Thursday 1 August 2019

உலர்ந்த நிலத் தோற்றங்களின் அரூபக் கதையாடல் கோணங்கி 3

உலர்ந்த நிலத் தோற்றங்களின் அரூபக் கதையாடல்  கோணங்கி  3
3
சிறுகதையின் திருமூலரை மனக்கோட்டையில் அடைத்த பயத்தில் நடுங்கும் புறம் கோட்டை மதில்கள் எட்டிய வெளியில் நகரும். பிரபஞ்சத்திலேயே விடுவிக்க முடியாத சிக்கலான வஸ்து கதையாகவே இருக்க முடியும். "ஓடி னால் (odin) ஓடினுக்குக் கொடுக்கப்பட்டு சாம்பல் மரத்தில் ஒன்பது பகல்களும் ஒன்பது இரவுகளும் தொங்க விடப்பட்டு பிறகு ஓடினால் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட ஸ்காண்டினேவிய ஆதி எழுத்துக்களை மூதாதையர்கள் செதுக்கியது போல தங்கள் எழுத்துக்களை செதுக்கிக் கொண்டார்கள். ஆனால் நான் கண்டது இந்தச் சச்சதுக்கத்தின் நடுவே மஞ்கள் மரக்கம்பம். அதனுடைய உச்சியில் மீனின் கறுப்பு உருவம். எங்களுடன் வந்த ஓர்ம் அந்த மீன்தான் அந்த வார்த்தை என்றான். ஆனால் உன்னுடைய சாவைச் சந்திக்க நீண்ட நாட்கள் இல்லை. ஏனெனில் நீ அந்த வார்த்தையைக் கேட்டுவிட்டாய். * போர்ஹெவின் வார்த்தையில் திறந்து கொண்ட கபாடபுரம் ஞாபகம்காண மறதியைத் தேடுவதில் ஐடமென இருநூறு வருஷங்கள் நாற்காலிகளில் வீற்றிருந்தார்கள் எழுத்தாளர்கள். எதார்த்தவாதக் கதைஉலகை இருள்கொண்டுவிட்டது. கபாடபுரத்திலிருந்து பித்தன் திரும்பிப் பார்க்கிறான். சரிந்துவிழும் கதைகளாலே சுவர் எழுப்பிய கபாடபுரம் கண்முன் செவிப்புலனாம் ஓசை கேட்டுக் கட்புலனாம் பொருளுணரும் தொல்லோர் திணைப்புக்களின் வாசனைக்குள் நிலங்களாய் விரிந்த பித்தனின் வார்த்தையில் கபாடபுரத்தின் மறையாத யார் யாருடைய காலடிகளின் வளைந்த ரேகை அலையலையாய். முன்னோர் கலாச்சாரம் மூழ்கிய கடலினுள்ளே தொல்காப்பியத் திணைப்பூவில் விரியும் கடல் கொண்ட கபாடபுரம். வெறுமையாகி நின்ற தெருக்களில் உலவும் முன்னறியாத கதைகள் முகங்களை விழுங்கி கிழக்கோட்டான்களாய் தனிமொழியில் சொல்லத் தொடங்கிய ஞாபகங்கள் தெருக்களில் மோதி எதிரொலிக்கின்றன. கபாடபுரத் தெருவில் பித்தனிடம் பேசுகிறது நகரம். கடல் கொண்டழிந்த தெருக்களில் வசித்தது தனிமை. மெளனியின் எட்டிய வெளிக்கும் அப்பால்,
297
கபாடபுரம் விரிவதைப் பார்வைகொள்ளச் சிறிது நேரம் ஆகியது போலும். முன் பின்னும் இடிந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டக் கலாச்சாரத்தின் பாழ் தோற்றம். . . பாதையில் புதைந்த சுடுமண் தாழிகளின் புராதன மூச்சிலிருந்து குருதியின் பழங்கால் ரகஸியமே கதைமரபாகும். உறைநிலையில் இருந்த பூதக ஏடுகள் நுரைபொங்கி பித்தனை இழுத்த ஸர்ப்ப அலைகளால் விழுங்கப்பட்டு மீண்டும் ஸர்ப்ப வாய் திறந்து வெளிப்பட்டான். ஞாபகங்களில் ஊர்ந்துவரும் ஏடுகளில் நிழல் கோடுகள் எதிரே ஒளி படர்ந்த தரையில் நீண்டு வளர்ந்து ஆடும் நிழல்கள். எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம். ஊழிப்பெருவெளியில் வெட்டி வெட்டிப் போன எழுத்துகள் நிழல்களாகி விரட்ட கூட்டமாய் கடலுக்குள்ளிருந்து நுழைய கபாடபுர நிழலின் அசுர ஓட்டத்திலிருந்து தப்பி ஓடுகிற நிழல்கள். தவளைகள் குரல் சுழற்சியில் உருவெடுத்த காடபுரம் நீருக்குள் சுழிசுழியாய் சுழல்கிறது. நகரும் பவளப்பாறைகளில் இடம் மாறி நகரும் நாவலந்தீவு. எட்டுத் துதிக்கைகள் கொண்ட கடல்ராசியாக மாறிய நாவலந்தீவு தோன்றி மறைய பித்தன் தலையில் விழுந்த துதிக்கையின் ஸ்பரிசம் பட்டு கற்பனைத் தீவுகளில் விசித்திர நீர் செடிகள் ஒளிர்வடைந்து புதைபாதையில் சுழற்றி இழுத்தது பித்தனை. செல்லும் வழி இருட்டு. செல்லும் மனம் இருட்டு. சிந்தை அறிவினிலும் தனி இருட்டு. பித்தன் தானே விசித்திர பிராணியைத் தேடிப் போகிறான்.
