Saturday 21 December 2019

மாபெரும் கம்பளம் பற்றிய கனவு , சவக்கோட்டை மர்மம், பதிமூன்று விதங்களில் சொல்லப்பட்ட வேண்டிய கதை -ஜெயமோகன்.

சுபமங்களா . நவம்பர் 1993________________
மாபெரும் கம்பளம் பற்றிய கனவு by ஜெயமோகன்.



பதினாலாவது நூற்றாண்டின் மற்பகுதியில் தேங்காய் நாரினால் என்னப்பட்ட தரைக்கம்பளங்களுக்கு வனதேசங்களைச் சேர்ந்த ரபுக்களிடையே மவுசு ஏற்பட்ட ன் விளைவாக குளச்சல் முதல் காச்சி வரையிலான பகுதிகளில் தாழில் மறுமலர்ச்சி ஏற்பட்டதாக ம் புதிய மாடம்பிவர்க்கமொன்று ருவாகி அதிகாரமும் செல்வமும் பற்று திருவிதாங்கூர் அரசர்களுக்கு ராத தொல்லைகள் கொடுத்த பாகவும் சரித்திரம் கூறுகிறது. கருவியே குழந்தைகளுக்கு கம்பளம் என்னும் கலை கற்பிக்கப்பட்டது. ரிய மந்திரங்கள் மூலம் அவற்றின் ரல்கள் தேவையானபடி வடி மைக்கப்படுவதற்கு கணியான் ன்ற ஜாதியே நியமிக்கப் பட்டிருந்தது. முந்தைகள் வெளிவந்த உடனேயே வற்றை நார்களில் பிணைத்து டுவதும், தன்னிச்சையாக அவற் என் விரல்கள் பின்ன ஆரம்பிப்பதும்

ஜமாக இருந்ததாக குறிப்பிடப் டுகிறது. கருப்பை உலகத்து________________




வினோத வண்ணங்கள் கம்பளங்களின் கலைமதிப்பை ஒரே தூக்காக தூக்கி, பாரீஸ் நகரத்து கலை விற்பன்னர் களிடையே பெரும் பரபரப்பை ஏற் படுத்தின. மலைச்சரிவுகளும், நதி களும், கடலும் கூடி இணைந்த நிலப் பகுதியின் பறவைப்பாடலும், நீர் நெளிவும், வான் நீலமும் நார்களில் பதிந்து உருவான ஏற்றுமதிச் செல் வம் ஒரு கட்டத்தில் குறுமிளகு விற் பனையையே தாண்டியது என்று யவன யாத்ரிகரான ஹிராடடஸ் குறிப்பிடுகிறார். அவருடைய பயணக் குறிப்பு நூலில் அவர் குறிப்பிடும் பல நம்ப முடியாத செய்திகளில் ஒன்று பிரம்மாண்டமான கம்பளம் ஒன்றை நெய்யும் வாய்ப்பை பெற்றகீவ் நகரத்து மையக் கதீட் ரலில் விரிப்பதற்காக இருக்க வேண் டும் இது -- ஒரு மாடம்பியின் அதீத உற்சாகத்தைப் பற்றியது. இவன் பெயரை ஹிராடடஸ் 'யாப்பன்' என்று குறிப்பிடுவதை அய்யப்பன் என்று திருத்தி வாசிக்க முடியும். அகஸ்தியர்கூட மலைக்கும் அரபிக் கடலுக்கும் இடையேயான நிலப்
பகுதியை இவன் ஆண்டிருக்கக்கூடும் என்றும், பிரபலமான அய்யப்பன் மார்த்தாண்டன் என்ற மாடம்பிதான் இவன் என்றும், பிற்பாடு திக வனந்தபுரம் பற்கலைகழக வரலாற்றுக் துறை பேராசிரியர் அச்சுதன் குறுப்பு அவ்வளவாக பொருட்படுத்தப்படாத ஆய்வொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

அய்யப்பன் அக்காலத்தில் கலைஞர்களின் செயல்திறனை ஒருங் கிணைத்து கூர்மைப்படுத்தும் வழி முறைகளில் பிரதானமாக விளங்கி வந்த மரபை அடியொற்றி, கம்பளம் பின்னும் குழந்தைகளை நடமாட வும், பேசவும், கேட்கவும் முடியாத வர்களாக ஆக்கியதாகவும்; அவர் களை விரல்களில் காட்டு இருளுக் குள் அலைந்து திரிந்த மூதாதையரின் ஆவிகளை புள்ளுவப்பாட்டு மூலம் வசீகரித்து பிடித்தடக்கி கொண்டு வந்து குடியேற்றியதாகவும் ஐதீகம் குறிப்பிடுகிறது. மூதாதையரின் சன் னதம் கொண்ட குழந்தைகள் அசுர வேகத்தில் பின்னித்தள்ளிய கம்பளம் கடலலை போல சுருண்டு எழுந்த தாக ஒரு நாட்டுப்பாடல் வர்ணிக் கிறது. பல்லாயிரம் சிறுவிரல்கள் போட்ட முடிச்சுகளில் வினோத மான எழுத்துகள் உருவாகி படிக்க முடியாத சொற்றொடர்களை தன் னிச்சையாக உருவாக்கின என்றும்; அவை உருக்குலைந்தும், புதிதாக பிறந்தும் மர்மமாகப் பெருகின என் றும் தெரிகிறது. குழந்தைகள் பின்
னும் செயலில் ஒன்றிப்போய, ஒரு தருணத்தில் கம்பளத்தின் வண்ணச் சித்திரங்களில் இரண்டறக்கலந்து மறைந்தன. எனவே கம்பளம் தன் னைத்தானே பின்னிக் கொள்ளும் அற்புதம் நிகழ ஆரம்பித்தது. கம் பளம் தேவையான அகலத்துக்கு பின்னப்பட்ட போது அய்யப்பன் மார்த்தாண்டன் உற்பத்தியை நிறுத்த ஆணையிட்டான். ஆனால் குழத் தைகளின் விரல்கள் தவிர வேறு உறுப்புகள் அனைத்தும் முழுமை யாக இறந்து விட்டிருந்தன. மந்திரங் கள் மூலம் மூதாதையரின் ஆவி களைப் பிடித்து திரும்ப காடுகளுக் குச் செலுத்த முயன்ற போது அவை கம்பளத்தின் இருண்ட கட்டங்களுக் குள் புகுந்து கொண்டு போக்குகாட் டின. கோபமும் அச்சமும் கொண்ட மார்த்தாண்டன் பின்னும் விரல்களை துண்டித்து குழந்தைகளை அழிக் கும்படி ஆணையிடவே வாளுடன் அலைந்த கிங்கரர்கள் மகத்தான கம் பளத்தின் பல்லாயிரம் பிம்பங்க ளிடையே கண்மயங்கித் தவித்து, இறுதியில் அவற்றினூடே தாங்களும் பிம்பங்களாக சிக்கிக் கொண்டார் கள். பிம்பங்கள் கலந்து, அலை யலையாக முதங்கள் நிறைய, கம் பளமானது நாலாதிசைகளிலும் பொங்கி விரிந்து கொண்டிருந்தது. 'தரையில் விழுந்த தண்ணீர் பரவுவது போல' என்கிறது அந்த நாட்டுப் பாடல். அய்யப்பன் மார்த்தாண் டன் மீதும், கிங்கரர்கள் மீதும், அரண்மனைகள் மீதும், கம்பள வியாபாரிகளின் கடைவீதிகள் மீதும், அனந்த பத்மநாபசாமி ஆலயத்தின் மீதும் கம்பளம் விரிந்து பரவியது. கிழக்கே அரபிக்கடலையும் மேற்கே அகஸ்தியர்கூட மலைகளையும் அடைந்து அது விரிந்து சென்றது. கடலின் ஆழத்தில் நீலநிலப்படுகை யின் ஒளியை உள்வாங்கியும், காட் டின் அடர்த்திக்குள் பச்சை இருட் டில் கரைந்தும் கம்பளம் வளர்ந்து செல்வதாக வெகுகாலம் நம்பப்பட்டு வந்தது. பதினெட்டாம் நூற்றாண் டில் இக்கடற்கரையும் மலைச்சரிவும் முழுமையாக மறக்கடிக்கப்பட்டு விட்டன. பிற்காலத்து ரொமான்டிக் கவிஞன் 'வானத்து அதீத சக்திகளின் மகத்தான பாதங்கள் தோய இயற்கை விரித்த மாபெரும் கம்பளம்' என்று இப்பகுதியின் அடர்ந்த காட்டைப் பற்றி பாடியிருப்பது மட்டுமே ஒரே ஒரு இலக்கியக்குறிப்பு எனலாம். கம் பளம் பின்னும் குழந்தைகளின் வெறும் கனவு என்று யதார்த்த வாதிகளினால் இது குறிப்பிடப் படுகிறது என்றாலும் இப்பாடலை பாடும்போது கம்பளம் பின்னுவது எளிதாக ஆவதாக இளம்தொழி லாளிகள் கூறி என் இளம் வயதில் நான் கேட்டிருக்கிறேன்.


