Thursday 1 August 2019

பலியான கன்னியின் கூந்தல் அலையை எழுதிய கதை - Gabriel Garcia Marquez தமிழில் - நாகார்ஜுனன்

பலியான கன்னியின் கூந்தல் அலையை எழுதிய கதை - Gabriel Garcia Marquez
தமிழில் - நாகார்ஜுனன்

1949 அக்டோபர் 29. முக்கிய செய்தியென நிறையாமல் போகத் தெரிந்த நாள். பத்திரிகைக்காரத் தொழிலின் அடிப்படைகளை நான் கற்ற தாளின் பிரதம ஆசிரியர் மாஸ்ட்ரோ க்ளெமென்டெ மானுவல் ஸபாலா. வழக்கமான விஷயங்கள் இரண்டு மூன்றுடன் காலையில் முடித்துக்கொண்டார் நிருபர் யாருக்கும் இன்னதென்று செய்யத் தராமல். சில நிமிஷங்களில் ஸான்டா களாரா பழைய கன்னிகாஸ்திரீ மடத்தின் கல்லறைப்பெட்டகங்கள் காலிசெய்யப் படுவதாக ஃபோனில் வந்தது அவருக்கு. "நின்று அங்கே ஏதும் தேறுமா பாரேன்." கிடைக்கலாம் என்ற மாயமேதிலும் சிக்காமல்தான் கூறினார் என்னிடம்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஆஸ்பத்திரியாக்கப்பட்ட, சரித்திரப்பெயர் கொண்ட க்ளாரிஸ்ஸ கன்னிகாஸ்திரீகளின் மடம் விற்பனைக்காக, ஐந்து நட்சத்திர ஹோட்டல் அவ்விடத்தில் எழுப்ப, கொஞ்சம் கொஞ்சமாக விதானம் விழுந்ததில் தேவ வாக்கியம் பெறுகிற சிற்றாலயத்தின் அழகிய சந்நிதியான இடமும் பஞ்சபூதங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது நேரடியாக. இருந்தாலும் மூன்று தலைமுறையாக அருட்தந்தைகளும் பிரதம் சகோதரிகளும் பிரபலஸ்தர்களும் என புதைக்கப்பட்டு வந்தனர் மடத்தில் இன்னும். பெட்டகங்களைக் காலி செய்து தமதெனக் குடும்பத்தினராகக் கேட்போருக்கு மாற்றி, எஞ்சியதைப் பொதுக் கல்லறையில் புதைக்க ஏற்பாடு. செயலின் கொச்சைத்தனம் நான் எதிர்பாராதது. கோடாரிகளும் களைக் கொத்திகளும் கொண்டு கல்லறைகளைப் பிளந்தும் நகர்த்தும்போதே நொறுங்கிப்போகிற, துருப்பிடித்த சவப்பெட்டிகளைப் பெயர்த்தும் தூசியும் உடைக்கந்தலும் உலர்ந்துபோன தலைமுடியுமாகக் குழம்பிய கலவையிலிருந்து எலும்புகளைப் பிரித்தவாறிருந்தனர். தங்க, வெள்ளி ஆபரணங்களையும் விலை மதிப்பற்ற மணிக்கற்களையும் மீட்கும் நோக்கத்துடன் எச்சங்களைத் தூர்வாரி இடிபாடுகளைப் பிரித்தார்கள் என்பதால் இறந்தவர்களின் பிரபலஸ்தம் கூடக்கூட வேலையும் சிரமமானது.
நடுகல் ஒவ்வொன்றின் மீதான செய்தியை நோட்டுப்புத்தகத்தில் குறித்தும் எலும்புகளைக் கூறுகட்டியும் குவியல் ஒவ்வொன்றின் மீதும் பெயரெழுதிய சீட்டைப் பிரிப்ப வைத்தும் சென்றான் மேஸ்திரி. நுழைந்தவுடன் தேவாலயத்தில் நான் பார்த்தது கூரை ஓட்டைகள் ஊடே கொட்டிய அக்டோபர் மாதக் கொடூர சூரியனால் சூடாக்கப்பட்ட எலும்புகளாக அடுக்கிய நீள்வரிசைதான். விநாசமென வருஷங்கள் கழிந்ததன் அந்த பயங்கர சாட்சியம் என்னில் உண்டாக்கிய குழப்பத்தை உணர முடிகிறது அரை நூற்றாண்டுக்காலம் தாண்டி
248
இன்னும், தம் ரகஸியக் காதலியுடன் பெரு நாட்டின் ராஜாதிகாரி ஒருவரும் " மாவட்டமதன் அருட்தந்தை டான் டோரிபியோ டி கெஸரெஸ் ஒய் விாகு
அவர்களும் அன்னை ஜோஸஃபா மிராண்டா உட்பட மடத்தின் நிறைய ? சகோதரிகளும் பெட்டகங்கள் கொண்ட உத்திரங்கள் அமைப்பதில் வாழந்த' பாதியை அர்ப்பணித்த டான் க்ரிஸ்டோபல் டி எராஸோ என்ற க க பட்டதாரியும் இன்னும் பலரும் அங்கே. கஸால்டுவரோவின் இரண்டாம் பிரபு (Marquis) டான் இக்னேஷியா டி அல்ஃபாரோ ஒய் குயனாஸ் என்ற பெயர்க் கல்லால் மூடியிருந்த கல்லறையோ திறந்தபோது காலி. பிரபுவின் சீமாட்டி டோனா ஒலால்லா டி மெண்டோஸாவின் எச்சங்களோ தமக்கான பிரத்தியேகக் கல்லுடன் அடுத்த பெட்டகத்தில், அமெரிக்கக் கண்டத்தில் பிறந்த பிரபுக்கள் தமக்கென்று தயாரித்த கல்லறைகளில் அன்றி வேறில் புதைபடும் வழக்கம்
அறிந்த மேஸ்திரி இதைப் பொருட்படுத்தவில்லை.
உயரப்பீடத்தின் முன்றாம் குறுகலான பிறையில் தேவகுமாரனின் செய்திகள் வைக்கும் பக்கத்தில் இருந்தது ஆச்சரியம் எனக்கு. கோடாரியின் முதல் வெட்டில் கல் நொறுங்கியதும் உயிர்ப்ப பிரவாகமான கூந்தல் தீவிரச்செம்பு நிறத்தில் நிரம்பி வழிந்தது பெட்டகத்திலிருந்து. பிறருடன் சேர்ந்து மேஸ்திரி கூந்தலை விரிக்கும் முயற்சியில் இழுத்துப்போட நீளமாகவும் பெருகிச் செல்லவும் தோன்றியது இளம்பெண் ஒருத்தியின் கபாலத்துடன் இன்னும் பொருந்தியிருந்த இழைகள் தெரியும் கடைசிவரை. சிதறிய சிறு எலும்புகள் சில தவிர எஞ்சவில்லை ஏதும் பிறையதில். பாறையுப்பு அரித்திருந்த அலங்காரக் கல்லில் தெளிவாகத் தெரிந்தது வம்ச அடையாளமன்றி இட்ட பெயர் மட்டுமே. ஸியர்வா மரியா டி தோடோஸ் லாஸ் ஏஞ்செலஸ். தரையில் விரிப்பப் பெருகும் கூந்தல் பிரம்மாண்டமாய். அளந்தது மீட்டர் இருபத்திரண்டு, ஸென்டிமீட்டர் பதினொன்று.

