Friday 10 June 2016

மிக நேர்த்தியான உனது துரோகத்தை ... Riyas Qurana


Riyas Qurana
2 hrs ·

https://www.facebook.com/riyas.qurana/posts/1344511592245590

மிக நேர்த்தியான உனது துரோகத்தை
மனதிற்குள் வியந்தபடி
சொற்களை பார்க்கிறேன்
இரண்டாவது முறை எண்ணும்போது
சொற்கள் குறைந்திருக்கின்றன
இந்தச் சொற்களினுள்
சலசலத்துக்கொண்டிருப்பது
யாருடைய குரல்
தெரிந்த எவருடைய குரலுமல்ல
பின்னே யாரோ அழைப்பதுபோல்
திரும்பிப் பார்க்கிறேன்
எனது நிழல் அதே குரலில்
ஏதோ பேசுகிறது
சொற்களினுள் நிரம்பியிருந்த குரல்கள்
வெளியேறிவிட்டன
தனிமையில் அசைவற்று
தாளில் உறைந்த சொற்களை
முணுமுணுக்கிறேன்
தாளில் இருந்து துள்ளி
தரையில் விழுந்தது ஒரு சொல்
பொறுக்கப்போனேன்
பறந்து போய் அருகிலிருந்த
தென்னையில் குந்தியது
சூய் என துரத்தினேன்
இன்நேரம் அவளின் வீட்டு
ஜன்னலில் உட்காரந்திருக்கலாம்


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மலை என்றகதையிலுள்ள உருவகத்திலிருந்து
சுரக்கிறது நீர்.
ஒரு வாக்கியத்தின் துாரம்வரை
ஓடிச் சென்று,
ஓடிக்கொண்டிருக்கிறது.
அடுத்த வரிக்குச் செல்ல
துள்ளிப் பாய்ந்த
சிறு மீனில் ஏறிச் சென்றேன்.
காத்திருந்ததுபோல்
பிடித்துச் சென்றான்
துாண்டில்காரன்.
தனிமை என்ற சொல்லில்
சிக்கிக்கொண்டேன்.






நான் ஒரு எழுத்தாளன் என உணர்வதற்காக இலக்கியத் திருட்டை மிகவும் விரும்பினேன். இலக்கியத் திருட்டின் எல்லைக்கே என்னை நான் எடுத்துச் சென்றேன்.

சார்த்தர்