பனையோலைச் சுவடிகள் நீந்திவர ஓங்காரமிட்டு அலறித்துடிக்கிறது கடல். இருள்படிகளில் புதுமைப்பித்தன். உள்ளே மெளனி வடித்த பெண் சப்தம். சிலம்பின் கொஞ்சல்கள். கேட்டுக் கேட்டு மறையும் பிரபஞ்ச கானம். வான வெளிச்சம் ஜலப்பரப்பின்மேல் படர்ந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. மெல்லெனக் காற்று வீசியது. அல்லிப் பூக்களின் தலைகள் ஆடின. பிரபஞ்ச கானம் அவளுள் அடைபட்டுவிட்டது. அடைபட்ட சங்கீதம் விரிந்து வியாபகம் கொள்ள வெளியுலகம் கொஞ்சமாய் மாறுதல் அடைந்தது. தலை கிறுகிறுத்து ஒன்றும் புரியாமல் இவன் தூணோடு தூணாகிவிட்டான். அவள் சங்கீதத்தின் ஆழ்ந்த, அறிதற்கரிய ஜீவ உணர்ச்சிக் கற்பனைகள் காதலைவிட ஆறுதல் இறுதி எல்லையைத் தாண்டிப் பரிமாணம் கொண்டன. மேருவை விட உன்னதமாயும் மரணத்தைவிட மனதைப் பிளப்பதாயும் அலைகள் வந்து வந்து மோதிச் செல்கின்றன. கபாடபுர இசைப் பறவைகளின் எச்சம். வழிவழியாய்க் குரல் கொடுக்கும் கோயில் பிரகாரங்களில் நடந்து போகிறான் மெளனி, சிலைகள் உருவெடுத்து மறையும். கோபுரமெல்லாம் மூளிக்கலசங்கள். மோதும் சிறகுகளோடும் காதல் வடித்த கண்களோடும் கபாடபுர இசைப்பறவை. பறந்து பறந்து துடிக்கும் குரல். அங்கே அவள், பித்தனை எந்த யுகத்திலோ பின் தொடர்பவள், பேசாமடந்தையாகி கடல் கொண்டும் கல்லாய். கன்னியே கல்லாகிக் கண்மூடி பொய்ப்புன்னகை புரிந்து நிற்கிறாள். எதையோ கல்பதுமையிடம் இழந்த பித்தன் கதறுகிறான். கர்ப்பக்கிரஹ இருட்டு துயரங்களில் மூழ்கிக்கிடக்கிறது. இருளை மீறி முனகல் கேட்கிறது. மனம் கீறும் கண்களா, இரு தீப்பொறிகள் உள்ளே தெறிக்கின்றன.
நிருதியின் திசையிலிருந்த பலிபீடத்தின் மீது தலை அமர்ந்திருந்தது. கன்னியின் தலை. பீடத்தில் பலியிடப்பட்டு கடலில் எறியப்பட்ட சப்த கன்னிகளின் எலும்புகளின் குமுறல் அறைகளுக்குள் அடைபட்ட கடலாய் சீறுகின்றது, கன்னியின் சிரசு கல்லாகவும்
298
ஆ மையோட்டு
லலாமுகத் தோற்றங்களையும்
முடியும். பித்தன,
ஐயாட்டு நிறத்தில். அவள் முகத்தோற்றம் எல்லாமுகத் காட்டுவதாக, பித்தன் பார்த்தவாறு தி.
தை நினைத்துப்பார்த்து அதில் பிரதிபலிக்கக் கண்டான். பிற
'தேதி வெறித்தான். அவனது தந்தையின் தந்தை மகத்தோற்றத்தை நினைக்க அதுவ
ககக் கண்டான். பிறகு பாட்டியின் மகங்களையெல்லாம் காண வ
குந்தது. தாயின் முகம், அத்தையின் முகம், புராதன அது பித்தனின் கற்பனையில் வாழ்ந்தவர்கள், கடந்த காலத 2
' அனுபவத்துக்கு அப்பாற்பட்டதையும் அதில் காண கதைகளின் வீரர்களாக
* கடந்த காலத்தைச் சேர்ந்த கட்டுக் ) அடர்களது சாயல் தோன்ற எல்வா மாகாண
"ஒறங்கள், கேள்விப்பட்ட கதைகளிலுள்ள அதி உதிரத் தொடங்கிய குரல்களில் வித
பிலா முகங்களின் ஒரே முகமாக கன்னியின் சிரசில் உரிய கடலான இருளில் உறைந்து போன கல்,
'ந்துவந்த நிலத் தோற்றங்களைப் பார்வைகொண்டு
றைந்து போன கற்கள் கண்ம் விலகி நகர்கின்றன். கண அலையாகத் தங்குகிற கரிய நிற இருளடைந்த கடல் துளி விரிந்து வர்றது வரியும் கபாடபுரம் பயங்கரம் நிரம்பி மங்கலாய்த் தெரிகிறது. நகரம் ' பித்தனின் வார்த்தையில் உயிர்க்கும் கபாடபுரம்.
