Monday 29 July 2019

#வாராணசி - #பா.வெங்கடேசன் :: Facebook post - T N Ranjith Kumar

T N Ranjith Kumar is with Ba Venkatesan.
7 hrs ·
#வாராணசி - #பா.
வெங்கடேசன்
("I am in the Aleph, the point at which everything is in the same place at the same time"
-Paulo Coelho, The Aleph.)
கதை நிகழும் களம் பற்றிய நேரடி அனுபவம் அல்லது கற்பனை மூலம் சாத்தியப்படக்கூடிய அறிதல் மூலமாக, கண்டிராத புனைவுலகின் தோற்றத்தையும் அதன் இயக்கவிதிகளையும், கதாபாத்திரங்களின் தன்மைகளையும் உணர்ந்து கொள்ளும் வகையில் தத்ரூபமாக விவரித்துச் செல்லும் கதைசொல்லல்களில், வாசகன் கதையில் வலம் வரும் கதாபாத்திரங்களுள் ஒன்றாக தன்னையோ அல்லது கதாபாத்திரங்களின் இயக்கங்களையும் மனவோட்டங்களையும் கதை நிகழும் களத்தில் இறங்கி பின்தொடரும் ஒரு கனவுலக ஜீவியாகவோ ப்ரக்ஞைக்கு அப்பாற்பட்ட பரிமாணத்தில் உருவகித்துக் கொள்தல் இயலுகிறது.
இத்தகைய உரு நிலையில் காலம் கதையோடு ஒன்றிணைந்திருக்கும் வாசகர்களான நமக்கும் கதைக்குமிடையேயான சங்கேதப் பரிமாற்றங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. கதையின் முழுத்தொடர்ச்சியையும் கொண்ட ஒட்டுமொத்த வரைபடத்தையும் காலத்தின் பிரமாண்ட கண்கள் அரவமின்றி ஒரே கணத்தில் கண்காணித்தபடி இருக்கின்றன. கதைக்களத்தின் கண்கூடான அனுபவங்களில் மட்டும் பிரக்ஞையின் பரிபூரணத்தை செலுத்தும் நமக்கு சமீபத்திய நிகழ்வுகளே பொருட்படுத்தத் தகுந்ததாக ஆகின்றன. சமீபத்திய சீர்மை வாய்ந்த நிகழ்வின் தடம் புரள்தலின் தொலைதூரத்தை ஒரே கணத்தில் கவனிக்கும் காலத்தின் கண்களுக்கு நமது நகர்வு எறும்பு வரிசைகளைப் போல சிறுத்துத் தோற்றமளிக்கின்றன.
பா.வெங்கடேசனின் வாராணசி கண்முன் காணும் ஒவ்வொரு நிகழ்வையும் அதன் பிரதி நிகழ்வுகள் நடைபெற்ற காலத்தின் வெவ்வேறு தளங்களையும் ஒருசேர புலப்படுத்துகிறது. அதன் மூலம் ஒரே கணத்தில் காலத்தின் பெரும்நீளத்தையும் ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளையும் காணும் சாத்தியம் வசப்படுகிறது. காலம் பின்னிருந்து முன்னோக்கி நகராமல் இங்கு கடந்த காலமும் நிகழ் காலமும் ஒன்றை ஒன்று எதிர் துருவமாகக் கொண்டு பாய்கிறது. இரண்டு துருவங்களும் ஒன்றை ஒன்று இடைவெட்டுகின்றன, ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைகின்றன, ஒன்றின் துவக்கம் பிரிதொன்றின் முடிவாக வெளிப்படுகின்றன. கதையின் துல்லியமான துவக்கமோ முடிவோ இன்னதென வரையறுத்துக் கூற இயலாதபடி ஒரு முடிவு இன்னொரு நிகழ்வின் துவக்கமாக எல்லையற்ற புதிர்வடிவ வட்டச்சுழல் அமைப்பை உருவாக்குகிறது.
வாராணசி வாசகர்களாகிய நம்மை கதைக்களத்திற்குள் நேரடியாகக் கொண்டு வந்து இறக்குவதில்லை; கதையின் போக்கை அனுமானித்துப் பின்தொடரும் ஒரு ஆவியுரு போன்ற திட்பமற்ற உரு ஸ்தானத்தையும் நமக்கு வழங்குவதில்லை. மாறாக பா.வெங்கடேசனின் கற்பனை வன்மை தொடக்கமும் முடிவுமற்ற காலத்தின் பெருவெளியில் இறந்த காலமும் நிகழ்காலமும் ஒரு சேரக் காட்சியளிக்கும் உயரநிலையில் மிதந்து கொண்டிருக்கும் புலனறிதலுக்கு அப்பாற்பட்ட பரிமாணத்திற்குள் நம்மை பிரசன்னப் படுத்துகிறது. காலம் என்ற சாம்ராஜ்யத்தின் ஒரு அங்கத்தினனாக நம் அகம் மற்றும் புற இருப்பைத் தகவமைக்க எத்தனிக்கிறது பா.வெங்கடேசனின் சீரிய கவனிப்பைக் கோரும் வாக்கியக் கட்டமைப்புகளின் உத்தி.
ஒன்றின் மீதே ஒன்றாக படியும் வெவ்வேறு நிகழ்வுகளின் ஒற்றுமையான ஆதாரச் சாத்தியங்களை இயல்பு மீறாத யதார்த்தமான துருப்புகளைக் கொண்டும் அதேசமயம் துருப்புகளை கோர்க்கும் செய்முறை வித்தையில் மாயாஜாலத் தொனியுடன் வேயப்பட்ட அசாதாரணமான புனைவுலகை காலத்தின் கண் கொண்டும் நம்மைப் பார்க்கச் செய்கிறார் பா.வெங்கடேசன். காலத்தின் கண்களை அணியும் நமக்கு முன்னால் கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளின் நேரடித்தன்மைகளை விட அவர்கள் ஒவ்வொருவருக்குமிடையே நிறைந்து பரவியிருக்கும் நிறமற்ற பிடிபடாத காலத்தின் புகைமூட்டம் சூழலின் பிரத்யேகமாக உருவெடுக்கிறது.
காலத்தின் புகைமூட்டச் சூழலில் தோன்றி மறையும் வெடிப்புப் புள்ளிகளாக கதாபாத்திரங்கள் தோன்றி மறைகிறார்கள். இறந்த காலத்தின் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தின் நிகழ்தல் இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகான நிகழ்காலத்தின் நிகழ்தலோடு வேறுபாடுகள் இன்றி ஒன்றின் மீது ஒன்றாகப் படிகின்றன. நிகழ்வுகளின் பிரதிகளாக இரு காலத்தின் சம்பவங்கள் ஒன்றை ஒன்று ஒத்திருக்க கதாபாத்திரங்களின் உணர்வலைகள் ஒருவரிலிருந்து இன்னொருவரின் நினைவுகளை மீட்டெடுத்தபடியும் நினைவுகளே நிகழ்வுகளாக தோற்றம் கொண்டபடியும் விந்தைகள் நிகழ்கின்றன.
வீட்டை விட்டு வெளியேறிப் போன பெரியம்மாவைத் தேடி இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு தந்தை விஸ்வநாதனுடன் வாராணசிக்கு வரும் இதாவின் வழியாக இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வாராணசியின் அதே படித்துறைக்கு வந்து நின்றிருந்த அவளது பெரியம்மா aaaராவின் எதிர்காலமும், aaaராவின் இறந்த காலம் வழியாக இதாவின் நிகழ்காலமும் காலம் காலமாக உயிர்த்துறப்பின் நிலமாக அதன் தொன்மத்தை தாங்கி நிற்கும் வாராணசியின் பின்புலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மள்ளர் சமூகத்தைச் சேர்ந்த படகோட்டியான சோனுவுடனான இதாவின் சந்திப்பின் வழியே, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு aaaரா புகைப்படக்கலைஞனான லோத்தரை சந்தித்த நிகழ்வுக்குள் காலம் உட்புகுந்து உருமாறுகிறது.
"எத்தனை வினோதங்கள் நிறைந்த வாழ்க்கையை யதார்த்தம் என்கிற பெயரில் எத்தனை தட்டையான கலையாக்கிக்கொண்டிருக்கிறோம் நாம்" (பக்கம் - 148) என்றொரு வாக்கியம் வருகிறது. கதைசொல்லலின் மையச்சரடாக ஒட்டுமொத்த நிகழ்வுகளுக்கும் பின்னணியாக எதிரொலிக்கிறது இந்த வாக்கியம்.
ப்ரெஞ்சு காலாண்டிதழ் ஒன்றில் வாராணசியின் அஸி கட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு நிர்வாணத் தோற்றத்தில் எடுக்கப்பட்டு வெளியாகியிருக்கும் இளவயது பெண்ணின் நிழற்படம் குறித்த இருவரின் விவாதத்தில் துவங்குகிறது நாவல் (ஆனால் காலவரிசைப்படி இச்சம்பவம் கதையின் துவக்கமல்ல). விவாதத்தில் இருக்கும் இரண்டு ஆண்களில் படத்தை தனது காமிராக் கண்களில் பதிவு செய்து பத்திரிகைக்கு அனுப்பி அது பிரசுரமானதற்கு காரணமான லோத்தர் என்ற புகைப்படக் கலைஞரும் இன்னொருவர் படத்தில் இருக்கும் பெண்ணின் கணவனும் தன் மனைவியின் நிர்வாணத்தை முதல் முறையாக அந்த ப்ரெஞ்சு இதழ் மூலமாகவே கண்டவருமான விஸ்வநாதன். விவாதத்தின் ஆரம்பப்புள்ளி கணவன் என்கிற முறையில் மனைவியின் நிர்வாண நிழற்படம் கலை என்கிற ரீதியில் கூட வெளியானது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஒருபுறமும் அதை அவளின் மனப்பூர்வமான இணங்கலுக்குப் பிறகே பதிவு செய்தவனென்கிற முறையில் படத்தில் இருப்பது வெறும் குறிப்பிட்ட ஒரு பெண்ணின் கவர்ச்சியான உடல் அல்ல, அது ஒரு பொதுத்தளத்தில் வைத்துப் பார்க்கப்படவேண்டிய கலையின் வெளிப்பாடு என்று லோத்தரின் வாதமும் தொடர்கிறது. விவாதத்திற்கு ஊறு விளைக்காத வண்ணம் ஒரு பருவ வயதுப் பெண்ணும் விவாதம் நடைபெறும் அறையில் இருக்கிறாள், அவள் பெயர் இதா, விஸ்வநாதனின் மகள், ஆனால் நிர்வாணமாக படத்தில் இருக்கும் பெண்ணுக்குப் பிறந்தவளல்ல.
