Saturday 29 August 2015

-Jewel Kilcher - (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்), -Florbela Espanca- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



சூரியன் தாழும் போது , தனது குருதியினால்
ஒரு இரகசிய நாமத்தை ஞாபகத்திற்காக எழுதுகிறது.
ஒளியின் அதீதம்
ஒரு பேரார்வம் மந்தமாக சாந்தமடைகிறது:
வசிப்பிடம் தேட மானுடனுக்கு போதுமான காலமிருக்கிறது.


ஆயினும் நிலா தொடுவானை அடையும் போது,
கணமொன்றைச் சுணங்கச் செய்விக்கிறது,
வெள்ளியின் தடயமின்றிக் கரைந்து அழிகிறது.

அவன் தாரகைகளுடன் மட்டுமே விடப்பட்டுள்ளான்,
மூர்க்க வெறியுற்று நெடிதாய் தொலைவுற,
இருளடைந்த சாலையின் கற்களை
வெளிப்படுத்தாமல் இரகசியம் காக்கிறது

அவ்விதம் அது கடவுளர்களுடனும்
மற்றும் அரைக்-கடவுளர்களுடனும்
மற்றும் நாயகர்களுடனும்.

-Denise Levertov-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






வாரங்களாக நினது யாக்கையின் கவிதை ,
எனது கரங்கள் நினது யாக்கையின் மீதிருந்து
அறைந்தும் , கடுமையடைந்தும், வழிபாட்டின்
சடங்கில் , தனது போக்கில்
கீழறங்கும் வியத்தலில் கழுத்துத் துடிப்பிலிருந்து
மார்பின்- ரோம மட்டத்தில்
வயிற்றிலிருந்து குறிவரை -
வாரங்களாக அந்தக் கவிதை, அந்தப் பிராத்தனை
எழுதப்படாதிருக்க .
எழுதப்படாதக் கவிதை, நெஞ்சில் விடப்பட்ட வினை, அற்றிருக்க. வருடங்கள் ராட்சதக் கற்களின் வனங்களாக; புதைப்படிவ அடிமரங்கள்
பலிபீடத்தைத் தடுத்து நிற்கிறது.


-Denise Levertov-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






ஒருநாள் பெயர்ச்சொற்கள் சாலையில் கூட்டமாய் திரண்டன,
ஒரு உரிச்சொல்
அவளது இருண்மை வனப்பின் வசீகரத்துடன் பக்கவாட்டில் நடையிட்டாள்.
பெயர்ச்சொற்கள் அனைவரும் ஸ்தம்பித்து போயினர்,
நெகிழ்ந்தனர், மாற்றமுற்றனர்.
அடுத்தநாள் ஒரு வினைச்சொல் வாகனத்தில் வந்து
ஒரு வாக்கியத்தைப் படைத்தது.


ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பொருண்மையை நவில்கிறது - உதாரணத்திற்கு ,
அதுவொரு இருளுற்ற மழைநாள், "ஆயினும் உரிச்சொல் நடையிட்டது,
தூய -இனிமை கனிந்த வெளிப்பாட்டை
அவளது முகத்தில் நினைவூட்டிக் கொள்வேன்
பச்சைய- ஆற்றல் செறிந்த பூமியிலிருந்து
நான் மாய்ந்தழியும் நாள்வரை,”

அன்றி “ சாளரத்தைச் சற்றே அடைத்துவிடேன் ஆண்ட்ரு?”
அன்றி “உதாரணத்திற்கு, மிக்க நன்றி,
சாளரச் சட்டகத்தின் மீதிருந்த
பூக்கள் பெருத்த பிங்க் வண்ணப் பூந்தொட்டி
அன்மையில் தன் வண்ணத்தை இளமஞ்சலாக மாற்றியது,
அண்டையிலுள்ள பாய்லர் தொழிற்சாலையின் அனல் வெப்பத்தினால்.”

இந்த இளவேனில் பொழுதுகளில் வாக்கியங்களும் மற்றும்
பெயர்ச்சொற்களும் நாணல்மீது மொழியற்று தன்னைக் கிடத்துகின்றன.
தனிமையடைந்த ஒற்றை இணைவுப்- பதமோ அங்குமிங்குமாக அழைக்கும் ,
மற்றும் ! ஆயினும் “
ஆயினும் உரிச்சொல் ஏனோ வெளிப்பட்டு எழவில்லை.

-Kenneth Koch-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







பெருநகர் மீது நான் பறப்பதாய் கனவுறுகிறேன்,
புறத்தே தூரமாய் விரித்த கரங்களின் வலிமையுடன்
விழியைக் கீழ் சாய்த்து சாலைகளை நோக்குகிறேன்
அங்கு மக்கள்
துண்டு கண்ணாடியின் மேனியில் சறுக்கி நெளியும்
எண்ணிலடங்காத பாக்டீரியாக்களாக தெரிகின்றனர்.
இங்கு நான் தனியனாயிருக்கிறேன்,
என்னுடன் முரண்படவும் யாருமற்றிருக்கிறேன்,
சப்தங்களற்ற சுதந்திரத்தில்,
வாழ்வின் வன்முறையும் கொந்தளிப்பும் அற்ற
இவ்விடமே எனது நிஜ-வசிப்பிடம்.
மக்களை நான் பாக்டீரியா என விளித்தால்
யாரதை மறுக்க இயலும்?
எனது வாழ்வின் சந்தர்ப்பங்களிலிருந்து
நான் அறிவிக்கிறேன்
மக்கள் என்னவாக இருகிறார்கள் என்றேனோ
அதுவாகவே உள்ளனர்.
நிகழ் கணத்தின் - ஐயம் ஒன்றே;
பறத்தலில் நான் நிலைத்திருக்க வாய்க்குமா.


-David Ignatov-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)














இளவேனில் அணுகி நிகழ்ந்துவிட்டது , ஆனால் தூய்மையோ உடனிகழவில்லை;
மூலைகளில் சேகரமான புழுதியை மனம் துடைத்தெறிகிறது,
நுண்ணிய கறுத்த விதைப் பைகள்
சிலந்தி வலைத் திரையால் போர்த்தப்படிருக்கிறது,
இலையிழைக் கொடிகள், மற்றும் காய்ந்தவைகள்,
தழைக்கும் யாவுமே ஒரினமாய் கூடி நகர்பவைகள் ,
பிரவேசிக்க தகுந்த தருணம், போத்திசெலியின் நங்கையே,
உனது தோளில் ஏந்திய ஒளியுடன்
திடமான காலினை முன்னோக்கிச் செலுத்தி
இப்புனித இடத்தை காத்தருள்கிறாய்.


-Vincent Buckley-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

நான் ஞாபகமடைகிறேன்
ஞாபகம் அடைய அபரிமிதமாய் எவ்வளவு உள்ளன,
எனது நீல கையுறையின் மீது
படர்ந்திருந்த வகைமைக் கோலங்கள்
நாம் பனி-யுவதியை நிர்மானித்த தருணம் .
பனியைப் புசித்ததை நான் ஞாபகமடைகிறேன்.
கறுப்பு வரிகளை அணிந்திருந்த நரி
பாதையின் குறிப்பிட்ட புள்ளியில் கடந்தது .
ஆந்தை
யுவதியின் -வடிவில் செதுக்கப்பட்டுள்ள
வழுவழுத்த கல்மீது சரிந்திறங்கியது.
அந்த முடிவில்லா வரிசையுற்ற -வான் -பருவங்களில்
ஞாபகமடைய வேறு ஏதேனும் உள்ளதா,
நிலங்களைப் பின்னிழுத்துச் செல்லும் இரயில் வண்டியாக?
பிரிந்து போதலையும் மற்றும் வந்தடைதலையும்
நான் ஞாபகமடைகிறேன்:
தகர பெட்டியாக கார் கட்டப்பட்டுள்ளது,
யாவுமே கனிவாக அலறித் தீர்க்கின்றன,
வீடு வந்தடைவதே இல்லை
ஏனெனில்
நாம் ஏறத்தாழ எப்போதும் ஏறத்தாழ அங்கிருந்தோம்.
-Vincent Buckley-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Is it undead people, or undead memories?
For Aren't memories the true ghosts of our lives?
Do they not drive all of us to words and acts
we regret from time to time?
-Stephen King -
Love !
You only existed in my inflamed brain,
Enough !
Stop this foolish comedy
and take notice:
I'm ripping off
my toy armour,
I,
the greatest of all Don Quixotes.


