Wednesday 25 April 2018

வியாகுல சங்கீதம் - சாரு நிவேதிதா





நினைக்கிறார்கள். தலித் அடையாளம் என்பது சாதியைச் சுட்டுவதிலும் வரலாற்று ஒதுக்கத்திலும் வேர் கொண்டதாகவே இருக்கும்,


ஓர் இனத்தின் அடையாளம் கலாச்சார மதிப்புகளில் வேரோடி யிருக்கிறது என்றாலும் இது சிக்கல் நிறைந்த செயல்பாடாகத் தோன்றி னாலும் நாம் தேசியப் பிரச்சினைகள் மேல் கவனம செலுத்தத்தான் வேண்டும். தலித்துகள் ஒரு தனி தேசிய அடையாளததை வேண்டினாலும் கூட அரசியல் ரீதியான சுய நிர்ணயத்தையும் அவர்கள் கோருகிறார்கள். இன்றைய இந்திய அரசியலில் காரியங்கள் நிகழும் முறைபபடி, ಟ್ವಿ: ஜனநாயக ஆட்சி முறையில் தலித்துகள் நிரந்தரச் சிறுபான்மை ఐ ராகவே நீடிப்பார்கள். அவர்களது தாழ்ந்த நிலையும் சமூகப்படிமுறையும பாராளுமன்ற நடவடிக்கைகளாலும் நலத்திட்டங்களாலும் அரசியல் சாசன ரீதியான ஒதுக்கீடுகளாலும் தீர்க்கப்படவென்றே காத்திருக்கின்றன. அரசியல் சாசன ரீதியில் அடையாளப்படுத்தக்கூடிய ஒரு குழுவினர் நிரந்தரச் சிறுபான்மையினர் நிலைக்குக் குறைக்கப்படுவது @@ தாழவு பட்ட சூழ்நிலையே. இதுவே அரசியல் ரீதியான சுயநிர்ணயத்தைத் தேட அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது. ஜாகணட இயக்கத்தின் ஆதிவாசிகள் தற்போது வற்புறுத்தி வருவது போன்று அரசியல் ரீதியில் 5.L. நிர்ணயத்தை தலித் வகுப்பினர் நிர்ப்பந்திக்க வேண்டிய வெளிப்படை நிலை இன்று உருவாகியுள்ளது. ஆனால் இந்த வகை அரசியல் நிர்ப்பந்தம் செய்வதற்கு பல்வேறு தலித் குழுக்களின் ஒன்றிணைவு :::#.... ဖြိုး யிருக்கிறது. இது தேசிய அளவில் அடையாளப்படுத்தக்கூடிய அU ಲಖ இயக்கமாக வளர்வதுவே இன்றைய தேவை. வரலாறுககு முந்திய திராவிடப் பிரக்ஞையின் மூழ்கடிக்கப்பட்டு விட்ட இயல்பை இது தூண்டியெழ வைக்கும் செயலைச் செய்யுமா என்பது ஆழ்ந்து சிந்திப்பதற்குரிய சரியான ஒரு விஷயமாகும்.


முடிவுரையாகக் கூறப்போனால், தலித் அடையாளம் பற்றிய விஷயம் மூலங்களின் மீதான விசுவாசத்தின் வெளிச்சத்தில், கலாசாரப பாரம்பரியச் சொத்தினால், தேசியப்படுத்தப்பட வேண்டும் எனறு இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது; தேவையான காலம எடுத்துச் செய்ய வேண்டிய பணியென்பதாலும் அதிகப் புலமையின்மையாலும் துரிதமாகவே பார்வையிடப்பட்டுள்ளது. மேற்கொண்டு ஆய்வு செய்வதற்கும் விளக்கு வதற்கும் எண்ணுவதற்குமான சட்டகம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளதாக நான் நம்புகிறேன். ஆனால் தலித் மக்களின் ஆனம எழுச்சியாக ඹුණු அடையாளம் காட்டப்படுதலும் அரசியல் ரீதியில் செயல்புரியத் திடப்படுத்தலும் குழுவை உருவாக்க ஒரு துடிப்பு மிக்க இயக்கம் காட்டப்படுதலும் வரலாற்று ஒதுக்குதலுக்குத் தீர்வு காண்பதும் இழந்தஅடையாளத்தை மறு கண்டு பிடிப்புச் செய்தலும் இன்றைய காலத்தின் தவிர்க்க முடியாத தேவைகளாகும்.


138/கறுப்பு
****************************************************வியாகுல சங்கீதம்  -  சாரு நிவேதிதா

12.08.2002 அன்று கன்னியாகுமரியில் 'வானவில் இலக்கிய வட்டம்" சார்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் புதுமைப் பித்தனின் சிறுகதைகள் பற்றி வாசித்த கட்டுரையை துரதிர்ஷ்டமாக நான் தொலைத்து விட்டதால் அச்சிறுகதைகளை மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டிய வேதனை எனக்கு ஏற்பட்டது.

புதுமைப் பித்தனைப் பற்றி காரசாரமான விவாதங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் இவ்விவாதங்களில் நான் பங்கேற்கவே விரும்பவில்லை. இவ்வளவு விவாதங்களை எழுப்பக் கூடிய அளவுக்கு அவர் கதைகளில் ஏதுமில்லை என்பதே காரணம்.

'வாழ்ந்தபோதும் வாழ்ந்து மறைந்து இத்தனைக் காலம் கழிந்த பிறகும் பெரும் சர்ச்சைக்குள்ளான தமிழ்ப் படைப்பாளி அநேகமாக புதுமைப் பித்தனாகத்தான் இருப்பார். அவரது படைப்புகள் பற்றி தமிழ் இலக்கிய உலகில் இருவேறு மதிப்பீடுகள் உண்டு. புதுமைப் பித்தனை மேதையாகப் போற்றுபவர்கள், படைப்புகள் மூலம் கட்டுடைப்பவர்கள். இவ்விரண்டு முகாமிலும் சமீப காலங்களில் புதுமைப் பித்தன் அதிகமாகப் பேசப்படு கிறார். விவாதிக்கப்படுகிறார் என்று எழுதுகிறது தினமணிகதிர் (20.5.2001). ஆனால் புதுமைப் பித்தன் பற்றி மூன்று வித மதிப்பீடுகள் இருப்ப தாகவே நான் கருதுகிறேன். ஒன்று - புதுமைப் பித்தனை canonise செய்பவர்கள். இரண்டு - புதுமைப் பித்தனைப் பெரும் படைப்பாளியாக ஏற்றுக் கொண்டு அவரது எழுத்துகளிலும் பழைமைவாதம், சாதியம், மதவாதம் போன்றவற்றை எதிர்ப்பவர்கள், விமர்சிப்பவர்கள். மூன்றாவது மதிப்பீடு - புதுமைப் பித்தனை முற்றாக நிராகரிப்பவர்கள். இவர்கள் மிகவும் சிறுபான்மையினர்.

புதுமைப் பித்தனின் எழுத்துகளைப் படிக்கும்போது ஐம்பது அறுபது ஆண்டுகளிலேயே அவை காலாவதியாகி விட்டதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஓர் எழுத்தாளரின் மிகப் பெரிய தோல்வி, அவரது படைப்புகள் அமெச்சூரிஷாக அமைந்து போவதுதான், புதுமைப் பித்தனின் பெரும்பாலான கதைகள் அசட்டு/அரைவேக்காட்டுத் தனமானவை. தட்டையான மொழியில் எழுதப்பட்ட தமிழ் சினிமா பாணிக் கதைகள். சங்குத் தேவனின் தர்மம், பொன்னகரம், திருக்குறள் செய்த திருக்கூத்து என்று பல கதைகளை உதாரணமாகச் சொல்லலாம்.

புதுமைப் பித்தனுக்கு தமிழ் சினிமா காமெடி ட்ராக் நன்றாகவே வருகிறது. திருக்குறள் செய்து திருக்கூத்து கதை ஜனகராஜ்

கறுப்பு/139காமெடி (அபூர்வ சகோதரர்கள் ஜனகராஜ்). கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - 'லக்கிமேன் கவுண்டமணி, செந்தில்.

மேலும் கட்டில் பேசுகிறது, மோட்சம், காளிகோவில், உணர்ச்சியின் அடிமைகள், நிகும்பலை, புதிய நந்தன், கவந்தனும் காமனும, இது மிஷன் யுகம், திறந்த ஜன்னல், பறிமுதல், தெருவிளக்கு, அகலயை கடிதம. சித்தம் போக்கு, நன்மை பயக்குமெனின், தியாகமூர்த்தி, கண்ணன் குழல. வாடா மல்லிகை, கொடுக்காப்புளி மரம், நம்பிக்கை, புதிய ஒளி, ಹಣTou பெண், நானே கொன்றேன், சாயங்கால மயக்கம், தேக்கங்கன்றுகள், புதிய கந்தபுராணம், குப்பனின் கனவு, ஆண்மை, சணப்பன் கோழி, LDru೧೫, பால் வண்ணம்பிள்ளை, குற்றவாளி யார்?, வழி, பூசணிக்காய் அம்பி, சாமாவிட், தவறு, கலியாணி, ஒரு கொலை அனுபவம், நாசகாரக குமபல என்று அச்சுப் பிச்சு அசட்டுக் கதைகள் தொடர்ந்து நம்மைத தாக்குகின்றன.

பூரீராம் சிட்ஸ் உபயத்தில் வெளியிடப்பட்டுள்ள தலையணை ᎧᏈ04ᎦᎧᏬ புத்தகத்தில் 283ம் பக்கம் வரை படித்துக் கொண்டு வருகிறேன். ඉෂ கதைகூடத் தேறவில்லை. எல்லாம் ஜெமினி கதை இலாகா கதைகள, பல கதைகள் செய்தித்தாள் ரிப்போர்ட்டுகள். சில கதைகள் அதறகுக கூட லாயக்கற்றவை. சில மாடர்ன் தியேட்டர்ஸ் துப்பறியும் கதைகள (நானே கொன்றேன்). சில விட்டலாச்சார்யா கதைகள் (காஞ்சனை பிரம்மராக்ஷஸ்). சில சரித்திர நாடக ஸ்கிட்டுகள் (கொன்ற சிரிப்பு). цотод)JLo கருச்சிதைவு, சொன்ன சொல் போன்ற அசல் குப்பைகள். எல்லாமே ஒன்றரை நாட்களுக்கு ஒரு கதை 68sli verbal dysentry unds கழிந்து தள்ளப்பட்ட கதைகள்

இப்படிச் சொல்வதால், பிற்பாடு அவர் நாற்பதுகளில், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதானமாக எழுதிய ೫೧»* "சிறப்பானவை" என்று சொல்ல முடியாது. உதாரணமாக சித்தி திரும்பவும் ஜெமினி கதை இலாகாதான். o

இதையெல்லாம் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போடாமல், இத்தனை ஆண்டுகள் கழித்து இவற்றைப் பிரசுரிப்பதும் இது பற்றி விமர்சனம் எழுதுவதும் - தமிழ்ச்சூழலின் அவலங்களில் ஒன்று.