(கலாய்த் தெரிகிறது. நகரம் நீரில் அசைகிறது,
இருக்கும் கன்னியின் சிரசு அதன் அலகபாரம் ரத்து வினாறான பலிபீடத்தில் விரிந்து கிடக்கிறது. அவள் கூந்தல் வளர்ந்தபடியே இருந்து கட்டுக்கட்டாய் அலைய00, வெளியேறிப் போனது அவள் அரூபத்துடன். கானகங்களில் மிருகங்களின் புராதன மூச்சின
ய இருந்து கட்டுக்கட்டாய் அலையலையாய் மேல் துயில்கிறாள் கன்னி. திரும்பவும் கடலில் புகுந்து பலிபீடத்தில் தலையாகி விடுகிறார்: மனிதவம்சத்தின் ஞாபகச் சரடாக இருந்து வருகிறான். பல
(பகச சரடாக இருந்து வருகிறாள். பலிபீடத்தில் தலை பேசுகிறது. சண்பகப்பூவின் வாசம் கலந்த றெல்,
பொசம் கலந்த மெல்லிய காற்று பலிபீடத்தில் ஊன சலாடியது. காற்று எங்கிருந்து வருகிறது, கற்குகைக்குள்ளே தோன்றி அதனுள்ளே மடிகிறது போலும்.
"இம்மாதிரிக் காற்றடித்தால் சூரியோதமாகிவிட்டது என்று அர்த்தம். அஸ்தமனமாகும் போது மல்லிகையின் வாசம் வீசும்" என்றது கன்னியின் தலை.
"நீ யார்."
"மூன்று கர்ப்பகாலம் கடந்து விட்டது. எத்தனை காலம் பிரக்ஞையுடன் இருக்க இச்சைப்படுகிறேனோ அத்தனை காலமும் வாழ முடியும்.'
சிரசு மறுபடியும் பேச ஆரம்பித்தது.
"உடல் இழந்த வாழ்வு ஏற்பட்டதைக் கேட்காதே. ரகஸியம் உனக்குக் கிடைக்காது. பரம ரகஸியமாய் ஹிரண்ய கர்ப்பத்தில் சென்று ஒடுங்கிவிட்டது. இது திசைகள் அற்றுப் போன இடம். எந்த வழியாகச் சென்றாலும் ஒன்றுதான்."
பிலத்திலிருந்து எழுவதும் மறுகணம் அடியோடு மறைவதுமாகத் தெரிந்தது. பூமிக்கு அடியிலிருக்கும் எரிமலைதான் இப்படி. அக்னி கக்கும் மலையருகில் எப்படிப் படிக்கட்டும் மண்டபமும் கோவிலும் வந்தன. பூமியின் அடியில் கபாடபுரத்தின் பெருங்குமுறல் கேட்டுக் கொண்டிருந்தது. பிலத்துக்குள் சென்றான் பித்தன்.
299
ஒரே இருட்டு.
கடல் குகைகளுக்குள் மறதியில் மூழ்கிய கபாடபுர வாசிகள் தங்கள் தனிமொழியால் இசைக்கும் மகரயாழில் மறைந்த "வார்த்தை "யின் சங்கேதப் பாடலை இசைக்கிறார்கள், அவர்கள் கையிலிருந்தது மறைந்து போன சில தானியங்கள் மட்டும்தான். ஒவ்வொரு பூவைச் சேர்ந்த தானியத்திலும் ஒரு கன்னியின் தனிப்பாடலை இசைத்தார்கள், அந்த வடிவங்களைக் கேட்கக் கேட்க பல குளிர்காலங்களுக்கு கூதிர்காலத்துக்கு கோடைகளுக்கு பாலைகளின் பாதைகளுக்கு முல்லை நிலங்களுக்கு மருதநில மரங்களின் நிறங்களுக்கு சண்பகப்பாலை மரங்களின் மந்திர வயப்பட்ட குறிஞ்சிக்கு நெய்தலின் தீராத அலைகளுக்கு அவர்களது தனிப்பாடல் இழுத்துச் சென்றது. கடல் குகையின் கதக ப்பான சுவர்களில் இருந்த பெருமூச்சில் விரிந்த யாழின் நரம்புகள் தீரவே தீராமல் அ, து கொண்டே இருக்கவும் இதயத்தை அறுக்கும் சோகத்தை இசைக்கவும் மகர யாழ் கல்லில் மோதி விழுந்தது. கை தவறிவிட்ட மகர யாழ் கடலில் மூழ்கியபடியே அலைகளால் அதிர்கிறது, தானே வாசித்துக் கொண்டிருக்கும் யாழ் மூழ்கிய இனக்குழுவின் பாடலின் அடியில் மெளனித்து.
உள்போய் உள்போய் குமுறிக் குமுறிக் கதறுகிற யாழ். யாழ் அலைகள் பாறையில் மோதி அழி அழி எனக் கதறும். வானளாவிய கோபுர நிழல்களை கடல் அரிக்கிறது. கடல் மோதி மோதி கோபுரத்தைக் கொல்கிறது. கோபுரம் உருவெடுத்துப் பெருகி வளர் கிறது. கபாடபுர வீடுகளில் கறுமையான கடல், பாறைகளில் பாதம் படர்ந்து கடல்நீலமாகிவிட்ட பித்தன் எப்போதுமே கடலின்மேல் நடமாடுகிறான். கபாடபுரம் ஒளியில் லேசாய் மினுக்கும் சில ஜன நடமாட்டம் தெரிகிறது. தெருக்களில் மீண்டும் நடமாடும் அரூபமானவர்கள் கபாடபுரத்தில் இன்னமும் எஞ்சிப் போயிருக்கிறார்கள். எங்கோ மறைந்து போய் ஆள் அரவம் கேட்டு கடல்கோட்டையில் மறைகிறார்கள். என்றைக்குமான மனிதர்களுடன் பேசிப் பேசி வார்த்தை இழந்து மெளனமாய் நிற்கின்றன கபாடபுரத் தெருக்கள். சுருக்கங்களே முகமாகிப்போன மனித அரூபங்கள் படபடத்து தெருக்களை ஊடுருவி நகரும். கரும்பூமி கபாடபுரத்திலும் உண்டுதானே. அங்கே மண் கறுத்துப் பிறந்த கதைகள் கொடி சுற்றிக் கொள்ளும். சில இடிந்த கோயில்களில் சிலை செதுக்கும் சப்தம். கல்லின் வறண்ட ஊற்றை நோக்கி உளிகள் நகரும். உளிகளில் அலைகள் கோடுகோடாய் சுழலும்.