-Vladimir Mayakovsky-







விட்டிற்பூச்சிகள்
ஏதோவொரு மதியத்தின் திரைக்கதவில்
அவைகளாகவே மோதிக் கொள்கின்றன.

ஒரு செந்நிற ஆடை
எனது மனதில் தழலாய் எரிகிறது.


வெளிப்புறம்
மழையில் விடுபட்ட விளக்குக் கூண்டை
ஒரு வேட்டைநாய் கவிழ்க்கிறது.

நான் வெதுவெதுப்பான நாளுக்காக ஏங்குகிறேன்
ஓதமுற்ற உள்ளங்கை
எனது கதகதப்பை அடைய எத்தனிக்கும் போது
ஏதோவொரு ஈரப்பதம் ; என்னை
அஜாக்கிரதையான ஆழத்திற்கு இழுக்கிறது.

இரவு தன் வெல்வெட்டின் மென் - கரையை
என்மீது சிந்துகிறது.

-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







எனது வயிற்றில் ஒரு தங்கமீன் உள்ளது.
அதை அங்கிருக்கும்படி விழுங்கி வைத்தேன்.
அதனிடம் பாடுகிறேன் ,
அது நிலையின்றி சுழல்வதை உணர்கிறேன்
பிரத்யேகமாக அது ;
எனது இசையை உவக்கும் தருணம்-
ஆனந்தக் களிப்பில் பின்பக்கமாக குட்டிக்கரணம்
அடிக்கச் செய்கிறார் பிராம்ஸ்...


-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



நான் இவ்விடத்தவள் அல்ல
காற்றின் வாசனையாய்
எனது கேசம் மணக்கிறது
அதில் நட்சத்திர கூட்டங்கள் நிறைந்துள்ளன
இந்த பூமியெங்கும்
ஆரோக்கியமான அவநம்பிக்கையுடன் நகர்கிறேன்,
எனது நாட்களையும் வினைகளையும்
தூலமற்ற எதிர்-விளைவுடன் அணுகுகிறேன்
ஆனால்
ஒளிகசிந்து மின்னும் ஒரு தீண்டல்
கல்லை மீற இயலும் .


-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





நேற்றிரவு தாரகைகளின் கீழ்
நாம் காதல் செய்தோம்.
நிலாவின் ஒற்றைவிழிப் பார்வை இமையாது
கீழ்நோக்கி நம்மை உற்றுப் பார்க்கிறது.
நமது உடல்களை இருளடர்விலிருந்து திறக்கிறது
ஆடையற்ற வேர்களாய்
நாம் பிணைந்து கூடினோம் .
தொடைகளும் மற்றும் முழங்கைகளும்
கணத்த கனிகளாக
பனிக்கால செஸ்ட்நட்டாய் தகதக்கிறது.
நான் நேசிப்போனது உடல் -
கடியுண்ட வாய் ,
டாங்கரின் அதரங்கள்,
உனது பொன்னிற பள்ளத்தாக்குகளின்
வெளியில் சுதந்திரமாய் அலைவுறக் கூடும்
ஒவ்வொரு நாளும் ஸ்தம்பிக்காமல்
உவந்து மேலெழும் புதிய புலர்வை
உனது புதிர்மை இருத்தலின்
ஆழங்களிலிருந்து கண்டுணர்கிறேன்.


-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



ஆதாமின் சதையற்ற விலாவிலிருந்து
எனது சுய வேட்கையின் நிமித்தம்
கனி வேண்டி விடைபெற்றேன்.

அதன் மணம்- இன்னும்
என் தசைமீது கணத்துக் கமழ்கிறது
எனது இன்மை
அவனது பக்கம் முள்ளாய் உறுத்துகிறது.


ஆனால் இப்போது எனது வயிறு
புனிதமுற்று வலியுணர்கிறது
ஏங்கும் விதைகள்
ஏங்கும் முத்தங்கள்
ஆனால் புறமிருக்கும் சாலையோ சீறுகிறது.

நான் எனது சிறு -பெண்மையினை
ஒரு பழைய தோல் பையில் கட்டி
அடைக்கிறேன்

நேசம் கதவிலிருந்து
சற்றே விலகி அடிபெயர்கிறது

-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






ஒரு குழவியாய் சப்தமிடும் விரல்களுடன்
நான் நடையிட்டேன்,
எண்ணிறந்த பசும்புல்வெளிகளது
ஆடையின் கீழ்- விளிம்பின் நெடுகிலுமாய்
வீடுற்றேன்.


பச்சையத் துணியோ
விரித்து வீசப்பட்டிருக்கிறது
நாணும் பூமி
வானின் திடுக்கிடல்.

குருவிகளின் சடங்குகளைச் செவியுறும்
சமயப் பீடமாய்
மரப்பாளங்களின் மீது அமர்ந்திருக்கிறேன்,
அங்குள்ள டான்டேலியன் பூச்செடி மற்றும் முட்களின் மத்தியிலும்,
சூழும் எளிமையினூடேயும் இறையைக் கண்டறிகிறேன்.

-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




இரவு வீழ்கிறது
இடைவிடாது வீழ்ந்தபடியே தொடர்கிறது
இளவேனில் இலைகள்
வானை சிராய்ப்புறக் காயப்படுத்துகிறது
ஒரு மஞ்சள் நடுக்கம்
படபடத்த முதுகெலும்புடன்
இழையும் பொழுதை நேர்த்தியுறச் செய்விக்கிறது
திறந்த நெஞ்சுடைய நேசத்தவர்கள்
புலர்தல் சம்பவிக்காது தடுத்திட போராடுகின்றனர்
இனித்திருக்கும் கனிகளான
கடைசி நிமிட-முத்தங்களில் இயைந்து லயிக்கின்றனர்
தேனில் தங்களையே தொலைப்பதற்காய் ஆர்வப்படுகின்றனர் -
நேசத்தின் அடர்ந்த ஈர்ப்பில் மிகப்புதிதாய்
கதவுகளின் அப்பாலுற்றிருக்கும் தருணம்
தான் நன்கறிந்த ஒற்றை-அங்கத்திலிருந்து
இலைகள் தம்மையே கிழித்துக் கொள்கிறது
திண்ணமற்ற காற்றின் ஏக-சுதந்திரத்தை உய்த்துணர.


-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





உனது தீண்டலற்றிருக்கிறேன்
மொழியின்மையில்
மெல்ல இடம்பெயரும் பறவைகளைப் போல்
கணப்பொழுதே எனது மார்பின்மீது அகமுறும்
பின்னர் பறந்தெழும்
வெள்ளியாய் மற்றும் துரிதமாய் -
தன் இன்மையுடன்
நிலப்பரப்பை வஞ்சிக்கும்


அதன் பாடலின்றி
அமைதியுறும் எனது சருமம்;
தாகமுற்ற குளமாக பொறுத்திருக்கும் தசை.


-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



Garp drank the beer
and wondered
if everything was an anticlimax..

-John Irving-
(The World According to Garp)





எனது தசை
உனது நாவினில் உருகுகிறது.

எனது மார்பு
உனது மாளா வேட்கையின் கீழ் கரைகிறது.


எனது செவி காற்றாகிறது.

வேர்கள் எனது நாளங்களை மீள் -கோருகிறது.

