Monday 5 November 2018

கோணங்கியுடன் ஒரு நாள்: (பாவிகம் : வள்ளலார், பிரமிள் குறித்த பார்வை) by வைர முத்து

https://www.facebook.com/vairamuthu.mech?fref=ufi
வைர முத்து is with Ramesh Isai and Vel Rajan.
November 1, 2017 ·
கோணங்கியுடன் ஒரு நாள்:
(பாவிகம் : வள்ளலார், பிரமிள் குறித்த பார்வை)

டிஸ்கி :
வையம் என்னை இகழவும்
மாசு எனக்கு எய்தவும்
இதை இயம்புவது
எதுக்கு எனில்…
பொய்யில் கேள்விப் புலமையினோர்
மாட்சி தெரிக்கவே !

பாயிரம் :

சென்ற டிசம்பரில்தான் முதன் முதலாக கேரளா பிலிம் பெஸ்டிவலுக்குப் போயிருந்தேன். (அதுவும் திட்டமிட்டெல்லாம் இல்லை. நண்பர் துறையூர் சரவணன் செல்ல முடியாததால் அவருக்கு பதில் அவர் ஐ.டி. கார்டில் ப்ராக்ஸியாக நான் சென்றிருந்தேன்) அங்கே எழுத்தாளர் T. கண்ணன் அவர்களுடன் வாசம். (இதை எழுதத் துவங்குகையில்தான் T.கண்ணன் அவர்களுடன் நடந்த உரையாடல்கள் மற்றும் அங்கேயே பெஸ்டிவலில், T.கண்ணன், கோணங்கி அங்கு வந்திருந்த நண்பர்களுடன் நிகழ்த்திய இரவு உரையாடல் பற்றியும் எழுதத் தோன்றுகிறது. அதில், அங்கு பார்த்த படங்கள் குறித்த அவர்களது பார்வை, ஒரு படத்தை எப்படி அணுகுவது, இலக்கியம் இசை என பல விடயங்கள் பேசினர், புதிதாக உலக சினிமா பார்க்க வருபவர் மற்றும் இலக்கிய ஆர்வமிருப்போருக்கு மிக நல்ல செவி விருந்து அவ்விரவு உரையாடல்)

கோணங்கி வேறு இடத்தில் தங்கியிருந்தாலும் கண்ணனைப் பார்க்க நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தார், முதன்முதலில் அங்குதான் அவரைச் சந்தித்தேன். சரவணனின் நண்பர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன், வாசிப்பனுபவம் உண்டா எனக் கேட்க, இப்பதான் வாசிக்க தொடங்கிருக்கேன், பிரமிள் வாசிச்சிக்கிட்ருக்கேன், அப்புறம் ஏதேதோ சொல்லியிருக்கிறேன்…

கோணங்கி காண் படலம்:

சென்ற வாரம் ரமேஷ் அண்ணன் அழைத்து, கோணங்கிவீட்டுக்கு நானும் வேல்ராஜ் அண்ணனும் போறோம் நீயும் வரியா என்று உடன் அழைத்தார். (இருவருமே பெஸ்டிவலில்தான் அறிமுகம்). ஒரு வாரம் தீபாவளி விடுமுறைக்கு வந்தவன் சரியென்று அப்படியே கோயில்பட்டி போய்விட்டேன்.

கோயில்பட்டி நகர் வளம்:

அப்படி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கோயில்பட்டியை சுற்றிப்பார்க்காவிட்டாலும், அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் ரயில்வே ட்ராக் வழியே (ஒரு கி.மீ. க்கு மேலே..) பார்க்குமிடந்தோறும் நீக்கமற நிறைந்திருக்கும் குப்பை கூளங்களின் ஓரத்திலே/மேலேயே நடந்து சென்றது வரை எழுதலாம். மறுநாள் காலை வாக்கிங் சென்ற பூங்கா வளமும் மரங்களும், அழகுதான். பின்ஒருநாள் வந்து ஊரை சுற்றிப்பார்த்து எழுதிவிடுக்றேன். கோவில்பட்டி கருப்பட்டி மிட்டாயும் காரா சேவும் பற்றி சொல்லாவிட்டால் பெரும் பாவம் வந்து சேரும். அவ்வளவு அருமையாயிருந்தது.

வீட்டிற்குள் நுழைந்த உடனேயே, வாடா வாடா என அடையாளம் கண்டுகொண்டு! உபசரித்து! முதலில் சாப்பாடு என்று உட்காரவைத்தார். வத்தக்குழம்பு, ரசம், பசு’மோர்’! சாம்பார் பொறியல் , நெல்லிக்காய் மற்றும் நார்த்தங்காய் ஊறுகாய் உடன் கூடிய அருமையான விருந்து.

.....