பிரபலமான ப்ரெஞ்சு இதழில் வெளியாகியிருக்கும் நிர்வாண நிழற்படத்தின் நிஜ உடலுக்கு சொந்தமான பெண்ணின் பெயர் aaaரா. அவளுக்கு உடன் பிறந்தவர்கள் சுமதி மற்றும் ஊர்மிளா என்று இரண்டு சகோதரிகள். aaaரா மூத்தவள். aaaரா மற்றும் கடைக்குட்டியான ஊர்மிளா இருவருக்குமிடையே பிறந்தவளான சுமதியும் அவளது முறைப்பையனான விஸ்வநாதனும் பால்ய பருவம் முதலே காதலித்து வருகிறார்கள். சுமதி விஸ்வநாதன் இருவருக்கிடையேயான காதலுக்கான தூது பரிமாற்றங்களை மூத்தவளான aaaரா மன உவகையோடு செய்து வருகிறாள்.
கதையின் போக்கில் ஆதித்திருப்புமுனையாக வரும் ஜமீன் வம்சாவளியினரான ரெகுபதி நாயக்கரிடம், ஜமீன் பரம்பரையில் தலைமுறை தலைமுறையாக கணக்குப்பிள்ளை உத்யோகத்தில் இருந்து வரும் பிராமணத் தலைமுறையின் தற்போதைய ஆண்வாரிசான விஸ்வநாதன் கணக்குப்பிள்ளையாக சேருகிறார். ரெகுபதி நாயக்கரின் பல சில்மிஷமான போக்குகளைத் தொடர்ந்து தனது கணக்குப்பிள்ளை உத்யோகத்தை நாசூக்காக விட்டு விட்டு அரசாங்கப் பணிக்குச் செல்கிறார் விஸ்வநாதன். பல தலைமுறைகளாக தொடரும் ஜமீன், கணக்குப்பிள்ளை உறவு விஸ்வநாதன் ரெகுபதி நாயக்கரோடு முடிந்து போகிறது.
மொழியறிவுப் பரிட்சயம் அவ்வளவாக இல்லாதபோதும் வெளிநாட்டு இதழ்களில் வெளிவரும் கவர்ச்சியான வாளிப்பான பெண்களின் புகைப்படங்களைக் காண்பதும், பெண்ணுடல் மோகம் சார்ந்த கதைகளில் கிளர்ச்சியூட்டும் தன்மை வாய்ந்த புத்தகங்களை மறைமுகமாக தருவித்துக் கொண்டு படிப்பதோடு அவற்றில் படித்தவற்றை விஸ்வநாதனோடு பகிர்ந்து கொள்வதும் ரெகுபதி நாயக்கரின் வாடிக்கையாகிப் போக, விஸ்வநாதனுடன் தனது காதல் நேரங்களை செலவழிக்கும் போதெல்லாம் சுமதி பணியிட சம்பந்தமான அன்றாட சமாச்சாரங்களை விஸ்வநாதனிடம் கேட்க, ரெகுபதி நாயக்கரின் அசூயையை ஏற்படுத்தும் விதமான அதேசமயம் அதிலும் ஒருவித கலைத்தன்மை கொண்டதாகத் தெரிகிற காமத்தின் பல்வேறு விதங்களைப் பற்றிய விஸ்வநாதனுடனான உரையாடல்களைப் பற்றியே கேட்க நேரிடுகிறது. ஒரு கட்டத்தில் மூத்தவளான aaaராவின் அழகில் பித்துபிடித்து விடும் ரெகுபதி நாயக்கர் தன்னைப் பற்றி நல்லபிப்ராயங்கள் aaaராவின் குடும்பத்தில் ஏற்படுமாறு விஸ்வநாதனை ஏவ, அதனால் aaaராவின் குடும்பத்தில் ரெகுபதி நாயக்கர் மேல் ஏற்பட்டு விடும் அபாயமான பரபரப்பு விஸ்வநாதனுக்கும் aaaராவுக்கும் அவசரசவரமாக திருமணம் நடக்க காரணமாக அமைந்து விடுகிறது.
வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாக தொடர்ந்து வந்துகொண்டிருந்த சுமதியின் காதலுக்கு தான் உறுதுணையாக இருந்த போதிலும் aaaரா சுமதியின் இணங்கலைப் பெற்றுக்கொண்டே விஸ்வநாதனைக் கரம் பிடிக்கிறாள். ஆனால் சுமதியின் அந்த இணங்கலில் ஒருவித சுயநலநோக்கமும் எதிர்காலத்தில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு திட்டமும் அடங்கியிருக்கிறது. திருமணம் ஆகி வருடங்கள் கடந்த பின்னரும் aaaரா விஸ்வநாதன் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியத்திற்கான அறிகுறிகள் தென்படாமல் இருக்க, விஸ்வநாதனுக்கு சுமதியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைக்கப்பட தனது லட்சியத்தை அடைகிறாள் சுமதி. ஆனால் அவர்களுக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போக, தனது குடும்பத்தின் மீது சமுதாயத்தின் பார்வையில் குறிப்பாக ரெகுபதி நாயக்கர் தன் குடும்ப கவுரவத்தில் சேற்றை வாரி இறைக்கும் முன்பாக கடைசி சகோதரியான ஊர்மிளாவையும் விஸ்வநாதனுக்கு மணம் முடித்து வைக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக அந்த சகோதரிகளின் குடும்பத்தின் மீது விழ இருந்த களங்க வலை ஊர்மிளாவால் தடுக்கப்படுகிறது. ஊர்மிளா குழந்தைப் பாக்கியம் எய்தி ஒரு பெண் குழந்தையை ஈன்று விட்டு பிரசவத்திலேயே இறந்து போகிறாள். அவள் தான் இதா.
ஆண்கள் இல்லாத காரணத்தால் தனது அம்மாவின் திதி கொடுக்க விஸ்வநாதன் துணையோடு வாராணசி செல்லும் aaaரா கங்கை நதியின் நீராடலில் மரணத்தின் விளிம்பைத் தொட்டு உயிர் திரும்புகிறாள். வாராணசி வரும் முன்பாகவும் ஒரு முறை கிணற்றில் நீர் இறைக்கும் போது வழுக்கி உள்ளே விழுந்தும் பின்னொரு முறை பல்லி விழுந்த உணவை உண்டு வாயில் நுரை பொங்கி வழிய பிரக்ஞை இழந்து கிடந்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுமாக மொத்தம் மூன்று முறை மரணத்தின் வலுவான கை aaaராவின் கன்னி உடலைத் தழுவி தன்னோடு வந்து விடும்படி வேண்டி கோரிக்கை வைத்து தோல்வியோடு திரும்புகிறது.
எந்தவித குறிப்புகளையும் உணர்த்தாமல் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிச் சென்று விடும் aaaரா, விஸ்வநாதனுக்குள் அவனால் கொடுக்க முடியாத இல்லற சுகத்திற்கான எதிர்வினை தான் அவளின் இந்த திடீர் வெளியேற்றம் என்ற குற்றவுணர்வை மட்டும் விதைத்து விட்டுப் போகிறாள். இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு ரெகுபதி நாயக்கரின் கண்ணில் தென்படும் aaaராவின் நிர்வாணப் படம் வெளியான ப்ரெஞ்சு காலாண்டிதழ் அவர் மூலமாக பழிவாங்கும் குரூரமும் ஆற்றாமையும் கலந்த எண்ணத்தோடு விஸ்வநாதன் காணுமாறு அமைகிறது. தனது மனைவியின் நிர்வாணத்தை முதல் முறையாக அதுவும் இப்படி ஒரு வெட்டவெளியான நிலையில் பார்க்கும் கொடூரம் விஸ்வநாதனுக்கு மனப்பிறழ்வை ஒத்த சுயப்பிரக்ஞை துண்டிக்கப்பட்ட நிலைக்கு ஆழ்த்துகிறது. அதைக் காணும் சுமதியோ அந்த இடத்திலேயே கதறி அழுது உயிரை விடுகிறாள்.
படத்தில் இருக்கும் வாராணசியின் அஸி கட்டத்தின் பின்னணியை வைத்து அவளைத் தேடி விஸ்வநாதனும், இதாவும் ஓசூரிலிருந்து வாராணசிக்கு கிளம்பிச் செல்கிறார்கள். aaaராவைத் தேடும் முயற்சியில் அந்தப் புகைப்படத்தை எடுத்த மனிதரைத் தேட வாராணசியின் அத்தனை படித்துறைகளும் நன்கு பரிச்சயமான சோனுவின் அறிமுகம் அவர்களுக்கு கிடைக்கிறது.
சோனுவின் உதவியால் லோத்தர் என்ற புகைப்படக் கலைஞனை கண்டடைகிறார்கள் இதாவும் விஸ்வநாதனும். முப்பது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய aaaரா லோத்தருக்கு அறிமுகமான ஏழு வருடங்களில் இறந்து போனது அவர்களுக்கு தெரிய வருகிறது. aaaரா தன்னோடு இருந்து ஏழு வருடங்களாக அவனது கலைப்பணிக்கு ஆதாரமாக அவளது கன்னியுடலை அர்ப்பணித்த கதைகளையும், அவளது வாழ்நாள் முழுவதும் அவளை விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் மரணத்தின் புணர்ச்சியின் உச்ச நிலையை ஒத்த கிளர்ச்சியையும், அதன் விடுபடல் அவளுக்குள் ஏற்படுத்திய தன்னுடல் குறித்த பெருமித மனப்பான்மையையும், கலையின் வழியாக அவளது வாழ்தல் காலத்தைத் தாண்டி நிலைத்திருக்கும் வகையான நிழற்படங்களுக்குத் தகுந்த கலாப்பூர்வமான படிமியாக தன்னை முன்னிறுத்துவதற்கான சிந்தனைத் தேர்ச்சியுடன் கூடிய அவளின் பரிபூரணத்துவம் பற்றியும் இதாவிடம் விவரிக்கிறார் லோத்தர்.
