Monday 29 April 2019

வேளை வந்துற்ற போது - நகுலன் & நகுலன் எஸ்.ராமகிருஷ்ணன் நினைவுப் பாதை

http://subramesh.blogspot.com/2005/05/blog-post_111624109063459058.html
தீபம் பத்திரிக்கையில் நா. பா எழுத்தாளர்களிடம் "நானும் என் எழுத்தும என்ற தலைப்பில் கட்டுரைகள் கேட்டு வாங்கிப் போட்டு பிரசுரம் செய்தார், எழுத்தாளர்கள் ஏன் எழுதுகிறார்கள், அவர்களின் அக, புற நோக்கங்கள் என்ன போன்ற அரிய தகவல்கள் கொண்ட கட்டுரைகளாக அவை மலர்ந்தன. ஜாம்பவான்கள் பலர் எழுதிய அக் கட்டுரைகளை 'தீபம் கட்டுரைகள்' என்ற பெயரில் பல ண்டுகளுக்கு முன்னர் கலைஞன் பதிப்பகம் தொகுத்து உள்ளது.
நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ரா.சு நல்லபெருமாள், தவன், வல்லிக்கண்ணன், இந்திரா பார்த்தசாரதி, எம்.டி. வாசுதேவன் நாயர் உட்பட பலர் எழுதியுள்ளனர். வளரும் எழுத்தாளர்களும்,உளரும் எழுத்தாளர்களும் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்!
நகுலனின் இக்கட்டுரை முதலில் படித்தபோது என்னைக் கவரவில்லை, சுந்தர ராமசாமியின் கட்டுரை அப்போது ரொம்பப் பிடித்திருந்தது, இப்போது நகுலனின் கட்டுரை யோசிக்கத் தூண்டுகிறது. உள்ளுணர்வு சார்ந்த எழுத்துக்களை அறிவுஜீவிக்கதைகளுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு யோசிக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. உலகத்தில் அறிவு ஏற்படுத்திய குழப்பத்திற்கும், வன்முறைக்கும், போர்களுக்கும் வேறு ஒரு மாற்று அவசியம்.
இக் கட்டுரையில் நகுலன் கருத்துக்கள் எல்லாவற்றிற்கும் நான் உடன்படுகிறேன் என நினைத்து விடக்கூடாது. உதாரணத்திற்கு பிரசவவலி , சிரித்து சிரித்து வயிறு புண்ணாய்ப் போயிற்று. நானும் 'சிருஷ்டியின் பிரசவ வலியில் போய் படுக்கையில் படுத்துக் கொண்டேன்! பாய்ஸ் பட ஜனகன மெட்டில் நான் பிரசவித்தது பின் வரும் பாட்டுதான்
"ஜனகனமன ஜமக்காளம் விரி...படுத்துப் புரளு கபகபகப கும்பிக்குக் கொட்டு கடமுட கட...கக்"..சரி பொகட்டும் விடுங்கள் நகுலனும் அருள் குமரனும் பிரசவிப்பதைக் கவனித்துக் கொள்ளட்டும்.
மற்றொரு உதாரணம்: ராஜா ராவ் சொன்னதை நகுலன் மேற் கோள் காட்டி விட்டு மறுபடியும் பழைய குருடி என வாலரி சொன்னார் அது இது எனப் பேசப் போய்விடுகிறார், அப்படியானால் ராஜாராவிடமிருந்து இவர் என்ன கற்றுக் கொண்டார்?
கலைஞன் பதிப்பிற்கு நன்றியுடன் இக் கட்டுரையை இடுகிறேன், வாசித்துப் பாருங்கள்.


வேளை வந்துற்ற போது - நகுலன்

இந்தக் கட்டுரை ஒரு சுய நிர்ணயமாக, சுய பரிசோதனையாக முடிந்து விடக் கூடும் என்று இந்த முதல் வாக்கியத்திலேயே எனக்குத் தோன்றுகிறது. முதலாவதாக 'ஏன் எழுதுகிறேன்?' என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு அதற்குரிய பதில் என்னால் எழுதாமல் இருக்க முடியாமல் இருப்பதால், எழுதுகிறேன்' என்று பதில் அளித்து விட்டு நகர்ந்து விடுகிறேன். காரியம்தான் காரணம், னால், இந்த மாதிரிக் கட்டுரைகளில் இரண்டாம் பக்ஷமான காரணத்தை முதலில் கூறுவது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட விதி, இப்படி இதைப் பார்க்கையில், நண்பர் சுந்தரராமசாமி வேறொரு சந்தர்ப்பத்தில் வேறொரு விஷயத்தைப் பற்றிக் கூறிய மாதிரி, இக்காரணம் அவரவர் மனவார்ப்பைக் காட்டுகிறது. என்னைப் பற்றியவரை, சிருஷ்டி நியதியில் எனக்கு நான் யார் என்பது தெரியாது என்பதனால், என் உருவம் எனக்குப் புலப்பட, என் உலகம் எது என்று கண்டுபிடிக்க, எழுத்தை நாடுகிறேன்; ஏனென்றால் அது என் வழி. னால் என்னை நான் தெரிந்து கொள்ள ஏதாவது ஒரு பிரதிபலிப்புதான் பயன்படுகிறது; அந்தப் பிரதிபலிப்பு, பிரதிபலிப்பு என்பதினாலேயே, என் நிதர்சனக் காட்சியைத் தருவதில்லை; னால் எழுத்தில் இந்த ஐயமும் நிழலாடுவதால்தான் மற்ற பிரதிபலிப்புகளை விட இந்தப் பிரதிபலிப்பு ஓரளவு எனக்கு ஒரு நிதானத்தை அளிக்கிறது.

இது அடுத்த கேள்வி, என் அனுபவத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்ல முயற்சிக்கிறேன். கொஞ்ச வருஷங்களாக எங்கும் இடங் கிடைக்காத எழுத்தாளனாக இருந்த நிலை மாறி, புகுந்த இடமும் சில காரணங்களால் புளித்து விட்ட நிலை வந்ததும், ஏன் எழுதுகிறேன் என்பதைத் தெரிவித்திருந்த நான், இப்பொழுது எப்படி எழுதுகிறேன் என்பதையும் அறிந்து கொண்டிருக்கிறேன். என் நண்பர் உளநூலில் ஈடுபாடு மிக்க டாக்டர் மோகன் மேத்யூ கூறியபடி, ஒவ்வொரு சிருஷ்டிக் கலைஞனும் ஒரு பிரசவ வேதனையை அனுபவிக்கிறான்; முக்கியமாக ண் வர்க்கத்தைச் சேர்ந்தவனுக்கு இது பெண் வர்க்கத்துடன் கூறும் ஒரு அறைகூவலாகவே அமைந்துவிடுகிறது! பெண் வர்க்கத்தில் இருப்பவர்கள் சிருஷ்டிக் கலையில் ஈடுபடுவது அவர்களுக்கு இயற்கையாக வரும் சிருஷ்டி அனுபவம் அதிருப்தி தருவதாக இருக்கலாம் என்று கூறும் வாக்கு எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது. னால் ஒன்று; குறிப்பிட்ட கட்டங்களில் என் உள்ளத்தில் ஒரு கட்டுக்கடங்காத பரபரப்பு ஏற்படுகிறது. சமயம் எப்படியும் இருக்கலாம். அதிகாலை, நடுநிசி, பகல்வேளை, மாலை. இந்தப் பரபரப்பைக் கழித்துத் தீர்க்க நான் எழுத ரம்பிக்கிறேன். எழுதுகையில் சிறுகதை, சிறு கவிதையாக இருந்தால் ஒரே இருப்பில் இருந்து எழுதி விடுவது என் வழக்கம். இந்தக் கட்டங்களில்கூட சிருஷ்டி வேதனையின் அதிதீவிரத் துடிப்பைத் தீர்க்க நடுநடுவே கட்டிலில் சென்று நான் படுத்துக் கொள்வதும் உண்டு! பல சிரியர்கள் கூறியபடி, இந்த முதல் கட்டத்தில் என்னால் என் படைப்பை விமர்சகனாக மாறி நின்று பார்க்க முடிவதில்லை. நான் செய்ததைச் சீர்திருத்தச் சில சமயங்களில் ஒரு கால இடையீடு வேண்டியிருக்கிறது. ங்கிலக் கவிஞன் கூறிய சிருஷ்டி விஷயத்தில் அனுபவத்திற்கும் அதைக் கலையாக மாற்றும் கட்டத்திற்கும் ஏற்படும் கால இடையீடு இயற்கையாக அமைவது; இது செயற்கையாக நான் அமைத்துக் கொள்வது. அடுத்தபடியாகக் கதைக்கு கரு எவ்வாறு அமைகிறது என்ற கேள்வி. ராமசாமி எழுதிய மாதிரி அனுபவம் வெறும் கண்ணாடிச் சில்; எழுதுபவனின் திறமைதான் அதற்கு ரஸப் பூச்சுப் பாய்ச்சுகிறது. நான் எழுதத் தேர்ந்தெடுக்கும் அனுபவமும் என் மன வார்ப்பைக் காட்டுகிறது. இந்த அனுபவத் துணுக்கு அடி மனதிலிருந்து சிருஷ்டிப் பரபரப்பில் வெடித்துக் கொண்டு வருகிறது. இதற்கு ஒரு பூரணத்துவத்தைக் கொடுப்பது எழுதுபவனின் படிப்பு, மனோ விலாசம், அனுபவம் மேலும் பலவற்றினால் உருவாக்கப்பட்ட அடி மனதின் செழிப்புத்தான். இங்கு ஒரு உதாரணம் கொடுக்கலாமே என்று தோன்றுகிறது. நான் ஒரு நண்பருடன் வெகு நாட்களாகப் பழகி வந்தேன். ஒரு நாள் முதல் முறையாக அவர் வீட்டுக்குப் போனபோது அது பிரம்மாண்டமான ஒரு கட்டிடமாக இருந்தும், அதில் மூவர் மாத்திரம் குடியிருந்தது, எனக்கு அதில் ஒரு வெறுமை உணர்ச்சி வியாபித்திருந்தாக ஒரு பிரம்மை; என்னவோ அப்போது 'காகப்கா'வின் இலக்கியம் ஞாபகம் வந்தது. அடுத்த தடவை அந்த நண்பர் என்னை மாடியில் சந்திக்காமல் கீழே உட்கார வைத்துப் பேசியதும், ஒரு பெண் மாடி ஏறிச் சென்றதும் என் மனத்தைக் கவ்விப் பிடித்தது. அதிலிருந்து உருவானது 'சாதனை' என்ற கதை. சிருஷ்டி வெறியில் எழுதுகையில் மனத்தை ஒரு நிலையில் நாட்டி, வெளியிலிருந்து வரும் தாக்குதல்களை ஒரு வகையில் புறந்தள்ள லாகிரிப் பொருள்கள் உதவுகின்றன. எழுதிய பிறகு நாம் எழுதியதற்கு இரண்டாவது அபிப்பிராயம் வேண்டுமா என்றால், அனுபவம் வாய்ந்த கலைஞனுக்கு அவன் அபிப்பிராயம்தான் முக்கியம் என்பது என் கட்சி. னால், நமது சூழ்நிலையில் கலைஞனும் மனிதன் என்ற பலவீனத்தால் இந் நிலையைக் காக்க ஓரளவு கஷ்டப்படுகிறான்.

நான் தமிழ் நாட்டில் முதல் வரிசையில் நிற்கும் சில சிரியர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பை அடைந்திருக்கிறேன். இவர்களில் பலரும் இலக்கிய விஷயமாக அதிகமாகப் பேச முன் வராதது எனக்கு ஓரளவு ச்சரியத்தை அளித்தது. என்றாலும், நான் சந்தித்த சிலரிடமிருந்து இலக்கிய விஷயமாக நான் சில்லறை சில்லறையாகக்( இது அவர்களுக்குத் தெரியுமோ என்பது எனக்குத் தெரியாது) கடன் வாங்கியிருக்கிறேன். ஸ்ரீ க.நா.சு., சி.சு.செ., 'மௌனி', சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி இவர்களைத் தவிர ஸ்ரீ ராஜாராவ் அவர்களையும் குறிப்பிடலாம். க.நா.சு. விடமிருந்து தெரிந்து கொண்ட நமது ஐதீகத்திற்கும், பண்பாட்டிற்கும், இலக்கியத்துக்கும் தத்துவார்த்தமாக இருக்கும் உறவைப் பற்றி இன்னமும் சர்ச்சை செய்து கொண்டிருக்கிறேன். அவர் வற்புறுத்தும் கனமான உலக இலக்கியப் படைப்புகளுடன் வேண்டிய உறவின் அவசியத்தைப் பற்றியும் நினைத்ததுண்டு; சி. சு. செ. கலைஞனுக்குள்ள மூர்த்தண்யத்தைப் பற்றிச் சில விஷயங்களை அறிந்து கொள்ள வாய்ப்பு அளித்திருக்கிறார். சுந்தர ராமசாமி தனது சுய நிர்ணயத்தால் பல இலக்கிய தரமான விஷயங்களைச் சர்ச்சை செய்யும் ற்றலைக்கண்டு நான் பலமுறை வியந்ததுண்டு. நம்பி, 'நான் எதை எப்படி எழுதினாலும் எழுதுவதனைத்தும் என் மூலம் வந்து நானாகத்தானே விரிகிறது.' என்று சொன்னது இதை எழுதுகையில் ஞாபகம் வருகிறது. 'மௌனி' ஒரு குறிப்பிட்ட தத்துவ அடிப்படையில் அனுபவம் முழுவதையும் கூர்மையாகவும் நுணுக்கமாகவும் சர்ச்சை செய்வதைக் கண்டிருக்கிறேன். இவரும் க. நா. சு. போல் ஐரோப்பிய சிருஷ்டிக் கலைஞர்களின் சற்றுக் கனமான நூல்களுடன் நல்ல பரிச்சியம் உடையவர் என்று தோன்றியது. 'அவர் சொல்வதோ, நான் சொல்வதோ முக்கியமன்று. நீ உன் வழி செல்' என்று, ராஜா ராவ் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார்.

பாதிப்புகளைப் பற்றியவரை நான் ங்கில மொழிபெயர்ப்பில் டால்ஸ்டாய், டாஸ்டாவெஸ்கி, இப்ஸென், பிராண்டெல்லோ, ப்ரூஸ்ட் என்பவர்களையும் ங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், ஹென்றி ஜேம்ஸ், ஜாய்ஸ், எலியட், டன், பெக்கட் முதலியவர்களைப் படித்திருக்கிறேன். அமெரிக்க சிரியர்களில் பாக்னரையும், கவிகளில் மரியம் மூர், வாலஸ் ஸ்டீவன்ஸ் என்னைக் கவர்ந்திருகிறார்கள். ப்ராய்டிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. இந்தப் பெயர்கள் உடனடியாக ஞாபகம் வருபவை. நவீன இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவன் தலால் நிறையப் படிப்பதுண்டு. னால், இவர்களின் சாயல் என் எழுத்தில் வரக் கூடாது என்றும் எனக்குண்டு. நமது இலக்கியத்தில் பாரதம் (இன்னமும் முழுதும் படிக்கவில்லை படிக்க வேண்டும்) கைவல்ய நவநீதம், திருமந்திரம், உபநிஷத்துகள், கீதை இவை என் மனதைத் தொட்டிருக்கின்றன. என்னைப் பற்றியவரை, வார்த்தைகளின் அழுத்தத்திலும், நுணுக்கத்திலும் கிரியா சக்தியாக இயங்குவதிலும் தமிழ் கவிதையின் உச்ச கட்டம் குறளில்தான் அடைந்திருகிறது என்று தோன்றுகிறது. எனக்கு கம்பன்கூட இரண்டாம் பக்ஷம்தான். நவீன தமிழ் இலக்கியத்தில் முக்கியமாகக் குறிப்பிடக் கூடியவர்கள் 'மௌனி', 'புதுமைப்பித்தன்', க. நா. சு. கியவர்கள்தான். இதைத் தவிர எனக்கு மலையாள இலக்கியத்திலும் சிறிது பழக்கம் உண்டு. எனக்கு இலக்கியத்தில் ஒரு நிதான நிலையின் அவசியத்தை உணர்த்தியவர் மதிப்பிற்குரிய நண்பர் ஸ்ரீ கே. அய்யப்பப் பணிக்கர் என்பதையும் குறிப்பிட வேண்டும். முடிவாக என் எழுத்துக்கெல்லாம் முக்கிய பாதிப்பாக சுசீலாவைக் காண்கிறேன்.