எனது வயிறு அதன்
சந்திர -இரட்டையில் மறைகிறது


நான் ஒரு மங்கிய ஒளிர்வாய் சுருங்கும்வரை
நீர் எனது விருப்பை எடுத்துக் கொள்கிறது
சிறிதாய் மின்னும் பொறியாகக் குறுக்கப்படுகிறேன்
ஒரு சிறு-கல்லாகச் சலிக்கப்படுகிறேன்.
உனது உள்ளங்கையில் அகமுற்ற
அதற்கோ எண்ணிறந்த சிறகுகள் உள்ளன.

-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





ஆர்ப்பரிக்கும் உயர் ஆழி, ,வென்றெழும் அலைகள்.
குசுகுசுத்த ஏக்கப் பெருமூச்சு உடைகிறது.
தூய்மையின் பூரணமாய் கடல் பறவைகளின் பாரமற்ற பறத்தல்
மலைமுடியில் தோற்றம் காட்டும் பனி.


சூரியன்! வீழும் ஒரு பறவை,
சுவாசிக்க திணறும் கணத்திலும் அதன்
காயமுற்ற சிறகுகள் இன்னும் படபடக்கிறது.
இனிதே வதைக்கப்படட அஸ்தமனம் -
உள்ளுற்ற பிராத்தனையில் உனக்கெனவே
நான் எனது கரங்களை அழுதபடியே உயர்த்துகிறேன்.

ஓ எனது வசிகர நற்கவிதையே,
இன்னும் புலரொளி படரவில்லை,
ஏற்கனவே நீயோ நிலவொளியாய் சுடர்கிறாய்
மலர்கள் உதிர நிற்கும்
நீயொரு வெண் லில்லாக் செடி.

நேசமே! உனது இதயத்தை
எனது மார்பினில் சுமந்திருக்கிறேன், -அது
இந்த ஆழியென என்னுள் கணத்து மோதுகிறது
இடைவிடாது நீளும் ,
என்றென்றைக்குமான உதிரா முத்தமாய்.

-Florbela Espanca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

Tuesday 25 August 2015

ஒளிச்சிற்பம் // குறு நாவல் - Gouthama Siddarthan


9 hrs · Edited · 
1989 ன் மே மாத கோடையின் போதான சுட்டெரிக்கும் அனல் தகிப்பில் எழுதப்பட்ட // ஒளிச்சிற்பம் // குறு நாவல் எதிர் வெளியீடாக இந்தவருடம் வெளிவர இருக்கிறது.
அதிலிருந்து ஒரு கண்ணி..
-----------------------------------------------------------------------------
நான் அந்தப் பெண்ணின் தோற்றத்தைக் குடைந்தேன். இருவர் கண்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க, என் கண்களை அவள் கண்கள் கூச வைத்தன. அவள் நீளமான மூக்குபட்டு மேலும் கூசியது, கத்தியின் கூர்மையைத் தொட்டு விட்ட நடுக்கத்தோடு. எல்லையற்ற விகாசம் பொங்கின இளநகை ததும்பும் இதழ்களில். தகிப்பு ஒளிரும் முகம், வாழ்வின் உன்னதமும் பெண்மையின் பொலிவும் இணைந்த எழில் ரூபமாய் மிளிர்ந்தது. எடுப்பான, வாளிப்பான மார்புகளை மூடிய கச்சை போன்ற ஆடையும் இடுப்புக்குக் கீழே படர்ந்த சிற்றாடையும்.. சூரிய இதழ்களில் நெய்தாளா என்ன..? சௌந்தர்ய சொரூபத்தை உள்ளடக்கிய ஒடுங்கிய இடுப்பின் அபிநயம், இசை நாதத்தை மீட்டியது. கைகால்களில் தொழில் நுணுக்கத்துடன் திரண்ட வெள்ளிக்காப்புகள், தண்டைகள், சங்குக் கழுத்திலே சரிந்திருந்த மணிமாலைகள், கோபுரமாய் உயர்ந்திருந்த கூந்தலில் பொதிந்திருந்த அணிகலன்கள், நீண்ட காதுகளில் தொங்கும் காதணிகள்.. என ஆபரணங்களின் அற்புதம் எல்லையற்ற சிருஷ்டியாய் விரிய என் பார்வைக் கயிறு அறுந்தது..
மெட்டியின் விசும்பல் ஒலி என்னைக் கடந்தபோதுதான் எனக்கு சுயநினைவு வந்தது. நான் சட்டென கேமராவை எடுத்து ஃபோகஸ் செய்து ‘ஏய் ஏய்’ என்று குரல் கொடுத்தேன். அவள் அபிநயத்தோடு திரும்பினாள்.
‘க்ளிக்’
நான் படம் எடுத்ததைக் கண்டதும் ஒரே துள்ளல். மரங்களுக்கிடையே ஒரு மின்னல் வெட்டியது. அவள் மறைந்து விட்டிருந்தாள்.
“ஆதி..யார் அவள்..?” என் படபடப்பு அடங்கவில்லை.
“எனக்கும் தெரியாது..”
“அவள் எப்படி உன்னிடம் வந்தாள்..?”
அருவியின் நீர்ப்பொழிவு, சிரசின் மையத்தில் இறங்க, கண்களை மூடி அப்படியே தியானத்தில் இருந்திருக்கிறான் ஆதி. திடுமென ஒரு விசும்பல் ஒலி. தியானம் கலைந்து போய் கண்களைத் திறந்து பார்க்கிறான். எதிரில் இந்தப் பெண். அவளைப் பார்த்த முதல் கணத்தில் அவள் தன் அம்மாவாய் இருக்கக் கூடாதா என்று ஏங்கினானாம். அவள் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பார்வை தீயாய் உடம்பு முழுவதும் எரிய அருவியை விட்டு வெளியே வருகிறான். இப்போது அவனது குறியில் விறைப்பேற்பட்டு நிற்கிறது. தான் நிர்வாணமாய் நிற்பது அவளுக்கு எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லையென்று ஒரு கணம் உணர்கிறான்.
அவள் தன் கூந்தலை அவிழ்த்து உதறிக் கொண்டிருக்கிறாள். சட்டென அந்த வெளியெங்கும் ஒரு நறுமணம் கமழ்கிறது. அந்த மணத்தின் பால் ஆட்பட்டு ஆழ்ந்து சுவாசிக்க ஆரம்பித்தவுடன் அவனுக்கு போதையேற்படுகிறது. அதன் உச்ச நிலைக்குத் தாவித் திரிந்த கணங்களில் மெல்ல மெல்ல ப்ரக்ஞை தவறுகிறது.
கண்களைத் திறந்து பார்க்கும்போது அந்தப் பெண்ணின் மேல் தான் படுத்திருப்பதை உணர்கிறான் நிர்வாணமாய். அவளும் ஆடைகளற்று நிர்வாணமாய் இருக்கிறாள். அவளது வெற்றுமேனி அந்தியில் தெறித்த மின்னலாய் பளீரிடுகிறது. மின்னல் ஜுவாலையை அவ்வளவு கிட்டத்தில் சந்தித்ததில்லையாதலால் அவன் கண்கள் இருண்டு போக, அவனைப் போதையேற்றிய நறுமணம் அவளுடைய அவிழ்ந்த கூந்தலிலிருந்துதான் வருகிறது என்பதைக் காண்கிறான். போதை மறுபடியும் தலைக்கு எகிறுகிறது. மெல்ல அவள் மீது இயங்க ஆரம்பிக்கிறான். அவளுடைய உதடுகள் சர்ப்பத்தின் நாக்குகளாய் சுழல்கின்றன. திமிர்த்தெழுகின்றன மார்பகங்கள், இயங்க இயங்க அவளது உடம்பில் பொங்கிய தீயின் உக்ரம் ஆதியை சுட்டுப் பொசுக்கி உருகிப் போய் மாம்சத்திரளாய் கரைந்து வழிந்து அப்படியே மாய்ந்து போகிறான்