நாவலில் வரும் aaaரா, சுமதி, ஊர்மிளா மற்றும் இதா ஆகிய நான்கு பெண் கதாபாத்திரங்களும் ஒவ்வொரு வகையில் ஒருவருக்கொருவர் முரணான குணச்சித்திரங்களைக் கொண்டிருக்கிறார்கள். விஸ்வநாதனுடன் திருமணம் ஆகும் வரை சுமதியின் காதலுக்காக அவளுடனே நேரத்தைக் கழிக்க நேரும் சமயங்களில் ரெகுபதி நாயக்கருடனான பழக்கத்தினால் விஸ்வநாதன் விவரிக்கும் பெண்ணுடல் பற்றிய கலையம்சம் நிறைந்த பார்வை aaaராவுக்குள் அவளை அறியாமல் அவளுக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகளே தன்னை நிர்வாணக் கோலத்தில் படம் பிடிக்க அனுமதி கோரும் லோத்தரின் வேண்டுகோளுக்கு தன்னுடல் வெறும் காமம் சார்ந்த காரணங்களுக்கப்பால் கலையின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படக்கூடும் என்ற ஓர்மையில் இணங்குவதற்கான காரணமாக அமைகிறது. இறப்பிற்குப் பிறகும் வாழ்தலின் உயிர்ப்பைக் கொண்டிருக்கும் கலையம்சம் பொருந்திய தோற்றத்துடன் வெளிப்பட மூன்று முறை தனது கன்னியுடலை தழுவிய மரணத்தின் கைகள் ஏற்படுத்திய கிளர்ச்சியும், அந்தக் கிளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள அவள் உள்மனம் வலியுறுத்தும் கன்னித்தன்மை பேணுதலும், படிமியாக தான் நிற்க தனக்கு பின்புலமாக பிணங்கள் எரியும் வாராணசியின் பழங்கால படித்துறையும் அவளின் தேர்வாக அமைகிறது.
தன்னாளுமை மிகுந்தவளான சுமதி தான் செய்யும் எந்த ஒரு செயலும் அதை முன்னர் செய்த வழிமுறையை ஒத்திருக்காமல் ஒவ்வொரு முறையும் அது புதிதான வழிமுறைப்படி செய்யப்பட வேண்டும் என்று எதிலும் அதிகப்படியான உணர்ச்சிவயப்பட்ட குணாம்சங்களைக் கொண்டவள். விஸ்வநாதனுக்கு தன் மேல் இருக்கும் ஈர்ப்பு நிலைத்திருக்க நாளுக்கு நாள் புதிது புதிதாக தன்னை அவனுக்கு காட்டிக்கொள்ள வேண்டும் என்று வினோதமான நடவடிக்கைகளை செய்ய அவளைத் தூண்டுகிறது. காதல் தினங்களில் அவள் செய்யும் பல பைத்தியக்கரத்தனமான செயல்கள் சுமதியின் கதாபாத்திரம் மீது அமானுஷ்யத் தன்மை கொண்ட மர்மத்தை பூசுகிறது. aaaராவின் கன்னி கழியாமை முதல் அவளின் மரணச்சந்திப்புகள், வீட்டை விட்டு வெளியேறினதற்கான காரணங்களின் முடிச்சுகள் ஒவ்வொன்றாக சுமதியின் வினோதமான நடவடிக்கைகள் மூலமாக கட்டவிழ்கின்றன.
சுமதியின் வினோதமான நடவடிக்கைகளுள் ஒன்று aaaராவுக்குப் பிறகு இரண்டாம் முறையாக அவளைத் திருமணம் செய்து கொள்ளும் விஸ்வநாதனுடனான உடலுறவுகளின் போதெல்லாம் தன்னுடல் அங்கங்களை விஸ்வநாதன் பார்க்க முடியாத இருளையே தேர்வு செய்கிறாள். இருள் சிந்தனைகளின் வீச்சை அதிகப்படுத்தும் என்பதால் தன் அங்கங்களின் ரகசியத்தை விஸ்வநாதன் தன்னிடம் மட்டுமல்லாது தன் சகோதரிகளிடத்தும் தேட வைக்க இயலலுமாகையால் தான் அல்லாத பிறரிடத்திலும் கூட விஸ்வநாதனிடம் தன் இருப்பு குறித்த ப்ரக்ஞையே சூழ்ந்திருக்கும் என்று எண்ணுகிறாள்.
நாவலில் ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவங்களைத் தொகுத்து இணைத்துப் பார்க்க வேண்டிய சந்தர்ப்பத்தை புனைவின் அசாத்தியத் திறமையோடு பா.வெங்கடேசன் கையாண்ட பகுதிகளில் உதாரணமாக பார்க்கப்படவேண்டியவை, நாவலின் இறுதிக் கட்டத்தில், தோற்றத்தில் தன் பெரியம்மா aaaராவின் இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய உருவ அம்சங்களை அச்சு எடுத்தது போல ஒத்திருக்கும் இதா, வாராணசியில் தங்கியிருக்கும் விடுதி ஒன்றில் நடுஇரவில் போதை மயக்கத்தில் அந்த ப்ரெஞ்சு இதழில் வெளியாகியிருக்கும் aaaராவின் நிர்வாண உடலோடு தன் நிர்வாணத்தைப் பொருத்தி முயங்கி தன் மூலமாக aaaராவின் குரலை வாங்கி ஒலிக்கிறாள். குறிப்பிட்ட இந்த நிகழ்வுக்கு சற்று முன்பு நடந்த நிகழ்வின் பகுதிகள் நாவலின் நடுப்பகுதியில் வருகிறது. போதை மயக்கத்தில் தூக்கத்தில் எழுந்து மாடிப்படி ஏறிச் சென்று மேல்தளத்தில் நடந்து கொண்டிருந்த கேளிக்கை நிகழ்ச்சிகளை உடனடியாக நிறுத்தச் சொல்லி தன்னுணர்வின்றி கெட்ட வார்த்தைகளை உதிர்த்துவிட்டு கீழிறங்கி கட்டிலுக்கு சென்று படுக்கையில் வீழ்கிறாள் இதா. அவள் படியிறங்கி வரும் போது தடுமாறி விழாமல் இருக்கும் பொருட்டு அவளைப் பின்தொடர்ந்து வரும் சோனு தாழ்பாள் திறந்தவாறு கிடக்கும் அவளது அறைக்குள் நிழலுருவம் ஒன்றின் அசைவைப் பார்த்து ஸ்தம்பித்துப் போகிறான். தன்னையும் தன் அப்பாவையும் தவிர வேறு யாரும் அந்த அறையில் இருந்திருக்கவில்லை என்று மறுநாள் காலை சோனுவின் பிரமைத்தனத்துக்கு பதில் கூறுகிறாள் இதா. அந்த நடுஇரவில் சோனு கண்ட நிழலுருவம் என்ன என்பது இதா aaaராவின் புகைப்படத்துடனான முயங்கலின் போதானதாக இருக்குமோ என்ற ஊகம் வாசகர்களாகிய நமக்கு ஏற்படுகிறது. போதையின் மயக்கம் மட்டுப்பட்டு தூக்கத்திலிருந்து விழிக்கும் கணத்தில் தாழ்ப்பாள் திறந்தவாறே கிடப்பதைக் கண்ட திகைப்பில் சற்று யோசனைக்குப் பிறகு மெல்லிய குரலில் "சோனு" என்று முணுமுணுக்கிறாள். இந்த ஒற்றை வார்த்தையின் மூலமாக இணைக்க முயலும் சம்பவங்களின் குறிப்பை கதையின் போக்கில் உணர்த்திவிட்டு, காலத்தை கதைசொல்லலின் தொனிக்கேற்ப வளைத்துக் கொள்ளும் பா.வெங்கடேசனின் திறமை மெய்சிலிர்க்க வைக்கிறது. நாவல் முழுவதும் பா.வெங்கடேசனின் இதுபோன்ற கற்பனையின் விஸ்வரூபம் பல இடங்களில் பிரமிக்க வைக்கிறது.
பா.வெங்கடேசனின் தனித்துவமே நீளமான வாக்கியங்கள் மற்றும் அடைப்புக்குறிக்குள் வரும் அடைப்புக்குறிகள் தான். கதைக்குள் நுழைய ஆரம்பத்தில் கொஞ்சம் அதிகமாகவே நிதானம் தேவைப்பட்டது உண்மை தான் எனினும், ஒரு கட்டத்தில் அதுவும் பிடிபடத் துவங்கி விட்டது. அதுவுமில்லாமல் இதுபோன்ற கதைசொல்லலுக்கு இந்த பாணி மொழிநடையே உகந்தது என்னும் உணர்வும் ஏற்பட்டது.
வாசிப்பில் கொள்ள வேண்டிய கவனக்குவிப்பை மேம்படுத்தும் பயிற்சியை பா.வெங்கடேசனின் தீவிரமான மொழி அளிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. வாசிக்க சிரமமாக இருக்கிறது என்று மேலோட்டமாக எதிர்மறையான விமரிசனங்களை பா.வெங்கடேசன் மீது வைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே அவரை விரும்பும் ரசிகர்களுள் ஒருவனான என் எண்ணம். இன்னும் சொல்லப்போனால், இத்தகைய மொழியைக் கையாளும் திறமைக்காகவும் புனைவில் உலகம் முழுவதுமான அங்கீகாரத்தையும் புகழையும் பெற்ற எழுத்தாளர்களுக்கு சற்றும் குறைச்சலில்லாத திறமையைப் பெற்றவர் என்கிற காரணங்களுக்காகவுமே போற்றப்பட வேண்டியவர் பா.வெ.
வாசகன் என்பதைத் தாண்டி ஒரு ரசிகனாக பா. வெங்கடேசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்


