Tuesday 24 November 2015

-Vladimir Soloviev--Nikolay Klyuev--Yakov Polonsky--Gavril Derzhavin- -Mikhail Lermontov--Nikolay Gumilev-Fedor Tyutchev---Ivan Bunin-.-Sergey Esenin--Konstantin Balmont -(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

    நமது வறிய கிராமங்கள் ஏதாயிருக்கின்றன,
    காலம் மற்றும் வெளியின் முழுமை ஏதாயிருக்கிறது?
    பிதாவின் வசம் பல மாளிகைகள் உள்ளன, ஆனால்
    அவற்றின் பெயர்கள் நாம் அறியாதனவே.


    ஆனால் வானுலகின் பேரின்பங்கள் குறித்த முன்னுணர்தல் எனக்குள்ளது,
    அன்றி வாழ்வெனப்படுவது ஒரு கனா;
    நான் மருள்-தோற்ற இன்னிழைவைத் துறக்கிறேன்
    காலத்தின் வாதையை மறுதலிக்கிறேன்.

    நலிதலும், துயருறுதலும், நசிதலும் என - நீ
    எனக்கொரு கொடிய மாலையைத் தொடுத்திருக்கிறாய்.
    வாக்களிக்கப்பட்ட புத்துயிர்ப்பு ஒருபோதும் பூமிக்கென
    எங்குமே நிறைவேற்றம் காணாது.

    -Fedor Sologub-
    (தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





    Yaazh Mozhi





    அந்தி வானில் புயல் ,
    சினந்திருக்கும் ஆழியின் பேரிரைச்சல்...........

    ஆழியின் மீதும் எண்ணங்கள் மீது புயல்-
    வதைக்கும் எண்ணிறந்த எண்ணங்கள்.


    ஆழியின் மீதும் எண்ணங்களின் மீதும் புயல் -
    எண்ணங்களின் உயர்ந்தெழும் சேர்ந்திசை -
    கரு முகிலின் பின் முகிலாய்,
    சினந்திருக்கும் ஆழியின் பேரிரைச்சல்..........

    -Afanasy Fet -
    (தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)






    மனிதத் தன்மையற்ற அவ-விதியுடன் வாதிட ஏதுள்ளது?
    என்ன போராட்டம் ?
    இவையாவும் மருள் தோற்றம்.

    ஆனால் இந்த வெளிர்-நீல அந்தியே இன்னும் என் ஆளுகையின் புலமாயிருக்கிறது.
    வானம்: கிளைகளுக்கிடையே சிவந்தும்,
    விளிம்புகள் முத்து-வர்ணம் பூண்டும் ...............
    ஒரு நைட்டிங்கேல் பறவை லில்லாக் புதரில் கானம் இசைத்திருக்க,
    ஒரு எறும்பு புல்லின் மேல் ஊர்கிறது:
    இது யாரோ ஒருவனுக்கு பயனாகும்.


    ஒருவேளை காற்றில் நான் சுவாசிப்பதிலும் கூட ஏதோவொரு பயனிருக்கவே கூடும்,
    எனது பழம்-மேலங்கியின் இடதுபுறம் சூரியாஸ்தமனத்தில் நீராடியுள்ளது ,
    அதன் வலதுபுறம் தாரகைகளில் அமிழ்கிறது.

    -Georgy Ivanov-
    (தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





    Shanmugam Subramaniam
    December 1 at 12:49am · Edited ·



    குபிட் ஸ்பெயினிற்கு அந்நியன் அல்லன்;
    இங்கவன் விருந்தினனும் அல்லன்,
    அவன் சொந்த நாட்டில் தனது உறவினர்களுடன் இருக்கிறான்;
    காஸ்டநெட் வாத்தியத்தின் இசைத்துணையாக
    ஒரு எழிலார்- நேசப்பாடலை களிப்புடன் பாடி
    ஸ்பானியனைப் போல் நடமிடுகிறான்.