.

சவக்கோட்டை மர்மம்

I
நாகர்கோவில் திருவனந்த புரம் சாலையில் தக்கலை என்ற ஊர் இருக்கிறது. இதற்கருகே உள்ள பத்மநாபபுரம் கோட்டையையும், அரண்மனையையும் தமிழ்த்திரைப் படங்களில் பலர் பார்த்திருக்கலாம். அங்கிருந்து திருவட்டாறு போகும் பாதையில், குமாரபுரம் என்ற கிரா மத்தின் அருகே, ஒரு குன்றின்மீது. இன்னொரு கோட்டையையும் முற் றிலும் அழிந்துபோன ஓர் அரண் மனையின் இடிபாடுகளையும் இன் றும் நாம் காணலாம். இது 'சவக் கோட்டை ' என்று கூறப்படுகிறது. நாற்புறமும் ரப்பர்காடுகள் மண்டி, அமைதியில் விழுந்து கிடக்கிறது. திருவிதாங்கூர் கொட்டாரம் பண் டிதர் 'அச்சு மூத்தது' அவர்களின் ஒழுங்கற்ற குறிப்புகள் - சரித்திரமும் ஐதிகமும் இக்காலகட்டத்தில் வேறு வேறாக கருதப்படவில்லை - இக் கோட்டையைப் பற்றி குறிப்பிடுகின் றன. மார்த்தாண்டவர்மா மகாராஜா (1729 )வின் காலகட்டத்திற்கு முன் திருவிதாங்கூரின் பலபகுதிகளில் சுதந்திரமான மாடம்பிகள் பலர் தங் களை மன்னர்களாக பிரகடனப் படுத்தி பலகாலம் ஆட்சி செய்திருந் தார்கள். அவர்களில் ஒருவரான குமாரபுரம் கரைமாடம்பி பாறைக் கல் உதயன்தம்பி (தன்னை இவர் அவிட்டம் திருநாள் பாலராமவர்மா மகாராஜா - என்று அழைத்துக் கொண்டதாகத் தெரிகிறது) இதை கட்டினார் என்று தெரிகிறது. அழகிய பூமுகம், கொட்டியம்பலம், சபா மண்டபம் மற்றும் களியரங்கு ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும்; சுத்தமான வெண்தேக்கு, ஈட்டி, சந்தனமரங்களின் அபூர்வமான சிற்ப வேலைப்பாடுகள் நிரம்ப அமைக் கப்பட்டதாகவும் இந்த அரண்மனை இருந்திருக்கிறது. பொன்னுமங்கலத் தைச் சேர்ந்த மூத்தாசாரி கொச்சு சாத்தன் தலைமையில் பனிரண் டாண்டுகால உழைப்பு தேவைப்பட் டிருக்கிறது 'குமாரபுரம் அம்மவீடு' என்று இது அப்போது அழைக்கப் பட்டிருக்கிறது. பொன்மனை தெற்கு மனையிலிருந்து இரண்டு கன்னி கைகளை தானமாக பெற்றுக் கொண்டு பாலராமவர்மா மகாராஜா இந்த அரண்மனையில் ஒரு
ஆவணி மாதம் (சிங்க மாதம். முதல்தேதி குடியேறியதாக செல் வழிச் செய்தி சொல்கிறது. காலம் மார்த்தாண்டவர்மா மகாராஜாவிற்கு உத்தேசமாக முன்னூறு வருட முன்பாக இருக்கலாம். காலக்கண கெல்லாம் இப்போதைய விஷயம் அன்றெல்லாம் காலம் தேங்கிக் கிட தது.

ஐதீகக் கதைகளின்படி இர தேவியருடன் பள்ளி நித்திரை கொண்டிருந்த மகாராஜா வினோ மான குரல் ஒன்று தன்னிடம் பே முயற்சிப்பதை உணர்ந்து பதறிய தாகவும், தேவியரும் அக்குரலை. கேட்டு பயந்து அலறியதாகவும் இது பெரிய பதற்றத்திற்கு காரணி மாக அமைந்ததாகவும் அறிகிறோம். இந்தக்குரல் சிலசமயம் உணர்ச்சி வசப்பட்டு கூவுவதாகவும், சிலசமயம் அரற்றலாகவும், சிலசமயம் மவுன் மான மந்திர உச்சாடனமாகவும் இருந்தது. அது ஆண்குரலோ பென் குரலோ அல்ல. மனிதத் தொண்டை யிலிருத்து வரும் குரலாகவே இருக்கவில்லை என்று திட்டவட்ட மாக குறிப்பிடப்படுகிறது. பிரல் னம் வைத்துப் பார்த்த அனந்த நாராயணன் போத்தி அரண்மனை யில் துஷ்ட ஆவிகளின் இருப்பு உள்ள தாக கண்டு பிடித்தார். வயலில் வேலை செய்யும் போது விழுந்து இறந்த புலையர்களின் ஆவிகளுக்கு பலிதரும் இடமாக இக்குறிப்பிட்ட குன்று இருந்து வந்ததாகவும், பல ஏற்க வந்து ஏமாந்த ஆவிகளின் குரலே அது என்றும் ஜோசியர்கள் குறிப்பிட்டார்கள். விரிவான யாகா களும், மாந்திரிக தாந்திரிக கர்மா களும் நடத்தப்பட்டன. பித்ரு பூசை குலதெய்வ பூஜை. துஷ்டநிக்ரக பூஜை, சாத்தன் பூஜை ஆகியவையும் நிகழ்த்தப்பட்டன. ஆனால் அந்தச் குரல் தொடர்ந்து பள்ளியதை யில் கேட்டபடியேதான் இருந்தது கொச்சு சாத்தன் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டான் அவன் அரண்மனைக்கு இடம்பார்க் ததன் கோளாறுதான் அது என்று குற்றம் சாட்டப்பட்டான். தேவாசும் சக்திகளில் எதுவோ நடமாடும் கு. குமமான பாதை அக்கட்டிடத்தால் முறிக்கப்பட்டுவிட்டதாக கணிக்கப்
பட்டது. முன்பு காயங்குளமருகே ஒரு மன்னனுக்கு இப்படி ஆனதனால் அவன் வம்சமே அழிந்தது என்று நினைவுகூரப்பட்டது. கழுவில் ஏற் றப்பட விதிக்கப்பட்டு சக்கரக்கல் லில் கட்டிவைக்கப் பட்டிருந்த கொச்சுசாத்தன் ஒரு நாள் அவகாசம் கோரினான். அதற்குள் பிழையை கண்டு பிடித்து திருத்திவிடுவதாக குறிப்பிட்டான். அவனை விட்டால் கட்டிட சூக்குமம் அறிந்த எவருமில்லை என்பதால் அனுமதி தரப்பட்டது.

