Monday 29 April 2019

வேளை வந்துற்ற போது - நகுலன் & நகுலன் எஸ்.ராமகிருஷ்ணன் நினைவுப் பாதை

http://subramesh.blogspot.com/2005/05/blog-post_111624109063459058.html
தீபம் பத்திரிக்கையில் நா. பா எழுத்தாளர்களிடம் "நானும் என் எழுத்தும என்ற தலைப்பில் கட்டுரைகள் கேட்டு வாங்கிப் போட்டு பிரசுரம் செய்தார், எழுத்தாளர்கள் ஏன் எழுதுகிறார்கள், அவர்களின் அக, புற நோக்கங்கள் என்ன போன்ற அரிய தகவல்கள் கொண்ட கட்டுரைகளாக அவை மலர்ந்தன. ஜாம்பவான்கள் பலர் எழுதிய அக் கட்டுரைகளை 'தீபம் கட்டுரைகள்' என்ற பெயரில் பல ண்டுகளுக்கு முன்னர் கலைஞன் பதிப்பகம் தொகுத்து உள்ளது.
நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ரா.சு நல்லபெருமாள், தவன், வல்லிக்கண்ணன், இந்திரா பார்த்தசாரதி, எம்.டி. வாசுதேவன் நாயர் உட்பட பலர் எழுதியுள்ளனர். வளரும் எழுத்தாளர்களும்,உளரும் எழுத்தாளர்களும் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்!
நகுலனின் இக்கட்டுரை முதலில் படித்தபோது என்னைக் கவரவில்லை, சுந்தர ராமசாமியின் கட்டுரை அப்போது ரொம்பப் பிடித்திருந்தது, இப்போது நகுலனின் கட்டுரை யோசிக்கத் தூண்டுகிறது. உள்ளுணர்வு சார்ந்த எழுத்துக்களை அறிவுஜீவிக்கதைகளுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு யோசிக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. உலகத்தில் அறிவு ஏற்படுத்திய குழப்பத்திற்கும், வன்முறைக்கும், போர்களுக்கும் வேறு ஒரு மாற்று அவசியம்.
இக் கட்டுரையில் நகுலன் கருத்துக்கள் எல்லாவற்றிற்கும் நான் உடன்படுகிறேன் என நினைத்து விடக்கூடாது. உதாரணத்திற்கு பிரசவவலி , சிரித்து சிரித்து வயிறு புண்ணாய்ப் போயிற்று. நானும் 'சிருஷ்டியின் பிரசவ வலியில் போய் படுக்கையில் படுத்துக் கொண்டேன்! பாய்ஸ் பட ஜனகன மெட்டில் நான் பிரசவித்தது பின் வரும் பாட்டுதான்
"ஜனகனமன ஜமக்காளம் விரி...படுத்துப் புரளு கபகபகப கும்பிக்குக் கொட்டு கடமுட கட...கக்"..சரி பொகட்டும் விடுங்கள் நகுலனும் அருள் குமரனும் பிரசவிப்பதைக் கவனித்துக் கொள்ளட்டும்.
மற்றொரு உதாரணம்: ராஜா ராவ் சொன்னதை நகுலன் மேற் கோள் காட்டி விட்டு மறுபடியும் பழைய குருடி என வாலரி சொன்னார் அது இது எனப் பேசப் போய்விடுகிறார், அப்படியானால் ராஜாராவிடமிருந்து இவர் என்ன கற்றுக் கொண்டார்?
கலைஞன் பதிப்பிற்கு நன்றியுடன் இக் கட்டுரையை இடுகிறேன், வாசித்துப் பாருங்கள்.


வேளை வந்துற்ற போது - நகுலன்

இந்தக் கட்டுரை ஒரு சுய நிர்ணயமாக, சுய பரிசோதனையாக முடிந்து விடக் கூடும் என்று இந்த முதல் வாக்கியத்திலேயே எனக்குத் தோன்றுகிறது. முதலாவதாக 'ஏன் எழுதுகிறேன்?' என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு அதற்குரிய பதில் என்னால் எழுதாமல் இருக்க முடியாமல் இருப்பதால், எழுதுகிறேன்' என்று பதில் அளித்து விட்டு நகர்ந்து விடுகிறேன். காரியம்தான் காரணம், னால், இந்த மாதிரிக் கட்டுரைகளில் இரண்டாம் பக்ஷமான காரணத்தை முதலில் கூறுவது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட விதி, இப்படி இதைப் பார்க்கையில், நண்பர் சுந்தரராமசாமி வேறொரு சந்தர்ப்பத்தில் வேறொரு விஷயத்தைப் பற்றிக் கூறிய மாதிரி, இக்காரணம் அவரவர் மனவார்ப்பைக் காட்டுகிறது. என்னைப் பற்றியவரை, சிருஷ்டி நியதியில் எனக்கு நான் யார் என்பது தெரியாது என்பதனால், என் உருவம் எனக்குப் புலப்பட, என் உலகம் எது என்று கண்டுபிடிக்க, எழுத்தை நாடுகிறேன்; ஏனென்றால் அது என் வழி. னால் என்னை நான் தெரிந்து கொள்ள ஏதாவது ஒரு பிரதிபலிப்புதான் பயன்படுகிறது; அந்தப் பிரதிபலிப்பு, பிரதிபலிப்பு என்பதினாலேயே, என் நிதர்சனக் காட்சியைத் தருவதில்லை; னால் எழுத்தில் இந்த ஐயமும் நிழலாடுவதால்தான் மற்ற பிரதிபலிப்புகளை விட இந்தப் பிரதிபலிப்பு ஓரளவு எனக்கு ஒரு நிதானத்தை அளிக்கிறது.