கோணங்கி : போனதடவ வந்தீங்களேடா (ரமேஷ், வேல்ராஜ்)... இரண்டுநாள் வந்து.. வீடுமாதிரி இருந்துட்டுப் போனீங்களே.. அப்பிடிதாண்டா இயல்பா இருக்கனும்... (இரண்டுநாளும் தூங்க, சாப்பிட, எப்போதாவது பேச)... ராமகிருஷ்ணன்(எஸ்.ரா.) வந்திருந்தால் இந்த அறை முழுக்க (இப்பவே) சொற்களால் நிரப்பியிருப்பான். ஆண்ட்டன் செக்காவ் வைப் பார்க்க/பேசப் போகிறவர்கள் பல முன் தயாரிப்புகளோடு செல்வார்களாம், இவரிடம் இன்ன இன்ன கேள்விகள் கேட்கவேண்டும், இப்படிப் பேசி அவரை மடக்க வேண்டும், அவரிடம் பெயர் பெற்றிட வேண்டும்..... இப்படியெல்லாம். நீங்க இயல்பா இருகீங்கள்ளடே அதாம் எனக்கு பிடிச்சிருக்கு. உக்காந்து வம்படியா பேசக்கூடாது.

(நானும் எந்தவித கேள்விகளுடனும் அங்கு செல்லவில்லை, அட சத்தியமா இல்லீங்க)

ஆனால் அன்றைய எங்களது சந்திப்பின் முடிவில் எனக்குத் தோன்றியவை இதுதான்... கோணங்கியும் அவரது புனைவுலகும் வேறுவேறல்ல, அவர் வாழ்வதே அந்த புனைவுலகில்தான் அவர் புனைவுலகில் அற்றைய தினம் அவர் மனதில் உதித்த கதாப்பாத்திரங்கள் தாம் நாங்கள் மூவரும். பாத்திரங்களின் போக்கு என்பது Authorக்கு தெரியாது. அதேபோல அவரை நீங்கள் உங்கள் இஷ்டப்படி பேட்டி காணவோ, அல்லது வாயைக் கிளறவோ முடியாது, அப்படி வந்தாலும் அது தன்னியல்பாய் இருக்காது அல்லது அதன் முழுப் பரிமாணமும் வெளிப்படாது. உங்களால் செய்யக்கூடியது எல்லாம், கேள்விக்கான மூல விதைகள் சிலவற்றை அவர் உலகினுக்குள் தூவலாம். அவற்றுள் தகுதியானவை விருட்சமாய் வளரும் அவ்வளவுதான் நாம் செய்யக்கூடியது. அன்று நாங்கள் அதைகூட செய்ய மெனக்கெடவில்லை அவரே நங்கள் உதிர்ந்த சில சொற்களை எடுத்துக்கொண்டு அதை வளர்த்தெடுத்தார், அது சார்ந்த பல உப கேள்விகளுக்கான பதில்கள் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. (அது அவருக்கு முக்கியமற்றதாக தோன்றியிருக்கலாம்) இது கோணங்கியைப் பற்றிய ஒரு வரையறை அல்ல அற்றைய நாளின் தேவையற்ற Conclusion அவ்வளவே.

ஆசிரியர் கூற்று :
கோணங்கி பற்றிய பில்டப் ஒன்று கிளிஷேவாக இவ்விடத்தில் வரவேண்டும் என்பதால் ஒன்றும் நான் இதை எழுதிவிடவில்லை. ம்க்கும்.
இதை மென்மேலும் சுயபகடி செய்தவாறே எழுதலாம்தான் ஆனால் இதில் பின்னே சொல்ல வரும் முக்கியமான விஷயங்களின் தன்மையை நீர்த்துப் போகச் செய்யுமென்பதால் இத்தோடு என் அதிகப் பிரசங்கித் தனத்தை நிறுத்திவிட்டு, கோணங்கியுடன் நிகழ்ந்த உரையாடலை அப்படியே வைக்கிறேன்.

..........

மாலையில் கொஞ்சம் புத்தகங்களை ஒதுங்கவைதுவிட்டு இரவு உட்கார்ந்தோம். பிரமிள் பற்றியே முதலில் பேசத் தொடங்கினார் (நான் கேட்கமலேயே)

கோணங்கி: பிரமிள் பொயட்ரி ஏற்படுத்துற மூடே தனி இதுதான்..

வேல்ராஜ் : அவர எல்லாரும் ஒரு பிரமிப்பாதான் பாக்றாங்க

கோணங்கி: நம்மப் பொருத்தவரைக்கும் எப்பவும் கூடயே அலைவோம்.

அவரை அனுகுகிறவர்களிடம் பெரிய பொயட் ரைட்டர் அப்பிடியெல்லாம் இருந்தது கிடையாது, கூட இருக்கும்போது கேசுவலா... நீ இருக்கேயில்ல... இந்தா இவ்ளோதான். அவர் மூலமாதான் பெரிய பெரிய ஆட்கள்ட்ட சாதாரணமா பழகுறது வந்தது. நா அவர் பிறந்த இடத்துக்குப் போயிட்டு...

வேல்ராஜ் : பிறந்தது ஸ்ரீலங்கா தானண்ணே .

கோணங்கி: திரிகோணமலை தான். போன வருஷம் அங்க போய் ஒரு இரவு முழுக்க சிகரட்டோட அப்பிடியே..... தண்ணியோட அப்படியே அந்த ஊர்ல அலைஞ்சுகிட்டே இருந்தேன். அந்த இடம் வந்து பிரமிள் இருந்த தன்மை. அந்தத் தன்மையோட இருந்துவிட்டு வந்தேன். ரொம்ப அருமையான இடம்.