இரவெல்லாம் கட்டித்தில் அலைந்த கொச்சு சாத்தன் விடி காலையில் ஒரு கூச்சலுடன் சூக்கு மத்தை கண்டடைந்தான். பிற்பாடு அவன் சுவடியில் எழுதி வைத்த குறிப்புகள் மற்றும் கணக்குகளின் படி (இலை 'பத்மநாபசில்ப ரத்னா வளி' என்ற பெயரில் பிற்பாடு இவன் வம்சத்தைச் சேர்ந்த 'அனந் தன் முத்தாசாரி'யால் வடமொழி யில் நூல் வடிவம் தரப்பட்டு திருவனந்தபுரம் மகாராஜா சுவாதி திருநாளின் அரச சபையில் அரங் கேற்றம் செய்யப்பட்டது. நூலின் ஏட்டுப்பிரதி ஸ்ரீ சுவாதி மியூசியத் தில் இன்றும் உள்ளது) நிகழ்ந்தது இதுதான் என்று தெரிகிறது. குமார

புரம் குன்றைச் சுற்றி இருபது கிராமங்களும், வயல்வெளிகளும், சந்தைகளும், எண்ணற்ற சேரிகளும் உள்ளன. இங்கிருந்து எழும் ஒலிகள் பாறைகள் மற்றும் கோட்டைச் சுவர்கள் வழியாக எதிரொலித்தும், மறு எதிரொலித்தும், அரண்மனை யின் பிரதான வளாகத்தில் திரண்டு பள்ளியறைக்குள் அதிர்கின்றன. பள்ளி யறையின் கூரை முகடு உட்குழிந்து கிண்ண வடிவாக இருப்பதால் இவ்வதிர்வுகள் குவிந்து தெளிவான ஒலியாகவும், சிலசமயம் சொற் களாகவும் கூட மாற்றப்படுகின்றன. அதை நிறுத்துமாறு மகாராஜா உடனே ஆணையிட, சாத்தனின் திட்டப்படி கோட்டைக்கு வரும்வழி இரண்டு இடத்தில் வளைக்கப்பட்டு சுவர் எழுதப்பட்டது. ஒலியும் இல் லாமல் ஆயிற்று. மகாராஜா மகிழ்ந்து மூத்தது பட்டமும் வீராளிப்பட் டும் வளையலும் பரிசளித்து சாத் தனை கவுரவித்தார். ஆனால் சில நாட்கள் கழித்து களியரங்கில் நளந மயந்தி ஆட்டத்தின் சிருங்கார ரசத் தில் மெய் மறந்திருந்த மகாராஜா பாடலின் ஊடாக புகுந்து நாதத்தை சிதறடித்த அந்த ஒலியை மீண்டும் கேட்டார். துடித்துப் போய் சாத்தனை வரவழைத்து அதை அகற்றும் படி ஆணையிட்டார். அரண்மனை யும் கோட்டையும் மீண்டும் மாற்றும் யமைக்கப்பட்டது.


இதனால் அரண்மனைக்குள் வா வதும் போவதும் சிரமமாக இருப்ப தாகவும், பலசமயம் வழிதவர் விடுவதாகவும் மந்திரிகளும் பிராமண பூஜ்யர்களும் முணங்கிக் கொண்ட போதிலும் எவரும் அதுபற்றி மகாராஜாவிடம் கூற முயலவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக மகாராஜா அரண்மனையை விட்டு வெளியே வருவதே இல்லை. நிலப் பகுதியின் விசித்திரமோ, அல்லது கோட்டையின் விசித்திரமோ தொடர்ந்து மாற்றி மாற்றி எங்காவது அந்த அமங்கல ஒலி கேட்டுக் கொண்டுதான் இருந்தது. எனவே கோட்டை 888 முறை மாற்றியமைக் கப்பட்டது. (இது ஒருவித நாட்டுப் புற கணக்கு என்பதை மறுப்பதற்கு இல்லை . 888 என்பது ஐதீகங்கள் குறிப்பிடும் ஒரு அமங்கல எண் அன்றி வேறல்ல.) கோட்டைக்கு வரும் வழி இவ்வாறாக பலவிதமாக சிக் கலாக மாறி அவிழ்க்க முடியாத புதிராக ஆயிற்று. உள்ளே வருவதும் வெளியே போவதும் வெறும் அதிர்ஷ்டமன்றி வேறல்ல என்று ஆயிற்று. அதை மேலும் மோசமாக் கும்படி மூத்தாசாரி பித்து முற்றிய நிலையில் தனக்குள் சிரித்தபடி சுவர் களை தொடர்ந்து மாற்றி மாற்றி கட்ட டிக் கொண்டிருந்தான். தன் அமாத் யர்களும், சேவகர்களும், கிங்கரசு களும் அரைப் பைத்தியமாக ஆகி சிரித்தபடியும் அழுதபடியும் திசை தெரியாமல் சுற்றிச் சுற்றி வருவதை மகாராஜா மிகவும் தாமதமாகவே உணர்ந்தார். பீதியுடன் வெளியே வர அவர் முயன்றபோதுதான் அது எவ்வளவு பெரிய காரியம் என்று புரிந்ததாம். வெளியேறும் வழிக்கான ஒரே வெளியுலக அடையாள மாக அப்போது இருந்தது ஊரிலிருந்து வரும் அந்த ஒலி மட்டுமே. ஆனால் அதை மூத்தாசாரி கண்ட படி சிதறடித்திருந்ததனால் அதை அடையாளம் வைத்து புறப்பட்டு பலநாட்கள் நடந்து, உடல் ஒய்ந்து விழுந்து கிடக்கும்போது நேர் எதிர் திசையில் அது கேட்க ஆரம்பிக்கும் நிலை இருந்தது. சுற்றுவழிச் சந்து களில் அவ்வப்போது அவரைய போலவே அரைப்பித்து நிலையில் அலைந்து கொண்டிருக்கும் ஏதாவது மந்திரியையோ, சேவகனையோ காண்பது தவிர்த்தால் இடைவென் யற்ற அந்த பயணம், எதையும் அடையாததாகவும் எங்கும் சேராத தாகவும் தொடர்ந்து கொண்டே இருந்தது. மகாராஜாவைத் தேடி வாரிசுகளும் தளபதிகளும் வந்தனர்.