Lakshmi Manivannan commented on this.
இதை நான் பகிர்ந்துகொள்ளவேண்டும். இருமாதங்களாக தூக்கமில்லாத துயரம். தூக்கத்துக்குக் கண் செருகும்போது ஏதோ ஒரு புற, அகச் சப்தம் எழுப்பிவிடும். கூடவே, வலது மூளை இருபது திரைப்பக்கங்கள் திறக்கப்பட்ட பழைய கணினி போல சூடாகி பெருமூச்சுவிட்டு கழுத்தை நனைக்கும். தூக்கத் தொந்தரவு என்பதைவிட தூங்குவது எப்படி என்பது மறந்தது என்றுதான் சொல்லவேண்டும். மாலை சாய்ந்து இரவு வரும்போதே தூக்கம் குறித்த பதற்றம் தொற்றிக்கொள்ளும். வார்த்தைகள் நிற்காத வார்த்தைகள் ஓடிக்கொண்டேயிருக்கும். என்னை மீறி, என்னுடையதில்லாமல். எப்படி நிறுத்துவதென்று புரியாத யோசனையும் வார்த்தைகளாகவே. காட்சிரூபமே கண்ணுக்கு எட்டாமல். செவிப்புலத்தின் சர்வாதிகாரத்தில் இருந்தேன். என் ‪#‎பிறழ்மனம்‬ கவிதையும் இந்தநிலையில் எழுதப்பட்டதுதான். மருத்துவரின் எந்த மாத்திரையும் பயனளிக்கவில்லை. சூடான பால், பாதத்தில் விளக்கெண்ணெய், வேலைக்காகவில்லை. பிராணாயாமமும் அமுக்கரா சூரணமும் கொஞ்சம் பயனளித்தன. ஆனால், கடைசியில் எனக்கு உதவியது தி.ஜா தான். செம்பருத்தியை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். முதல்நாள் கொஞ்சம் தூக்கம்வருவதுபோல் தெரிந்தவுடன், பகலில் ஒரு மணி, இரவில் தூங்கும்முன் ஒரு மணி, என்று மாத்திரைபோல. நிதானமாக மிக நிதானமாக. ஒருவரி விடாமல். சிலவரிகளில் தேர்போல நின்று. ஒன்றி. தி.ஜா மொழியைப் பற்றி ‘இரகசியம்’ ஒன்று கண்டுபிடித்தேன். அவர் வார்த்தைகளைக் காட்சிரூபமாக மாற்றுவதில் வல்லவர். வாசிக்கும்போதே மொழி காட்சியாக மாற ஆரம்பிக்கும் மனதில். இதனால்தான் போலும், என்னில் நிற்காதிருந்த வார்த்தைகள் நிற்க ஆரம்பித்தன. ஒருவழியாகத் தூக்கத்தின் வசப்பட்டேன், கனவின் வசப்பட்டேன். இலக்கியத்தின் குணமாக்கும் சக்தியை, இறையின் அருளை அனுபவித்த ஒருத்தியின் சாட்சியம் போல, இங்கே சாட்சியம் கூறுகிறேன்.

-David Mourão-Ferreira-,-Nuno Judice--Sophia de Mello Breyner-, -Eugénio de Andrade-, -Vasco de Graça Moura-, Sophia de Mello Breyner Andersen- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்) -Virgil-



சந்தையின் அழுத்தங்கள்;
கவிதைக்காக வார்த்தைகளை கைமாற்றாய் கொடு அல்லது
அசைகளைக் கடனாகக் கொடு ,
அவைகளை நான் சந்தையில் முதலீடு செய்வேன்.
ஆனால், உருவகத்தின் விலையோ கூடியிருக்கிறது,
எளிய படிமங்களுடன் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.
மலிவானது யாருமே விரும்பாதது : ஒரு மலர்?
நாட்டுப்புற வெளிகளின் சுகந்தம் ?
பார்ப்போரிடம் வட்டியேதும் கேட்காமலே,
ஒன்றன்பின் ஒன்றாய் உடைபடும் அலைகள்.
வார்த்தகளின் விலையோ அதிகமாயிருக்க,
திருப்பிச் செலுத்த குறைவிலையாய் இருக்கும்,
சின்னஞ்சிறு வார்த்தைகளைத் தேடி,
நான் அகராதிகளின் ஏடுகளை புரட்டுகிறேன்.
எனவே என்னை ஈடுசெய்யக் கேட்பதில்லை,
ஒரு வரியின் முடிவில்,
அவைகளை சீரற்ற ஒழுங்கில் கிடத்துகிறேன்,
சந்தங்களுக்குத்தான் அதிக பிரச்சனை,
இருமடங்காக எனக்கு கட்டணம் போடுவார்கள்.
எத்தகையத் தள்ளுபடியை நான் நோக்கினாலும் சரி ,
பற்றாக்குறை ஏற்படுமாயின்,
அதனை ஈடுசெய்ய என்னால் இயலாது.
அப்போது;
திருப்பிச் செலுத்துவதற்கான விகிதம் என்னாவாக இருக்கும்.
நான் எனது கைப்பையை திறக்கிறேன்,
எனது பாக்கட்டை உள்ளிருந்து வெளிப்புறம் திருப்புகிறேன்,
கையிருப்பைப் பாருங்கள் அவை காலியாகவே உள்ளன.
குறியீடுகள், சுழியம் , உருவகக் கதைகள் , விற்றுத் தீர்ந்தன;
உருவகங்கள் , ஒன்றுகூட மிச்சமில்லை.
யாரிடம் நான் உதவி கேட்பது?
எந்த கவித்துவ-அவசர நிதி, என்னை மீட்கப் போகிறது?
இறுதியாக , ஒரேயொரு அசை மட்டுமே எஞ்சியுள்ளது-
காற்று
அது என்னிடம் உள்ளது
சுவாசிப்பதிலிருந்து யாராலும் என்னைத் தடுக்கவியலாது.


-Nuno Judice-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




Shanmugam Subramaniam
August 25 at 10:36pm ·



சிலசமயங்களில் இரவுகள் பலநாட்களாய் நீள்கிறது,
சிலசமயங்களில் மாதங்கள் ஆழிகளாகிறது
சிலசமயங்களில் நாம் இறுகப்பற்றும் கரங்கள்
அதேபோல் ஒருபோதுமிருப்பதில்லை . சிலமயங்களில்;
இரவு நம்மை பலவருடங்களாக என்னவாக ஆக்கியதோ -
இரண்டே மாதங்களில் நம்மையே அதில் கண்டடைகிறோம்
சிலசமயங்களில் நாம் ஞாபகமுறுவதாய் பாசாங்கு செய்கிறோம்,
ஆழியின் சுவையை நாம் உணர்வதாய்
சிலசமயங்களில் நாம் ஞாபகமுறுகிறோம்.
குவளைகளின் அடிப்புறம் இரவுகளின் மிச்சங்களை
காண்கிறோமே அன்றி மாதங்களையல்ல.
சிலசமயங்களில் நாம் நகைக்கிறோம் அல்லது அழுகிறோம்,
சிலசமயங்களில் - சிலசமயங்களில் ஒ- சிலசமயங்களில்,
ஒரு நொடிப்பொழுதில்
எத்தனையோ வருடங்கள் சுவடின்றி மங்கி மறைகிறது.


-David Mourão-Ferreira-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)











No day shall erase
you
from the memory of time....

-Virgil-



உடல்கள் பெருவெளியால் விழுங்கப்படுகிறது...........

காற்று வீசிக் கடக்கும் கணத்தில் பைன் மரங்கள் கிரீச்சிடுகிறது,
சூரியன் பூமியை அறைகிறது கற்கள் எரிகின்றன.


உப்புடன் வெண்மை மற்றும் மின்னொளிர் மீன்,
அற்புதம் விளைக்கும் கடற்கடவுளர்கள் தொலைவில் கடக்கின்றனர்.

ஒளிக்கெதிராய் வீசப்பட்டத் துரித வனப் பறவைகள், கூழாங்கற்களின் தூவலாகின்றன,
வானுள் குத்திட்டு உச்சியெழுந்து மடிகின்றன ,
அவைகளின் உடல்கள் பெருவெளியால் விழுங்கப்படுகிறது.

