத்திக் கொள், அந்த உற்ற இரவுகளும்,

விசித்திரமான இடங்களும்,

நமது நெஞ்சில் பின்னிப் பிணையட்டும்

நமது வாழ்வோ சாளரத்தின் அப்பாலுற்ற சமவெளியாகிறது,




அந்தப் பனிசூழ் சமவெளியில், நாம்

ஒரு மரத்தையும் , ஏரியிலிருந்து எழும் ஒரு திடீரொளிப் பாய்வையும் அறிந்துணர்கிறோம் , அதன் இன்மையில் ,

நினைவிலிருந்து நீங்கிய கடந்த காலமும் ,

மேலும் மங்கலாக தென்படும் வருங்காலமும் ஒளிந்துள்ளது.




-Chih-

(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




என்னால் அதை மறக்கவே இயலாது,
மேற்கில் சமைந்திருக்கும் அந்த நீர்-நகரை,
அது வாழ்வின் குறியீடு-
ஆயிரமாயிரம் தனிமைகளின் ஒன்று -கூடல்.


ஒவ்வொரு தனிமையும் ஒரு தீவு,
ஒவ்வொரு தீவும் எனது நண்பனாகியுள்ளது,
எனது கரங்களை நீ குலுக்கும் போது,
அது நீரின் குறுக்கே அமைந்தப் பாலத்தை ஒத்திருக்கிறது.

நீயென்னைக் கண்டு புன்னகைக்கும் தருணம்,
அது நேரெதிர் -புறத்து தீவினில்
திடீரென விரிந்த ஒரு சாளரமாகிறது. .

ஆயினும் இரவு ஆழ்ந்து அசைவின்மையை அடையும்வரை காத்திரு,
இறுகமூடிய சாளரம் ஒன்று மட்டுமே காணத் தட்டுப்படுகிறது,
அந்தப் பாலத்தின் மீது மானுடர் சுவடென ஏதுமில்லை.

-Chih-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





அலை தனது கரங்களை நீட்டுகிறான்,
மறுபடியும் மறுபடியும் அணைத்து மெய்தழுவகிறான்
மணல்;
அவளை அவன் முத்தமிடுகிறான்,
ஒரு முத்தமிடலுக்குப் பின்னர்,
அவன் காற்றால் பின்னுக்கு உந்தப்படுகிறான்.
அவன் சினந்து கர்ஜிக்கிறான்,
மீண்டும் அவன் தன்னிச்சையாக முந்திப் பாய்கிறான்,
கடற்கரை அருகிலுள்ள சின்னஞ்சிறு பகோடாவை தழுவி ,
இன்னும் அதீதப் பேருணர்வில் அவளை முத்தமிடுகிறான்
அந்த சின்னஞ்சிறு பகோடா மீதேற,
பனியொத்த தூவல்கள் சிதறுகின்றன, எங்கிலுமாக வாரியிரைக்கப்படுகின்றன.
அவன் நகைக்கிறான், ஒலிகூட்டி ஆனந்தக் களிப்பில் அவன் நகைக்கிறான்
ஆயினும் காற்று அவனை
மறுபடியும் பின்னுக்கு உந்தித் தள்ளுகிறது,
ஓ அலையே!
சிறுபொழுதேனும் நீ ஓய்ந்திரு.
ஏற்கனவே நீ அவளைத் துறந்து தொலைந்தாய்,
உனது நேசத்தின் ஞாபகம்
இவ்வண்ணமாக நீள்கிறது.
ஒரு சிறிதேனும் நீ சோர்வுறவில்லையா ?


-Wang-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





அவளது விழிகள் இளவெம்மைச் சூரியன்,
இல்லையெனில் , ஏன், அவள் என்னைக் கண்டதும் ,
எனது உறைந்த நெஞ்சம் பிழம்பாய் ஒளிர்கிறது?

அவளது விழிகள் முடிச்சுகளை அறுக்கும் கத்தரிக்கோல்கள்
இல்லையெனில், ஏன், அவள் என்னைக் கண்டதும்,
எனது தளையுற்ற ஆன்மா விடுவிக்கப்படுகிறது?.