அனைவரும் கோட்டைக்குள் நுழைந்து அகப்பட்டுக் கொண்டனர். மகா ராஜாவின் இறுதிச் சடங்குகளுக்கு அவர் அஸ்திகள் கிடைக்காமையி னாலும், அதைத் தேடிச் சென்ற எவரும் திரும்பாமையினாலும், இறுதிச்சடங்கு செய்து மூதாதையை கரையேற்றாமல் சாஸ்திரப்படி வாரிசு உரிமை செல்லாது என்பதனாலும் நீண்டநாள் அராஜக நிலைமை நிலவியது. பிறகு பிராமணசபையின் முடிவுப்படி, குமாரபுரம் அம்மா வீட்டுக் கோட்டையையே ஒரு அஸ்தி கலசமாக சங்கல்பம் செய்து முறைப் படி சடங்குகள் நடத்தி முடிக்கப் பட்டன. அத்துடன் கோட்டை புனிதமான குலச்சின்னமாக ஆயிற்று. குமாரபுரம் மன்னர்கள் தங்கள் மரணத்தை அதற்குள்தான் நிகழ்த் திக்கொள்ள வேண்டும் என்று மரபு உருவாயிற்று. ஐதீகங்கள் பெருகி இக் கோட்டையின் மையத்தில் மனித வாழ்வின் புருஷார்த்தங்களின் சாரம் குடி கொள்வதாகவும் மன்னர்கள் தங்கள் மூதாதையரைப் பின்பற்றி இதற்குள் நுழைந்து, அந்த கணிதப் பாதைகளின் ஊடே பயணம் செய்து, மூதாதையர்

சென்றடைந்த மையத்தை அடைந்து, முக்தி பெற வேண்டும் என்றும் வகுக்கப்பட்டது. தலைமுறை தலைமுறையாக இவ் வம்சத்து மன்னர்கள் வாரிசுகளை ஆட்சிக்கு அமர்த்திவிட்டு, வானப் பிரஸ்தம் பூண்டு, இந்த மாபெரும் அஸ்திகலசத்தின் உள்ளே சென்று மறைந்து கொண்டிருந்தனர். பற்பல தலைமுறைகளுக்குப் பிறகு ஒரு மகாராஜா மையம் நோக்கி மனம் தளராமல் சென்று கொண்டிருந்த போது வெளியேறும் வழியை தேடிக் கொண்டிருந்த தன்னைப் போன்றே இருந்த ஒருவரை சந்திக்க நேர்ந்ததாகவும், அறிமுகத்துக்குப் பிறகு இருவரும் திடீரென்று உடைந்து விலாதெறிக்க சிரிக்க ஆரம்பித்த தாகவும் பிரபல அங்கதக் கவிஞ ரான மாணிநாராயண சாக்கியாரின் கூத்துப்பாடலில் குறிப்பிடப்படு கிறது. 1750-ல் திருவிதாங்கூர் தேசத்தை ஒருங்கிணைத்து ஒரு குடைக்கீழ் கொண்டுவந்த மார்த்தாண்டவர்மா குலசேகரப்பெருமாள் மகாராஜா குமாரபுரம் மாடம்பி வம்சத்தை பூரணமாக அழித்து, கோட்டை யையும் தகர்த்து, அனைத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்ததாக அச்சுமூத்தது குறிப்பிடுகிறார். சவக் கோட்டை என்று இன்று வழங்கும் பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை அந்தக் கோட்டையின் இடிபாடுகளுக்குள் மண்டிக் கிடந்த எலும்புக்கூடுகளின் காரணமாக இருக்கலாம்

பதிமூன்று விதங்களில் சொல்லப்பட்ட வேண்டிய கதை

-________________




லண்டன் யார்ஷயரைச் சார்ந்த பிரபு எஃப். தோமஸ் தோர்ஸ் டன் தனது தொண்ணூறாவது வயதில், 1952-ல் இறப்பதற்கு முன்பாக, தன் வாரிசும் மாணவருமான எஃப். பார்கின்சன் அவர்களிடம் வாழ்நாள் முழுக்க தன் அந்தரங்கத் தைக் குத்திச் சிதைத்து இம்சை செய்த ஒரு புதிரை அவிழ்க்கும் பொறுப்பை விட்டுவிட்டுச் சென்றமையினால் பார்கின்சன் இந்தியா வரவும், 'உருவப் பன்நிலையமைதிச்' சித்தாந் தத்தை (Parkinsons Formal Muluplicity Theory) தோற்றுவித்து உலகப்புகழ் பெறவும் நேர்ந்தது. பிரிட்டிஷ் இந்தி யாவில், திருவிதாங்கூர் சமஸ் தானத்தில், பேச்சிப்பாறை மலைப் பகுதியில் சர்வேயராக 1880 முதல் எட்டு வருட காலம் பணியாற்றிய தோர்ஸ்டன் பிரபு ரைபிள்களை திருடி விற்றமைக்காக பிடிபட்டு, தண்டிக்கப்பட்டு, திருப்பியனுப்பப் பட்டு, இறுதிவரை திரும்ப முடியாத படி வாழ்வில் கட்டப்பட்டு, உள்ளூர திரும்பிவரும் தினத்திற்காக ஏங்கிய படி, மரணப்படுக்கையை அடைந் தார். ரைபிள்கள் உண்மையில் விற்கப்படவில்லை என்பதை மரணப் படுக்கையில் பிரபு வெளிப்படுத்தி கீழ்க்கண்ட தகவல்களைக் கூறினார். ஆதிமலையுச்சியின் அணுகமுடியாத போர்க்குணம் கொண்ட பழங் குடிகளின் பெண்களுடன் உறவு கொள்வதற்கான விலையாகவே அவை தரப்பட்டன. இந்த ரைபிள் கள் பிற்பாடு பழங்குடிக் கலகங் களில் பயன்படுத்தப்பட்டு, பெருஞ் சேதத்தை விளைவித்தன என்றும்; பிறகு ஒருங்கிணைந்த தாக்குதல் மூலம் குறிப்பிட்ட பழங்குடி வம்சம் முழுமையாக சிதறடிக்கப்பட்டது என்றும் 'திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவல்' முதற்தொகுப்பு குறிப் பிடுகிறது. ஆதிமலைப் பழங் குடியினரின் பெண்களின் உடலழகும், அவர்கள் மிக வினோதமான________________




முறையிலும், பரவசவெறியில் மன நிலையே பிறழும் அளவிற்கு தீவிர மானதாகவும் கொள்ளும் உடலுறவு முறையும் அன்றைய பிரிட்டிஷாரி டையே பரபரப்பாகவும், கிட்டத் தட்ட தேவதைக் கதைகளின் கலையழகுமிக்க பயங்கரத்துடனும் பேசப்பட்டு வந்தன. ராமன் நாயர் என்ற மேஸ்திரி மூலமாக பலகாலம் முயன்றும், பெருமளவு பணம் செலவு செய்தும், மிக மிக அபூர்வ மானதும் ஆபத்தமானதுமான இவ் வனுபவத்தைப் பெற்ற ஒரே வெள்ளைய ராக தோர்ஸ்டன் பிரபு ஆனார் என்பது எழுபத்திரண்டு வருடங்களுக்குப்பிறகு அவருடைய மரணப்படுக்கையில்தான் வெளியிடப் பட்டது. ஆயினும் பிறகு எப் போதும் எப்பெண்ணையும் அணுக முடியாதபடி அவரை அக்கிய அவ் வனுபவத்தின் உக்கிரத்தை எப் போதுமே அவர் சொற்களாக மாற்ற முயற்சி செய்யவில்லை என்பதை யும் இங்கு குறிப்பிட வேண்டும். உறவுக்கான நிபந்தனைகளில் துப் பாக்கி தவிர, ஒருபோதும் உறவு கொள்ளும் பெண்களைப் பார்க்க அனுமதிக்கப் படுவதில்லை என்ப தும் முக்கியமானதாகும். அமாவாசை நள்ளிரவில் இடைவெளியற்ற இருட்டு வழியாக மலையுச்சிக்கு அழைத் துச் செல்லப்பட்ட பிரபு. அங்கு ஒரு ஓடைக்கரையில் நிர்வாண மாக பழங்குடியினருக்கு கைமாறப் பட்டு, அவர்களால் கிராமத்தின் ஒரு குடிசைக்கு கொண்டு செல்லப் பட்டு, அங்கிருந்த பெண்ணிடம் அளிக்கப்பட்டார். உடலால் மட்டும் பார்த்து பேசி அறிந்த அந்த உக்கிர மான இரவு முடியும் முன்பே கடும் சுரத்தால் பீடிக்கப்பட்டு, அரைப்பித்து நிலையில் திரும்பிவந்து, ஒருவாரம் நீடித்த நோய்ப்படுக் கையில் சரிந்தவர் ஸ்பரிசங்களால் மட்டும் இருப்புணர்த்தும் பெண் பிம்பங்களின் பித்துப்பிடித்த உலகில்

