Monday 7 May 2018

0 டிகிரி - சாருநிவேதிதா ::

......... பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. கேஷியர் இன்னமும் மெடிக்கல் லீவில்தான் இருக்கிறார் என்பதே இதை ருசுப்படுத்தப் போதுமானது. வங்கிச் சுவர்களில் பல இடங்களில் AK45 பதம் பார்த்திருக்கிறது. ஆனால் இந்தக் கலாட்டாவில் (வேறென்ன புரட்சி என்றா சொல்ல முடியும்?) யாரும் சாகவில்லை என்பதிலிருந்து மாய்த்தா மற்றும் அவனது தோழர்களின் துப்பாக்கிப் பயிற்சியின் மீதுதான் எனக்குச் சந்தேகம் வருகிறது. ஆனால் முனியாண்டிக்கோ இது மனிதாபிமானமாக அர்த்தமாகியிருக்கிறது. போகட்டும். நடந்ததைச் சொல்கிறேன். அந்தத் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டுக்கூட மக்கள் பயந்திடவில்லை.
மாறாக மாய்த்தாவையும் அவனது தோழர்களையும் கற்களை வீசித் தாக்கத் துவங்கியிருக்கிறார்கள் மக்கள். எப்படியும் இந்தக் கொள்ளைக் கூட்டத்தைத் தப்பவிட்டுவிடக் கூடாது என்ற வைராக்கியத்துடன் அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்த இளஞ்சிங்கங்கள் சிலரை நோக்கி மாய்த்தாவின் AK45 குறி பார்த்திருக்கிறது. ஆனால் அந்தோ அந்தச் சமயம் பார்த்து யாரோ மறவன் வீசிய கவண் கல் மாய்த்தாவின் கண்ணைப் பதம் பார்த்திருக்கிறது. கண்களில் குருதி பொங்க துப்பாக்கியின் விசையை மாய்த்தாவின் கைகள் தேட தொடர்ந்து வந்த கற்களுக்கு இமைப் பொழுதில் பலியாகி வீழ்ந்திருக்கிறான் மாய்த்தார். தங்கள் தலைவனின் வீழ்ச்சியே அவன் தோழர்களின் மனவுறுதியைக் குலைக்கப் போதுமானதாக இருக்க அவர்களும் பதற்றத்துடன் துப்பாக்கி விசையை அழுத்த துப்பாக்கி இயங்கவில்லை. வரலாற்றை நிர்ணயிக்கப்போகும் அந்த முக்கியத் தருணத்தில் தோழர்களின் துப்பாக்கிகள் இயங்காமல் போனது நாகர்கோவில் வேலிக்கருப்பன் நிகழ்த்திய அதிசயம்தான் என்று கிராம மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

முனியாண்டியைப் பற்றிய கதை
எங்கோ புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறாள். வழியில் கோயில்
தென்படுகிறது. முச்சந்தியில் சாமி புறப்பாட்டுக்கான அலங்காரம் நடந்துகொண்டிருக்கிறது. மாலைகள் (வெள்ளை சம்பங்கி) தென்படுகின்றன. நானும் அங்கே போய் தெருவில் கூட்டத்தோடு உட்காரப்போகும்போது யாரோ பெண் அந்தக் குப்பைத் தொட்டியில் பிரேதம் என்கிறாள். சட்டெனத் திரும்பிப் பார்த்து உறைந்துபோன குழந்தைக் கால்கள் தெரிய பயந்து போய் அலறி எழுந்துகொள்ள கோயில் இருக்கும் இடத்தில் சாவு நிகழ்ந்தால் புறப்பாடு ஏதுமிருக்காதே என வேகமாய் அங்கிருந்து வீட்டுக்குப் போகிறாள். கையிலிருந்த வஸ்துவைக் கீழே வைக்கக் குனிந்து நிமிர்கையில் மடாரென்ற சப்தத்தோடு கீழே விழுந்த பொருள் என்னவென்று பார்த்தால் பிரேதக் குழந்தை. இப்போது அது கண்ணை விழித்துப் பார்த்து கையைக் காலை உதைத்துக்கொண்டு அழுதது. பார்க்கப் பார்க்க அவளுக்கு வெறிபிடித்து அதைக் கொன்றுவிட வேண்டும் என்று நினைத்து அதை அமுக்க இரண்டு கைகளையும் விரித்து அருகே நெருங்கியதும் மனம் வராது போனது. அவன் வருகிறான். என்னென்னவோ திட்டுகிறான். ஏதோ முடிவு கட்டிவிட்டுப் போகிறான். வேகமாய். அவள் மீண்டும் சமைந்துபோய் குறிப்பே இல்லாமல் அந்தக் குழந்தையைப் பார்க்கிறாள். இப்போது அந்த சிசுவின் கை கால்களெல்லாம் என்னென்னவோ உருவத்தில் நத்தை ஓணான் ஆமை பல்லி சிலந்தி பாம்பு தேள் பூரான் மீன் என்று பல்வேறு ரூபங்களில் பிய்ந்து பிய்ந்து தெரிய அதை அவள் துடைப்பமும் முறமும் எடுத்துக்கொண்டு வந்து அள்ளியெடுக்க அது இப்போது பலவித புழுக்களாக மாறி நெளிய அருவருப்பை சகித்துக்கொண்டு வாசலுக்குப்போய் குப்பைத் தொட்டியில் போடுகிறாள்.
அளவின்றிக் குடித்துவிட்டு நடைபாதை ஓரத்தில் விழுந்து கிடந்த புச்சி இன்னமும் மயக்கம் தீராது குப்பைத் தொட்டியில் வாந்தியெடுக்கப் போக அதனுள் விரைத்துக் கிடந்த சிசுவைப் பார்த்து மிரட்சிகொண்டது. குப்பைத் தொட்டியின் ஓரத்தில் ஒண்டிக்கொண்டிருந்தது எலி. எலி குதறிய சிசுவின் வயிறு. பெண் சிசு பிழைப்புக்கு உதவுமென எடுத்து வந்து நீனாவிடம் கொடுக்க நீனா சிசுவைப் பார்த்துவிட்டு புச்சியை நையப்புடைத்தாள். போதையில் உனக்கு ஆணெது பெண்ணெது எனத் தெரியாமல் போகுமா எனக் கேட்டு, ஜனித்து இன்னும் முப்பத்தாறு மணி
நேரம்கூட ஆகியிருக்காது. மருத்துவரிடம் ஓடினாள். குளிரில் இரவு முழுவதும் கிடந்து எலிக்கடி பட்டிருந்தாலும் பிழைத்துக் கொண்டது சிசு.
பதினெட்டாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது இவ்வுலகம். இந்த சிசு மேற்கூறிய விதமாக மார்கழி மாதத்தில் புச்சியாலும் நீனாவினாலும் உயிர்பெற்று இந்தக் காகிதத்தில் இந்த வாக்கியத்தில் தோன்றியது.
Colostrum&குழந்தை பிறந்த சில தினங்களில் தாயின் முலைகளிலிருந்து வரும் மஞ்சள் நிறத் திரவம் contains lot of protein and vitamins. It has anitbodies against many common diseaes especially those that the mother has had earlier. சிசுக்கள் தாமாகவே இந்த antibodiesஐ உருவாக்கிக்கொள்ளும் வரை தாய்ப்பாலிலிருந்து கிடைக்கும் antibodies சிசுக்களை நோய்களிடமிருந்து காப்பாற்றுகிறது.
ஐஸ் தின்றால் தொண்டையில் சதை வளரும். ஆபரேஷன் செய்ய வேண்டி வரும். பாம்பே மிட்டாய் மீன் செதிலால் செய்தது. பூம் பூம் என்று ஊதிக்கொண்டு வருவான் பாம்பே மிட்டாய்க்காரன். குழந்தைகள்
தங்களுக்குப் பிடித்த ப்ளேன் வாட்ச் கப்பல் மீன் என்று செய்து வாங்கிக்கொண்டு வெயிலிலும் வியர்வையிலும் அது உருகும்போது வேடிக்கை பார்க்கும். ஜவ்வு மிட்டாய் எச்சிலைத் தொட்டுச் செய்யப்படுகிறது.
முனியாண்டி எக்ஸிஸ்டென்ஷியலிஸ்டாக மாறியதன் வரலாற்றுப் பின்னணியையும் நீ தெரிந்துகொள்ளவேண்டும் வாசுகி. விபரம் தெரிய ஆரம்பித்தபோதோ அல்லது விபரம் தெரிய ஆரம்பிப்பதற்கு முன்னாலோ தான் எழுத்தாளன் ஆகிவிட வேண்டும் என்று அவாவுற்ற முனியாண்டி ஐன்ஸ்டைன் பிருஹதாரண்யக உபநிஷதம் குரும்பூர் குப்புசாமி க்ராம்ஸி அம்பேத்கர் மனு சாஸ்திரம் மகாபாரதம் ஆயிரத்தோரு அராபிய இரவுகள் ராபர்ட் ம்யூஸில் பன்றிகளின் கருவியல் ஆண்டாள் சே கெபாரா அலெஹோ
கார்பெந்தியர் உடல் இயங்கியல் பொலிவிய வரலாறு மலையேறிகளின் வாழ்க்கை வரலாறு குற்றவாளிகளின் வாக்குமூலங்கள் எண்ணற்ற காதல்
கடிதங்கள் எரிமலைகளின் வரலாறு கடல் வாழ் உயிரினங்களைப் பற்றிய உயிரியல் தல புராணங்கள் Gershom Sholem ரெனே தெகார்த்தே என்று கையில் கிடைத்தது கையில் கிடைக்காதது எல்லாவற்றையும் படிக்க ஆரம்பித்தான். அப்படிப்பட்ட தினத்தில்தான் பர்வீன் பாபி தன்னை எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் என்று பிரகடனப்படுத் திக் கொண்ட பேட்டியைப் படித்தான். அந்த வார்த்தை அவனால் உச்சரிக்கக் கூடியதல்லாத்தாக இருந்தது. திரும்பத் திரும்ப உச்சரித்துப் பார்த்து பிறகு கலைக் களஞ்சியத்தில் அர்த்தமும் பார்த்து அர்த்தத்தின் கவர்ச்சியில் மயங்கி அன்றே தன்னையும் எக்ஸிஸ்டென்ஷியலிஸ்டாக பிரகடனப்படுத்திக்கொண்டான் முனியாண்டி. தனது நோட்டுப் புத்தகத்தில் நான் எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் என்று எழுதியெழுதி அழகு பார்த்துக்கொண்டான். அதை எதேச்சையாய்ப் பார்த்துவிட்ட ஆங்கிலப் பேராசிரியை Are you existentialist என்று கேட்க எழுந்து நின்று சற்றே நாணத்துடன் யெஸ் மேடம் என்றான்.