இது அடுத்த கேள்வி, என் அனுபவத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்ல முயற்சிக்கிறேன். கொஞ்ச வருஷங்களாக எங்கும் இடங் கிடைக்காத எழுத்தாளனாக இருந்த நிலை மாறி, புகுந்த இடமும் சில காரணங்களால் புளித்து விட்ட நிலை வந்ததும், ஏன் எழுதுகிறேன் என்பதைத் தெரிவித்திருந்த நான், இப்பொழுது எப்படி எழுதுகிறேன் என்பதையும் அறிந்து கொண்டிருக்கிறேன். என் நண்பர் உளநூலில் ஈடுபாடு மிக்க டாக்டர் மோகன் மேத்யூ கூறியபடி, ஒவ்வொரு சிருஷ்டிக் கலைஞனும் ஒரு பிரசவ வேதனையை அனுபவிக்கிறான்; முக்கியமாக ண் வர்க்கத்தைச் சேர்ந்தவனுக்கு இது பெண் வர்க்கத்துடன் கூறும் ஒரு அறைகூவலாகவே அமைந்துவிடுகிறது! பெண் வர்க்கத்தில் இருப்பவர்கள் சிருஷ்டிக் கலையில் ஈடுபடுவது அவர்களுக்கு இயற்கையாக வரும் சிருஷ்டி அனுபவம் அதிருப்தி தருவதாக இருக்கலாம் என்று கூறும் வாக்கு எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது. னால் ஒன்று; குறிப்பிட்ட கட்டங்களில் என் உள்ளத்தில் ஒரு கட்டுக்கடங்காத பரபரப்பு ஏற்படுகிறது. சமயம் எப்படியும் இருக்கலாம். அதிகாலை, நடுநிசி, பகல்வேளை, மாலை. இந்தப் பரபரப்பைக் கழித்துத் தீர்க்க நான் எழுத ரம்பிக்கிறேன். எழுதுகையில் சிறுகதை, சிறு கவிதையாக இருந்தால் ஒரே இருப்பில் இருந்து எழுதி விடுவது என் வழக்கம். இந்தக் கட்டங்களில்கூட சிருஷ்டி வேதனையின் அதிதீவிரத் துடிப்பைத் தீர்க்க நடுநடுவே கட்டிலில் சென்று நான் படுத்துக் கொள்வதும் உண்டு! பல சிரியர்கள் கூறியபடி, இந்த முதல் கட்டத்தில் என்னால் என் படைப்பை விமர்சகனாக மாறி நின்று பார்க்க முடிவதில்லை. நான் செய்ததைச் சீர்திருத்தச் சில சமயங்களில் ஒரு கால இடையீடு வேண்டியிருக்கிறது. ங்கிலக் கவிஞன் கூறிய சிருஷ்டி விஷயத்தில் அனுபவத்திற்கும் அதைக் கலையாக மாற்றும் கட்டத்திற்கும் ஏற்படும் கால இடையீடு இயற்கையாக அமைவது; இது செயற்கையாக நான் அமைத்துக் கொள்வது. அடுத்தபடியாகக் கதைக்கு கரு எவ்வாறு அமைகிறது என்ற கேள்வி. ராமசாமி எழுதிய மாதிரி அனுபவம் வெறும் கண்ணாடிச் சில்; எழுதுபவனின் திறமைதான் அதற்கு ரஸப் பூச்சுப் பாய்ச்சுகிறது. நான் எழுதத் தேர்ந்தெடுக்கும் அனுபவமும் என் மன வார்ப்பைக் காட்டுகிறது. இந்த அனுபவத் துணுக்கு அடி மனதிலிருந்து சிருஷ்டிப் பரபரப்பில் வெடித்துக் கொண்டு வருகிறது. இதற்கு ஒரு பூரணத்துவத்தைக் கொடுப்பது எழுதுபவனின் படிப்பு, மனோ விலாசம், அனுபவம் மேலும் பலவற்றினால் உருவாக்கப்பட்ட அடி மனதின் செழிப்புத்தான். இங்கு ஒரு உதாரணம் கொடுக்கலாமே என்று தோன்றுகிறது. நான் ஒரு நண்பருடன் வெகு நாட்களாகப் பழகி வந்தேன். ஒரு நாள் முதல் முறையாக அவர் வீட்டுக்குப் போனபோது அது பிரம்மாண்டமான ஒரு கட்டிடமாக இருந்தும், அதில் மூவர் மாத்திரம் குடியிருந்தது, எனக்கு அதில் ஒரு வெறுமை உணர்ச்சி வியாபித்திருந்தாக ஒரு பிரம்மை; என்னவோ அப்போது 'காகப்கா'வின் இலக்கியம் ஞாபகம் வந்தது. அடுத்த தடவை அந்த நண்பர் என்னை மாடியில் சந்திக்காமல் கீழே உட்கார வைத்துப் பேசியதும், ஒரு பெண் மாடி ஏறிச் சென்றதும் என் மனத்தைக் கவ்விப் பிடித்தது. அதிலிருந்து உருவானது 'சாதனை' என்ற கதை. சிருஷ்டி வெறியில் எழுதுகையில் மனத்தை ஒரு நிலையில் நாட்டி, வெளியிலிருந்து வரும் தாக்குதல்களை ஒரு வகையில் புறந்தள்ள லாகிரிப் பொருள்கள் உதவுகின்றன. எழுதிய பிறகு நாம் எழுதியதற்கு இரண்டாவது அபிப்பிராயம் வேண்டுமா என்றால், அனுபவம் வாய்ந்த கலைஞனுக்கு அவன் அபிப்பிராயம்தான் முக்கியம் என்பது என் கட்சி. னால், நமது சூழ்நிலையில் கலைஞனும் மனிதன் என்ற பலவீனத்தால் இந் நிலையைக் காக்க ஓரளவு கஷ்டப்படுகிறான்.