மிதந்தலைந்தார். மீண்டும் ஆசை எழ மீண்டும் மலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பதிமூன்றாம் தடவை அகப்பட்டுக் கொண்டு. தண்டிக்கப் பட்டு, லண்டன் வந்து வேறு விதமாக வாழ்வை அமைத்துக் கொண்ட போதுகூட அவரை ஒரு முள் குடைந்து கொண்டே இருந்தது. அவ்வனுபங்களை பிரித்து வரிசைப் படுத்தி, புரிந்து கொள்ளும் முயற்சி களினால் மனநோய்க்கு ஆளாகி எட்டு வருடம் சானடோரியத்தில் இருக்க நேர்ந்தது. காலம் நகர்ந்து, அனுபவங்கள் பின்னடைந்து, விலகி

1.

விலகிச் செல்ல, குவிந்து உருவான ஒரு புள்ளியில் இருந்து தெளிவு சிடைத்தது. அவ்வனுபவங்கள் அனைத்துமே ஒரு அனுபவத்தின் பதிமூன்று கூறுகளே என்றும், பின்பு அவை ஒரு தருணமே என்றும், ஒரு தருணம் என்பது எப்போதும் ஒரு கணமே என்றும் அவர் அறியலா னார். பிரமாண்டமான ஆள் கூட்ட நெரிசல் வழியாக ஊடுருவிப் போகும் ஒரு பயணத்தில், ஒருகணம் தீண்டி, தொடர முடியாதபடி உடல் அலைகளில் விலகி மறைந்துவிட்ட




ஒரு தீற்றலே அது என்ற பிரக்ஞை அந்தத் துளியிலிருந்து முழு அனுபவத்தையும் மீட்டு படைத் தெடுத்து விடலாம் என்ற நம்பிக் கையை நோக்கி அவரை இட்டுச் சென்றது. எஞ்சிய முப்பது வருடங் களும் அவருடைய தனிமை முழுக்க அவ்வனுபவத்தின் மறு அமைப்பிற் காக செலவழிக்கப்பட்டது. பப்பது வருடத் தனிமையில் துளித்துளியாக தேக்கிய தீவிரம் ஒரு தருணத்தில் ஒரு அறிதலைச் சாத்தியமாக்கியது. பதி மூன்று முறை அவர் புணர்ந்தது ஒரே ஒரு பெண்தான். கன்னங்கரிய திரையில் கரிய கோடுகளை நுட்பமாக பொறித்து அவர் அந்த முகத்தை பதித்தெடுத்த ஒவியத்தை உலகக் கலை வெற்றிகளில் ஒன்றாகவே கருத முடியும். எளிய பார்வையில் கரியதிரை தவிர வேறு எதுவும் தெரியாத அந்த பரப்பானது. தீவிர மான உள்ளத்தை அதன் மீது செலுத் தும் தோறும் உயிர் பெற்று மெல்லத் திறந்து காட்டுகிறது. எஃப். பார்கின் சன் அம்முகத்தின் கனவால் தாக்கப் பட்டதும். அவருடைய மன அமைப்பை அது தகர்த்ததும், அவர்


இந்தியாவிற்கு வந்ததற்கான காரணங்களுள் முக்கியமான ஒன்றாகும் தோர்ஸ்டன் பிரபுவின் நிலை வேறாத இறுதி ஆசையான முகத்தின் தொடர்கண்ணியை தேய் கண்டடைந்து விடுதலை இவ்வகை ணம் இன்னொரு காரணத்துக்காக அவர் மேற்கொண்டாரெனிசை எஃப். பார்கின்சன் ஒரு தூய யதார்த்து வாதியாவார். அந்த உடலுறவின் அற்புதத் தன்மைக்கு மாயஜால் அம்சம் எதுவும் தர மறுத்து மானுடவியலில் தேடிய அவருடைய அறிவுவாத மன அமைப்பு அப் பழங்குடியினர் குரங்கு -- மனிதப் பரிணாமத்தின் ஏதோ ஒரு தளத்தில் நின்று விட்டவர்கள் என்றும், குரங்கு களின் உடலுறவுப் பழக்கத்தின் ஏதோ ஒரு நிலையை தொடர்ந்து கடைப்பிடித்தவர்கள் என்றும்தாஜ் தீர்மானிக்கச் செய்தது. இந்த யுக்தி வாத ஆய்வு அடுத்த தளத்திற்கு அவரை இட்டுச்சென்று பேச்சிப் பாறை சர்வே குறிப்புகள், அலு வலகப் பதிவுகள் கடிதங்கள், மற்றும் ராபின்சன் ஜெஃபீரி ('நாயர் சமூகத் தின் வீழ்ச்சி' என்ற புகழ்பெற்ற ஆய்வு நூலை எழுதிய கனடா தேசத்து மானுடவியல் அறிஞர்) ரெவரென்ட் ஃபாதர் ஜோசப் கல்லன் (பழங் குடிகளைப்பற்றிய இவருடைய ஆய்வு கள் ஏழு நூல்களாக தொகுப்பட் டுள்ளன) என். சிவசங்கரன் நாயர் ஆகியோரின் ஆய்வுகளின் துளை யோடு முன்னகர வைத்தன. பேச்சிப் பாறையின் மறு மலைச்சரிவில் தடிக்காரன் கோணப் பகுதியில் இன்று கிறிஸ்தவமதம், ரப்பர்த்தொழில் போன்றவற்றை ஏற்று முற்றிலும் ம் நாகரீகமடைந்து சிதறி விரித்து - வளர்ந்திருந்த ஆதிமலைப் பழங் குடிகளைக் கண்டு பிடித்த எஃப் பார்கின்சன் அவர்களை தொடர்ந்து ஆய்வு செய்து, வியப்பூட்டும் சில தகவல்களை அறிந்தார். அவர்கள். தங்கள் அன்னையரை கனவில் வந்து ஆட்கொண்ட பதிமூன்று வெவ் வேறு) வெள்ளை அப்போஸ்தலாம் களை வழிபட்டு வந்தனர். இவ வாறாக எஃப். பார்கின்சன் இந்தி யாவில் ஒரேசமயம் தோர்ஸ்டனின் காதலியின் பதிமூன்று வடிவங் களையும் தோர்ஸ்டனின் பதிமூன்று வடிவங்களையும் கண்டடைந்தார். இந்தக் கணக்கின் குளறுபடியை சமன் செய்யும் பொருட்டு அவர் உருவாக்கிய சிக்கலான சூத்திரன் களும் வாய்ப்பாடுகளும் அடங்க சித்தாந்தமே பிற்பாடு 'உருவப்ப நிலையமைதிச் சித்தாந்தம்' என புகழ் பெற்றது. எனினும் இன்ற குளோட். லெவி. ஸ்ட்ராஸ் போன்ற வர்களின் அமைப்பியல்வாத மானுட ஆய்வுகளின் பேரலையில் இது மூழ்கடிக்கப்பட்டு மறைந்து விட்டது