பிஹாரிலுள்ள சுத்தா என்ற கிராமத்தில் ஒன்பது வயதுச் சிறுவனை நிலச்சுவான்தார் சுட்டுக் கொன்றார். நிலச்சுவான்தார் வீட்டிலிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்கை சிறுவன் திருடிச் சென்றுவிட்டதே காரணம் என்று சொல்லப்பட்டது. தாய் தந்தையின் பெயர் அறியாத முனியாண்டியின் வளர்ப்புத் தாய் வேசியாகப் பிழைத்தவள். இதை வெளியே சொல்வதில் அவனுக்குக் கூச்சம் எதுவும் கிடையாது என்றாலும் அவன் எழுதிய சுயசரித நாவலில் சொல்லாமல் விட்டுவிட்டான். மிர்ஸாபூர் மாவட்டம் காஸிபூர் நகருக்கருகே உள்ள கிராமத்தில் மீராபாய் என்ற பெண்ணின் கணவன் கம்பளம் தயாரிக்கும் கடை முதலாளியிடம் 180 ரூபாய் கடன் வாங்கினான். ஆனால் அவனுடைய தெருவாசிகளைப் பற்றியும் அவர்களின் குடிசைத் தொழில் பற்றியும் விலாவாரியாக எழுதியிருந்ததால் அவன் நாவலை விமர்சித்த ஆனந்தசாமி முனியாண்டி பொய்யன் என்றும் அவன் அம்மாவைப் பற்றிய விபரத்தை வேண்டு மென்றே மறைத்து அவளைக் கற்புக்கரசியாகக் காட்ட முயற்சித்து மோசமான முறையில் தோல்வியுற்றிருக்கிறான் என்றும் எழுதியிருந்தார். அதற்குப் பதிலாக அவனது குடும்பமே கம்பள் முதலாளிக்கு அடிமைக் கூலிகளாயினர். அந்த________________

ஜில்லாவின் சிறுவர் விடுதலை இயக்கத்துடன் சேர்ந்து இதை நான் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றேன். எவ்வளவோ யோசித்துப் பார்த்தும் தன் அம்மாவைப் பற்றிய விபரத்தை ஏன் எழுதாமல் விட்டோம் என்று முனியாண்டிக்குப் புரியவில்லை . மீராபாயின் மகன் உமாசங்கர் (வயது 9) அந்த முதலாளியிடம் இருபத்தேழு மாதங்கள் அடிமையாய் உழைத்திருப்பதால் அதற்கு ஈடுகட்ட கம்பௗ முதலாளி முப்பத்தாறாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமென தீர்ப்பாயிற்று. அவனுடைய இளமைக்காலம் முழுவதும் தன் அம்மாவின் கட்டிலுக்குக் கீழேதான் படுத்து உறங்கியிருக்கிறான். ஆனாலும் உள்ளூர் போலீசாரின் பக்கபலத்தின் காரணமாக மீராபாய் குடும்பத்துக்கு அந்தத் தொகையைக் கொடுக்காததோடு மட்டுமில்லாமல் உமாசங்கரின் அண்ணனை அவனும் அடிமையாக உழைத்து வந்தவன் ஜோடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்ய வைத்தார் முதலாளி. விளக்கை அணைத்துவிட்டுத் தூங்க ஆரம்பிக்கும் | போது அவன் அம்மாவின் பக்கத்தில்தான் இருப்பான். சிறுவர்களுக்கும் மீராபாயின் கணவனுக்கும் காவல் நிலையத்தில் அடியும் உதையும் கொடுக்கப்பட்டது. அம்மாவின் மார்பில் தலையை வைக்க அவள் இருதயம் துடிக்கும் ஓசையில்தான் அவனுக்கு உறக்கம் வரும். இதை வெளியே சொன்னால் அவர்களின் கைகளும் கால்களும் துண்டிக்கப்படும் என்று________________

அவர்கள் எச்சரிக்கப்பட்டார்கள். அந்த லப்டப் சத்தமும் மேலும் கீழும் ஏறியிறங்கும் மார்பும் அவனுக்கு ரயிலில் போவதுபோன்ற சுகத்தைத் தரும். | இதே நிலையில்தான் ஆயிரக் கணக்கான சிறுவர்கள் ஃபரீதாபாதில் இருக்கும் கல்குவாரியில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் நான் நேரில் கண்டேன். இல்லாவிட்டால் புரண்டு புரண்டு படுத்தாலும் அவனுக்கு உறக்கம் வராது. பாகிஸ்தானில் தொண்ணூறு லட்சம் குழந்தைகள் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள் என்று எங்கள் அமைப்பின் பாகிஸ்தான் கிளையின் அறிக்கை கூறுகிறது. அவளுடைய அணைப்பும் இருதயத்தின் சப்தமும் அவனுக்குப் பசியையும் மீறி | தூக்கத்தைக் கொடுக்கும், அவர்களில் பலபேர் செங்கல் சூளைகளில் வேலை செய்கிறார்கள். ஆனால் எழுந்து பார்த்தால் கட்டிலின் கீழே கிடப்பது புரியும்.________________