நான் தமிழ் நாட்டில் முதல் வரிசையில் நிற்கும் சில சிரியர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பை அடைந்திருக்கிறேன். இவர்களில் பலரும் இலக்கிய விஷயமாக அதிகமாகப் பேச முன் வராதது எனக்கு ஓரளவு ச்சரியத்தை அளித்தது. என்றாலும், நான் சந்தித்த சிலரிடமிருந்து இலக்கிய விஷயமாக நான் சில்லறை சில்லறையாகக்( இது அவர்களுக்குத் தெரியுமோ என்பது எனக்குத் தெரியாது) கடன் வாங்கியிருக்கிறேன். ஸ்ரீ க.நா.சு., சி.சு.செ., 'மௌனி', சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி இவர்களைத் தவிர ஸ்ரீ ராஜாராவ் அவர்களையும் குறிப்பிடலாம். க.நா.சு. விடமிருந்து தெரிந்து கொண்ட நமது ஐதீகத்திற்கும், பண்பாட்டிற்கும், இலக்கியத்துக்கும் தத்துவார்த்தமாக இருக்கும் உறவைப் பற்றி இன்னமும் சர்ச்சை செய்து கொண்டிருக்கிறேன். அவர் வற்புறுத்தும் கனமான உலக இலக்கியப் படைப்புகளுடன் வேண்டிய உறவின் அவசியத்தைப் பற்றியும் நினைத்ததுண்டு; சி. சு. செ. கலைஞனுக்குள்ள மூர்த்தண்யத்தைப் பற்றிச் சில விஷயங்களை அறிந்து கொள்ள வாய்ப்பு அளித்திருக்கிறார். சுந்தர ராமசாமி தனது சுய நிர்ணயத்தால் பல இலக்கிய தரமான விஷயங்களைச் சர்ச்சை செய்யும் ற்றலைக்கண்டு நான் பலமுறை வியந்ததுண்டு. நம்பி, 'நான் எதை எப்படி எழுதினாலும் எழுதுவதனைத்தும் என் மூலம் வந்து நானாகத்தானே விரிகிறது.' என்று சொன்னது இதை எழுதுகையில் ஞாபகம் வருகிறது. 'மௌனி' ஒரு குறிப்பிட்ட தத்துவ அடிப்படையில் அனுபவம் முழுவதையும் கூர்மையாகவும் நுணுக்கமாகவும் சர்ச்சை செய்வதைக் கண்டிருக்கிறேன். இவரும் க. நா. சு. போல் ஐரோப்பிய சிருஷ்டிக் கலைஞர்களின் சற்றுக் கனமான நூல்களுடன் நல்ல பரிச்சியம் உடையவர் என்று தோன்றியது. 'அவர் சொல்வதோ, நான் சொல்வதோ முக்கியமன்று. நீ உன் வழி செல்' என்று, ராஜா ராவ் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார்.

பாதிப்புகளைப் பற்றியவரை நான் ங்கில மொழிபெயர்ப்பில் டால்ஸ்டாய், டாஸ்டாவெஸ்கி, இப்ஸென், பிராண்டெல்லோ, ப்ரூஸ்ட் என்பவர்களையும் ங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், ஹென்றி ஜேம்ஸ், ஜாய்ஸ், எலியட், டன், பெக்கட் முதலியவர்களைப் படித்திருக்கிறேன். அமெரிக்க சிரியர்களில் பாக்னரையும், கவிகளில் மரியம் மூர், வாலஸ் ஸ்டீவன்ஸ் என்னைக் கவர்ந்திருகிறார்கள். ப்ராய்டிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. இந்தப் பெயர்கள் உடனடியாக ஞாபகம் வருபவை. நவீன இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவன் தலால் நிறையப் படிப்பதுண்டு. னால், இவர்களின் சாயல் என் எழுத்தில் வரக் கூடாது என்றும் எனக்குண்டு. நமது இலக்கியத்தில் பாரதம் (இன்னமும் முழுதும் படிக்கவில்லை படிக்க வேண்டும்) கைவல்ய நவநீதம், திருமந்திரம், உபநிஷத்துகள், கீதை இவை என் மனதைத் தொட்டிருக்கின்றன. என்னைப் பற்றியவரை, வார்த்தைகளின் அழுத்தத்திலும், நுணுக்கத்திலும் கிரியா சக்தியாக இயங்குவதிலும் தமிழ் கவிதையின் உச்ச கட்டம் குறளில்தான் அடைந்திருகிறது என்று தோன்றுகிறது. எனக்கு கம்பன்கூட இரண்டாம் பக்ஷம்தான். நவீன தமிழ் இலக்கியத்தில் முக்கியமாகக் குறிப்பிடக் கூடியவர்கள் 'மௌனி', 'புதுமைப்பித்தன்', க. நா. சு. கியவர்கள்தான். இதைத் தவிர எனக்கு மலையாள இலக்கியத்திலும் சிறிது பழக்கம் உண்டு. எனக்கு இலக்கியத்தில் ஒரு நிதான நிலையின் அவசியத்தை உணர்த்தியவர் மதிப்பிற்குரிய நண்பர் ஸ்ரீ கே. அய்யப்பப் பணிக்கர் என்பதையும் குறிப்பிட வேண்டும். முடிவாக என் எழுத்துக்கெல்லாம் முக்கிய பாதிப்பாக சுசீலாவைக் காண்கிறேன்.

சுமார் 10 வருஷங்களில் 3 நாவல், 20 கவிதைகள், ஏறக்குறைய 20 கதைகள் எழுதியிருக்கிறேன். கவிதையைப் பற்றி ஓரிருவர் 'ஓ, இன்னாரா, மாம்; கவிதை எழுதுகிறார்' என்று சொல்லி நிறுத்திக் கொள்வதைக் கண்டேன். மற்றபடிக் கதைகளைப் பற்றியோ பிரசுரமான ஒரு நாவலைப் பற்றியோ வாசக வட்டாரங்களில்-விஷயமறிந்த-அறியாத இருவகை வர்க்கங்களிலும் ஒருவித சலனமும் ஏற்படவில்லை என்பதையும் கண்டேன். இந்தக் கட்டத்தில் ங்கில சிரியை 'விர்ஜீனியா உல்ப்' ஐ பற்றிக் குறிப்பிட வேண்டியிருகிறது. அவள் தனது 'தற்கால நாவல் இலக்கியம்' என்ற பிரசித்தமான கட்டுரையில் ஒவ்வொரு இலக்கிய சிரியனும் மொழிக்கு பிடிகொடுக்காத வாழ்வின் புதிரை தெளிவு படுத்தத்தான் எழுதுகிறான் என்றும், சம்பவங்களைக் கோவைபடுத்துவதிலும், பாத்திரங்களை உத்திபூர்வமாக வனைவதிலும் இவ்வுண்மை பொய்ப்பிக்கப்படுகிறது என்றும், இலக்கியத்தில் கதாம்சத்தின் கலப்பில்லாமல், இந்த உண்மையைச் சித்தரிப்பதில்தான் அவன் நாட்டம் என்று எழுதியிருக்கிறாள்.