Saturday 14 December 2019

என் தலையைக் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள ஒருவன் இருக்கிறான் - ஃபெர்னான்டோ சோரன்டினோ

என் தலையைக் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள ஒருவன் இருக்கிறான்
by ஸ்ரீதர் ரங்கராஜ் • March 1, 2016 • 0 Comments
http://vallinam.com.my/version2/?p=2636
sridhar 2என் தலையைக் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள ஒருவன் இருக்கிறான். சரியாக இன்றோடு அவன் என்னைக் குடையால் அடிக்க ஆரம்பித்து ஐந்து வருடம் ஆகிறது. முதலில் என்னால் அதைப் பொறுக்க முடியவில்லை; ஆனால் இப்போது பழகிவிட்டது. எனக்கு அவன் பெயர் தெரியாது. நடுத்தரமான உடல்வாகு உடையவன் என்பது தெரியும், சாம்பல்நிற சூட் அணிந்திருப்பான், நெற்றிப்பொட்டில் கருமை படர ஆரம்பித்திருக்கும், பொதுவான முகத்தோற்றம்.


ஐந்து வருடங்களுக்கு முன்பு, புழுக்கமான ஒரு காலைவேளையில் அவனைச் சந்தித்தேன். பாலெர்மோ பூங்காவில், மரநிழலில் அமைந்த நீளிருக்கையொன்றில், செய்தித்தாள் வாசித்தபடி அமர்ந்திருந்தேன். திடீரென என் தலையை ஏதோவொன்று தொடுவதை உணர்ந்தேன். அது, இதோ இப்போது நான் இதை எழுதிக்கொண்டிருக்கையில், இயந்திரத்தனமாகவும் உணர்வற்றும், குடையால் என்னை அடித்துக்கொண்டே இருக்கிறானே, அதே மனிதன்தான். அந்தத் தருணத்தில், கடுஞ்சினத்தோடு அவனைத் திரும்பிப் பார்த்தேன்: அவன் என்னை அடிப்பதைத் தொடர்ந்தான். அவனிடம் நீ பைத்தியமா என்று கேட்டேன்: நான் கேட்டது அவன் காதில் விழுந்தாற்போலத் தெரியவில்லை. பிறகு காவலரை அழைக்கப்போவதாக மிரட்டினேன். கலக்கமேதும் இல்லாமல், மிகவும் அசட்டையாக, அவன் வேலையைத் தொடர்ந்தான். குழப்பமான சில கணங்களுக்குப் பிறகு, அவன் தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று தெரிந்தபிறகு, நான் எழுந்து நின்று அவன் மூக்கில் குத்தினேன். அவன் கிட்டத்தட்ட காதில் விழாத அளவுக்கான ஒரு முனகலுடன் கீழே விழுந்தான். மிகுந்த முயற்சியுடன் உடனே மீண்டெழுந்து, ஒரு வார்த்தைகூடப் பேசாமல் என்னைக் குடையால் அடிக்க ஆரம்பித்தான். அவன் மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது, அந்தக்கணம் அவனுக்காக வருந்தினேன். அவனைத் தாக்கியதற்காகக் குற்ற உணர்ச்சியடைந்தேன். உண்மையில் அவன் ஒன்றும் என்னைக் காயப்படும்படி தாக்கவில்லையே; அவன் தன் குடையால் என் தலையில் தட்டிக் கொண்டிருந்தான், அதில் எனக்கு வலியேதும் இல்லை. ஆனால், உண்மையில் அந்தத் தட்டுதல்கள் அளவுக்கதிகமாகத் தொல்லை தருவனதான். நம் எல்லோருக்கும் தெரியும், நம் நெற்றியில் ஒரு பூச்சி வந்து அமர்ந்தால் நமக்கு வலியோ அல்லது வேறெதுவுமோ ஏற்படப்போவதில்லை; அப்போது நாம் உணர்வது ஒரு தொந்தரவு. அப்படியென்றால், அந்தக் குடை ஒரு சீரான இடைவெளியில் அவ்வப்போது என் தலையில் அமரும் மிகப்பெரியதொரு பூச்சி.

நான் ஒரு பைத்தியக்காரனை எதிர்கொண்டிருக்கிறேன் என்று முடிவு செய்து, அவனிடமிருந்து தப்பிக்க முயற்சித்தேன். ஆனால் அம்மனிதன், ஏதும் பேசாமல் என்னை அடித்துக்கொண்டே என்னைப் பின்தொடர்ந்து வந்தான். எனவே நான் ஓட ஆரம்பித்தேன் (இந்த இடத்தில் பெரும்பாலானோரால் என் அளவுக்கு வேகமாக ஓடமுடியாது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்). அவனும் என் பின்னால் ஓடிக்கொண்டே என் தலையில் ஒரு அடியேனும் அடிக்க முயற்சி செய்தான். அவன் இப்போது மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஆரம்பித்தான், இதே வேகத்தில் அவனை ஓடவைத்தால் என்னைச் சீண்டிக்கொண்டிருக்கும் அவன் அதே இடத்தில் இறந்து வீழ்வான் என்று தோன்றியது.

எனவேதான் நான் வேகத்தைக் குறைத்து நடக்க வேண்டியதாயிற்று. அவன் முகத்தில் நன்றியுணர்ச்சியோ அல்லது இழித்துரைக்கும் பாவனையோ இல்லை. வெறுமனே குடையால் தலையில் அடித்துக் கொண்டிருந்தான். காவல்நிலையத்துக்குள் நுழைந்து, “அதிகாரி அவர்களே, இம்மனிதன் என் தலையில் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்,” என்று சொல்ல நினைத்தேன். ஆனால், அது ஒரு முன்னுதாரணமில்லாத விநோத வழக்காக இருக்கும். அவ்வதிகாரி என்னையே சந்தேகமாகப் பார்த்து, என் அடையாளப் பத்திரங்களைக் காண்பிக்கச்சொல்லி என்னைச் சங்கடத்துக்குள்ளாக்கும் கேள்விகளைக் கேட்கலாம். முடிவில் என்னையே கூடக் கைதுசெய்து விடலாம்.

வீட்டுக்குத் திரும்புவதே சிறந்த வழி. 67ஆம் எண் பேருந்தில் ஏறினேன். இவ்வளவுநேரம் தன் குடையால் என்னை அடித்துக்கொண்டிருந்தவன் என் பின்னாலேயே ஏறினான். முதல் வரிசையில் அமர்ந்தேன். என் பின்னால் நின்றுகொண்டு இடதுகையால் கம்பியைப் பற்றிக் கொண்டான். வலது கையால் இரக்கமின்றி மீண்டும் தொடர்ந்து குடையால் அடித்துக்கொண்டே இருந்தான். முதலில் பயணிகள் மருட்சியாகப் புன்னகைத்தனர். பேருந்தின் ஓட்டுநர் கண்ணாடி வழியாக எங்களைக் கவனிக்கலானார். கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பேருந்துப் பயணம் மிகப்பெரிய சிரிப்பாக மாறியது, மிகப்பலமான, நிறுத்தவே முடியாத சிரிப்பு. நான் அவமானத்தில் எரிந்து கொண்டிருந்தேன். என்னைச் சீண்டிக் கொண்டிருப்பவனோ இந்தச் சிரிப்புகளுக்குத் தனக்குள் இடங்கொடாமல் என்னை அடிப்பதைத் தொடர்ந்தான்.