தொண்ணூறு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு கங்கையில் தூக்கியெறியப்பட்டார்கள். அந்த ஓசைதான் என்னைப் பல இரவுகளில் தூக்கத்திலிருந்து எழுப்பியிருக்கிறது. குச்சி தேவியை அவள் கணவன் தனது எஜமானனுக்கு கூட்டிக் கொடுக்காததால் அவன் உயிரோடு எரிக்கப்பட்டான். முதல் முதலாக அப்படி எழுந்தபோது கட்டிலுக்குக் கீழே வந்து கிடக்கும் காரணம் புரியாமலும் கட்டிலின் விபரீதச் சத்தம் தந்த பீதியிலும் அவசர அவசரமாக வெளியே உருண்டு வந்து பார்த்தபோது அந்த உருவம் தன் அம்மாவின்மீது படுத்து மேலும் கீழும் அசைந்து கொண்டிருப்பதைக் கண்டான். அப்போதுதான் அவனுக்கு லேசாய் ஏதோ புரிகிறாற்போல் இருந்தது. அப்போது அவள் கர்ப்பம். கொஞ்சம் வயது வந்த பிறகு தன் அம்மாவிடம் வருகிறவர்கள் செய்வதையே அவனும் தன் பக்கத்து போர்ஷன் பெண்ணிடம் செய்து பார்த்தபோது அதை அந்தப் பெண்ணின் அம்மா பார்க்க நேரிட்டு குய்யோ குய்யோ என்று கத்த அவனுடைய அம்மாவும் அந்தச் சிறுமியின் அம்மாவும் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு தெருவில் புரள நேர்ந்தது. அவளது புகாரை லோக்கல் போலீசில் எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டதால் குச்சி தேவி தில்லிக்கு வந்தாள். அன்றைய தினத்திலிருந்து யாரும் அம்மாவைத் தேடி வந்தால் நான் வீட்டைவிட்டு வெளியே வந்துவிடுவேன். மா ஆப் ஸங்கெத் கர் தே ஹேங்) தோ மே அப்னே சம்ரே கே ஜூத்தே பனாத்தா ஹும். வீடு என்பது________________

| மூன்றடி அகலமும் ஆறடி அகலமும் கொண்ட அறை என்பதால் அதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. இந்தியாவில் 180 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக இந்திய அரசின் 1980ஆம் ஆண்டு சென்ஸஸ் கணிப்பு கூறுகிறது. குளியலும் மலஜலம் கழித்தலும் தெருவில்தான். இவர்கள் தொழிற்சாலைகளிலும் உணவு விடுதிகளிலும் சினிமா தியேட்டர்களிலும் சிறு கடைகளிலும் வேலை செய்கிறார்கள். சமையல் மட்டும் கிடையாது. பீடி சுற்றுகிறார்கள். வெளியேதான். கல் உடைக்கிறார்கள். ஓட்டலில். கண்ணாடித் தொழிற்சாலைகள் இரவில் மட்டுமே வேலை செய்கின்றன. இப்போது நினைத்துப் பார்த்தால் மிஸ்ராவுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இத்தொழிற்சாலைகளில் அநேக கூலியாட்கள் குழந்தைகள்தான். பகல் நேரத்தில் கக்கூஸ் வந்தால்________________

அம்மாவோ மற்ற பெண்களோ எங்கே போயிருப்பார்கள். தொழிற்சாலையின் உள்ளே உஷ்ணநிலை 40.5 சி. அம்மா மட்டுமல்லாமல் அந்தத் தெருப்பெண்கள் எல்லாரும் விடியலுக்கு முன்னதாகவே எழுந்து எதிரேயிருக்கும் திறந்தவெளிக்கு செம்புத் தண்ணீருடன் போவதை சமயங்களில் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் தயாரிக்கப்படுகிற தீப்பெட்டிகளில் 72 சதவிகிதம் சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. இந்தத் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் தினமும் சூரியோதயத்திலி ருந்து அஸ்தமனம் வரை வேலை செய்யும் குழந்தைகள் எத்தனை பேர். அரே பச்சே தேரி மா கிதர் கயி என்றான் கஸ்டமர். இருநூற்று எழுபது நிமிடங்களுக்கு மேலாக குழந்தைகள் தொழிற்சாலைகளில் வேலை செய்யக்கூடாது என்கிறது இந்தியத் தொழிற்சாலை சட்டம். அப்போதுதான் நான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். ஆனாலும் அவர்களுக்குத் தினமும் பகல் முழுவதும் வேலை கிடைத்துவிடுகிறது. My mother is funking என்று கஸ்டமரிடம் சொன்னான் மிஸ்ரா. இதைக் கேட்ட மற்ற சிறுவர்கள் அன்றிலிருந்து மிஸ்ராவைப் பிடித்துக்கொண்டார்கள். Funky Funky Funky.________________

ஃபக்ருன்னிஸாவுக்கு அந்த அரண்மனை போன்ற வீட்டில் எத்தனை அறைகள் இருக்கின்றன என்று கேட்டால் அது யாருக்குமே தெரியாது என்று சொல்லுவாள். அத்தனை அறைகளையும் யார் எண்ணிக்கொண்டிருப்பது வேறு வேலை இல்லையா என்று சலித்துக்கொள்வாள். அந்த சலிப்பில் கொஞ்சம் பெருமிதமும் கலந்திருக்கும். காரணம் இந்த வீட்டின் நிர்வாகி தலைவி எல்லாம் அவள்தான். எண்ண முடியாத அறைகள். பக்கவாட்டில் நீச்சலுக்கென்று பிரத்தியேகமான தடாகம். நாட்டிய அரங்குகள். வீட்டுக்குப் பின்னே வரிசை வரிசையாக பணியாளர் குடியிருப்பு. குதிரை வண்டி ஓட்டுபவர்கள் பல்லக்குத் தூக்கிகள் (ஃபக்ருன்னிஸாவுக்கு குதிரை வண்டிச் சவாரி பிடிக்காது. எங்கே போனாலும் பல்லக்கில்தான் போவாள்) சமையல்காரர்கள் பங்க்கா பிடிப்பவர்கள் வண்ணார் மற்றும் சிறு பணியாளர்கள் எல்லோருக்குமான வசிப்பறைகள் அவை. அதற்கும் பின்னே பல்லக்குகள் வைக்கப்பட்டிருக்கும். கடைசியில் குதிரை லாயம். இவ்வளவும்________________

போதாதென்று யமுனையிலிருந்து கால்வாய் வெட்டி அதை வீட்டுக்குப் பின்பகுதி வரை கொண்டுவந்து விடலாம் என்கிறார் நவாப் மிர்ஸா அலிகான். எதற்குத் தெரியுமா. மீனவர்கள் சின்னஞ்சிறு படகுகளில் வந்து படகுகளில் இருந்தபடியே மீன்களைக் கொடுத்துவிட்டு போவார்களாம். எப்படி இருக்கிறது. நவாபின் பெரிய மனசுக்கு அவர் இந்த உலகத்திற்கே சுல்தானாக இருந்திருக்க வேண்டியவர். ஆனால் அவருக்கு ) விதிக்கப்பட்டிருந்ததோ இந்தச் சிறிய பூமி மட்டும்தான். இருந்தால் என்ன நவாப் மிர்ஸாவின் பிரியத்துக்குரியவள் இந்த ஃபக்ருன்னிஸாதானே. அந்த இடத்தை மட்டும் வேறு யாராலும் பிடித்துவிட முடியாது என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆரம்பத்தில் ஃபக்ருன்னிஸாவைப் பற்றி முழுமையாகத் தெரியாதபோது நீ என் அரண்மனைக்கே வந்துவிடு என்று அழைத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அங்கே போனால் அவரது அந்தப்புர ஆசை நாயகிகள் கூட்டத்தில் கலந்துவிடுவாள். ஃபக்ருன்னிஸா அதற்காகப் பிறந்தவளா என்ன. நவாப் ஸாஹேப் நான் உங்கள் அடிமை. என்னைப் போலவே இங்கேயிருக்கும் அத்தனை பேரும் உங்கள் அடிமைகள். எங்களை எங்கே வரச்சொல்லி உத்தரவிடுகிறீர்களோ அங்கே நாங்கள் வருகிறோம். ஆனால் சுதந்திரத்தின் காற்றை இதோ தங்களின் இந்த இடத்தில் சுவாசித்துக்கொண்டிருக்கும் எங்களை அந்தப்புரத்தில்________________