-Sophia de Mello Breyner-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



அங்கொரு சிறிய பூகம்பம் ,
எங்காயினும் நீயனது நாமத்தை சொல்லும் தருணம்,
உனது வாயின் உயரத்திற்கு என்னை உயர்த்துகிறாய்
மெல்ல,
என்னை இலைநீக்கம் செய்வதற்கல்ல.
பதினைந்தே வயதென நடுங்க,
இப்பூவுலகு முழுமையும்
ஒளிப் பிரகாசம்.
ஓ சொல்லில் அடங்கா இளவேனில்.
-Eugénio de Andrade-


(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



நான் ஆக்கப்பட்டுள்ளேன் என நினைத்தேன்,
அவையூடே எனது நேசம்,
ஒளிரும் மலர்சேர்க்கைகளின் சுடர்பந்தம்.


மிருதுவாய் வண்ணமுற்ற மேகத்தைச் சுற்றி
ஓளிவட்டம் சித்திரமாய் ஈர்க்கப்படுகிறது, விதியே
சீறியெழும் உனது இசையால்?
எனது ஆன்மாவை ஏன் கசையால் அடிக்கிறாய்.

என்மீது ஏன் உமிழ்ந்தாய்,
கனவின் இருண்மைப் பொருளினுள்ளே?
அத்தகைய வினாக்களுடன் நான் பித்தாகக் கூடும்.

இக்கணமுதல் கனவுகளிடமிருந்து பின்வாங்கு ,
கற்களுக்கு எதிராய் மெல்லச் சிதறி மறையும்,
நானொரு இன்மையின்- இருண்மைப் பொருள்.

-Vasco de Graça Moura-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





இரவு நேரத்தில் ரோஜா இதழ்களை
எடுத்து நான் கடிக்கும் தருணத்தில்,
தெளிந்த இரவுகளின் அத்துனை நிலவொளியும்,
என் பற்களுக்கு இடையே பிடிபட்டிருக்கிறது.
ஒளிப்பிரவாக மதியங்கள் சுடர்கின்றன,
ஒவ்வொரு இளவேனிலின் நடமிடும் காற்றலை ,
சூரிய அஸ்தமனத்தின் சற்றே கசந்த இனிமை,
மற்றும் ஒவ்வொரு எதிர்பார்ப்பின் ஆனந்தப் பரவசம்.


-Sophia de Mello Breyner Andersen-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

Sunday 23 August 2015


A vague mist hanging' round half the pages:
( Sometimes how strange and clear to the soul,
That all these solid things are indeed but apparitions,
concepts, non-realities.)


-Walt Whitman-






ஒரு அரைநிமிட பிரதிபலிப்பு:
அதை நோக்கி சுடட்டுமா அன்றி போய்விடவா?
இனமறியாக் காரணத்தால்
அந்த விலங்கு தன் விழிகளை
இன்னமும் என்மீது குவிக்க இயலவில்லை;
பிறகு அது
எனது முகவாய் தாடியின் வனமொத்த வளைவைக் கண்ணுற்றது.
சுடுதலின் நிறைவேற்றம் சற்றே எளியதுதான்,
நிரந்திரமாக நிறைவேற்றாது விடுத்தலைக் காட்டிலும்.
தோட்டா துப்பாக்கியிலிருந்து விடுவித்துக் கொண்டது,
அந்த விலங்கு விழிகளை உருட்டியது,
அப்போது, அருகிருந்த, ஆடையற்ற ரோவன் மரம்
தனது கரங்களை வான் நோக்கி உயர்த்தியது.


-Gleb Gorbovsy-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


அக்டோபர் மாதம், மூடுபனியும் மற்றும் மழையும்.
மரங்களும், புதர்களுமற்ற வனவெளியில் படர்ந்திருக்கிறது,
முன்னதாக நேசம் மீளாமையை வினவுகிறது,
ஆயினும் உள்ளத்துள் ஒளிந்திருக்கிறது.


மற்றும் நாம், துயர்மிகு மனநிலையில்,
வனத்துள் பேசாமையில் நடையிடுகிறோம்,
ஒரு அளப்பெரிய புதிர்மையில்
நமது நுண்ணிய இரகசியங்கள் ஒளிக்கப்பட்டுள்ளது.

-Aleksandr Kushner-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

Saturday 22 August 2015

பசி - லட்சுமி மணிவண்ணன்


ஷோபனா

எனது மனதுக்குப் பிடித்த ஷோபனாவின் புகைப்படங்களில் ஒன்று இது.ஷோபனாவும் மனதுக்கு இசைவானவர் எப்போதுமே !
இது யார் எடுத்த புகைப்படம் என்று தெரியவில்லை.எனது சேகரிப்பில் இருந்தது.


ஷோபனாவுக்காக "பசி"என்ற இந்த கவிதையும் சமர்ப்பணம்.அவரின் அழகிற்கும் மேதமைக்கும் இந்த தமிழ் கவியின் வாழ்த்துக்கள்.

-  லட்சுமி மணிவண்ணன்

பசி

அலுவலகப் புணர்ச்சி முடிந்து
வரிக்குதிரையின் கோடுகள்
மிருக வாசனையுடன்
உடலில் மேலெழும்பிய நள்ளிரவில்
காத்திருக்கத் தொடங்கினான் நடுவயதுக்காதலன்.
பணிவிடைகள் ஏற்ற குலசாமிகள் காவல்.
அவர்கள் நள்ளிரவில்தான் குளித்துப்
புத்தொளிர்கிறார்கள்.

குலசாமிகள் கூடக் கொணர்ந்த
களப சந்தன வாசனைகளையும்
இரவில் மனம் தெளிய முடியாத வண்ணங்களையும்
கன்னி யுவதியின் கனவுக்குள் நிகழ்த்த இயலாத துயரம்
பாரமாய் அழுத்த
மணித்துளிகள் சொட்டுச்சொட்டாய்
சுண்ணாம்பு மணத்துடன்
மழைத்துதிர்ந்தன .

மனைவி உறங்கும் அறையிலிருந்து வரும்
மின்விசிறி ஓசை
அபசகுனங்களை விரட்டித் தோற்றது.

கரப்பான்களின் கீச்சிசையோடு
வரிக் குதிரையின் பச்சை இறைச்சியை
நள்ளிரவில்
பசியோடு தின்னத் தொடங்கியவன்
சாத்தான்.

[ அப்பாவைப் புனிதப்படுத்துதல் கவிதை தொகுப்பிலிருந்து - 2009 ]