பசிஃபிகோ பாலத்தில் – நான் இறங்கினேன் – நாங்கள் இறங்கினோம். சான்டா – ஃபே -நிழற்சாலை வரை நடந்தோம். எல்லோரும் முட்டாள்தனமாக எங்களைப் பார்க்கத் தொடங்கினர். அவர்களைப் பார்த்து, “என்ன பார்க்கிறீர்கள், முட்டாள்களே? ஒரு மனிதன் இன்னொரு மனிதனைத் தலையில் குடையால் அடிப்பதைப் பார்த்ததே இல்லையா?” என்று கேட்கவேண்டும் போல இருந்தது. ஆனால் அதேசமயம் இப்படியொரு காட்சியை அவர்கள் பார்த்திருக்கமாட்டார்கள் என்றும் தோன்றியது. பிறகு ஐந்தாறு சிறுவர்கள் பைத்தியங்களைப் போலக் கத்திக்கொண்டு எங்களைப் பின் தொடர ஆரம்பித்தனர்.

ஆனால் என்னிடம் ஒரு திட்டம் இருந்தது. வீட்டை அடைந்தவுடன், அவன் முகத்தில் அறைவதுபோலக் கதவை மூட நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அவன் என் மனதைப் படித்தவன் போல, கதவுக்குமிழை இறுகப்பற்றிக் கதவை உள்ளே தள்ளி என்னோடு உள்ளே நுழைந்தான்.

அந்த நேரத்திலிருந்து, அவன் என் தலையில் குடையால் அடிப்பதைத் தொடர்ந்தான். எனக்குத் தெரிந்தவரை அவன் உறங்கியதோ அல்லது எதையும் சாப்பிட்டதோ இல்லை. அவனுடைய ஒரேவேலை என்னை அடிப்பது மட்டுமே. என்னுடைய எல்லா வேலையின்போதும் என்னுடன் இருப்பான், என்னுடைய அந்தரங்கமான வேலைகளிலும் கூட. முதலில் அந்த அடிகள் என்னை இரவுமுழுதும் விழிக்க வைத்திருந்தது ஞாபகமிருக்கிறது. இப்போது அவை இல்லாமல் என்னால் தூங்கவே முடியாது என்று தோன்றுகிறது.

எல்லா சமயங்களிலும் எங்கள் உறவு நன்றாகவே இருந்தது என்று சொல்ல முடியாது. பல சந்தர்ப்பங்களில், நான் அவனை, பலதொனிகளில் அவனுடைய செயலை விளக்கும்படி கேட்டுப் பார்த்தேன். ஆனால் எந்தப் பயனுமில்லை: ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தன் குடையால் என் தலையில் அடித்துக் கொண்டிருப்பான். பலமுறை அவனை குத்தியும், உதைத்தும் – கடவுள் என்னை மன்னிப்பாராக – குடையால் அடித்துமிருக்கிறேன். அவன் வெறுமனே அவற்றை ஏற்றுக்கொள்வான். ஏதோ, அவையெல்லாம் தன் வேலையின் ஒருபகுதி என்பதுபோல ஏற்றுக்கொள்வான். அவன் குணத்தில் குறிப்பிடும்படியான விநோதத்தன்மை இதுதான்: தன் வேலையில் உள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை அதோடு துளியும் பகைமையுணர்வு இல்லாமை. சுருக்கமாகச் சொன்னால், உயரதிகாரி ஒருவரது உத்தரவின் பேரில் ரகசியத் திட்டமொன்றை அவன் செய்துகொண்டிருப்பது போல.

உடலுக்கான தேவைகள் இல்லாதிருந்தாலும், நான் அவனைத் தாக்கும்போது அவன் வலியை உணர்கிறான் என்று எனக்குத் தெரியும். அவன் வலிமையற்றவன் என்பதும் எனக்குத் தெரியும். அவன் இறப்புடையவன் என்பதும். மேலும், ஒரு தோட்டாவினால் அவன் தொல்லையிலிருந்து விடுபட்டுவிடலாம் என்பதையும் அறிவேன். ஆனால், அந்தத் தோட்டாவினால் அவனைக் கொல்வது நல்லதா அல்லது என்னைக் கொல்வது நல்லதா என்பதுதான் தெரியவில்லை. மேலும், நாங்களிருவரும் இறந்தபிறகு அவன் என் தலையில் குடையால் அடிக்காமல் இருப்பானா என்பதும் எனக்குத் தெரியாது. எப்படியிருந்தாலும் இந்தச் சிந்தனை வீணானது; என்னால் அவனைக் கொல்லவோ அல்லது என்னைக் கொன்று கொள்ளவோ முடியாது.

தவிரவும், சமீபமாக நான் உணர்ந்த்து என்னவென்றால், என்னால் அந்த அடிகள் இல்லாமல் இனி வாழமுடியாது. இப்போது, அடிக்கடி குறிப்பிட்டவொரு துர்ச்சிந்தனை என்னைப் பீடிக்கிறது. ஒரு பதைபதைப்பு என் ஆன்மாவைத் தின்கிறது, அந்தப் பதைபதைப்பு இந்தச் சிந்தனையிலிருந்து எழுகிறது: ஒருவேளை, அவனுடைய தேவை எனக்கு அதிகமாக இருக்கும்போது அவன் என்னைப் பிரிந்து, என்னை ஆழ்ந்து உறங்கச் செய்து கொண்டிருக்கும் அந்தக் குடையடிகளை நான் உணராமல் போய்விடுவேனோ என்பதே அது.

****

ஃபெர்னான்டோ சோரன்டினோ (Fernando Sorrentino) : 1942-ல் அர்ஜென்டினாவிலுள்ள ப்யூனஸ் எய்ரஸ்சில் பிறந்தவர். சிறுகதைகளில் முக்கியமாகக் கருதப்படும் சோரன்டினோ தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இதுவரை ஆறு தொகுப்புகள் ஒரு குறுநாவல் வெளிவந்துள்ளது. 2013ல் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. சிறுவர்களுக்கான இலக்கியமும் பெருமளவில் எழுதியுள்ளார். மிக முக்கியமான சிறுகதை எழுத்தாளராக மதிக்கப்படும் சோரன்டினோவின் கதைகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு விருதுகளையும் பெற்றவர்.

ஃபெர்னான்டோ சோரன்டினோ

ஆங்கில மொழியாக்கம்: க்ளார்க் எம். ஸ்லாட்ச்யூ

தமிழில் – ஶ்ரீதர்ரங்கராஜ்

Thursday 12 December 2019

https://www.facebook.com/permalink.php?story_fbid=1419079428272377&id=100005110006875
பிரேம் பிரேம்
4 mins ·
போக்கெலாம் பாலை!
புணர்தல்?

பிரேதா என ஒரு நாளும்
பிரேம் என ஒரு நாளும்
மாறியமையலாம் என ஒரு ஆசையில்
இருக்கத் தொடங்கினேன்.