எடுத்துக்காட்டாக ருஷ்ய சிரியர்களைக் காண்பிக்கிறாள். ஈ. எம். பாஸ்டர் கூடத் துரதிர்ஷ்டவசமாக கதையில் கதாம்சம் வேண்டியிருக்கிறதே என்று கூறுகிறார். ஜாய்ஸ், பாக்னர், ஜேம்ஸ் இவர்களின் கதைகளில் கதாம்சம் எப்படி அமைந்திருக்கிறது? பெக்கட்டை எந்த சராசரித் தமிழ் வாசகன் அறிந்து அனுபவிக்க முடியும்? இவ்வளவு தூரம் ஏன் எசுதுகிறேன் என்றால் கதையில் கதாம்சம் அவ்வளவு முக்கியமில்லை என்பதற்கே!

எனது 20 கதைகளில் குறைந்தது 10 எனக்கு ஓரளவு சுமாராகப் படுகின்றன. அவற்றில் ஒன்று 'சுதேசமித்ரன்' வாரப்பதிப்பிலும், மற்றவை 'சரஸ்வதி', 'இலக்கியவட்டம்', 'எழுத்து' இவற்றிலும் வெளிவந்தவை. இவைகளைப் பற்றி ஒருமுகமான அபிப்பிராயம், தெளிவில்லை, ஓட்டமில்லை, சிறுகதையில்லை, கதையின் கருவேயன்றி கதையல்ல என்பவையே. என்னால் ஸ்தூல உருவைப் பளிச்சென்று படம் பிடிக்க முடிவதில்லை. மேலும் உருவம் வேண்டும் என்றாலும் இப்படித்தான் உருவம் அமைய வேண்டும் என்ற நிர்பந்தத்தை நான் ஒத்துக் கொள்வதில்லை. மிகைப்படுத்தி எழுதுவதைவிட, சூசகமாக எழுதுவதில்தான் எனக்கு நம்பிக்கை. மேலும் பத்திரிக்கை கதைகளை என்னால் படிக்க முடிவதில்லை. ஏனென்றால் கலைக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு அவசியம்; னால் கலை அப்பட்டமான வாழ்க்கைப் படமும் இல்லை. னால் பத்திரிக்கைக் கதைகள் செல்லரித்துப் போன நீதிகளை, ரீதிகளை இன்னமும் ட்சி செலுத்துவதாகப் 'பொய்' யாக ஏற்றுக் கொண்டு நடைபெறுவதால், நடைமுறைக்கு நேர் விரோதமாக இவைகள் காணப்படுகின்றன. காலத்தில் கட்டுண்டுதான்-காலத்தை மீறி ஒரு இலக்கிய சிருஷ்டி நிற்கிறது. னால், இவ்வளவும் சொல்வதால் என் கதைகள் முற்றும் வெற்றி பெற்றவையாகவும் நான் கருதவில்லை. என்னை யார் என்று தெரிந்து கொள்ளும் ஒரு முயற்சியில், என் அனுபவ உலகை அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியாகவே நான் கதைகளைக் கருதுகிறேன். என் கதைகள் ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் வரவில்லை. பிறகு இலக்கியப் பத்திரிகைகளிலும் வெளியிடுவது சாத்தியமாகிவிட்டது. பிறகு அண்மையில் ஒரு நாள் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கையில் 'அழகி' முன்னுரையில் க. நா. சு புஸ்தகத்தில், புஸ்தகமாக வரவென்றே சில கதைகளை எழுதியதாக எழுதியது ஞாபகம் வரவே, பத்திரிகைகளைப் படையெடுப்பதைவிட, இலக்கியப் பத்திரிகையாசிரிகளின் தத்துப் பிள்ளைகளில் ஒருவனாகவோ, சிஷ்ய கணங்களில் ஒருவனாகவொ சேர்வதைவிட, சில நல்ல சிறு கதாசிரியர்கள் சொன்ன மாதிரி என் கதைகளை அவர்கள் எழுதுவதையோ (இந்தக் கதையை நான் எழுதுவதென்றால் இன்னமும் நன்றாக எழுதியிருபேன்) நான் விரும்புவதில்லையாதலால், ஒரு நோட் புக்கில் என் கலை ஈடுபாட்டை, எனக்குள்ள கலைத் திறனை சோதனை செய்ய, வேறு யாருக்குமின்றி, எனக்காகவே ஒரு சில சிறுகதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். இது அவசியமா என்று கேட்டால், இன்று தமிழ் இலக்கிய உலகம் இருக்கும் நிலையில் இதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. இவைகளைத் திரட்டிப் பார்க்கையில் எழுத்தாளன் கற்பனை எவ்வாறு ஒரு குப்பை கூடை என்பதும், இந்தக் குப்பைக் கூளத்தில்தான் எவ்வாறு ஒன்றிரண்டு தானியங்கள் மிஞ்சுகின்றன என்பதையும் சொல்லவேண்டும். இதுகாறும் எழுதிய கதைகளில் 'சாதனை', 'ஒரு பெண்', 'ஜிம்மி', '?', 'ஒரு கதை', 'அசவத்தமென்னும் ஒரு மரம்', 'யாத்திரை', 'ஈசுவரய்யரும் சங்கரராமின் காரியதரிசியும்', 'அகம்', என்பவைதான் சற்று மனதிற்கு ஒரு தெம்பைத் தருகின்றன. இவற்றில் பலவும் பத்திரிகைகளில் வராதவை; புஸ்தகமாகவும் வர வாய்ப்பில்லாதவை! எனவே என்னைப் போன்ற எழுத்தாளருக்கு நான் கூறக்கூடியது பத்திரிகைகளையோ, இலக்கியக் குழுக்களையோ சாராமல் தன் நிர்ப்பந்தத்தினால் தனக்காகவே அவன் எழுதிக் கொள்ளப் பழக வேண்டும் என்பதே. இப்படி எழுதுவதால் அவன் கலையில் தெம்பும் வலிவும் காணும்; அதிக பக்ஷமாக நல்ல கதைகளும் பிறக்கும். பிறகு பிரசுரம் இருக்கவே இருக்கிறது. னால், இது முடியுமா? அவ்வளவு எளிதன்று என்பதுதான் உண்மையான பதில்!