சுமார் 10 வருஷங்களில் 3 நாவல், 20 கவிதைகள், ஏறக்குறைய 20 கதைகள் எழுதியிருக்கிறேன். கவிதையைப் பற்றி ஓரிருவர் 'ஓ, இன்னாரா, மாம்; கவிதை எழுதுகிறார்' என்று சொல்லி நிறுத்திக் கொள்வதைக் கண்டேன். மற்றபடிக் கதைகளைப் பற்றியோ பிரசுரமான ஒரு நாவலைப் பற்றியோ வாசக வட்டாரங்களில்-விஷயமறிந்த-அறியாத இருவகை வர்க்கங்களிலும் ஒருவித சலனமும் ஏற்படவில்லை என்பதையும் கண்டேன். இந்தக் கட்டத்தில் ங்கில சிரியை 'விர்ஜீனியா உல்ப்' ஐ பற்றிக் குறிப்பிட வேண்டியிருகிறது. அவள் தனது 'தற்கால நாவல் இலக்கியம்' என்ற பிரசித்தமான கட்டுரையில் ஒவ்வொரு இலக்கிய சிரியனும் மொழிக்கு பிடிகொடுக்காத வாழ்வின் புதிரை தெளிவு படுத்தத்தான் எழுதுகிறான் என்றும், சம்பவங்களைக் கோவைபடுத்துவதிலும், பாத்திரங்களை உத்திபூர்வமாக வனைவதிலும் இவ்வுண்மை பொய்ப்பிக்கப்படுகிறது என்றும், இலக்கியத்தில் கதாம்சத்தின் கலப்பில்லாமல், இந்த உண்மையைச் சித்தரிப்பதில்தான் அவன் நாட்டம் என்று எழுதியிருக்கிறாள்.

எடுத்துக்காட்டாக ருஷ்ய சிரியர்களைக் காண்பிக்கிறாள். ஈ. எம். பாஸ்டர் கூடத் துரதிர்ஷ்டவசமாக கதையில் கதாம்சம் வேண்டியிருக்கிறதே என்று கூறுகிறார். ஜாய்ஸ், பாக்னர், ஜேம்ஸ் இவர்களின் கதைகளில் கதாம்சம் எப்படி அமைந்திருக்கிறது? பெக்கட்டை எந்த சராசரித் தமிழ் வாசகன் அறிந்து அனுபவிக்க முடியும்? இவ்வளவு தூரம் ஏன் எசுதுகிறேன் என்றால் கதையில் கதாம்சம் அவ்வளவு முக்கியமில்லை என்பதற்கே!

எனது 20 கதைகளில் குறைந்தது 10 எனக்கு ஓரளவு சுமாராகப் படுகின்றன. அவற்றில் ஒன்று 'சுதேசமித்ரன்' வாரப்பதிப்பிலும், மற்றவை 'சரஸ்வதி', 'இலக்கியவட்டம்', 'எழுத்து' இவற்றிலும் வெளிவந்தவை. இவைகளைப் பற்றி ஒருமுகமான அபிப்பிராயம், தெளிவில்லை, ஓட்டமில்லை, சிறுகதையில்லை, கதையின் கருவேயன்றி கதையல்ல என்பவையே. என்னால் ஸ்தூல உருவைப் பளிச்சென்று படம் பிடிக்க முடிவதில்லை. மேலும் உருவம் வேண்டும் என்றாலும் இப்படித்தான் உருவம் அமைய வேண்டும் என்ற நிர்பந்தத்தை நான் ஒத்துக் கொள்வதில்லை. மிகைப்படுத்தி எழுதுவதைவிட, சூசகமாக எழுதுவதில்தான் எனக்கு நம்பிக்கை. மேலும் பத்திரிக்கை கதைகளை என்னால் படிக்க முடிவதில்லை. ஏனென்றால் கலைக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு அவசியம்; னால் கலை அப்பட்டமான வாழ்க்கைப் படமும் இல்லை. னால் பத்திரிக்கைக் கதைகள் செல்லரித்துப் போன நீதிகளை, ரீதிகளை இன்னமும் ட்சி செலுத்துவதாகப் 'பொய்' யாக ஏற்றுக் கொண்டு நடைபெறுவதால், நடைமுறைக்கு நேர் விரோதமாக இவைகள் காணப்படுகின்றன. காலத்தில் கட்டுண்டுதான்-காலத்தை மீறி ஒரு இலக்கிய சிருஷ்டி நிற்கிறது. னால், இவ்வளவும் சொல்வதால் என் கதைகள் முற்றும் வெற்றி பெற்றவையாகவும் நான் கருதவில்லை. என்னை யார் என்று தெரிந்து கொள்ளும் ஒரு முயற்சியில், என் அனுபவ உலகை அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியாகவே நான் கதைகளைக் கருதுகிறேன். என் கதைகள் ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் வரவில்லை. பிறகு இலக்கியப் பத்திரிகைகளிலும் வெளியிடுவது சாத்தியமாகிவிட்டது. பிறகு அண்மையில் ஒரு நாள் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கையில் 'அழகி' முன்னுரையில் க. நா. சு புஸ்தகத்தில், புஸ்தகமாக வரவென்றே சில கதைகளை எழுதியதாக எழுதியது ஞாபகம் வரவே, பத்திரிகைகளைப் படையெடுப்பதைவிட, இலக்கியப் பத்திரிகையாசிரிகளின் தத்துப் பிள்ளைகளில் ஒருவனாகவோ, சிஷ்ய கணங்களில் ஒருவனாகவொ சேர்வதைவிட, சில நல்ல சிறு கதாசிரியர்கள் சொன்ன மாதிரி என் கதைகளை அவர்கள் எழுதுவதையோ (இந்தக் கதையை நான் எழுதுவதென்றால் இன்னமும் நன்றாக எழுதியிருபேன்) நான் விரும்புவதில்லையாதலால், ஒரு நோட் புக்கில் என் கலை ஈடுபாட்டை, எனக்குள்ள கலைத் திறனை சோதனை செய்ய, வேறு யாருக்குமின்றி, எனக்காகவே ஒரு சில சிறுகதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். இது அவசியமா என்று கேட்டால், இன்று தமிழ் இலக்கிய உலகம் இருக்கும் நிலையில் இதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. இவைகளைத் திரட்டிப் பார்க்கையில் எழுத்தாளன் கற்பனை எவ்வாறு ஒரு குப்பை கூடை என்பதும், இந்தக் குப்பைக் கூளத்தில்தான் எவ்வாறு ஒன்றிரண்டு தானியங்கள் மிஞ்சுகின்றன என்பதையும் சொல்லவேண்டும். இதுகாறும் எழுதிய கதைகளில் 'சாதனை', 'ஒரு பெண்', 'ஜிம்மி', '?', 'ஒரு கதை', 'அசவத்தமென்னும் ஒரு மரம்', 'யாத்திரை', 'ஈசுவரய்யரும் சங்கரராமின் காரியதரிசியும்', 'அகம்', என்பவைதான் சற்று மனதிற்கு ஒரு தெம்பைத் தருகின்றன. இவற்றில் பலவும் பத்திரிகைகளில் வராதவை; புஸ்தகமாகவும் வர வாய்ப்பில்லாதவை! எனவே என்னைப் போன்ற எழுத்தாளருக்கு நான் கூறக்கூடியது பத்திரிகைகளையோ, இலக்கியக் குழுக்களையோ சாராமல் தன் நிர்ப்பந்தத்தினால் தனக்காகவே அவன் எழுதிக் கொள்ளப் பழக வேண்டும் என்பதே. இப்படி எழுதுவதால் அவன் கலையில் தெம்பும் வலிவும் காணும்; அதிக பக்ஷமாக நல்ல கதைகளும் பிறக்கும். பிறகு பிரசுரம் இருக்கவே இருக்கிறது. னால், இது முடியுமா? அவ்வளவு எளிதன்று என்பதுதான் உண்மையான பதில்!

எனது பிரசுரமான 'நிழல்கள்' ஒரு குறுநாவல். பக்கங்கள் குறைந்திருப்பதால் குறுநாவல் என்றுதானே கூற வேண்டும். இந்த நாவலும் என் கொள்கைப்படி என்னை அறிவதற்கு, என் உலகைப் பரிசீலனை செய்யும் ஒரு முயற்சி. இதைப் பற்றி நான் அபிப்பிராயம் கேட்காமலே ஒரு இலக்கிய மேதை "இதில் பாத்திர சிருஷ்டி மோசம்; நீ தத்துவம் பேசுவதாக நினைத்துக் கொண்டு என்னவோ எழுதியிருக்கிறாய்" என்றார். இன்னொருவர் " வழுக்கிக் கொண்டு போகிறது." என்றார். ஒரு ங்கிலப் பேராசிரியர் "வாழ்க்கையின் கசப்பான பிரத்தியட்சம் தெரிகிறது; என்றாலும் கலாபூர்வமாக இல்லை. நீ என்னதான் எழுதினாலும் ஜனரஞ்சகமான சிரியனாக முடியாது. உன் சை என்னவானாலும் ஜேன் ஸ்டினை மாடலாக வைத்துக் கொண்டு எழுது" என்றார். இதற்கெல்லாம் என் கவிதை ஒன்றில் எழுதியபடி "பேசினார்கள்; பேசாமல் கேட்டேன்" என்றுதான் சொல்ல வேண்டும். னால், நான் மதிக்கும் ஒரு சிருஷ்டி கர்த்தா "இந்த நாவல் நன்றாக இருக்கிறது; அடுத்த நாவலை எழுதுங்கள்" என்றார். இதற்கென்றே காத்துக் கொண்டிருந்தவன் மாதிரி அடுத்த நாவலை எழுதி முடித்தேன். நான், தற்காலத்தில் நாவல் புற உலகைப் புறக்கணித்து அக உலகை அறிவதில்தான் ஈடுபட்டிருக்கிறது என நினைக்கிறேன். னால் அதே சமயத்தில் நாவல் தனி மனிதனை சமூக உறுப்பினனாகச் சித்தரிக்கவும் கட்டுப்பாடுடையது. இந்த அக-புற உலக இணைப்பு சரியாக அமைந்திருப்பதால்தான் நான் க. நா. சு. வை தமிழிலேயே சிறந்த நாவலாசிரியர் என நினைக்கிறேன். மற்றபடி என் 'நிழல்களை'ப் பற்றி எனக்கு நேரில் தெரிவிக்கப்பட்ட விமர்சனங்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. 'நிழல்கள்' புஸ்தகமாக வந்துவிட்டது என்பதும், அதைப் பற்றிக் குறிப்பிட்ட இவ்விமர்சனங்கள் இன்னாரால் இவ்வாறு வந்தன என்பதும் என்னைப் பற்றியவரை மிக உபயோகமான விஷயங்கள். மற்றபடி, நாவலுக்கு இன்னொரு நோட் புக்!
கவிதைதான் இலக்கியத்தின் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பொழுது கவிதையில் படிமத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பறைசாற்றுகிறார்கள். னால், படிமம் கூட மனநிலையின் சூக்கும உருவாக, சிந்தாகதியின் பிரதிரூப பிம்பமாகச் செயல்படுவதில்தான் சிறக்கிறது. கவிதையில் இசையின் தொடர்பு வேண்டுமென்றாலும் அது மிகைப்படுவதால் மலினமடைகிறது. அதனால்தான் பழங்கவிதையைப் பின்பற்றுவதாகக் கற்பனை செறிவு இல்லாத யாப்புக் கவிதைகள் ஓசைக் குப்பைகளாக இருக்கின்றன. என் போன்ற சிலரின் அனுபவம் யாப்புக் கவிதையில் காணப்படும் ஓசை அமைதி பிடிபடுவதில்லை என்பது மட்டுமல்லாமல், சுயேச்சா கவிதையிலும் ஒரு ஓசை ஒழுங்கு காணப்படுகிறது என்பதுமாகும்! ஒரு தமிழறிஞர் பாசுரங்கள் யாப்புக் கடங்காதவை என்கிறார். இது உண்மையா என்பது எனக்குத் தெரியாது!
கவிதையைப் பற்றி எழுதுகையில் எனக்கு வாலரி கூறியது ஞாபகம் வருகிறது: வசனத்தில் வார்த்தை ஓர் உத்தேசத்துடன் உபயோகப்படுவதால், அவ்வுத்தேசம் கழிந்தவுடன் அது அழிகிறது என்றும், கவிதையில்தான் அக்ஷரங்கள் அமரத் தன்மைப் பெறுகின்றன என்றும் கூறுகிறார். இது இவ்வாறு அன்று என நிருபிக்க முடியும் (வசனத்தைப் பற்றி) என்று டி. எஸ். எலியட் கூறுகிறார். மேலும் வாலரி கவிதையில் பாஷை வசனத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு இயங்குகிறது என்றும், இதை எடுத்துக் காட்டுவது உபயோகமாக இருக்குமென்கிறார். இக் கருத்து புதுக் கவிதைக்காரர்களுக்குப் பயன்படலாம்.

என் கவிதைகளில் சுசீலா என்ற சங்கேதச் சொல் மூலம் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தைக் கொண்டு பல அனுபவங்களை நான் அளக்க முயற்ச்சிக்கும் கவிதைகள் 'கொல்லிப்பாவை' வரிசை. 'காட்சி' அனுபவச் சிதறல்களைச் கலை வண்ணமாக்கும் முயற்சி. நான் கவிதை உட்செவியில் எப்போதும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொள்கையைச் சார்ந்தவன். என் கவிதைகளை இன்னமும் சோதனா பூர்வமாகச் செய்து பார்க்க வேண்டுமென்ற சை எனக்கு.

இதுகாறும் நான் எழுதியவற்றிலிருந்து எனது எழுத்தாள நண்பர்கள் தோல்வி மனப்பான்மை உறக்கூடாது என்பதையும் கூற வேண்டும். நான் எழுத்துலகில் புகுவதற்கு ஒரு கட்டத்தில் ஒரு சில சிரியர்கள் எனக்கு உதவினார்கள்; அடுத்த கட்டத்தில் வேறு எழுத்தாளர்கள். இதை நினைவில் வைத்துக் கொண்டுதான் ஒரு கவிதையில் எழுதினேன்.

"வேளை வந்துற்றபோது நாதன் வடிவில் நாலிருவர் வந்து போவார்"னால், ஒரு எழுத்தாளனுக்குத் தன் நிலை அறாமலிருப்பதுதான் முக்கியம் என்பதையே நான் வற்புறுத்துகிறேன். தமிழ்நாட்டில் பத்திரிக்கைகள், இலக்கியத் தரம் வாய்ந்தவை அல்லாதவை, புஸ்தக ஸ்தாபனங்கள் எல்லாமே பெயரெடுத்த சிரியர்களைத்தான் அங்கீகரிக்கின்றன. ஒருவெளை இது இப்படித் தான் இருக்க முடியும். னால், இந்தக் கட்டத்தை அடையும் வரை ஒரு எழுத்தாளன் சற்றுக் கஷ்டப்பட வேண்டியதுதான்! இந்தக் கட்டத்தை அடைந்த பிறகும் அவன் தன் சுயத்தன்மையை விட்டுக் கொடுக்காமலிருந்தால் அவன் சாதனை தரத்திலும் வளத்திலும் சிறப்புறும். எது என்னவானாலும் நண்பர் நீல பத்மனாபன் பாஷையில் ஒரு எழுத்தாளன் வாழ்வே "ஏகாந்த யக்ஞத்தின் சீதள ஒளியில்தான் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது" என்று சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொள்கிறேன்.
-நன்றி மரத்தடி

****
நகுலன்
எஸ்.ராமகிருஷ்ணன்
நினைவுப் பாதை
ஒவ்வொரு முக்கிய எழுத்தாளரையும் தேடிச் சென்று பார்ப்பது என்று எனது இருபது வயதில் புறப்பட்டபோது, அது ஒரு சாகசப் பயணம் போல அமையக்கூடும் என்றே நினைத்தேன்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழிலும் மற்ற இந்திய மொழிகளிலும் எழுதிக்கொண்டு இருக்கும் எத்தனையோ எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்பில் ஒன்றிரண்டைத் தவிர, பெரும்பாலானவை கசப்பான அனுபவங்களே!
எழுத்தாளன் ஒரு விசித்திரப் பிறவி என்பதில் நம்பிக்கையற்றவன் நான். எழுதுவது என்பது ஒரு வேலையல்ல, பொறுப்பு உணர்ச்சி என்று நம்புகிறவன்.
தாலூகா அலுவலகம் ஒன்றில், ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பம் செய்வதற்காகச் சென்றிருந்தேன். அங்கே உள்ள அதிகாரி, Ôஎன்ன வேலை செய்கிறீர்கள்?Õ என்று கேட்டதும், Ôரைட்டர்Õ என்றேன்.