அவளது விழிகள் பேரின்பத்தின் திறவுகோல்;
இல்லையெனில், ஏன், அவள் என்னைக் கூர்நோக்கியதும்,
நான் சொர்க்கத்தில் இருப்பதாய் உண்ர்கிறேன்?

அவளது விழிகள் துயரின் எரியிழையானது,
இல்லையெனில், ஏன், அவள் என்னை வெறித்ததும்,
நான் கடுந்துயராழியில் அமிழ்கிறேன்?

-Wang-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

In all the world I do not know
Two shorter words than "Yes" and "No".
Yet sometimes questions may arise
Causing such inner strife,
That to give one of these replies
May take up all one's Life.


-Gevorg Emin -





நின்னை முத்தமிடுவதாய் நேற்றிரவுக் கனவுற்றேன்,
ஓ, எத்தனை இனிமை ஊறிய வாய் !
துயில் நீங்கிப் பார்த்தபோது நினது வாய் தென்படவில்லை,
நினது மொட்டு -நிகர் வாயை எனக்கென கனவில் அனுப்புவாய் என விழைவேன்.


நான் துயிலும் தருணம் , கொசுவலையின் அகத்தே நின்னையே காண்கிறேன்;
நான் பருகும் போதெல்லாம், நின்னயே எனது குவளையில் காண்கிறேன்;
நான் வகுப்பறையில் உள்ளபோதும் , பலகையில் நின்னையே காண்கிறேனே அன்றி வரைபடங்களையல்ல.

-Chih-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






ஒரு மஞ்சள் கீற்று மரத்துள் பறந்தது,
பாருங்கள் ,
ஒரு மஞ்சள் ஓரியோல் பறவை, என்றது ஒரு குரல்.
தன் வால்நுனியை மேலுயர்த்துகிறது, அது ஒலி எழுப்பவில்லை.
அடர்ந்த கறுத்த தழைகளை,
அதன் ஒளிப்பிரகாசம் பொலிவுறச் செய்தது,
இளவேனில் ஒளிபோலும், தீச்சுடர் போலும் , பேருணர்ச்சி போலும்.


-Hsu-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






எனது தனிமை ஒரு நீள்- அரவம்,
அமைதியாய் மற்றும் பேச்சற்றிருக்கிறது.
உங்களது கனவில் அதைக் காண நேரிட்டால்,
ஓ, எவ்வகையிலும் திடுக்கிட்டு விடாதீர்கள்.


அது எனது விசுவாசமிக்கத் தோழன்,
அதன் நெஞ்சமோ இல்ல- நினைவின் ஏக்கத்தில் எரிகிறது:
ஒரு வளமார் தழைவெளிக்காக ஏங்குகிறது,
அந்தக் காகக்- கறுமையின் பட்டிழைகள் உனது சிரத்தில்!

நிலவின் ஒளிக்கற்றைப் போன்று, லேசாக
அது உனது பக்கமாக நழுவுகிறது.
எனக்கென உனது கனவைக் களவாடுகிறது,
எரிதழல் மூண்ட கிரிம்சன் மலராய் ஒரு கனவு.

-Chih-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




எனது நயமற்ற முரட்டு விரல்-நுனிகளால்,
உனது தசையின் வெதுவெதுப்பை உணர்கிறேன்;
ஒரு மான்கன்று கானகத்தில் வழியை இழக்கிறது
மாய்ந்த இலைகளின் பெருமூச்சு மட்டுமே எஞ்சியுள்ளது.


உனது சன்னமான தாழ்குரல்
எனது பாழ் நெஞ்சில் அலறுகிறது,
நான் யாவற்றையும் வென்று கைக்கொள்பவன்,
எனது ஈட்டியையும் கேடயத்தையும் உடைத்துவிட்டேன்.

உனது ”மென் - கணப்பார்வை “
கொய்வதற்கானக் கசாப்புக்காரனின் எச்சரிக்கையை ஒத்திருக்கிறது;
உனது அதரங்கள்? அவைகளைக் குறிப்பிடவே அவசியமில்லை !
அதற்குப் பதிலாக நான் உனது கரங்களை நம்புவேன்.