கடல்பறவை கூட்டம் கூட்டமாய் அமரும் கபாடபுர மதில்கள் கரைந்து பரந்த மணல்வெளியில் கால்வைத்து மணல் கொறிக்கும். பாழ்வெளியே சிறகு முளைத்து மணல் சிறகில் பறந்து செல்லும். அலகில் கபாடபுரத்தின் நூற்றாண்டுகளான தனிமைவாசத்திலிருந்த ஒரு மஞ்சள் தானியம்.
இரவின் இருள்வழியே உருவற்று ஊளையிட்டோடியது எட்டிப்போகும் நாரி', தொன்மக் கதைகளுக்கு ஊசியாகும் முள்ளெலிகளோடு கூட்டமாய் வருகிறான் வால்பகடை. கிளைகளிலிருந்து சுருண்டு தொங்கும் நாக சர்ப்பங்கள். நரியின் ஊளையில் புரளும் நாக சாரைகளின் காட்டுக் கலவி புறங்களில் விம்ம ஒலிபுரளும் உறுமிக்குள்
300
****
ஆயிரம் கபால வழி திறக்க குறுக்கோடும்
சாரைகளின் சீற்றம். இருளின் கால்கள்
ன கால்கள் திரியும் வேட்கையில் ஊனளயிடும் அரூப வனம். விட்டுக் கேட்கும் உருவற்ற ஊளை. மரண நடனமிடும் முள்ளெலிகளுடன் நரிகள் தெரி
தாடர வடுகாட்டில் மூதாதையின் எலும்புகள் உறுமும். ஆயிரம் கபால வழி திறக்க 94 வெருகுப்பூனை கபால வெளிச்சத்தில் விழுந்து மிதந்து மறைந்து... கலை கல்தோலையுடைய கட்டுக் கட்டான விருசம்பாம்புகள் விஷப்புகை கக்கி தம் சாவதானமாய் நெளியும், பலபல வகைகள்
" பலபல வகையில் ஒளிவிட்டுத் தவிக்கும் கல்நாகங்கள் பாய எழுத்தில் டமாரமிடும் அனல்வாக்கு சடை நாக்கில் வா வால்பகடை வருகிறது " தொலைதூர் நரியின் குரல் தேய உடனே உறுமியில் பற்றும் ஒலி தோலில் நகர்ந்து அதிர் பிரபஞ்ச கானமது நரியின் ஊளை, எழுத்தாவிகளின் இருள் கூட்டம் முன்பு எலும்புகளில் சுற்றிச் சுழல் கண்களைப் பறிக்கும் எலும்புத் துகள்கள் மணலில் சுற்றி உலகத்து ஜீவராசிகளின் எலும்புக்கூடுகள் பாதிபுதையுண்ட மொழி மணிபல்லவத்தில் மாந்திரீகப் பாத்திரத்துடன் ககனங்கள் துகளாகும் வெறியுடன் பிளந்த கோலத்தும் வெ வாலைக் கனிவு குன்றாத கன்னியுருவம். அசைவற்று நிற்கும் உருவத்தின் முகம் புன்னகை. உயிர்குடிக்கும் கொடூர உணர்ச்சிக்கும் அப்பால் வேட்கை பெருக்கெடுக்கும் இதழ் நடுக்கம். சப்த உலகங்களும் மோதுவனவாகும் பேரிடி. நீல நாயின் கண்கள். கானத்தில் நாயின் ஊளை திருகத் திருக வால்பகடை உறுமியில் திறக்கும் நீல நாயின் கண்கள். பாறை ஊசிகள் இருகூறாகப் பிளக்க முள்ளெலி முதுகுகள் குத்திட்டு அசைய மாட்டுத் தோலில் வரையப்பட்ட பறைச்சேரி நாய்க்குரைப்பே பிரபஞ்ச கானம் என்ப்.