Friday 26 July 2019

உலர்ந்த நிலத் தோற்றங்களின் அரூபக் கதையாடல் கோணங்கி 1,2,3

உலர்ந்த நிலத் தோற்றங்களின் அரூபக் கதையாடல் 

கோணங்கி 1,2,3

****

கல்குதிரை மார்க்வெஸ் சிறப்பிதழ்

1


ரயில் அவர்களை மதியவேளை அமைதியில் இறக்கிவிட்டுச் சென்றது. சிக்காடா இசைப்பறவையின் இதயத்தை ஊடுருவும் சோகத்திற்கு மத்தியில் ரயில் ஆவிநகரத்தைத் தாண்டிச் சென்றபோது ஸ்லீப்பர் கட்டைகள் ஒவ்வொன்றாய் கடந்தன. காப்ரியேலின் தாய் லூயிஸாவின் கண்களில் வடிந்த வெப்பமான கண்ணீரின் இளஞ்சூட்டில் ஸ்பரிசத்தை அடைந்த அரக்காடக்கா ரயில் நிலையத்தின் வெறுமையான தோற்றத்தில் கறுமையடைந்த பல ஞாபகங்கள் காண தூணில் சாய்ந்தாள். தாத்தாவுக்கு சொந்தமான பூர்வீக வீடு எட்டிய தூரத்தில், அவர்களைக் கண்டதும் விசாரத்தில் ஆழ்ந்து நடுநடுங்கியது. பழமையான தெருக்களோடு அசையும் அல்மாண்ட் மரத்துக்கு அடியில் புதைத்து வைத்த காப்ரியேலின் பொம்மைகள் அரூபமாய் எழுந்து மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளைத் தேடி வாழைத்தோட்ட வெளிகளுக்கு ஓடுகின்றன. பாழ்பட்டு அகண்ட தெருக்கள் குறுகி வழிமறித்தன இருவரையும். தூசிபடர்ந்த மரங்களில் உதிரத்தொடங்கிய ஞாபகங்கள், அடையாளம் காண இருந்த செடிகளின் துயரம் கண்டு லூயிஸா முணுமுணுத்தாள். தாய் வீடு ரகஸியமாய் பெண்களிடம் பேசியவையெல்லாம் இருந்து கொண்டிருந்த சமையலறையில் பல பொந்துகளில் உதிரத்தொடங்கிய குரல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள் லூயிஸா. தாத்தா வீட்டை விற்பதற்காக வந்திறங்கியவர்களை வீடே பார்வைகொண்டு காற்றினால் அடித்துக் கொண்டது ஜன்னல் கதவுகளை. 

உயரமான சமையல் கட்டுகளில் இருந்த இருட்டு கீறல் விழுந்து வெளியேறிக் கொண்டிருந்த ரகஸியங்களை அரக்காடக்காவில் குடியிருந்த பழைய மனிதர் சிலர் பார்த்தார்கள். வெப்பமும் உதாசீனமும் நகரைக் கவ்வியிருந்தன. 

தெருக்களைப் பார்த்து வர நெடுக நடந்து சென்றபோது காப்ரியேலும் அம்மாவும் அரக்காடக்காவின் பாழ்தோற்றத்திலிருந்து தப்பிச் செல்ல பழைய இனிய தோற்றங்களில் அனர்த்து சென்றனர். வீடுகள் பேசிய துயரத்தின் சாயல் யார் யார் வீட்டையோ அடையாளம் சொன்னது. தெருத்திருப்பங்களில் வயதான சிலர் மங்கலான பார்வைக்குள் லூயிஸாவைப் பார்த்து அந்நியராய் விலகி நகர்ந்தார்கள். தொலைவில் சென்று திரும்பிப் பார்த்தார்கள். அடுத்த தெரு வந்த போது தலையசைப்பில் புலப்பட்டது அடையாளம் ஏதோ. அழகான பெண்களும் மீசை முறுக்கிய ஜெனரல்களும் குடும்பங்களுடன் அலாதியாக வாழ்ந்த தனி வகையில் குடும்பக் கதைகள் பேசி ஊர்ந்து சென்ற காலம் நகரை விட்டு நீங்கியிருந்தது. 

அம்மா எதிர்கொண்ட முதல் தோழி எளிமையான வீட்டில் இருண்ட அறையில் தையல்மிஷின் முன்னால் உட்கார்ந்திருந்தாள். முதலில் அம்மாவுக்கு அடையாளம் தெரிய வில்லை. இதே தெருவில் பிறந்த இரு ஸ்திரீகளும் தங்கள் சலிப்புற்ற வாழ்க்கைக்கு மத்தியிலும் இற்று நறுங்கிப்போன உடம்புகளுக்கு மத்தியிலும் ஒரு காலத்தில் அழகுடன் சிரித்து விளையாடிய பருவத்தை கணம் தங்கள் மனதில் நினைவு கூர முயற்சித்து 

290 

ஒருவரையொருவர் உற்றுப் பார்த்தார்கள். தோழியின் சத்தம் சற்று கவலைக்குரியதாகவும் யெப்புக்குரியதாகவும் அமைந்திருந்தது. 

"பிரியமானவளே" என்று சொல்லிக் கொண்டு பரவசத்தில் கூவியவாறு எழுந்தாள். 

"லூயிஸா." 

"எப்படி இருக்கிறாய்." 

"எனக்கு ஒன்றுமில்லை ." 

"பார்த்தாயா என் கார்ஸியாவை." 

அவன் தலையைச் சுற்றி முத்தமிடுகிறாள். குதூகலத்தால் அவளை முத்தமிடக்கூட தயாராக இருந்தான் கார்ஸியா. 

"என் அருமை கார்ஸியாவா இது." 

"பார் எவ்வளவு கண்ணீர், எவ்வளவு துக்கம், சாதாரண வாழ்க்கை தான் எவ்வளவு.' 

"இப்போது நீயே பார்க்க வந்துவிட்டாய்." 

லூயிஸா நொடிப் பொழுது மெளனமானாள். அந்தப்பக்கம் திரும்பி கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். 

"லூயிஸா, உன்னுடைய நட்பால் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறாய் தெரியுமா, நீயின்றி இந்த பூமியில் வாழ்ந்திருக்கவே மாட்டேன் தெரியுமா." 

"வேண்டாம் வேண்டாம் ஒன்றும் சொல்லாதே." லூயிஸா முடிக்கவில்லை. இரு பெண்களும் கட்டி அணைத்து மனம் ஒடிந்து அழுதார்கள். 

இரு ஸ்திரீகளின் கைகளின் நடுக்கங்களுக்கிடையே உயிர்பெறும் துடிப்பு மஞ்சள் பட்டாம்பூச்சிகளாய் படபடத்ததை, தொலைந்து போன காலங்களை, அவன் அத்தைகள் தங்களுக்கான சவத்துணிகளை தாங்களே நெய்துகொண்டதை, அவன் பாட்டி இறந்தவர்களுடன் உறவாடுவதை, இறந்தவர்கள் காலியான படுக்கையறையில் பெருமூச்சு விடுவதை, மஞ்சள் நிற ரயில்கள் சுமந்து சென்ற வாழைத்தார்களும் நிழல் படர்ந்த வாழைத் தோட்டங்களுக்குள் தாத்தாவுடன் போய்ப் பார்த்த குளிர்ந்த நீரோடைகளை, தொங்கும் மீன்களை, இசைப்பறவைகளை, இவையெல்லாம் மெல்ல மறைந்தபின் அம்மாவும் தோழியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட கணங்களில் அம்மாவின் உதட்டில் துடித்த பிரகாசத்தை நினைவுகூர்ந்தான் கார்ஸியா. அந்த இருண்ட வீட்டு மர ஜன்னலில் இருந்த பல்லி சுவரில் குதித்து கீழே விழுந்து ஓடியது. தோழி கை தட்டி விரட்டினாள். 
291 

அம்மாவும் தோழியும் வெளியே நடந்து போனார்கள். அதுவரை காணாத பூச்சிகள் வீட்டுக்குள் இரைந்து கத்தின. தெருவில் அப்போது தோன்றிய கண்ணுக்குப் புலப்படாத ரகஸிய இழையானது எல்லோரது வாழ்வாகவும் அவர்களது கண்ணீர் எப்போதும் இசைக்கப்படவும் அவன் வாழ்க்கையாக இருக்கவும் விரும்புவான். அரிதாகவே மாறுபட்ட இரு ஸ்திரீகளின் பேச்சுகள் ஒவ்வொரு தெருவாக நீண்டன. மறைவாக இருந்த பல ஸ்திரீகள் அவர்களைப் பார்த்து கூவியவாறு ஓடிவந்தார்கள். எல்லோரும் அம்மாவைச் சூழ்ந்து கொண்டு அழுதது கண்ணீரால் எழுதப்பட்ட கான்ஸர்ட்டோ . அந்த நாளில் ஸான் ஜெரோனிமோவிலிருந்து வந்த இரட்டையர்களோ மதியத்தூக்கத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமையும் முற்றத்தில் தோன்றி நித்திய சுகமளிக்கும் தளிரை வேண்டும் பிச்சைக்காரிகளையோ நினைவுகூர்ந்தான். வரப்போகும் மழைக்கு மேலாக குருட்டு இரட்டையர்களின் பாடலைக் கேட்டான். மழை வெறித்த வெளியில் சென்று பாட வீட்டுக்கு வெளியில் கூட்டமாய் வருகிறார்கள். சுட்டெரிக்கும் புழுதியைக் கொண்ட ஏழு மாதக் கோடைக்குப் பிறகு பூந்தொட்டிகளில் தாகத்தால் வறண்ட ரோஸ் மேரியையும் ஸ்பைக்நார்ட்டையும் மழை உயிர்ப்பிக்கும் என இரு தோழிகளும் பேசினார்கள். 