புதுமைப் பித்தனுக்கு மட்டும் நீண்ட ஆயுள் இருந்திருந்தால் கருணாநிதிக்கு முன்னதாகவே தமிழகத்திற்கு ஒரு கலைஞா சீஃப் மினிஸ்டர் கிடைத்திருப்பார். புதுமைப் பித்தனின் குடும்பத்தாருககு இப்படி 2000 ரூபாய் ராயல்டி கொடுத்தேன், 3000 ரூபாய ராயலடி கொடுத்தேன் என்று பதிப்பகங்களுக்கு இடையே திருவோட்டுச் சண்டையும் ஏற்படால் இருந்திருக்கும். தமிழகம் கொடுத்து வைக்கவில்லை, என்ன செய்ய

140/கறுப்பு

றாாறு !LJu_1=-=- ی سے تتمہ- ت;= g1 = -1-----

வெறும் BULLSHIT கதைகளை எழுதிய ஒருவர் எப்படி இவ்வளவு காலம் கழித்துத் தமிழ்ச் சூழலில் பேசப்படுகிறார் என்று யோசித்துப் பார்த்தேன். பமீலாவின் ஞாபகம் வந்தது. அவள் என்னுடைய முன்னாள் சிநேகிதி. (பெயரை மாற்றியிருக்கிறேன்.) ஒரு சினிமா நடிகை. அதாவது சினிமா நடிகை ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவள். வயது முப்பது இருக்கும். இருபதாகவும் இருக்கலாம். சினிமா நடிகைகளின் உண்மையான வயதை எவன்ாலும் சொல்ல முடியாது. அளவைப் பார்த்து பதினெட்டு என்று முடிவுக்கு வருவோம். அவளோ எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருப்பாள். ஆனால் பமீலாவை யார் பார்த்தாலும் முப்பது என்றுதான் சொல்வார்கள். எடை நாற்பது இருக்கும். முழு எடை அல்லா. ஸ்தனங்களின் எடை மட்டும்! அப்படிப்பட்ட ஒரு நீர்யானை உடம்பு. ஒன்றிரண்டு படங்களில் சிறுசிறு வேடங்கள், தொலைக்காட்சி சீரியல்கள், சில விளம்பரப் படங்கள்.

"மிகப்பெரிய நடிகையாக வேண்டும்" என்பது இவள் கனவு. எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவள் எப்படி மிகப்பெரிய நடிகையாக முடியும்? ஆனால் சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

பமீலா இப்போது சுமார் 25 படங்களில் ஹீரோயினாக நடித்து விட்டாள். கைவசம் பத்துப் படங்கள். மாதம் இரண்டு படங்கள் ரிலீஸ், தமிழகச் சுவர்கள் எங்கும் இவளது பிரம்மாண்டமான முலைகள் ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. எல்லாம் மலையாள ‘ஏ’ படங்கள்.

எப்படி இது சாத்தியம்? ஜாதகம்தான். பமீலா முப்பது வயதில் புகழின் உச்சிக்குப் போவாள் என்று அவள் ஜாதகத்தில் எழுதியிருக்கிறது. குழப்ப மில்லாமல் தெரிகிறது புதுமைப் பித்தன் விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. மரணத்திற்குப் பிறகு விருத்தாச்சலம் பிள்ளைக்கு "ஓஹோ என்ற புகழ் என்பது அவர் ஜாதகம்!

O

முற்போக்கு இலக்கியம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் வைக்கோல் போருக்கும் கூட புதுமைப் பித்தன்தான் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

'பொன்னகரம்’ என்ற கதை பற்றிப் பலரும் சிலாகித்துப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அம்மாளு வேசைத்தனம் செய்வது- விபத்தில் அடிபட்டு வீட்டில் விழுந்து கிடக்கும் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்த்துக் கொடுப்பதற்காகத்தான் அம்மாளு எப்படிப்பட்டதோர் கற்பின் சிகரம்! புதுமைப்பித்தன் விபச்சாரி பற்றி எழுதவில்லை. சமூக மதிப்பீடு எதுவோ அதையே - அதாவது கற்பின் மேன்மையையே - எழுதியிருக்கிறார். தனி ஒருவனுக்கு, நம்பிக்கை, துன்பக் கேணி போன்ற பல கதைகள் முற்போக்கு வகையறாவைச் சேர்ந்தவைதான்.

O

கறுப்பு/141இதேபோல் LuGv pseudo - philosophy கதைகளும் காணக்கிடைக்கின்றன. ராமனாதனின் கடிதம், சாயங்கால மயக்கம், நினைவுப் பாதை, போன்ற கதைகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை. உபதேசம் என்ற ஒரு கதை கதையின் பொருளுக்கு ஏற்ற புதிர்களையும் முடிச்சுகளையும் கட்டாமல labyrinths உருவாக்கத் தவறி வெறும் செய்தியாக விழுந்து கிடக்கும் கதை இது இன்றும் பெரிதாகப் பேசப்படும் சிற்பியின் நரகம மகா மகானம, கயிற்றரவு போன்ற கதைகளுக்கு நிழ்த்திருப்பதும் இதே விபத்துதான்.

புதுமைப் பித்தனின் எல்லாக் கதைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் மற்றோர் அம்சம் - மத்தியதர வர்க்க மதிப்பீடுகள் : பற்றி எழுதுவது குற்றமல்ல. ஆனால் அந்த வர்க்கத்தின் மதிப்பீடுகளை u எவ்விதக் கேள்வியுமற்று தனது மதிப்பீடுகளாக ஏற்றுக கொண்டிருக்கிறார் அவர். அவருடைய கதாபாத்திரங்களான சைவ வெள்ளாள கணக்கப

பிள்ளைகள் அத்தனை பேருமே சொ.விருத்தாச்சலம் பிள்ளையாக நமக்குத்

தெரிய வருகிறார்கள்.

வெளிப்பூச்சு" என்று ஒரு கதை. மாதக் கடைசி. சம்பளம் போட வில்லை. வீட்டில் ஏகப்பட்ட செலவு. வீட்டு வாடகைககாரன எனன வெல்லாம் பேச முடியுமோ அதெல்லாம் சொல்லிவிட்டுப் போய் விட்டான். வீட்டுச் சாமான்களைத் தூக்கி எறிய அவற்றின் மீது கைதான் வைக்கவில்லை. இரவு வேளைக்கு வீட்டில் அரிசி இல்லை.

யாரிடமிருந்தோ எட்டணா கடன் வாங்கி வருகிறார் ரங்கநாதம். அப்போது ரங்கநாதத்தின் நண்பர் ராகவன் வருகிறார். ராகவனை வரவேற்று நாற்காலியில் உட்கார வைத்துப் பேசிக் கொண்டு இருக்கிறார் : வெற்றிலை போடச் சொல்லி தானும் போட்டுக் கொள்கிறார். சி பற்றிப் பேசுகிறார்கள். காப்பி தயாராகியது. ரங்கநாதத்தின் மனை கதவண்டையில் வந்து நிற்கிறாள்.

'என்ன ஸார், காப்பி கொஞ்சம் சாப்பிடுங்களேன்’ என்றார் ரங்கநாதம. இல்லை ஸார், இப்பொழுதுதான் சாப்பிட்டேன்; நீங்கள் சாப்பி டுங்கள்' என்றார் ராகவன்.

"கொஞ்சம் சாப்பிட்டால் என்ன வந்துவிடுகிறது? ராதா, காப்பியை இங்கேதான் கொண்டு வாடி என்றார் ரங்கநாதம்.

காப்பி பரிமாறப்படுகிறது. ராகவன் ஒரு எட்டணா 95L657 கேட்க, ரங்கநாதமும் கொடுத்து விடுகிறார். ரங்கநாதத்தின் மனைவி வநது அரிசியும் மண்ணெண்ணெயும் வாங்கி வரச் சொல்கிறாள்.

இரவு தோசையே சாப்பிட்டு விடலாம்" என்கிறார் ரங்கநாதம். “மண்ணெண்ணெய்? என்கிறாள் மனைவி.

142/கறுப்பு

yTIJI LI - JIJI I varretizzji -----

எட்டனாவை ராகவனிடம் கொடுத்திருப்பதாகவும், நாளை காலையில் வாங்கிக் கொள்ளலாம் என்றும் சொல்கிறார் ரங்கநாதம்.

இப்படி ஒரு சிறுகதை! இதை எழுதியவர் தமிழ் இலக்கியத்தின் சாதனையாளர். த்து. உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

O

ஒருநாள் கழிந்தது" என்று ஒரு கதை. மாசக் கடைசியில் எட்டணா கூட இல்லாமல் கஷ்டப்படும் ஓர் எழுத்தாளப் பிள்ளைவாளின் தரித்திரக் கதை. தமிழ் இலக்கியம் உலகத் தரத்தை அடையாமல் போனதற்கு இப்படிப் பட்ட ஆபாசமான, குப்பைக் கதைகளே முன்னோடிகளாக அமைந்து போனதே காரணம் என்று தோன்றுகிறது.

'மனித யந்திரம்" கதையில் பூரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை என்ற ஸ்டோர் குமாஸ்தா. நியாயந்தான்' என்ற கதையில் வரும் வடலூர் குமாரு பிள்ளை, செல்லம்மாள்” என்று ஒரு கதை. தமிழ் இலக்கியத்தின் சிகர சாதனை ஜவுளிக்கடையில் வேலை செய்யும் பிரமநாயகம் பிள்ளை. அவர் மனைவி செல்லம்மாள். அவர்களின் கொடிய வறுமை. ரோட்டில் குழந்தையை வைத்துப் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரனைப் போல் செல்லம்மாளை வைத்துப் பிச்சையெடுத்திருக்கிறார் புதுமைப்பித்தன். என் தமிழ் இலக்கிய வாசிப்பிலேயே இவ்வளவு கேவலமான கதையை நான் படித்ததில்லை. ஏதோ சைவப் பிள்ளைகள்தான் இந்த உலகத்திலேயே அதிகம் ஒதுக்கப் பட்டவர்கள் என்ற சுயஜாதி அபிமானத்தில் தனது பிரமநாயகம் பிள்ளையை உருவாக்கியிருக்கிறார் புதுமைப் பித்தன்.

'புப்பியைப் படிக்கும்போது அவனைக் குப்பியடிக்க வேண்டும் போல் இருக்கிறது என்று சொன்னார் என் தலித் நண்பர் ஒருவர். அதையும் நான் இங்கே பதிவு செய்துவிட விரும்புகிறேன்.

மற்றொரு கணக்கப் பிள்ளை சிவ சிதம்பரம் பிள்ளை. (சிவ சிதம்பர சேவுகம்) நரையோடி நெஞ்சை மறைக்கும் தாடி, மல் வேஷ்டி, சிட்டி துண்டு, ஐந்து பெண்கள், பதினைந்து ரூபா சம்பளம். கல்லத்தி முடுக்குத் தெருவில் வறுமையின் இருளடித்த கர்ப்பக் கிருகம். ஜவுளிக்கடை குமாஸ்தா தான் உண்டு, தன் கணக்கு உண்டு, தன் காரியம் உண்டு என்று இருப்பவர் இந்த குமாஸ்தா.

