Wednesday 17 July 2019

கலைத்துக்கொண்டே இந்த ரோஜாக்களை யாரோ - தமிழில் - பெருந்தேவி :: கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ் ::



கலைத்துக்கொண்டே இந்த ரோஜாக்களை யாரோ - தமிழில் - பெருந்தேவி 



கல்லறை எனது. ரோஜாப்பூங்கொத்தொன்றை ஞாயிறு என்பதாலும் மழை நின்றுவிட்டதாலும் கொண்டு செல்ல எண்ணம். ரோஜாக்கள் பீடங்களையும் வளையங்களையும் அலங்கரிக்க அவள் வளர்க்கும் சிவப்பு, வெள்ளை நிறங்க'' நகரவாழ்வினர் விட்டுத்துறந்த மரித்தவர்களின் சிதைமேடுகளுக்கு ஞாபகம் செல்லச் செய்வதாய் காலையைச் சோகம் தோய்க்கும் மெளனித்த மூச்சு மூழ்க கார்காலம். காற்று செல்ல மீண்டும் படியும் தெய்வாதீனமான ரொட்டித்துகள்களால் மட்டுமே தாய்மையாக்கப்பட்ட மரங்களற்ற வெற்றிடம். மழை நின்றிருக்கிறது இப்போது வழுக்குச்சரிவுகளை ஒருக்கால் நண்பகல் வெயில் கெட்டிப்படுத்த, வேர்களுக்கும் நத்தைகளுக்கும் இடையே விரவிப்பரவியிருக்கிற என் குழந்தையின் உடல் ஓய்வு கொள்ளும் கல்லறையை அடையமுடிய வேண்டும். 

புனிதர்களின் முன் மண்டியிட்ட அவள். பிரகாசமான அன்றலர்ந்த ரோஜாக்களை, பீடத்தை நெருங்கி எடுக்கும் முதல் முயற்சி தோற்று அறையில் என் இயக்கம் நிறுத்தியதிலிருந்து லயித்திருந்தாள் வேறெதிலோ. சுடர்த்தீபம் இமைத்ததுடன், பரவசத்திலிருந்து மீண்டு தலையுயர்த்தி நாற்காலிகொண்ட மூலையை அவள் நோக்காமலிருந்தால் ஒருவேளை என்னால் முடிந்திருக்கும் இன்று. பீடத்தின் அருகாமையில் " ஏதோ கிறீச்சிட்டதாலும் காலம்கண்ட தேங்கிய நினைவுகளின் தளம் பெயர்ந்தாற்போலே அறை கணம் அதிர்ந்ததாலும் காற்று மீண்டும் என அவள் நினைத்திருக்க வேண்டும். விழிப்புற்று நாற்காலியை நோக்கியபடி இன்னமும் அவள் இருக்கவும் முகத்தருகே என் கரங்களின் ஓசையைக் கேட்டிருப்பாளாதலாலும் ரோஜாக்களைச் சென்றடைய வேறொரு தருணத்துக்காக காத்திருக்க வேண்டும் என்று எனக்குப் புரிந்தது அப்போது. அவகாசம் சிறிதில் அவள் வெளியேறி ஞாயிற்றுக்கிழமையின் அளவான வழக்க நிச்சயமான மதியத்தூக்கத்துக்காக கதவு அடுத்ததை அடையப்போகும் வரை நான் காத்திருக்க வேண்டும், இந்நேரம். மீண்டும் அறைதிரும்பி நாற்காலியை அவள் நோக்கிக் கொண்டிருக்கும் முன் ரோஜாக்களுடன் வெளியேறி விட்டு திரும்பிவிடவும் முடியலாம் என்னால். 