அந்த அதிகாரி பென்சிலை உருட்டிக் கொண்டே, Ôஎந்த ஸ்டேஷன்ல?Õ என்று கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. கேள்வியும் புரியவில்லை. அவராகவே Ôபோலீஸ் ரைட்டர்தானே?Õ என்ற பிறகுதான் கேள்வியின் பின்புலம் எனக்குப் புரிந்தது. எழுத்தாளர்களைத் தேடிக் காண்பது என்ற எனது ஊர்ச் சுற்றலில்தான் நகுலனை முதன்முதலாகச் சந்தித்தேன். நகுலன் ஒரு நல்ல கவிஞர், நாவலாசிரியர்.
திருவனந்தபுரத்தில் அவரது வீடு, கௌடியார் என்ற பகுதியில் இருக்கிறது. நான் பார்க்கச் சென்ற நாட்களில், அவரது Ôநாய்கள்Õ என்ற நாவல் வெளியாகியிருந்தது. Ôநாய்களைப் பற்றி ஒருவர் நாவல் எழுதியிருக்கிறாரே!Õ என்று ஆச்சரியத்துடன் அதை வாசிக்கத் துவங்கினேன். நாவலில் ஓர் உருவகமாக, நாய் என்ற படிமத்தைப் பயன்படுத்தி இருந்தார்.
நாவல் முழுவதும் மெல்லிய கேலியும் கவித்துவமும் தத்துவத் தெறிப்புகளும் நிறைந்திருந்தன. முன்னதாக நகுலன் கவிதைகள் மீது கொண்ட ஈடுபாடு, இந்த வாசிப்பினை அதிகப்படுத்தவே, அவரைக் காண்பதற்காகச் சென்றிருந்தேன்.
நகுலன் திருமணம் செய்துகொள்ளாதவர். ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வுபெற்று தனிமையில் வாழ்பவர். அவருக்குள்ள ஒரே துணை ஒரு பூனை மட்டும்தான்!
ஒரேயரு வேலைக் காரப் பெண் உண்டு. அவர், பல வருடங்களாக அந்த வீட்டில் வேலை செய்து, நகுலனின் சகோதரி போல, அவர் மீது அதிக அக்கறை கொண்டவராக இருந்தார்.
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர் நகுலன். அவரது வீடெங்கும் புத்தகங்களே நிரம்பி இருந்தன. பசுமையான மரங்களடர்ந்த ஒரு சரிவில் உள்ளது அவரது வீடு. நகுலன் தன்னைத் தேடி வருபவர்களோடு கொள்ளும் உறவு விசித்திரமானது. சந்தித்த மறு நிமிடமே, ஒரு குழந்தையைப் போல ஏதேதோ கேட்கத் துவங்கிவிடுவார். அது ஒருவிதமான நட்பாக வளர்ந்து செல்லும்.
‘Ôநீங்கதான் ராமகிருஷ்ணனா?’Õ
‘Ôஆமாம்!’Õ என்று தலையாட்டினேன்.
அவர் சிரித்துக்கொண்டே, ‘Ôநீங்கதான் ராமகிருஷ்ணன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?’Õ என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியாமல், நானும் சிரித்தேன்.
நகுலன் தனது புன்னகை படரும் முகத்தோடு, Ô‘எவ்வளவு வருஷமா ராமகிருஷ்ணனா இருக்கீங்க?’Õ என்று கேட்டார். கேலியாக இருந்தாலும், இந்தக் கேள்வி எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.
Ô‘பிறந்ததிலிருந்து ராமகிருஷ்ணனாகவே இருக்கிறேன்’Õ என்றேன். அவர் அதை ரசித்தவர் போல, ‘Ôபிறந்ததில் இருந்தா?’Õ என்று சத்தமாகச் சிரித்தார். Ôஅந்தச் சிரிப்பின் ஆழம் எத்தகையது?Õ என்று வியப்போடு பார்த்தேன்.
அவர் கட்டிலின் அருகில் வந்து, பூனை சுருண்டு படுத்துக்கொண்டது. அவர் பூனையைப் பார்த்தபடியே, ‘Ôநான் என் பூனைக்குப் பெயரே வைக்கவில்லை. அது ஏதாவது ஃபீல் பண்ணுமா?Õ’ என்று கேட்டார். எனக்கு எப்படிப் பதில் சொல்வது என்றே புரியவில்லை. நான் அமைதியாக, ‘Ôபூனையை எப்படிக் கூப்பிடுவீர்கள்?’Õ என்று கேட்டேன். Ô‘பூனையைப் பூனை என்றுதான் கூப்பிடுவேன். அதுதானே சரியான முறை?’Õ என்றார்.
இந்த உரையாடலை வேற்று மனிதன் யாராவது கேட்டால், Ôஎன்ன இது பிதற்றல்?Õ என நினைப்பான். ஆனால், அதுதான் நகுலன்!
அவரது பரிகாசமும் ஒவ்வொன்றின் மீது அவர் எழுப்பும் கேள்விகளும் குழந்தைகளைப் போலவே விசித்திரமானதும் ஆழமானதும் ஆகும். உலகின் மீதான அவரது வியப்பும் ஈடுபாடும் தர்க்கங்களை மீறியது.
பேச்சு எங்கெங்கோ சுற்றி, எழுத்தாளர்களைப் பற்றிய தாகத் திரும்பியது. நகுலன், தான் ஒரு எழுத்தாளரைப் பார்க்கப் போனதைப் பற்றி நினைவுகூர்ந்தார்.
1980&களில் பிரபலமாக இருந்த ஒரு நாவலாசிரியரைப் பார்க்க நகுலன் சென்று இருந்தார். எழுத்தாளர் ஒரு வியாபாரியாகவும் இருந்தார். நகுலன் பார்க்கச் சென்றபோது, அவர் தனது கடையில் இருந்துகொண்டே, Ôஆள் ஊரில் இல்லைÕ என்று எதனாலோ சொல்லி அனுப்பி விட்டார். நகுலனுக்கு Ôஅவர் உள்ளேதான் இருக்கிறார்Õ என்று உறுதியாகத் தெரிந்தது. ஆகவே, மாலை வரை அங்கேயே காத்திருந்து, எழுத்தாளர் வெளியே வந்ததும், பின்னாடியே சென்று முதுகில் ஒரு தட்டுத் தட்டி, Ôசார்... நானும் ஊரில் இல்லைÕ என்று சொல்லிவிட்டு, மறு நிமிடமே புறப்பட்டு திருவனந்தபுரம் வந்துவிட்டாராம். இதைச் சொல்லி முடித்த நிமிடத்தில், நகுலன் கண்களில் இருந்த கேலி, சிறுவர்களுக்கு மட்டுமே உரியது.
நான் பேசிக்கொண்டு இருந்த காலையில், மருத்துவச் சோதனை ஒன்றுக்காக அவர் வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. மதியம் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு, வெளியே வந்துவிட்டேன். திரும்பவும் மாலையில் நான் சென்றபோது, காலையில் கேட்ட கேள்விகளையே மறுபடி கேட்டார்.
‘Ôநீங்கதானே ராமகிருஷ்ணன்?’Õ
‘Ôஆமாம்!’Õ
‘Ôஅப்போ, காலையில் Ôராமகிருஷ் ணன்Õனு ஒருத்தர் வந்திருந்தாரே, அவர் உங்களுக்குத் தெரிந்தவரா?Õ’ ‘Ôஓரளவுக்குத் தெரியும்’Õ என்றேன். நகுலனின் சிரிப்பு பீறிட்டது. ‘Ôஅப்போது அவரிடம் பேசிக்கொண்டு இருந்ததை உங்களிடமும் பேசலாம், இல்லையா?Õ என்று கேட்டார். உரையாடலைத் தத்துவத்தின் உயர்ந்த நிலைகளை நோக்கி நகர்த்திப் போகும் கலை அவருக்கே உரியது.
ஒரு நாள் முழுவதும் நகுலனோடு இருந்தேன். மாலை, நானும் அவரும் திருவனந்தபுரம் சாலையில் நடந்து சென்றோம். அவர் அழகான இளம்பெண் ஒருத்தியைக் காட்டி, Ôஇவள் அழகாக இருக்கிறாளா?Õ என்று கேட்டார். மிக அழகாக இருப்பதாகச் சொன்னேன். அவர், Ôகண்ணில் பார்த்தாலே அழகு தெரிந்துவிடுகிறது, இல்லையா? அது எப்படி சார்?Õ என்று கேட்டார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
நகுலன் சாலையில் செல்லும் சைக்கிள்காரனைப் பற்றி, தெருநாயைப் பற்றி, கோடையில் பெய்த மழையைப் பற்றி, இறந்துபோன அம்மாவைப் பற்றி எனப் பேச்சின் சுழல்வட்டத்துக்குள் நீண்டுகொண்டு இருந்தார்.
அவரைச் சந்தித்து வந்த நீண்ட காலத்துக்கு, அந்தக் கேள்வி என் மனதில் நீந்திக்கொண்டே இருந்தது. நான் ராமகிருஷ்ணன் என்று எனக்கு எப்படித் தெரியும்?
சிறுவர்களின் தீரா விளையாட்டைப் போல, உலகை ரசிக்கும் பக்குவமும் மனதும் அவரிடம் இருந்ததை அறியத் துவங்கினேன். அதன் பிறகு பலமுறை நகுலனைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பும் ஒரு தனித்த அனுபவம்!
ஒரு முறை நகுலன் தன் வீட்டின் வாசலில் உட்கார்ந்தபடி, சாலையில் போகிறவர்களுக்குக் கையசைத்துக்கொண்டு இருந்தார். பள்ளிச் சிறுவர்கள் சிலர் கையசைத்துப் போனார்கள். அவர் கையசைத்தபடியே என்னிடம் கேட்டார்...
Ô‘நான் இறந்துபோன பிறகு, Ôஇந்த வீட்டில் கை காட்டும் கிழவன் ஒருவன் இருந்தான்Õ என்று குழந்தைகள் நினைப் பார்கள், இல்லையா? அதற்குத்தான் கையசைக்கிறேன்’Õ என்றார். இந்த ஆதங்கத்தின் கீழ் இருந்த துக்கம், ஒரு தேளின் விஷக்கடுப்பைப் போல என் உடலெங்கும் தாக்கியது.
நகுலனை Ôஎழுத்தாளர்களின் எழுத்தாளர்Õ என்பார்கள். அவருக்கு வயது முற்றி, எண்பத்து இரண்டைத் தாண்டி நீள்கிறது. ஆனாலும், அவர் மனதில் இலவம் பஞ்சு காற்றில் பறப்பது போல வார்த்தைகள் பறந்து கொண்டே இருக்கின்றன.
நகுலனின் கதைகளில் பிடித்தமானது, Ôஎட்டு வயதுப் பெண் குழந்தையும், நவீன மலையாளக் கவிதையும்Õ என்ற கதை. இதைக் கதை என்று சொல்ல முடியாது. ஒரு நிகழ்வு!
அதுவும், ஒரு சிறுமி நகுலனின் வீட்டுக்கு வந்து, அவரோடு பழகியதைப்பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு என்றுகூடச் சொல்லலாம். இக்கதை கவிதையின் சூட்சுமம் பற்றியது.
சிமி என்ற எட்டு வயதுச் சிறுமி, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கிறாள். அவள் ஒரு நாள் Ôபடிப்பதற்காக ஏதாவது புத்தகம் வேண்டும்Õ என்று நகுலனின் வீட்டுக்கு வருகிறாள்.
நகுலன், அவள் படிப்பதற்காக குஞ்சுண்ணி என்ற மலையாளக் கவிஞரின் புத்தகத்தைத் தருகிறார். அந்தக் கவிதைத் தொகுதியை வாசித்து விட்டு, குழந்தை மறுநாள் Ôசிமி குமி உமிக்கரிÕ என்று ஒரு கவிதையை எழுதி வந்து காட்டுகிறது.
அக்கவிதைகூட குஞ்சுண்ணி கவிதை போலவே சந்தமும் சொற்சிக்கனமும் கொண்டு இருக்கிறது. நகுலன் அந்தச் சிறுமியின் கவிதையை ரசித்தபடி, Ôநல்ல கவிதை, வாசிப்பவரை உடனே அதைப் போல ஒன்றை உருவாக்கச் செய்வதுதான்Õ என்று பாராட்டுகிறார்.
அதோடு, Ôகவிதை என்பது சப்த ஒழுங்கால் உருவாவது என்று சிறுமிக்குப் புரிந்திருக்கிறதுÕ என்று பாராட்டுகிறார்.
இக்கதை வழக்கமான கதைகளைப்போலப் பெரிய சம்பவம் எதையும் சொல்லவில்லை. மாறாக, குழந்தைகளின் விளையாட்டைப் போலத்தான், கவிதையும் ஒரு எதிர்பாராமையும் அழகும் கொண்டு இருக்கிறது என்ற நிதர்சனமான உண்மையை வெளிப் படுத்துகிறது.
எழுத்தின் ரகசியங்களைக் கற்றுக்கொள்வதற்கு நாம் எழுத்தாளனை அணுகினால், அது நிச்சயம் ஏமாற்றமாகவே முடியும்.
Ôபெரிய கத்தியைத் தேர்ந்தெடுக்கிறாயா, இல்லை, சிறிய கத்தியைத் தேர்ந்தெடுக்கிறாயா என்பது முக்கியம் இல்லை. எதிரியின் இதயத்துக்கும் உன் கத்தி முனைக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்பதுதான் முக்கியம்Õ என்று யுத்த சாஸ்திரம் கூறுகிறது.
அந்த நூலை எழுதியவன் ஒரு பௌத்த பிக்கு. ஒருவகை யில் இதுதான் எழுத்தின் ரகசியம். இதைக் கற்றுத் தருபவன், கதையை எழுதியவன் இல்லை. மாறாக, ஒரு நாடோடி.
கற்றுக் கொள்வதற்கு ஆசானை விடவும் மனம்தான் முக்கியமாகத் தேவைப்படுகிறது. மனதைக் குழந்தையைப் போல வைத்துக்கொள்வது எளிதானதா என்ன?
நகுலன் திருவனந்தபுரத்தில் வாழ்ந்துவருபவர். எண்பத்திரண்டு வயதான இவர், தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தவர்.
பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். Ôஎழுத்துÕ இதழில் எழுதத் துவங்கியவர்.
நகுலன் கவிதைகள், நாய்கள், ரோகிகள், வாக்குமூலம், மஞ்சள்நிறப் பூனை போன்றவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். இவர் தொகுத்த Ôகுரு«க்ஷத்திரம்Õ இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் நகுலன்.
http://www.vikatan.com/av/2005/may/22052005/av0602.asp
posted by Chandramukhi @ 8:32 AM

Monday 15 April 2019

ஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ


FRIDAY, JANUARY 10, 2014

ஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ

http://amudu-gowripalan.blogspot.com/2014/01/blog-post_5323.html

ஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர்
தமிழில்: ஆர். சிவக்குமார்.
இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவில் பிறந்தார்.இத்தாலியில் வளர்ந்தார். இவர் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தியநாவலாசிரியர்களில் தலை சிறந்தவராகக் கருதப்படுகிறார். இவர்எழுதியுள்ள முக்கியமான நூல்கள்: தி காஸ்ட்ல் ஆப் க்ராஸ்ட் டிஸ்டினீஸ்(நாவல், 1973), இன்விஸிபில் சிட்டீஸ் (1972), டிபிக்கல்ட் லவ்ஸ்(சிறுகதைகள், 1984), ரோட் ஆப் சன் ஜியோவன்னி (1994) மற்றும் அன்டர் த ஜகர்ஸன் (1992).