அதில்தான் தொடங்கின ஆகப் பெரும் தொல்லைகள்.

என் பாய்பிரண்டுக்கு ஒரு கவிதையெழுத வேண்டும் மேடம்
நீங்கள் கவிதை எழுதுவீர்களாமே
எழுதித் தருவீர்களா? என்றாள் ஒரு பெண்.

காதலுக்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு.
இருக்கிறது கவியே.
வாட்ஸப் வந்த பின்னும்
கவிதையில்தான் தொடங்குகிறது காதல்.
உயர்தொழில் நுட்ப விமானங்கள்
எலுமிச்சைப் பழங்கள் இல்லாமல் ஓடாதல்லவா.

நான் சற்று முந்திய தலைமுறை.
பிரேதா என்ற பெயரைக்கூடத்
அதன் விளைவுகள் தெரியாமல்
வைத்துக் கொண்டேன்.
உங்கள் காதலை
நான் எப்படி எழுத முடியும் தெரியவில்லை.

இல்லை, நீங்கள் பெண்ணியக் கவி.
எனக்கு உதவி செய்தே ஆகவேண்டும்.

சரி என்ன சொல்ல நினைக்கிறாய்.

அவனைப் பார்க்காத நாளில்
எனக்குப் பயித்தியம் பிடித்தது போல ஆகிறது.

பயித்தியம் போலவா பயித்தியமாகவா.

தலையைப் பிய்த்துக் கொண்டு ஓட வேண்டும்
போலத் தோன்றுகிறது.

சரி
பார்க்கும் பொழுது என்ன பேசிக் கொள்வீர்கள்.
அவன் கேட்பான் நான்தான் உனக்கு ஒரே பாய்பிரண்டா.

நான் கேட்பேன் நான்தான் உனக்கு முதல் கேள்பிரண்டா.
பிறகு இருவரும் ரெட்மிகளை காட்டி நிருபிக்க முயல்வோம்.

சரி உனக்கு எத்தனை வரியில் கவிதை வேணும்.

வாட்ஸப்பில் படத்துடன் அனுப்ப உகந்ததாய் மேடம்.

“உன்னைப் பார்க்காத பொழுதுகளில்
எனக்குப் பயித்திம் பிடிக்கிறது.
பார்க்கும் பொழுதெல்லாம்
ஒரு பைத்தியத்தை மட்டுமே பிடிக்கிறது.”

என்ன மேடம் இதற்கு அர்த்தம்.
பைத்தியம் இல்லாமல் இதைப்
புரிந்து கொள்ள முடியாது.
சரி என்று வாங்கிப் போனாள்.

அடுத்த நாள் பிரேம் இல்லையா.
ஒருத்தன் வந்தான்.
என் காதலி டெல்லிப் பெண் சார்.
அவள் இங்கிலிஷ் படித்தவள்.
நானோ கொஞ்சம்போலத் தமிழ் படித்தவன்.
எங்களுக்குள் பேசிக்கொள்வதில் பிரச்சினை என்றான்.
என்ன?
நான் அவளைக் காதல் செய்கிறேன் என இங்கிலிஷில் சொன்னேன்.
"I want to make love to you"
அவள் கோபமாக இப்படிச் சொன்னாள்.
"Fuck You"
புரியல சார் என்ன சொன்னா.

நீ இந்தியன் இங்கிலிஷில் சொன்னதைத்தான்
அவர் அமெரிக்க இங்கிலிஷில் சொல்லியிருக்கிறார்.
சார் அவள் பெண்தான் ஆண் அல்ல அவர் என ஏன் சொல்கிறீர்கள்?
அது என் பழக்கம் சரி மேலே சொல்.
ஆனால் உடனே
முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விட்டாளே சார்.

செயல் அதுவே சிறந்த சொல்.
என்ன சார் சொல்கிறீர்கள்.
மன்னிக்கவும்.”செய் அல்லது செத்துமடி.”
சார் நான் பிரேதா மேடத்திடம் பேசிக் கொள்கிறேன்
என்று கிளம்பிப்போய் விட்டான்.

பிரேதா இன்று. சொல்ல வேண்டுமா.
ஒருத்தி வந்தாள்.
மேடம் இந்தக் கவிதையைக் கொடுத்து
ஒருத்தன் தொல்லை செய்கிறான்.
நான் ஏதாவது பதிலுக்குக் கவிதை எழுத வேண்டும்.
படித்துப் பார்த்தேன் அவை பிரேம் வரிகள்.

என்ன சொல்லனும் பெண்ணே.
வீட்டில் பிரச்சினை மேடம்.

அதுதானே மிகவும் ஏளிமை.

“உனைப்பார்க்க வரும் பொழுதெல்லாம்
ஒரு பயித்தியம் இடிக்கிறது.
பார்த்து விட்டு இல்லம் சென்றால்
மூன்று பைத்தியங்கள் கடிக்கிறது.”

என்ன மேடம் இதற்கு அர்த்தம்.
உங்கள் வீட்டில் எத்தனை பேர்.
மூன்று பேர்கள்.
சோ சுவீட்.

பிரேம் அன்று
சைக்கிளைத் தள்ளிக்கொண்டு
போவதைப் பார்த்தேன்
காரை ஓரமாக நிறுத்தி என்ன சோகம் என்றேன்.
இரண்டு மாணவிகள் கேட்டார்கள் பிரேதா.
தேசியத் தேர்வுகளில் மட்டுமின்றி
எல்லா தேர்வுகளிலும் நான்கு சாய்ஸ் கொடுத்து
எது சரி என்று கேட்கிறார்கள்.
திருமணம் என்றால் எதையும் கேட்பதில்லையே.
நாலு கொடுத்தால் நீ நாலையும்தானே கேட்பாய் என்றேன்.
அப்படி வெறுப்புடன் பார்த்துப் போனார்கள்.
நாலும் இரண்டும் சொல்லுக்குருதி.
நாயுறுவி பல்லுக்குருதி.
என்ன சொல்கிறாய் பிரேமி.
எதுவும் தெரியாதா பிரேதா.
நீ தமிழன். நான் பிரஞ்சு இப்படிப் பூடகமாய்ப் பேசாதே என்றாள்.
தற்காலத் தமிழில் ஒரு கவிதை சொல்லவா.
சொல்லித் தொலை.
நீதான் என் தில்லி நான் அதில் ஒரு புள்ளி..
பிரேதாவின் கண்ணின் கண்ணீர்ப் படலம்.
இருவரும் நெடுநேரம் பேசக்கொள்ளவே இல்லை.
போகும் போது சொன்னாள்.
.இதையும் முகநூலில் போட்டு விடாதே.
என்ன சொல்வது.
தமிழ்க் கவிஞன் ஞான்.
பில்டிங் ஸ்ட“ராங்க்.
பேஸ்மண்ட் வீக்.
பிரேதாவக இருந்தால் என்ன
பிரேமாக இருந்தாள் என்ன
விருப்பக்குறிகள் ஆயிரம் வேண்டும்.

பிரேம் புலம்பினான்
கவிதை எழுதினால்
இருபது விருப்பக் குறிகள்
கருவாடு வறுத்தேன் என்றால்
இரண்டாயிரம் விருப்பக் குறிகள்.
கவிதை எழுத வீட்டுக்கு ஒரு ஆள் உண்டு.
கருவாடு வறுப்பது அத்தனை எளிதா சொல்.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
அருந்தக் கொடுத்தாய் நீ.
66
Like