அவர் நின்ற, நடந்த இடங்கள எல்லாம் என்னால உணர முடிந்தது. இது பிரமிள் நின்ற இடம், அவர் நடந்த வழித்தடங்கள் என்பதெல்லாம் என்னால் உணரமுடிந்தது, அந்த திரிகோணமலை என்பதே பிரமிள் தான் அவர் தன்மை தான். அனா அவர் இங்க மெட்ராஸ்ல கூப்டா நாம் போய் ஓடி ஒளிவேன். ஆள பிடிசிருவரோன்னு...

வேல்ராஜ் : கடைசியில அவர ஹாஸ்பிடல்ல பொய் பாக்கலையோ?

கோணங்கி: பாத்தேன். என்னப் பாத்தவுடனே அவர் கண்களில் கண்ணீர். அவர் கண்ண தொடசிவிட்டுகிட்டே இருந்தேன். நீ பெரிய பொயட், நீ செய்யவேண்டியத எல்லா செஞ்சுட்ட நீ அழுதா மொத்த சொசைட்டியும் அழிஞ்சு போகும்... அழாத அழாத ன்னு தட்டிக்கொடுதுகிட்டே இருந்தேன். என்ன மாதிரி ஒரு குழந்த இது. நீ வந்து பாக்காம போயிட்டியேன்னு ஒரு இது அந்த அழுகைல. தனக்கான ஆள் வந்தவுடனே அழுதார்ல அதுதான்.. ஏ கை பூரா நனைஞ்சிட்டு. ஒரு மாதிரி...... ஒரு வாதை தான... ரைட்டரா இருந்து பொயட்டா இருந்து தனியா வாழ இருந்ததுல்ல. பிரமிள் பேம்லி மாதிரி நாம, உள்ளுக்குள்ளகூடி நாம இருப்போம், எதோ ஒரு இடத்துல.. அவர் வீட்டு ஜன்னல் கம்பியாவோ, சுவரோட திருப்பத்திலையோ, ஏன் அவர் அறையில இருந்த கல்லுல ஒரு பகுதியா கூட நா இருப்பேன்.

அவர் வீட்டுக்கு கூப்டுவார், நானும் அஜயன் பலாவும் தப்பிசிகிட்டே இருப்போம். ஒரு தரவ கட்டாயம் வரணும்னு சொல்லிக் கூப்டாரு, நானும் அஜயனும் போயிருந்தோம். பேசிக்கிட்டு இருந்தோம், அப்பிடியே டக்குன்னு டேரட் கார்ட(Tarot Card) எடுத்து ஏதேதோ சொல்லிக்கிட்டு இருந்தாரு. நாங்க கொஞ்ச நேரத்ல ஏதேதோ சொல்லி வெளிய தப்பிச்சி வெளியேறிட்டோம். அது அவருக்கு பிடிக்கல. பையங்க யாரும் வந்து இருக்கமாட்றாங்க ன்னு ஒரு இது. அது என்னவோ ஒரு பவர்புல்லான...

வேல்ராஜ் : அவர் பக்கத்துல இருக்க முடியாதுங்கீங்களோ?

கோணங்கி: அப்பிடி இல்ல என்னோட கூச்சமோ, அல்லது என்னோட சுபாவமோ தெரியல அது என்னால அவரோட இருக்க விடல. அவர் சிகரத்துல ஒளிர்ற விளக்கு மாதிரி தள்ளி நின்னுதான் பாக்க தோனுச்சி. அனா கடைசிவரை எம்மேல ஒரு பாசம் இருந்தது அவருக்கு. என்னைத் தவிர இலக்கியவாதிகள் அத்தனைபேரையும் திட்டித்தான் எழுதியிருப்பார். என்ன ஒருமுறைகூட கடிந்ததில்ல. நானும் அப்பிடி நடந்துக்கல ன்னு சொல்லலாம். ஒரு முறை “கோணங்கி என்பதால் மன்னித்து விடலாம்” என்பது போல எழுதியிருக்கிறார். ஒருவேள அவரைவிட்டு தள்ளி இருந்ததால தான் நான் இப்படி இருக்கேன்னு கூட சொல்லலாம். இருந்தாலும் அவர்ட இருந்து அவரோட வார்த்தைகளின் தீவிரத்தை எனக்குள்ள உள்வாங்கிகிட்டேன்.

(ரமேஷ் அண்ணன் ஆம்லேட் கொண்டுவந்து வைக்க..)

பேசிக்கொண்டே. அம்ப்லேட் பொட்டலத்தை பிரித்து வைத்தார்

கோணங்கி: அப்பிடியே ஆம்லேட் எடுத்துக்க.

வை: இல்ல வாணாம்.

ரமேஷ் : ப்யூர் வெஜ்ஜா

வை: ஆமா

ரமேஷ் : இப்பதானா இல்ல எப்பவுமே சாப்டறதில்லையா.

வை: இப்பதான் கொஞ்ச நாளா வள்ளலார் சபைக்கு போனதிலிருந்து.

ரமேஷ் : ஓ ! எதனால.

வை : சபைக்குப் போயிருந்தேன். வள்ளலார் பத்தி படிச்சிகிட்டு இருந்தப்போ,

கோணங்கி: எங்க போன?

வை : இங்க வடலூர் சத்யஞான சபை. வள்ளலார் பத்தி படிச்சிகிட்டு இருந்தேன்.