முடக்கிவிடாதீர்கள். காட்டுக் கிளிகளைப் போல் திரிந்துகொண்டிருக்கும் எங்களைக் கூட்டில் அடைத்துவிடாதீர்கள். நான் காலில் சதங்கை கட்டியவள். என்னால் சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்க முடியாது என்றெல்லாம் சொல்லி நவாப் மிர்ஸா அலிகானை தன் வாக்கு சாதுர்யத்தினால் ஒப்புக்கொள்ள வைத்துவிட்டாள் ஃபக்ருன்னிஸா. அன்றைய தினம் அவள் ஆடிய ஆட்டத்தையும் பாடிய பாட்டையும் கேட்டவர்கள் அது போன்ற கலை விருந்தை அவர்கள் வாழ்விலேயே கண்டதில்லை என்றார்கள். கவியுள்ளம் படைத்த நவாபுக்கும் அப்படித்தான் தோன்றியது. ஃபக்ருன்னிஸா அன்றைக்கு உருவாக்கிப் பாடிய கஸல்களில் தெரிந்த காதலிலும் காவிய உணர்விலும் உருகிப் போனார் நவாப். எப்பேர்ப்பட்ட கவி அவள் என்று வியந்துகொண்டே இருந்தார்.________________

இவ்வளவு அறிவும் உனக்கு எப்படி வந்தது பெண்ணே . இதெல்லாம் அரசகுல மகளிர் மிகப்பெரிய அறிஞர்களிடம் நீண்ட காலம் பயின்ற பிறகு கிடைக்கக் கூடியதாயிற்றே என்று அவளிடம் கேட்டார் நவாப்.
ஃபக்ருன்னிஸாவுக்கு அந்த வாழ்க்கை பிடித்துதான் இருந்திருக் கிறது மிஸ்ரா என்றாள் நீ"னா.
எப்படிச் சொல்கிறீர்கள். அவளுடைய டயரிக் குறிப்புகளைப் படித்து விட்டுத்தானே நீங்கள் இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு அந்த செளத்ரி இளைஞனை மணந்துகொண்டு அவனோடு சென்றதாகச் சொன்ன"ர்கள்.
மிஸ்ரா சொல்வது தவறு. ஃபக்ருன்னிஸா இந்தக் கோட்டாவின் வாழ்க்கையை அணுஅணுவாய் அனுபவித்திருக்கிறாள். தன் ஆசிரியரான மௌல்வி நிஸாமுத்தீன் பற்றி அவள் தன் டயரியில் பக்கம் பக்கமாகக் குறிப்பிடுகிறாள். அவர் தனக்குக் கற்பித்த நீச்சல் நாட்டியம் இசை தர்க்கம் தத்துவம் வான சாஸ்திரம் எல்லாவற்றையும் பற்றி அவள் நினைவு கூர்கிறாள்.________________

அராபிக் பெர்ஷியன் ஹீப்ரு கிரேக்கம் என்று பல மொழிகளும் அறிந்திருந்தார் மௌல்வி. உலகிலுள்ள எல்லா இதிகாசங்களும் புராணங்களும் அவருக்கு அத்துப்படி. இது தவிர இந்தப் புத்தக அறிவின் மூலம் அறிந்ததை விடவும் அனுபவங்கள் மூலமாக அறிந்தது இன்னும் அதிகம் என்று சொல்லலாம்.
மௌல்வி ஃபக்ருன்னிஸாவுக்கு சொன்ன சில கதைகளைப் படித்த பிறகுதான் எனக்கு தாம்பத்ய வாழ்க்கையின் மீதே ஆர்வம் ஏற்பட்டது.
புறாக்களைப் பற்றிச் சொல்லுவார் மௌல்வி. தன் ஜோடி இறந்து போனால் இணைப்புறா அலகினால் கல்லை எடுத்துக்கொண்டு எவ்வளவு உயரம் போக முடியுமா அவ்வளவு உயரம் பறந்து சென்று கல்லை விழுங்கிவிட்டு சிறகுகளை மூடிக்கொண்டு அங்கிருந்து கீழே விழுந்து தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் என்பார் மௌல்வி.
அண்ணா நீ ஆநிரைகளைக் கவர்ந்து வந்தாய் நான் சிலாகித்தேன் மண்டோதரியைக் கூட்டி வந்தாய் நான் உன்னை முத்தமிட்டேன் என்________________

சந்தோஷத்தை உனது வீணை நரம்புகளில் வெளிப்படுத்தினாய் நானும் உன் இசை வெளியில் பயணித்தேன் ஆனால் அண்ணா இப்போது உனக்கு வயதாகிவிட்டது இந்த வயதில் நீ சீதையைக் கவர்ந்து வந்திருக்கிறாய் பருவமடைந்த பிள்ளைகள் இருக்கிறார்கள் உனக்கு இது முறையல்ல என்று சொன்ன தம்பியின் பேச்சுக்கு செவிசாய்க்கவில்லை மூத்தவன். அண்ணனைப் பிரிந்து இதிகாச நாயகனிடம் சரணடைகிறான் தம்பி. அப்போது சரணடைந்தவர்களை ஏற்பதே தர்மமென்று விளக்கும் சரணாகதித் தத்துவத்தை புறாக்களின் கதைகொண்டு போதிக்கிறான் இதிகாச நாயகன் என்று சொல்லி அந்தப் புறாக்களின் கதையை தன் மெலிந்த குரலில் சொன்னார் மௌல்வி.________________

வேட்டை எதுவும் அகப்படாமல் பசியும் களைப்புமாக மரத்தடியில் வந்து அமர்கிறான் அந்த வேடன். பொழுது சாய்கிறது. குளிரைப் போக்க காய்ந்த சருகுகளைக் கூட்டி தீ வைத்து அதனருகே அலுப்புடன் சாய்கிறான். மரத்தில் மேலே ஜோடிப் புறாக்கள். ஆண் புறா பெண் புறாவிடம் சொன்னது கண்ணே இந்த வேடன் வேட்டை எதுவும் கிடைக்காமல் நம் மரத்தின் கீழே வீழ்ந்து கிடக்கிறான். சரணடைந்தவர்களை நம் உயிர் கொடுத்தாவது காப்பாற்றுவது தானே தர்மம். அதனால் நான் அவனுக்கு உணவாக அந்தத் தீயில் விழுந்துவிடுகிறேன். என்னை அவன் உண்பான். அதற்குப் பிறகும் அவன் பசி ஆறாதது போல் தெரிந்தால் நீயும் அந்தத் தீயில் விழுந்துவிடு என்று சொல்லிவிட்டு தீயில் விழுகிறது ஆண்புறா.
பசியில் மயங்கிக் கிடந்த வேடன் அந்தப் புறாவை உண்கிறான். அவன் உண்பதையே பார்த்துக்கொண்டிருக்கிறது பெண் புறா. வேடன் சாப்பிட்ட பிறகும் அவன் பசி ஆறாததைக்கண்டு அதுவும் அந்தத் தீயில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டு அவனுக்கு உணவாகிறது.
எங்கள் ஊர் புறாக்களால் நிரம்பியது. உலகத்திலேயே புறாக்கள் அதிகம் வசிக்கும் ஊர் அது. மற்ற ஊர்களில் காற்று நிரம்பியிருக் கிறது என்றால் எங்கள் ஊர் புறாக்களின் சுவாசக் காற்றினால் நிரம்பியிருக்கிறது என்று சொல்லுவேன். மனிதன் தன் துக்கங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காகவே கடவுள் புறாக்களை அனுப்பியிருக்கிறான் என்று________________