வாலைக்கனிவு குன்றாக் கன்னியிடம் அடைபட்ட உன்னத கானம் வெளியில் படரும் நாளை வேண்டிக் கூவும் பிரலாபிப்பே என விழுந்த மெளனி காதில் உரசும் மாட்டுத்தோல் உறுமி படபடக்க ஒரே இடத்தில் பதிந்து பரவும் மிகக்கோரமான பறைச்சேரி நாய்க்குரைப்பே பிரபஞ்சகானம் வசீகரமென தோலின்மீது எழுதப்பட்ட மாந்திரீக மொழி கொலம்பியப் புதிராய் தொடர் கட்புலனுக்கு அடைபடாத பறைச்சேரி நாயின் முதுகெலும்பு வளர்ந்து வாலாக ரூபமடையும் தொன்மம். வர்ணபேதங்கள். சிற்ப செளந்தர்யங்கள். சக்திப்பிரளயம். காவல் தெய்வம். ஒரே இருட்டு. பின்தொடரும் ஞானக்குகை. சப்த நுணுக்கங்களில் சஞ்சரிக்கும் கிரியாசக்தி. மோப்பம் தொண்ணூற்று ஆறு வகை ஞானம். மனிதனைக் கடைசிவரை தொடரும் அனுபூதி என நவீனன் எழுதிக் கொண்டிருந்தான். இந்த ஊரில் மேட்டுத்தெரு என வீதி. வண்ணான்குடி கசாப்புக்கடை மனித சமூகத்தின் எச்சங்கள் தெருநாய்கள். காகாவென கத்தும் விகாரமான காகங்கள் கோடியில் நின்று பார்த்தால் மறுகோடியில் பார்ப்பனர்கள் மயானம். எட்டிய வெளி சாம்பவாய். ஒனம் தள்ளும் கோலுடன் சுடுகாட்டுத் சாம்பலில் புரண்டு நிணம் எரிய கோடி கோடி யோனி பேதங்களில் துவாரங்கள் சுருண்டு ஊளையிட அனந்த கோடி ஜீவராசிகள் பட்சி ஜாலங்களின் இரைச்சலும் ஊளையும் தொடர் வால்பகடை வருகிறான். மயானபூமி இடிபட அவாந்திர வெளியில் நெருப்பாறு பாய நட்சத்திர மண்டலங்கள் திறக்க அப்போது துக்க ஓலத்தில் வாடைக்காற்றுடன் ஊர்க்கோடியில் நாயின் ஊளை. முன்வரிகளின் சாம்பலிலிருந்து முகில்கூட்டம் புகைந்து மேலோங்க ஊளையிடுகிறான் வால்பகடை தொலைவில் வெளிச்சப் புள்ளிகளாய் நீல நாயின் கண்கள். உருவற்ற ஊளையாய் பதில்குரல் கொடுக்கின்றன நீலநாயின் கண்கள்.
-
--
301
யார் பாறையால் கீழே இழுக்கப்பட்டவனோ
யார் காலரில் சங்கிலியால் பிணைக்கப்பட்டவனோ
யார் லாயத்தில் இடம் பெற்றவனோ
என முடியும் ரோஜர் வாட்டர்ஸின் நாய்களுக்குப்பின் நீண்ட பாடல். நாயின் ஊளைச்சத்தம் உடலுறவு கொள்ள இரண்டுக்குமிடையே நடக்கும் சண்டையின் சத்தம், அடிபட்டுக் கதறும் சத்தம், இடையிடையே நாய்க்குரைப்பின் ஓசைக்கட்டை விரிய, நாயின் பன்முகக் குறியீடாய் தெருக்கோடியில் நாய்களின் ஊளைகளோடு முடிகிற பாடல், நாயின் பல்வேறு பாஷைகள் ஊடே முடிய மெல்ல பின்னே நாயொன்று கூடவே பாட மனிதக்குரல் மங்கி தனியான குரலில் நாய் ஆலாபிக்க பின்னணியிசை நாயின் ராகத்தில் பல்வேறு ஐந்துக்களும் கோபம் கொண்ட மிருகங்களும் பிரபஞ்ச இடுக்கில் ஒரே குகையுள்ள படரும் நாளை வேண்டி பிரலாபிப்பென அவளுள் ஒடுங்கிய உன்னத கீதம் இருள்வெளியில் படரும் தெரு எனவே.

4
எஸ்தஃபான் மீன்களின் பெயர்களை வெறுமனே கூப்பிட்டுக் கடலிலிருந்து மீன்களை வெளியே இழுக்கும் அளவுக்கு அதிகாரம் கொண்டவன். இந்திரஜித் வில்லில் பூட்டிய நாணைத் தோள்புரள வாங்கி பாசுபதாஸ்திரத்தை பிரயோகிக்கும் வலிமை கொண்டவன். சூலாயுதங்களையும் அக்கினியையும் விஷத்தையும் ஸர்ப்பங்களையும் நீரடி நெருப்படி மருப் சொரூபங்களை கரும்பூதங்களை பெரும் பேய்க்கூட்டங்களை உலகெலாம் நிரப்பிக் கொண்டு ஒருபுறமும் வடவாமுகாக்கினியை சூரைக்காற்றையும் சப்தசமுத்திரங்களையும் பேரிருள் மூடிவரும் வேகத்துடன் பறந்துவரும் பாசுபதாஸ்திரத்துக்கொப்பான பலம் உள்ளவன். எஸ்தஃபான் பாறை உச்சிகளில் பூஞ்செடிகளை வளர்ப்பதற்காக பாறைகளிலிருந்து நீரூற்றுகளை பீறிட்டுக் கிளம்பும்படியாக கரங்களை நிலத்தில் செலுத்தியிருக்கக் கூடியவன்.
இந்திரஜித் ஆகாயத்தில் மறைந்ததை வானர சேனை கண்டு இவன் சண்டை செய்து கொண்டே ஆகாயத்தில் மறைந்துவிட்டானே என ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
1

நீரில் மூழ்கிப் போன சில மனிதர்களுக்க மட்டுமே மரணத்திற்குப் பின்னும் வளர்ந்து கொண்டிருப்பது இயல்பாக இருக்கலாம். எஸ்தஃபோன் நீரில் வளர்ந்து கொண்டே இருப்பவன்.
302
ஆகாயத்திற்கும் பூமிக்குமாக உயர்ந்து உதயதிரியின் சிகரத்தில் உதித்தான இற?”
இந்திரஜித்.