சென்ற ஞாயிறு பட்ட இடர் அதிகம். பரவச நிலைக்கு அவள் செல்ல இரண்டுமணி காக்க வேண்டியதாயிற்று. இருப்பிடத் தனிமைவாசத்தின் அடர்த்தி குறைந்த நிச்சயம் வதைத்ததே போன்று அமைதியற்றும் கவனம் வேறெதிலோ கொண்டும் தென்பட்டாள். பீடத்தில் வைக்கும் முன்னர் ரோஜாப்பூங்கொத்தோடு அறையைச் சுற்றியவாறிருந்தாள் பலமுறை. தாழ்வாரம் அடைந்த வளைவில் அடுத்த அறைக்குச் சென்றாள் பிறகு. விளக்கை எடுக்கத்தான் எனத் தெரியும். வெளிச்சத்தில் நிறமாழ்ந்த சிறிய ஜாக்கெட்டில் வெளிர் சிகப்பு காலுறைகளில் கதவைக் கடந்தவளைக் காண, அதே அறையில் நாற்பது வருடங்களுக்கு முன் என் படுக்கையில் சாய்ந்தவாறே "பல்குத்திகளை இப்போது வைத்திருக்கிறார்களாதலால் திறந்தும் கடினமாயும் உன் கண்கள்" எனக் கூறியவளாகத் தென்பட்டாள். "சகோதரனைப் போல உனக்கு, அழேன்" என தொலைவுகண்ட அந்த ஆகஸ்ட் மதியம் அறைக்குள் அவளை 

அழைத்து வந்த பெண் கள் சடலம் காட்டிச் சொன்னதும் இன்னமும் மழையில் முட்!-,தி(தோய்ந்தும் அழுதும் பணிந்தும் சுவர்மீதாகச் சாய்ந்து நின்றவளைப் போல காலம் {நகராத பாவனையில் இப்பவும். 

(ரோஜாக்களின் இடம் அடையும் முயற்சியில் கடந்தன மூன்று நான்கு ஞாயிறுகளாகவே, வருடம் இருபதாக வீட்டில் வாசம் செய்யும் அவளோ இதுவரையில் நான் கண் டிராத அச்சம்கவிந்த சுறுசுறுப்புடன் ரோஜாக்களைக் கண்காணித்தபடி எச்சரிக்கை கொண்டு பீடம் முன். சென்ற ஞாயிறு விளக்கையெடுக்க அவள் செல்கையில் சிறந்த ரோஜாக்களை பூங்கொத்தாக இணைக்கவும் முடிந்தது என்னால். நிறைவேற விருப்பத்துக்கு வேறெப்போதும் விட மிக அருகில் நான். நாற்காலிக்குத் திரும்பயத்தனிக்கும் (போதோ காலடியோசையைச் செவி கொண்டேன் மீண்டும். பீடத்தில் ரோஜாக்களை உடனே ஒழுங்கு செய்ய தூக்கிப்பிடித்த விளக்கோடு வாயில்நிலையில் காணத் தோன்றினாள், 

நிறமாழ்ந்த ஜாக்கெட்டும் வெளிர் சிகப்பில் காலுறைகளும் கொண்டிருந்த அவளுடைய முகத்திலோ தரிசன ஒளிமினுங்கல் போல ஏதோ. தோட்டத்தில் இருபது வருடங்களாக ரோஜாச் செடிகளை வளர்த்து வருகின்ற பெண்ணாகத் தெரியாமல், வருடம் நாற்பது செல்ல உடல்பருத்து வயது முதிர்ந்து சுமந்த விளக்குடன் திரும்பிக் கொண்டிருக்க அந்த ஆகஸ்ட் மதியம் உடைகளை மாற்றவென அறை அடுத்ததில் அழைத்துவரப்பட்ட அதே குழந்தையாகத் தோன்றினாள். 