எனக்குத் தோன்றும். புறாவாகப் பிறந்திருக்கக் கூடாதா என்று மனசு ஏங்கும்.
இவ்வளவு புறாக்களும் இந்த ஊரிலேயே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருப்பதன் காரணம் என்ன தெரியுமா. ஹஜ்ரத் முஹையத்தீன் அப்துல் காத்ரி ஔலியா அடக்கமாகியிருப்பது இந்த ஊரில்தான். இருநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த சூஃபி. அவரைப் பற்றிய கதைகள் ஏராளம். அவர் ஆற்றிய கராமத்துகளும் அநேகம். இந்த வட்டாரத்து மக்கள் எல்லாருடைய சுகவீனத்தையம் வியாதியையும் அவர் சொஸ்தப்படுத்தியிருக்கிறார். பாம்பு தீண்டிச் செத்தவர்களைப் பிழைக்க வைத்திருக்கிறார். ஔலியாவும் அவர் சீடர்களும் நதியைக் கடந்த கதையை இவ்வளவு காலம் சென்றும் நேற்று நடந்ததைப்போல் இந்த ஊரின் சின்னப் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை ) சொல்லிக்கொண்டிருப்பார்கள். நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எப்படி அக்கரைக்குப் போவதென்று தெரியவில்லை. அப்போது ஔலியா கண்களை மூடி சூரா ஃபாத்திஹாவை ஓதுகிறார். ஒதி முடிக்கவும் ஔலியாவும் சீடர்களும் நதியின் அக்கரையில் நிற்கிறார்கள். அப்போது இந்தப் பிரதேசத்தின் ராஜாவாக இருந்த நவாப் அலி மன்ஸூரின்________________

மகள் ஹமீதா பானுவை மீட்டதும் இப்படித்தான். மகள் மீது உயிரையே வைத்திருந்தார் நவாப். திடீரென்று மகளைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை, மகளும் நவாபிடம் சொல்லாமல் எங்கேயும் போகக்கூடியவள் அல்ல. ஔலியாவிடம் கேட்கலாம் என்று வந்தார் நவாப், கிண்ணத்தில் தண்ணீரை ஊற்றி அதில் பார்க்கச் சொன்னார் ஹஜ்ரத். தண்ணீரில் தெரிந்தாள் அருமை மகள். அண்டைப் பிரதேசத்து நவாப் உமர் | ஷேக்கின் மகன் முஸ்டாக் அஹமதுதான் அவள் கையையும் வாயையும் கட்டி குதிரையில் வைத்துத் தன்னோடு பிணைத்துக்கொண்டு சிட்டாய்ப் பறந்துகொண்டிருந்தான். மகள் கடத்தப்படுவதற்குத் துணை புரிந்தவர் நவாபின் பிரதம மந்திரி. அவரைச் சிறையில் அடைத்துவிட்டு தனது வீரர்களுடன் சென்று போரிட்டு மகளை மீட்டுக்கொண்டு வந்தார் நவாப். எல்லாம் ஒளலியாவின் கராமத்.________________

ஔலியாவின் தர்ஹா இந்த ஊரில் இருப்பதால்தானோ என்னவோ பக்கத்து ஊர்களில் அடிக்கடி நடக்கும் இந்து முஸ்லிம் கலவரங்கள் இந்த ஊருக்குள் நுழைவதில்லை. கஸ்பாவில் கோயில் கட்ட முயற்சி செய்ததால் கலவரம். முஸ்லீம் ஜமீன்தாரர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் இந்து லாலாக்கள் அதிகமாகிக்கொண்டே வருவதால் அதைக் காரணமாக வைத்து கலவரம். பசுவைக் கொன்று அதன் தலையைக் கோயில் வாசலில் வைத்துவிட்டதால் கலவரம். பதிலுக்கு பன்றியைக் கொன்று மசூதியில் போட்டு விட்டதால் கலவரம். எல்லாக் கலவரங்களும் வெள்ளைக்காரச் சிப்பாய்கள் வந்த சேர்ந்த பிறகுதான் ஓயும். ஓய்ந்து முடிந்த பிறகுதான் இந்த ஊருக்குச் செய்தி வரும். ஆனால் சிப்பாய்கள் வரும்வரை கொலைகள்தான். மனிதனை மனிதன் எப்படிக் கொல்ல முடியும் என்று இந்தக் கலவரக் கதைகளைக் கேட்கும்போதெல்லாம் ஃபக்ருன்னிஸாவுக்கு ஆச்சரியமாய் இருக்கும்.________________

மரணத்தைப் பற்றித் தெரிய வந்தபோது அவளுக்கு சுமார் ஒன்பது வயது இருக்கும். அந்த தினத்தை அவளால் மறக்கவே முடியாத எப்போதும் போலவே காலையில் எழுந்ததும் தர்ஹாவுக்குப் போய் புறாக்களுக்கு தானியம் போடுவதற்காகச் சென்றுகொண்டிருந்த போது அந்த வெண்புறாவைப் பார்த்தாள் அவள். சிறகில் அடிபட்டுப் பறக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்றுகொண்டிருந்தது அந்தப் புறா. தூரத்திலேயே அதைப் பார்த்துவிட்ட ஃபக்ருன்னிஸா அதை எடுப்பதற்காக ஓடி வருவதற்குள் அந்தச் சம்பவம் நடந்து விட்டது. அந்த வழியாக வேகமாக வந்த குதிரை வண்டியின் சக்கரத்தில் சிக்கிவிட்டது புறா. ஓடி வந்து எடுத்துப் பார்த்தாள். துடிதுடித்து அவள் கையில் இறந்து போனது புறா. மரணத்தை அவ்வளவு நெருக்கத்தில் தனது கை விரல்களிலேயே உணர்ந்த அன்றைய தினம் அவள் மௌல்வியிடம் கேட்டாள் உயிர்களுக்கு ஏன் மரணம் சம்பவிக்கிறது என்று. அதுதான் உயிர்களின் இயற்கை விதி என்றார் மௌல்வி. அந்தப் பதிலில் அவளுக்குத் திருப்தியில்லை. இப்போது மனிதனை மனிதனே கொலை செய்கிறான். அதுவும் மதத்தின் பெயரால். இதற்கு யாரிடம் போய் விளக்கம் கேட்பது. ஆனால் நல்லவேளையாக ஔலியாவின் சக்திதான் அப்படியெல்லாம் எதுவும் நடந்துவிடாமல் இந்த________________

ஊரைக் காத்துக்கொண்டிருக்கிறது. அந்த சக்தி இருக்கும் வரை இந்த ஊரில் வெள்ளைக்காரச் சிப்பாய்களோ கோட்வாலோ தேவையில்லை.
இப்படியேதான் போய்க்கொண்டிருந்தது ஃபக்ருன்னிஸாவின் டயரி. இடையிடையே மின்னல் கீற்றாக நாட்டியத்தைப் பற்றியும் உருது கவிதைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறாள். )
நவாப் மிர்ஸா அலிகான் வெள்ளைக்காரர்களிடம் சரணடையும் வரை ஃபக்ருன்னிஸா நவாபின் கேளிக்கைகளைப் பூர்த்தி செய்வதிலேயே கழித்திருக்கிறாள். அவளுடைய நாட்டியத் துக்கும் கஸலுக்கும் நவாப் அடிமையாகிக் கிடந்திருக்கிறார்.
பிறகு பக்கம் பக்கமாக அபீனை ஹூக்காவில் குடிப்பது பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறாள். மிகவும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய சந்தர்ப்பத்தில் நவாப் தன் பேச்சையே இழந்துவிட்டு ஊமையாகி தவித்துக்கொண்டிருந்தபோது அவர் உதட்டில் அபின் தடவி தேநீர் கொடுத்துப் பேச்சை வரவழைத்த சம்பவத்தைப் பற்றி எழுதுகிறாள்.
ஃபக்ருன்னிஸாவைப் பற்றி நினைத்தாலே அவளுடைய சில்லமும் அதன் கட கட கட சப்தமும் அதன் மணமும்தான் என்னைச் சூழ்ந்துகொள்கிறது என்றாள் நீனா.________________