    ஒரு இளம் ஸ்பானிய நங்கையின் கன்னங்களை
    அவனது கனல் செந்நிறமாக்குகிறது,
    அவளது கொங்கைகளைத் தழல் மூளச் செய்கிறது,
    அவளது ஜீவனுள்ள விழிகளைச் சுடர்த்துகிறது,
    அவளது இதழ்களை எரியூட்டுகிறது,
    மயர்டில்- தாவரமும், கசந்த-ஆரஞ்சு தருவும் அவற்றின் நறுமணத்தை காற்றலையில் ஏந்திச் செல்கையில்.

    ஆனால் நமக்கும்கூட அவன் , தன் சர்வ-வல்லமையின் கடுமையைக் காண்பித்ததில்லை,
    வடதுருவ தட்பவெட்பத்தின் மீதுள்ள அவனது
    இரக்கமிக்க ஆர்வத்தை நம்மால் காணவியலும்:
    உனது விழிகளுக்குச் சுடர்தலை அளித்தவன் அவனில்லையா,

    பவழ அதரங்களும் உனது வாயிற்கு முத்து- நிகர் பல்வரிசையும் ,
    இந்த மென்-பட்டான கேசத்தை சுருளாக்கியும் ,
    உனது -முழுமையை மந்திர வசியத்தால் உடுத்தியிருக்கிறான்?

    -Baron Anton Delvig-
    (தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)




    Shanmugam Subramaniam
    November 30 at 12:06am · Edited ·



    நீ இன்னும் உயிர்த்திருக்கிறாயா, என் மூதாட்டியே?
    நானும்கூட உயிர்த்திருக்கிறேன்.
    வாழ்த்துகள், உனக்கென் வாழ்த்துகள் ............
    அந்தச் சொல்லடங்கா அந்தி ஒளி உனது சிறு வீட்டின் மேல் பாயட்டும்.


    அதை எனக்குச் சொல்வதற்காகவே அவர்கள் எழுதுகிறார்கள்,
    ஆயினும் நீ உனது பதற்றத்தை மறைத்தாலும்,
    எப்போதும் எனக்கென நீ அத்துனை ஏக்கமுற்று
    உனது நைந்தப் பழம்-பாணி மேலங்கியை அணிந்து
    அடிக்கடி வெளியே சாலைக்கு வருகிறாய்;

    அந்த அந்தி நீல-இருண்மையில் அடிக்கடி நீ அதையே கற்பனை கொள்கிறாய்: யாரோ ஒருவன், மதுக்கூட சச்சரவில்
    ஒரு உறைவாளை எனது நெஞ்சின் கீழ் செருகியதாய்,
    நீ கற்பனைக் காட்சியுறுகிறாய்,

    அது ஒன்றுமில்லை,என் அன்பானவளே,
    உன்னை சாந்தம் செய்:
    இது தொல்லை தரும் ஒரு மனக்கற்பிதத்தின் ஆட்டம்.
    நான் அப்படியொன்றும் உறுதியான குடியன் அல்லன்,
    முதலில் உன்னை காணாது மரிக்க.

    நான் முன்பைப் போலவே அன்பானாவன்,
    எனது ஒற்றைக் கனா ஒயாத துயரிலிருந்து மீண்டு,
    நமது சிறுவீட்டிற்கு திரும்பவது.

    நமது வெண்-தோட்டம் தனது கிளைகளை இளவேனிற்கால பாணியில் விரிக்கும் தருணம், நான் வீடு திரும்புவேன்,
    ஆனால் என்னை நீ புலர்காலையில் விழிக்கச் செய்யாதே,
    எட்டு வருடங்களுக்கு முன் செய்ததைப் போல்.

    மறைந்தழிந்த கனவுகளை மீள்-விழிப்புறச் செய்யாதே,
    எது நிஜமாகவில்லையோ அதை தொந்தரவு செய்யாதே:
    வெகு-சீக்கிரமாகவே வாழ்வு என்னிடத்தில் வீழ்ந்தது
    உளச்சோர்வையும் கையறுநிலையையும் அவதியுற.

    ஜெபிக்க என்னைப் பயிற்றுவிக்காதே. அதை செய்யாதே. இறந்தகாலத்திற்கு திரும்புதல் இனியில்லை,
    நீ மட்டுமே எனது பேருதவியும் இளைப்பாறுதலும் ஆவாய்,
    நீ மட்டுமே எனது செல்லடங்கா ஒளியாவாய்.