திருமதி ஸ்டெஃபனியா ஆர். காலை ஆறு மணிக்குத் தன் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தாள். அதுதான் முதல் தடவை.
கார் அவளுடைய வீடு இருந்த கட்டடத்திற்கு முன்பாக இல்லாமல் சற்று முன்னாலேயே திருப்பத்தில் நின்றது. அந்த இடத்தில் தன்னை விட்டுவிடும்படி அவள்தான் ஃபர்னெரோவை கேட்டுக்கொண்டாள்; ஏனென்றால், கணவன் ஊரிலில்லாத சமயத்தில் அதிகாலையில் ஓர் இளைஞனுடன் அவள் வீடு திரும்புவதைக் காவலாள் பார்ப்பதை அவள் விரும்பவில்லை. என்ஜினை நிறுத்தியவுடன் ஃபர்னெரோ அவளைத் தன் கையால் அணைக்க முற்பட்டான். வீடு அருகிலிருந்தமை எல்லாவற்றையும் மாற்றிவிட்டதைப் போல ஸ்டெஃபனியா அவனிடமிருந்து சட்டென பின்னகர்ந்தாள். காரிலிருந்து அவசரமாக வெளியேறிய அவள், காரைக் கிளப்பிக்கொண்டு போய்விடும்படி ஃபர்னெரோவுக்குக் குனிந்து சைகை செய்துவிட்டு, கோட்டின் கழுத்துப்பட்டியில் முகம் புதைந்திருக்க வேகமாக
நடக்க ஆரம்பித்தாள். அவள் தன் கணவனுக்கு துரோகம் செய்பவளா? கூட்டுக் குடியிருப்புகள் நிறைந்த அந்தக் கட்டடத்தின் பிரதான கதவு இன்னும் பூட்டியே இருந்தது. ஸ்டெஃபனியா இதை எதிர்பார்க்கவில்லை. அவளிடம் சாவி இல்லை. சாவி இல்லாததனால்தான் முந்தைய இரவை அவள் வெளியே கழித்தாள். நடந்த கதை அதுதான். இரவின் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதைத் திறக்க நூறு வழிகள் இருந்திருக்கலாம்; அல்லது தன்னிடம் சாவி இல்லை என்பது முன்னதாகவே அவளுக்கு நினைவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவே இல்லை; வேண்டுமென்றே அவள் அப்படி செயல்பட்ட மாதிரி இருந்தது. இரவு உணவுக்கும் திரும்பிவிட முடியும் என்று அவள் நினைத்ததால் சாவி இல்லாமலேயே பிற்பகலில் வீட்டைவிட்டுக் கிளம்பினாள். ஆனால் அவள் பல காலம் பார்க்காதிருந்த அவளுடைய பெண் நண்பர்களும், அவர்களின் ஆண் நண்பர்களும் முதலில் இரவு உணவுக்கும், பின் குடிக்கும், நடனத்திற்கும் என்று அவளை ஒவ்வொருவர் வீடாக இழுத்தடித்தனர். விடியற்காலை இரண்டு மணிக்குத் தன்னிடம் சாவி இல்லையென்பது நினைவுக்கு வந்தபோது மிகவும் தாமதமாகிவிட்டது. அதற்கெல்லாம் காரணம், அந்த ஃபர்னெரோவுடன் அவள் கொஞ்சம் காதல் வயப்பட்டிருந்ததுதான். காதலா? கொஞ்சம் கூடுதல் குறைச்சலில்லாமல் விஷயங்களை உள்ளவாறே பார்க்க வேண்டும். அவனுடன் அந்த இரவை அவள் கழித்திருந்தாள்,உண்மைதான். ஆனால் அப்படிச் சொல்வது மிகை; அப்படிச் சொல்வதுசரியுமல்ல. அவள் வசித்த கட்டடத்தின் கதவு திறக்கப்படுவதற்கான நேரம்வரை அவனுடைய தோழமையில் அவள் இருந்தாள். அவ்வளவுதான். ஆறுமணிக்குத் திறந்துவிடுவார்கள் என்று நினைத்து வீடு திரும்ப அவள் அவசரப்பட்டாள். ஸ்டெஃபனியா இரவை வெளியே கழித்ததை ஏழு மணிக்கு வரும் துப்புரவு செய்யும் பெண் தெரிந்து கொள்வதையும் அவள் விரும்பவில்லை. அவளுடைய கணவன் வேறு இன்று வீடு திரும்புகிறான்.
கதவு இன்னும் திறக்கப்படாமலிருப்பதைக் கண்டாள். ஆளரவமற்ற தெருவில் அவள் மட்டும்தான் இருந்தாள். எல்லாவற்றையும் உருப்பெருக்கிக் காட்டுவது போன்ற அந்த அதிகாலை ஒளியில் அவள் பகலின் வேறெந்தநேரத்தை விடவும் துலக்கமாகத் தெரிந்தாள். ஒரு கலக்க உணர்வு சுரீரென்று அவளை உறைத்தது; கணவன் அருகில்,அவன் அரவணைப்பில் ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் அனுபவிக்கும் நீண்ட ஆழ்ந்த தூக்கத்துக்கு அவள் ஏங்கினாள். இந்த ஏக்கம் ஒரு கணம்தான்; குறைவாகக்கூட இருக்கலாம். அந்தக் கலக்கத்தைத் தான் உணர்வோம் என்று அவள் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் உண்மையில் அவள் அதை உணரவேயில்லை. காவலாள் வெளிக்கதவை இன்னும் திறக்காமலிருந்தது சலிப்பூட்டியது. ஆனாலும் அந்த அதிகாலைக்காற்றிலும், அந்த நேரத் தனிமையில் இருப்பதில் உண்டான ரத்த ஓட்டத்துள்ளலிலும் ஒருவகையான பரவசம் இருக்கத்தான் செய்தது .ஃபர்னெரோவை அனுப்பிவிட்டதில் அவளுக்கு வருத்தம் ஒன்றுமில்லை;அவன் அருகில் இருந்திருந்தால் அவள் கொஞ்சம் பதற்றத்துடனேயே இருந்திருப்பாள். மாறாக, தனியாக இருந்ததில் அவள் வேறுவகையாகஉணர்ந்தாள். சிறுபெண்ணாக இருந்தபோது உணர்ந்ததை அது கொஞ்சம் ஒத்திருந்தாலும் முற்றிலும் வேறானது.
இரவை வெளியே கழித்ததில் அவளுக்குக் கொஞ்சமும் குற்றஉணர்வில்லை. இதை அவள் ஒத்துக்கொண்டேயாகவேண்டும்.அவளுடைய மனசாட்சி சுமையின்றி இருந்தது. அது கவலையற்றுஇருந்தது. இப்போது அந்தச் செயலைத் துணிந்து அவள்மேற்கொண்டுவிட்டதாலா? அல்லது கடைசியில் அவள் தன்னுடைய தாம்பத்ய கடமைகளை ஒதுக்கி வைத்து விட்டதாலா? அல்லது அதற்கு மாறாக, எல்லாவற்றையும் மீறி ஆசையை எதிர்த்து நின்று தன்னுடைய தாம்பத்ய விசுவாசத்தைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டதாலா?ஸ்டெஃபனியா தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். இந்த குழப்பமும்,உறுதியற்ற நிலையுமே காலை நேரக் காற்றின் குளிர்ச்சியுடன் சேர்ந்துஅவளைக் கொஞ்ச நேரம் திடுக்குற வைத்தன. அவள் தன்னைஒழுக்கங்கெட்டவள் என்று கருதுவாளா, இல்லையா? தன்னுடைய நீண்டகோட்டின் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்துக்கொண்டு அவள்முன்னும் பின்னுமாகக் கொஞ்ச நேரம் நடந்தாள். ஸ்டெஃபனியாவுக்குக் கல்யாணமாகி இந்த இரண்டு வருடங்களில் கணவனுக்குத் துரோகமிழைப்போம் என்று அவள் ஒருபோதும் நினைத்ததில்லை. கல்யாணமான ஒரு பெண் என்ற முறையில் ஏதோ ஒரு மாதிரியான எதிர்பார்ப்பு அவளுக்கிருந்தது; ஏதோ ஒன்று அவளுக்குக் கிடைக்காதது போன்ற உணர்வு அது. தன் சிறுபெண்தனத்திலிருந்து அவள் முழுமையாக இன்னும் விடுபடாதது போல இருந்தது. ஊர் உலகத்தின் முன் கணவனுக்கு சமதையாக ஆகும்படி, அவனைச் சார்ந்து வாழும் ஒரு புதிய சிறுபெண்தனத்திலிருந்து அவள் வெளியேற வேண்டும். அவள் இதுநாள் வரை காத்துக்கொண்டிருந்தது இந்த ஒழுக்கக் கேட்டுக்குத்தானா? ஃபர்னெரோ ஓர் ஒழுக்கங்கெட்டவனா? இரண்டு கட்டடங்கள் தாண்டி சாலையின் எதிர்புறமிருந்த ஒரு மதுபான விடுதி திறந்திருப்பதை அவள் பார்த்தாள். உடனடியாக அவளுக்கு ஒரு சூடான காஃபி தேவைப்பட்டது. விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். ஃபர்னெரோ ஒரு சிறு பையன். அவனைக் குறித்து பெரிய வார்த்தைகளை உபயோகிப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது.அவனும் அவளும், அவனுடைய சிறிய காரில் இரவு முழுக்க மலைகளை முன்னும் பின்னுமாக வலம் வந்ததும், நதியோரத்துச் சாலையில் பயணம்செய்தும் பொழுது புலரும்வரைச் சுற்றினார்கள். ஒரு கட்டத்தில்பெட்ரோல் தீர்ந்துபோய் காரைத் தள்ளிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்த பெட்ரோல் நிலைய பணியாளை அவர்கள் எழுப்பவேண்டியதாயிற்று. அந்த இரவு முழுக்க அவர்கள் குழந்தைகளின்குதூகலத்தோடு நகரத்தைச் சுற்றினார்கள். மூன்று நான்கு முறைஃபர்னெரோவின் முயற்சிகள் பத்தானவையாக இருந்தன; ஒருமுறைஅவன் தான் தங்கியிருந்த விடுதியின் வாசற்படிக்கே அவளை அழைத்துக்கொண்டுபோய் தீர்மானமான குரலில் சொன்னான்: 'அலட்டிக் கொள்ளாமல் நீ இப்போது என்னுடன் மேல்மாடிக்கு வரவேண்டும்.'ஸ்டெஃபனியா மேல்மாடிக்குப் போகவில்லை. அப்படி நடந்து கொண்டது முறைதானா? பிறகு என்ன ஆகும்? அதைப் பற்றி இப்போது நினைக்க அவள் விரும்பவில்லை. ஒரு இரவைத் தூக்கமின்றி கழித்ததில் அவள் சோர்வடைந்திருந்தாள். அல்லது, இந்த அசாதாரண மனநிலையில் இருந்ததால் ஒருவேளை தான் தூக்கக் கலக்கத்தில் இருப்பதையே அவள் இதுவரை உணரவில்லையோ என்னவோ; ஆனால் படுக்கைக்குப் போய்விட்டால் ஒளி மங்கி மறைவது போல அவள் தூக்கத்தில் அமிழ்ந்து விடுவாள். தன்னை எழுப்ப வேண்டாமென்று சமையலறை சிலேட்டில் வேலைக்காரிக்குக் குறிப்பெழுதி வைத்துவிடுவாள். அவளுடைய கணவன் வந்த பிறகு ஒருவேளை அவளை எழுப்பக்கூடும். இன்னும் அவள் தன் கணவனை நேசிக்கிறாளா? அவள் அவனை நேசிப்பது உண்மைதான். அதன் பிறகு என்ன? அவள் தன்னைத்தானே இனி கேள்வி கேட்டுக்கொள்ளமாட்டாள். அவள் அந்த ஃபர்னெரோவோடு லேசாகக் காதல் வயப்பட்டிருந்தாள். லேசாகத்தான். பாழாய்ப்போன முன் கதவை எப்போதுதான் திறக்கப் போகிறார்கள்? மதுபான விடுதியில் நாற்காலிகள் அடுக்கப்பட்டும், மரத்தூள் தரையில் பரப்பப்பட்டும் இருந்தன. கவுண்ட்டரில் பணியாள் மட்டும் இருந்தான். ஸ்டெஃபனியா உள்ளே நுழைந்தாள். அந்த அகால நேரத்தில் அங்கு இருப்பது பற்றி அவள் கொஞ்சமும் சங்கோஜப்படவில்லை. யாருக்கு என்ன தெரியும்? அவள் அப்போதுதான் விழித்தெழுந்திருப்பாள்; ரயில் நிலையம் நோக்கிப் போய்க்கொண்டோ அல்லது வந்து சேர்ந்தோ இருப்பாள். எப்படியோ யாருக்கும் அவள் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை. இந்த எண்ணம் அவளுக்கு சந்தோஷம் தந்ததை அவள் உணர்ந்தாள். பணியாளிடம், 'சூடான கடுங் காஃபி' என்று சொன்னாள். அவள் இதற்கு முன் வந்தேயிராத இந்த விடுதியின் பணியாளுக்கும் அவளுக்கும் ஏற்கனவே ஏதோ அறிமுகம் இருந்ததைப்போல அவளுடைய குரலில் நம்பிக்கையும் உறுதியும் ஏற்பட்டிருந்தன.
'சரி அம்மா, யந்திரம் ஒரு நிமிடத்தில் சூடானவுடன் காஃபி தயாராகிவிடும்' என்று சொன்ன பணியாள் தொடர்ந்தான்: 'காலை நேரத்தில் நான் சுறுசுறுப்பு பெற எந்திரம் சூடாகத் தேவைப்படும்நேரத்தைவிட அதிக நேரம் பிடிக்கிறது.'
சிரித்துக்கொண்டே ஸ்டெஃபனியா குளிரினால் காலருக்குள் கழுத்தை இறுக்கிக்கொண்டே 'பர்ர்ர்...' என்று சொன்னாள்.
கடையில் வேறொருவன், ஒரு வாடிக்கையாளன். ஒரு ஓரமாக நின்று ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தான். ஸ்டெஃபனியாவின் நடுக்கத்தைக் கேட்டு அவன் திரும்பியபோதுதான் அவளும் அவனைப் பார்த்தாள். இரண்டு ஆண்கள் அங்கு இருந்தது திடீரென்று அவளை சுயநினைவுக்கு ஈர்த்தது போல கவுண்டருக்குப் பின்புறமிருந்த கண்ணாடியில் தன்னைக் கவனத்துடன் பார்த்தாள். இரவை வெளியே கழித்தவள்போல நிச்சயம் அவள் தோன்றவில்லை; கொஞ்சம் வெளிறிப் போயிருந்தாள். அவ்வளவுதான். பையிலிருந்து சிறிய ஒப்பனைப் பெட்டியை எடுத்து மூக்குப் பகுதியில் பவுடர் போட்டுக்கொண்டாள். அந்த ஆள் இப்போது கவுண்டர் அருகே வந்துவிட்டான். வெண்பட்டுக் கழுத்துப் பட்டியைக் கொண்ட கருப்பு ஒவர் கோட்டையும், நீலநிற சூட்டையும் அவன் அணிந்திருந்தான். யாரையும் குறிப்பாகப் பார்த்துப் பேசாமல் அவன் சொன்னான்: 'காலையில் இந்த நேரத்தில் விழித்திருப்பவர்கள் இரண்டு வகைப்படுவார்கள். இன்னும் விழித்திருப்பவர்கள் மற்றும் இப்போதுதான் விழித்தவர்கள்.'
தன் கண்களை அவன்மீது பதிக்காமல் ஸ்டெஃபனியா லேசாகச் சிரித்தாள். ஆனாலும் ஏற்கனவே அவள் அவனை நன்றாகப் பார்த்திருந்தாள். பரிதாபமும் சாதாரணமும் நிரம்பிய முகம் அவனுடையது. வயோதிகத்தை அடையும் முன்பாகவே தம்மையும் உலகத்தையும் புகாரில்லாமல் ஏற்றுக்கொண்டு, புத்திசாலித்தனத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் இடைப்பட்ட நிலைக்கு வந்து சேர்ந்துவிட்ட மனிதர்களில் அவனும் ஒருவன்.
அவன் தொடர்ந்தான்: '... ஒரு அழகான பெண்ணை நீ பார்க்கும்போது அவளுக்குக் காலை வந்தனம் சொல்லிவிட்டு...' அவன் தன் வாயிலிருந்த சிகரெட்டை எடுத்துவிட்டு ஸ்டெஃபனியாவை நோக்கித்தலை வணங்கினான். ஸ்டெஃபனியாவும் கொஞ்சம் குதர்க்கமான குரலில் 'காலை வந்தனம்' என்றாள்.
'... உன்னை நீயே கேட்டுக்கொள்கிறாய்: இன்னுமா? இப்போதுதானா? இப்போதுதானா? இன்னுமா?... அங்குதான் புதிரே இருக்கிறது' என்றான்.
விளையாட்டில் ஈடுபடுத்தப்பட்டும் விளையாட மனமில்லாதவளின் குரலில் 'என்ன?' என்றாள் ஸ்டெஃபனியா. அவன் அவளை விவஸ்தையில்லாமல் உன்னிப்பாகக் கவனித்தான். ஆனால் அவள் 'இன்னும்' விழித்திருப்பவள் என்பதைத் தெரிந்து கொண்டால்கூட ஸ்டெஃபனியா கவலைப்படப் போவதில்லை.
'நீங்கள்?' என்று அவள் மறைமுகக் கேள்வியுடன் கேட்டாள். தூங்காமல் அலையும் இரவு நேர ஆந்தை என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்பவன் அவன்; அப்படிப்பட்டவன் என்று தன்னை முதல் பார்வையிலேயே மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ளாதபோது வருத்தம் அடைபவன்.
'என்னையா கேட்கிறீர்கள்? நான் இன்னும் விழித்திருப்பவன்! எப்போதும் இன்னும் விழித்திருப்பவன்!' பிறகு தான் சொன்னதைப்பற்றி ஒரு கணம் யோசித்தான். 'பார்த்தால் உங்களுக்குத் தெரியவில்லையா?' அவன் அவளைப் பார்த்து சிரித்தாலும் இவ்விஷயத்தில் தன்னைத்தானே கிண்டல் பண்ணிக்கொள்ளத்தான் அவன் விரும்பினான். அங்கேயே ஒரு விநாடி நின்று தன் எச்சில் கசந்ததைப்போல அதை மெதுவாக விழுங்கினான். 'பகல் வெளிச்சம் வௌவாலைக் குகைக்குள் துரத்துவது போல என்னை என் இருப்பிடத்திற்குத் துரத்துகிறது...' என்று நாடக பாத்திரம் போல தன்னை மறந்து அவன் சொன்னான்.
'இதோ நீங்கள் கேட்ட பால். இது அந்த அம்மாவுக்குக் காஃபி' என்று சொல்லி பணியாள் கொண்டு வந்து வைத்தான். அவன் தன் கிளாசை ஊதியவாறு மெதுவாக உறிஞ்சிக் குடித்தான்.
'நன்றாக இருக்கிறதா?' என்று ஸ்டெஃபனியா கேட்டாள்.
'மகா மோசம்' என்று அவன் சொன்னான். 'விஷத்தை உடலிலிருந்து அகற்றும் என்கிறார்கள். ஆனால் இன்றைய நிலையில் அது என்னை என்ன செய்துவிட முடியும்? ஒரு விஷப்பாம்பு என்னைக் கடித்தால் அதுதான் செத்துப்போகும்.'
'உங்களுக்கு ஆரோக்கியம் இருக்கும் வரையில்...' என்றாள் ஸ்டெஃபனியா. வரம்பு மீறி அவள் அவனை கிண்டல் செய்கிறாள் போல.
'எனக்குத் தெரிந்த ஒரே விஷமுறிவு, நீங்கள் என்னை சொல்லச் சொன்னால்...' அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.
'நான் எவ்வளவு தரவேண்டும்?' என்று பணியாளிடம் கேட்டாள் ஸ்டெஃபனியா,
'...நான் எப்போதும் தேடிக்கொண்டிருக்கும் அந்தப் பெண்...' என்று அந்த இரவு ஆந்தை தொடர்ந்தான்.
கதவைத் திறந்துவிட்டார்களா என்று பார்ப்பதற்காக ஸ்டெஃபனியா வெளியே போனாள். நடைபாதையில் கொஞ்சதூரம் போனவள் கதவு இன்னும் மூடியிருப்பதைப் பார்த்தாள். இதற்கிடையில் அவளைத் தொடரும் எண்ணம் உடையவனைப் போல அவனும் மதுபான விடுதியிலிருந்து வெளியே வந்துவிட்டிருந்தான். ஸ்டெஃபனியா திரும்பி நடந்து விடுதியில் மீண்டும் நுழைந்தாள். இதை எதிர்பார்க்காத அவன் ஒரு கணம் தயங்கி தானும் திரும்ப ஆரம்பித்தான். ஒருவகையான,நடப்பதை ஏற்றுக்கொள்ளும் தன்மை மேலிட, லேசாக இருமிக்கொண்டு தன் வழியே போக ஆரம்பித்தான்.
'இங்கு சிகரெட் விற்கிறீர்களா?' என்று ஸ்டெஃபனியா பணியாளைக் கேட்டாள். அவளிடம் இருந்தவை தீர்ந்து போயிருந்தன; வீட்டிற்குப் போனவுடனேயே புகைக்க விரும்பினாள். சிகரெட் கடைகள் இன்னும் திறக்கவில்லை.
பணியாளரிடமிருந்து ஒரு சிகரெட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு காசைக் கொடுத்தாள். விடுதியின் வாசற்படிக்கு அவள் மீண்டும் போனாள். கழுத்தில் கட்டப்பட்ட தோல்வாரை மூர்க்கத்தனமாக இழுத்துக்கொண்டு வேட்டைநாய் ஒன்று அவளை அநேகமாக மோதிக்கொண்டு உள்ளே நுழைந்தது. அதை இழுத்துப் பிடித்துக்கொண்டுஒரு வேட்டைக்காரன் பின்னால் வந்தான். துப்பாக்கி, குண்டுகள் ஆகியவை பொருத்தப்பட்ட இரும்புப் பட்டை மற்றும் வேட்டையாடப்பட்டவற்றை போட்டுக் கொள்ளும் பை ஆகியவற்றோடு அவன் இருந்தான். நாயைப் பார்த்து 'ஃப்ரிசெத்! உட்கார்!' என்று அதட்டியவன் விடுதிக்குள்ளே பார்த்து 'காஃபி' என்று கத்தினான்.
நாயைத் தடவிக்கொண்டே 'அழகாயிருக்கிறது' என்று சொன்ன ஸ்டெஃபனியா, 'இது மோப்ப நாயா?' என்று கேட்டாள்.
'இது ப்ரெத்தினிலிருந்து வந்த இனத்தைச் சேர்ந்த வேட்டை நாய்' என்று சொன்னான். அவன் இளமையாகவும், வெட்கப்படும் சுபாவம் காரணமாக ஒரு மாதிரி கரடு முரடாகவும் இருந்தான்.
'என்ன வயது?'
'ஏறத்தாழ பத்து மாதங்கள். ஃப்ரிசெத் ஒழுங்காக நடந்து கொள்.'
'சரி, கௌதாரிகள் எங்கே?' என்று விடுதியின் பணியாள் கேட்டான்.
'நாய்க்குப் பயிற்சிக் கொடுப்பதற்காகத்தான் வெளியே போகிறேன்' என்று வேட்டைக்காரன் சொன்னான்.
'ரொம்ப தூரம் போவீர்களா?' என்று ஸ்டெஃபனியா கேட்டாள்.
அதிக தூரத்தில் இல்லாத ஒரு பகுதியை அவன் குறிப்பிட்டான். 'காரில் போனால் அது ஒரு தூரமேயில்லை. எனவே பத்து மணிக்கெல்லாம் திரும்பிவிடுவேன். இந்த வேலை...'
'அந்த இடம் நன்றாக இருக்கும்' என்று ஸ்டெஃபனியா சொன்னாள்.
அவர்கள் இருவரும் எதைப்பற்றியும் அதிகம் பேசவில்லையென்றாலும் உரையாடலை நிறுத்திவிட அவளுக்கு மனமில்லை.
'அங்க பாலை வனமான புதரடர்ந்த ஒரு பள்ளத்தாக்கு இருக்கிறது. காலை நேரத்தில் பனிப்படலம் இல்லாததால் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடியும்... நாய் எந்தப் பறவையையாவது துரத்தினால்...'
'பத்து மணிக்கு எனக்கு வேலை ஆரம்பித்தால் தேவலை. ஒன்பதே முக்கால் வரை தூங்குவேன்' என்று பணியாள் சொன்னான்.
'ஆமாம், எனக்கும் தூங்க ஆசைதான்; இருந்தாலும், எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது அங்கு போக வேண்டியிருக்கிறது...என்னவென்று தெரியவில்லை, எனக்கு அது பிடித்திருக்கிறது... அதுஒரு வெறியாகவே என் உள்ளே இருக்கிறது...' என்று வேட்டைக்காரன் சொன்னான்.
இந்த இளைஞன் தன்னுடைய வெளிப்படையான சுய மெய்ப்பித்தலுக்குப் பின்னால் ஒரு கூர்மையான பெருமிதத்தையும், சுற்றியுமுள்ள தூங்கும் நகரத்தின்மீது ஒரு வெறுப்பையும், வித்தியாசமாக உணர வேண்டுமென்ற உறுதியையும் மறைத்து வைத்திருப்பதை ஸ்டெஃபனியா உணர்ந்தாள்.
'தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம், வேட்டைக்காரர்களாகிய நீங்கள் எல்லாருமே பைத்தியக்காரர்கள் என்பது என் கருத்து; அதாவது நடுராத்திரியில் எழுந்து கொள்ளும் இந்த வேலை...' என்றான் பணியாள்.
'அப்படி இல்லை, அவர்களை நான் புரிந்துகொள்கிறேன்' என்றாள் ஸ்டெஃபனியா. 'ஹ்ம்ம், யாருக்குத் தெரியும்? வேறெந்த வெறியையும் போன்றுதான் இதுவும்' என்று சொன்ன வேட்டைக்காரன் இப்போது ஸ்டெஃபனியாவை நன்றாகப் பார்க்க ஆரம்பித்திருந்தான்.
வேட்டையாடுதலைப் பற்றிய தன் பேச்சில் அவன் முன்பு வெளிப்படுத்தியிருந்த உறுதி இப்போது இல்லாத மாதிரி தோன்றியது. ஸ்டெஃபனியாவின் முன்னிலை, அவனுடைய முழு அபிப்ராயமும் தப்பானதோ என்றும், மகிழ்ச்சி என்பது அவன் தேடிக்கொண்டிருந்த மாதிரி இல்லாமல் வேறான ஒன்றோ என்றும் அவனை சந்தேகிக்க வைப்பது மாதிரி இருந்தது. 'உண்மையாலுமே உங்களைப் புரிந்துகொள்கிறேன். இதைப் போன்ற ஒரு காலை...' என்று ஸ்டெஃபனியா சொன்னாள்.
பேச விரும்பியும் என்ன பேசுவது என்று தெரியாதவன் போல வேட்டைக்காரன் சில விநாடிகள் இருந்தான். 'இம்மாதிரியான உலர்ந்த, குளிர்ச்சியான சீதோஷ்ணநிலையில் நாயால் நன்றாக நடக்க முடியும்' என்றான் அவன். காஃபியைக் குடித்துவிட்டு அதற்குக் காசுகொடுத்தான். வெளியே போக நாய் அவனை இழுத்துக்கொண்டிருந்தது.ஆனால் அவன் தயங்கியபடியே அங்கேயே நின்றிருந்தான். 'நீங்களும்ஏன் என்னுடன் வரக்கூடாது?' என்று ஸ்டெஃபனியாவை அவன்தடுமாற்றத்துடன் தயங்கியபடி கேட்டான்.
ஸ்டெஃபனியா சிரித்தாள். 'ஓ, மீண்டும் நாம் சந்திக்க நேர்ந்தால் அதற்கு ஏற்பாடு செய்வோம், என்ன?'
வேட்டைக்காரன் 'ம்ம்' என்று சொல்லிவிட்டு மேலும் ஏதாவது பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பார்ப்பதற்காகக் கொஞ்சம் தயங்கி நகர்ந்தான். 'சரி, நான் போகிறேன். வணக்கம்.' இருவரும் கையசைத்துக் கொண்டார்கள். நாய் அவனை இழுக்க வெளியே போனான். ஒரு தொழிலாளி உள்ளே வந்தான். ஒரு கிளாஸ் வைனுக்கு ஆர்டர் கொடுத்தான். பிறகு தன்னுடைய கிளாசை உயர்த்திப்பிடித்து, 'காலையில் சீக்கிரம் கண்விழிக்கும் எல்லாருடைய ஆராக்கியத்திற்கும் - குறிப்பாக
அழகான பெண்களுக்கு' என்றான். அவன் இளைஞனாக இல்லாவிட்டாலும் உல்லாசமாகத் தோற்றமளித்தான். ஸ்டெஃபனியா பணிவாக 'உங்களுடைய ஆரோக்கியத்துக்கு' என்று சொன்னாள்.
'இந்த உலகமே உங்களுக்கு சொந்தமானது என்ற உணர்வே காலையில் உங்களுக்குத் தோன்றும் முதல் எண்ணம்' என்று அவன் சொன்னான். 'மாலையில் இல்லையா?' ஸ்டெஃபனியா கேட்டாள். 'மாலையில் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறோம். எதைப்பற்றியும் நாம் நினைப்பதில்லை. நினைத்தால் அது தொல்லையைத்தான் உண்டாக்கும்...' என்றான்.
'காலையில் நான் வரிசையாக ஒவ்வொரு பிரச்சனையாக யோசிக்கிறேன்' என்று விடுதியின் பணியாள் சொன்னான்.
'ஏனென்றால் காலையில் வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னால் உனக்கு ஒரு சந்தோஷமான பயணம் தேவைப்படுகிறது. நீ என்னைப்போல செய்ய வேண்டும். குளிர்காற்று என் முகத்தில் பட நான் மோட்டார் சைக்கிளில் தொழிற்சாலைக்குப் போகிறேன்...'
'காற்று யோசனைகளைத் துரத்திவிடும்' என்றாள் ஸ்டெஃபனியா.
'பார், அந்தப் பெண் என்னைப் புரிந்துகொள்கிறார். அப்படிப் புரிந்து கொள்வதால் அவர் என்னுடன் குடிக்க வேண்டும்' என்று தொழிலாளி சொன்னான்.
'நன்றி, நான் குடிப்பதில்லை.'
'காலையில் அதுதான் நமக்குத் தேவைப்படுகிறது. இரண்டு கிளாஸ் வைன்' என்று பணியாளைப் பார்த்து சொன்னான்.
'நான் உண்மையில் எப்போதும் குடிப்பதில்லை; நீங்கள் என்னுடைய ஆரோக்கியத்திற்காகக் குடித்தால் நான் சந்தோஷப்படுவேன்.'
'நீங்கள் எப்போதுமே குடிப்பதில்லையா?'
'எப்போதாவது மாலை வேளையில்.'
'அங்குதான் தப்பு செய்கிறீர்கள், புரிகிறதா...?'
'ஒவ்வொரு நபரும் நிறைய தவறுகள் செய்கிறோம்...'
'உங்கள் ஆரோக்கியத்திற்கு' என்று சொல்லிவிட்டு அவன் தொடர்ந்து இரண்டு கிளாஸுகளையும் காலி செய்தான். 'ஒன்றும் ஒன்றும் இரண்டு. நான் விளக்குகிறேன் பாருங்கள்...'
அந்த வித்தியாசமான ஆண்களுக்கு மத்தியில் ஸ்டெஃபனியா தனியாக உட்கார்ந்து அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். அவள் அமைதியாக,தன்னம்பிக்கை நிறைந்தவளாக இருக்கிறாள்; அங்கு எதுவும் அவளை நிலைகுலையச் செய்யவில்லை. இதுதான் அன்றைய காலையின் புது சம்பவம்.
தன் வீடிருக்கும் கட்டடத்தைத் திறந்து விட்டார்களா என்று பார்ப்பதற்காக அவள் விடுதியிலிருந்து வெளியே வந்தாள். அந்தத் தொழிலாளியும் வெளியே வந்து மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து கையுறைகளை அணிந்துகொண்டான். 'உங்களுக்குக் குளிரவில்லையா?' என்று ஸ்டெஃபனியா கேட்டாள். அவன் தன் நெஞ்சில் தட்டிக் காண்பித்தான். செய்தித்தாள்கள் சரசரக்கும் சப்தம் கேட்டது. 'நான்
கவசம் அணிந்திருக்கிறேன்' பிறகு அவன் உள்ளூர் பேச்சு வழக்கில் 'நான் வருகிறேன், அம்மணி' என்று சொன்னான். ஸ்டெஃபனியாவும் அதே வழக்கில் அவனுக்கு விடை கொடுத்தபின் அவன் தன் வாகனத்தை ஒட்டிக்கொண்டுப் போய்விட்டான்.தன்னால் இப்போது கைவிட்டுவிட்டு மீளமுடியாத ஏதோ ஒன்று நடந்துவிட்டது என்பதை ஸ்டெஃபனியா உணர்ந்தாள். இப்படி ஆண்களுடன் இரவு ஆந்தை, வேட்டைக்காரன், தொழிலாளி - அவள் இருக்கும் புது நிகழ்வு அவளை வித்தியாசமாக உணர வைத்தது. இதுதான் அவள் அவளுடைய கணவனுக்கு செய்த துரோகம். இப்படி ஆண்களுடன் தனியாக, அவர்களுக்குச் சமமாக இருப்பது. அவள் ஃபர்னெரோவைக் கூட மறந்துவிட்டிருந்தாள்.
கட்டடத்தின் முன் கதவு திறக்கப்பட்டிருந்தது. ஸ்டெஃபனியா வேகமாகவீட்டிற்குப் போனாள். வாயிற்காவலாளி அவளைப் பார்க்கவில்லை.
*************
நன்றி: காலச்சுவடு