எனது பிரசுரமான 'நிழல்கள்' ஒரு குறுநாவல். பக்கங்கள் குறைந்திருப்பதால் குறுநாவல் என்றுதானே கூற வேண்டும். இந்த நாவலும் என் கொள்கைப்படி என்னை அறிவதற்கு, என் உலகைப் பரிசீலனை செய்யும் ஒரு முயற்சி. இதைப் பற்றி நான் அபிப்பிராயம் கேட்காமலே ஒரு இலக்கிய மேதை "இதில் பாத்திர சிருஷ்டி மோசம்; நீ தத்துவம் பேசுவதாக நினைத்துக் கொண்டு என்னவோ எழுதியிருக்கிறாய்" என்றார். இன்னொருவர் " வழுக்கிக் கொண்டு போகிறது." என்றார். ஒரு ங்கிலப் பேராசிரியர் "வாழ்க்கையின் கசப்பான பிரத்தியட்சம் தெரிகிறது; என்றாலும் கலாபூர்வமாக இல்லை. நீ என்னதான் எழுதினாலும் ஜனரஞ்சகமான சிரியனாக முடியாது. உன் சை என்னவானாலும் ஜேன் ஸ்டினை மாடலாக வைத்துக் கொண்டு எழுது" என்றார். இதற்கெல்லாம் என் கவிதை ஒன்றில் எழுதியபடி "பேசினார்கள்; பேசாமல் கேட்டேன்" என்றுதான் சொல்ல வேண்டும். னால், நான் மதிக்கும் ஒரு சிருஷ்டி கர்த்தா "இந்த நாவல் நன்றாக இருக்கிறது; அடுத்த நாவலை எழுதுங்கள்" என்றார். இதற்கென்றே காத்துக் கொண்டிருந்தவன் மாதிரி அடுத்த நாவலை எழுதி முடித்தேன். நான், தற்காலத்தில் நாவல் புற உலகைப் புறக்கணித்து அக உலகை அறிவதில்தான் ஈடுபட்டிருக்கிறது என நினைக்கிறேன். னால் அதே சமயத்தில் நாவல் தனி மனிதனை சமூக உறுப்பினனாகச் சித்தரிக்கவும் கட்டுப்பாடுடையது. இந்த அக-புற உலக இணைப்பு சரியாக அமைந்திருப்பதால்தான் நான் க. நா. சு. வை தமிழிலேயே சிறந்த நாவலாசிரியர் என நினைக்கிறேன். மற்றபடி என் 'நிழல்களை'ப் பற்றி எனக்கு நேரில் தெரிவிக்கப்பட்ட விமர்சனங்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. 'நிழல்கள்' புஸ்தகமாக வந்துவிட்டது என்பதும், அதைப் பற்றிக் குறிப்பிட்ட இவ்விமர்சனங்கள் இன்னாரால் இவ்வாறு வந்தன என்பதும் என்னைப் பற்றியவரை மிக உபயோகமான விஷயங்கள். மற்றபடி, நாவலுக்கு இன்னொரு நோட் புக்!
கவிதைதான் இலக்கியத்தின் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பொழுது கவிதையில் படிமத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பறைசாற்றுகிறார்கள். னால், படிமம் கூட மனநிலையின் சூக்கும உருவாக, சிந்தாகதியின் பிரதிரூப பிம்பமாகச் செயல்படுவதில்தான் சிறக்கிறது. கவிதையில் இசையின் தொடர்பு வேண்டுமென்றாலும் அது மிகைப்படுவதால் மலினமடைகிறது. அதனால்தான் பழங்கவிதையைப் பின்பற்றுவதாகக் கற்பனை செறிவு இல்லாத யாப்புக் கவிதைகள் ஓசைக் குப்பைகளாக இருக்கின்றன. என் போன்ற சிலரின் அனுபவம் யாப்புக் கவிதையில் காணப்படும் ஓசை அமைதி பிடிபடுவதில்லை என்பது மட்டுமல்லாமல், சுயேச்சா கவிதையிலும் ஒரு ஓசை ஒழுங்கு காணப்படுகிறது என்பதுமாகும்! ஒரு தமிழறிஞர் பாசுரங்கள் யாப்புக் கடங்காதவை என்கிறார். இது உண்மையா என்பது எனக்குத் தெரியாது!
கவிதையைப் பற்றி எழுதுகையில் எனக்கு வாலரி கூறியது ஞாபகம் வருகிறது: வசனத்தில் வார்த்தை ஓர் உத்தேசத்துடன் உபயோகப்படுவதால், அவ்வுத்தேசம் கழிந்தவுடன் அது அழிகிறது என்றும், கவிதையில்தான் அக்ஷரங்கள் அமரத் தன்மைப் பெறுகின்றன என்றும் கூறுகிறார். இது இவ்வாறு அன்று என நிருபிக்க முடியும் (வசனத்தைப் பற்றி) என்று டி. எஸ். எலியட் கூறுகிறார். மேலும் வாலரி கவிதையில் பாஷை வசனத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு இயங்குகிறது என்றும், இதை எடுத்துக் காட்டுவது உபயோகமாக இருக்குமென்கிறார். இக் கருத்து புதுக் கவிதைக்காரர்களுக்குப் பயன்படலாம்.

என் கவிதைகளில் சுசீலா என்ற சங்கேதச் சொல் மூலம் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தைக் கொண்டு பல அனுபவங்களை நான் அளக்க முயற்ச்சிக்கும் கவிதைகள் 'கொல்லிப்பாவை' வரிசை. 'காட்சி' அனுபவச் சிதறல்களைச் கலை வண்ணமாக்கும் முயற்சி. நான் கவிதை உட்செவியில் எப்போதும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொள்கையைச் சார்ந்தவன். என் கவிதைகளை இன்னமும் சோதனா பூர்வமாகச் செய்து பார்க்க வேண்டுமென்ற சை எனக்கு.