கோணங்கி: ஓ, அங்க உள்ள போனியா?

வை : வடலூர் சபைக்கு நா போயிருந்த அன்னிக்கு கறி சாப்பிட்டு இருந்தேன்.
ஆனா அங்கே வாயில்ல....

கோணங்கி: “கொலை, புலை தவிர்த்தவர்கள் உள்ளே வரவும்” ன்னு

வை : ஆமா “கொலை, புலை தவிர்த்தவர்கள் உள்ளே வரவும்” ன்னு எல்லா வாயில்கள் லயும் இருந்தது, எனக்கு ஒரு மாதிரி இருந்தது, அதனால அடுத்த முறை அங்க ஒரு மாதம் கறி சாப்பிடாம இருந்து போகலாம்னு போனேன். அப்படியே அது தொடருது.

வேல்ராஜ் : இங்க உலக.... மனிதன.. தத்துவந்தான் இயக்கிக்கிட்டு இருக்கில்ல.

கோணங்கி: வள்ளலார் வந்து ரொம்ப பிரமாதமான ஒரு தன்மை ல. ஆனா நா சபைக்கு போறப்போ தண்ணியடிச்சிட்டு தான் போவேன். நா போய் அய்யா கிட்ட சொல்லுவேன். போய்த்தொலடா ம்பாரு, போய் எனக்குள்ள அங்க ஒரு உரையாடல் நிகழும்.

வள்ளலார் இதுக்குள்ள போக போக அப்பிடியே ஒரு இதுதான்.. திருவருட்பா ஒழுங்கா படி.

வேல்ராஜ் : வள்ளுவரும் புலால் மறுத்தல் பேசியிருக்காருல்ல.

கோணங்கி: வள்ளலார்ட்ட நடைமுறைன்னு ஒன்னு இருந்தது. பசிய வந்து..... லாண்ட்ஸ்கேப் முழுவதையுமே பசியா பாத்தாரு, அப்படி பாத்துதான் உணவ குடுத்தாரு அய்யா. ஆனா எல்லாரும் எதோ அவர் பஞ்சதுக்காக கூழ் ஊத்றதா நினச்சாங்க... அனா அப்படியில்ல. பசி..ன்றத மொத்த யுனிவர்சலா இதா பாத்தாரு... அதுதான் அவரோட பொயட்டரியா மாறுறதும். (என்) நாவல்ல வந்து நாலு சாப்டர் எழுதிருக்கேன். ஆக்ஸ் அய்யர் வள்ளலார் உரையாடல் னு ஒரு சாப்டர் எழுதிருக்கேன். வள்ளலார் சென்னைல விரக்தி அடையராறு, வாழ்க்கைல ஒரு வெறுமை, இங்க கந்தர் கோட்டம், அப்புறம் தங்கச் சாலை பகுதிகள்ள தங்கி இருந்தவரு, ஒரு கட்டத்துல விரக்தி அடைஞ்சு இந்தப் பக்கம் திரும்புறார். திரும்பும்போது. வடலூர் பக்கத்துல மேல்பட்டாம்பாக்கம்ன்னு ஒரு ஊர் , அந்தப்பக்கத்துல ஆக்ஸ் அய்யர்ன்னு... அய்யர் னா கிருத்துவப் புனிதர்கள் (கிருஸ்துவ கல்லூரில, பதிரிக்கு பாடம் எடுக்குற பள்ளியில ப்ரினிசிபல் அவரு) அவர பாக்றார். அங்க யோவான் சுவிஷேசங்கள கேக்றார். அங்க யோவான் சுவிஷேசத்துலதான் ஒளிக் கோட்பாடு வருது. அதுல இருந்துதான் வள்ளலாரோட ஒளிக் கோட்பாடு வருது. ஆறாம் திருமுறை முழுவதும் இந்த ஒளிக் கோட்பாடு தான். அத யோவான் சுவிஷேஷங்கள்ள இருந்து உருவெடுத்தது, இத ஆக்ஸ் அய்யர் வள்ளலாரோட உரையாடல் மூலமா அப்படியே எழுதிருக்கேன். பெரிய அளவுல கிருஸ்துவத்த உள்ளிழுத்துக்கிறாரு.

ஒருமுறை... நா ஒரு பெரிய ஃபாதரோட கண்ணாடி டேபிள்குள்ள வள்ளலார் படம் இருந்தத பாத்தேன். அவர்ட ஏன்யா வள்ளலார் படம் வச்சிருக்கீங்க ன்னு கேட்டதுக்கு அவர் பேசுன விஷயங்கள்.... நா கேட்டுட்டு அங்க மேல்பட்டம்பாக்கம் போயிட்டேன். ஆக்ஸ் அய்யர் சமாதி அங்கதான் இருக்கு. என்னோட “சலூன் நாற்காலிகள்” புத்தகத்த அங்கதான் வெளியிட்டேன். கூட லக்ஷ்மி சரவணகுமார் இருந்தான். நாங்க இரண்டுபேரும்தான் போய் அந்த புத்தகத்த வெளியிடறோம்.
வள்ளலார் தமிழ் ட்ரெடிஸ்னல் கவிதை வழியாப் போயிருந்தா இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. ஒளிக் கோட்பாடு குடுத்து அத பெருசா எடுத்துட்டு போனபின்தான் அது சாத்தியமாச்சு.... அது விவிலியத்துல இருந்து வந்தது.