Saturday 6 April 2019

Tamil Writer Charu Nivethitha Interview in Webulagam (archives – Nov 2000) May 16, 2012


Tamil Writer Charu Nivethitha Interview in Webulagam (archives – Nov 2000)
May 16, 2012SnapjudgeLeave a commentGo to comments


சாரு நிவேதிதா

தத்துவ இலக்கிய உலகிற்குள் எப்போது நுழைந்தீர்கள்? ஏன்?
அப்போது எனக்குப் பதினான்கு வயது-ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் இடையே செக்ஸ் உறவு ஏற்பட்டது. எனக்கு அந்தப் பெண் அபூர்வமாய்த் தோன்றினாள். உறவு தொடர்ந்தது. பிரபஞ்ச ரகசியங்களைப் போல் மர்மங்களையும் புதிர்களையும் கொண்டதாக இருந்தது அவள் உடல்.

நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் காதலித்துக் கொள்ளவில்லை. உடலின் மர்மங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்தோம். உடல் களியாட்ட வெறியென மாறியது. மனமும் சிந்தனையும் அற்றுப் போன சூன்யத்தின் பெரு வெடிப்பு அது. இருத்தலில் இருந்து சூன்யத்திற்குச் சென்ற நிகழ்வு அது.

பள்ளி இறுதி வகுப்பு வரும்போது நான் பள்ளிக்கூடம் செல்ல முடியாதவனானேன். காச நோய் கடுமையாக என்னைத் தாக்கியிருந்தது. தினமும் ஒன்று என 150 ஊசி போட்டார்கள். கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத விதவிதமான உணவு வகைகள் கொடுக்கப்பட்டன. இப்படியாக, போக இருந்த உயிர் காப்பாற்றப்பட்டது. “ஒரு வேளை செத்தே போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று யோசிக்க ஆரம்பித்தேன். அந்த விசாரணை என்னை மரணம் பற்றிய ஆதாரமான கேள்விக்குள் தள்ளியது.

சமணம், பௌத்தம், சைவம், வைணவம், இஸ்லாம் என்று எல்லா சமய நூல்களையும் படிக்கத் தொடங்கினேன். ஆய்வுக் கட்டுரைகள் சமயப் பத்திரிகைகளில் பிரசுரமாயின, நிவேதிதா என்ற பெயரில்.

கேள்வி : உங்கள் தத்துவ விசாரணை அத்துடன் முடிந்ததா?
பதில் : இல்லை . . திருவண்ணாமலைப் பகுதி மலைகளில் திரிந்தேன். பல துறவிகளைச் சந்தித்தேன். ஒரு துறவியிடம் இருந்து ஹடயோகம் பயின்றேன். பிராணாயாமம், நௌலி போன்ற பயிற்சிகள் கற்றேன்.

சேஷாத்திரி சுவாமிகள், விவேகானந்தர், ரமணர், சுவாமி சிவானந்தா என்று பல ஞானிகளின் உபதேசங்களைக் கற்றேன். ரிஷிகேசம், இமயமலைப் பிரதேசங்களில் சுற்றித் திரிந்தேன்.