    ஆதலால் உனது பதற்றத்தை மறப்பாய்,
    எனக்காக அத்துனை ஏக்கமுறாதே,
    உனது நைந்தப் பழம்-பாணி மேலங்கியை அணிந்து அடிக்கடி
    சாலைக்கு வராதே.

    -Sergey Esenin-
    (தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)








    Shanmugam Subramaniam
    November 29, 2014 ·

    How often do we tell our own life story?
    How often do we adjust,
    embellish, make sly cuts?

    And the longer life goes on,
    the fewer are those around to challenge our account,
    to remind us that our life is not our life,
    merely the story we have told about our life.


    Told to others,
    but—mainly—to ourselves..........

    -Julian Barnes-
    (The Sense of an Ending)




    Shanmugam Subramaniam
    November 29, 2014 ·



    The man who cannot visualize
    a horse galloping
    on a tomato is an idiot....

    -André Breton-

சிரம் முதல் பாதம்வரை தடிமனான ஃபர் மேலங்கியால் 
நின்னைப் போர்த்தியுள்ளாய்,
நிசப்தமாய் சயனிக்கிறய், சாந்தமாய் துயில்கிறாய்,
இங்கு சுடரும் காற்றில் மரித்தலின் சுவாசமில்லை,
படிகமாய்த் தெளிந்த, இவ்வெண்-மெளனத்தில்.


அல்லாது , உலைவுறா ஆழ்ந்த அசைவின்மையில்,
நின்னை நான் வீணில் நாடிவிழையவில்லை.
நினது அதே படிமத்தை அகக்கண் இன்னும் காண்கிறது,
தேவதை அரசியே, பைன் தருக்களின் மற்றும் பாறைகளின் தலைவியே!

நீ மாசில் தூய்மை, மலைகளின் அப்பாலுள்ள பனி போல்,
நீ எண்ணிலா சிந்தனைகளுடன் இருக்கிறாய்,
குளிர்கால இரவைப் போல் , நீ பிரகாசிக்கிறாய்,
வடதுருவ ஒளிதீபங்களைப் போல்-

ஓ இருண்ட ஒழுங்கின்மையின் ஒளிர்- புதல்வியே!

-Vladimir Soloviev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





பொன்னால் நெய்த செப்டம்பர் நாட்களில்
பைன்- வனங்களின் விளிம்பு தேவாலயத்தின் முன்றிலெனத் தோன்றுகிறது. பைன் மரங்கள் ஜெபிக்கின்றன, மற்றும்
உனது வெறிச்சோடிய குடிசையின் மேல் நறுமணத் தூபம் எரிகிறது.

காற்றும் , வனக்காவலனும், பழங்காலத் தடங்களைச்
சலசலக்கும் உலரிலைகளால் மூடினர்,
அலங்காரமாய் வடிவமைந்த பைன்களின் வலையை அகலவிரித்திடு,
தடித்த பிர்ச்- மரத்தின் பின்புறம் உன்னைக் கணக்-காட்சி கொள்கிறேன்


கைக்குட்டையின் ஓரத்தை நான் இனமறிவேன்,
சன்னமான சிறு குரல் , சிறிதே அசைவாடும் நடை,......
பைன் தருக்கள் இருளை, சிறைகளை, கம்பிகளினூடே மினுங்கும் தாரகைகளை, -

ஒரு கொடூர யாத்திரையில் கணீரென ஒலிக்கும் மணியைப் பற்றிக் குசுகுசுக்கின்றன,
புர்யாதின் தொடுவானம்...... உங்களுக்குச் சமாதானம் ,
பைன் -தருக்களே, நீவீர் எனையீன்ற தாய்போல்
எனது சிந்தனைகளைப் புனிதம் செய்தீர்.

செப்டம்பர் மாத நினைவு நாட்களில்
உனது மகனின் இரகசியத்தைக் கண்டறிவாய்,
யார் நேசித்து -அழிந்தாளோ அவளைப் பற்றி வானுலகிற்கும் பூவுலகிற்கும் சொல்வாய்.