நிஜத்தில் நாற்பது வருடங்களாய் அவிந்த அடுப்பின் அண்மையில் உலர்ந்தவாறு இருந்தும் அன்று மதியம் படிந்த களிமண்ணின் கடினப்பூச்சு இன்னமும் என் அக்களில். எடுக்கச்சென்றேன் அவற்றை ஒரு நாள். ரொட்டியையும் கற்றாழைக்கிளையையும் நுழைவாயிலிலிருந்து கீழிறக்கி இந்நேரம் வரை நான் அமர இருக்கையான மூலைநாற்காலியைத் தவிர மற்றெல்லா மேஜை நாற்காலிகளை எடுத்துப் போய் கதவுகளை அவர்கள் இழுத்துப் பூட்டியதற்குப் பிறகு. வீட்டைத் துறந்துதறிச் செல்கையில் ஞாபகம் கூட அவர்களுக்கு இல்லையென்றாலும் உலர்வதற்காக வைக்கப்பட்டிருந்தன மூக்கள் என எனக்குத் தெரியும். அவற்றை எடுக்கச் சென்றது அதனாலேயே. 

வருடம் பல சென்று திரும்பிய அவள். காலம்பல கழிந்தபடியால் அறையில் கஸ்தூரி வாசனையோடு கலக்க தூசிப்புழுதியின் மணமும் பூச்சிகளின் வறண்ட, மெல்லிய மூச்சுக்காற்றும். காத்திருந்தபடிக்கு மூலையில் அமர்ந்து வீட்டில் நான் தனியாக. மக்கள் மரக்கட்டைகளின் ஒலியும் மூடிய படுக்கையறைகளில் பழமைப்பட்டுக் கொண்டிருந்த காற்றின் சிறகடிப்பும் உணரவும் கற்றேன். அப்போது தான் வந்தாள். கை சிறு பெட்டியுடன் பச்சைத்தொப்பியோடு அன்றிலிருந்து எப்பவும் கழற்றாத் அல்?? பருத்தி ஜாக்கெட் அணிந்தவளாய் நின்றாள் கதவருகே. இன்னமும் சிறுமிதா பருக்கத் தொடங்காமலும் காலுறைகளடியில் கணுக்கால்கள் இப்போது போக 

88 

ஊதி வழியாமலும். சிலந்திவலைகளும் தூசிப்புழுதியும் என்மேல் போர்த்திருக்கையில் கதவை அவள் திறக்க இருபது வருடங்களாக எங்கோ அறையில் இசைத்துக் கொண்டிருந்த சில்வண்டு மெளனமுற்றும் சிலந்திவலைகள், தூசிப்புழுதி, சில்வண்டின் திடீர்த் தயக்கம், புதுயுகத்தின் முன்னெப்போதுமில்லாத வருகை எல்லாம் இருந்தும் புயலார்ந்த அந்த ஆகஸ்ட் மதியம் தொழுவத்தில் என்னோடு கூடுகளைச் சேகரிக்க வந்த சிறுமி காணக் கிடைத்தாள் அவளில், திடீரென்று கூக்குரலிடப் போகிறதாக, உடைந்த படிக்கட்டுகளின் கைப்பிடியைப் பற்றியபடியே வைக்கோல் மூடிய தொழுவத் தரையில் என் முகம் அண்ணாந்திருக்க அவர்கள் கண்டுபிடித்த போது அவள் சொன்னதையே மீண்டும் சொல்லப் போகிறதாகத் தோன்றியது, வாயில் நிலையில் கைகொண்ட சிறுபெட்டியோடு தலையில் பச்சைத்தொப்பியோடு அவள் நின்ற விதம். கூரைமுகட்டில் சம்மட்டியால் யாரோ அடிக்கத்தொடங்கினாற்போல, கீல்கள் கிறீச்சிட கூரையிலிருந்து தூசிப்புழுதி குவியல்களாக விழ கதவை அவள் அகலத்திறந்து நிலைவாயிலைக் கடக்க "மகனே, மகனே" என்று அறையின் வழிபாதி வரை பிறகு வந்தழைக்கையில் தூங்குபவரை எழுப்பும் யாருடையதையோ ஒத்தது அவள் குரல். நாற்காலியில் கால்களை நீட்டியவாறு நானோ இறுக்கத்துடன் அசையாமல்.' 