சிவ சிதம்பரம் பிள்ளை சொப்பனத்திலிருந்து விழித்துக் கொண்டது போல் தம் வாழ்வின் பேரேட்டுக் கணக்கைப் பார்த்தார். ஐந்து பெண்கள். எம்டன் குண்டு போட்ட போது கிடைத்து வந்த சம்பளம் குட வயிறு. சில நரையோடிய தலைமயிர்கள் - இவைதான் இவரது வரவிலிருந்தது. ஐந்து பெண்களைக் கரையேற்ற வேண்டுமே; அவருக்கு நினைக்க நினைக்க மூச்சேதிணற ஆரம்பித்தது. நெஞ்சு சுளுக்கிக் கொள்ளும் போலிருந்தது." நிர்விகற்ப சமாதி"யின் பூரீமான் உலகநாத பிள்ளை. இக்கதையைப் படித்ததும் மலத்தைத் தின்றதுபோல் இருந்தது எனக்கு. ஒரு வாயால்

கறுப்பு/143போர்ஹேஸ் என்றும் அதே வாயால் புதுமைப் பித்தன் என்றும் சொல் கிறீர்களே தமிழ் எழுத்தாளர்களே. உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நிசமும் நினைப்பும்" என்று ஒரு புல்ஷிட். இதிலும் வாடகை பாக்கி தரித்திரப் புலம்பல்தான். செருப்பால் அடிக்க வேண்டும் என்று தோன்றியது. இப்படிப்பட்ட கதை எழுதியவனை அல்ல. கேஸ் போட்டு விடுவார்கள். இதற்கென்றே ஒரு மாஃபியாகும்பல் இலக்கிய முகமூடியில் அலைந்து கொண்டிருக்கிறது - அதனால் இந்தக் கதைகளைப் படித்த என்னைத்தான் செருப்பால் அடித்துக் கொண்டேன்.

தயிர்வடை சென்ஸிபிலிட்டி" என்றால் என்ன என்று ஓர் உரை யாடலில் என்னை மடக்கினார் ஜாம்பவான் ஒருவர். நான் சொன்ன வார்த்தையையே என்னால் விளக்கத் தெரியவில்லை. இப்போது அதற்கு ஓர் அரிய சந்தர்ப்பம். கதையின் பெயர் "புரட்சி மனப்பான்மை", இனி வருவது கதை:

அன்று என் நண்பரின் பத்திரிகை ஆபீஸிற்குப் போயிருந்தேன். அங்கே ஒரு புரட்சிக்காரர் - அசல், அப்பட்டமானவர், கொஞ்சம் கூடக் கலப்புக் கிடையாது - நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் மாஜி - ஏதோ ஓர் - சதிக் கைதி."

"சரி, இதுதான் பூரீமான் புரட்சியா என்று நிர்ணயித்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தேன்."

'பாட்லிவாலா, பண்டார சன்னிதி, கங்காரு, 1939 மாடல் மோட்டார் கார், இரட்டைப் பெண்கள், ஸினிமா ஸ்டார் காந்தாமணி பாய், உயர்திரு தேசபக்தர், இத்யாதி இத்யாதி ரகத்தைப் பார்க்க மனுஷருக்கு சுபாவமாக உள்ள ஆசையை என் விஷயத்தில் திருப்தி செய்து வைத்த அந்த பூரீமான் இன்குவிலாப் ஜிந்தாபத்துக்கு என் மனமார்ந்த வந்தனம்.

"என் நண்பரும் சிறை சென்ற தேசபக்தர். கார்ல் மார்க்ஸ் பாராயணமும் கொஞ்சம் உண்டு. சுருங்கச் சொல்லுகிறேனே - வெகு தீவிரம்"

'குசலப் பிரசன்னங்களுடன் பரஸ்பர போலீஸ் காவல், சிறையில் கசையடி, இடைமறிக்கப்பட்ட கடிதங்கள், சமீபத்தில் வெளியான விக்டர் கொலான்ஸின் தீவிரவாத கிரந்தம்-சுங்க அதிகாரிகள் கண்ணில் பிஸ்கோத்து டின் மாதிரி இந்தியாவிற்குள் நுழைந்தது. போன்றவைகளை இரண்டு நண்பர்களும் பேசிக் கொள்கிறார்கள். -

ஆனால் பழம் பஞ்சாங்கம்” என்று தன்னையே வர்ணித்துக் கொள்ளும் கதைசொல்லியான எழுத்தாளரின் கவனமோ, தான் கடன் வாங்க வந்த ரெண்டு ரூபாயிலேயே இருக்கிறது.

புரட்சியும் போலீஸ்காவலும், கசையடியும் எழுத்தாளருக்கு வெறும் கிண்டலுக்குரிய சமாச்சாரங்களாகத் தெரிவதைக் கவனியுங்கள். ரெண்டு ரூபாய் கடன்வாங்க வந்த மிடில் கிளாஸ் எழுத்தாளநாய்க்குப் புரட்சிக்காக சிறைக்குச் சென்றவனைப் பார்த்து பூரீமான் புரட்சி என்று நக்கல்!

144/கறுப்பு

நன்றி - நூலகத்திட்டம்

புரட்சிக்காரர்களைப் பார்த்து பயந்து போன எழுத்தாளன் - கால்களின் இடையே வாலை இடுக்கிக் கொண்டு பதுங்கி ஒடும் நாயைப் போல் - கடற்கரைக்குப் போகிறான். அங்கே எழுத்தாளனின் ரசிகன் ஒருவனைச் சந்திக்கிறான். இருவரும் பேசிக் கொள்வதை தமிழ் இலக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்:

அதிலே ஓர் ஆழ்ந்த உண்மை இருக்கு, பார்த்தேன் சார். நேற்று இப்படி மூர் மார்க்கெட் பக்கம் போனேன். இதை அடுக்கியிருந்தான். அட்டைப் படம் எல்லாம் கிழிஞ்சு போச்சு. காலணாவுக்கு ரெண்டுன்னான். ஏன் சார் நமக்கு விஷயந்தானே வேணும். அப்படியே ஒரு ரெண்டனாவுக்கு ஒரு கத்தை வாங்கினேன். நம்ம வீட்டுக்காரி இருக்காளே, அவளுக்குக் காகிதக் கூடையைப் பண்ணணுமாம், அப்படியே குடுத்துடுன்னு வாதாடினாள். அதிலே ரொம்ப விஷயங்கள் இருக்கு, படிச்சுட்டுத்தான் தருவேன்னுட்டேன். எப்பப் பார்த்தாலும் இந்தத் தொந்தரவுதான் சார். நல்ல கோட் சார், மூணா வருஷந்தான் வாங்கினது. கை ஓரத்திலேதான் கொஞ்சம் கிழிசல், அதைக் கொடுத்து ஒரு கண்ணாடி ஜாடி வாங்கிப் போட்டாள் சார்."

டிசன்ட்ரி இன்னும் தொடர்கிறது.

'. அதிலே போட்டிருக்கான், எண்ணெய் தேய்ச்சுண்டா கெடுதல்னு. கெடுதல் எப்படின்னா ஜன்னி வந்துவிடுமாம். .சுக ஜன்னி வந்திடுமாம். இன்னிக்கு ஒரு காரியம் செய்றதுன்னு தீர்மானம்.பண்ணிப்புட்டேன். இனிமே எண்ணெயே தேய்ச்சுக்கிறதில்லேன்னு. வீட்ல ஏக ரகளை. இன்னிக்கு என்ன கிழமை தெரியுமா. புதன் ஒரே பாட்டா முடியா தின்னுப்பிட்டேன். தலைலே கூட எண்ணெயைக் கொண்டு வந்து வச்சிப்பிட்டா. நான் தீரமா உதறித் தள்ளிட்டு ஆபீஸலிக்கு வந்துட்டேன். இன்னும் வீட்டுக்குப் போகல்லே. இப்படியே பீச்சுக்கு வந்திட்டு பூ வாங்கிக் கிண்டு போகலாமுன்னு வந்தேன் (பூரீராம் சிட்ஸ் உபயம் - பக்கம் 451, 452).

1938ஆம் ஆண்டு எழுதப்பட்ட சிறுகதை இது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளங்கள். ஹரிஜன இயக்கம், தலித் எழுச்சி, சுயமரியாதை இயக்கம், இரண்டாம் உலகப் போர் மூள்வதற்கான சூழல், போராட்டம், தடியடி, சிறை என்று இருந்த ஒரு நிலைமையைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் - சமுத்திரக் கரையில் உட்கார்ந்து கொண்டு எண்ணெய் தேய்த்துக் கொண்டால் கெடுதலா, எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஜோலி பண்ணினால் சுகஜன்னி வருமா - வராதா என்று ஆராய்ச்சி செய்கிறார்கள் எழுத்தாளரும் அவர் ரசிகரும்.

(இப்படி ஒரு மலக்கிடங்கில் விழுந்து புரள வேண்டிய அவசியத்தை உண்டாக்கி விட்ட வானவில் இலக்கிய வட்டத்தினருக்கு எனது கண்டனங்கள்.) -

கறுப்பு/145'விபரீத ஆசை" என்று மற்றொரு குமாஸ்தா பிலாக்கணம்: வாழ்வென்ற குளத்தில் நிரந்தரக் கடன் என்ற பாசியை ஏதோ இரண்டொரு நாளாவது விலக்கும் முப்பது ரூபாய் இனி யார் வந்து போடுவார்கள். (பக்.460).

'பொய்க்குதிரை' புலம்பல்: ‘வாழ்க்கையே பிடிப்பற்றது; வாழவாவது மாயம்" என்றெல்லாம் நினைவு ஓடிக் கொண்டிருந்தது விசுவத்திற்கு ஏனென்றால் அன்று ஆபீஸில் அவனுக்கும் சமபளம ::4:ါးပါး வீட்டிலே சாமான் கிடையாது. வாடகைக்காரன் நெருக்குகிறான். மனை s கமலத்தின் துயரந்தேங்கிய முகம் அவன் மனக்கண் முன்பு நின்றது (பக்.479).

தலித்துகளை விடவும் ஒடுக்கப்பட்ட கந்தசாமிப் င္ငံမ္ယစ္သror!!!!!!!!!!! பரிதாப நிலையைப் பாருங்கள்: மேலகரம் ராமசாமிப் பிள்ளை 167 வாரிசுக்கு நாற்பத்தைந்து வயசு; நாற்பத்தைந்து வருஷங்களாக அனன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக்கட்டு: சில கறுபபு மயிர்களும் உள்ள நரைத்த தலை; இரண்டு வாரங்களாக கூடிவரம செய்யாத முகவெட்டு. (பக்.552). O என் எழுத்துகளை சிலர் வக்கிரம் என்று குற்றம் சாட்டுகிறபோது வக்கிரம் என்று எதுவுமே இல்லை என்று நினைத்து வந்திருக்கிறேன். ஆனால புதுமைப் பித்தனின் சில கதைகளைப் படிக்கும்போது வக்கிரம் என்றால் இதுதான் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. ۔۔۔۔۔۔۔۔ ۔۔ 'பாட்டியின் தீபாவளி’ என்ற கதையில் பாட்டியின் பிள்ளை, மாட்டுப் பெண், குழந்தை எல்லோரையும் ஒரேயடியாகக் கொண்டு போய் விடுகிறது காலரா, கிழவி மட்டும் தனியாக இருக்கிறாள்.