-Nikolay Klyuev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

*****(புர்யாத் குடியரசு)





ஃபிடில் இசைக்கும் வில் நடுங்கிக் கொண்டிருந்தது,
விளக்குகள் தோட்டங்களில் மிளிர்ந்திருந்தன,
மக்கள் உலாவிய வண்ணமிருந்தனர்; மென்காற்று மட்டுமே கண்ணயர்ந்தது , இரவின் வான் கறுமையாயிருந்தது .

பச்சையமான குளமும் கறுமையுற்றிருந்தது
அடர்த்தியான நாணற்புதர்களில் வறிய அன்னமொன்று வாடி நலிந்திருக்க, இரவின் மோனத்தில் தன்னை மறைத்தது.


நயந்து பழக்கப்பட்டும் தனிமையார்ந்தும்,
தனது மரித்தலின் -வேதனையிலும்கூட
ஒரு ராக்கெட் காற்றினுள் பறந்துயர்ந்து நெருப்பை அவன் மேல் சிதறச் செய்ததைக் கண்டதில்லை

நீர்த் தாரையின் துள்ளலாட்டத்தையும் , அன்றி
ஓடையின் கரையோ முணுமுணுப்பையும் அவன் செவி கொள்ளவில்லை,
அவனது விழிகள் சாத்தியிருந்தன,
முகில்களின் மேல் ஒரு பறத்தலை அவன் கனவுற்றிருந்தான்:

வானின் அகண்ட விரிவின் உயர்வினுள்
தன்னை ஏந்திச் செல்லும் ஒரு பறத்தலை, -.......................
அங்கவன் எத்தகைய அகத்தூண்டலின் பாடலை இசைப்பான்!

எவைகளை மானுடனிடமிருந்து புனிதமாகவும் மறைவாகவும் தனவசம் வைத்திருந்தானோ அவை அங்கு
வெண் -அன்ன கூட்ட்த்தின், மற்றும் தன் உறவினர்களின் பாடலில் எதிர்வினையைக் காணும்.

அவன் ஒரு கணத்தில் பெருமூச்செறிவதாய் கனவுற்றான்,
அவனது சிறகுகள் படபடக்கத் துவங்கின,
தளை தகர்ந்த பாடலின் ஒலிகள் காலைப் பொழுதை அறிவிக்கும்.

ஆனால் அவனது சிறகுகள் அசையவில்லை,
அவனது உள்ளத்திருந்த பாடல் பிறழ்ந்தது,
பறத்தலை செய்ய இயலாமலும்
அவனது பாடல் புகழ்ந்து இசைக்கப் பெறாமலும் ,
அரை ஒளியில் மாய்ந்தபடி இருந்தான்.

இலைகள் சலசலத்தன, நறுங்காற்று நாணற் புதர்களிடையே கடக்கும் தருணம்,சுற்றிலும் உள்ள தோட்டங்களில் ,
விளக்குகள் மிளிர்ந்திருந்தன,
ஃபிடில் இசைக்கும் வில் நடுங்கிக் கொண்டிருந்தது.

-Yakov Polonsky-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






உயர் குன்றின் மேல் நான் துயின்றிருந்தேன் உனது குரலையும் செவி கொண்டேன்,
ஓ நைட்டிங்கேல் பறவையே. ஆழ்ந்த துயிலிலும்கூட எனது ஆன்மாவால் அதைச் செவிகொள்ள முடிகிறது-
இப்போது ஒலியதிர்கிறது , இப்போது எதிரொலிக்கிறது,
இப்போது இரங்கியழுகிறது, இப்போது என் செவிகளில் நெடும் தொலைவிலிருந்து நகைக்கிறது. மற்றும்
காலிஸ்டோவின் மெய்தழுவலில் நான் சாய்ந்து கிடந்த தருணம், பாடல்களும், பெருமூச்சுகளும் ,
அழுகையும், சீழ்கையொலியும்,
எனது இனித்த -துயிலிலும் களிப்பூட்டுகின்றன.