பித்தம் தொனிக்கும் தேவதைக் கதைகளை நம்புவேன்,
ஆனால் நங்கையின் நேசத்தையல்ல.
ஒப்பீடு செய்வதில் நான் பரிச்சயமற்றவன்,
ஆனால்
நீயோ புனைகதை ஆய்மகளின் சாயலைக் கொண்டிருக்கிறாய்.

இசைமெட்டுக்கள் யாவையும் நான் தீர்த்துவிட்டேன்,
ஆயினும் உனது செவிகளை இன்புறுத்த இயலவில்லை;
நான் ஒவ்வொரு வண்ணத்தையும் பிரயோகிக்கிறேன்,
ஆயினும் ;
அதில் ஒன்றேனும் உனது பெருவனப்பை வசப்படுத்தவில்லை.

-Li-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





எனது புத்தகத்தை அப்பால் வைத்துவிட்டேன் ,
கரங்களில் முகவாயும், தனிமையுமாக,
அங்கு கானகத்தில் கூடடையும் பறவைகளில் கவனம் கொள்கிறேன்,
அவைப் பொருத்தமான வார்த்தையைத் தீர்மானிக்க இயலாது,
கவிதையொன்றில் முணுமுணுத்திருக்கிறது,
மாலையின் நிழல்கள் இறவாண்த்தின் மூலைகளில் கூடுகிறது.

வாயிற்கதவின் புறத்தே நானொரு நண்பனைச் சந்திக்கிறேன்,
என்னைக் காணத் தனது சட்டைக் கையில் கவிதையுடன் வருகைத் தருகிறான்
உனது கவிதையை வாசித்தறிய மிகுதியான நேரமிருக்கிறது
முதலாவதாக ;
நாமிருவரும் சென்று மலர்ச்சியுறும் பிளம்களைக் காணலாம்.
-Michizane -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
 


நான் சீப்பை நோக்குகிறேன், நீரை நோக்குகிறேன்,
உதிர்ந்து வீழ்ந்தவை எவையென நோக்குகிறேன்.
வயதும் இளமையும் தொலைதூரமாகிவிட்டன,
இரண்டையும் ஒருசேர வசமாக்க இயலாது.
எனது கேசம் நாள்தோறும் மெலிவதாய்ச் சொல்லாதே-
அதற்கு பதிலாக,
எனது பேரப் பிள்ளைகளின் தாடி வளர்வது எவ்வாறெனப் பார்!

-Tadaomi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

 
எனது நயமற்ற முரட்டு விரல்-நுனிகளால்,
உனது தசையின் வெதுவெதுப்பை உணர்கிறேன்;
ஒரு மான்கன்று கானகத்தில் வழியை இழக்கிறது
மாய்ந்த இலைகளின் பெருமூச்சு மட்டுமே எஞ்சியுள்ளது.
உனது சன்னமான தாழ்குரல்
எனது பாழ் நெஞ்சில் அலறுகிறது,
நான் யாவற்றையும் வென்று கைக்கொள்பவன்,
எனது ஈட்டியையும் கேடயத்தையும் உடைத்துவிட்டேன்.
உனது ”மென் - கணப்பார்வை “
கொய்வதற்கானக் கசாப்புக்காரனின் எச்சரிக்கையை ஒத்திருக்கிறது;
உனது அதரங்கள்? அவைகளைக் குறிப்பிடவே அவசியமில்லை !
அதற்குப் பதிலாக நான் உனது கரங்களை நம்புவேன்.
பித்தம் தொனிக்கும் தேவதைக் கதைகளை நம்புவேன்,
ஆனால் நங்கையின் நேசத்தையல்ல.
ஒப்பீடு செய்வதில் நான் பரிச்சயமற்றவன்,
ஆனால்
நீயோ புனைகதை ஆய்மகளின் சாயலைக் கொண்டிருக்கிறாய்.
இசைமெட்டுக்கள் யாவையும் நான் தீர்த்துவிட்டேன்,
ஆயினும் உனது செவிகளை இன்புறுத்த இயலவில்லை;
நான் ஒவ்வொரு வண்ணத்தையும் பிரயோகிக்கிறேன்,
ஆயினும் ;
அதில் ஒன்றேனும் உனது பெருவனப்பை வசப்படுத்தவில்லை.
-Li-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
 