'கோபாலபுரம்" என்ற கதையில் ஓர் எழுத்தாளன் అ கரையில் இருக்கும் கோபாலபுரம் என்ற சிற்றூருக்குப் போகிறான். 9115) இ லசுஷ்மி என்ற பெண்ணைப் பார்க்கிறான். பண்ணை ஐயரின் மகள அழக ஆனால் மணமானவள். அவள் மீது எழுத்தாளனுக்குக கண. அவளை வர்ணித்து ஒரு கடிதம் எழுதுகிறான். நேரடியாக அவளுககு எழுதப பட்டதல்ல. அவன் நாவலின் ஒரு பகுதி அக்கடிதம் நாயகியின் பெயரும் லசுஷ்மி, கடிதம் ஐயர் கைகளுக்குக் கிடைத்து விடுகிறது. ஐயருக்கும் மாப்பிள்ளைக்கும் லக்ஷ்மி மீது சந்தேகம். லசுஷ்மியின் பிரேதம் திணற்றில் மிதக்கிறது.

போலீஸ் செய்தி போன்ற பத்திரிகைகளில் '? செய்தி : * கதையாக எழுதப்பட்டுள்ளது. இரண்டுக்கும் உளள ஒரே :* ਡ செய்தியில் தண்ணீரில் ஊறி வீங்கிய பிணத்தின் அகோரமான புகைப்படம் பிரசுரமாகியிருக்கும். கதையில் அந்த ஆபாசம

இல்லை.

146/கறுப்பு

"ஞானக்குகை' என்ற மற்றொரு ஆபாசமான கதையில் மற்றொரு பிணம் விழுகிறது. சிற்றுாரின் தலைமைக்காரத் தேவரின் மகன் - ஏக புத்திரன் - மன்மத ருபன்-ஆனால் பிறவி ஊமை, பிறந்தவுடனேயே தாயார் காலி. பிறகு சித்திக் கொடுமை. ஊமை என்பது மட்டும்ஸ்லாமல் மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளை. பிள்ளைக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கிறார் தேவர். கடைசியில் ஒரு விஷ ஊற்றில் தண்ணிர் குடித்துச் செத்துப் போகிறான் பையன். தலைமைக்காரத் தேவரின் குழந்தை கருகிக் கரிக்கட்டையாகச் சுனையில் மிதப்பதை மாட்டுக்காரப் பையன்கள் கண்டு ஊராருக்குத் தெரிவித்தார்கள்’ என்று முடிகிறது கதை,

பையனின் மனைவி தாலியறுப்பது கதையில் உள்ளீடு. கதைக்கு இடையே குழந்தை சுனைநீரைக் குடித்து ஒரு தவ உருவத்தையும் தேவியையும் கண்டதாக ஒரு 'புருடா வேறு.

'விநாயக சதுர்த்தி என்ற கதையில் வரும் பையனும் ஞானக்குகை' பையனைப் போல் அற்பாயுசில்தான் செத்துப் போகிறான். அவனுக்குச் சுனைநீர் என்றால் இவனுக்குப் புதைகுழிச் சேறு. பிள்ளையாரை இருபது வருஷமாகச் சுற்றி வந்து மருத வேளாருக்கு ஒரு பிள்ளை பிறக்கிறது. பெயர் சுப்பிரமணியன். பதினாறு வயது ஆனதும் அவனுக்குக் கிறுக்குப் பிடிக்கிறது. அற்புதமான விநாயகர் விக்ரகம் செய்வான். ஆனால் விற்க மாட்டான். களிமண்ணாக்கி விடுவான். ஒருநாள் அப்படிச் செய்த விக்ரகத்தை அவன் மனைவி விற்று விடுகிறாள்.

அது தெரிந்தவுடன் இந்தத் தேவடியாத் தொழில் உனக்கு எதுக்கு? என்று மனைவியைக் கேட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறி ககத்தில் குதித்து விடுகிறான். வலை போட்டுத் தேடியும் உடம்பு அகப்படவில்லை. "அப்புறம் என்ன தெரியுமா? அவன் (மருத வேளாளர்) குடும்பத்தில் பிறக்கிற பிள்ளைகளுக்கு எல்லாம் அவன் செத்த வயசில் இந்தப் பிர!ை ஏற்படும். கடைசியில் வெள்ளைக் களிமண்ணைத்தின்று உயிரை விடும்.

"சிற்றன்னை” என்ற கதையிலும் இதே வக்கிரம், சிற்றன்னை மற்று, தகப்பனார் கொடுமையில் கொடுரமாக இறந்து போகிறான் ராஜா என்ற சிறுவன். மற்றொரு குழந்தை சாவுவரை சென்று மீள்கிறது.

இலக்கியத்தில் எழுதக் கூடாதது என்று எதுவும் இல்லை. வக்கிரம், குரூரம், துன்பம், காமம் என்று எதை வேண்டுமானாலும் எழுதலாம். Literature of sex, PornograpImagination, Literature of trash 6T6irGpaijauntli எவ்வளவோ இருக்கின்றன. ஒரு டீவி சீரியல் குப்பையைக் கூட இலக்கியத்தில் கொண்டு வரலாம். ஆனால் அதற்கான அழகியலை அந்தப் பிரதி உருவாக்கியாக வேண்டும்.

மார்க்கி தெ சாத் - குரூரத்தின் அழகியலை உருவாக்கினான் ழார் LigGsai Pornographic Imagination 6Taituagigs g56875) story of the eye 6T6ip நாவலில் நிகழ்த்திக் காட்டினார். அமெரிக்க வெகுஜன ஊடகக்

கறுப்பு/147குப்பைகளைத் தனது பிரதிகளின் கச்சாப் GuiTCD6Tridis Literature of trash என்பதை உருவாக்கினார் டொனால்ட் பார்த்தெல்மே.

ஆனால் புதுமைப் பித்தனின் வக்கிரம், துன்பம், சோகம், குரூரம் எல்லாம் அழகியலாக உருவாகாமல் வெறும் ரிப்போர்ட்டாகவே நின்று விடுகின்றன. அவரது வக்கிரம் - போலீஸ் செய்தி வக்கிரம். அவரது துன்பம், சோகம் - தமிழ் சினிமா துன்பம், சோகம், அவரது குரூரம் " தமிழ் சினிமா வில்லனின் குரூரம் (பழைய அசோகன், புதிய பொன்னம்பலம்).

O

இனி புதுமைப் பித்தனின் எழுத்துகளில் தெரியும் ஜாதி வெறியையும், மதத்துவேஷத்தையும் காண்போம்.

நியாயம்" என்ற கதை இப்படித் துவங்குகிறது. "தேவ இறக்கம் நாடார் - அவருக்கு வல்லின இடையினங்களைப் பற்றி அபேதவாத கொள்கையோ தனது பெயரை அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்ற ஆசையோ எதுவானாலும் அவர் எப்பொழுதாவது ஒரு தடவை இந்த 'டமிலில் எழுதுவது போலவே எழுதி விடுவோம் - நல்ல கிறிஸ்தவர் மாஜிஸ்திரேட் பதவி வகிப்பவர்."

"சில சமயம் பால்ராஜ் ஐயர் அவர்கள், ஓர் இருபதாம் நூற்றாண்டு இந்திய யோவான் ஸ்னானகனைப் போல், 'ஏ விரியன் பாம்புக் குட்டிகளே! உங்கள் பாவங்களை மன்னிக்கும்படி, கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவின் வழியாக, அந்த மனுஷ குமாரன் வழியாக, பரமண்டலங்களில் இருக்கும் பிதாவை முழங்கால் படியிட்டு வேண்டிக் கொள்ளுங்கள். ஏ! விரியன் பாம்புக்குட்டிகளே!. என்று உற்சாகமாக பிரசங்கிக்கும் பொழுது, தமது அருமை மேரிக்குஞ்சு முதல் அங்கு வந்திருக்கும் வெள்ளைக்கார பிஷப் உள்பட எல்லாம் இரட்டைநாக்குகளை நீட்டிக் கொண்டு நெளிவது போல் தோன்றும்."

இந்த மாஜிஸ்திரேட் தேவ இறக்கம் நாடாரிடம் ஒரு குற்றவாளி கொண்டு வரப்படுகிறான்.

"யார் ஒம் பேரென்ன"

சொள்ளமுத்துப் புள்ளெ

சொள்ளமுத்து இண்ணு சொல்லுமேவே. புள்ளை என்ன புள்ளை

கூண்டுல ஏறுனாப்ப? நீரு புண்ணாப் போன குருதையெ வண்டிலே

மாட்டலாமா? என்னா மரங்கணக்கா நீக்கிராவே; ஒமக்கு புத்தியில்லே?

வாயில்லாச் சீவனை ஊமையாவே என்ன நிக்கிரா?

காயம்பட்ட குதிரையைக் கட்டி ஒட்டியதற்காகத் தொழிலாளியான

பிள்ளைக்கு ஐந்து ரூபாய் அபராதம் விதிக்கிறார் மாஜிஸ்திரேட் சுடலை

முத்துப்பிள்ளை ஆவேசம் கொண்டவன் போல் ஓடி வந்து காலைப் பிடித்துக் கொண்டு, தரும தொரைகளே! இந்த ஒரு தடவை

மன்னிக்கணும். புள்ளே குட்டி வவுத்துலே அடியாதிங்க."

148/கறுப்பு

நன்றி - நூலகத்திட்டம்

'பின்னாலே போ சாத்தானே' என்று தேவ இறக்கம் நாடார் கர்ஜித்தார். கோர்ட் ஆர்டலி, சுடலை முத்துப் பிள்ளையை இழுத்துக் கொண்டு வெளியே போனான்.

இரவு, தேவ இறக்கம் நாடார் படுத்துக் கொள்ளுமுன் முழங்கால் படியிட்டு ஜபம் செய்கிறார். 'பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே! உமது நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக. எங்கள் பாவங்களை மன்னியும். நாங்களும் எங்களிடம் கடன்பட்டவர்களுக்கும் மன்னிக்கிறோமே. ஆமென் கண்ணை விழித்து எழுந்தார். அந்த அஞ்ஞானி வண்டிக்காரனைப் பற்றி ஞாபகமேயில்லை!

இந்தக் கதைக்கு எந்தக் கட்டுடைப்பு மசிர் மட்டையும் தேவையில்லை என்று நினைக்கிறேன். மதத்துவேஷமும், வன்மமும், ஜாதி வெறியும் மிகவும் வெளிப்படை. இதை அ.மார்க்ஸ் தவிர வேறு யாரும் இதுவரை சுட்டிக் காட்டவில்லை என்றால் என்ன பொருள்? சுட்டிக் காட்டினாலும் ஜாதி என்ற குண்டாந்தடியைத் தூக்குகிறார்கள் என்று ஒலமிடுகிறார் வெங்கட்சாமிநாதன். 1934இலேயே ஜாதி என்ற குண்டாந்தடியைத் தூக்கி நாடார்களின் மண்டையில் போட்டு உடைத்திருக்கிறார் புதுமைப் பித்தன். 1934இல் நிலைமை எப்படி இருந்தது? வரலாறு என்ன?

