Saturday 28 March 2015

தலைவிதி - ப கங்கைகொண்டான்










கசடதபற பிப்ரவரி 1971 - 5வது இதழ்

http://www.navinavirutcham.in/2015/03/1971-5.html


ப கங்கைகொண்டான்

தலைவிதி


நான்
ஏழை
என்பதற்கு
இன்னுமொரு
எடுத்துக்காட்டு:
எனது
தலைமயிர்கள்
இரும்புச் சரிகைகள
- வெள்ளியல்ல







ஹமார்பாரி, துமார்பாரி, நோக்ஷல்பாரி



ஐராவதம்




என் இடம், உன் இடம், நோக்ஷல்பாரி

போய் பணம் கொண்டு வா

போய் பணம் கொண்டு வா

இன்னும் ஒருநாள் என் வசமில்லை

சோறும் குழம்பும் ஆக்குவதற்குப்

போய் பணம் கொண்டு வா

போய் பணம் கொண்டு வா




வேலையற்று வெறித்து நோக்கு.

நகரத் தெருக்களில் பிரமாதங்கள்

விரைந்து போகும் ; விரைந்து வரும்




உன்னுடைய பட்டினி

குழிந்த

உன் தலையினுள் இன்னும் தொடரும்.




உன்னுடைய இதயத்தின்

இடையறா ஓசை

ஓயத் தொடங்கும்.

உன்னுடைய சாமான்

சலித்துத் தொங்கும்




அசைவற்று, பசியுடன்

அழுக்காய் இருக்கும் நீ

பிறப்பு என்ற, சாவு என்ற

இரு பெரும் எல்லைகளை

மீறத் துணிந்தாய்.

உன்னுடைய சட்டைப் பையில்

காகிதத் துண்டுகள்,

ஆணிகள்,

தீப் பெட்டி.

சிலுவையில் அறையவோ?

சிதையில் வைக்கவோ?




ஹமார்பாரி, துமார்பாரி, நோக்ஷல்பாரி








மூன்றாவது வகை


இந்தி மூலம் : டாக்டர் பச்சன்





தமிழில் : கோ.ராஜாராம்









ஒருநாள்

பயந்த நெஞ்சுடன்

அவலக் குரலுடன்,

அதனினும் அதிகமாய்த்

துளிர்த்த விழிகளுடன்

நான் சொன்னேன்:




என் கையைப் பற்றிக்கொள்

ஏனெனில்,

என் வாழ்க்கைப் பாதையின் துன்பத்தைத்

தனியாய் சகிக்க இயலாது

நீயுந்தான் யாரிடமேனும்

இதையே சொல்ல நினைத்திருப்பாய்;

தனிமைப் பாதை

உன்னையும் உறுத்தியிருக்கும்.

ஆனால், என்னைப்போல் நீ

பயந்த வார்த்தை பகர்ந்திடவில்லை;




சரி, வாழ்க்கையில்

ஏற்ற, இறக்கம் நாமும்

ஏராளம் கடந்துவந்தோம்

இருட்டு, வெளிச்சம்

புயல், மழை, வெளிச்சம்

சேர்ந்தே சகித்தோம்.

காலத்தின் நெடும் பயணத்தில்

ஒருவர் மற்றவர்க்கு

உதவியாய், துணையாய் இருந்தோம்.




ஆனால்,

தள்ளாடும் கால்களுடன்,

நானும், நீயும்

ஒருவருக்கொருவர் போதுமாயில்லை,

வேறொரு மூன்றாவது கை

எனதையும் உன்னதையும் தாங்கிட வேண்டுமென

ஒப்புக்கொள்வதில்

நாணமென்ன நமக்கு?








ஒரு தாஒ கவிதை

சோளைக் கொல்லைப் பொம்மையிடம்
இரவல் பெற்ற தொப்பியின் மேல்
மழை வலுத்துப் பெய்கிறது.


தமிழில் : ஞானக்கூத்தன்