ஒருவேளை, நான் மரித்த பின் நீள்-சோர்விலும் , இறுதியுறா நீடித்த துயிலிலும் நான் படுத்து கிடப்பினும்,
அந்தோ, இப்போது போல் - இனி எப்போதும் என் செவிகளைச் சேராது,
ஒருவேளை மகிழ்ச்சியின் மற்றும் கிளர்ச்சியின்,
குழுப்பாடலின், நடமிடலின், சப்தங்களை நான் செவி கொள்ளாவிடினும்-
பூமியின் மீதான வாழ்வை நான்அதேபோல் துய்க்க்கூடும்,
எனது அன்பியை அவ்வப்போது இடைவிடாது முத்தமிட்டும்,
நைட்டிங்கேல் பறவையின் பாடல்களுக்கு உன்னிப்பாய் செவிமடுத்தும்.

-Gavril Derzhavin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)











Shanmugam Subramaniam
22 hrs · Edited ·



that is, in all Translation......................

The question of how to translate - should translators, like wives and husbands,
be 'faithful' or "free" ? - has continued to be controversial ever since the literal-minded Gavin Douglas rebuked Caxton for his 'counterfeit' of Virgil, and Dryden (two hundred years later) aligned himself cautiously on the others side: 'something must be lost in all Transfusion , that is, in all Translation."


-James Greene -
(Translator's Preface)
Osip Mandelstam -Selected Poems)







News Feed





Shanmugam Subramaniam
November 23 at 11:47pm ·



நள்ளிரவு வானூடே ஒரு தேவதூதன் பறந்து கொண்டிருந்தான்,
அவன் மிருதுவாய் நெகிழ்ந்து பாடினான்;
நிலவும், தாரகைகளும், குழுமிய முகில்களும் ,
அப்புனிதத் திருப்பாடலைக் கூர்ந்து செவிமடுக்கிறது.


சுவர்க்கத் தோட்டங்களின் நிழலில் தங்கும்
களங்கமில்லா ஆவிகளின் பேரின்பத்தை பாடினான்,
அவன் மகிமை நிறை ஆண்டவரைத் துதி பாடினான்,
அவனது துதிகள் மெய்யாயிருந்த்து.

தனது கரங்களில் ஒரு இளம் ஆன்மாவை ஏந்திச் சென்றான்,
விசனத்திற்கும் விழிநீருக்குமான உலகிற்கு விதிக்கப்பட்டவனாய்;
அவனது பாடலின் ஒலி தங்கியிருந்தது,
வார்த்தைளற்றிருப்பினும் உயிர்த்திருக்கிறது,
அந்த இளம் ஆன்மாவில்.

புவியில் நெடுங்காலம் அது சோர்ந்து நலிந்தது,
வியப்பார்ந்த பேரவாவினால் நிரம்பியுள்ளது,
அதன் பொருட்டு பூமியின் நீள்-சலிப்பூட்டும் பாடல்கள்
சுவர்க்கத்தின் ஒலிகளால் தம்மை மாற்றீடு செய்ய இயலாதுள்ளன.

-Mikhail Lermontov-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)












Shanmugam Subramaniam
November 23 at 1:17am · Edited ·



நம்முடன் நேசமுற்றிருக்கும் வைனும் ,
நம் நிமித்தமாய் அடுப்பிற்குள் புகும் நேர்த்தியான நன்-ரொட்டியும் ,
நாம் துய்த்து இன்புறம் நங்கையும்,
நம்மை அவள் முழுமையாய் வாதையுற வைத்த பின்னரும்
நன்றாயிருக்கிறது.


ஆனால் உயரே குளுமையுறும்
வானின்,
ரோஜா-வர்ண அஸ்தமனத்துடன் நாம் ஏது செய்ய?
எங்கு மெளனமும் நிலவுலகத்தல்லாத பேரமைதியும் நிலவுகிறதோ,அங்கு நிலைபேறுடைய கவிதைகளுடன்
நாம் ஏது செய்ய?

நின்னால் உண்ணவியலாது, அல்லது பருகவியலாது,
அல்லது அவர்களை முத்தம் செய்யவியலாது.....................
தடையின்றி கணம் சிறகடிக்கிறது,
நாம் நமது கரங்களை வலிய முறுக்குகிறோம்,
ஆனால் நாம் இன்னமும் நெருக்கமற்று பரந்தகலுகிறோம்,
குறியீட்டிலிருந்து பரந்தகல்கிறோம்.