இங்கே ஓர் இடைச் செருகல், புதுமைப் பித்தனைப் பற்றி அ.மார்க்ஸ் மதிப்பிடுவதற்கும் என் விமர்சனத்திற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. புதுமைப்பித்தனின் எழுத்துகள் என்னை எப்போதுமே ஈர்த்து வந்துள்ளன' என்கிறார் அ.மார்க்ஸ். எனக்கோ புதுமைப் பித்தனின் எழுத்துகள் மீது காறித் துப்ப வேண்டும் போல் இருக்கிறது.

'சேத்தும் புதுமைப் பித்தனும் என்ற கட்டுரையில் டிக்கன்ஸ், கோன்ராட், கம்யூ முதலிய ஐரோப்பிய எழுத்தாளர்களிடம் அவர்கள் அறிந்தும் அறியாமலும் வெளிப்பட்டுள்ள ஏகாதிபத்தியப் பார்வையை சேத் எவ்வாறு விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தியுள்ளார் (Culture and Imperialism என்ற நூலில் எட்வர்ட் சேத்) என்பதை விவரிக்கும் அ.மார்க்ஸ் அதேபோல் புதுமைப் பித்தனிடம் உள்ள ஒழுக்கவாதக் கூறுகள், மேற்சாதி மனப்பான்மை, ஆளும் கருத்தியலுக்கு ஏற்ப பிரதிகளை உருவாக்கியது போன்றவைகளை தான் விமர்சிப்பதாகக் கூறுகிறார்.

ஆனால் ஒரு வகையில் இவ்வகை விமர்சனம் புதுமைப் பித்தனை Canonise செய்பவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. ‘புதுமைப்பித்தன் ஒரு மேதை. அவரை அரசியல் ரீதியான வாசிப்புக்கு உட்படுத்துவதால் அவரது மேன்மை ஒன்றும் குறைந்து விடாது. ஆனானப்பட்ட ஷேக்ஸ்பியரின் எழுத்துகளிலேயே இனவாதக் கருத்துகள் இடம் பெற்றிருக்கவில்லையா என்ன? என்கிற வாதத்தை வைத்து புதுமைப் பித்தனை இன்னும் உசரத்திற்கு தூக்கிக் கொண்டு போய் வருகிறார்கள் அவர்கள்!

கறுப்பு/149"எட்வர்ட் செய்த் கட்டுடைத்த கோன்ராட், கம்யூ போன்றவர்களை ஒத்தவர் அல்ல புதுமைப் பித்தன். அவர் ஒரு mediocre எழுத்தாளர்களுக்கு இலக்கிய உலகில் இடமில்லை" என்பதே என்னுடைய விமர்சனம்.

"புதிய நந்தன்' என்று ஒரு கதை. ஜெமினி கதை இலாகாவுக்குப் போயிருக்க வேண்டிய கதை. ராமனாதன் மெர்ஜியா தோழர் நரசிங்கம் எஸ்.எஸ்.ஆர் கருப்பன் எஸ்.வி.அய்லையா. கருப்பன் மகள் விஜயகுமாரி. பரமண்டலங்களிலிருக்கும் பிதாவாகிய கர்த்தரின் நீதிகளை ஆதனூரில் பரப்பும்படி ரெவரெண்ட் ஜான் ஐயர் ஒரு தடவை ஆதனூர் சேரிக்கு வந்தார். பாவாடையின் புத்தி விசேஷத்தைக் கண்டு, அவனைத் தம் மதத்தில் சேர்க்க அனுமதித்து விட்டால் பெரிய பண்ணை மாதிரி ஆக்கி விடுவதாக ஆசை காட்டினார். ஜான் ஐயர் வேளாளக் கிறிஸ்தவர் பையன் புத்தி விசேஷம் 10 கிளாஸ் படிக்கும் வரை பிரகாசித்தது. இன்னும் பிரகாசித்திருக்கும். ஆனால் பரமண்டலங்களிலிருக்கும் கர்த்தரின் விதி வேறு விதமாக இருந்தது.

பாவாடைக்கும் ஜான் ஐயரின் மகள் மேரி லில்லிக்கும் காதல் அரும்புகிறது. அதை அவன் ஜான் ஐயரிடம் கூற, அவருக்கு பெரிய கோபம் வந்து விடுகிறது. -

'பறக்கழுதை வீட்டை விட்டு வெளியே இறங்கு’ என்று கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளுகிறார் ஜான் ஐயர். சாமியாராகப் போய் விடலாம் என்று கத்தோலிக்க மதத்தைத் தழுவி மடத்தில் சேருகிறான் தானியேல் என்கிற பாவாடை. ஆனால் சுற்றி நடக்கும் அபத்தங்களும், சில சுவாமி யார்களின் இயற்கைக்கு விரோதமான இச்சைகளும் மனதிற்குச் சற்றும் சாந்தி தராத இருப்புச் சட்டம் போன்ற கொள்கைகளும் அவன் மனத்தில் உலகக் கட்டுப்பாடே ஒரு பெரிய புரட்டு என்ற நம்பிக்கைகளைக் கிளப்பி விட்டு விடுகின்றன.

பிறகு சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபடுகிறான். இதற்கிடையில் பண்ணையார் மகன் ராமனாதன் பறைச்சியான (புதுமைப் பித்தனின் பிரயோகம்) கருப்பன் மகளைக் காதலிக்கிறான். பறையர் சமூகம் இதை ஒத்துக் கொள்ளவில்லை. புதுமைப் பித்தனுக்குக் கிடைக்கும் தீர்வு என்ன தெரியுமா? எல்லோரையும் கொன்று விடுவது. கருப்பன், ராமனாதன் மற்றும் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்த நரசிங்கம் மூவரையும் ரயில் தண்டவாளத்தில் போட்டுக் கொன்று விடுகிறார் புதுமைப் பித்தன். என்ன அருமையான தீர்வு

இந்தக் கதையிலும் சரி மற்ற பல கதைகளிலும் சரி, கிறிஸ்தவப் பாதிரியார்கள் என்றாலே அவர்கள் ஹோமோ-செக்ஷஇவல்கள்தான் என்ற முடிவில்தான் புதுமைப் பித்தன் எழுதுகிறார். ஹோமோ செக்ஷலிவாலிட்டியையே ஏதோ இயற்கைக்கு விரோதமான காரியமாகப் பார்க்கும் புதுமைப் பித்தன் அதை கிறிஸ்தவப் பாதிரியார்கள்தான்

150/கறுப்பு

நன்றி - நூலகத்திட்டம்

இந்தியாவுக்கே இறக்குமதி செய்தது போல் எழுதியிருக்கிறார். அதற்கு முன்னால் இந்துச் சாமியார்களிடமும் இந்திய மக்களிடமும் ஹோமோ செக்ஷஜூவாலிட்டி இருந்ததில்லை என்பது அவரது முடிவு போலும்!

இதே போல் வேசி என்றால் அவள் ஏன் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதும் எனக்குப் புரியவில்லை. ஒப்பந்தம்’ என்ற கதையில் இவனுக்குப் பக்கத்தில் ஓர் ஆங்கிலோ இந்திய மாது - இளநங்கை - உட்கார்ந்திருந்தாள். அந்த நங்கை ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் அவன் மனைவியாக இருக்கச் சம்மதித்தாள்’ என்று எழுதுகிறார்.

மெளனியின் கதைகளிலும் விபச்சாரிகள் ஆங்கிலோ இந்தியப் பெண் களாகவே இருப்பது ஞாபகம் வருகிறது. வெகுஜன அபிப்பிராயத்தை அப்படியே நூற்றுக்கு நூறு பிரதிபலிக்கும் எழுத்தாளர்கள் வேறு எப்படி எழுத முடியும்?

கொடுக்காப்புளி மரம்' என்ற கதையில் ஆரோக்கியமாதா தெரு என்று ஒரு தெரு. அத்தெருவைச் சேர்ந்தவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். உண்மையில் அது தலித் கிறிஸ்தவர்கள் வாழும் ஒரு தெரு. புதுமைப் பித்தனின் வர்ணனையைப் பாருங்கள். 'பரிசுத்த ஆவி அவர்களுடைய ஆத்மாவைத் திருத்தியிருக்கலாம்; அதைப் பற்றி எனக்குத் தெரியாது. அந்த ஆத்மா சில வருஷங்கள் தங்கி இருப்பிடத்தைச் சுத்தப் படுத்தவில்லை என்று எனக்குத் தெரியும்"

தலித்துகள் என்றாலே அவர்கள் குடிகாரர்கள், அழுக்காக இருப்பவர்கள், சோம்பேறிகள் என்ற வர்ணனை அவர்களைப் பற்றிய எல்லா இடங்களிலும் வருகிறது. ஆனால் பிள்ளைமார்கள் மட்டும் 'கூழானாலும் குளித்துக் குடிப்பவர்கள்; கந்தையானாலும் கசக்கிக் கட்டுபவர்கள்!"

மாதா தெருவின் ஒரு மூலையில் ஜான் டென்வர் சுவாமிதாஸ் ஐயர் அவர்கள் வீடு. அவர் ஒரு புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர் பெரிய பணக்காரர். பிறகு கிறிஸ்தவர்களைப் பற்றிய வழக்கமான கிண்டல் தொடர்கிறது.

சுவாமிதாஸின் பங்களா வாசலில் ஒரு கொடுக்காப்புளி மரம். அதில் உதிர்ந்து விழும் பழங்களை சவரியாயிக்குக் குத்தகை விடுகிறார் அவர். காரணம்? 'ஒதுக்கப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் இதை மலிவாகக் கிடைக்கும்படிச் செய்வதினால் கிறிஸ்துவின் பிரியத்தைச் சம்பாதிப்பதற்கு வழி என்பது அவர் நியாயம். அவர்கள்தான் மோக்ஷ சாம்ராஜ்யத்திற்குப் பாத்திரமானவர்கள். அவர்கள் இதற்காகத் திருட ஆரம்பித்துப் பாப மூட்டையைக் கட்டிக் கொள்ளாதபடி இவர் இந்தக் கைங்கர்யம் செய்து வருகிறார்."

கறுப்பு/151அந்தத் தெருவில் பெர்னான்டஸ் என்ற பிச்சைக்காரன். அவன் மனைவி இறந்து விட்டாள். பெண் குழந்தையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவனுக்கு.

ஒருநாள் சுவாமிதாஸ் வீட்டுக்குப் பிச்சையெடுக்க வருகிறான் பெர்னான்டஸ், சுவாமிதாஸ் சில்லறை எடுக்க வீட்டின் உள்ளே செல்கிறார். கூட வந்த குழந்தை தரையில் கிடக்கும் கொடுக்காப்புளிப் பழங்களைப் பொறுக்கி கிழிந்த பாவாடையில் நிரப்புகிறது. அதைப பார்த்துவிட்ட சுவாமிதாஸ் "போடு கீழே! போடு கீழே!' என்று கத்திக் கொண்டு வெளியே வந்தார். குழந்தை சிரித்துக் கொண்டு ஒரு பழத்தை வாயில் வைத்தது. அவ்வளவுதான். சுவாமிதாஸ் கையிலிருந்த தடிக்கம்பை எறிந்தார். பழத்துடன் குழந்தையின் ஆவியையும் பறித்துக் கொண்டு சற்றுத் தூரத்தில் போய் விழுந்தது. திக் பிரமை கொண்டவன் போல் நின்ற பெர்னான்டஸ் திடீரென்று வெறி பிடித்தவன் போல் ஓடினான். கீழே கிடந்த தடியை எடுத்தான்.