மக்கள் குளிராலும், பனியாலும், பட்டினியாலும் செத்து மடிவதைக் கண்டேன். வருடத்தில் ஆறு மாதங்கள் அதிகப் பனியால் மக்கள் வாழ்வை இழந்து படும் இன்னல்கள் என்னை மிகவும் பாதித்தது.

கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று கதறிக் கொண்டு தஞ்சாவூர் வந்து சேர்ந்தேன்.

அதன் பின் ஒரு மார்க்சீயத் தோழரை சந்தித்தேன். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுத்துக்களை அவரே எனக்கு அறிமுகப் படுத்தினார். அதிலிருந்து மேற்கத்திய தத்துவ உலகின் மாணவனாக மாறினேன். கிரேக்கத் தத்துவவாதிகளிலிருந்து துவங்கி, கீர்க்கேகார்ட், விட்ஜென்ஸ்டைன், ஹைடேக்கர், சார்த்தர், லெவி ஸ்ட்ராஸ், ஃபூக்கோ வரை வந்தேன். இன்றளவும் ஒரு மேற்கத்திய தத்துவ உலகின் மாணவனாகவே இருந்து வருகிறேன் . . .

கேள்வி : அப்படி என்றால், தற்போது நீங்கள் மார்க்சீயர் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில் : சார்த்தர் ஒரு முறை சொன்னார்-Marxism is the only unsurpassable philosophy of our time என்று.

சில ஆண்டுகளுக்கு முன்பு தெரீதா எழுதி வெளிவந்த Spectre of Marx என்ற புத்தகம் கூட மார்க்சீயத்தை மிகவும் சாதகமான முறையிலேயே அணுகியிருப்பதாக அறிகிறேன்.

“பசியால் செத்துக் கொண்டிருக்கும் ஒரு குழந்தைக்கு முன்னால் எனது நாசியாவுக்கு எவ்வித அர்த்தமும் இல்லை” என்று சார்த்தர் கூறியதை நினைத்துப் பார்க்கிறேன்.

ஒருபுறம் கலையும் இலக்கியமும் . . . மறுபுறம் பசியால் சாகும் குழந்தை . . . இரண்டுக்கும் நடுவே ஊடாடிக் கொண்டு தான் இருக்கிறேன். இந்தக் குரூரம் என்னை ஒரு மனநோயாளியாக ஆக்கிவிடக் கூடியதாக இருக்கிறது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே எழுத்தைப் பற்றிக் கொள்கிறேன்.

கேள்வி : சிறு பத்திரிகைகளில் தீவிரமாக எழுத ஆரம்பித்தது எப்போது?

நான் தஞ்சாவூரில் படித்துக் கொண்டிருந்த போது “பிரக்ஞை” என்ற பத்திரிகையின் தீவிர வாசகனாக இருந்தேன். பிறகு சென்னை வந்த போது அதன் ஆசிரியர் குழுவில் இருந்தவர்களைச் சந்தித்தேன். வீராச்சாமி என்னை வெகுவாக ஈர்த்தார். ஆனாலும் நான் அப்போது வெகுஜனப் பத்திரிகைகளிலேயே எழுதிக் கொண்டிருந்தேன்.

1978 ல் தில்லி சென்றேன். கொல்லிப் பாவை, படிகள் போன்ற பத்திரிகைகளின் தொடர்பு ஏற்பட்டது. படிகள் பத்திரிகை என்னை மிகவும் ஊக்குவித்தது. வெங்கட்சாமி நாதனுடன் ஏற்பட்ட நட்பு மறக்கவே முடியாதது. சுமார் இரண்டு வருட காலம் அவரோடு குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது விவாதிக்காத நாளே கிடையாது என்று சொல்லலாம். சினிமாவை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர் தான்.

அப்போது இலக்கிய வெளிவட்டம் என்ற ஒரு பத்திரிகை வந்தது. அதன் ஆசிரியர் நடராஜன் வத்தாயிருப்புக்குப் பக்கத்தில் உள்ள புதுப்பட்டி என்ற குக்கிராமத்திலிருந்து அந்தப் பத்திரிகையைக் கொண்டு வந்தார். அதிலும் என்னுடைய முக்கியமான பல கட்டுரைகள் வெளிவந்தன. நடராஜன் அப்போது கிழிந்த ஜாக்கெட்டுகளுக்கு ஒட்டுப் போடும் டைலராக வேலை பார்த்து வந்தார் என்பது மிகவும் குறிப்பிட வேண்டிய விஷயம்.

அவரிடமிருந்து நான் மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் குடும்பம் என்ற அமைப்பினால் அமுங்கிப் போனவர்களில் அவரும் ஒருவராகப் போனது நமது துரதிர்ஷ்டம்.

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்”, “ஸீரோ டிகிரி” என்றும் பெயர் வைக்கக் காரணம் என்ன?

சார்த்தரையே மீண்டும் குறிப்பிட்ட விரும்புகிறேன். “ஒரு ஐரோப்பியனாக இருந்த என்னை மூன்றாம் உலகத்தை நோக்கித் திருப்பியவர் ஃப்ரான்ஃஸ் ஃபானன்” என்றார் சார்த்தர். Wretched of the Earth என்ற நூலை வாசித்திருப்பீர்கள். சேகுவாராவின் தீவிர ஆதரவாளராக இருந்தார் சார்த்தர். தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மாவோயிஸ்டுகளோடு மட்டுமே அவர் உரையாடி வந்தார். அதனால் தான் அவரால் அப்போது ஸ்ட்ரக்சுரலிசத்தை எதிர்கொள்ள முடியாமல் போனது.

இந்தப் பின்னணியில் எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்ற தத்துவத்தைப் பாருங்கள். “எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்” நாவலில் ஒரு வாசகம் வருகிறது. “The main threat to existentialism is non-availability of good quality condoms” ” மார்க்சீயவாதிகள் எக்ஸிஸ்டென்ஷியலிசத்தை எப்படிப் பார்த்தார்கள் என்பதைப் பற்றிய கிண்டலே அந்தத் தலைப்பு. ஒரு வேளை சுய கிண்டலாகவும் இருக்கலாம்.

Zero visibility என்பார்கள். பார்வையே தெரியாத பனி மூட்டம். பனி என்பது மரணம். பச்சையின் எதிர்முனை பனி. பச்சை துவக்கம். பனி முடிவு. பனி என்பது apocalypse. மகாபாரதம் apocalypse ல் முடிகிறது. One Hundred Years of Solityde நாவலும் apocalypse இலேயே முடிகிறது. பனியைப் பற்றி யோசிக்கும் வேளையில் ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. லட்சக் கணக்கான பூத உடல்களை அப்புறப்படுத்துவது எப்படி என்று யோசிக்கிறார்கள் நாஜிகள். பனிப்பாறைகளாய் உறைந்து கிடக்கும் நதியில் வெடிகுண்டு வைத்து தகர்த்து உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் நதியில் யூத உடல்களைப் போடுகிறார்கள்.

ஸீரோ டிகிரியில்-வாழ்வின் அவலத்தால் துரத்தப்பட்டு பனிப் பாலையில் தனித்து அலைகிறான் ஒருவன். அவன் சொர்க்கத்துக்கு செல்லவில்லை. நாம் பின் தொடரவில்லை. மார்க்கமேதும் விளங்கவில்லை. மஹிமான் கூட்டங்கள் அலை அலையாய் நிழல் ரூபமென பாய்ந்து சென்று கொண்டிருக்கின்றன. வாழ்வின் அத்தனை வார்த்தைகளையும் தள்ளிவிட்டு மண்டியிட்டுக் கதறுகிறான்.

கிரேக்கத் துன்பவியல் காவியங்களில் கேட்கும் “கோரஸ்” இது.

இது ஒரு விதமான விளக்கம். இதே போல் joy, celebration, laughter, estacy, frenzy, eroticism, parady, humour என்பதாகவும் “ஸீரோ டிகிரியை வாசிக்கலாம்.

It is a blend of Apollonian and Dionysian Characters.. இந்த விதத்தில் “ஸீரோ டிகிரி” யை ஒரு “நீட்ஷேவிய நாவல்” என்று சொல்லலாம்.

அதோடு, Nothingness என்பதற்கு எதிர்ப்புள்ளியிலிருந்து அந்த நாவல் உடலை மையப் படுத்துவதையும் ஒருவர் மிகச் சுலபமாக கண்டு கொள்ளமுடியும். உடல் Carnival ஆக மாறுகிறது. “எல்லா” அர்த்தங்களுக்கும் அறிவுக்கும் உடலே ஆதாரம். ஆரோக்கியமும் வலிமையும் முக்கியப் பண்புகளாக அங்கீகரிக்கப் பட வேண்டும்” என்று ஜாரதூஷ்ட்ராவில் நீட்ஷே எழுதுவதையும் இங்கே ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்.

மற்றொரு இடத்தில் நீட்ஷே எழுதுகிறார் : ““A mere disciplining of feelings and thoughts amounts to almost nothing . . . one must first persuade the body . . . It is decisire for the fate of peoples and humanity that one begins inculcating culture in the proper place-not in the ‘soul’ . . . the proper place is the body ; gestures, diet, physiology ; the rest will follow ”

இங்கே நாம் தாவோவுக்கும், நீட்ஷேவுக்கும் உள்ள ஒற்றுமை-உடலை மையப்படுத்தும் ஜென் பௌத்தம்-ஜப்பானிய Martial arts-

நான் ஏற்கனவே குறிப்பிட்ட ஹடயோகம் எல்லாவற்றையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

இங்கே எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் “உன்னதம்” பத்திரிகையின் ஆசிரியர் கௌதம சித்தார்த்தன் புதுவகை எழுத்து அல்லது நவீன எழுத்து என்று ஏதோ ஒரு அசட்டுத் தனமான தலைப்பு-தலைப்பு சரியாக நினைவில்லை-அந்தத் தலைப்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்-ஈரோட்டில். முக்கியமான பேச்சாளரான எம்.டி.எம் வராததால்-பார்வையாளனாகச் சென்றிருந்த என்னை பேசுமாறு அழைத்தார் சித்தார்த்தன். நான் அப்போது, “நவீன எழுத்து என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை” என்று தெரிவித்து விட்டு, வேட்டை பற்றியும், விதவிதமான சமையல் முறைகள் பற்றியும், மலையேற்றம், ஸ்கீயிங், பயணம் பற்றியும் பேசினேன். அந்தப் பேச்சைப் பற்றி உன்னதம் பத்திரிகையில் சித்தார்த்தன் குறிப்பிடும்போது

“நவீன எழுத்து பற்றிப் பேசுங்கள் என்றால் சமையல் பண்ணி சாப்பிடுவது பற்றிப் பேசினார் சாரு” என்று எழுதி என்னை ஒரு முட்டாளாகச் சித்தரிக்க முயன்றார்.

இவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு முதலில் நீட்ஷேவைப் பயில வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

நேநோ என்று ஒரு கதைக்கு பெயர் வைத்திருக்கிறீர்களே?

Nine என்பதன் மூலவார்த்தை. ஒன்பது என்பது விளிம்பு. My preoccupation with numbers-Nine is mystical. It is a precipice. You will fall into an abyss-numberless-void-beginning of nothingness.. இங்கிருந்து தான் ஸீரோ டிகிரி துவங்குகிறது. But ‘Nano‘ is a story of procreation and mysteries of sexuality..

பனிவெளியில் முடியும் மரணத்துக்கும்-வாழ்வுக்கும் இடையிலான நாவல் ஸீரோ டிகிரி என்றால் நேநோ அதற்கு மாறாக ஸீரோ டிகிரி எங்கே முடிகிறதோ அங்கே துவங்குகிறது.

ஒன்பது என்பது முடிவின் துவக்கம். பாறை விளிம்பிலிருந்து பார்த்தால் அதல பாதாளம், எண்களைப் பற்றிய விஞ்ஞானத்தில் ஒன்பது அலளவiஉயட குணாம்சங்களைக் கொண்டது. வான வாஸ்திரத்தில் அது ரௌத்திரம், போர், mystical .

ஆனால் அதுவே ஜனனத்தின் குறியீடு. கருவியலைப் பயின்று கொண்டிருந்த போது அது எனக்குக் கிடைத்தது. Nano Seconds என்று சொல்வார்கள். கலவியின் போது கருவணு கருமுட்டையை அடைய எடுத்துக் கொள்ளும் பாலம் சூயnடி ளநஉடினேள. ஒரு நொடியில் .000000009 அளவு அது. கருவணுவின் உருவமும் ஒன்பதை ஒத்திருக்கும்.

இவ்வளவு அற்புதமாக, அதிசயத்தைப் போல் உருவாகும் உயிர் எவ்வளவு சாதாரணமாக, அபத்தமாக அழிக்கப்படுகிறது என்ற துக்கத்தின் வெளிப்பாடே நேநோ சிறுகதை. ஜனனம்-மரணம்-வாழ்வின் குரூரம் பற்றிய கதை அது. ஒரே ஒரு கருவணு கருமுட்டையைச் சென்று அடைவதற்குள் லட்சக்கணக்கான கருவணுக்கள் சிதைவுறுகின்றன. அழிந்து போகின்றன. ஜனன கேந்திரத்திலேயே ஒரு பேரழிவு. பிறகு உயிரின் துளிர்ச்சி என்று இந்த வினை மாறி மாறிச் சென்று கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் நீட்ஷேவைப் படித்துக் கொண்டிருந்த போது “நேநோ”வுடன் இணைந்து போகும் ஒரு பகுதியைக் கண்டேன்.

What was it that the Hellene guaranteed himself by means of these mysteries, Eternal life. the eternal returen of life ; the future promised and hallowed in the past ; the triumphant. Yes to life beyond all death and change ; true life as the over-all continuation of life through procreation, through the mysteries of sexuality-For the Greeks the sexual symbol was therefore the venerable symbol par excellence, the real profundity in the whole of ancient piety. Every single element in the act of procreation, of pregnancy, and of birth aroused the highest and most solemn feelings. In the doctrine of the mysteries, pain is pronounced holy : the pangs of the woman giving birth hallows all pain. That there may be the eternal joy of creating that the will to life may eternally affirm itself, the agony of the woman giging birth must also be there eternally. All this is meant by the word Dionysuys . . .”

Twilight of the Idols என்ற புத்தகத்தில் What I owe to the Ancients என்ற கட்டுரையில் நீட்ஷே.

இப்படியாக, நேநோ சிறுகதை கிரேக்க புராணங்கள், கருவியல், தத்துவம், எண் கணிதம் என்று பல தளங்களில் விரியும் ஒன்று.

மௌனி மற்றும் புதுமைப் பித்தன் மீது உங்களுக்கு என்ன கோபம்?

நான் ஒரு அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை செய்கிறேன். அங்கே நான் ஒரு எழுத்தாளன் என்று அறிய நேர்கிற பெண்கள், தாங்களும் கதை என்று எதையோ எழுதி-அநேகமாக அது மாமியார் கொடுமை, புருஷன் கொடுமை, அல்லது முதல் காதல் என்பதாக இருக்கும். கற்பனையே கலக்காத அச்சு அசல் உண்மைச் சம்பவங்கள். என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வார்கள். அழகான பெண்கள் என்றால் பொய் சொல்லி விடுவேன். அதை வைத்து மேற்கொண்டு பேசவும், பழகவும், எட்ஸெட்ரா, எட்ஸெட்ரா என்று மனம் கணக்குப் போடும்.

அந்த மாதிரிக் கதைகளின் தரத்தில் இருக்கிறது புதுமைப் பித்தன் கதைகள். அவருக்கு எழுதத் தெரியவில்லை. வாயிலேயே வைக்க வழங்காத சமையலைப் போல் இருக்கிறது அவர் கதைகள்

நான் ஒரு Connoisseur.. மிகத் தேர்ந்த சமையல்காரன், உலகின் அற்புதமான பதார்த்தமான அக்கார வடிசல் அதி ருசியாய் சமைப்பேன். ஓலன் போன்ற வழக்கொழிந்து போன உணவு வகைகளும் தெரியும். அதே போல் அசைவ உணவு வகையில் lobster, நியூசிலாந்திலிருந்து இங்கே இறக்குமதியாகும் ஒரு வகை மீன், trout மீன் என்று நூற்றுக்கணக்கான உணவு வகைகள்-பல்வேறு தேசங்களைச் சேர்ந்த உணவு வகைகள் எனக்கு அத்துப்படி, என் நண்பன் ஒருவன் என் சமையலைச் சாப்பிட்டு விட்டு ‘Creativity’ யின் உச்சம் இது. இதில் நூற்றில் ஒரு பங்கையாவது உன் எழுத்தில் காண்பிக்கக் கூடாதா? ‘ என்று கேட்டான். (அவனுக்கு என் எழுத்து பிடிக்காது)

சமையல் என்பது ஒரு கலை. ஆனால் அதை நாம் பெண்களுக்கென ஒதுக்கி விட்டதால் ஏதோ தினந்தோறும் மலம் கழிப்பது தான் வாழ்வின் ஆதாரமான கடமை என்பது போலவும், அந்த ஆதாரமான செயல் தடங்கல் ஏதும் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காகவே எதையோ தின்ன வேண்டும் என்பது போலவும் தான் சமையல் என்கிற கலை உருமாறியிருக்கிறது. பாவம் பெண்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ரஷ்யாவின் நிலக்கரிச் சுரங்கங்களில் கை விரல்களாலேயே நிலக்கரியைச் சுரண்டுவார்களாம். நகங்கள் கிழிந்து குருதி ஓடும் தொழிலாளர்களின் அவலம் பற்றி அப்போதைய ரஷ்ய இலக்கியங்கள் சொல்லுகின்றன. அந்தத் தொழிலாளர்களின் நிலையில் இருக்கிறார்கள் நமது பெண்கள்.