ஒரு சிறுவனாய் மட்டுமே, தனது ஆட்டங்களை மறந்து,
இளநங்கைகள் நீராடுதலைச் சிலசமயம் கூர்ந்து நோக்கி,
புலனாகா மறைவேட்கையால் இன்னும் வதைக்கப்படுகிறான்.

முன்னொரு காலத்தைப் போன்றே வழுக்கி ஊரும் உயிரினம் ,
தனது முதுகில் உருப்பெறா சிறகுகளை உணர்கிறது,
அதீதமாய்ச் செழித்த புதர்காடுகளிலிருந்து
இயலாமையின் உணர்வுற்று ஓலமிடுகிறது-

ஆகையால் நூற்றாண்டிற்கு பின் நூற்றாண்டாக,-,
எத்துனை விரைவாக, ஓ ஆண்டவரே?--
இயற்கையின் - கலையின் வாளின் கீழ்;
நமது ஆன்மாவின் அழுகை வீறிட்டெழுகிறது,
மாம்சம் உணர்விழந்து மயங்குகிறது, அவை-
ஆறாம் அறிவின் உறுப்பைப் பிறப்பிக்கும் தருணம்.

-Nikolay Gumilev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)











Shanmugam Subramaniam
November 21 at 11:54pm · Edited ·



ஓ, இன்னும் எத்துனைக் கூடுதலான பிரியத்துடனும் குருட்டு நம்பிக்கையுடனும்
நமது தேய்ந்து தளரும் ஆண்டுகளில் நேசிக்கிறோம்...................
ஒளிவீசு, ஓ, ஒளிவீசு,
கடைசி நேசத்தவளின் பிரியாவிடை ஒளியே,
அஸ்தமனச் செவ்வான் ஒளியே!


அரை வானை நிழல் கவிந்துள்ளது,
அங்கு மட்டுமே, மேற்கு திசையில் ,
ஒரு ஒளிமினுக்கம் அலைகிறது;
துரிதப்படாதே, அந்தி ஒளியே,
நீடித்திரு ,நீடித்திரு , மந்திரவசியத்தில்.

நரம்புகளில் குருதி மெலிந்து நீர்மையாய் பாய்கிறது,
இன்னமும் நெஞ்சத்தில் மென்கனிவு தேய்வுறவில்லை...................
ஓ கடைசி நேசத்தவளே,
நீ ஆனந்தமும் விரக்தியும் இரண்டுமானவள்....

-Fedor Tyutchev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







News Feed





Shanmugam Subramaniam
November 20 at 10:50pm · Edited ·



பூக்களும், பெருவண்டுகளும், புல்லும் ,(சோளத்தின்),கதிர்களும்
நீலவானும், மதியப்பொழுதின் வெம்மையும்...........

காலம் அணுகி வரும்-
ஆண்டவர் கெட்டு- மீண்ட குமாரானை வினவுவார்:
பூமியின் மீதான உனது வாழ்வு உவந்திருந்ததா?


மேலும்; யாவையும் நான் மறப்பேன்,
புல் மற்றும் சோளக் கதிர் காடுகளின் குறுக்கே சமைந்திருக்கும்,
பாதைகள் ஒன்றையே ஞாபகமடைவேன் -மற்றும்,
(அவரது) அருளார்ந்த முழங்காலுக்கு எதிராய் அழுத்தபட்டிருக்க,
என் விழிகள் தேக்கியுள்ள உவகையின் கண்ணீருக்கு
நான் பதிலளிக்க இயலாதவனாய் இருப்பேன்.

-Ivan Bunin-.
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)











Shanmugam Subramaniam
November 20 at 1:41am · Edited ·



பொற் -தோப்பு இப்போது பிர்ச் மரங்களின் மகிழ்-மொழியில் பேசுதலை நிறுத்திவிட்ட்து,
நாரைகள், சோகமாய் சிறகடித்துக் கடக்கின்றன,
இனி எவரேனும் ஒருவர்கூட வருந்தமாட்டார்கள்.