அவனை அண்மிக்க அனுமதித்தேன்
அமைதியாக
எனது செவியருகே கட்டைவிரல் நுனி ஊன்றிவர

எனது மார்பில் இதயம் நடுங்கும் கணம்
ஜுரமுற்ற எனது குருதியைத் துரிதப்படுத்துகிறது


முதலில் வனம், பின்னர் அடர்கானகம்,
உறைபனியின் இழைநயத்தைக் காட்டிலும்
கூடுதலான பனிமூட்டம்

தழைத்துச் செழித்த கவிதை,
முதலாவதாக
வரி வரியாக உறிஞ்சி ஈர்க்கும்
ஒவ்வொரு தஞ்சமின்மை

பின்னர் இழிமை தாக்குகிறது மற்றும்
பசிப்பிணியுற்ற
கூர்மதி நரி பதுங்குகிறது

மென்மையாய் ஊர்கிறது ஆயினும்
பெருவேட்கையுறுகிறது
மூலாதாரத்திலிருந்து அவனே
மைய உள்ளீடாயிருக்கிறான்
பின்னர் ஒசை பெருவெடிப்புற

வளைவுற்று , பாதையில் விரைந்து
அவன் குறுக்குவழியை கைகொள்கிறான்
ஒரு கூட்டத்துடன் ஒடியடியிருக்கிறான் அன்றி
தனியனாய் தப்பிக்கிறான்

இரவின் நிசப்தத்தில் அவன்
வெண் வனநரியின் ஆடையில்
நிலவொளியை கொணர்கிறான்

எனது சருமத்தின் நடுக்கத்தில்
அவன் வருகையுற்றதை உண்ர்கிறேன்,
கூடி ஒன்றிய மணிக்கட்டில்
அடைபட்டத் தலைசுற்றல்

நான் எழுதும் வினையில்
எனது கனவின் மீது பாய்கிறான்
மெல்ல அவனது ஆடைகளைக் களைந்து
அவனுடன் சயனிக்கிறேன்.

-Maris Teresa Horta-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

கனவில் எனது - இறை என்னை அடைந்தாரா
அவரது இன்-தீண்டலுக்கு நான் விழிதிறந்தேன்.
எனது கனவின் இன்ப -நிறைவை வசமாக்கிக் கொள்ள
எனது விழிகளைச் சிறிதேனும் மலர்த்தவில்லை .
இறையுள்ளத்தின் நேசக் குறிப்பை
எனது சின்னஞ் சிறு நெஞ்சத்தின் மையத்துள் பதிக்கிறார்.
துளியேனும் தண்ணீரை பருகாதிருக்கிறேன்
அந்தத் திருவுளக் குறிப்பைக் கரையாது காத்திட
விழியறைக்குள் வந்தடையேன், என் நேசமே.
உடனே இமைத்திரையை இறக்குகிறேன்
அவ்வண்ணமாக;
நான் மட்டுமே உன்னையங்கு தரிசிப்பேன்
நீவீர் வேறு யாரையும் காணாதிருப்பீர்.


-Kabir-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



ஒருவழியாக இரவு அழிந்தது
இனிக் காலைப் பொழுதேனும் வீணில் அழியாதிருக்கட்டும்.
வண்டு பூக்களுக்கு வழிசெய்து விடைபெறுகிறது
நாரையொன்று வந்து சலனமின்றிச் சமைந்துள்ளது,
நீரைத் தேக்கும் வலிமையற்ற
வேகாதக் களிமண் குடம் போல்,
நாடித் துடிப்பற்ற உடலோ பயனற்றது.
என் நேசத்தவள் செய்வது இன்னதென அறியேன்
ஆகையால் நான் இடையறா பேரச்சத்தில் அதிர்கிறேன்.
காகத்தை விரட்டிக் கரங்கள் ஓய்கின்றன
எனது நேசத்தவளின் உள்ளக் கிடக்கையும்
எனக்கு நேரிடப் போவதையும் யாதென அறியேன்.