இதுகாறும் நான் எழுதியவற்றிலிருந்து எனது எழுத்தாள நண்பர்கள் தோல்வி மனப்பான்மை உறக்கூடாது என்பதையும் கூற வேண்டும். நான் எழுத்துலகில் புகுவதற்கு ஒரு கட்டத்தில் ஒரு சில சிரியர்கள் எனக்கு உதவினார்கள்; அடுத்த கட்டத்தில் வேறு எழுத்தாளர்கள். இதை நினைவில் வைத்துக் கொண்டுதான் ஒரு கவிதையில் எழுதினேன்.

"வேளை வந்துற்றபோது நாதன் வடிவில் நாலிருவர் வந்து போவார்"னால், ஒரு எழுத்தாளனுக்குத் தன் நிலை அறாமலிருப்பதுதான் முக்கியம் என்பதையே நான் வற்புறுத்துகிறேன். தமிழ்நாட்டில் பத்திரிக்கைகள், இலக்கியத் தரம் வாய்ந்தவை அல்லாதவை, புஸ்தக ஸ்தாபனங்கள் எல்லாமே பெயரெடுத்த சிரியர்களைத்தான் அங்கீகரிக்கின்றன. ஒருவெளை இது இப்படித் தான் இருக்க முடியும். னால், இந்தக் கட்டத்தை அடையும் வரை ஒரு எழுத்தாளன் சற்றுக் கஷ்டப்பட வேண்டியதுதான்! இந்தக் கட்டத்தை அடைந்த பிறகும் அவன் தன் சுயத்தன்மையை விட்டுக் கொடுக்காமலிருந்தால் அவன் சாதனை தரத்திலும் வளத்திலும் சிறப்புறும். எது என்னவானாலும் நண்பர் நீல பத்மனாபன் பாஷையில் ஒரு எழுத்தாளன் வாழ்வே "ஏகாந்த யக்ஞத்தின் சீதள ஒளியில்தான் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது" என்று சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொள்கிறேன்.
-நன்றி மரத்தடி

****
நகுலன்
எஸ்.ராமகிருஷ்ணன்
நினைவுப் பாதை
ஒவ்வொரு முக்கிய எழுத்தாளரையும் தேடிச் சென்று பார்ப்பது என்று எனது இருபது வயதில் புறப்பட்டபோது, அது ஒரு சாகசப் பயணம் போல அமையக்கூடும் என்றே நினைத்தேன்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழிலும் மற்ற இந்திய மொழிகளிலும் எழுதிக்கொண்டு இருக்கும் எத்தனையோ எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்பில் ஒன்றிரண்டைத் தவிர, பெரும்பாலானவை கசப்பான அனுபவங்களே!
எழுத்தாளன் ஒரு விசித்திரப் பிறவி என்பதில் நம்பிக்கையற்றவன் நான். எழுதுவது என்பது ஒரு வேலையல்ல, பொறுப்பு உணர்ச்சி என்று நம்புகிறவன்.
தாலூகா அலுவலகம் ஒன்றில், ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பம் செய்வதற்காகச் சென்றிருந்தேன். அங்கே உள்ள அதிகாரி, Ôஎன்ன வேலை செய்கிறீர்கள்?Õ என்று கேட்டதும், Ôரைட்டர்Õ என்றேன்.