வருந்துவதற்கென யார் உள்ளார்?
இவ்வுலகத்துள்ள ஒவ்வொரு மானுடனும் ஒருவகையில் நாடோடியாக இல்லையா?
அவன் கடந்து போகிறான், வருகை தருகிறான்,
மீண்டும் இல்லம் விட்டுத் தொலைகிறான்,
சணல்-வயல், வெளிர்நீல குளத்தின் மீதிருக்கும் அகன்ற நிலவுடன் கூடி,
தொலைவுற்று மறைந்தோர் அனைவரையும் கனவுறுகிறது.


தழைக்கா வெற்றுச் சமவெளியில் நான் தனியனாய் நிற்கிறேன்,
நாரைகளை அதிதூரம் காற்று ஏந்திச் செல்லும் தருணத்தில்,
மகிழ்வூறிய இளமையின் எண்ணங்களால் நிரம்பியுள்ளேன்,
ஆனாலும் நான் கடந்தகாலத்தின் எதை நினைத்தும் வருந்தவில்லை.

பாழுக்கு; நான் வீணிற் கழித்த ஆண்டுகளை எண்ணியும் வருந்தவில்லை,
எனது ஆன்மாவின் லில்லாக் அரும்புக்கும் வருந்தவில்லை
ரோவன் மரக்கிளைகள் தோட்ட்த்தில் தழலுற்று எரிகின்றன,
அதனால் யாரேனும் ஒருவரைக்கூட கதகதப்பூட்ட இயலவில்லை.

ரோவன்-பெரி கொத்துகள் தீக்கிரையாகாது,
நாணல் மஞ்சள் நிறமாகி நசியாது,
மரம் இலைகளை கனிவுடன் வீழ அனுமதிப்பது போன்றே,
நானும் சோகமிழையும் வார்த்தகளை வீழ அனுமதிப்பேன்.

ஒருவேளை காலம், அதைக் காற்றில் விசிறியெறிந்த பின்,
யாவற்றையும் வாரி பயனில்- குவியலாக்க வேண்டும்.......
வெறுமனே சொல், பொற் -தோப்பு இப்போது
நான் நேசிக்கும் மொழியில் பேசுதலை நிறுத்திவிட்ட்தென்று...........

-Sergey Esenin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam
November 19 at 1:38am · Edited ·



மங்கும் நாளின் அமைதியொளியில்
நெடுஞ்சாலையின் நெடுகிலும் நடையிடுகிறேன் ;
என் நெஞ்சம் பாரமடைகிறது,
என் கால்கள் உணர்விழக்கின்றன:
என் அன்பிற்கினியவளே, நீயென்னைப் பார்க்கிறாயா?


பூமியின் மீது இருளடர்கிறது மென்மேலும் வளர்ந்து இருளடர்கிறது............
நாளொளியின் இறுதிப் பிரகாசமும் பறந்துவிட்டது........
இவ்விடம்தான் நாமிருவரும் சங்கமித்து வாழ்ந்த உலகு,
என் தேவதையே ,நீயென்னைப் பார்க்கிகிறயா?

நாளைப் பிராத்தணையின்,மனத்துயரின் பொழுதாகும்,
நாளை மரித்தலின் ஆண்டு நிறைவு. என் தேவதையே,
எங்கு ஆன்மாக்கள் வசிக்குமோ அங்கிருந்து,
என் தேவதையே, நீயென்னைப் பார்க்கிறாயா?

-Fedor Tyutchev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்-)






எத்துனை அழகைத் தரித்திருக்கிறாய் நீ ,
ஓ ஆழியே! இராப் பொழுதில் இங்கு ஒளிமயமாகிறாய்,
அங்கு சாம்பல்பூத்த நீலமாய் இருண்மையாய் ....
அது நகர்கிறது, முச்சுவிடுகிறது, நிலவொளியில் பளபளக்கிறது,
உயிர்த்திருக்கும் இனங்காணா பிராணி போலுள்ளது.