Friday 21 August 2015

சிறந்த தமிழ் நாவல் “பொய்த்தேவு” – பிரமிள்

சிறந்த தமிழ் நாவல் “பொய்த்தேவு” – பிரமிள்

kanasu2
இன்றைய தலைமுறை வாசகர்களுள் எத்தனை பேர் ‘பொய்த்தேவு’ என்ற நாவலைப் படித்திருப்பார்கள் என்பது சந்தேகம். இதை எழுதியவர் க.நா.சுப்ரமணியம். தமிழின் மிகச் சிறந்த நாவல் என்று இதைத்தான் சொல்லவேண்டும்.
‘பொய்த்தேவு’, யாரோ ‘சோமு’ என்ற அனாதை ஏழைப்பையனின் விபரீத ராஜயோகத்தையும் மனிதனாகி அவனடைந்த வீழ்ச்சியையும் பற்றியது என்றுதான் மேலோட்டமாகப் பார்த்தால் தோன்றும். க.நா.சு. மேலோட்டமான சரளபாவத்தில்தான் எப்போதுமே எழுதுவார். இதற்கு விதிவிலக்குகள் உள்ளன.’அசுரகணம்’ என்ற அவரது இறுதி நாவல் (’கோதை சிரித்தாள்’ என்று இப்போது ஏதோ நீளமாக எழுதி இருக்கிறார். அது க.நா.சு. வின் கவலைக்குரிய நிலையைக் காட்டியதுக்கு மேல் பொருட்படுத்தத் தக்கதல்ல). ‘தோப்புசாலை’ என்ற சிறுகதை (இதை ம.கோபாலன் என்ற பெயரில் ‘எழுத்து’ 1959 இதழ் ஒன்றில் அவர் எழுதி இருந்தார், எழுதியவர் க.நா.சு. என்று தெரியாமல் ‘எழுத்து’ ஆசிரியரிடம் விசாரித்திருக்கிறேன். என்னைத் தவிர வேறு எவருமே இந்தக் கதையைக் கண்டுகொள்ளக்கூட இல்லை என்றார் எழுத்து ஆசிரியர் சி சு செல்லப்பா. ‘தரிசனம்’ என்ற கவிதை (இதுவும் எழுத்துவில் வெளியானதுதான்).
மேற்படி மூன்று துறைகளிலுமே க.நா.சு. ஒரு அப்ஸ்ட்ராக்ட் பாணியில் எழுதி இருப்பது கவனத்துக்குரியது. இதிலும் தேர்ந்த கைதான் தெரிகிறது.
பிரமிள்
‘பொய்த்தேவு என்ற தலைப்பு, ஒவ்வொரு கணமும் மனதில் தோன்றி மறையும் நோக்கங்களைத் தேவர்களாக கடவுளராக ஆக்கி, அவை நம்மை உந்துவதுடன் நமது வீழ்ச்சியுடன் அவை வீழ்வதையும் அர்த்தப்படுத்துகிறது. இந்தப் பயணத்தின் நாயகன்தான் சோமு. நாவலை இந்தக் கோணத்தில் பார்க்கிறபோது ஒரு பாத்திரத்தின் வாழ்வாக மட்டுமல்லாமல் ஒரு சிந்தனை அம்சத்தின் விபரமான சித்தரிப்பாகவும் அதைக் காணலாம். பார்க்கப்போனால் நாவல் சோமுவைப் பற்றியதேதான் என்றே சொல்லிவிட முடியும். மேலோட்டமான விமர்சகர்கள் இந்த இடத்தில்தான் ஏமாறுகிறர்கள்.
ஒரு பெரிய செல்வந்தர் வீட்டில் திருட வந்த தீவட்டிக் கொள்ளைக்காரர்களைப் பிடிக்க உதவியதன் மூலம் அனாதைப்பையன் ’சோமு’ நிலபிரபுத்துவ வட்டத்துக்குள் ஐக்கியமாகிறான். கதையின் இந்த இடம் பலவீனமானதுதான் என்பது உண்மைதான். க.நா.சு.வுக்கு இது நன்றாகவே தெரியும். ஆனால் ‘பொய்த்தேவு’ என்ற தலைப்பையும் மேலே குறிப்பிட்ட அதன் சிந்தனைச் சாயலையும் இங்கே நினைவுகூர வேண்டும்.. தேவு- அதாவது கடவுள் இப்படி ஒரு ராஜயோகத்தைக்கூட மடியில், மண்டையில் போடக்கூடியவர் என்றெ சொல்லலாம். அதாவது ராஜயோகமாக ஆரம்பிக்கின்றவை பொறுப்புகளாகவும் கவலைகளாகவும் அழுத்த ஆரம்பித்துவிடும். சோமுவுக்கு அடித்த யோகம் எவருக்குமே இந்தவிதமாக அடிக்கக்கூடிய யோகம் – அப்படியாகத்தான் முடிகிறது. ‘பொய்த்தேவு’ வை மேற்படி ’பலவீனத்துக்காக’ குறை கூறிய எவருமே கதைக்கு எவ்வளவு தூரம் அத்தியாவசியமான ’பலவீன’மாக இது இருக்கிறது என்று காணவில்லை.
ராஜயோகம்கூட நாள்பட்டதும் மனசின் வெறுமையால் கபளீகரம் செய்யப்பட்டு, மனம் மீண்டும் வறுமை அடையும். நமக்கு சாதகமாக வேலை செய்த ’தேவு’ மீண்டும் பொய் ஆகிறான். இங்கே நாவலின் சிந்தனை அம்சமே கதையின் மேற்படி நிகழ்ச்சியை உருவாக்கி உள்ளதை உணரலாம். பார்க்கப்போனால், முதல் பார்வைக்கு பலவீனமாகப்பட்ட நிகழ்ச்சியே இந்தக் காரணத்தினால் பலமுள்ளதாகி விடுகிறது. தொடர்ந்து சோமு ஒரு ‘பெரிய மனித’னாகும் வழிமுடிவில் அவன் நொடித்து ’ஆண்டி’யாவது. ‘பொய்த்தேவு’ நாவலின் மொத்தமான  தாக்கம் ஒரு பாலைவனத்தின் வெக்கை போன்றது என்று எங்கோ நான் பல வருஷங்களுக்கு முன் எழுதி இருக்கிறேன். இந்தத் தாக்கத்தினை உருவாக்குவது கதையின் பாத்திர அமைப்புகளும் அவை செய்யும் முடிவுகளுடன் அவர்களது பாத்திர அமைப்பும் ஒன்றுபடும் முடிச்சுதான். நாவலை யதார்த்தபூர்வமாக்கும் முடிச்சு இது. இவ்விதத்தில் பாத்திரம், அதன் செயல், நிகழ்ச்சி என்ற முடிச்சை உருவாக்கக்கூடியதுதான் சிறந்த கலைப்படைப்பாக முடியும். வாழ்வின் தவிர்க்கமுடியாத தன்மையை இந்த முடிச்சில்தான் காணலாம்.
நன்றி: அரும்பு, மார்ச் 1993.
- See more at: http://solvanam.com/?p=21689#sthash.YGZzhKv1.dpuf

Wednesday 19 August 2015

Vladimir Nabokov’s Lolita,






Vladimir Nabokov’s Lolita, about an academic named Humbert Humbertwho falls in love with a little girl, was published in the United States for the first time on this day in 1957. It had already been reviewed in The Nation by fiction writer George P. Elliott more than a year earlier.
Lolita was published in English two years ago in Paris, but it has not yet come out in this country…. I suppose our publishers are afraid that Lolita would bring them lawsuits for being pornographic and immoral. And pornographers would, I am sure, find it fairly satisfactory for their lewd fantasies. But only fairly satisfactory, for, likeUlysses before it, Lolita by high art transmutes persons, motives and actions which in ordinary life are considered indecent, into objects of delight, compassion and contemplation. Lolita will turn no reasonable citizen into a pornographer; the indecency in it, like the crime, is always seen with a clarity which does not encourage the fabricating of fantasies….
The book’s chief offense, I guess, is that it presents a sexual pervert as a man to be known and pitied, a man of some essential dignity. Its other offense, perhaps as great, is that it satirizes in delighted detail our adman pandering to childishness, ease, vulgarity, titillation, mindlessness. Yet Lolita is not primarily a satire but a comedy of the exuberant Rabelaisian sort. It is superabundant in verbal energy (Nabokov’s command over American idiom is a marvel greater even than Conrad’s over literary English) and it heaps details of our daily life before us until it forces our wonder even more than our repugnance. It preserves that strange doubleness of comedy which creates in many a discomfort they resist…for you identify with, feel familiar with, see yourself in, a character whom you at the same time know to have performed abominable deeds. It transmutes, as only a great book could, this diseased man and this banal girl into people whom we know so well that they becomes others—not symbols, not types of Man, not aspects of ourselves, but persons towards whom we are permitted and encouraged and at last obliged to exercise our highest charity.
 