——————

நாட்டுப் புறத்தானை ஒருவழியாக தவிர்த்து விட்டு வேறு பக்கம் சென்று விடுகிறான் இவன். அனால் என்ன துரதிர்ஷ்டம். அங்கேயும் வந்து “உங்களைத் தானுங்க . . .” என்கிறான் நாட்டுப் புறத்தான். சரி தொலையட்டுமென்று “உனக்காகத் தான் காத்திருந்தேன்” என்கிறான் இவன்.

“ஆமாங்க-தெரியுங்க-” என்று அவன் பின் தொடர்கிறான். இவன் அவனுடைய மூக்கை கவனிக்க அவன் “ஆமாங்க-என்னைப் பாத்தாலே மறுக்காதுங்க-என் மூக்குங்க-” என்கிறான்.

இப்படியாக “ஆமாங்க . . சரீங்க” என்றபடி உரையாடல் தொடர்கிறது. ஸில்க் ஷர்ட்காரன் நாட்டுப் புறத்தானை “டா” போட்டுப் பேசுகிறான். இதில் ஒரு குளறுபடி என்னவென்றால் அந்த நாட்டுப்புறத்தானும் பிராமண பாஷை பேசுவது தான். கவனியுங்கள்.

“அவங்க-ரயிலிலே, என்னைத் தெரிஞ்சுண்டு-அந்த ஐயா எங்கிட்ட சொன்னாரு-கொடுத்தாரு-” நாட்டுப்புறத்தான் கதையின் போக்கில் “பட்டிக்காட்டான்” ஆகி விடுகிறான்.

“உங்களைப் பார்த்தே தெரிஞ்சுடுத்தே எனக்கு!” என்றான் பட்டிக்காட்டான்.

கடைசியில் கதையின் ‘labyrinth’ என்னவென்றால் வக்கீல் சுப்ரதிவ்யம் அய்யங்கார் என்று நினைத்து அந்தப் “பட்டிக்காட்டான்” அதே அடையாளமுள்ள (சில்க் சட்டை, விசிறி மடிப்பு அங்கவஸ்திரம்) மற்றொருவனைப் பிடித்து விடுகிறான். எப்படி இந்தத் தவறு நேர்கிறதென்றால், அன்று சாயங்காலம் “ஜவஹர்” அவ்வூருக்கு வருகிற படியால் அய்யங்கார் சில்க் சட்டைக்கும், விசிறி மடிப்புக்கும் ரஜா கொடுத்து விட்டு ஜிப்பாவும் குல்லாவுமாக வந்து விட்டார். கதாநாயகனோ அன்று எதேச்சையாக சில்க் சட்டையும், விசிறி மடிப்புமாக வந்து விட்டான். கதையின் முத்தாய்ப்பைக் கவனியுங்கள் . . .

“தனியாக பைத்தியக்காரத்தனத்தில் தான் இருப்பதாக ஒரு எண்ணம் முதலில்-பிறகு உலகமே பைத்தியக்காரத்தனமாய்ப் போய் விட்டதோ என்ற யோசனையும், சம்சயமும், கடைசியாக , ஒன்றுமே புலப்படாமல் “பைத்தியக்காரத்தனம்” என்று ஒரு தரம் முணுமுணுத்து மூச்சு விட்டான். யார் யார் எப்படி எப்படி என்பதை அவனால் உணர முடியவில்லை அப்போது”

இப்படி கதை எழுதுகிறவர்களின் முகத்தில் காறி உமிழ வேண்டும் என்று தோன்றவில்லையா உங்களுக்கு?

மௌனியையும், புதுமைப் பித்தனையும் Philistines என்கிறேன் நான்.

ஆனால் என்னுடைய முக்கியக் குற்றச்சாட்டு இது இல்ல. அவர்கள் எழுதிய கதைகள் குப்பைக் கூடைக்குப் போயிருக்க வேண்டியவை-இலக்கியமாகத் தேறாதவை என்பது தான்.

பாரதி அப்படி அல்ல.

தலித்துகளைப் பற்றி அவர் எழுதிய “ஆறில் ஒரு பங்கு” என்ற கதை சர்வதேசத்தரம் வாய்ந்தது அல்ல எனினும் அவர் கவிதைகள் பல உலக கவிதைகளுக்கு நிகரானவை. மேலும் அவர் கவிஞர் மட்டுமல்ல. பத்திரிகையாளர். விடுதலைப் போரளி. சிறுகதை, கட்டுரை, வசன கவிதை என்று பல்வேறு இலக்கிய வடிவங்களையும் செழுமைப் படுத்தியவர். மிகப் பெரிய கலகக் காரர். சமகாலத் தமிழ் இலக்கியத்தில் காணக் கிடைக்காத Dionysian Spirit ஐ என்னால் பாரதியின் எழுத்தில் மட்டுமே காண முடிகிறது. அதைப் புரிந்து கொள்ளாமல் அவரை மாயாவாதக் கவிஞர் என்று குறுக்குவது வறட்டுத் தனம். பாரதி கஞ்சா உட்கொண்டது உட்பட அவரது வாழ்வும் எழுத்தும் Unique ஆனவை. சமகாலத் தமிழ் இலக்கியத்தில் காணக் கிடைக்காதவை.

சிறு பத்திரிகை தளத்தில் தாஸ்தாவ்ஸ்கி கொண்டாடப் பட்ட அளவுக்கு டால்ஸ்டாய் கொண்டாடப் படவில்லை. உங்கள் இலக்கிய மதிப்பீட்டின் படி டால்ஸ்டாய் தானே உங்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்-என்பது சரியா?

என்னைக் கிண்டல் செய்வதற்காக கேட்கப்படும் கேள்வி என்றே இதைப் புரிந்து கொள்கிறேன். டால்ஸ்டாய் ஒரு நீதிமான். உய்விப்பவர். மன்னிப்பு வழங்குபவர். புத்துயிர்ப்பு அளித்து பரலோக சாம்ராஜ்யத்துக்கு இட்டுச் செல்பவர்.

கிறித்தவம் குறித்து நீட்ஷே எழுதியவற்றை இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

ஆனால் தாஸ்தாவ்ஸ்கி குற்றவாளிகளின் பக்கம் நிற்பவர். சூதாடி. சைபீரிய சிறைச்சாலைகளில் இருந்தவர். நோயாளி. பதிப்பகத்தாரிடம் பணம் வாங்கிக் கொண்டு குறித்த தேதிக்குள் நாவலை முடித்துக் கொடுக்க முடியாமல் வழக்குகளைச் சந்தித்தவர். அப்படி ஒரு முறை அவரது நரம்பு வியாதியின் காரணமாக குறித்த தேதிக்குள் நாவலை முடித்துக் கொடுக்க முடியவில்லை. பதிப்பகத்தார் கடைசித் தவணையாக ஒரு தேதியைக் குறிக்கிறார். கடும் குளிர். உடல் உபாதை. கொடிய வறுமை. நரம்புத் தளர்ச்சியும் சேர்ந்து கொள்கிறது. பேனாவைத் தொடவே முடியவில்லை. மீண்டும் சைபீரியாவா என்று பதறுகிறார். அப்போது அவரிடம் ளுஉசiநெ ஆக வந்து சேர்கிறாள் அன்னா என்ற இளம் பெண்.

தாஸ்தாவ்ஸ்கியின் கதை சொல்லும் வேகம், அவரது passion, உக்கிரம், வெறி எல்லாம் சேர்ந்து அவள் அவரைக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறாள், அவரது மரணம் வரை உற்ற துணையாகவும் காதலியாகவும் இருக்கிறாள்.

தாஸ்தாவ்ஸ்கியின் வாழ்க்கையே ஒரு நாவலைப் போன்றது. குற்றவாளிகளின் உலகம் அது. ஒரு பத்தாண்டுக் காலம் நான் தாஸ்தாவ்ஸ்கியின் உலகத்தில் வாழ்ந்தேன் என்று சொல்லாம். எனது எழுத்தியக்கத்தின் எக்ஸிஸ்டெஷியலிச கால கட்டம் அது.

பின்னர் லெவி ஸ்ட்ராஸ், ரொலான் பார்த், ஃபூக்கோ என்று ஸ்ட்ரக்சுரலிசத்தின் பக்கம் நகர்ந்த போது போர்ஹேஸ், நபகோவ் போன்றவர்களைக் கண்டடைந்தேன். தாஸ்தாவ்ஸ்கியை விட நபகோவ் இப்போது எனக்கு மிகுந்த நெருக்கமானவராக இருக்கிறார். விளக்கங்கள் இல்லாத-புதிர்களும் மர்மங்களும் நிறைந்த உலகம் அது. பதிமூன்று வயதுப் பெண்ணின் மேல் ஐம்பது வயதுக்காரனுக்கு எப்படிக் காதல் ஏற்படும்?

Lolita வில் விளக்கங்கள் இல்லை. It just happens..

நபகோவ் தாஸ்தாவ்ஸ்கியை நிராகரிக்கிறார். “அவர் ஒரு க்ரைம் ரைட்டர் . . . தினசரிகளில் க்ரைம் நியூஸ் படித்து எழுதுகிறவர்’ என்கிறார் நபகோவ். தாஸ்தாவ்ஸ்கிக்கு தினசரிகளைப் படிப்பது பெரிதும் விருப்பமான விஷயம் என்றாலும் அவரது எழுத்தை நான் அப்படி நிராகரிக்க மாட்டேன். மேலும் ஒரு சுவாரசியமான தகவல்-நபகோவ் ஒரு வண்ணத்துப் பூச்சி சேகரிப்பாளர். உலகெங்கிலும் உள்ள முக்கியமான பல்கலைக் கழகங்களில் நபகோவின் வண்ணத்துப் பூச்சி ஆய்வுகள் பாடத் திட்டத்தில் உள்ளன. “நான் இலக்கியத்தில் சாதித்ததை விட வண்ணத்துப் பூச்சி ஆய்வில் சில பெருமைக்குரிய சாதனைகளைச் செய்திருக்கிறேன்” என்கிறார் நபகோவ். அதற்காக அவர் மேற்கொண்ட பயணங்கள் பெரும் சாகசங்களைக் கொண்டவை. சுவாரசியமானவை. இலக்கியம் தவிர வேறு துறைகளையும் நலம் பயில வேண்டியுள்ளது. ஆனால் இலக்கியமே தயிர்வடையாக இருக்கும் தமிழ்ச் சூழலில் என்னுடைய எதிர்பார்ப்பு அதிகபட்சமானது தான்!
எந்த ஒரு கலைஞனும் தன்னுடைய காலத்திற்கு உணர்வுள்ளவனாக ஏன் இருக்க வேண்டும்? துசுசு டோல்க்கீன் போன்றவர்கள் கற்பனையின் உச்சத்தில் தானே சிறந்த எழுத்தாளராகிறார்? ஒரு political allegrory யைக் கூட அவர் மறுத்தார் என நான் படித்திருக்கிறன்.

ஒரு எழுத்தாளர் அரசியல் பிரக்ஞை கொண்டவராக இருந்தாக வேண்டும் என்பது என் நிபந்தனை அல்ல. கட்டாயம் அல்ல. போர்ஹேஸுக்கு அரசியல் தெரியாது. தென்னமெரிக்காவின் கொந்தளிப்பான, புரட்சிகரமான அரசியல் சூழலிலிருந்து தன்னை முற்றாக விலக்கிக் கொண்டவர். இடது சாரி எழுத்தாளர்களைக் கடுமையாகச் சாடியவர். அவருக்கும் ஹுலியோ கொர்த்தஸாருக்கும் நடந்த கடும் விவாதங்களுமே கொர்த்தஸாரைப் போல், மார்க்வெஸைப் போல்அரசியல் பிரக்ஞை கொண்டவர்களகாக இருக்க வேண்டும் என்று நலம் நிர்ப்பந்திக்க முடியாது.

இன்னும் ஒரு வேடிகக்கை என்னவென்றால், மாரியோ வார்காஸ் லோஸா-தென்னமெரிக்காவின் மிகச் சிறந்த கதை சொல்லியான அவர் பெரூவில் பயங்கரவாத அரசின் பக்கம் நின்றவர், புரட்சியாளர்களை எதிர்த்தவர். சில காலம் ஃபாஸிஸ அரசின் ஜனாதிபதியாக இருந்தவர்.

ஆனால் அவருடைய Real Life of Alejandro Majtaவை நீங்கள் படித்தால் நீங்களே புரட்சியாளராக மாறி விடுவீர்கள். ஊடிnஎநசளயவiடிளே in Conversations in the Cathedral -நாவலில் பெரூவின் அவலத்தை-ஒரு தேசமே குப்பைத் தொட்டியாகக் கிடப்பதை-பெரூவின் கொடூரமான-ரத்தக் கறை படிந்த அரசியலை எவ்வளவு வலுவாக எழுதிருக்கிறார்! முழுக்கவும் இந்திய நிலைமைக்குப் பொருந்தி வருகிற ஒரு நாவல் அது. தெருவில் திரியும் நாய்களைப் பிடித்துக் கொண்டு போய் அடித்தே கொல்லும் அந்த முனிசிபாலிட்டி ஊழியனை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

லோசாவினால் இது எப்படி சாத்தியமாகிறது? கூடு விட்டுக் கூடு பாய்கிறான் லோஸா. அலெஜாந்த்ரோ மாய்த்தா என்ற புரட்சியாளனாக-முனிசிபாலிட்டி ஊழியனாக-ரேடியோ நாடக சீரியல் எழுதும் கதை வசன கர்த்தாவாக-புரட்சிகரப் பாதிரியாக-இன்னும் நூற்றுக்கணக்கான பாத்திரங்களாக மாறுகிறான் லோஸா. இதைத் தான் Travelling into the other என்கிறேன். ஆனால் தமிழ் எழுத்தாளர்களுக்கோ other என்பதே இல்லை,

இங்கே தான் வாசிப்பு என்ற செயல்பாடும் வருகிறது. போர்ஹேஸின் வாசிப்பு எப்படிப்பட்டது? அவர் ஒரு நடமாடும் நூலகம் என்பார்கள். இந்தியச் சமூகத்தைப் பற்றி ஒரு பத்து புத்தகங்களைப் படித்து அறிந்து கொள்வதை விட போர்ஹேஸின் “கூhந றயல வடி ஹட-ஆரவயளiஅ” என்ற ஒரே ஒரு சிறுகதையின் மூலம் நலம் அதிகம் தெரிந்து கொள்ள முடியும். வரலாறு, மானுடவியல், மொழியியல், அமைப்பியல் வாதம் போன்ற பல துறைகளில் அறிஞர்களில் கண்டு பிடித்த ஆய்வு முடிவுகளை போர்ஹேஸ் வெகு எளிதாக தனது கதைகளினூடே கண்டடைகிறார். போர் ஹேஸுக்கு அமைப்பியல்வாதம் தெரியாது என்றாலும் கூட அமைப்பியல்வாதிகள் எதிர் கொண்ட பல புதிர்களை போர்ஸேஸின் எழுத்து விடுவிக்கிறது.

மண்ணில் ஆழமாக ஒரு துளையிட்டால் நீர் பீறிட்டு அடிக்கும். ஆழம் எவ்வளவு போகிறதோ அவ்வளவு வீர்யமாகவும் உக்கிரமாகவும் இருக்கும் நீரூற்றின் வேகம். இதை நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கிய வெளிவட்டத்தில் எழுதிய கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். சமீபத்தில் நீட்ஷே இந்த உதாரணத்தைக் கொடுத்திருப்பதைப் படித்தேன்.

நான் டோல்க்கீனை இன்னமும் படித்ததில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னால் இவரது எழுத்தை தர்மு சிவராமு எனக்கு அறிமுகப்படுதினார். இதே போல் கார்லோஸ் காஸ்டனாடாவைப் படிக்க வேண்டுமென ஒரு நண்பர் சிபாரிசு செய்கிறார். இதோடு, நானே தெரிவு செய்து சிலரை இன்னமும் படிக்காமல் வைத்திருக்கிறேன். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒரு வேளை டோல்க்கினின் நீரூற்று வெகு உக்கிரமானதாக இருக்கலாம்.

இரண்டு விதமான செயல்பாடு-ஒன்று-அரசியல் போராட்டம் பற்றிய பிரக்ஞை. இரண்டு-துறவு மனப்பான்மையுடன் செயல்படுவது-தத்துவத் தேடல்-இது போன்று, கலைஞனின் செயல்பாட்டை இப்படி இரண்டு எல்லைகளுக்குள் குறுக்க முடியுமா?