எஸ்தஃபானிடம் கடலின் வாடை வீசியது. இந்திரஜித் புரிந்த யுத்தத்தில் "ப" "* பூமியும் உதிரத்தால் நனைந்து போகவும் உதிரமயமான சமுத்திரமாகவும் ஓங்கி வயற்ற """" எத்தப்பிரவாகத்தில் மாமிச பக்ஷணிகளாகிய பட்சிஜாலங்கள் மூழ்கி எழுந்து விடும் - மீது உட்கார்ந்து தம் சிறகுகளை உதறுவதினால் ரத்தத் துளிகள் பறந்து மலர்ந்த தா தேனுண்ண வந்த கறுத்த வண்டுகளும் செவ்வண்டுகளாய் காடுகளும் உத்தியாவா?" செந்தளிர்களைக் கொண்ட இந்திரஜித்தின் திரேகமாய் விரிந்தன செடிகள்.
மீதிருந்த செடிகொடிகள் தூரத்துக் கடல்களிலிருந்தும் மிகவும் ஆழத்திலிருந்தும் வந்தவை என்றும் அறியப்பட்டான் எஸ்தஃபான். அவன் மயிரில் சிக்கிய கடலடிக்கற்களை அகற்றினார்கள். களைக்கொத்திகளாலும் மீனைச் சுரண்டும் உபகரணங்களாலும் கடல் ஆழப் பாசிகளையும் மண்டியும் மகிளியுமாய் பாளம் பாளமான கடல் பவளங்களையும் அகற்ற முற்பட்டார்கள்.
.
கந்தர்வ ஸ்திரீகளென்ன, யக்ஷ ஸ்திரீகளென்ன, சித்த ஸ்திரீகளென்ன, ராட்சஸிகளென்ன, கிளிகள் நாகணவாய்ப் புட்களையொத்த அவன் சொந்த தேவிமார்களென்ன கறுத்த அற்றிற்பெட்டைகளான அரக்கிகளும் கும்புகும்புகளாகக் கூடி தலைமயிரை அவிழ்த்துக் கட்டி அழுதார்கள் இந்திரஜித்தின் மாபெரும் உடலைக்கண்டு.
எஸ்தஃபானுக்கு அப்பாவாக, அம்மாவாக, மாமனாக, மருமகனாக, அத்தையாக இருக்க ஓங்குதாங்கான சிறந்தமக்களைத் தேர்ந்தெடுத்தனர். தூரத்திலிருந்து பெண்களின் அழுகைச் சத்தத்தைக் கேட்ட மாலுமிகள் வழி மாறிச் சென்றனர். கடல் தேவதைகள் பற்றிய பழங்கதைகள் நினைவுக்கு வந்ததால் தன்னைப் பாய்மரத்தில் கட்டிப் போட்டுக் கொண்டே வீர புருஷன் இவனே என நினைவு வந்தது.
படரும் திசையெல்லாம் இந்திரஜித்தின் ரத்தம். அம்புகள் பதிந்த தேகத்தில் பட்சி ஹாலங்களும் தைத்திருக்க பலாயனப்பட்டு ஆகாயத்தில் பாய்ந்து உலகங்கள் கிழிபட்டுப் போகும்படி பறந்து கூக்குரலிட்டன. கறுத்த கழுகுகளின் சிறகுக் கூட்டத்துக்கு மத்தியில் ரத்தமேகம் இருப்பதாக இந்திரஜித் உருவம் கண்ட பகைவரும் நடுங்கினார்கள். இவன் கையில் பிடித்த வில் முறிய மாட்டாமல் போனாலும் இந்திரஜித் கையை அறுத்துத்தள்ள நினைத்தான் வஞ்சக லட்சுமணன். விரல்களழுந்தப் பிடித்த வில்லுடனே கூட வீர புருஷனாகிய இந்திரஜித்தின் இடது கையானது கீழே விழுந்து மரங்களும் மலைகளும் பொடியாகவும் வானர சேனை நசுங்கிப்போகவும் துடித்தது. அந்தர மார்க்கத்தில் நின்று படர்ந்து கொண்டிருந்த இவன் கையானது வீழா வில்லுடன் சூரியன் நடுங்கும்படியாகவும் சந்திரன் ஒளியும்படியாகவும் பேரும் தலை சுற்றி விழும்படியாகவும் அறுந்து விழுந்து விட்டதே.
எங்க போன் மரணத்தைப் பெருமையுடன் சந்தித்திருக்கிறான் என உணர்ந்தார்கள். கடல்பவளங்களில் மிதந்துவந்த மாபெரும் உடலானது வாடாமல் இருந்தது. பிற மம்கி இறந்தோரின் முகத்திலுள்ள துயர முகபாவமோ நதியில் மூழ்கி இறந்தவர்களிடமிருக்கும்
303
களைத்துப்போன தவிக்கும் முகமோ அவனிடமில்லை. அவர்கள் முகத்தில் கண்டதெல்லாம் மாபெரும் வீரனுடைய அழகைத்தான். இதுவரை பார்த்திராத மிக உயரமான. சக்திவாய்ந்த, வீர்யமான, வாளிப்பான உடல்கொண்ட மனிதன் மட்டுமின்றி கற்பனைக் கெட்டாதவனாகவும் இருந்தான்.
மவையைப் பேர்த்தெடுத்து வானரங்கள் மீது வீசி எமனுக்கும் எமனான இந்திரஜித் அந்தந்த அம்புகளை அந்தந்த அம்புகளாலே துண்டாக்கி விட்டு ஆகாய முழுவதையும் அட்டத்திக்குகளையும் சப்த சமுத்திரங்களையும் மூடிக் கொள்ளும்படியான யுகாந்த காலத்தில் பெய்கிற மேக வர்ஷங்களாகப் பிரவேசித்தான்.