ஒரு காலத்தில் அழகான பெண்களாலும் வண்ணக் குடைகளாலும் அசைவாடிக் கொண்டிருந்த பழைமையான தெரு வழியே ஸ்திரீகளின் குரலைக் கேட்டான் கார்ஸியா. துணிக்கடையிலிருந்தும் மார்க்கெட்டிலிருந்தும் ரொட்டிக்கடையிலிருந்தும் வெகுதூரம் பேசிய பேச்சுகளின் தொடர்ச்சிகளுடன் அம்மாவும் தோழியும் தையல் வேலையில் இறங்கினார்கள். அவனுக்கான மெல்லிய ஒரு சட்டையைத் தைத்துக் கொண்டிருந்தார்கள். எந்த இடத்தில் மஞ்சள் பூவை எம்ப்ராய்ட் செய்வதென்பதில் சர்ச்சித்து ஓய்ந்தார்கள் இருவரும். சக்கரம் சுற்றி தையல் எந்திர ஓசைக்குள் இருவரின் ரகஸிய உரையாடல் விட்டு கேட்டுக் கொண்டிருந்தது. சக்கரத்தின் நிழல் சுற்றிச் சுழல தரையில் சிதறிய பித்தான்களை இருட்டில் தேடிக் கொண்டிருந்தார்கள். 

"இரு ஸ்திரீகளின் சந்திப்பில் தான் என்னுடைய முதல் நாவல் பிறந்தது" என்கிறார் மார்க்வெஸ். முதல் நாவல் மட்டுமல்லாது படைத்த அத்தனை நாவல்களும் அதிலிருந்து ஆரம்பமானவை தான் எனவே. 

2

ஆயிரத்தி நூற்றிப்பதினைந்தாம் அராபியக் கதையில் "இவ்விடமிருந்து நீங்கியபின் நிலம் உன் கண்களுக்குப் புலப்படாது. இந்நிலம் அலையாக மாறிவிடும்" என சொல்லப் பட்ட அபு-அபன் கதையில் பாம்பரசன் தன் பச்சைக்கல்லைக் கக்கி அதன் ஒளிப்பாதையால் வழிதவறிய மாலுமிக்கு தூரதேசங்களைக் காட்டியவுடன் தீவு அலையாகிவிடும். அதற்குள் ஜனங்களெல்லாம் அவன் கரிய இரைப்பைக்குள் ஒளிந்து கொண்டனர். பாம்பரசனே 

292 

'”ெ $2)$யில் பாம்புநெ 87வு (யோசுரமாகி பெண் விரலில் சுற்றி பச்சைக்கல் பாம்பு ! T$ 67ன் பர்) 2 wயால, 4) பாம்பரரியான குள்ளப்பாட்டி டோனர் 

உன் குழம்(சிய நீலக்கண் 8 எள் ஆழத்தில்தான் ஜாஸ்மின் மரங்களை மூழKடி ககும் வாசனை, இறந்து போன காதையின் ஆவிகளைத் தூண்டும் மாயாவாத எழுததாகத் தோன்ற குக்கிர) சர். மந்திரவாக கள் வாழ்ந்த எரிகிற கொசிரா கதை தீபகற்பத்தில் இருந்து வந்தாள் மந்திரக் கிழவியைப் போல. ஆயிரத்தோரு அராபிய இரவுகளில் வரும் கதைகள், இறந்த போர்வீரனின் உடல் கவசத்திற்குள் தூர்ந்த எலும்புகளிடையே கண்டெடுத்த பெண்ணின் முடிச்சுருளில் இந்தியக் கதை மரபைக் கொண்டு 

பைபிள் போன்றது இக்கதை, அபு-அபன் கதைக்குள் மூழ்கத் தொடங்கிற்று கண்டம். தொலைந்து போன வெமரின் அதி அற்புதக் கற்பனை கொண்ட எழுத்து முறையை ராட்சஸ எலும்புக் கூடுகள் பூமியின் அடியில் எழுதிக் கொண்டிருக்கின்றன, மூழ்கிவிட்ட கண்டத்தைத் தாக்கிய கறுப்பு மின்னலில் இறந்தவர்களின் உடல் ரேகையில் கருகிய தோலில் குத்தப்பட்டிருந்த பச்சைக் கோலங்களில் இருக்கும் கிரகங்களை நட்சத்திர மீன்களை நீர் கரையான்கள் கொஞ்சமாய் அரித்து அக் கறையான்களே ராட்சஸப் பூச்சியாகி தூரத்திலிருக்கும் நட்சத்திரங்களாகின்றன. விண்மீனிலிருந்து இன்னொரு விணமினுக்குத் தாவும் கதையானது மெண்டார் எனும் மூழ்கிய பழங்கப்பலில் இருந்த பார்தெனான் எனும் மிக மெல்லிய துணிகளில் வரைந்த புதிராகிக் கருநிற எழுத்துமுறைகள் நிரம்பிய பெட்டியிலிருந்த மெல்லிய துணிச்சுருள்கள் சுற்றிச்சுற்றி அலையலையாய் வெளிப்படுகிறது சமுத்திரங்களில். எழுத்துக்களைக் கரும்பிச் சென்ற கடல்ராசிகள் கடல் மடுவில் துயிலும் தேவதைகளின் காதுகளில் ரகஸியமாய் சொல்ல, கடல் தேவதைகள் விலைமதிக்க முடியாத அபூர்வத் துணிகளை பெட்டிகளிலிருந்து அலையலையாக வெளியேற்றின. இந்த பூமி தன்னுடைய சொந்த அச்சில் சுழன்றுகொண்டே முடிவில்லாத அந்தத் துணியில் விரல்களாலே பரந்ததொரு ஓவியத்தை முடிவில்லாமல் வரைந்து கொண்டே ஊழிக்காலத்தில் மேல் எழும்பிய பனிக்கட்டிகளை கண்களால் பார்த்துக் கொண்டே அதே கண்களால் "மிகப்பல வருஷங்களுக்கு அப்புறமாகத் தன் மரண தண்டனையை நிறைவேற்றத் தயாராக நின்றிருக்கும் துப்பாக்கிக் காரர்களை எதிர்நோக்கியிருக்கும் அந்தத் தருணத்தில் தான் கர்னல் அவ்ரலியானோ புண்டியாவுக்கு ஐஸை முதல் முதலாகப் பார்ப்பதற்காகத் தன்னை அப்பா கூட்டிப்போன அந்த தாரத்து மத்தியானப் பொழுதானது நினைவுக்கு வரத் தொடங்கியது" என நூற்றாண்டுக்காலத் தனிமைவாசத்தில் முதல்வர் பனியைப் பார்க்க பல வருஷங்கள் மார்க்வெஸ் காத்திருக்க வேண்டியதாயிற்று. பனி உருகி நிலம் உண்டான நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் மேலே வானம் பெயர் சொல்லப்படவில்லை. கீழே கெட்டியான பூமி பெயர் சொல்லப்படவில்லை. பெயர்கள் தனி எல்லை குறிக்கப்படவில்லை. முளை வெளிப்பட்டாகவில்லை. எந்தத் தெய்வமும் வெளிப்பட்டிருக்கவில்லை. ஊழ்விதிகள் எவையும் நிர்ணயிக்கப்படவுமில்லை. எந்தப் பொருளுக்கும் எதிர்காலம் இன்னதென்று நிர்ணயம் ஆகாத போது கடலோடிகளும் பாலைவன மாய இனங்களும் மீமனிதப் புராணங்களும் முன் அறியாத துயர இருள் வீசும் மனிதப் பாதைகளும் ஆயிரம் பாதைகள் சொன்ன கதைகளும் பின்னால் வந்த மத போதகர்களும் தீர்க்கதரிசிகளும் கவிஞர்களும் ஆக்கிய அற்புத புராணக்கவிதைகளும் நாடோடிக் கதைகளும் கற்பனைக் கதைகளும் கலந்து வடிவம் பெற்ற பைபிளை தலைகீழாக்கம் பெறவைத்த தனிமொழியின் சிருஷ்டிகரப் பாய்ச்சலாக கொலம்பியாவில் 

293 

தணிந்த எரிமலையின் வயிற்றில் பிறந்த காப்ரியேல் என்ற கதைக்காரன் தொல் பழங்கால ஜனங்களது கலாச்சாரங்களின் நீரடிப் பாதைகளை தாவரவகை எழுத்தாக்கியது நவீனம். 

அரக்கரடக்கா வீட்டைச் சுற்றி நடமாடிய ஆவிகள் எலும்புகளின் இசையில் ஆடிக்கொண்டிருந்தன. அந்த வேளை பாட்டி டோனா ட்ராங்குலினாவின் மூதாதைகளின் ரத்த தாகம் கொண்ட கொடூரமான உருவங்கள் பாட்டிக்குள்ளிருந்து வெளியேறிப் போய் அல்மாண்ட் மரத்தில் மறைந்தன. தாவர ராஸிகளின் காரவாசனையை நுகர்ந்து பெருமூச்சுவிட்டாள் பாட்டி, மயக்கத்தில் பூக்களுடன் உறவாடிப் பல வார்த்தைகளை செடிகளிடம் சொன்னாள். அவள் பெரிய முக்தில் தாவரங்களின் வாசனை நிறம் நிறமாகப் பிரிந்து தொலைவான நிலப்பரப்பில் வீசிக் கொண்டிருந்த துயரக் காற்றாய் மாறியது. அவள் மூதாதையர் வாழ்ந்த தரிசுப் பிரதேசத்தில் விநோத இந்தியர்கள் வாழ்ந்தார்கள். ஆளவரமற்ற மலைப்பறம்புகளில் அசையும் நிழல்களுடன் பதுங்கியிருந்த கிராமங்களில் வெளியாளுக்குத் தெரியாத பாடல் உதிர்ந்து கொண்டிருக்கும், பாடல் கறைபடாத மூதாதைகளின் ரத்த தாகம் கொண்ட எலும்புகளுடன் உதிர்ந்தபடி, வணங்கப்பட்ட எலும்புகளுக்கு விரோதமாக வாட்களை நீட்டுவதில்லை. பிறந்த மாந்திரீகக் கதைகளும் புராண வீரர்களின் சரித்திரமும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டு கானகங்களினூடு மறைந்திருந்தது அரக்காடக்கா. பிறகு வாழைத் தோட்டங்களுக்காகப் பொசுக்கப்பட்ட கானகங்களின் புகையும் புழுதியும் சாலைகளாக வளைந்து செல்லத் தொடங்கின. இருண்ட தார்ச்சாலைகள் பொருள் போக்குவரத்தால் நெரிசலடைந்து ட்ரங்க் ரோடுகளாயின. அரூபமான தான்தோன்றிப் பாதைகளில்தான் ஆவிகள் உலவும். கதைகள் புதையுண்ட பாதைகளில் ஒவ்வொரு சுவட்டிலும் ஞாபகங்களின் துகள்கள் மறைந்திருக்கும். பாட்டியின், அத்தைகளின் ஞாபகங்களில் மறையாத காட்டுப் பாதைகளை மார்க்வெஸ் எந்த இரவிலும் அந்நிய நகரத்தின் வாடகை விடுதியில் இருந்தவாறே நினைவுகூர்வார். மிருகங்களின் காலடிகளும் பறவையின் தடங்களும் காற்றின் மிக மெல்ல துயரமும் படிந்த மணல் பாதைகளில் ஒவ்வொரு மணலையும் மூன்றாம் உலகக் குரலாக மாற்றினார். களங்கமற்ற எரிந்திராவின் பாலைவனத் துயரக்காற்று பெருங்கண்டங்களின் ஒடுக்கப்பட்ட மனிதரின் மூச்சாய் சுழல்கிறது. 