வந்திருப்பாள் அறையைக் காணவே என்று நினைத்தேன். அவளோ எனில் வீட்டில் வாசம் செய்யத் தொடங்கினாள். பெட்டியைத் திறந்திருந்து அவளுடைய பழமைகண்ட கஸ்தூரியின் வாசனை வெளிப்பட்டாற்போல காற்றை வியாபித்தாள் அறையில். மேஜை நாற்காலிகளையும் பெட்டிகளில் துணிமணிகளையும் மற்றவர்கள் எடுத்துச் செல்ல அறையின் வாசனைகளை மட்டுமே தன்னோடு கொண்டு சென்றவள். வருடம் இருபது செல்ல திரும்பக் கொணர்ந்து அவற்றின் இடத்தில் வைத்ததோடு சிறிய பீடத்தை முன் பிருந்த வகையில் மீண்டும் கட்டினாள். தளர்வுறாத காலமெனும் தொழிற்சாலை அழித்தவற்றை மீட்க அவளுடைய இருப்போன்றே போதுமானதாக இருந்தது. பகலில் புனிதர்களோடு மெளனமாக அவள் உரையாடிக் கழிக்க அறை இதுவும் உண்ண உறங்க அடுத்ததும் அன்றிலிருந்து ஆயிற்று. அறைக்கடுத்த ஆடும் இருக்கையில் அமர்ந்து துணிமணிகளைச் செப்பனிட்டுக் கொண்டிருப்பாள் மதியப்பொழுதுகளில். ரோஜாப் பூங்கொத்தை வாங்க யாரும் வந்தாலோ அவர்கள் அளிக்கும் பணத்தை பெல்ட்டோடு அவள் இணைத்திருக்கும் கைக்குட்டையின் மூலையிலிட்டபடி தவறாமல் சொல்லுவாள். "வலதுபுறம் இருப்பவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இடதுபுறத்தில் இருப்பவை புனிதர்களுக்காக." 

குழந்தைப்பருவ மதியங்களை எந்தச் சிறுவனோடு பகிர்ந்துகொண்டாளோ அவனை இப்போது பேணாதது போல, அவனுடைய பாட்டியின் ஐந்து வயதிலிருந்தே இம்மூலையிலேயே அமர்ந்திருக்கும் உடம்பு இயலாத பேரனுக்காக என்பது போல, இருபது வருடங்களாக அதே வகையில் ஆடும் இருக்கையில் தன் பொருட்களைச் செப்பனிட்டுக்கொண்டே ஆடியபடி நாற்காலியை நோக்கியபடி அவள்.', 

தலையை அவள் தாழ்த்துவதால் ரோஜாக்களை அ டைய இயலுதல் எனக்கு சாத்தியம் இப்போது, செய்ய அதை முடியுமானால் சிதை (மேட்டுக்குச் சென் று கல்லறையில் அவற்றை வைத்துவிட்டு அவள் திரும்பாத எல்லா துறைகளிலும் ஓசைகள் அற்றுப்போகும் நாளுக்காக நாற்காலியில் காத்திருக்கத் திரும்பிவருவேன் அறைக்கு. 

தகர்ந்து பாழ்பட்ட வீட்டில் வாசம் செய்யும் ரோஜாப் பெண்மணிகள் சிதைமேட்டுக்கு அழைத்துச்செல்ல நாலுபேர் தேவையென யாரிடமாவது சொல் திரும்பவும் நான் வீடு நீங்க வேண்டியிருக்கும் என்பதால் யாவற்றிலும் மாறுதல் இருக்கும் அந்நாளில். எப்போதைக்குமாக அறையில் தனியாக இருப்பேன் பிறகு. எனில் மாறாக அவள் மனம் நிறைவுறும், ஞாயிறு தோறும் அவளின் பீடம் வந்து ரோஜாக்களைக் கலைத்தது கண்ணுக்குப் புலனாகாத காற்றல்ல என்று அவளுக்குக் தெரிய வரும் அந்நாளில். 

தமிழில் - பெருந்தேவி 

-