எலும்புகளுக்குள் நடுங்கினவர் கத்தியால் மட்டுமே வெட்டக்கூடிய கல் நகங்களுடன் வெண் திமிங்கலமாய் தரை மேல் கிடந்தான் எஸ்தஃபான்.
ராவணகுமாரனுடைய வஜ்ஜிரத்தையொத்த கையானது அறுந்ததைப் பார்த்த அரக்கர்கள் எல்லாம் தங்கள் தலைகள் அறுந்ததை உணர்ந்தார்கள். வில்லுக்குள் உறங்கும் கும்பகர்ண மூச்சு இந்திரஜித் கைவிரல் பிடியில் இருந்தது உயிருடன். இந்திரஜித் உயிர் போன காலத்தில் உள்ளே இருந்த உணர்வும் இந்திரியங்களும் கொதித்துப் புரண்டு சுழலும் சீற்றத்தில் இருந்தன.
தைத்த எந்த ஆடையும் எஸ்தஃபானுக்கு சின்னதாகவே இருந்தது. அவன் இதயத்தில் மறைந்திருக்கும் சக்தி அவர்கள் அணிவித்த சட்டையின் பொத்தான்களைத் தெறித்து விழச் செய்தது.
சண்டமாருதத்தால் அடியுண்ட மேகமானது மின்னலுடன் இடியுடன் நிலத்தில் வீழ, சூரியனாகும் கண்கள், மண்டலங்கள் இடிபட பூமியில் இந்திரஜித்தின் தலை விழுந்தது வந்து. கேதஞ் சொல்லி வந்த தூதுவர்களை ஒரே வீச்சால் வாளால் வெட்டி இருபது கைகளும் அலையலையாகச் சோர்ந்து விழும்படியாய் சமுத்திரம் விழுந்ததேயாக கீழே விழுந்தான் லங்கேஸ்வரன்.
எஸ்தஃபானின் மாபெரும் தேகத்திலும் அழகிலும் மெய்மறந்துபோன பெண்கள் அவன் சாவிலும் கெளரவமாக இருப்பதற்காக தொடர்ந்து அவனுக்கு பெரியதொரு கப்பலின் பாய்த்துணியிலிருந்து கால்சட்டைகளையும் மணப்பெண்ணின் பிராபாண்ட் லினனிலிருந்து கொஞ்சம் எடுத்து சட்டையும் தயாரிக்க முடிவு செய்தார்கள். வட்டமாக உட்கார்ந்து தைத்துக்கொண்டும் தையலுக்கிடையில் பிணத்தைப் பார்த்துக்கொண்டும் இருந்தவர்களுக்கு காற்று இவ்வளவு தொடர்ந்து இதற்கு முன் எப்போதுமே அடித்ததில்லை என்றும் அந்த இரவைப் போல் கடல் அமைதியற்று இருந்தததில்லை என்றும் தோன்றியது.
கஸ்தூரிகளால் சித்திரமெழுதி உருக்கு ஸ்தம்பத்தைப் போலிருந்த இந்திரஜித் கை என்னைக் கட்டித்தழுவாமல் போனதே என்பான். மற்றொரு வாயால் ஆண்புலி போலிருந்த இந்திரஜித்தே உன்னைப் பயந்த மான்குட்டிக்கு ஒப்பானவன் வாங்குவதோ.
304
ராவணன் ரணகளத்திற்கு வந்ததைக் கண்ட மாத்திரத்தில் அங்கு பிணங்க 602 தின்பதற்கு வந்த பேய்களும் பட்சிஜாலங்களும் சினேகிதர்களாகி அழுதன. சில ராவணன் பாதத்தில் வீழ்ந்து சோகத்தில் பிடித்து அழ சில பேய்கள் துன்புற்ற மார்பிலடித்தன. சில பேய்கள் பயத்தால் யானைப்பிணங்களுக்குள்ளே புகுந்து ஒளிந்து கொண்டன. வந்த ராவணன் குதிரைப் பிணங்களையும் முகபடாமணிந்த யானைப் பிணக் கூட்டத்தையும் முறிந்து கிடக்கிற தேர்களையும் புரட்டிப் புரட்டி அக்கினியாக கொதிக்கிற மனதுடனே அதிக பலமுள்ள வெற்றி வில்லைப் பிடித்தபடியே இந்திரஜித்தின் வல்லமையான கை அறுந்து கிடக்கிறதை கண்ணால் கண்டு அக்கினிக் கண்களால் தீ கக்கும் கார்க்கோடக சர்ப்பமாய் கிடக்கிற கையை தன் சிவந்த கையால் தூக்கி தலைமேல் வைத்து ஊழிக்கால் சண்டமாருதமாகப் பெருமூச்சு விட்டான். பாண வர்ஷங்களால் மூடப்பட்டிருக்கிற இந்திரஜித் மார்பை ராவணன் கண்ணீரால் நிறைத்ததை இந்த உலகத்தில் வேறு யாரும் புத்திர சோகத்தில் இப்படி இருபது கைகளும் அலைபட அழுததில்லை என்ப.
அடிவானத்தில் தெரியும் ரோஜாக்களின் வரிசையை கப்பல் தலைவனின் தொலை நோக்கியும் திசைகாட்டியும் சுட்டிக்காண்பித்துப் பதினாலு பாஷைகளில் சொல்லக்கூடும். எங்கே இப்போது காற்று அமைதியாக உள்ளதோ, படுக்கைகளுக்கு அடியில் தூங்கிக் கொண்டிருக்கிறதோ. சூரியனின் பிரகாசத்தில் சூரியகாந்தி மலர்கள் திரும்பும் திசை தெரியாமல் இருக்கின்றனவோ அங்கே எஸ்தபானின் கிராமம் இருக்கிறது.