வை : இது வரலாற்றுல, இருக்குதா?

கோணங்கி: ஆமா இது இருக்குது, வெளியில அத மறசிட்டாங்க. ஜெர்மனியிலிருந்து வந்த protestant கிருத்துவர்கள் கிட்ட இது இருக்கு.

அவர் இத்தனை வகை விஷயங்கள அவர் பொயட்ரிக்குள்ள ஒன்னு சேக்கதுக்கு பைபிளோட உரைநடைகுள்ள புகுந்ததினால தான் இந்த சாத்தியமே. அது இரண்டுமே (Poetry - Prose) கலந்துடுற தன்மை அய்யா கிட்ட இருக்கு.

அவரும் ஒரு வகையில ஒரு லிட்டரேச்சர் ஆள் தான். அதுவுமில்லாம மிகப் பெரிய ரசவாதி.

ஆறாம் திருமுறையோட வள்ளலாரோட சைவம் முடிஞ்சிருது. பிறகு அவரோட மரணம் நிகழ்ந்திருது. அது கொலையோ தற்கொலையோ (எரியூட்டபட்டோ) அப்படி ஆயிருது.

கோணங்கி : தஸ்தாவ்ஸ்கியையும் வள்ளலாரையும் வச்சு எழுதிருக்கேன். இரண்டுபேரும் ஒரே காலத்துல பொறக்குறாங்க இங்கயும் பஞ்சம் அங்கயும் பஞ்சம். “த” ல ரெண்டுபேரையும் வச்சி பெரிய அளவுல டீட்டைல்டா ஒரு சாப்டர் எழுதிருக்கேன். ‘த’ வோட வொர்க் ல பெருசா வள்ளலார் தமிழ்ல பண்ணிய விஷயங்களையும், தாஸ்தாவ்ஸ்கி யோட கரமசாவ் பிரதர்ஸ் ல இருக்கிற சில விவிலிய விஷயங்களையும் வச்சி. இரண்டுலையும் ஊடாடிகிற்றுக்குற விஷயத்த எழுதிருக்கேன். வள்ளலார்கிட்ட பைபிளோட தாக்கம் தான் ஆறாம் திருமுறைய பெருசா உருவாகிருச்சு.

வை : ஆறாம் திருமுறை ?

கோணங்கி: ஆறாம் திருமுறை ல தான் வள்ளலாரோட மேஜர் பொயடிக்ஸ் இருக்கு. அது ரொம்ப முக்கியமானது. அவருக்குள்ள இருக்குற சைவம் இறந்துருது. அதன் பின்தான் யுனிவர்சலா மாறிறாரு.

வேல்ராஜ் : அது என்ன அருட்பெருஞ்சோதி... ?

வை : “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி” ன்னு...

கோணங்கி: பரவாயில்ல நீ உள்ள போயி கொஞ்சம் படிச்சு போனியானா..

வை : நா மொத கொஞ்சம் படிச்சு தான் அங்க போனேன். அதில் பல விஷயங்கள் படிக்கப் படிக்க எனக்கு ரொம்ப ஆர்வமாயிருந்தது, குறிப்பா, சித்தர் மரபு எல்லாம் ரொம்ப க்ளோஸ்ட்ஆதான் இருக்கும். இவர் அதிலுள்ள பல விஷயங்கள உடச்சு பேசுறது, அப்புறம் 'கோயில்' பத்தியும் சபை பத்தியும் எழுதியிருந்தை படிச்சேன்.

கோவில்கள் என்பது தத்துவ குறியீடுகள் தான. வள்ளலார் ஒளிக் கோட்பாட உருவாகுறார். அது சைவ கோட்பாட்டை விடவும், உலகின் வேறெந்த இறைக் கோட்பாட்டிலும் கண்டடயாததாக கருதுகிறார். அவர் தொடக்கத்தில் சைவ மரபின் வழி வந்தாலும், பின்னர் அவர் கண்டுணர்ந்தது இதுவரை எந்த தத்துவத்திலும் சொல்லப்படலைன்னும் அதுதான் உச்சபட்ச/அறிவியல் தத்துவம்ன்னும் உணர்றார். சிதம்பரம் கோவில் கூட இத்தகைய ஒரு தத்துவ குறியீடுதான். அது சைவ சித்தாந்தத்தின் ஒரு முழுமையான குறியீட்டு வடிவுன்னுதான் சொல்லணும். வெட்டவெளி ன்ற தத்துவந்தான், சிதம்பரம் கோவில் இத ஒரு குறியீடா வெளிப்படுத்துது. அதுமட்டுமில்லாம அத எப்படி அடையுறதுன்னும் அதே கோவில் அமைப்பிலேயே குறயீடுகளா உருவாகியிருக்காங்க. வள்ளலார் தன்னுடைய ஒளிக் கோட்பாடு சைவத்தின் கோட்பாடு இறுதியானதில்லன்னும் அதையும் தாண்டிய பல படிநிலைகள் இருக்குதுன்னும் அத்தத்துவத்தின்படி சிதம்பரம் கோவில்ல சில மாறுதல்கள் செய்யணும்ன்னு வள்ளலார் பரிந்துறைக்கிறார். அத சிதம்பரம் தீக்ஷிதர்கள் ஏத்துக்கல. அதனால அவரே ஒரு சபைய நிர்மாணிக்கிறதா முடிவு செஞ்சு அத்தத்துவங்கள அடிப்படையா வச்சு வடலூர் சபைய கட்டுறார். போன வருடம்தான் சிதம்பரம்(பொற்சபை) போய்வந்தேன். ஆனா இதப் படிச்சவுடனே வள்ளலார் உருவாக்கிய 'சபை' எப்படி இருக்குதுன்னு பார்க்க ஆவலா இருந்தது அதனாலதான் முதலில் அங்க போனேன்.