-Kabir-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)









ஓ அன்னப் பறவையே,
நாம் அந்நிலம் சேர சிறகசைப்போம்,
எங்கென் நேசத்தவள் பேரரசியாய் ஆள்கிறாளோ,
கயிறு இன்றி மற்றும் வாளியின்றி பருவ நங்கையர்
கிணற்றிலிருந்து நீரை இரைக்கின்றனர்.
அங்கு மேகமில்லாது மழையாகிறது-
உடலற்ற நம் உருவை முற்றிலும் நனைக்கிறது
நிறை- நிலா இரவுதோறும் சுடர்கிறது
காலை ஒவ்வொன்றும் கதிரொளிர்ந்து பிரகாசித்திருக்கிறது,
கணக்கற்ற ஞாயிறுகளின் பேரொளியுடன் .


-Kabir-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






நினது நெஞ்சத்தின் வலிய -வாதையை மொழியாதே-
அவர் மொழிகிறார்.
அவரை நாடாதிரு -அவர் நாடுகிறார்.

ஒரு எறும்பின் பாத தீண்டலைக் கூட உணரந்தறிகிறார்,
நீரின் அடியாழத்தில் கல்லொன்று நகர்ந்தாலும் -
அதை அவர் அறிந்திருக்கிறார்.


பாறையின் அகத்துள் புழு வசிப்பினும்,
அணுவினும் நுண்ணிய அதன் யாக்கையை
அவர் அறிந்திருக்கிறார்.

தோத்திரத்தின் ஒலியூற்றையும் அதன் மறைவான உண்ர்புலத்தையும்,
அவர் தனது இறைமையின் ஞானத்தால் அறிந்திருக்கிறார்.

அவரே புழுவிற்கான ஜீவாதாரத்தையும் வழங்கியுள்ளார்;
அவரே மெய்ஞானப் பாதையையும் புலனாக்கியுள்ளார்.

-Hakim Sanai-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)









What appears to be truth
is a wordly distortion
of objective truth.

-Hakim Sanai-






Shanmugam Subramaniam liked this.





Ravi Subramaniyan

20 hrs ·



குளித்துவிட்டு
வாசத்துடன் வந்தவள்
நினைவின் ஈரத்தைத் துவட்டி
இழைஇழையாய் பிரித்து
காற்றில் காயவைக்கிறாள்


வாசத்தில் காயும்
நினைவுகளின் நிறம் இப்போது
கருப்பு





Shanmugam Subramaniam liked this.






அ. பிரபாகரன் added 3 new photos — with Sp Baalamurugan.
September 22 at 10:05pm ·



1.பந்துக்கள் இல்லாதவன்
'''''''''''''''''''''''''''''''''''''''''
ஊரூராய்
ரப்பர் பந்தை
விற்கும் வியாபாரியிடம்
கூந்தலை வடிவுடன்
முடிந்த பெண்
தன் பிள்ளைக்கு
இனாமாக ஒரு பந்தைத்
தருவாயா எனக்கேட்பாள்.
அந்தரத்திற்கும்
அந்தரத்திற்குமாய்
பட்டு எகிறும்
பந்தைக்கொடுத்து
எப்போதும்
இந்த உலகம் அழகானது
என்ற பாடலைப்பாடி
அந்த ஊரையும்
பந்துகளோடு கடப்பான்.


2.சஞ்சாரம் சீபத்த
'''''''''''''''''''''''''''''''''
மறுநாள் மழவன் திருமணம்
இருள் கோதும் அந்தியில்
பெரும் பாதையைவிட்டு
பாட்டையை பிடித்தான்
கிள்ளிவளவன்
வெண்பசு மிரள சரசரத்தது
பெயர் சொல்லாதது
வழியெங்கும் அத்திமணம்
நள்ளிரவில்
நாவலூரைத்தொட்டான் வளவன்
போனகாலையில் திருவதிகை
விடிந்தால் வெண்ணைநல்லூர்
கெட்டிமடத்தில் எரிந்த விளக்குகண்டு
அங்கு சென்றால்

நெடுஞ்சினனொடு கொடுஞ்சினன்
சீபத்தன் நல்வாழி நளன்
வெறியன் கோசாலைகாத்தான்
எரிபத்தன் பெருமுடிக்கிழான்
ஆகியோரும் அங்கிருக்க
வா வளவ என்றான் வெறியன்

நாளைமறுநாள் அன்பே தகளியான-Kabir-
கோவலூருக்கு வருவாய்தானே
இது சீபத்தன்

கோவலூருக்கும் வர விருப்பம்தான்
ஆனால்
சம்சாரிக்கேது சஞ்சாரம் சீபத்த.