அந்த அதிகாரி பென்சிலை உருட்டிக் கொண்டே, Ôஎந்த ஸ்டேஷன்ல?Õ என்று கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. கேள்வியும் புரியவில்லை. அவராகவே Ôபோலீஸ் ரைட்டர்தானே?Õ என்ற பிறகுதான் கேள்வியின் பின்புலம் எனக்குப் புரிந்தது. எழுத்தாளர்களைத் தேடிக் காண்பது என்ற எனது ஊர்ச் சுற்றலில்தான் நகுலனை முதன்முதலாகச் சந்தித்தேன். நகுலன் ஒரு நல்ல கவிஞர், நாவலாசிரியர்.
திருவனந்தபுரத்தில் அவரது வீடு, கௌடியார் என்ற பகுதியில் இருக்கிறது. நான் பார்க்கச் சென்ற நாட்களில், அவரது Ôநாய்கள்Õ என்ற நாவல் வெளியாகியிருந்தது. Ôநாய்களைப் பற்றி ஒருவர் நாவல் எழுதியிருக்கிறாரே!Õ என்று ஆச்சரியத்துடன் அதை வாசிக்கத் துவங்கினேன். நாவலில் ஓர் உருவகமாக, நாய் என்ற படிமத்தைப் பயன்படுத்தி இருந்தார்.
நாவல் முழுவதும் மெல்லிய கேலியும் கவித்துவமும் தத்துவத் தெறிப்புகளும் நிறைந்திருந்தன. முன்னதாக நகுலன் கவிதைகள் மீது கொண்ட ஈடுபாடு, இந்த வாசிப்பினை அதிகப்படுத்தவே, அவரைக் காண்பதற்காகச் சென்றிருந்தேன்.
நகுலன் திருமணம் செய்துகொள்ளாதவர். ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வுபெற்று தனிமையில் வாழ்பவர். அவருக்குள்ள ஒரே துணை ஒரு பூனை மட்டும்தான்!
ஒரேயரு வேலைக் காரப் பெண் உண்டு. அவர், பல வருடங்களாக அந்த வீட்டில் வேலை செய்து, நகுலனின் சகோதரி போல, அவர் மீது அதிக அக்கறை கொண்டவராக இருந்தார்.
தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர் நகுலன். அவரது வீடெங்கும் புத்தகங்களே நிரம்பி இருந்தன. பசுமையான மரங்களடர்ந்த ஒரு சரிவில் உள்ளது அவரது வீடு. நகுலன் தன்னைத் தேடி வருபவர்களோடு கொள்ளும் உறவு விசித்திரமானது. சந்தித்த மறு நிமிடமே, ஒரு குழந்தையைப் போல ஏதேதோ கேட்கத் துவங்கிவிடுவார். அது ஒருவிதமான நட்பாக வளர்ந்து செல்லும்.
‘Ôநீங்கதான் ராமகிருஷ்ணனா?’Õ
‘Ôஆமாம்!’Õ என்று தலையாட்டினேன்.
அவர் சிரித்துக்கொண்டே, ‘Ôநீங்கதான் ராமகிருஷ்ணன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?’Õ என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியாமல், நானும் சிரித்தேன்.
நகுலன் தனது புன்னகை படரும் முகத்தோடு, Ô‘எவ்வளவு வருஷமா ராமகிருஷ்ணனா இருக்கீங்க?’Õ என்று கேட்டார். கேலியாக இருந்தாலும், இந்தக் கேள்வி எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.
Ô‘பிறந்ததிலிருந்து ராமகிருஷ்ணனாகவே இருக்கிறேன்’Õ என்றேன். அவர் அதை ரசித்தவர் போல, ‘Ôபிறந்ததில் இருந்தா?’Õ என்று சத்தமாகச் சிரித்தார். Ôஅந்தச் சிரிப்பின் ஆழம் எத்தகையது?Õ என்று வியப்போடு பார்த்தேன்.
அவர் கட்டிலின் அருகில் வந்து, பூனை சுருண்டு படுத்துக்கொண்டது. அவர் பூனையைப் பார்த்தபடியே, ‘Ôநான் என் பூனைக்குப் பெயரே வைக்கவில்லை. அது ஏதாவது ஃபீல் பண்ணுமா?Õ’ என்று கேட்டார். எனக்கு எப்படிப் பதில் சொல்வது என்றே புரியவில்லை. நான் அமைதியாக, ‘Ôபூனையை எப்படிக் கூப்பிடுவீர்கள்?’Õ என்று கேட்டேன். Ô‘பூனையைப் பூனை என்றுதான் கூப்பிடுவேன். அதுதானே சரியான முறை?’Õ என்றார்.
இந்த உரையாடலை வேற்று மனிதன் யாராவது கேட்டால், Ôஎன்ன இது பிதற்றல்?Õ என நினைப்பான். ஆனால், அதுதான் நகுலன்!
அவரது பரிகாசமும் ஒவ்வொன்றின் மீது அவர் எழுப்பும் கேள்விகளும் குழந்தைகளைப் போலவே விசித்திரமானதும் ஆழமானதும் ஆகும். உலகின் மீதான அவரது வியப்பும் ஈடுபாடும் தர்க்கங்களை மீறியது.
பேச்சு எங்கெங்கோ சுற்றி, எழுத்தாளர்களைப் பற்றிய தாகத் திரும்பியது. நகுலன், தான் ஒரு எழுத்தாளரைப் பார்க்கப் போனதைப் பற்றி நினைவுகூர்ந்தார்.
1980&களில் பிரபலமாக இருந்த ஒரு நாவலாசிரியரைப் பார்க்க நகுலன் சென்று இருந்தார். எழுத்தாளர் ஒரு வியாபாரியாகவும் இருந்தார். நகுலன் பார்க்கச் சென்றபோது, அவர் தனது கடையில் இருந்துகொண்டே, Ôஆள் ஊரில் இல்லைÕ என்று எதனாலோ சொல்லி அனுப்பி விட்டார். நகுலனுக்கு Ôஅவர் உள்ளேதான் இருக்கிறார்Õ என்று உறுதியாகத் தெரிந்தது. ஆகவே, மாலை வரை அங்கேயே காத்திருந்து, எழுத்தாளர் வெளியே வந்ததும், பின்னாடியே சென்று முதுகில் ஒரு தட்டுத் தட்டி, Ôசார்... நானும் ஊரில் இல்லைÕ என்று சொல்லிவிட்டு, மறு நிமிடமே புறப்பட்டு திருவனந்தபுரம் வந்துவிட்டாராம். இதைச் சொல்லி முடித்த நிமிடத்தில், நகுலன் கண்களில் இருந்த கேலி, சிறுவர்களுக்கு மட்டுமே உரியது.
நான் பேசிக்கொண்டு இருந்த காலையில், மருத்துவச் சோதனை ஒன்றுக்காக அவர் வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. மதியம் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு, வெளியே வந்துவிட்டேன். திரும்பவும் மாலையில் நான் சென்றபோது, காலையில் கேட்ட கேள்விகளையே மறுபடி கேட்டார்.
‘Ôநீங்கதானே ராமகிருஷ்ணன்?’Õ
‘Ôஆமாம்!’Õ
‘Ôஅப்போ, காலையில் Ôராமகிருஷ் ணன்Õனு ஒருத்தர் வந்திருந்தாரே, அவர் உங்களுக்குத் தெரிந்தவரா?Õ’ ‘Ôஓரளவுக்குத் தெரியும்’Õ என்றேன். நகுலனின் சிரிப்பு பீறிட்டது. ‘Ôஅப்போது அவரிடம் பேசிக்கொண்டு இருந்ததை உங்களிடமும் பேசலாம், இல்லையா?Õ என்று கேட்டார். உரையாடலைத் தத்துவத்தின் உயர்ந்த நிலைகளை நோக்கி நகர்த்திப் போகும் கலை அவருக்கே உரியது.