கோணங்கி: நீ போனது தமிழ்ல ஒரிஜினல் ஆத்திகர்களோட பாத! (வை : !!!!). வள்ளலார் நாத்திகர் ல மேஜரான ஆள்ன்றது இங்க ஒரு பயலுக்கும் தெரியாது. வள்ளலாருக்கு பிறகு ஞானியாரடிகள் அவருக்குப் பிறகு பெரியார், அவருக்குப் பிறகு புதுமைப் பித்தன் அவருக்குப் பிறகு பிரமிள். பிரமிள் வள்ளலார் நிறைய சம்மந்தம் இருக்கு. வள்ளலாரோட பொயடிக்ஸ் பவர்ன்றது இன்னும் பிரமிள் ஒரு ஆளுக்குதான் இருக்கு. மத்தவங்க எல்லாம் உருகி உருகி எழுதுறது... எல்லாம் தேவாரம் தான். தேவதேவன் வந்து தேவாரம். தேவதச்சன் வந்து திருவாசகம். வள்ளலார் தன்மை வந்து அதிகம் அறியாமலே பிரமிள் கிட்ட பொயட்ரி ல இருக்கு. அதனால இப்பிடி இருக்கு வள்ளலார், ஞானியாரடிகள், பெரியார், புதுமைப் பித்தன், பாரதில கொஞ்சம் வருது, அடுத்து பிரமிள் அப்புறம் நாமல்லாம். இதுல பிரமிள் முக்கியமான பாயின்ட். அதனால அந்த சுழியில, கவிதைய விடவும் அவர் நின்ற இடத்தினூட சுழி வந்து நம்முடைய தமிழர்களோட மேஜர் இடம்.

வேல்ராஜ் : தமிழ் லிட்டரேச்சர் சமூகத்திலேயே பிரமிள் ஒரு முக்கியமான ஆளா ண்ணே

கோணங்கி: பெரிய ஆள் னா இந்த மாதிரி ஒரு பெரிய இடம் இருக்குல்ல அதுல அய்யாதான். அந்த இடம் வள்ளலாருக்குதான்.
வள்ளலாருக்கு ஈக்வலா மாடர்ன் ரைட்டர் யாரையும் சொல்லவும் முடியாது. வள்ளாருக்குள்ள இருக்குற பொயட்டிக்ஸ் கரை காண முடியாத ஆழம். அவர் எடுத்துகிட்ட அந்த காலமும் அவர அந்த இடத்துல கொண்டு போய் விட்ருச்சி. கிறிஸ்டியானிட்டியோட வரவும். மேல்பட்டம்பாக்கம் ஆக்ஸ் ஆய்யரோட சந்திப்பும் முக்கியக் காரணம்.

ஆக்ஸ் ஆய்யருக்கு என்ன பிரச்னை வருதுன்னா. அவர் கிருத்துவ மாணவர்களுக்கு பேராசிரியரா இருந்து கிருத்துவ கல்லூரி நடத்துறார். அதுல ஒரு வெள்ளாள கிருத்துவ மாணவன்... பஞ்சமர் வீட்டுல பாலமுது ஒரு டம்ளர் அருந்தினால்தான் அவனுக்கு கவுன் அணிவிக்கப்படும். (கிருஸ்துவ பாதிரியாரா ஆகுறதுக்கு) அதை அம்மாணவர் அருந்த மறுத்தால் வெறுப்புக்கொண்டு முதல் சமத்துவபுரத்தை மேல்பட்டம்பாக்கத்துல ஆக்ஸ் அய்யர் உருவாகுறார்.

வள்ளலார் காலத்துல, அது அவர பாதிச்சி அவர் சமய சன்மார்க்க சங்கமா உருவாகுரதுக்கு ஆக்ஸ் அய்யர் மிகப் பெரிய தூண்டுதல். இத வரலாற்றுல மறசிட்டாங்க. அய்யா வரலாற்ற மட்டும் எடுத்டுக்கிடல, விவிலியத்த கரைகண்டு படிச்சிருக்கார். அதுதான் முக்கியம்.

தென்னாட்டின் புத்தர் வந்து அய்யா தான். சந்தேகமே கிடையாது.