***** ***** *****


"திருச்சாழல்" வாசித்துக் கொண்டிருக்கிறேன்."மழையிரவும் கடேரிக்கன்றும்" கவிதை சங்கப்பாடலுக்கு நிகரான கவி செழுமையோடு கண்டராதித்தனின் இந்த கவிதை எனக்கு முதன்முதலில் 1998ல் அறிமுகமானது.

தொடர்ந்து சிற்றிதழ்கள் சிலவற்றில் அவரது கவிதைகளை வாசித்தேன்.அப்போது சில கவிதைகள் மிகுந்த நேசிப்பையும் லாகிரித்தன்மையும் கொடுத்தன.பிறகுதான் தெரிந்தது அவைகள் என் வாழ்நிலப்பரப்புக்கு அருகில் முளைத்த கவிதைகளென்று.

தொடர்ந்து புதுமொழி கட்டமைப்போடு கவிதை சூழலுக்கு புதிய வாளினை பரிசாகக் கொடுத்து கவிதை அழகியலை மாற்றுதளத்திற்கு மடைமாற்றியது "சீதமண்டலத்து"க் கவிதைகள்.

"திருச்சாழல்"தொகுப்பில் உதிரி,நீண்டகால எதிரிகள்,அரசகட்டளை,வம்ச கீர்த்தி,பந்துக்கள் இல்லாதவன்,Semen test,மகளின் கண்ணீர்,சம்சாரம் சீபத்த மற்றும் திருச்சாழல் திரும்ப திரும்பவும் வாசிக்க தூண்டுகிறது.

நவீனத்தின் தளுக்கும் ,மரபின் புராதன வாசமும் கொண்ட "திருச்சாழல்"கவிதைகளை கொண்டாடலாம்.கவிஞர் கண்டராதித்தனுக்கு என் வாழ்த்துகள்.






@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


நாட்டுப்புற வெளிகளில், மேயும் மந்தைகள்
பச்சையத்துடன் இரண்டறக் கலக்கின்றன ,
பச்சையம் அவைகளை உண்ணுதல் போலும்,
மேய்ச்சல் ஆடுகள் குரலொலித்தும்,
மணிகள் இசைத்தும், நாயின் குரைப்பில்
இயைந்திருக்கிறது.
ஆயரது குரல் தொலைகிறது,
அவை ஏகும் சேரிடம் பற்றி
ஒன்றும் சொல்லாது ( மந்தையின்
சேரிடம் உள்ளதென்றக் கற்பிதத்தில்)


நாட்டுப்புற வெளிகளில், ஆயர்கள் எங்குள்ளனர் என
யாருக்குமே புலனாவதில்லை,
அந்தியில் ஆயர்கள் எவ்விடம் பயணிக்கிறார்கள்
அவர்கள் சாலைகளை குறுக்காய் கடந்து
கார்கள் உறையும்படியாக வலிய - நிறுத்துகின்றனர்,

சில சமயங்களில் ஒட்டுனர்
விலங்குகளின் சருமத்தையும் கொம்புகளையும்
வகிர்ந்து செல்ல எத்தனிக்கின்றனர், ஆனால்
நாய்கள் கார்களை நேரெதிராய் எதிர்கொள்ளும் ,
ஆயர்களுடன் உள்ள சகாவைப் போலும்
திசை கழன்று செல்லச் செய்விக்கின்றன.

இவ்வுலகிற்கென விதிகள் உள்ளன,
மானுட இயல்பு மாற்றமுறாது.
விலங்குகளும்,நாட்டுப்புறவெளிகளும்- ஏதோ
ஒற்றைத் தனியுடலாய் உருவுற்றது போல்,
இருண்மை ஆளுகையின் புலப்படா எல்லையை,
அதன் சட்டங்களை மற்றும் திசைவழியை,
ஊடுருவ நம்மில் யாராலும் இயலாதது போல்,
ஆயர்களும் மோனத்தில்,
கடவுளர்களால் வழிநடத்தப்படுதாய்த் தோன்றுகிறது.

-Nuno Júdice-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)