போநரகத்திற்கு, சைத்தானே' என்று கிழவர் சுவாமிதாஸ் மண்டையில் அடித்தான். கிழவரும் குழந்தையைத் தொடர்ந்தார். பெர்னான்டஸ் கொலைகாரன் என்று கைதாகிறான். பிறகு அவனும் செத்துப் போகிறான். 'கடவுளின் பிரதிநிதி என்ற கதையில் பிராமணர்களைப் பற்றியும் தலித்துகளைப் பற்றியும் புதுமைப் பித்தனின் வர்ணனையைப் பாருங்கள: இந்த அக்ரகாரப் பிச்சைக்காரர்களுக்கு அடிமைப் பிச்சைக்காரர்கள் (அதாவது தலித்துகள்) இரு ஜாதியாருடைய நிலைமையும் ஒன்றுதான். ஒருவர சேஷப்படாது பட்டினியிருந்தால் இன்னொருவன் அசுத்தத்துடன் பட்டினி யிருக்கிறான். சேரிப்பட்டினிகளுக்கு அக்ரகாரப் பட்டினிகளின் மீது பரமபக்தி, (பார்ப்பானும் பறையனும் ஒன்று என்று எழுதுகிற ஒருவன் ஜாதி வெறியன் இல்லையா? புதுமைப் பித்தனுக்கும் முன்னால் வாழருத பாரதி தலித்துகளின் நிலையைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்திருக்கிறானே? அவன் கலைஞனா? புதுமைப் பித்தன் கலைஞனா?)

கதை இவ்வாறு தொடர்கிறது. இம்மாதிரி சாந்தி குடிகொண்ட வாழ்க்கையிலே சூறைக்காற்று போல் புகுந்தது ஹரிஜன இயக்கம்.'

அது ஊரையே ஒரு குலுக்கு குலுக்கியது." திரு சங்கர் சிற்றுாரில் தமது தொண்டைப் பிரச்சாரம் செய்ய வந்தார். அவரும் ஜாதியில் பிராமணர். தியாகம், சிறை என்ற அக்னிகளால் புனித மாக்கப்பட்டவர். சலியாது உழைப்பவர். உண்மையை ஒளிவு மறை வில்லாது போட்டு அடித்து உடைப்பவர்.'

ஹரிஜனங்களைக் கோவில்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சொன்ன சங்கரை சேரிப் பறையர்களே உதைத்துப் போட்டு விடுகிறார்கள் சுப்பு சாஸ்திரிகள் என்பவர் சங்கரைத் தேடி, மேற்குப்புறம் வாய்க்கால்

152/கறுப்பு

நன்ற - நூலகததடடம

பக்கமாக மயங்கிக் கிடப்பதைக் கண்டு பதைபதைத்து வாய்க்காலில் இருந்து ஜலம் எடுத்து வந்து தெளித்து மூர்ச்சை தெளிவித்து போஜனம் கொடுக்கிறார்.

கதையில் வரும் சங்கர் ஒரு பிராமணன் என்பதற்கு புதுமைப் பித்தன் என்ன செய்ய முடியும்? அந்தக் காலநிலைமை அப்படி! இதுவும் 1934இல் எழுதப்பட்ட் கதை. முப்பதுகளில் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளை வாசகர்கள் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் புதுமைப் பித்தன் கதைகளில் உள்ள பொதுத் தன்மைகளையும் நான் விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.

சாந்தி குடிகொண்டிருந்த கிராமத்தில் சூறைக் காற்றாய்ப் புகும் ஹரிஜன இயக்கம் அந்தப் பொதுத் தன்மைகளில் ஒன்று. தீண்டாமை என்கிற கொடூரமான வழக்கம் இன்றைக்கும் நடைமுறையில் இருக்கும்ப்ோது இவ்வளவு கேவலமாக உலகத்தில் ஓர் எழுத்தாளன் எழுதுவானா? இதே விஷயத்தைத்தான் "எப்போதும் முடிவிலே இன்பம்’ என்ற கதையிலும், முயல், நரி, நாய் என்று குறியீடாக வைத்து எழுதுகிறார்.

சாந்தி குடிகொண்டிருந்த ஒரு பங்களாவில் வேதம் படித்த முயல் ஒன்று வாழ்கிறது. அதற்குக் கறுப்புப் பறை நாய் ஒன்று அடிமை வேலை செய்து பிழைத்து வருகிறது. முயல் மிகவும் ஆசாரம். நாலு வேதம் ஆறு சாஸ்திரம் மற்றும் தர்க்கம் வியாகரணம் எல்லாம் படித்த முயல். இந்த முயலைப் பிடிக்க ஒரு கறுப்பு நாய் வளர்க்கப்படுகிறது. தினசரி அதற்கு மாமிசமும் எலும்புத் துண்டுகளும் கலெக்டர் போடும் மிச்சத்தீனியும் கிடைக்கிறது. பறை நாய்க்கு இது ஒரு செளகர்யமான உத்தியோகம்,

இப்படி அமைதியாக இருந்த அந்த பங்களாவில் ஒரு நரி வந்து சேர்ந்ததும் எல்லாம் கெட்டுப் போகிறது. அந்த நரி யார் தெரியுமா? ஆலய நுழைவுப் போராட்டம், ஹரிஜன இயக்கம் என்றெல்லாம் நடத்து கிறவர்கள், கிறிஸ்தவர்கள், புதுமை விரும்பிகள் நரியைக் கலெக்டர் சுட்டுக் கொன்று விடுகிறார். கறுப்புப் பறை நாய் துரத்தப்பட்டு விடுகிறது.

இதற்கு முன் பஞ்சவாடி மாதிரி இருந்த இடம்; குட்டிச் சுவராகப் போச்சு என்று சொல்லும் முயலினியும் முயலும் சர்க்கார் தோட்டத்தை நோக்கிச் செல்கின்றன."

எப்போதும் முடிவிலே இன்பம்! இப்படி ஒரு கதை எழுதியவனை - பறை நாய் பறை நாய் என்று எழுதுகிறவனை - மாறு கால் மாறு கை வாங்கினால் என்ன தப்பு?

'கோபாலய்யங்காரின் மனைவி என்று ஒரு சிறுகதை. பாரதி தனது சந்திரிகை என்ற நாவலில் கோபாலப்யங்காருக்கும் வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். இப்படிப்பட்ட திருமணம் நமது சைவப் பிள்ளைவாள் எழுத்தாளருக்கு ஆகவில்லை. சைவமும்

கறுப்பு/153அசைவமும் எப்படி ஒன்றுசேர முடியும், ஒன்று சேர்ந்தாலும் எப்படி ஒத்துப் போகும் என்று எழுத்தாளப் பிள்ளைவாளுக்கு ஒரே சம்சயம். கோபாலப்யங்கார் எப்படி புளித்த குழம்பையும் குழைந்த சோற்றையும் உண்ணச் சம்மதிப்பான்? பாரதியின் கதை புதுமைப் பித்தனிடம் இப்போது என்ன பாடுபடுகிறது பாருங்கள்.

டெப்டி கலெக்டர் கோபாலப்யங்கார் இடைச்சி மீனாட்சியைக் கல்யாணம் செய்து கொள்கிறார். கோபாலப்யங்கார் குடிகாரர்தான். ஆனால் மாமிசப் பட்சிணி அல்ல.

புதுமைப் பித்தனின் அத்தனை எழுத்துகளிலும் 'மாமிசம் உண்பவன் மனிதனே அல்ல; அவன் ஒரு மிருகம்" என்கிற சைவ வெள்ளாள ஜாதீயப் பார்வை விரவிக்கிடக்கிறது. உணவு விஷயத்தில் கூட ஜனநாயகப் பார்வை இல்லாத நாய்கள் இங்கே எழுத்தாளன்களாக இருக்கிறான்கள்.

மீனாட்சி இடைச்சி அல்லவா? அவளுக்குக் காதலிக்கக் கூடத் தெரியவில்லை.

அவளை ஆரத் தழுவித் தமது மடிமீதிருத்தி முத்தங்களைச் சொரிந்தார். மீனாள் செயலற்ற பாவை போல் இடங்கொடுத்தாள்.'

பிறகு வழக்கம்போல் - அசைவப் பிரச்சினை குறுக்கிடுகிறது. லவங்கப் பட்டை, பெருஞ்சீரகம் இத்யாதியெல்லாம் போட்டுச் செய்த சமையல் ஐயங்காருக்குக் குமட்டலை ஏற்படுத்துகிறது. 'குடலைப் பிடுங்கியது போல் ஓங்கரித்து வாந்தியெடுக்கிறார். சாப்பாட்டுக்கு என்று பரிசாரகர் சுப்பு அய்யங்கார் அமர்த்தப்படுகிறார். மீனாவுக்குக் காதலிக்கவே தெரிய வில்லை. முத்தம் கொடுக்கக் கூடத் தெரியவில்லை. 'எங்க ஜாதியிலே அது ஒண்ணும் கெடையாது இப்போ' என்கிறாள்.

'கோபாலப்யங்கார் ஒரு பொம்மைக்குக் காதலுயிர் எழுப்பப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார். இதில் தோல்வி இயற்கை யாகையால் மது என்ற மோகனாங்கியின் காதல் அதிகமாக வளர ஆரம்பித்தது."

மீனாவுக்கு ஐயர் சமையல் வெறுப்பாக இருக்கிறது. ஆபீஸ் பியூன் கோபாலக் கோண்ாரிடம் மாமிச உணவு வாங்கிச் சாப்பிட்டு, அதையே ஐயங்காருக்கும் - அவர் போதையில் இருக்கும்போது - கொடுக்கிறாள். இவ்வாறாக, கோபாலப்யங்காரும் மாமிசப் பட்சிணியாகிறார்.

இரண்டு வருஷ காலம் சிட்டாகப் பறக்கிறது. மீனாளின் துணைக் கருவியாக கோபாலப்யங்காரின் மேல்நாட்டுச் சரக்குகள் உபயோகிக்கப் பட்டன.

தம்பதிகள் இருவரும் அதில் ஈடுபட்டதினால் மூப்பு என்பது வயதைக் கவனியாமலே வந்தது. மீனாளின் அழகு மறைந்து அவள் ஸ்தூல சரீரியானாள். கோபாலப்யங்கார் தலை நரைத்து வழுக்கை விழுந்து

154/கறுப்பு

நன்றி - நூலகத்திட்டம்

கிழப்பருவம் எய்தினார். இதை மறப்பதற்குக் குடி, ஆபீஸிற்குப் போகும் முன் தைரியம் கொடுக்கக் குடி வந்ததும் மீனாளின் செளந்தர்யத்தை மறக்கக் குடி,

இப்பொழுது அவர்கள் தென்னாற்காடு ஜில்லாவில் இருக்கிறார்கள். இருவருக்கும் பங்களா ஊருக்கு வெளியிலே. இரவு பத்து மணிக்கு அப்பக்கம் யாராவது போனால் கலெக்டர் தம்பதிகளின் சல்லாப வார்த்தைகளைக் கேட்கலாம்.