-
1
-
வட்டமாக விசாலித்துக் கிடக்கிற யானைப்பிணங்களே பெருங் கரையாகவும் ஒன்றின் மேலொன்றாக அடுக்கி வீழ்ந்த புஜங்களே கற்களாகக்கட்டிய மதில்களாகவும் உயிர்மாய்த்து உள்ளே கிடக்கிறான் இந்திரஜித். ராட்சஸ ஸ்திரீகளின் ரத்தம் படிந்த முகங்களே யானைத் துதிக்கைகளுக்கிடையில். இவனுடைய கையும் கிடக்க அறுந்த கை ஏவிய பாணத்தினாலே நிலப்புழுதியே தரைக்குப் பாயாகிப் புரண்டு கிடந்தன வானர சேனைப் பிணங்கள்.
ரன்களைக் குருடாக்கும் ஆழத்தில் கடலில் மூழ்குபவர்கள் ஏக்கத்தால் இறக்கும் கல் சரக்குக் கப்பலின் நங்கூரத்தை அவனுடன் சேர்த்துக் கட்ட அவர்கள் உந்தனரர்கள். இந்த மாபெரும் ஆள் இவ்வூரில் வசித்திருந்தால் அவன் வீடுதான் மிக அமரன கதவுகளையும் மிக உயரமான கூரையையும் கனமான தரையையும்
கம். எஸ்தஃபான் கட்டில் சட்டங்கள் யுத்தக் கப்பலின் சட்டங்களிலிருந்து கொண்டி செய்யப்பட்டு இரும்பு ஆணிகளால் இணைக்கப்பட்டிருக்கும்.
புறப்பட்ட வ
தேனை குடல் சரியவும் அஷ்ட குலாசங்கள் நிலைதடுமாற, பூமிகிழிந்து ., 9லம் இருள் பரவி நிற்க, ஆதிசேஷன் படம் நசுங்கிப்போக, எதிரிலுள்ள -- படபடத்து வெளிச்சம் வர, இந்திரஜித்தின் தேர் ஆகாயத்துடன் பூமியில்
- அரக்கர்கள் ஆரவாரித்தார்கள். வானர சேனை தேர்களின் திமுதிமுவென்ற வலி கேட்டு திக்குமுக்குகளில் சிதறியோட்டம் பிடித்தது.
போன் மார்பில் தொங்கிய கடல் பாசிமணிகளைத் தொட்டும் பக்கத்தில் நல்ல களத் தரும் அதிஷ்ட எலும்பை வைத்தும் மறு பக்கத்தில் ஒரு மணிக்கட்டில்
305
திசைகாட்டியை வைப்பதுமாக அதிர்ச்சியடைந்த கோழிகளாக குறுக்கும் நெடுக்கும் நடமாடினர் பெண்கள்.
கோடி கோடி குதிரையின் கூட்டமும்
ஆடல் வென்றி யரக்கர் தமாக்கையும் ஓடை யானையுந் தேரு முருட்டினான்
நாடினான்றன் மகனு டனாளெலாம்.
மெய்கிடந்த விழிவழி நீர்விழ
நெய்கிடந்த கனல்புரை நெஞ்சினான் மொய்கிடந்த சிலையொரு மூரிமாக்
கைகிடந் தது கண்டனன் கண்களால்.
பொங்குதோள்வளையும் பொழிபுட்டிலோ
டங்கதங்களு மம்பு மலங்கிட வெங்கணாகமெனப் பொலிமெய்யதை
சங்கையாலெடுத் தான் சிரஞ் சேர்த்தினான்
என கை கண்டான் ராவணன் கருங்கடல் கண்டான் மெய்கண்டான தன் மகன் இந்திரஜித்தின் அம்புமாரியமுந்திய மார்பைத் தன் கண்ணீரால் மூட. கம்பன் நிலத்தடி மேழியில் நிணச்சேற்றில் உதிரநீர் நிறைந்துவிட யுத்தகளத்தில் கிடந்த இந்திரஜித் எனும் மாபெரும் அழகனின் பிணத்தின் அருகில் பேய்களும் பயந்து யானைப்பிணங்களுக்குள் ஒளிகின்றன அழுதவாறு.
நீரில் மூழ்கிய நிகரற்ற அழகனை நங்கூரத்தில் கட்டி மலையிலிருந்து மீண்டும் கடலில் வீசியபோதும் சூரியகாந்திப் பூக்கள் திரும்பும் திசைதெரியாமல் இருக்கிற எஸ்தபானின் கிராமத்தார் இதயங்களில் கண்ணீரின் முதல் சுவடுகள் தோன்றவாரம்பித்தன. அந்த நினைவு கொண்ட மற்றவர்களும் பெருமூச்சுகளிலிருந்து புலம்பலுக்கு மாறி விசும்பல் கூடக்கூட அழவே செய்திருந்தார்கள் பெண்கள். அவ்வளவு அழுதார்கள்.
மகா அழகனான இந்திரஜித் எனும் கார்மேகம் மரணத்திலும் வீரனாக சிவ தனுசை விடாமல் விரல்கள் அழுந்த பிடித்தவாறே கிடக்கிறான் இன்னும்.
ராவணன் புத்திரசோகத்துக்குப் பக்கமாய் எஸ்தபான் கிராமத்துப் பெண் களும் கும்புகும்புகளாகக் கூடி அமுத குரல்கேட்டு மாலுமிகளும் திசைமாறிச் சென்றார்கள் எனவே,
306