ஆனால் போதையூட்டும் பக்ருன்னிஸாவின் குரலை ஞாபகப்படுத்தும் அந்த ஹூக்காவின் மணம் வெள்ளைக்காரர்களின் தந்திரத்தாலும் ராணுவ பலத்தினாலும் திடீரென்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. மல்லிகையை முகர்ந்தபடி ஃபக்ருன்னிஸாவின் நாட்டியத்தை ரசித்துக்கொண்டிருந்த நவாபுக்கு வெள்ளைக்காரர்களிடம் பேசும் சாதுர்யம் தெரியவில்லை. குடியும் கூத்துமாக இருந்த தன் சிப்பாய்களைக்கொண்டு வெள்ளை ராணுவத்தை எதிர்த்து உயிரை விட்டார். நவாபின் அரண்மனை கொள்ளையிடப்பட்டது. ஃபக்ருன்னிஸாவின் மாளிகையும் வெள்ளை ராணுவத்தின் பார்வையில் விழுந்தது. மாளிகையின் சுவர்களும் கூரைகளும் தவிர மற்றதெல்லாம் கொள்ளை போயிற்று. காஷ்மீர் சால்வைகள் ரத்தினக் கம்பளங்கள் மாணிக்கக் கற்கள் பதித்த வெள்ளி மதுக்கிண்ணங்கள் கோமேதகக் கற்கள் பதித்த ஹூக்கா வைரக்கற்கள் பதித்த எச்சில் கிண்ணங்கள் என்று________________

எதையுமே அவர்கள் விட்டுவைக்காமல் அள்ளிக் கொண்டுபோனார்கள்.
ஃபக்ருன்னிஸா வைரத்தைப் பொடி செய்து விழுங்கி தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள். அவளை நம்பியிருந்த பெண்கள் அத்தனை பேருக்கும் வீதிக்கு வந்து தங்கள் உடம்பை விற்பது தவிர வேறு வழியில்லாமல் போயிற்று. அவளுடைய வளர்ப்பு மகள் நீனாவுக்கும் உட்பட உடம்பில் மேகநோய் தீண்டியது. தொற்றிய நோயை தம்மை நாடி வந்த வெள்ளைக்காரச் சிப்பாய்களுக்கே கொடுத்தார்கள் அந்தப் பெண்கள். இதனால் உஷாரான வெள்ளைக்காரர்கள் சட்டம் போட்டார்கள். அச்சட்டத்தின்படி அந்தப் பெண்களின் உடல்கள் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டன. தங்கள் உடல்களை அவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டியிருந்தது. குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவர்களின் வருவாய்க்கும் வரி விதிக்கப்பட்டது. இப்படியாக நவாபின் ஆதரவில் இருந்த பெண்கள் தெருவோரத்து விபச்சாரிகளாக மாற நேர்ந்தது.________________

நீனாவுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. அவள் காதலித்தாள். காதலித்தவன் திருமணம் செய்து கொள்வதாகச் சொன்னான். திருமணம் செய்துகொண்டு கணவனை வீட்டுக்குச் சென்றபோது தான் புரிந்தது தன்னை அவனுடைய வீட்டுக்கு அடிமையாகத் தான் அழைத்துச் சென்றிருக்கிறான் என்பது.
அவன் அவனுடைய அம்மா அப்பா அப்பாவின் அம்மா அப்பா சித்தப்பா அண்ணன் அண்ணி அத்தை என்று பெரிய பட்டாளமே எனக்காக அங்கே காத்திருந்தது. மற்றும் சில மாடுகள்.
விடிவதற்குள் எழுந்து பால் கறக்கவேண்டும். எல்லோரும் எழுந்ததும் | தேநீர் கொடுக்கவேண்டும், பால் வேண்டியவர் களுக்கு பால். பிறகு சப்பாத்தி. அத்தனை பேரின் துணிகளையும் துவைக்க வேண்டும். சாணி மிதித்து வரட்டி தட்ட வேண்டும். இதில் மட்டும் நீதியும் உதவி செய்வாள். | பிறகு வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். கிழவி அவனுடைய அப்பாவின் அம்மா படுக்கையிலேயே மூத்திரம் போய்விடுவாள். அந்த அறையைக் கழுவிவிட வேண்டும். படுக்கை விரிப்புகளை மாற்ற வேண்டும். அவளைப்________________

பார்க்கும் போதெல்லாம் கடவுள் மரணத்தின் தூதனை அனுப்ப மறந்தே போய்விட்டானோ எனத் தோன்றும். பிறகு பாத்திரம் தேய்க்கவேண்டும். அந்தப் பித்தளை எச்சில் குண்டான்களைத் தேய்ப்பதற்குள் பாதி உயிர் போய்விடும். நாள் பூராவும் வெற்றிலையைப் போட்டு குதப்பிக் குதப்பி துப்பியிருப்பார்கள். இதற்குள் பொழுது சாய ஆரம்பித்துவிட்டால் மறுபடியும் பால் கறந்து தேநீர். இரவுச் சமையல். சாப்பிட்ட பிறகு பெண்களின் கால்களைப் பிடித்துவிட வேண்டும். பிறகு பாத்திரங்கள் சமையலறையைச் சுத்தம் செய்தல். இப்படி. இப்படி. சமயங்களில் கிழவிக்குக் கடுகெண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிவிட வேண்டும். உன்னைப்போல் பெண் கிடைக்க எங்கள் ஜிலே சிங் கொடுத்து வைத்திருக்க வேண்டும் பேட்டியா என்று சொல்லி முகத்தைக் கையால் சுற்றி விரல்களை நெட்டி முறித்து திருஷ்டி கழிப்பாள் கிழவி. அவளுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமே பேட்டியாதான். மகளே மகளே மகளே. உடம்பு பிடித்துவிடு பேட்டியா குளிப்பாட்டிவிடு பேட்டியா பால் காய்ச்சி அதில் ஜிலேபி போட்டுக் கொடு பேட்டியா எங்களுக்கெல்லாம் சொர்க்கமா நரகமா எதுவென்று தெரியாது. ஆனால் உனக்கு நிச்சயமாக சொர்க்கம்தான் மகளே.________________

ஆண்களிடமிருந்து வேறு மாதிரி பிரச்னை. காலையில் சப்பாத்தி கொடுத்துவிட்டு வரட்டித் தட்டிக்கொண்டிருப்பேன். ஜிலே சிங்கின் அப்பா வந்து என்னைத் தூக்கிக்கொண்டுபோவான். எதிர்த்தபோது ஜிலே சிங் சொன்னான். இதோ பார் நீனா இங்கே பல தலைமுறைகளாக எங்கள் மூதாதையரின் பெயர்கள் தெரியும். உனக்கு உன்னைப் பெற்றவர்களின் பெயர் தெரியுமா, அங்கே நீ இருந்திருந்தால் தினம் குறைந்தது ஒன்பது பேர் என்று வைத்துக்கொள். மாதத்தில் 270 பேர். ஆண்டுக்கு 3240 பேர். குறைந்தபட்சம் பதினெட்டு வருடங்களுக்கு நீ தொழில் செய்தால் எவ்வளவு பேர் என்று கணக்கிட்டுக்கொள். இங்கே உனக்கு என்ன குறைச்சல். இந்த வீட்டுக்கே உன்னை ராணியாக அல்லவா வைத்திருக்கிறோம். நீ” கொடுப்பதைத்தானே சாப்பிடுகிறோம். அதைவிட உனக்கு வேறு என்ன வேண்டும்.
மறுநாளும் கிழவன் வந்தான். மூர்க்கமாகத் தாக்கினேன். எல்லோரும் கூடிவிட்டார்கள். பேட்டியாவுக்குப் பேய் பிடித்து விட்டது என்று அழுதாள்________________