ஒரு நாள் முழுவதும் நகுலனோடு இருந்தேன். மாலை, நானும் அவரும் திருவனந்தபுரம் சாலையில் நடந்து சென்றோம். அவர் அழகான இளம்பெண் ஒருத்தியைக் காட்டி, Ôஇவள் அழகாக இருக்கிறாளா?Õ என்று கேட்டார். மிக அழகாக இருப்பதாகச் சொன்னேன். அவர், Ôகண்ணில் பார்த்தாலே அழகு தெரிந்துவிடுகிறது, இல்லையா? அது எப்படி சார்?Õ என்று கேட்டார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
நகுலன் சாலையில் செல்லும் சைக்கிள்காரனைப் பற்றி, தெருநாயைப் பற்றி, கோடையில் பெய்த மழையைப் பற்றி, இறந்துபோன அம்மாவைப் பற்றி எனப் பேச்சின் சுழல்வட்டத்துக்குள் நீண்டுகொண்டு இருந்தார்.
அவரைச் சந்தித்து வந்த நீண்ட காலத்துக்கு, அந்தக் கேள்வி என் மனதில் நீந்திக்கொண்டே இருந்தது. நான் ராமகிருஷ்ணன் என்று எனக்கு எப்படித் தெரியும்?
சிறுவர்களின் தீரா விளையாட்டைப் போல, உலகை ரசிக்கும் பக்குவமும் மனதும் அவரிடம் இருந்ததை அறியத் துவங்கினேன். அதன் பிறகு பலமுறை நகுலனைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பும் ஒரு தனித்த அனுபவம்!
ஒரு முறை நகுலன் தன் வீட்டின் வாசலில் உட்கார்ந்தபடி, சாலையில் போகிறவர்களுக்குக் கையசைத்துக்கொண்டு இருந்தார். பள்ளிச் சிறுவர்கள் சிலர் கையசைத்துப் போனார்கள். அவர் கையசைத்தபடியே என்னிடம் கேட்டார்...
Ô‘நான் இறந்துபோன பிறகு, Ôஇந்த வீட்டில் கை காட்டும் கிழவன் ஒருவன் இருந்தான்Õ என்று குழந்தைகள் நினைப் பார்கள், இல்லையா? அதற்குத்தான் கையசைக்கிறேன்’Õ என்றார். இந்த ஆதங்கத்தின் கீழ் இருந்த துக்கம், ஒரு தேளின் விஷக்கடுப்பைப் போல என் உடலெங்கும் தாக்கியது.
நகுலனை Ôஎழுத்தாளர்களின் எழுத்தாளர்Õ என்பார்கள். அவருக்கு வயது முற்றி, எண்பத்து இரண்டைத் தாண்டி நீள்கிறது. ஆனாலும், அவர் மனதில் இலவம் பஞ்சு காற்றில் பறப்பது போல வார்த்தைகள் பறந்து கொண்டே இருக்கின்றன.
நகுலனின் கதைகளில் பிடித்தமானது, Ôஎட்டு வயதுப் பெண் குழந்தையும், நவீன மலையாளக் கவிதையும்Õ என்ற கதை. இதைக் கதை என்று சொல்ல முடியாது. ஒரு நிகழ்வு!
அதுவும், ஒரு சிறுமி நகுலனின் வீட்டுக்கு வந்து, அவரோடு பழகியதைப்பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு என்றுகூடச் சொல்லலாம். இக்கதை கவிதையின் சூட்சுமம் பற்றியது.
சிமி என்ற எட்டு வயதுச் சிறுமி, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கிறாள். அவள் ஒரு நாள் Ôபடிப்பதற்காக ஏதாவது புத்தகம் வேண்டும்Õ என்று நகுலனின் வீட்டுக்கு வருகிறாள்.
நகுலன், அவள் படிப்பதற்காக குஞ்சுண்ணி என்ற மலையாளக் கவிஞரின் புத்தகத்தைத் தருகிறார். அந்தக் கவிதைத் தொகுதியை வாசித்து விட்டு, குழந்தை மறுநாள் Ôசிமி குமி உமிக்கரிÕ என்று ஒரு கவிதையை எழுதி வந்து காட்டுகிறது.
அக்கவிதைகூட குஞ்சுண்ணி கவிதை போலவே சந்தமும் சொற்சிக்கனமும் கொண்டு இருக்கிறது. நகுலன் அந்தச் சிறுமியின் கவிதையை ரசித்தபடி, Ôநல்ல கவிதை, வாசிப்பவரை உடனே அதைப் போல ஒன்றை உருவாக்கச் செய்வதுதான்Õ என்று பாராட்டுகிறார்.
அதோடு, Ôகவிதை என்பது சப்த ஒழுங்கால் உருவாவது என்று சிறுமிக்குப் புரிந்திருக்கிறதுÕ என்று பாராட்டுகிறார்.
இக்கதை வழக்கமான கதைகளைப்போலப் பெரிய சம்பவம் எதையும் சொல்லவில்லை. மாறாக, குழந்தைகளின் விளையாட்டைப் போலத்தான், கவிதையும் ஒரு எதிர்பாராமையும் அழகும் கொண்டு இருக்கிறது என்ற நிதர்சனமான உண்மையை வெளிப் படுத்துகிறது.
எழுத்தின் ரகசியங்களைக் கற்றுக்கொள்வதற்கு நாம் எழுத்தாளனை அணுகினால், அது நிச்சயம் ஏமாற்றமாகவே முடியும்.
Ôபெரிய கத்தியைத் தேர்ந்தெடுக்கிறாயா, இல்லை, சிறிய கத்தியைத் தேர்ந்தெடுக்கிறாயா என்பது முக்கியம் இல்லை. எதிரியின் இதயத்துக்கும் உன் கத்தி முனைக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்பதுதான் முக்கியம்Õ என்று யுத்த சாஸ்திரம் கூறுகிறது.
அந்த நூலை எழுதியவன் ஒரு பௌத்த பிக்கு. ஒருவகை யில் இதுதான் எழுத்தின் ரகசியம். இதைக் கற்றுத் தருபவன், கதையை எழுதியவன் இல்லை. மாறாக, ஒரு நாடோடி.
கற்றுக் கொள்வதற்கு ஆசானை விடவும் மனம்தான் முக்கியமாகத் தேவைப்படுகிறது. மனதைக் குழந்தையைப் போல வைத்துக்கொள்வது எளிதானதா என்ன?
நகுலன் திருவனந்தபுரத்தில் வாழ்ந்துவருபவர். எண்பத்திரண்டு வயதான இவர், தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தவர்.
பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். Ôஎழுத்துÕ இதழில் எழுதத் துவங்கியவர்.
நகுலன் கவிதைகள், நாய்கள், ரோகிகள், வாக்குமூலம், மஞ்சள்நிறப் பூனை போன்றவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். இவர் தொகுத்த Ôகுரு«க்ஷத்திரம்Õ இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் நகுலன்.
http://www.vikatan.com/av/2005/may/22052005/av0602.asp
posted by Chandramukhi @ 8:32 AM