துருப்பிடித்த அச்சில் திரும்புகிற பல நூற்றாண்டுகள் முதிர்ந்த கரகரப்பைத் தவிர வேறு எதையும் இந்த பூமியால் கேட்கமுடியாதபோது ஆலீஸின் அதிசய உலகத்தையோ அராபியக் கதைகளையோ கேட்டுக் கொண்டிருக்கும். தன்னை விட முதிய பாட்டியிடம் கதை கேட்கும் குழந்தையாக பூமி இருந்து கொண்டிருக்கும் வரை வெளியில் காத்திருக்கும் சாவை தள்ளிப் போட்டவாறு உயிர் வாழக்கூடும். இந்த நூற்றாண்டு முடிய இன்னும் நான்கு தப்படிகளே எஞ்சியுள்ள தருணத்தில் மார்க்வெஸ்ஸின் சிறப்பிதழ் லேஸரில் ஓடத் தொடங்கி இன்று தமிழ் வாசகரின் நாடித்துடிப்பிலும் கேட்டுக் கொண்டிருக்கிறது, இதுவரை படைக்கப்பட்ட தமிழ் எழுத்தில் மிகுதியாக எதிர்காலத்தின் பெயரிலேயே துரோகங்கள் அனைத்துமே செய்யப்படுகின்றன. வரும் நூற்றாண்டின் துவக்கத்தை இப்போதே உன்னிப்பாகப் பார்த்தால் கதைமரபுகள் காலியாகிக் கொண்டிருப்பதையோ சிறு கூட்டத்தால் மறைக்கப்படுவதையோ காணலாம். 

294 

பிராந்திய மொழி மரபுகளிலிருந்தே சுயம்புவான கலாச்சாரத்தின் ஆதித் தன்மைகளைக் காக்க முடியும். மாபெரும் கண்டத்தின் சிறிய நிலத்துண்டிலிருந்து பாட்டியின் நீலநிறக் கண் மூலம் பார்த்துக்கொண்டிருக்கும் மார்க்வெஸ் மாந்த" " எதார்த்தவாதத்தை நிலப்பரப்பாக்கியது உலக மொழிகளுக்கு மாறி மாற 200" மேலுறை விம்மி எழுகிறது. பூமியின் மேலோட்டில் வயோதிக மனிதன் மா இறகினால் எழுதிக் கொண்டிருக்கும் சாகாத வஸ்துவான கதையில் மறைகிறான. 

அலாதியான கலாச்சாரத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு அந்நிய 2"?" மூலதன வெறி கொண்ட சிக்னல் விளக்குகளுக்குக் காத்திருக்கிறது தமிழ். வெற்ற கொள்ளும் பொருள் மேலாதிக்கக் கலாச்சாரத்தில் வேகமாகத் திணிக்கப்படும் ?? உற்பத்திப் பண்டங்களுக்குள் பலன்கள் நசுக்கப்பட்டுவிட்டன. உலகே நொறுங்க - 2 அளவுக்கு விநாசங்கள் வந்தபோதிலும் கரைக்கு அப்பால் எறியப்பட்ட போதும் சொந்த திணைப்பூவின் ஸ்பரிசமானது நிலத் தோற்றங்களாய் தானியங்களின் கண்ணீராய் இசைக்கப்படும். அகதிகள் போனபின் முகாம்கள் கோழிப்பண்ணைகளாக உருமாறின. மரபுரிமைமீது கைவைக்கும் ராட்சஸ விரல் நகங்களுக்குள் பதுங்கி பாலீஷ் அடிப்பவர்கள் கூட்டமாகிவிட்டார்கள். கலாச்சாரம் அரூபமான மொழி சமிக்ஞை கொண்டது இனி. புறத்தைச் சுற்றி வரும் எதார்த்தவாத விரல்களைக் கம்பன் நிலத்தடி புடை மண்ணில் ஒவ்வொரு துகளிலும் தொட வைக்கும் முயற்சிதான் இதழ். 

இப்போதும் சப்த சமுத்திரங்கள் மணல்காணும் ஆழத்தில் கொலம்பஸ்ஸின் கற்சவப்பெட்டியை நான்கு மாலுமிகள் கொண்டு செல்லும் பைசாசக் கப்பலின் கடற்கோடுகள் சலனமடைந்தவாறு இருக்கிற எழுத்தாக மார்க்வெஸ். அஸ்டெக் கடவுளான சக்-மூல் கப்பலில் செல்லும் கற்சவப்பெட்டியை திறந்து கல்நாகங்களை வளையவிட்டார் ஃபுயன்டஸ் எழுத்தில். வடிவத்தை உடைத்து சே குவேராவின் உருவிழந்த கைகளை சக்-மூல் சிலையில் ஒட்டவைத்த கொலம்பியப் புதிரான ரஸவாதி. இவ்விரு மாய அஸ்டெக் எழுத்தில் ரகஸிய இனங்களது துயர்மிக்க நினைவுகள் கதை விளிம்புகளில் உடைந்த ஈட்டிகளாய் சிதறிக் கிடக்கின்றன. ஞாபகத்தின் சுவர்கள் குருதிதோய்ந்த சிவப்பாய் இருக்கின்றன. அதனைப் பருகிய போது கரித்தது எழுத்து. பாரம்பரியப் பெருமை சிதைந்தபோது வாழைத்தோட்ட நீண்ட ரயில் தொடரின் மரணாலி கேட்டு மலைகளுக்குள் சினத்தால் ரத்தமேறிய முட்டிகளால் மண் சுவர்களைக் குத்தினார்கள் கொலம்பியர்கள். பாதுகாப்புக் கவசமணிந்த மெக்ஸிகர்கள் யுத்தத்தில் வீழ்ந்த பழமையான வர்ணனைகளை ஃபுயன்டஸ்ஸின் எரிந்த தண்ணீரில் காண மரப்பாலமாய் குறுக்கே செல்லும் மார்க்வெஸ் எழுத்தில் கடற்கொள்ளையரின் மாலுமிகளின் ரஸவாதிகளின் நாடோடிகளின் காலடி மர ஓசைகளில் பாலைவன முதுகெலும்புகள் கூட்டமாய் நகர்ந்தன. நினைவுக்கெட்டா கால முதற்கொண்டு கற்பனைப்புராண இதிகாசக் குறிப்புகளை லத்தீன் அமெரிக்கரின் சமுதாய நினைவுகள் தனிமொழியில் சுருளவைத்து அராபியக் கம்பளங்களாய் விரித்தார் மார்க்வெஸ். 

அஸ்டெக் இனம் வைத்திருந்த அமாக்கல்லிப் பதிவறைகளில் முப்பதடி நீள அகலமான வரைபடங்களில் காட்டப்பட்ட நூற்றுக்கணக்கான கிளைகளில் சிக்கிக் 
295 

கொண்ட பகைவர்களை கொலம்பஸறிக்கு முந்திய உலகை விவரித்த தோல் வரை படத்தில் பதிந்த தாவரங்களின் மறைவிபோர்ஹெ இருந்திருக்க வேண்டும். காகத்தான் மனிதன் எழுதக் கற்றுக்கொள்ளாத காலத்துக்கு மறைந்து முன்பே தோன்றியவர்தான் போர்ஹெ. அது வரை ஐரோப்பியர் பார்த்திராத எழுத்தை ஸ்பெயினில் விளைந்து இந்தியர்களின் மெல்லிய விரல்களால் பருத்தி நரற்று மென் துணியில் தீட்டப்பட்டிருந்த போர்ஹெயின் விநோத உருவத்தில் தாவர மிருக மீன்வகை தசைநார்களால் தீட்டிய இன்னொரு போர்ஹெ ஐரோப்பியக் கடலோடி களிடம் சிக்காது அர்ஜென்டினய கடற்குகையில் மீன் கன்னிகளோடு ஒரே இளவரசனாகத் துயில்கிறார். இருளில் மறையும் கதைகளை மிருகசீரிஷம், மூலம், அனுஷம், சதயம், தனு, சத்துரு, அரசை, அருள் நட்சத்திரங்களிடம் கேட்டு அடிமை அமெரிந்தியர்கள் நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கிய தோல்கோடுகளை கல்வரிகளை விண்ணிலிருக்கும் அண்ட கோச அடுக்கில் கணிதார்த்தமாக எண்களை மாற்றி விஞ்ஞான அதீதக் கதைகளை, கடந்த உலகத்திற்கும் தாவரங்களுக்குமிடையில் சொல்லி வைக்கிறார். 

மிகப்பழங்காலத்தில் தனிமொழி கொண்டு இந்திய மரபினங்களின் உடல்தோலில் வரையப்பட்ட பச்சை மையில் தீட்டிக்கொண்டிருக்கிறார் இனியாகும் எழுத்தை, பூமியைத் சுமந்து கொண்டிருக்கிற கார்க்கோடக ஸர்ப்பமானது சந்திரனை மெல்ல மென்று கொண்டிருக்க பூமியில் விழுந்த நட்சத்திரங்களோடு சூரியனுக்கு எதிரான கடும் ஆயுதங்களைப் பறக்க விடுகிறார் போர்ஹெ. எரிகற்களால் ஆன கபாலங்களை அதன்மீது வீசுகிறார். ஸெண்டமாக் எரிகற்கள். போர்ஹெவை இருள்கூட்டங்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. நட்சத்திரத் தடியுடன் போர்ஹெ. 