கிழவி. நான் சொன்னதை யாரும் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. கை கால்களில் சங்கிலி மாட்டினார்கள். மந்திரவாதியை அழைத்து வந்தார்கள். மூர்க்க குணம் படைத்த பேய் பிடித்திருப்பதாகச் சொன்னான் அவன். புடவையை உருவிவிட்டு அம்மணமாகக் கொதிக்கும் மணலில் போட்டான். அரே பேட்டியா அரே பேட்டியா என்று கதறியழுதாள் கிழவி. மயக்கமுற்றேன். தண்ணீர் தண்ணர் என முணுமுணுத்தன உதடுகள். என்னைத் தூக்கிக்கொண்டுபோய் அறையில் வைத்து மிருகத்தைப்போல் புணர்ந்தான் அந்த மந்திரவாதி, மயக்கமும் பிரக்ஞையும் தப்பித் தப்பி வந்துகொண்டிருந்தது. பலம் கொண்ட மட்டும் நினைவை இழுத்துக்கொண்டு வந்து பார்த்தால் மேலே இயங்குவது மந்திரவாதியல்ல வேறு ஆள் என்று புரியும். யார் என்று யோசிப்பதற்குள் நினைவு தப்பி விடும்.
மயக்கமெல்லாம் முழுமையாகத் தெளிந்து எழுந்தபோதுதான் தெரிந்தது. வீட்டிலிருந்த அத்தனை ஆண்களும் பேயை விரட்டியிருக்கிறார்கள் என்பது. அதிலிருந்து அவர்கள் கூப்பிட்ட | போதெல்லாம் போக வேண்டியிருந்தது. அதிலும் அந்தக் கிழவனுக்குத்தான் எத்தனை திமிர். நான் தனியாக மாட்டி விட்டால் போதும். உறுப்பை எடுத்து வாய்க்குள் திணித்து விடுவான். மூச்சுக்கூட விட முடியாமல் நான் தவிக்கும் தவிப்பு. கடவுளே நீ எங்காவது இருந்தால் உனக்கு இப்படிப்பட்ட நிலை வர வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். )________________

இங்கிருந்து தப்பிக்கும் வகை தெரியாமல் குழம்பினேன். தோல்வியை அவ்வளவு சுலபமாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவர்கள் சாப்பிடும் உணவில் எச்சிலைத் துப்பினேன். மூத்திரம் பெய்தேன். உருளைக்கிழங்கு வறுவலில் என் சாண்டையையும் வழித்துப் போட்டேன். பார்த்து விட்டார்கள்.
மறுபடியும் மந்திரவாதி வரவழைக்கப்பட்டான். இந்த முறை பேயோட்டம் கடுமையாக இருந்தது, தின்பதற்கு மலம். மர்ம உறுப்பில் மிளகாய்ப் பொடி. எங்கள் நீனாவையா பிடித்து ஆட்டுகிறாய் இரு உன் பருப்பை எடுக்கிறேன் என்று சொல்லி பேய் உறுப்பின் பருப்பை இழுத்து குறுங்கத்தியால் அறுத்துப் போட்டான் மந்திரவாதி. நீண்ட கழியைப் பேய் உறுப்பின் உள்ளே செலுத்தினான்.________________

பல தினங்கள் மயக்கமாகவே கிடந்தேன். என்னென்னவோ மருந்து கொடுத்தார்கள். பேட்டியா பேட்டியா என்ற அழுகைக் குரல்கள் கேட்டன. நிஸாவின் மாளிகையில் உட்கார்ந்திருக் கிறேன். இடது காலை மடித்து வலது காலை கோபுரம் போல் உயர்த்தி ஹூக்கா புகைத்துக்கொண்டிருக்கிறேன். அறையெங்கும் அபின் மணம் கமழ்கிறது. கட கட கட கட கட கட கட கட கட என்ற சப்தம். புகைத்து முடித்துவிட்டுப் பாடுகிறேன். இது நிஸாவின் குரல் அல்லவா, நிஸாவும் நானும் ஓடிப்பிடித்து விளையாடுகிறோம். தடாகத்தில் எனக்கு நீச்சல் கற்றுத் தருகிறாள் நிஸா. சலவைக்கல் தரை கன்னத்தில் பட தரையில் படுத்திருக்கிறேன். அதன் சில்லிப்பு சூடாய் மாறுகிறது. நிஸாவின் கன்னம்.
பிழைத்தது ஏதோ அதிர்ஷ்டம். அழுகி விழுந்த கருப்பையோடு | போய்விட்டது பேய். இனி வரவே வராது என்றார்கள். கிழிந்த நாராய் எத்தனை தினங்கள் படுத்துக் கிடந்தேன் என்று தெரியாது. பிழைத்து எழுந்தபோது நான் வேறு ஆள் என்று மட்டும் தெரிந்தது.________________

மௌனமாகவே இருந்தேன். கோடை வந்தது. ஆந்தியையும் கொண்டு வந்தது. கூடவே திடீரென்று காற்றில் இறுக்கம் ஏற்பட்டு அது வரும். காற்றைச் சுழற்றிக் கடையும். மணல் ராக்ஷஸ சர்ப்பமாய் உருவெடுத்து ஆகாயம் வரை சுழன்றுகொண்டே செல்லும். இடையில் மரமோ மாடோ ஆளோ எது மாட்டினாலும் சுவடே தெரியாமல் நார் நாராய்க் கிழித்துப் போட்டுவிடும். சென்ற வருட சூறைக்காற்றில் மாட்டிக்கொண்டுவிட்டது இந்த வீட்டு மாடு. சுழலின் உச்சியில் மேலெழும்பி எங்கோ வெகு தொலைவில் தூக்கியெறியப்பட்டு கால்வேறு தலைவேறாய்ப் பிய்ந்து போனது மாடு, ஆந்த” வராத நேரங்களிலும் வருவதைப்போல் பயமுறுத்தும் காற்று. பாலைவனச் சுடுமணலை வாரி வாரி முகத்தில் அடிக்கும். எப்போதுமே பற்களின் இடையில் மணல்தான் நறநறக்கும். கிழவிகள் முகத்தை . மூடிக்கொள்வார்கள். நான் மட்டும் மூடக் கூடாது என்பான் ஜிலே சிங். என் சந்திர பிம்ப முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமாம் அவனுக்கு.
அந்தக் கோடையில்தான் நான் அங்கிருந்து தப்பினேன். அன்றைக்கும்________________