'ஏ பாப்பான்' என்று மீனாள் கொஞ்சுவாள். "என்னடி எடச்சிறுக்கி" என்று கோபாலப்யங்கார் காதலுரை பகருவார். இருவரும் சேர்ந்து தெம்மாங்கு பாடுவார்கள். மீனாளின் "டிரியோ, டிரியோ’ பாட்டில் கோபாலய்யங்காருக்கு அந்த ஸ்தாயிகளில் - பிரிய மதிகம்."

பாரதியைப் புதுமைப்பித்தன்குப்பியடித்துவிட்டான் என்பதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

அடுத்து 'புதிய கூண்டு" என்ற கதைக்கு வருவோம். மீண்டும் ஒரு மோசமான, படு மட்டரகமான, தமிழ் சினிமாத்தனமான கதை என்று சொன்னால் மட்டும் போதாது. இந்துத்துவத்தை ஃபாசிஸ வெறியோடு நிலைநாட்டுகிற ஒரு கதை.

அகன்ற மார்பில் யக்ஞோப வீதம் போல் ஆற்றில் நீர் பெயருக்கு மடடிலும் ஓடிக் கொண்டிருந்தது" என்று ஓர் உதாரணத்தோடு கதை துவங்குகிறது.

ஆதிக்கச் சாதிப் பயல்களுக்குத்தான் இப்படிப்பட்ட உதாரணங்கள் வரும். சரி, கதைக்கு வருவோம்.

கிட்டு, அம்பி என்று இரண்டு சகோதரர்கள். கிட்டு உணர்ச்சி வசப்படு கிறவன் இளையவன் திடசித்தம். எதையும் அறிவுத் தராசில் போட்டு நிறுக்கும் உறுதி படைத்தவன். அம்மா மீனாட்சியம்மாள் விதவை. இட்லி, முறுக்கு சுட்டு விற்று பிள்ளைகளைப் படிக்க வைக்கிறாள். (எல்லாக் கதையிலும் இந்தத் தரித்திரம்தான். வேறு ஒன்றும் புதிது இல்லை). கிட்டு ஓர் உதவாக்கரைப் பயல் என்பதற்குக் கதையில் சிற்சில சம்பவங்கள். அம்பியோ அத்வானி மாதிரி. திடசித்தம்.

பாளையங்கோட்டைக் கல்லூரி ரோமன் கத்தோலிக்கருடையது. அங்கே ஞானாதிக்கம் என்ற சாமியாருக்குச் சகோதரர்கள் மீது ஒரு கண். (புதுமைப் பித்தனுக்கு நன்றி. ஹோமோசெக்ஸ் பிரச்சினையாக எழுதவில்லை. "கண்" என்றது மதம் மாற்றுவதற்காக.)

பூரீஜான் சகரியாஸ் நாடாரின் முன்னோர் எப்படி புரோட்டஸ்டன்ட் மதத்தைத் தழுவினார்கள் என்பதற்கு ஒரு கிண்டல், இந்து மதம் மனிதர் களையெல்லாம் சமமாக நடத்தியது. கிறிஸ்தவம்தான் இந்தியாவைக்

கறுப்பு/155கெடுத்தது" என்கிற ரீதியில் வாயிலும் வயிற்றிலுமாக அடித்துக் கொண்டு சில வர்ணனைகள்.

சகரியாஸ் நாடார்.ஒரு தலைமையாசிரியர். தமக்குக் கர்த்தருடைய கருணை கிடைத்த போதெல்லாம் அஞ்ஞானிகளுக்கு விழிப்பைக் கொடுப்பதில் முனைந்து வந்தார்."

அவருக்கு ஒரு புதல்வி. லில்லி அற்புதம் ஜயலக்ஷ்மி, ஜயாவுக்கும் கிட்டுவுக்கும் காதல் பிறக்கிறது. எல்லாம் கேவலமான தமிழ் சினிமாப் பாணிதான். சந்தேகிப்பவர்கள் பக்கம் 344, 345ம் பக்கம் பார்க்க. கிட்டு மதம் மாறுகிறான். திருமணம் நடக்கிறது. ஞானப்பிரகாசம் சாமியாருக்குப் பெரும் தோல்வி. தம் மதத்திற்கு மாறாமல் பாவி புரோட்டஸ்டன்ட் மதத்தைத் தழுவி விட்டானே என்று. இதைவிட அவன் இந்து மதத்திலேயே அஞ்ஞானியாகக் கிடந்து செத்திருக்கலாம்.

மீண்டும் சைவ-அசைவப் பிரச்சினை. கோபாலப்யங்கார் - மீனாள் அளவுக்குப் போகவில்லை. ஜயா மாமிச உணவு தொடுவதில்லை என்று வீரசபதம் எடுக்கிறாள்.

அம்பியும் மீனாகூதியம்மாளும் நடுத்தெருவில். ஊராரும் அவர்களை ஜாதிப் பிரஷ்டம் செய்து விடுகிறார்கள். மீனாகூழியம்மாள் பசி, பட்டினி, புத்திர சோகம் இவற்றால் சாகிறாள்.

கடைசி சீன்: தாய் செத்துக் கிடக்க கிட்டுவும் அம்பியும் கத்திக் கொண் டிருக்கிறார்கள். அப்போது ஜயா இந்த இடத்திலா சண்டை? நீங்களும் ஆண் பிள்ளைகளா?" என்று சொல்லி ஒடிச் சென்று மீனாகூழியம்மாளைத் தன் மடி மீது எடுத்துக் கிடத்திக் கொண்டு கதறுகிறாள்.

நமக்கு மயிர்க்கூச்செறிகிறது. நீஒரு ஹிந்துப் பெண்’ என்கிறான் அம்பி. இக்கதையைப் படித்ததும், இந்த எழுத்தாளனிடம் மட்டும் ஆயுதத்தைக் கொடுத்திருந்தால் கிறிஸ்தவர்களை அடித்தே கொன்றி ருப்பான் போலிருக்கிறதே" என்ற நினைவு ஓடியது.

இந்த மாதிரி ஆட்கள்தான் தேவாலயங்களைக் கொளுத்துகிறார்கள், பாதிரியாரையும் அவர் குழந்தைகளையும் உயிரோடு எரிக்கிறார்கள், கன்னி காஸ்திரீகளை மூத்திரம் குடிக்கப் பண்ணுகிறார்கள், கன்னிகாஸ்திரீகளை வன்புணர்ச்சி செய்கிறார்கள்.

'அவதாரம்" என்று ஒரு கதை. ஊரைப் பற்றி வர்ணிக்கும்போதே தலித்துகளைப் பற்றி பட்டினிப் பட்டாளங்கள்’ என்று ஒரு நக்கல். ஊரில் கிருஷ்ணக் கோனார் என்று ஒருவர். அவருக்கு ஒரு குழந்தை. மனைவி காலி, கால்நடைகளுக்கோ கோமாரி நோய். ஆனால் பையனோ புத்திசாலி. அதனால் அவனைச் சாமியார் பள்ளிக் கூடத்தில் சேர்க்கிறார். உடனே புதுமைப் பித்தனிடமிருந்து கிறிஸ்தவ மதத்துவேஷம் விஷ வார்த்தை களாய்க் கிளம்புகிறது.

156/கறுப்பு

நன்றி - நூலகத்திட்டம்

"எம்மதத்தவரானாலும் துறவிகளாக வருகிறவர்களுக்கு நம்மவர் செலுத்தும் மரியாதை சிற்சில இடங்களில் தவறான மதிப்பும் அந்தஸ்தும் கொடுத்து விடுகிறது. இத்துடன் ஓரளவு தர்மச் செலவு செய்யும் சேவையும் சேர்ந்து கொண்டால் அந்தஸ்து வளர்ச்சிக்கு அளவே கிடையாது. ஏகாதி பத்தியத்திற்கே பிரத்யேகமான வர்ணம் என்ற வெள்ளைத் தோலும் சேர்ந்து கொண்டாலோ கேட்க வேண்டியதே இல்லை. இந்த மூன்று அந்தஸ்தும் கொண்ட பிறமத மிஷனரிப் பள்ளிக் கூடங்கள் தர்மம் செய்யும் ஏகாதி பத்தியமாக, ஏகாதிபத்தியம் செய்யும் தர்மஸ்தாபனமாக இரண்டு நோக்கங் களையும் கதம்பமாக்கி இரண்டையும் ஒருங்கே குலைத்து வருகிறது."

இப்படிப்பட்ட ஸ்தாபனம் ஒன்றில் ஸ்தல சர்வாதிகாரி சர்ச்ஞானாந்தச் சாமியார். இவர் ஸ்தல கிறிஸ்தவர்களின் ஒரு வகுப்பாருக்கு மோட்சத்தில் போட்டுக் கொடுக்கும் வேலையுள்ள ஸ்தல ஹைஸ்கூலின் தலைமை நிர்வாகத்தை ஏற்று."

"கிறிஸ்துவின் பரித்தியாகம் இவன் மனசைச் சிறிது கவர்ந்தது என்றாலும் கிறிஸ்து முனியின் தத்துவம் பூண்டிருந்தும் அமல் மிகுந்த சேவை அவனுக்கு அவரது தத்துவத்தின் மேல் வெறுப்பையே ஊட்டியது. மேலும் புண்ணைக் காட்டி பிச்சை வாங்குவதற்கும் கிறிஸ்துவின் புண்கள் வழியாக அவர்களும் மோக்ஷ சாம்ராஜ்யத்தை நம்பும்படித் தன் வயிற்றுப் பசியை உபயோகிப்பதற்கும் பிரமாத வித்தியாசம் ஒன்றுமில்லை எனவே இவன் நினைத்து வந்தான்."

இந்த இடத்தில் கன்னியாகுமரியில் என் கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கும்போது உணர்ச்சி வசப்பட்டுத் தமிழில் 'ங்.." என்று துவங்கும் ஒரே சொல்லான அந்த வசைச் சொல்லைப் பயன்படுத்தி 'ங். இப்படியெல்லாம் கதை எழுதுகிறான்கள்." என்று சொன்னேன்.

உடனே புதுமைப் பித்தன் ரசிகர்களுக்குக் கோப்ம் ஆசனவாய் வழியே பொத்துக் கொண்டு வந்து விட்டது. அது எப்படி புதுமைப் பித்தனை அவ்வாறு திட்டலாம்? அப்படியானால் 'கறுப்புப் பறை நாய்" என்று எழுதுகிற ஒருத்தனை என்ன சொல்லித் திட்டலாம் என்று தயவு செய்து பு.பி. ரசிகர்கள் சொல்ல வேண்டும்.

தவிர, இயேசு கிறிஸ்து என்ற பெயர் - தியாகம், அன்பு, மனித நேயம், துன்பம், துயரம், தனிமை போன்றவற்றின் குறியீடு. கஸான்ஸாகிஸ் போன்ற இலக்கிய மேதைகளுக்குக் கிறிஸ்துவின் வாழ்வுதான் அவர்களது எழுத்தின் அடிப்படை உந்துதலாக இருந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் காவியம் 6TGötapı GNFTGöQayğ3555 Zorba the Greek என்ற தனது நாவலில் 'மனித வரலாற்றில் என்னைக் கவர்ந்த மூன்று பெயர்களாக புத்தன், இயேசு, நீட்ஷே' என்று சொல்லுவார்கஸான்ஸாகிஸ்.