அதன் எல்லையில்லா, கட்டற்ற விரிவில், ஒளி சுடர்கிறது,
அதன் அசைவில்,கர்ஜனையில், அங்கு இடி முழங்குகிறது .........
ஓ ஆழியே, மங்கலான ஒளிர்வில் நீராடியுள்ளாய்,
நீ எத்துனை அழகைத் தரித்திருக்கிறாய்
இராப் பொழுதின் தனிமைவாசத்தில்.

ஓ மீ -அலையே , ஆழியின் பேரெழுச்சியே!
யாரின் விழாநிலையை இப்பாணியில் கொண்டாடுகிறாய்?
இடிமுழங்கியும் மின்னியும் ; அலைகள் புரள்கின்றன,
உயரேயிருந்து தாரகைகள் உன்னிப்புடன் நோக்குகிறது.............

கனவில் நிற்றலைப் போல் நிற்கிறேன்,
இக்கலக்கத்திலும் ஒளிர்விலும் தொலைகிறேன்.
ஓ, எத்தகைய ஆனந்தத்துடன் அவைகளின் மந்திர-மயக்கில்,
எனது முழு ஆன்மாவையும் முழ்கடித்திருப்பேன்!

-Fedor Tyutchev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்-)


Original Incorrect.....












Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:32am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



...it occurred to me that perhaps in this city the crowd was essential to the individual; without it, he had nothing against which to scrape his anger, no echo for grief, and not the slightest proof that there were others more lonely than he. it was just a passing thought.


-Don DeLillo-
( Americana)








Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:31am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



It is so much simpler
to bury reality
than it is to dispose of dreams.........

-Don DeLillo-
( Americana)








Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:12am · Edited ·



I'm permanence.....












Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:12am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



We are as ignorant of the meaning
of the dragon
as we are
of the meaning of the universe.”


-Jorge Luis Borges-
( The Book of Imaginary Beings)












News Feed





Shanmugam Subramaniam shared his post.
November 18 at 10:11am ·




Shanmugam Subramaniam added 2 new photos.
November 18, 2014 ·



Too much has been forgotten
in the name of memory. ...

- Don DeLillo-
(Americana)










Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:10am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 · Edited ·



That night, after the movie, driving my father's car along the country roads, I began to wonder how real the landscape truly was, and how much of a dream is a dream.

-Don DeLillo-
( Americana)










Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:10am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



One must become a book
before
one can know what is inside it...........

-Don DeLillo-
(Americana)










Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:09am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



"Fellini says the right eye is for reality ,and the left eye is the fantasy eye.
Whenever you are ready,Glenn."

-Don DeLillo -
(Americana)






News Feed





Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:09am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



Any life is made up of a single moment,
the moment
in which a man finds out,
once and for all, who he is.....................


-Jorge Luis Borges-










Shanmugam Subramaniam
November 18 at 12:59am · Edited ·



இன்னிசைப் பாடலின் வனப்பில் ,
ஒரு அசையா ஆடிநிகர் மேற்பரப்பில்,
எனக்கு முன்னம் யாரும் மொழியாக் கனவுகளின்
விளிம்புக் கோடுகளை நான் கணடறிகிறேன்,
பனிப்பாளங்களின் கீழ் குத்திட்டு அடைப்பட்ட தாவரங்களாய்,


அவைகளுக்கு நான் ஆனந்தக் களிப்பின் ஆற்றலைக் கொடுத்தேன்,
அதன் ஜனித்தலுக்கு எழிலின் நேர்த்தியை அளித்தேன்,
சப்தமிட்டு ரீங்கரிக்கும் பனிபாளங்களைச் சிதறடித்தேன்,
ஒலிபெறா துதிப் பாசுரங்களைப் போல்,
அபரிமிதமாய் செழித்த தாமரைகள்,
ஆடிநிகர் நீரின் விரிவில் சுவாசிக்கிறது.

ஒலிபெறா இன்னிசைப் பாடலில்,
இப்புதிய ஆடிநிகர் மேற்பரப்பில்,
அதன் வட்ட நர்த்தனம் புத்துலகை தோற்றுவிக்கிறது,
இன்னமும் முழுமையாய் வெளிப்படாது
ஆயினும் அறிந்த உலகுடன் இணைவுற்றிருக்கிறது
பிரதிபலிக்கும் நீரின் அடியாழத்தில்....

-Konstantin Balmont -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்-)