LOLZTA. By Vladimir Nabokov. The Olympia Press. Two volumes, OO franca cach.
George
P. ElIhnr 

LOUTA was published in English two years ago in Paris, but it has not yet come out in this country, though Nab okov’s Fnin (a minor work) has rec iently been issued by Doubleday and though the next issue of Doubkday’s
A,wko Review will include a sizeable cixi pt houi Lulia. I uppue oui publ ishers are afraid that Lolis would
, bring them, lawsuits for being pornog raphic and immoral.
And pornographers would, I am sure, find it fairly.satisfactory for thcir lcwd
fantasies. But only fairly satisfactory, for, like Ulysses before it, Lol.iia by high art transmutes persons, motives and actions which in ordinary life are cons idered indecent, into objects of delight, compassion and contemplation.
Lolisa wll turn no reasonable citizen into a pornographer; the indecency in it, like the crime, is always seen with a clarity which does not encourage the fabricati ng of fantasies.
The novel concerns an Americanized
EU1UpV1IL uf iii:ddle yeiirs whose true love is only for’ “nymphets,” certain girls between nine and fourteen. He falls in love with one named Louita, a girl whom we discover to be an altog cthcr unexceptional child of the timca,
ill-parented, traditionless, HollywoodL olita’ has been reviewed by the
U.S. Customs and has
been found adm issible to this country.
Beyond its pedagogic value, which is obviously limited to artists, this is a book of great. beauty for anybody. The pages of T1C ..MauSar Seed Cardc,s have a simple charm which is app roached only’ by certain eighteenth century French masters of draping, themselves of course greatly influenced by the Chinese, even by this very book.. To illustrate her introduction, Miss Sze has chosen some of the most splendid’ examples of Chinese painting and they are perfectly reproduced. It is certainly one of the loveliest honks ever produced
•by the Bollingei Foundation, and alt hough $25 may look expensive here at the head of a review, with the actual book in hand it Jooks very cheap in- deed. I would hate to guess what it cost to produce. Certainly
jt could not be sold at that price without subvention of the Mellon millions. +
ized, the prey of admen, but for whom he conceives a driving passion. In order to bc near Lolita, hc marries hcr widowe d mother. When the mother is killed
+ by accident, he runs off with his stepd aughter, living from motel to hotel all
+ over the country, with one interlude of” private schoçl for her. Although she earlier tempted him sexually and al though when the time came she did the actual seducing, yet his sustained passion and prodigious ‘sexual demands presently repel hr I-ic hçlds her by threat—she has ‘no + money and no one who will take care ‘of her. But he in + turn is the anxicius setvanr of her whims, for he knows that she will escape him (if only by maturing into adolescence). When finally she disappeais, he is + driven to insanity f a time and to dcapair; a’ few years lrcr lie finds her married to a workinginan and pregnant, a most ordinary girl. He discovers from her that a bad playwright and film writer named Quilty had helped her to esape and had then dropped ,her. At the end he murders Quiky.
Obviously the book concerns a dise ased man perlormrng immoral acts.
But the book is no more immoral than
‘it is pornorphr. For we Innw from the foreword that the narrator is a criminal and mentally abnormal, and this knowl edge tempers our reaction to everything he says of himself. Most of all, both Nabokov and the maginary narrator, Humbert Humbert, are wholly unamb iguous about the morality of the acts
and motivcs.
.

despicable and brutal, and turpid, and everything, rn.ais je t’Lc, je t’aim.ais! And there were times when 1 knew how you felt, and it was hell to know it, my little one.
And
indeed he cld love her, for Hum- bert Humbert is’ a man, a whole, comic man. The book’s chief offense, I guess, is that it presents a sexual pervert as a + man to be known and pitied, a man of some essential dignity. Its other off ense, perhaps as great, is that it satir izes in delighted detail our adnan pandcring to childishness, case,, vulg arity, titillation,., mindlessness.
YET
Lolita is not primarily a satire but a comedy of the exuberant RabelaiS ian sort. It is superabundant in verbal energy (Nabokov’s command over American idiom, is a marvel greater even than Conrad’s over ‘literary. tng1ish) and, it , heaps details of our daily life before us until it fnr’i’s our wonder even more than our repugnance. It preserves that., strange doubleness of comedy which creates inmany a discomfort they resist (Are You So Sure?), for you identify with, feel familiar with, see yourself in, a character whom you at the same time know to have performed abominable deeds. + Ii. transmutes, as
Another Important
Public A/mire Press
book: 

Tuesday 18 August 2015

-Federico Garcia Lorca- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



ஆயினும் நானுன்னை அவதியுற்றேன்..................

எனது நெஞ்சின் நேசத்தவளே , மாய்தலில் நெடிதுயிர்த்து,
எழுதப்பட்ட உனது வார்த்தைக்காக
நான் வீணில் காத்திருக்கிறேன்
மற்றும் யோசிக்கிறேன், உதிர்ந்துவீழும் மலருடனிருக்க,
ஒருவேளை நான் நானற்று வாழநேரிடில் ,
உன்னை இழப்பதற்கே விழைவேன்.


காற்று நிலைபேறுடையது; சடமான கல்
நிழலை அறிவதுமில்லை அன்றி தவிர்ப்பதுமில்லை.
அகத்திருக்கும் நெஞ்சிற்கு
நிலவிலிருந்து பொழியும் உறை-தேனின் தேவையிருந்ததில்லை.

ஆயினும் நானுன்னை அவதியுற்றேன், எனது நாளங்களை கிழித்தெறிந்தேன்,
புலியும் மற்றும் புறாவும் உனது இடையினில்,
கவ்வுதலில் ஒன்றுக்கு-ஒன்று போரிட,
மற்றும் லில்லி மலர்கள்.

நிரப்பு, அதன்பின், வார்த்தைகளுடனான எனது பித்தம்
அல்லது
எனது ஆன்மாவின் சாந்த இரவுடன் வாழ்ந்துவிடுகிறேன்
இருளின் கருமையில் என்றென்றைக்குமாய்.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-







பச்சையமான காலையில்
நானொரு நெஞ்சமாயிருக்க விழைகிறேன்.
ஒரு நெஞ்சம்

நன்கு கனிந்த மாலையில்
நானொரு நைட்டிங்ககேலாக இருக்க விழைகிறேன்.
ஒரு நைட்டிங்கேல்,


(ஆன்மா,
ஆரஞ்சின் அதிவண்ணமாய் மாறியது.
ஆன்மா,
நேசத்தின் வண்ணத்தை மாற்றியது)

கூரிய ஒளிவண்ணம் உயிர்த்த காலையில்
நான் நானாகவே இருத்தலுற விழைகிறேன்.
ஒரு நெஞ்சம்.

மாலையின் அந்திமத்தில்
நான் எனதேயான குரலாயிருக்க விழைகிறேன்.
ஒரு நைட்டிங்கேல்.

ஆன்மா,
ஆரஞ்சின் அதிவண்ணமாய் மாறியது
ஆன்மா,
நேசத்தின் வண்ணத்தை மாற்றியது.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-

நீரின் மேலுற்ற
ஒற்றைமைய தொடரலை போன்றது
உனது வார்த்தைகள்
எனது நெஞ்சில்.


காற்றோடு மோதும்
பறவையைப் போன்றது
உனது முத்தம்
எனது அதரத்தில்.

திறந்திருக்கும் நீருற்று
இரவை நோக்கி எதிர்வுறுகிறது,
எனது கருத்த விழிகள்
உனது சருமத்தில்.

உனது
ஒற்றைமைய தொடர்வட்டங்களில் நான் சிக்குண்டேன்.
சனிகிரகம் போல்
எனது கனவுகளில் எழும்
வளையங்களை வலிந்து சுற்றி வருகிறேன்,
நான் முற்றிலுமாக மூழ்கவில்லை ,
நான் உதித்தெழவும் இல்லை.

என் நேசத்தவளே!

ஆனால்; எனது யாக்கையோ
தாவரங்கள் அடர்ந்திருக்கும்
சேறுற்ற கிளையோட்டத்தில் மிதந்திருக்க,
உனது முத்தங்கள்.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-









நான் ஏன் உன்னை ஞாபகம் கொள்கிறேன்
ஒரு மார்ச் மாத மழைநாள்,
கன்னிமாடத்திலிருந்து வெளியே வருகிறாய்?