எழுத்தின் அடிப்படையே மனிதநேயம்தான். மனிதநேயத்தின் ஒரு குறியீடு கிறிஸ்து. ஆக, ஒர் எழுத்தாளனால் கிறிஸ்துவின் தியாகத்தின் அடையாளங்களைப் பார்த்து 'புண் என்று சொல்ல முடியுமா?

கறுப்பு/157அடுத்து வருகிறது ஹோமோ செக்ஸ் பிரச்சினை. இசக்கிமுத்துக்கு ஏழாவது வகுப்பில் ஏற்பட்ட உபாத்தியாயர் சர்ச், பெர்னான்டஸ்' சாமியார் விபரீத ஆசையைக் கொண்டவர். பையனுடைய அழகு அவருடைய நேர்மையற்ற காம விகாரத்திற்கு இலக்காகியது. பையன் திடுக்கிட்டான். பிறகு பள்ளியிலிருந்து வெளியேறுகிறான் பையன்.

இசக்கிமுத்துவுக்குக் கல்யாணமாகிறது. லெட்சுமி என்ற பெண். அவளோ இன்னொருத்தனோடு படுத்து விடுகிறாள். இதற்கு மேல் கதையை நீங்களே யூகித்து விடலாம். மனைவி சோரம் போனால் புதுமைப் பித்தன் உருவாக்கும் கணவன் என்ன செய்வான்? சாமியாராகி இமயமலை செல்வான். அதையே இசக்கிமுத்துவும் செய்கிறான். என்ன ஒரு புரிதல்! அப்படியானால் பிரம்மம், அது, இது என்பதெல்லாம் பெண்ணின் ஜாமானின் தூ(ய்)மையைப் பொறுத்ததுதானா? இந்திய ஆன்மீகத்துக்கு என்னதொரு விளக்கம்! மெய் சிலிர்க்கிறது.

O

முடிவாக, புதுமைப்பித்தனிடம் ரசிக்கக் கூடிய இடம் எதுவுமே இல்லையா என்று கேட்டால் ஒரே ஓர் இடம் இருக்கிறது என்று சொல்லுவேன்.

‘சாமியாரின் வலது பக்கத்தில் ஒரு சின்னக் குழந்தை, நான்கு வயசுக் குழந்தை. பாவாடை முந்தானையில் சீடை மூட்டைக் கட்டிக் கொண்டு படித்துறையில் உட்கார்ந்து காலைத் தண்ணிரில் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. சின்னக் கால்காப்புகள் தண்ணீரிலிருந்து வெளிவரும் பொழுது ஒய்ந்து போன சூரிய கிரணம் அதன் மேல் கண்சிமிட்டும்.அடுத்த நிமிஷம் சூரியனுக்கு ஏமாற்றம். குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்றுவிடும். சூரியனாக இருந்தால் என்ன? குழந்தையின் பாதத் தூளிக்குத் தவம் கிடந்துதான் ஆக வேண்டும்."

அடுத்து சில கதைகள், காலனும் கிழவியும், மனக்குகை ஓவியங்கள். ஆனால் இப்படி ஒன்றிரண்டு கதைகள் தமிழில் எழுதியிருக்கிற அத்தனை பேரிடமிருந்தும் தேறக் கூடியவைதான் என்பதால் புதுமைப் பித்தன் போன்ற mediocre எழுத்தாளர்களின் பெயர்கள் தமிழ் இலக்கியத்திலிருந்து முற்றாக அழிக்கப்பட வேண்டும்.

Ο

சாபவிமோசனம்" என்ற கதையைத் தமிழின் சிகர சாதனை என்கிறார்கள். கவனமாக வாசித்தேன். இதுவும் புதுமைப் பித்தனின் மற்றொரு குப்பை. ஐம்பது ஆண்டுகளிலேயே காலாவதியாகிவிட்ட கதை இது. Purity of CUNT என்பது இன்று அர்த்தமற்றுப் போய் விட்டது. கற்பு என்ற கருத்தாக்கத்தின் முரண்பாடுகளைப் பற்றிப் பேசுகிறது இக்கதை, ஆனால் இன்றைய வாழ்வோ அந்தக் கருத்தாக்கத்தையே நிராகரித்து விட்டது. என?ே கதையும் அர்த்தமற்ற குப்பையாகி விடுகிறது. ஆனால் 2500 ஆண்டுகளுக் முன்பு எழுதப்பட்ட கிரேக்கக் காவியங்கள் இன்றைக்கும் மனி

158/கறுப்பு

நன்றி - நூலகத்திட்டம்

வாழ்வோடு உறவுள்ளவையாக இருப்பதன் காரணம் என்ன? (உ.ம். சிஸிஃபஸ், ஸோஃபோக்ளிஸ் எழுதிய மெடீயா என்ற நாடகம், ஈடிபஸ்.) என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

O

என்னுடைய கருத்துகள் பலருக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் புதுமைப் பித்தனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்து உலக இலக்கிய அரங்கிற்கு எடுத்துச் சென்றால் அங்கே அந்த எழுத்து குப்பைக் கூடைக்கே செல்லும் என்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகமில்லை. அப்படி ஏற்கனவே இரண்டு லோக்கல் வஸ்தாதுகள் உலக இலக்கிய மேடைக்குப் போய் செவுனியில் அறை வாங்கிக் கொண்டு குற்றுயிராய் விழுந்து கிடக்கிறார்கள். -

ஏற்கனவே நான் ஒரு விவாதத்தில் ‘புதுமைப் பித்தனிடம் பின் நவீனத்துவக் கூறுகளைக் காண முடியும்’ என்று எழுதியிருக்கிறேன்: ஆனால் இப்போது அவரது ஒட்டு மொத்த எழுத்துகளைப் படிக்கும்போது என் முந்தைய கருத்து மிகவும் தவறானது என்றே முடிவுக்கு வருகிறேன்.

ஓர் எழுத்தாளர் தனது காலத்தைத் தாண்டி மிகுந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவராக இருக்க வேண்டும். தனது குடு

ம்பத்தை, ஊரை, சாதியை, மதத்தை, தேசத்தை, தனது மொழியையெல்லாம் தாண்டியவராக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஓர் எழுத்தாளரை துறவி என்றே சொல்ல முடியும். இந்தவிதத்தில் பெரியார்தான் ஒரு துறவியாக இருந்திருக்கிறார். அவரே இதைப் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டும் இருக்கிறார்.

புதுமைப் பித்தனைப் படித்து விட்டு அதே சமயத்தில் பெரியாரையும் படித்தேன். புதுமைப் பித்தன் பொதுஜனத்தை விட பத்தாம்பசலியாகவும் பெரியார் ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய தார்மீக ஆவேசத்துடனும் காலத்தை மிஞ்சிய புரட்சிகர சிந்தனைகளுடனும் இருப்பதைக் காண முடிந்தது.

உதாரணமாக, தீண்டாமை பற்றிய இருவரின் கருத்துகளையும் வாசகர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். எந்தக் காலக்கட்டத்தில் புதுமைப் பித்தன் தன்னுடைய சாதிவெறி பிடித்த கதைகளை எழுதி யிருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். காந்தியிடம் சென்று இந்து மதத்தை அழித்துவிட வேண்டும் என்று விவாதித்திருக்கிறார் பெரியார். ஆனால் புதுமைப் பித்தன் கைகளில் சூலாயுதம் மின்னுகிறது.

பார்ப்பனர் தெருக்களில் தலித்துகள் நடப்பதற்கே தடை விதிக்கப் பட்டிருந்த காலம் அது. இதுபற்றி சட்டசபையில் நரசிம்மாச்சார்லு என்ற பார்ப்பன உறுப்பினர் இன்று சாலையில் நடக்க உரிமை வேண்டும் என்பார்கள். நாளை ஆலயப் பிரவேச உரிமை கேட்பார்கள். பிறகு கலப்பு

கறுப்பு/159மணம் வேண்டும் என்பார்கள். அதனால் கலவரம் ஏற்படும்" என்று பேசியுள்ளார். இது பற்றிய விபரம் குடி அரசு 27-12-1925 தேதியிட்ட இதழில் உள்ளது.

சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாடு செங்கல்பட்டில் கூடி இயற்றிய தீர்மானங்களில் சில:

சிற்றுண்டிச் சாலைகளில் சாதி வித்தியாசம் அ. வகுப்பு பேதம் காண்பிக்கப்படுகிற எல்லா ஹோட்டல்களையும் காப்பிக் கிளப்புகளையும் இந்த மாநாடு கண்டிப்பதுடன் இவ்வித விஷமத்தனமான பேதங்களுள்ள ஹோட்டல்களுக்கும் காப்பிக் கிளப்புகளுக்கும் அவ்விடத்திலுள்ள அதிகாரிகள் லைசன்ஸ் கொடுக்கக் கூடாதென்றும் கேட்டுக் கொள்கிறது.

ஆ. இரயில்வே அதிகாரிகள் தங்கள் வசத்திலும் மேற்பார்வையிலும் உள்ள சாப்பாட்டுச் சாலைகளில் சிற்றுண்டிச் சாலைகளிலும் ஜாதி, மதம்,

வகுப்பு, நிறம் முதலியவற்றைப் பொறுத்து எவ்வகையிலும் வேற்றுமையாகப் பிரயாணிகளைப் பாராட்டாமலிருப்பதற்குரிய

நடவடிக்கைகளை உடனே கைக்கொள்ளுமாறும் இவ்விழிவினை, வேற்றுமையை ஒழிக்க ரயில்வே ஆலோசனைக் கமிட்டியினர்களும் இந்திய சட்டசபை மெம்பர்களும் ஏற்பாடு செய்யுமாறும் இம்மகாநாடு கேட்டுக் கொள்கிறது.

- குடி அரசு - 24-02-1929 இதுதான் புதுமைப் பித்தனின் 'பறை நாய் கதைகள் வெளிவந்தபோது இருந்த சமூகச் சூழல். இந்தச் சூழலில் வைத்து அக்கதைகளைப் படித்துப் பாருங்கள்.

நவீன தமிழ் இலக்கியத்தின் ஆரம்பக் கட்டம்" என்றெல்லாம் பசப்பி மன்னிப்புக் கோர முடியாது. ஏனென்றால் இதே காலகட்டத்தில் எழுதியவர்தான் சதாத் ஹாஸன் மான்டோ. இந்திய உபகண்டத்திலிருந்து உலக இலக்கிய அரங்கிற்குச் சென்ற எழுத்துகளில் முதன்மையானதாகக் கொண்டாடப்படுகிறது மான்டோவின் எழுத்து. புதுமைப் பித்தனின் சிறுகதைகளைப் படித்துவிட்டு - அவற்றின் மீது மூத்திரம் அடித்தேன். அதைத் தவிர வேறேதும் எனக்குச் செய்யத் தோன்றவில்லை.

Ο

160/கறுப்பு

நன்றி - நூலகத்திட்டம்

நேர்காணல்

நூல் விமர்சனம்