இந்த விஷயத்தை வேறொரு விதமாகப் பார்க்கலாம் என்று நினைக்கிறோம். தென்னமெரிக்காவிலம், இன்னும் உலகின் பல்வேறு மூலைகளிலும், அதிகாரத்திற்கெதிரான போராட்டங்களுக்கெல்லாம் சேகுவாராவின் பெயர் ஒரு குறியீடாகவே மாறியிருக்கிறது. இதே போல் Richard Feynmann, Stephen Hawking போன்றவர்கள் இந்த உலகத்திற்கு வழங்கியுள்ளவை அதிகம்.

ஆக, கலைஞன் என்று தனியாக யாரும் இல்லை என்று தோன்றுகிறது. உதாரணமாக, தமிழ்ச் சூழலில், எழுத்தாளர்களை விட பெரியாரின் பங்களிப்பே அதிகம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
பயணம் பற்றி கூறினீர்கள், நீங்கள் சொல்லும் பெரியாருக்கு என்ன பயணம் இருக்கிறது? உங்களுடைய இலக்கிய / அரசியல் கொள்கையில் பெரியாரின் இடம் என்ன?

இரண்டு விதமான பயணங்கள் உள்ளன. எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் இருக்கிறார். நரசிம்மன் என்பது பெயர். வயது எண்பதுக்கு மேல் இருக்கும். எனது வட இந்தியப் பயணங்களில் அவரே எனது வழிகாட்டி. என்னோடு உடன் வராவிட்டாலும் ஒவ்வொரு இடமாக எனக்கு சொல்லித் தருவார். இமாசலப் பிரதேச எல்லையில் இருக்கும் ரோத்தங் பாஸுக்கு எப்படிப் போக வேண்டும்-தேசிய நெடுஞ்சாலை எண் : 1 என்ற அந்தச் சாலையின் அகலம் எவ்வளவு-அங்கிருந்து எப்படி எப்படிச் சுற்றி இந்தியாவின் மற்றொரு எல்லைப் புற மாவட்டமான லஹோல் ஸ்பிட்டிக்கு வர வேண்டும்-எவ்வளவு காலம் ஆகும்-அங்கே இருக்கும் பனிக் குகைகள்-வளைவுகள்-இன்னும் சொல்லப் போனால், குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட ஒருவரின் பெயர்-அவரைச் சந்தித்தால் என்னென்ன சாதகங்கள்-என்று மணிக்கணக்கில் சொல்லுவார். இமயமலைப் பிராந்தியத்தில்-அவர் கால் படாத இடமே இல்லை என்பது என்னுடைய எண்ணம். ரிஷிகேஷ் பற்றிச் சொல்லுவார். காசியிலுள்ள அத்தனை இடங்களும், சந்து பொந்துகளும் படித்துறைகளும் அவருக்கு அத்துப்படி. காசியில் சுடுகாட்டுப் பொறுப்பாளராக இருக்கும் ஹரிசிங்-அங்கே கங்கைக் கரையில் மரணத்துக்காகக் காத்திருக்கும் முதுமையின் விளிம்பில் நிற்கும் ஆண்கள், பெண்கள்-என்று ஏராளமாகச் சொல்லுவார். போய்ப் பார்த்தால், எல்லாமே சரியாக இருக்கும். ஆனால் சமீபத்தில் தான் தெரிந்தது-அவர் சென்னைக்கு வடக்கே சென்றதே இல்லை என்று.

போர்ஹேஸும் அதிகம் பயணங்கள் செய்ததில்லை. இந்தியாவுக்கு அவர் வந்ததே இல்லை. ஆனால் இந்தியாவைப் பற்றி அவர் நிபுணர். காரணம்-வாசிப்பே அவரது பயணமாக இருந்தது.

பெரியாரும் அப்படியே. உலகம் பூராவையும் சுற்றுவதை விட அதிக அளவு தமிழ்நாட்டில் சுற்றியவர் அவர்.

இலக்கியவாதிகளுக்கு அரசியல் பிரக்ஞை தேவை? அரசியல்வாதிகளுக்கு-பெரியார் போன்றவர்களுக்கு இலக்கியம் தேவையில்லையா? எழுத்தாளர்களை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்?

பெரியாருக்கு பியானோ வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. மைக்ரோ பயாலஜியில் ஈடுபடும் ஒரு விஞ்ஞானிக்கு மலையேற்றம் தெரிந்திருக்க வேண்டுமா என்ன? பெரியாரின் துறை வேறு. அதில் அவர் ஒரு சாதனையாளர். அவர் சிந்தித்த பல விஷயங்கள் அவரது காலத்திற்கு மிகவும் முன்னால் சென்றவை. Some people are born posthumously என்பார் நீட்ஷே. இது நீட்ஷேவுக்கே மிகவும் பொருந்தும் என்று சொல்லுவார்கள். இது பெரியாருக்கும் பொருந்தும். அவரது சிந்தனைகள் அவரது இறப்புக்குப் பின்னும் புதிதாக உள்ளன.

உலகிலேயே மிக அதிகமான சொற்களைப் பேசியவராக அவர் இருக்கக் கூடும். ஒரு நாளில் ஐந்து கட்டங்கள். இப்படியே ஐம்பது ஆண்டுகள். மலைப்பாக இருக்கிறது.

மூத்திரம் போவதற்கான டியூபைப் பிடித்துக் கொண்டு ஊர் ஊராக கலைந்த அந்தப் பெரியவர் ஒரு நாவலின் முக்கியப் பாத்திரமாகவே எனக்குள் கற்பிதங் கொண்டிருக்கிறார். பெரியாரின் இயக்கத்தை இலக்கியத்துக்குள் கடத்துவதே எனது எழுத்தின் அடிப்படை என்று நினைக்கிறேன்.

ஆனால் இந்தப் பதிலில் எனக்குத் திருப்தியில்லை. அவரை ஒரு அரசியல்வாதியாகக் குறுக்க முடியுமா? முடியாது. வில்லியம் பர்ரோஸுக்கும் பெரியாரின் நடவடிக்கைகளுக்கும் மிகுந்த ஒற்றுமை இருக்கிறது. பெரியார் வெளிநாடு சென்றிருந்த போது-நிர்வாணிகளாக இருந்த குழுவினரைச் சந்தித்திருக்கிறார். அப்போது பெரியாரும் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆலன் கின்ஸ்பெர்கின் நிர்வாணப்படம் நமக்குத் தெரியும். க்ஷநயவ றசவைநசள என்று அழைக்கப்பட்ட-பின்னாளில் ஹிப்பி இயக்கத்துக்கு முன்னோடியாகவும் உந்து சக்தியாகவும் இருந்த-வில்லியம் பர்ரோஸ், ஆலன் கின்ஸ்பெர்க், ஜாக் கெரோவாக் போன்ற எழுத்தாளர்களின் கலக இயக்கத்தோடு பெரியாரின் வாழ்வும், எழுத்தும், பேச்சும் இணைத்துப் பார்க்கத்தக்கது. எழுத்தாளர்கள் தங்கள் தேசம், மதம், ஜாதி போன்றவற்றுக்கு விசுவாசிகளாக இருந்த வேளையில் பெரியார் ஒருவர் தான் தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் என்ற மூன்றையும் ஒருவர் துறக்க வேண்டும் என்று சொன்னார்.

How can a literary person possess anything?? இந்த விதத்தில் பெரியாரை ஒரு literary phenomenon என்று சொல்லுவேன்.

இதற்கும் மேலாக, நீட்ஷேவுக்கும் பெரியாரின் சிந்தனைகளுக்கும் உள்ள ஒற்றுமை பற்றியும் நீங்கள் கவனிக்க வேண்டும். இது விரிவான ஆய்வுக்குரியது என்பதால் பிறகு இது பற்றிப் பேசுவேன்.
நீங்கள் கூறும் இலக்கிய அளவுகோல்களின் படி சுந்தர ராமசாமியின் பள்ளம், கி.ராஜநாராயணனின் கதவு போன்று இன்னும் பல கதைகள் இருக்கின்றன. அப்படியிருக்கும் போது, நீங்கள் தமிழ் எழுத்தை வறட்சியாகப் பார்ப்பது ஏன்?

நீங்கள் இப்படி இரண்டு கதைகளைக் குறிப்பிட்டால் நான் என் பங்குக்கு இரண்டு கதைகளைக் குறிப்பிடுவேன். ஏற்கனவே சொன்ன எம்.வி.வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை. லா.ச.ராவின் வேண்டப்படாதவன். இப்படியே ஒரு பட்டியல் போட்டால் கடந்த ஐம்பது ஆண்டுகளின் முக்கியமான கதைகள் என்று ஒரு முப்பது தேறுமா? போனால் போகிறதென்று மௌனிக்கு ஒரு கதை, புதுமைப் பித்தனுக்கு ஒரு கதை என்று கொடுத்தால் கூட முப்பது தேறுமா என்பது சந்தேகம். சரி, ஒரு பேச்சுக்கு-முப்பது கதைகள் தேறுகின்றன என்று வைத்துக் கொண்டால்-இது ஒரு மொழிக்கு வெட்கக் கேடான விஷயம் இல்லையா?

நான் குறைந்த பட்சம் பதினைந்து உலகச் சிறுகதைகளையேனும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். கடல்கன்னி என்று ஒரு கதை. இதற்கு இணையான ஒரே ஒரு தமிழ்க் கதையை நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம். கொர்த்தஸாரின் ‘சந்திப்பு’ என்று ஒரு கதை. ரத்த வேட்கை-என்று ஒரு Sadean கதை. மொழியில் பலவித சோதனைகளைச் செய்து பார்க்கும் ரொனால்ட் சுகேனிக்கின் ஒரு சிறு கதை. ‘மழை’ என்ற மேஜிகல் ரியலிசக் கதை.

இங்கே தமிழில் பிரச்சனை என்னவென்றால்-இதுவரை இங்கே செயல்பட்டிருப்பது Apollonian Character. பொருள்? Individual as seperate from the rest of reality.. எனவே Individual தனிமைப் பட்டுப் போகிறார்.

இங்கே Dionysian spirit இல்லை. Chorus இல்லை. நாம் முழுமையின் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. வாழ்க்கையில் ஈடுபடவில்லை. அதனால் Joy இல்லை-pleasure of the text இல்லை-Carnival இல்லை-immediacy இல்லை-sorrow இல்லை-தமிழ் வாழ்வின் துக்கமும் சந்தோஷமும் கொண்டாட்டமும் கோரஸாக மாறவில்லை.

இதுவே தமிழ் இலக்கியத்தின் குறைபாடு, தயிர்வடை sensibility என்று சொன்னதற்கு விளக்கம் கேட்டவர்கள் இப்போது நான் சொல்வதை விளங்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். எதிர் கொள்ள வேண்டும்.

தலித்தியம், பெண்ணியம்-இதை பிரதிநிதித்துவப் படுத்துவது தான் இலக்கியத்தின் அடிப்படைத் தேவையாக இருக்க வேண்டுமா?

இலக்கியத்துக்கு இலக்கியம் என்பதைத் தவிர வேறு எவ்வித முன் நிபந்தனைகளும் கிடையாது. ஆனால் தலித்துகள், பெண்கள் என்ற பகுதிகளிலிநது தமிழில் பதிவுகளே இல்லை. அதனால் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது. Apologia வை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ‘நான் ஒரு தலித்-அதனால் முப்பது ரன்கள் எடுத்து விட்டால் அது செஞ்சுரி’ என்று சொன்னால் அதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். விவியன் ரிச்சர்ட்ஸ் தன்னுடைய ஒவ்வொரு 4 ஐயும் ‘வெள்ளை இன-வெறிக்கு எதிரான அடி’ என்று கூறினான்.

ஆனால் இங்கோ அச்சு பிச்சு என்று உளறி வைத்து விட்டு தலித் இயக்கம் என்கிறார்கள். இதற்கு உதாரணம் இமயம். அவர் எழுத்து எனக்குSanctum Sanctorum ஐயே நினைவு படுத்துகிறது. அவர் எழுத்தில்”புனிதப் புளிப்பு” தாங்க முடியவில்லை. க்ரியா ராம கிருஷ்ணன் போன்றவர்கள் இந்தப் புனிதங்களை தூக்கி விடுவதன் அரசியலும் இதனால் தான்.

வேறு சிலர் வெறும் கோபதாபங்களையும், ஏச்சுகளையும், வகைகளையும் எழுதி தலித் எழுத்து என்கிறார்கள். தான் ஒரு தலித் என்பதனாலேயே தான் எழுதுவதெல்லாம் இலக்கியம் என்கிற அசட்டு நம்பிக்கையில் இருக்கிறார்கள் இவர்கள்.
இலக்கியம் என்பது மிகுந்த உழைப்பை வேண்டும் ஒரு கலை. நீட்ஷே போன்றவர்கள் ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம் படித்தார்கள் என்று அறிகிறோம். ஒரு இசைக் கருவியைப் பயின்று கொள்வதற்கே தினமும் ஆறு மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டியிருக்கிறது. ஒரே ஒரு நாள் பயிற்சி தவறினாலும் தொடர்ச்சி விட்டுப் போகிறது. அப்படியானால் எழுத்துக்கு எவ்வளவு பயிற்சி வேண்டும்?

ஒரு மாட்டை அறுத்துக் கூறு போடுவதற்கும், ஆழ் கடலில் மீன் வேட்டைக்குச் சென்று வருவதற்கு எவ்வளவு பெரிய பயிற்சி தேவைப்படுகிறது? அதுவே தான் எழுத்துக்கும்.

மலும், தலித், பெண் என்றெல்லாம் இனிமேல் ஒற்றை அடையாளத்துக்குள் குறுக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால்-ஒரு மேட்டுக்குடி பிராமணப் பெண்ணை விட ஒரு தலித் ஆண் அதிக ஒடுக்குதலுக்கு ஆளாகிறான். ஒரு தலித் ஆணை விட தலித் பெண் அதிக ஒடுக்குதலுக்கு ஆளாகிறாள். ஒரு தலித் பெண்ணை விட ஒரு ஏழை பிராமணப் பெண் பாலியல் ரீதியாக அதிக ஒடுக்கு முறைக்கு ஆளாகிறாள். இவர்கள் எல்லோரையும் விட அலிகளின் நிலைமை மிகவும் அவசியமானது. இன்னும் நிறைய விளிம்பு நிலை மனிதர்கள் இருக்கிறார்கள். சிறு குற்றவாளிகள்-நாடோடிகள்-செக்ஸ் தொழிலாளிகள்-ஹோமோ செக்ஷுவல்கள்-அனாதைகள்-குழந்தைத் தொழிலாளர்கள்-பிச்சைக்காரர்கள் என்று இவர்கள் எழுதினால் அந்த எழுத்தையும் தலித்தியம் என்று சொல்ல முடியுமா?

எந்த எழுத்துமே Universalise ஆக மாற வேண்டும். Mediocrity க்கு இலக்கியத்தில் மன்னிப்பே கிடையாது.

எதார்த்தவாதம் பிரதிநிதித்துவம் செய்யும் பொது மனிதனின் அக / புறப் பிரச்சனைகளை பேசிய காலம் போக, சாதி-குலக் குறி நோக்கிச் செல்லும் போக்கு, தனித்த அடையாளக் கூட்டமைப்பு போன்றவைகளைப் பெருக்கும் நிலை ஆரோக்யிமானதா?

இன்றைய நிலையில் பெரியாரையே நாம் திரும்ப வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வெகுஜன அரசியல் போக்குகளின் செல்வாக்கையே தமிழ் எழுத்திலும் காண முடிகிறது. வெகு ஜனத் தளத்தில் சாதிச் சங்கம் என்றால் இலக்கியத்தில் சாதீய இலக்கியம். சுய இரக்கம், மத்திய தர வர்க்க மதிப்பீடுகள், தாங்களே அதிக பட்சம் ஒடுக்கப்பட்டதான கற்பிதங்கள், ஜாதி அபிமானம் போன்றவை இவ்வகை எழுத்துக்களின் அடையாளங்கள். இந்த வகையில் தமிழ் எழுத்து இன மைய வாதத்தை நோக்கிச் செல்லும் அபாயத்தில் இருக்கிறது.

தனது அடையாளத்தைச் சொல்வதில் தவறில்லை. ஆனால் அந்த அடையாளத்தை transcend செய்ய வேண்டும்.

வில்லியம் பர்ரோஸ்-அமெரிக்க ராணுவத்தின் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு எதிராக தன்னை / தனது உடலை தகுதியில்லாததாக ஆக்கிக் கொள்வதற்காக போதை ஊசிகளை தனது உடலில் ஏற்றிக் கொண்டான். அப்போது அவன் குறிப்பிட்டான்-நான் போட்டுக் கொள்ளும் ஒவ்வொரு (போதை) ஊசியும் அமெரிக்க ராணுவம் வியத்நாமில் போடும் ஒவ்வொரு குண்டுக்கும் எதிரானது. அவனது Naked Lunch போன்ற நாவல்களும் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை தாண்டிச் செல்லக் கூடியது. தமிழ் இலக்கியம் உலகத்தரமான எழுத்தை உருவாக்க முடியாததன் காரணம்-இந்த transcendence இங்கே நடக்கவில்லை என்பது தான்.

நன்றி !

சந்திப்பு : ஆர்.முத்துக்குமார்
வெப்உலகம்.காம்