வந்து போயிருந்தது ஆந்த". களைத்துப்போய் உறங்கிக்கொண்டிருந்தார்கள். இடுப்பில் கத்தியைச் செருகிக்கொண்டேன். பெண்களின் முகத்தில் தலையணையை அழுத்தி துளிக்கூட சப்தமின்றி வரிசையாகக் கொன்றேன்.
ஆண்கள் தனித்தனியாகப் படுத்திருந்ததால் சுலபமாகப் போயிற்று. ஜிலே சிங்கின் அண்ணன் அறைக்குள் படுத்திருந்தான். அம்மிக் குழவியை எடுத்து வந்து அவன் தலையில் போட்டேன். திரும்பியே பார்க்காமல் வெளியே வந்தேன். அவன் சித்தப்பா நிலா முற்றத்தில் கிடந்தான். அவன் உறுப்பை லேசாக வெளியே எடுத்தேன். விழித்துக் கொண்டான். என்னைப் பார்த்தவுடன் பேயைப் பார்த்ததுபோல் நாக்குழற ஏதோ சொல்ல முயற்சி செய்தான். பயத்தில் அவனுக்குப் பேச்சு வரவில்லை. சிறிதும் காலம் - கடத்தாமல் அவன் உறுப்பைக் கத்தியால் அறுத்தேன். அவன் அலறலைக் கேட்டு வீட்டுக்கு வெளியே படுத்திருந்த ஜிலே சிங் ஓடி வந்தான். நான் நிதானித்துத் திரும்புவதற்குள் என் கைகளை அழுத்திப் பிடித்து முறுக்கினான். கைப்பிடி தளர்ந்து கத்தி கீழே விழுந்தது. கத்தியை எடுக்கத் தாவினான். அதற்குள் என் வாயால் அவன் குறியைக் கவ்வி விட்டேன். என் மண்டையில் இடியைப்போல் விழுந்தது அவன் அடி. அடிகள் இறங்க இறங்க என் கடி இறுகியது. மேலும் மேலும் அடித்தான். நான் பிடியையே விடாமல் அவன் குறியைக் கடித்துத் துப்பினேன்.________________

வேரறுந்த மரமாய்ச் சாய்ந்தான். கிழவனையும் இதுபோல் கடித்துத் துப்ப வேண்டுமென வெளியே வந்தேன். பிரேதமென வாயைப் பிளந்தபடி கிடந்தான் அவன். அருகில் நெருங்கி அவன் குறியில் கையை வைத்தேன். சில்லிட்டிருந்ததன் காரணம் புரியாமல் உலுக்கினேன். சவமாகி வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும்.
தற்கொலை செய்துகொள்ளப் பிடிக்காமல் அங்குமிங்கும் அலைந்த போதுதான் நான் விரனைச் சந்தித்தது.
ஷிரன் ஷிரன் ஷிரன். யார் தெரியுமா. என் கடவுள். அவள் கண்களில்தான் என்ன ஒளி. இரைச்சலற்ற உள்ளமைதி பரவும் ஒளி. எலும்புகளுக்குள்ளெல்லாம் ஊடுருவும் ஒளி. அவளின் நிலவொளிப்________________

பார்வையில் அருவியில் நனைவதுபோல் சிலிர்க்கும் உடல்.
நிஸா வைத்திருந்தாளே அந்த கோமேதகக் கல்லில்தான் அப்படிப்பட்ட குளிர்ச்சியான ஒளி வீசுவதை நான் பார்த்திருக் கிறேன். அந்த ஒளி உன்னிடம் பேசும். உன் உள்ளத்தையெல்லாம் வருடும். கொஞ்சும். கண்ணிமைகளில் முத்தமிடும். மரக் கிளைகளின் நடுவே ஊஞ்சலில் வைத்து உன்னை வேகமாய் ஆட்டி மேகக் கூட்டங்களுக்கிடையே கொண்டு செல்லும். நட்சத்திரங்களைப் பறித்துக் கொண்டுவந்து உன்னுடன் பல்லாங் குழி விளையாடும். வானத்தை உனக்குக் கம்பளமாக்கும். கடலின் ஆழத்தில் உன்னை இட்டுச் சென்று பாதாள உலகின் வினோத ஜாலங்களை உனக்குக் காட்டும். கடல் கன்னிகளின் ரகஸ்ய சாம்ராஜ்யங்களை அறிமுகம் செய்யும். நட்சத்திர மீன்களின் ஆட்ட விதிகளுக்கு உட்படாத விளையாட்டுக்களை ஆர்ப்பரித்துச் சொல்லும். ராக்ஷஸ மீன்களின் கொடூரங்களிலி ருந்து தப்பிக்கும். மாய வித்தைகளைக் கற்றுக் கொடுக்கும்.
அந்த ஒளியை நான் எனக்குள் ஒளித்து வைத்திருக்கிறேன். சூறைக் காற்றில் அணைந்து விடாமல் அவள் கொடுத்த ஆகாயக் கம்பளத்தால் போர்த்திப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.________________

--
-
-
-
-
---
-
------
--
-
கண்ணே நீனா உனக்கு அந்த ஒளியைத் தருகிறேன் வா சாகும் தறுவாயில் ஷிரன் சொன்ன வார்த்தைகள்.
என்னைப் பாதுகாத்து அரவணைத்த தவாயிஃப் இறந்துவிட்டாள். எனக்கு நாட்டியமும் பாட்டும் சொல்லிக் கொடுத்தவள். நான் பாடும் டுமரியில் அந்தக் கோட்டாவே உருகியது. எல்லாம் ஷிரனுக்குச் சொந்தம், எல்லாமே அவள் கொடுத்தது.
ஆண்கள் எனக்கு அருவருப்பைத் தந்தார்கள். அப்போது எங்கள் கோட்டாவுக்கு வரும் அத்தனை ஆண்களிடமிருந்தும் அவள் பேரழகே என்னைக் காத்தது. அதையும் மீறி என் இம்ரியில் மயங்கி என்னிடம் வருபவர்களிடம் என் உடல் காயங்களைக் காட்டி வெருட்டினேன். அதையும் மீறி வந்தவர்களிடம் தன் சாகசத் திறமைகளையெல்லாம் காட்டி தன் பக்கம் ஈர்த்து விடுவாள் ஷிரன்.________________

சிதைந்து உருக்குலைந்து போயிருந்த என் உடலை அவள் எச்சிலால் ஒத்தடம் கொடுத்தாள். என் உடலில் அவள் முத்தம் பதியாத இடமே இல்லை என்று சொல்லுவேன்.
அவள் உடலின் மணம் என்னுள் பரவசக் கிளர்ச்சியை ஏற்படுத் தியது. அவள் அதரச் சுவை எனக்குள் காமத்தீயை எழுப்பியது. அவள் உமிழ் நீரும் மதன நீரும் என் உயிரைத் துளிர்க்கச் செய்தன. கால் விரல் நுனியிலிருந்து நாக்கினால் தீண்டுவாள். பாதம் ஆடுசதை முழங்கால் தொடை இடுப்பு | நாபிச்சுழி வயிறு முலை கழுத்து தோள் புருவம் கன்னம் நுதல் இமை என்று தீண்டும். அவள் சர்ப்ப நாக்கு சடேரென்று சிதைவுற்ற என் அல்குலில் நுழைந்து துழாவும்.
சிலிர்த்துப் போவேன். ஷிரன். ஷிரன்.
என் கைகளைப் பற்றியபடி இறந்துபோனாள் ஷிரன். ஆரவாரமற்ற அந்த ஆழ்ந்த தவம் முடிவுக்கு வந்தது.
சொன்னால் நம்ப மாட்டாய். அவள் உயிர் என் கைகளின் வழியேதான் பிரிந்தது. இறுதித் துடிப்புடன் அந்த உயிர் என் விரல்களின் வழியே எனக்குள் கலந்ததை என் உடலில் உணர்ந்தேன். ஷிரன் சாகவில்லை. எனக்குள் கலந்து விட்டாள்.________________

ஷிரன் இறந்த அன்றுதான் குப்பைத் தொட்டியிலிருந்து அந்த சிசுவைக் கண்டெடுத்து வந்து என்னிடம் கொடுத்தது புச்சி. எலி குதறிய வயிறுடன் இரவு முழுவதும் குளிரில் கிடந்திருந்த அந்த உடலில் உயிர் ஒட்டிக் கொண்டுதான் இருந்தது. உடம்பெல்லாம் சன்னமாக நடுங்கிக் கொண்டிருந்தது. இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது அந்த உயிரைக் காப்பாற்றியது.