ஐந்து திறங்கொண்ட திணைகளில் அமர்ந்திருக்கும் நட்சத்திரங்களுடன் சூதாடிக் கொண்டிருக்கிறார் மார்க்வெஸ். நட்சத்திரக் கோடுகளுக்கு ஏற்ப சந்திரப்பெண் வருகிறான். கபடறியா எரிந்திராவை வானவில்லின் ஏழு ஆன்மாவினால் உருவாக்கினார் மார்க்வெஸ். சூரியனின் வெப்ப சக்தியில் கனன்று கொண்டிருந்த புரட்சிகரக் கனவைப் படைப்பாக்கியது நவீனம். தீவிரக் கலை இலக்கிய இயக்கமாகி சாலைகளிலும் வீதிகளிலும் பஸ்களிலும் காலியிடங்களிலும் மார்க்வெஸ்ஸின் இனந்தெரியாத சக்தி முழுவீச்சுடன் உலக வாசகர்களை ஈர்த்தது. 

செருப்புத்தொழிலாளர்கள், நாவிதர், வாடகைக்கு ஓட்டுபவர், தச்சர், மீன்பிடிப்பவர், தையல்காரிகள், கடல்கொள்ளையர்கள், மாலுமிகள், ரஸவாதிகள், வேசைகள். பணிப் பெண்கள் அவர் கதைவழியே நடமாடத் தொடங்கினர். இந்த வெப்ப மண்டல நாடுகளில் அமெரிக்க எதிர்ப்பு மனப்போக்கு அதன் நோய் பீடித்த கலாச்சாரத்திற்கு எதிராய் மேலோங்கி வரும் லத்தீன் அமெரிக்கக் குரல். 

மறைபொருளாகவுள்ள மொழியும் சரித்திரமும் சித்திர எழுத்து வகை பிரமிடுகள், பலிபீடங்கள், நடுகற்கள் என மூன்று பிளவுகளாக எழுத்தைப் பிரிக்கும். கல்படைப்புகளில் பாதி பூனை வடிவக் கல் உருவத்தின் கண்கள் மட்டும் பச்சைக் கற்களாக ஒளி கக்கும். பூனை வடிவக் குழந்தையை வைத்திருக்கும் மனிதக்கல் கொலம்பியப் புதிராய் மார்க்வெஸ்ஸின் படைப்புகள். 

296 

யுத்தகளத்தில் மாலை நேரம் பாட்டி.யால் ஏவப்பட்ட மஞ்சள் வண்ணத்துப்பூச்சி மாண்டு கிடக்கும் கர்னல்கள், வீரர்கள், வெற்றிக்களிப்பில் துயிலும் கர்னல் அவ்ரலியானோ புண்டியா மீதும் ஒரே மாதிரி வந்து வந்து உட்காருகின்றன. காலம் கடந்து செல்வதை ஆழமாக


னோ நுட்பமாக உருவகப்படுத்த யாரால் முடியும். மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகள் ஒருங்கே

வாழ்ந்தாலும் அழகு காட்டிச் செத்துப்போகும். ஆயினும் எட்டு கோடி வருஷங்கள் பூமியைச் சுற்றி வருகின்றன, மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகள் அழியா ஆயுள் பெற்றிருப்பதாக , நினைக்கின்றன, வண்ணத்துப்பூச்சி பறந்துகொண்டே பல தலைமுறையாக மாறி மாறி எல்லா நிறங்களாகவும் உருவெடுத்து கர்னலின் மீது அமர்ந்திருக்கிறது வந்து, ஒரே நாள் மட்டும் வந்து அடுத்த தலைமுறையாக மாறி மாறித் தோற்றம் கொள்வதான மாய்த்தன்மைதான் மாந்திரீக எதார்த்தம். மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகள் ஏவியவாறிருக்கிறார் " மார்க்வெஸ்ஸன் பாட்டி எனவே........

Wednesday 24 July 2019

மாஜிக் கம்பளங்களே எதார்த்த வாதத்தின் மூலப்பொருளாய் ஆனது தமிழில் - பால் பிரகாஷ் :: கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ் :

மாஜிக் கம்பளங்களே எதார்த்த வாதத்தின் மூலப்பொருளாய் ஆனது
தமிழில் - பால் பிரகாஷ்

: கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ் ::
From Kalkuthirai little magazine

0 கதைகளில் பேச்சுமொழிக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்.
மொழிஉண்மையை ஸ்பானியப் பேச்சுமொழி அவ்வளவு பிரதிபலிக்காது. பேச்சு மொழிக்கும் எழுத்துவழி உரையாடலுக்கும் மிகுந்த இடைவெளி உள்ளது. நிஜவாழ்க்கையில் அழகாக அமையும் ஸ்பானியப் பேச்சுமொழி கதைகளில் அவ்வழகை எப்போதும் தொனித்து ஒலிப்பதில்லை. ஆகவே குறைவாகவே பேச்சுமொழியை கதைகளில் உபயோகிக்கிறேன்.

0 பாத்திரங்களின் போக்கையும் முடிவையும் முன் தீர்மானிப்பீர்களா.
பாத்திரங்களுக்கு ஏற்படும் சம்பவங்களை ஓரளவு மனதில் வைத்துக்கொள்வேன். கதைப் போக்கிலோ எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே செல்லும். - ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் கர்னல் அவ்ரலியானோ புண்டியா வெகுகாலம் உள் நாட்டு யுத்தத்தில் பங்கெடுத்த பின்பு ஒரு வேளை மரத்தடியில் சிறுநீர் கழிக்கும்போது உயிர்பிரிவதாக முதலில் நினைத்திருந்தேன். "அவர் இறக்கும்போது வெகுவாகத் துன்பமடைவாய்" என்று என் மனைவி மெர்ஸிடஸ் கூறினாள்.
ஏதாவது ஒரு கணத்தில், புள்ளியில் அவரைக் கொன்றே தீரவேண்டும் என்று அறிவேன். உடனே அதைச் செய்யத் துணியவில்லை. இதற்கிடையில் கர்னல் வயதாகி சிறிய தங்க மீன்களைச் செய்துகொண்டிருக்கும் நிலைக்கு வந்து விட்டார். "இப்போது அவருக்கு எல்லாம் போதுமானது" என்று ஒரு மதியவேளை நினைவு தங்கியது. இப்போது அவரைக் கொன்றே தீரவேண்டும். அத்தியாயத்தை எழுதி முடிந்தவுடன் நடுங்கியவாறு இரண்டாம் மாடியில் இருந்த மெர்ஸிடஸ்ஸைப் பார்க்கச் சென்றேன். முகத்தைப் பார்த்தவுடன் என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொண்டாள். "கர்னல் இறந்து விட்டார்" என்று கூறினாள். படுக்கையில் வீழ்ந்து இரண்டு மணி நேரம் விடாமல் அழுது கொண்டிருந்தேன்.
0 எழுதுவதெல்லாம் நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிக்கக் கூடியது தானா.
எதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட வரியைக் கூட என் கதைகளில் நீங்கள் பார்க்க முடியாது.
0 நிஜம்தானா.
ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் நாவலில் வரக்கூடிய மந்திரவயப்பட்ட நிகழ்ச்சிகள், ரெமிடியோஸ் என்ற அழகி மோட்சத்துக்குப் பறந்து செல்வதும் மாரிஸியோ பாபிலோனியாவைச் சுற்றி எப்போதும் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகள் பறந்து கொண்டே இருப்பதும் எல்லாமே நிஜமான நிகழ்ச்சிகளைச் சார்ந்தவையே..

0 ரெமிடியோஸ் அழகி மோட்சத்துக்கு செல்வதற்கான எண்ணம் எப்படித் தோன்றியது.
ரெபெக்காவும் அமரந்தாவும் துணியில் பூவேலை பின்னிக்கொண்டிருந்த போது ரெமிடியோஸ் : அழகி மறைவதாகக் கற்பனை செய்து வைத்திருந்தேன். அப்படியொரு கற்பனைத் தோற்றம் சாத்தியமாகத் தோன்றவில்லை. ரெமிடியோஸ் அழகியை சற்று அதிகநேரம் வைத்திருக்க வேண்டியதாயிற்று. உடல், ஆன்மாவோடு மோட்சத்துக்கு அவள் பறந்து செல்லச் செய்தேன். அதற்குக் காரணமாயிருந்த முடிவு. அதிகாலையில் வீட்டை விட்டு ஓடிப்போன பெண்ணின் பாட்டி, ஓடிப்போனதை மறைப்பதற்காக சுற்று வட்டாரத்திலெல்லாம் பேத்தி மோட்சத்துக்குப் பறந்து போனதைக் கண்டதாகக் கூறியதே ஆகும்.

0 க... கொள்ளை ப கட்டுரையில் அவளைப் பறக்க வைப்பதற்கு கஷ்டப்பட்டதாய, 92
'. ; எழுதினீர்களே.
ஆம். தரையிலிருந்து கால்களை எடுக்க மறுத்துக் கொண்டிருந்தாள். அவளை மேலே எழுப்ப முடியாமல் வெறி பிடித்தவனாக அலைந்தேன். ஒருநாள் இதை சிந்தித்துக் கொண்டே என் தோட்டத்திற்குச் சென்றேன். காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது. அழகான பெரிய உருவம் கொண்ட நீக்ரோப் பெண் ஒருத்தி துவைத்த துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். அவளால் முடியவில்லை. காற்று துணிகளை அடித்துப்பரத்திக் கொண்டிருந்தது. உடனே மனத்தில் மின்னலாய உதித்தது. முடிவு செய்தேன் ரெமிடி யோஸ் அழகியை வானத்துக்கு அழைத்துச் செல்ல மாஜிக் கம்பளங்கள் தேவை என்று. இவ்வகையில் மாஜிக் கம்பளங்கள் எதார்த்த வாதத்தின் மூலப்பொருளாய் ஆயின. டைப்ரைட்டருக்குத் திரும்பியபோது ரெமிடியோஸ் அழகி தடைகள் இன்றி காற்றாக கைகளை விட்டு விலகி மேலே பறந்து சென்றாள். கடவுளே நினைத்திருந்தால் கூட அவளைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது.