சிறுவெண் பனிப் பறவையென
உன்னை விளிக்கின்றனர். ஒரு பள்ளிச்சிறுவன்
ஒருமுறை தன்னிடமுள்ள ரோஜாவை தந்தான்.


பின்னர்
உன்னிலிருந்து ஒரு இறகு உதிர்ந்தது
அதைக் கொண்டே
நானிந்த கவிதைகளைச் செய்கிறேன்.
எத்துனை சிறிய பொருள்
நீயோ அதை அறிந்திருக்க வாய்ப்பில்லை!

Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-









இளைஞனே
நீ நதிக்குள் வீழ்ந்துவிடுவாய்!

நதியின் ஆழத்தின் கீழ் ஒரு ரோஜா
உள்ளுற்ற இன்னொரு நதியுடனிருக்கிறது.


அங்கிருக்கும் பறவையை பார்! சற்றே
அந்த மஞ்சள் பறவையை பார்!

எனது விழிகள் நீரினுள்
நழுவி விழுந்துவிட்டது.

நல் இறையே
அவனோ சறுக்கிவீழும் இளைஞன்!

......நானாகவே உவந்து ரோஜாவிற்குள் இருக்கிறேன்.

அவன் நீருக்குள் மங்கி மறையும் கணத்தில்,
நான் புரிந்துகொண்டேன்.
ஆயினும் நானதை விளக்கமாட்டேன்.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்






துயின்றிரு.
அலைவுறும் விழிகளைக் கண்டு அஞ்சாதே.

துயின்றிரு.


பட்டாம்பூச்சி,
வார்த்தை,
கள்ள ஒளி,
சாவித்துவாரத்தின் ஊடே,
உன்னை காயப்படுத்தாது.

துயின்றிரு.

எனது நெஞ்சம் உள்ளதைப் போன்றே,
நீயும் இருக்கிறாய்,
எனது ஆடியே ,
பூந்தோட்டம்,
அங்குதான் எனது நேசத்தவள் காத்திருக்கிறாள்.

இலகுவாய் துயின்றிரு,
ஆனால்
எப்போது கடைசி முத்தம்
எனது அதரத்தில் மடிகிறதோ
அப்போது துயிலெழுவாய்.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)-



என்னையே நான் நின்விழிகளில் கண்டேன்
நினது ஆன்மாவை பற்றி யோசித்துக் கொண்டே.

ஓ அலரியின் வெண்மையே.


என்னையே நான் நின்விழிகளில் கண்டேன்
நினது வாயைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே.

ஓ அலரியின் வெண்மையே.

என்னையே நான் நின் விழிகளில் கண்டேன்
ஆனால் நீ மாய்ந்திருப்பதையும் கண்டேன்.

ஓ அலரியின் வெண்மையே.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






ஒரு லில்லி மலர் உனது கரங்களிருக்கிறது
நான் உன்னிலிருந்து பிரிகிறேன்,
ஓ என் இரவின் காதலணங்கே !
எனது ஒற்றைத் தாரகையின் சிறுசாளரமே
நான் உன்னை கண்டுணர்வேன்.


கருத்த பட்டாம்பூச்சிகளை
பழக்குபவரே!
நான் என் பாதையில் தொடர்கிறேன்
ஒராயிரம் ஆண்டுகள் தொலைந்த பின்னர்
நீயென்னைக் காண்பாய் ,
ஓ என் இரவின் காதலணங்கே !

நீல நடைபாதையினூடே,
கருத்த தாரகைகளை
பழக்குபவரே
நான் எனக்கான பாதையை அமைப்பேன்.
இப்பிரபஞ்சம்
என் நெஞ்சினுள் கச்சிதமாய் பொருந்தும்வரை.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)









How sweet the silent backwards tracings!
The wanderings as in dreams – the meditation of old times
Resumed –their loves,joys,persons,voyages.

-Walt Whitman-





Not for a moment,
beautiful aged Walt Whitman,
have I failed
to see your beard full of butterflies.


-Federico Garcia Lorca-


பொன்னிற இளநங்கை
நீரில் குளித்தாள்
நீர் பொன்னாக மாறியது.

பசும்பாசியும் மற்றும் நிழலில் தோய்ந்த
கிளையும் அவளை வியப்புறச் செய்தது,
அவ்வெண் நங்கைக்கென
நைட்டிங்கேல் பறவை இசைத்தது.


தெளிந்த இரவு வந்தடைந்தது
மங்கலாகவும் கேடுற்ற வெள்ளியுடன்,
மலைகள் ஆடையற்றிருக்கிறது
நீளும் பள்ளத்தாக்கின் கீழ்.

நீர்வழியும் இளநங்கை
நீரில் வெண்மையுற்றிருந்தாள்
நீரோ , ஒரு ஒளிப்பிரவாகம்.

புலர்வு மாசற்று
நூறு பசுக்களின் முகங்களோடு வந்தது
உறைந்த மலர்மாலைகளுடன் ,
விறைப்புற்று மூடப்பட்டிருக்கிறது.

விழிநீர் உகுக்கும் இளநங்கை
தீப்பிழம்பில் குளித்தபடியிருந்தாள்,
பொசுங்கிய சிறகுகளுடன்
நைட்டிங்கேல் பறவை கதறியழுதது.

பொன்னிற இளநங்கை
வெண் ஹெரானாயிருக்க
நீர் அவளை பொன்னாக்கியது.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


எனது தங்க மோதிரம்
ஆடியில்
தொலைந்து போனது,
(நான் சொல்வதின் பொருள் :
என்னிடம் அது எபோதுமே இருந்ததேயில்லை)


நம்மிடம் இல்லாத பொருட்கள்
ஆடியில் தொலைவது வழமைதான்.

எனது மோதிரத்தின் தங்கம்,
சூரியனின் அல்லது டெய்ஸி மலர்களது தங்கமா?

எத்தகையப் பெண்
இதை எனக்களித்தாள்?
என் ஆடியிடம் வினவுங்கள்.

இல்லை...அதுவொரு........ பொருட்டல்ல......
ஆடியேதும் என் வசமில்லை.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்

I want to be a poet,
from head to toe,
living and dying by poetry.

-Federico Garcia Lorca-


காலம்
இரவின் வண்ணங்களில் உறைந்துள்ளது,
நிசப்த இரவு.
அளப்பெரிய நிலாக்களின் மீதுள்ளது ,
நித்தியம்
சரியாகப் பன்னிரெண்டில் அமைவுறுகிறது.
என்றென்றைக்குமாய் காலம்
அதன் ஸ்தூபியில் துயிலப் போயுள்ளது.


அனைத்து கடிகாரங்களும் நம்மை ஏமாற்றுகின்றன,
முடிவாக காலத்திற்கும் கூட
தொடுவானங்கள் உள்ளன.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


மழலைகள் தொலைதூரப் புள்ளியைக்
கூர்ந்து நோக்குகின்றனர்.

ஓளிதீபங்ள் அணைக்கப்பட்டுள்ளன
விழியொளி இழந்த சில நங்கைகள்
நிலவையும் மற்றும் காற்றினூடே மிதந்தெழும்
அழுகையின் சுழல்வட்டங்களை வினவுகின்றனர்.


மலைகளெல்லாம் தொலைதூரப் புள்ளியைக்
கூர்ந்து நோக்குகின்றன.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


நீ ரோஜா வண்ணமாய் இருந்தாய் ,
எலும்பிச்சையாக மாறினாய்.

எனது கரங்களில்
நீயென்ன வண்ணத் திட்டத்தைக் கண்டாய்
உன்னையது அச்சுறுத்துவதாகத் தோன்றுகிறது?


நான் விரும்பிய ஆப்பிள்கள் பச்சை வண்ணத்தவை,
ரோஜாவண்ண ஆப்பிள்களல்ல.....

எலும்பிச்சை ...

பிற்பகல்; நாரையொன்று துயிலில் மூழ்கியுள்ளது,
தனது மற்றொரு பாதத்தைக் கீழே ஊன்றியுள்ளது.

-Federico Garcia Lorca-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)