நா குடிச்சிட்டு போவேன் (வடலூர் சபைக்கு) போககூடதுதான். பெரியார் போயிருக்காரு. குடிக்காம போயிருக்காரு. சுத்தி சுத்தி பாத்திருக்கரு “கொலை புலை தவிர்த்தல் வேண்டும்” ன்னு இருக்க, மாமிசம் சாப்ட்ருக்காரு., அப்பிடியே உள்ள போகாமலே வெளியே வந்துட்டாராம். அந்த அளவுக்கு மரியாதை உள்ள ஆள். பெரியார் சாதாரணமான ஆள் கிடையாது, சும்மா இங்கிதமான ஆளு. அவர் பிராமணீயத்தை அடிச்சவர்ன்னு எதிர்தார்ன்னு எதோ மொட்டையான ஆளுன்னு நினைச்சிகிட்டு இருக்காங்க. பெரியார் தான் வள்ளலார். இத யாரவது சொல்லிருகாங்களா. அம்மா வயித்துல பிறக்கல, ஆறாம் திருமுறையில் சைவம் இறந்த அந்த விநாடியில் அயோனியாக பெரியார் பிறக்கிறார். அதனால் தான் தமிழ்நாட்ட / தென்னிந்தியாவ அழிக்க முடியாம இருக்கு. இந்த பெரிய இனம், மரபு அது இதுன்னு வெச்சிருக்கதனால, வள்ளலார் மாதிரி வந்து ஒளி பாச்சுனவங்க வந்து பாய்ச்சிரதுனால. பிரமிள் பொயட்ரிய வந்து கல்குதிரை ல பாய்ச்சின மாதிரி.

வடலூர் லாம் வந்து தொடர்ந்து போகணும். நா தொடர்ச்சியா போயிட்டு வந்துகிட்டு இருந்தேன்... இப்போ இல்ல... தொடர்ந்து அவர எழுதிகிட்டே இருக்கேன். அவரோட எல்லா புத்தகங்களும் இருக்கு. எல்லா எடிசனும் இருக்கு. அய்யா புத்ககம் கிடச்சா உடனே வாங்கிருவேன். பாலகிருஷ்ணன் பிள்ளை எடிசன் வரைக்கும் எங்கிட்ட இருக்கு, அவரோடதெல்லாம் ரொம்ப நேர்த்தியா போட்ட சின்ன சின்ன புக்.

நா.சஞ்சீவிட்ட இருந்த வள்ளலாரோட கம்ப்ளீட் தொகுதி இருக்கு. அவர் மருமகன் ஒரு “கோட்ருக்கு” ஒரு புத்தகம் ன்னு வித்துக்கிட்டு இருந்தாரு, அவர்ட இருந்து நூறு ரூபாய்க்கு வாங்குனேன். ஒரு ரைட்டர் போயிட்டா எப்பிடி நிலம பாரு. ஒரு நூறு புத்தகங்களாவது வள்ளலார் புக்கு என்கிட்ட இருக்கு. முழுவதும் பெரியதா வள்ளலார் பத்தி பெரிய நூல் எழுதணும் (ஆச)இருக்கு, நாம எழுதுறதுக்கு (வயதும்) பத்தும். அத ஓரளவுக்கு “த” வுல எழுதிப் பாத்தோம்.

அவரோடது பக்தி இயக்கம் கிடையாது, அதுதான் முக்கியம். பக்தி இயக்கமா வச்சிகிட்டு இருக்காங்க. வள்ளலார் கிரிஸ்டியானிட்டிக்கு அருகில...

அதாவது...வீரமா முனிவரோட பரமார்த்த குரு கதைகள் வருது. கதை வடிவம் மொத அங்கதான் வருது. விவிலிய மொழிபெயர்ப்புகள் வருது. ஆறுமுக நாவலரும் அத பண்றாரு. அவர் வள்ளலாருக்கு எதிரான ஆளு. அவர் சநாதன சைவம். அந்த சைவம் வள்ளலாரா மாறியிருந்தா அங்க(இலங்கைல) யாரும் செத்துருக்க மாட்டாங்க. இலங்கை ல வள்ளலார் இல்லவே இல்ல ஏன்னா ஆறுமுக நாவலர் தடுத்துட்டாரு. அங்க வள்ளலார கும்புடறவங்க மருந்தளவு தான் இருப்பாங்க. சைவம் தான் அங்க இருந்தது அது நாவலர் வழியா வந்தது.

வள்ளலாரோட இடம் சர்வதேச இடம். அவரு பல்சமய கோட்பாட முன்வைக்கிறார். அவர் ‘சபை’ய உருவாக்கும்போது மடம் ன்றது, பௌத்ததுல இருந்து எடுத்துக்கிறாரு, சமணத்துல இருந்து கொல்லாமைய எடுதுக்கிறார், முக்காடு போடறது இஸ்லாம் ல இருந்து எடுத்துக்கிறாரு, உணவளித்தல் வைணவத்துல இருந்து எடுத்துக்கிறாரு.

உரைநடைக்கும் கவிதைக்கும் பெரிய ரசவாதத்த அவர் பண்ணதால புதுமைப் பித்தன் பிறந்தான். வள்ளலாரோட வேட்டி நூல்ல இருந்து புதுமைப்பித்தன் வாரான். பிரமிள் வள்ளலாரோட ‘அக’ப்பரப்புல இருந்து வாரான், “ஸ்ரீ லங்காவின் தேசியத் தற்கொலை” ன்னு புஸ்தகம் எழுதுறான். ரொம்ப ரேர் காம்பினேசன். அவர் பொயட்டிக்ஸ படிக்கறதுக்கு நீ ஒரு அஞ்சாண்டு எடுத்து நிதானமா வொர்க் பண்ணா அது மெல்ல தன்ன வெளிப்படுத்தும். ப்யூச்சர் எல்லாத்தயும் அய்யா அதுல வச்சுட்டு போயிருக்காரு. நம்முடைய ப்யூச்சரே வள்ளலார் தான். வள்ளலார் ஒன்னும் பழைய ஆள் கிடையாது.