0 வீட்டுத்தோட்டத்தில் மஞ்சள் பூக்களை அதிகமாக வளர்க்கிறீர்களே, காரணமுண்டா.
மஞ்சள் நிறப்பூக்கள் இருக்கும்போது எனக்குத் தீங்கு ஏதும் ஏற்படாது. பாதுகாப்புணர்வோடு இருப்பதற்கு மஞ்சள் நிறப் பூக்களும் பொதுவாக மஞ்சள் ரோஜாக்களும் சுற்றிப் பெண்களும் தேவைப்படுகிறார்கள்.

0 மேஜையில் எப்போதும் மஞ்சள் ரோஜாவை மெர்ஸிடஸ் வைப்பதுண்டல்லவா.
எப்போதும். வேலை செய்து கொண்டிருக்கும் போது சில சமயங்களில் எதுவுமே சரிவரச் செய்யாமல் பக்கங்களுக்கு மேல் பக்கங்களாக கசக்கி எறிவதுண்டு. எவ்வளவு முயற்சித்தாலும் நினைப்பதை அடைய முடியாது. அப்போது பூஜாடியைப் பார்த்தபோது அதில் மஞ்சள் ரோஜா இல்லை. அதுதான் காரணமென்று புரிந்து கொண்டேன். ரோஜா இல்லாத பூஜாடி. உடனே மலருக்காகக் கத்துவேன். மெர்ஸிடஸ் மஞ்சள் ரோஜாவுடன் வருவாள். கண்ணாடிக்குள் வைத்ததும் எழுத்தும் தானே இடைவிடாமல் ஓடத் தொடங்கி இருக்கும்.

0 மஞ்சள் உங்கள் அதிர்ஷ்ட நிறமா.
பூவின் நிறம்தான் அது. தங்க ரோஜா அல்ல. தங்கத்தின் நிறமும் அல்ல.

0 உங்களுக்குப் பிடிக்காதது நிறைய உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு தருணத்தில் கூறினீர்கள். நிர்வாணத்தில் புகை பிடிப்பது துரதிர்ஷ்டம் விளைவிக்காது. ஆனால் நிர்வாணமாய் நடந்து கொண்டே புகை பிடித்தால் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என்று நம்புவதாக கூறினீர்கள்.
மட்டுமல்ல. நிர்வாணமாய் வெறும் பூட்ஸ் அணிந்து ஊர் சுற்றுவதும். வெறும் காலுறைகளுடன் கலவியில் ஈடுபடுவதும் மிகவும் ஆபத்தானது. அது சரியாக இயலாது.
.
0 வேறென்ன. ஊனமடைந்த மனிதர்கள் ஊனங்களை இசைக்கருவிகள் கொண்டு மாற்றும் போது இந்த எண்ணம் தோன்றும்.
கையில்லாத மனிதர்கள் கால்களை வைத்து தோல்கருவிகளை இசைப்பதும் காதுகள் மூலம் புல்லாங்குழல் வாசிப்பதும் கண்தெரியாத இசைஞர்கள் இசையால் துரதிர்ஷ்ட வசமான பாதையில் இழுத்துச் செல்வதும்... வார்த்தைகள் சில சமிக்ஞைகளைக் கொண்டிருப்பதாக உணர்கிறேன். எழுத்தில் உபயோகிக்காத வார்த்தைகளைக் கேட்கிறேன். வரையறை, அளவீடு, ஒப்பான, சமதளத்தில், கண்ணோட்டத்தில், போன்ற வார்த்தைகள் சமூகார்த்தமான குணங்களின் பிதற்றல்.
0 அணுகுமுறை என்ற வார்த்தையும் உண்டல்லவா. ஆம்.
ப அந்த மாதிரி நபர்களும் உண்டா . அந்த மாதிரி வார்த்தைகளைப் பயன்படுத்துவோரைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது.

0 இடங்கள் இந்த மாதிரி நிகழ்வை உங்களிடம் ஏற்படுத்துமா.
ஆம். இடங்களே துரதிர்ஷ்டங்களைத் தாங்கி நிற்பதாகக் கூறவில்லை. அவ்விடங்களில் சில நேரங்களில் ஏற்படும் முன்னுணர்வுகள் எங்கிருந்து வருகின்றன என்பது தெரியாது. இது எனக்கு கடாகஸ்ஸில் ஏற்பட்டது. அங்கே திரும்பிச் சென்றால் இறந்து விடுவேன் என்று தெரியும்.

0 கோடை தோறும் செல்வீர்களே, அங்கு என்னவாயிற்று.
ங்கள்
ஓட்டலில் தங்கியிருந்தபோது மேற்குக் காற்று பலமாக வீசத் தொடங்கியது. மயிர்க் கூச்செறியும் அளவு வலுத்து வீசியது. நானும் மெர்ஸிடஸ்ஸும் மூன்று நாட்கள் அறையை விட்டு வெளிவர முடியாமல் கிடந்தோம். அப்போது திடீரென்று உயிர்போகும் ஆபத்தில் மாட்டிக் கொண்டதாகத் தோன்றியது. அப்போதே தெரியும் நான் கடாகஸ்ஸை விட்டு ஒருவேளை உயிருடன் திரும்பினால் மீண்டும் அங்கு செல்லவே மாட்டேன் என்று. காற்று நின்றபோது அங்குள்ள குறுகிய சாலை மூலம் ஜெரோனா வந்து சேர்ந்தேன். அப்பொழுது தான் நிம்மதி மூச்சு விட ஆரம்பித்தேன். அற்புதமான வழியில் தப்பி வந்தேன்.

0 முன்னுணர்வுகளை எப்படி விளக்குவீர்கள்.
உருவெளித் தோற்றங்களில் வரும் சிறு சிறு அதிர்வுகள் மூலம் தெரிந்து விடும் என்ன நடக்கப் போகிறதென்று..
1958 என்று நினைவிருக்கிறது. கடாகஸில் என்னுடன் இருந்தபோது திடீரென உணர்ந்தீர்கள். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறதென்று. அசம்பாவிதமும் நடந்தது. மூக்குக்கு முன்னே ஜனாதிபதி மாளிகை மீது யாரும் எதிர்பாராதபடி விமானங்கள் குண்டு பொழிந்தன. இந்த நாள் வரை என்னையே கேட்டுக் கொண்டிருக்கிறேன். எதற்கு எப்படி உங்களுக்கு இந்த முன்னுணர்வு ஏற்பட்டது.

0 உங்களுடைய முன்னுணர்வுகள் எல்லாமே தெளிவாக இருக்குமா.
சற்றுமங்கலாகவே இருக்கும். ஆனால் ஏதாவது தெளிவான விஷயத்தை உள்ளடக்கியிருக்கும் அன்று ஒரு நாள் பார்ஸிலோனாவில் புடஸ்களுக்கு லேஸ் மாட்டிக் கொண்டிருந்தபோது மெக்ஸிகோவில் என் வீட்டில் ஏதோ ஒன்று நடந்திருப்பதாக உணர்ந்தேன். துரதிர்ஷ்ட வசமானதாக இருக்கும் என்று அவசியமில்லை. ஆனால் ஏதோ நடந்திருப்பதாக முன்னுணர்வு. மனம் கேட்கவில்லை. ஏனெனில் மகன் ரொட்ரிகோ அன்று அகபுல்கோவுக்கு காரில் செல்வதாக இருந்தான். மெர்ஸிடஸ்ஸை உடனே போன் செய்யச் சொன்னேன். உண்மையிலேயே என் பூட்ஸ் லேஸைக் கட்டும் அதே தருணத்தில் வீட்டில் ஒரு சம்பவம். பணிப்பெண் அக்கணத்தில் ஆண் குழந்தையைப் பெற்றிருந்தாள். நிம்மதி கலந்த பெருமூச்சு விட்டேன். முன்னுணர்வு மகனைப் பற்றியதல்ல என்று புரிந்து கொண்டேன்.
0 உள்ளுணர்வும் முன்னுணர்வும் அதிகம் உதவியதாகக் கூறுகிறீர்கள். வாழ்வின் முக்கியமான தீர்மானங்களை அவை மூலமே தீர்மானிக்கிறீர்களா.
முக்கியமானதை மட்டுமல்ல. எல்லாவற்றையுமே அவ்வாறே தீர்மானிக்கிறேன்,

0 உண்மையாகவா.
எல்லாவற்றையும்தான். எல்லா நாளும் எல்லாப் பொழுதும் எதைச் செய்தாலும் உள்ளுணர்வின் உறுத்தலாலேயே செய்கிறேன்.

0 முதன் முதலில் ஏற்பட்ட பெண் ஸ்பரிசத்தை நினைவுணர முடியுமா.
என்னைக் கவர்ந்த பெண்மணி ஐந்து வயதாக இருந்தபோது டீச்சர். அது வேறு வகையான ஈர்ப்பு. முதன்முதலில் உடம்பில் ஸ்பரிசத்தை ஏற்படுத்தியது வீட்டில் வேலை பார்த்த யுவதி. ஓரிரவு பக்கத்து வீட்டில்' இசை ஒலிக்க வெகுளியாக தோட்டத்துக்கு என்னை நடனமாட அழைத்துச் சென்றாள். தோள்கள் என்னுடன் உரச எனக்கு அப்போது ஆறு வயதிருக்கும். உணர்வுகளில் பற்றிக் கொண்ட வசீகரத்திலிருந்து இதுநாள்வரை மீள முடியவில்லை. அவ்வளவு கனத்தையும் அந்த உணர்வு வேகத்தின் ஆளுமையையும் மீண்டும் அடைந்ததே இல்லை.

0 இதுவரை சந்தித்தவர்களில் மிகவும் கவர்ந்தவர் யார்.
மனைவி மெர்ஸிடஸ்.

0 எழுத்தை விளக்க ஒரே உங்கள் வரி.
ஆதிக்கத் தனிமைவாசத்தின் கவிதை.
தமிழில் - பால் பிரகாஷ்
281