மரணம் தாண்டியும் மனிதருக்கு தலைமுடி மாதம் ஸென்டிமீட்டர் ஒன்றாக வளரும். இருபத்திரண்டு மீட்டர் என்றால் வருஷம் இருநூறுக்கான சராசரி வளர்த்தியாக இருக்கலாம் தான் என்றான் உணர்வேதும் காட்டாத மேஸ்திரி. விஷயம் அத்தனை சாமான்யமானதென நினைக்கவில்லை நான். மணப் பெண்ணின் உடைரயிலாகப் பின்தொடர்ந்த கூந்தல் கொண்ட பன்னிரண்டே வயது சீமாட்டி ஒருத்தி வெறிநாய் கடித்து மரணமுற்றதையும் நிகழ்த்திய விநோதங்களுக்காக கரீபியக் கடற்கரைப்பிரதேச ஊர்களில் அவள் புனிதராகக் ொண்டாடப்பட்டதையும் சிறுவனாக இருந்த போது என்னிடம் பாட்டி சொல்லியிருந்த புராணிகம் தான் காரணம். கல்லறை அந்தச் சீமாட்டியுடையதாயிருக்கும் என்ற ஹேஷ்யம்தான் என் அன்றைய செய்தியும் இந்தப் புத்தகத்தின் மூலமும்.
தமிழில் - நாகார்ஜுனன்
E