தஸ்தாவ்ஸ்கி க்கும் கனவு வருது, இங்க வள்ளலாருக்கும் கனவு வருது, அது இரண்டையும் வச்சி காம்ப்பேர் பண்ணி, தஸ்தாவ்ஸ்கி கரமசோவ் சகோதரர்கள் ல டிமிட்ரி யோட கனவுகளையும், வள்ளலாரோட கனவுகளையும் பக்கம் பக்கமா வச்சு எழுதி இருக்கேன்.” த“ நாவல் வந்து தமிழுடைய டீப் சீக்ரட் ல எப்படி சநாதனத்த விட்டு உதறி வெளியேறி கடவுள் சமயமற்ற ஒரு வெளிய முன்வைத்து நாகர்கள நோக்கி திரும்புதுன்றத, வள்ளலார அகப்பரப்பா வச்சி எழுதியிருக்கேன். ரஷ்யாவுல தாஸ்தாவ்ஸ்கி அங்க கிருத்துவத்துல உள்ள போறதும் வெளிய வாரதுமா இருந்தாரு, உள்ள போறது மறுக்குறது, உள்ள போறது மறுக்குறதுன்னு இருந்தாரு. டால்ஸ்டாய் வந்து முழுக்க ஆதரிக்கிறது தான், ஒருக்கா மறுத்து அப்புறம் முழுக்க ஏத்துகிட்டார்.

வள்ளலார் காலத்துல வந்து சநாதனர்கள் பலபேர் ஏகப்பட்ட பிரச்சன பண்ணி எதோ ஒரு வகைல அவர ஒழிசுக் கட்டுனாங்க. உள்ளூர் காரங்களே அவர வெள்ள வேட்டி சுத்திட்டு போறதப் பாத்து கொக்குப் போறது கொக்குப் போறது ன்னு நேசவாலர்களெல்லாம் நக்கல் பண்ணது எல்லாம் வேதனைப்பட்டு கடிதம் எழுதிருக்காரு அய்யா.

ஐயாவுடைய மொழிங்றது முழுக்க பொயட்டிக்ஸ் தான் அதனுடைய ஆழம் காண முடியாது, சைவத்த மொத்தமா உள்ள வாங்கி பௌத்தத்த உள்ள வாங்கி கிருத்துவத்த உள்ள வாங்கிய இணைச்ச ஒரு ரசவாதி. எனக்கு அந்த பாதர்ட்ட இருந்த வள்ளலார் படம் தான் இவ்வளவையும் சொல்லிக்கொடுத்தது.

வள்ளலார் ஒருத்தர்தான் மொத்த சமய பண்பை, சமயத்துடைய அழுத்தங்களையும் ஒரு விநாடியில கட் பண்ணி அது அல்லாத ஒரு உலகத்தை வந்து ஆறாந்திருமுறை ல கண்ட மிகப் பெரிய இடம் வள்ளலாரையே சாரும். சமயமற்ற தன்மைய அய்யா வச்ச உடனே சடர்ன்னு ஞாநியாரடிகள் இத பிடிச்சிகிறாரு, அவர் வீர சைவ மரபைச் சேர்ந்தவர், அவர் ஆங்கிலம் சமஸ்கிருதத்துலயும் பெரிய மாஸ்டரா இருந்திருக்காரு அவரைத்தான் பெரியார் தன்னுடைய குருவா மானசீகமா...
தன்னோட முதல் பத்திரிகைய அவர வச்சு தான் வெளியிடுறார்...

இதுக்கு மேல சொன்ன உங்களுக்கு போர் அடிக்கும் ன்னு இத்தோட நிப்படறேன். எழுதணும்னாலும் எழுதலாம்.

கிளம்பும் நேரத்தில் கோணங்கி அவருடைய "உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை" புத்தகம் கொடுத்தார் எழுத்தாளர்களிடம் புத்தகத்தில் கையொப்பம் வாங்குவதை நானே கேலி பேசுவேன். அது தேவயில்லை என்பது என் பார்வை. ஆனாலும் ரமேஷ் அண்ணன் கையொப்பம் வாங்கியதால் நானும் வாங்கினேன். அனாலும் முந்தைய நாள் முழுவதும் நடந்த உரையாடலின் சாரமாக அவர் எழுதித் தந்த வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தது.

காலையில் கிளம்பும் வேளையில் கூத்துக்கலைஞர் ஒருவர் வந்தார். கோணங்கி வீட்டின் பின்புறம் அமைத்திருந்த நாடகம் நிகழ்த்தும் இடத்திற்கு அழைத்துசென்று கொஞ்சம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அதில் வேல்ராஜ் அண்ணன் எடுத்த ஒரு புகைப்படத்தில் பின்னல் இருக்கும் பையன் பார்க்கும் பார்வை அப்படத்தை வேறுதளத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது. சில படங்கள் உங்கள் பார்வைக்கு.