Thursday, 8 February 2018

அழகுநிலா கவிதைகள்


அழகு நிலா கவிதைகள்

 https://www.vikatan.com/anandavikatan/2007-may-02/literature/73374.html

 
  

அ து ஒரு காலை நேரம்.
ஒளியில் என் கண்கள் மின்னின
நான் எனக்குள் ஏதோ பேசினேன்
விழியோரக் கண்ணீரைத்
துடைத்தாய் நீ
அது மேலும் பெருகி வழிந்தது
நடுங்கும் விரல்களை அழுத்தி
பாதங்களில் முத்தமிட்டாய்.
உடல் அணைத்து உயிர் இளக்கி
தாமரைகளாய்ப் பூக்கச் செய்தாய்
என் காதோரம்.
உனது சொற்கள் அலைகளாய்
என் இமைகளைத் தழுவ
கேசம் அவிழ்த்து மேகம் சூழ
மழை பெய்தது என் சுவாசம் நனைய.
இப்போது அங்கு யாருமே இல்லை
நீயும் நானும்கூட!

 

காளிக்குத் துணை இல்லை.
அங்கம் நோகக் கூடிக் களித்து
நூறாயிரம் கரு சுமந்தாயிற்று.
தசை கிழிய உதிரஞ் சொட்டி
காளியின் கதறல் ஓய்ந்தபாடில்லை.
காளி பாவம்
ஏதுமறியாதவள்.
எல்லாம் புரிந்தும் எதுவும் புரிவதில்லை
யாருக்கும்; காளிக்கும்.
மல்லிகை மணம் தோட்டம் முழுக்க.
இது பூமி என்பது மட்டும் தெளிவு.
மீண்டும் அடிவயிற்றில் கரு நெளிய
கையேந்தும் குருடனுக்குத்

 
 
 

 

தாமரையைத் தருகிறாள் காளி.
கனவில் பாதம் நோக்கிக்
கரையதுங்குகின்றன
சங்குகள்.
மேயவும் மனமற்று
உறங்கவும் வழியற்று
காலமெல்லாம் காமதேனு
தன்னிந்தனியதாய்!

 

மேகங்கள் சூழ
மரங்களின் நடுவே வீடு.
நள்ளிரவில் விளக்கெரிகிறது.
வீட்டிற்குள் யாராகவும் இருக்கலாம்.
படபடக்கிறது இதயம்.
அது யாருடையதாகவும் இருக்கலாம்.
சிவனோ சக்தியோ திறக்கப்போவது.
கதவைத் தட்டுவோம்.
கை நம்முடையது.
எலும்பும் நரம்பும் புதிரானவை.
பயணத்தில் பாதி இது.
கண் விழித்தபோது ஆடுகளத்தின்
நடுவில் நின்றுகொண்டிருந்தோம்.
மகா விளையாட்டு
விதிகள் புரியாது.
தண்டனைகள் ஏராளம்
பரிசுகளும் ஏராளம்.
சாம்பலை அள்ளி எல்லைக் கோடு.
ஆட்டத்திற்கு முடிவேயில்லை.
கதவைத் தட்டுவதும் திரும்பிச் செல்வதும்
அவரவர் விருப்பம்!



 
 அழகுநிலா

இளம் பெண் கவிஞர்களில் வித்தியாசமானவர் அழகுநிலா. தனிமையும் அமைதியும் சூழ்ந்த தியான மண்டபக் காட்சி போல் இருக்கின்றன இவரின் கவிதைகள்.

‘‘நீங்கள் பேசும் மொழியையே என் கவிதைகளும் பேசுகின்றன’’ எனும் அழகுநிலா, மூன்று கவிதைத் தொகுதிகளுக்குச் சொந்தக்காரர். புதுவை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாகப் பணிபுரிகிறார். எழுத்தாளர் அழகாபுரி அழகப்பனின் பேத்தி. கணவர் ரமேஷ், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர்!

************************
https://rammalar.wordpress.com/2008/08/10அழகு-நிலா-கவிதைகள்/

குழந்தைகள் விளையாடும்போது
நாம் உறங்கிக் கொண்டிருக்கிறோம்



பருந்துகளும் பட்டங்களும்
நிறைந்த வானில்
சூடேறிக் கொண்டிருக்கிறது
காற்று.



நிலம் அதிர்ந்த இடங்களில்

தார்ச்சாலைகள் பிளந்துகிடக்க

வெளிச்சத்தில் பழகிய வார்த்தைகள்

மறந்து

விரல்களைக்

கோத்துக் கொள்கிறோம்.



எப்போதும் போலவே

பாதி இருளில் பூமி.



மேற்குப் பார்த்த எனது வீட்டின்

சாவித்துவாரம் தேடியலைகிறது

மாலை வெளியில்.



அறைகளில் நிரம்பிக்கிடக்கும்

வெறுமையைச் சுவர்களும்

கதவுகளுமாய்க் கூறு போட,



ஊரே உறங்கும் இந்த நேரத்தில்

புத்தரின் குரலைப் போல இருக்கிறது

ஜன்னலுக்கு வெளியே பூனையின் முனகல்.



நீ என்னைச் சபிக்கத்

தொடங்கியபோது

உன்னை மட்டுமல்ல

என்னையும் கடந்து

சென்றிருந்தேன் நான்.



திட்டமிட்ட நமது சந்திப்பில்

வாதப் பிரதிவாதங்களுக்குப்

பிறகு மீண்டும்

நண்பர்களாகவோ

அல்லது எதிரிகளாகவோ

பிரிந்து செல்கிறோம்



இவற்றிற்கிடையே

கதை சொல்லிகளிடம்

போய்ச் சேர்ந்திருக்கும்

நம்மைப்பற்றி அவர்கள்

சொல்ல விரும்பிய கதை.



ஒளிந்துகொண்டு தேடவைத்தார்கள்

விளையாடக் கொடுத்ததை

காலால் நசுக்கினார்கள்

உணவூட்டும்போது கடித்தார்கள்



பூக்களைப் பிய்த்துப் போட்டு

அவர்களே அழுதார்கள்

பூச்சாண்டிக்குப் பயந்து

வளர்ந்தார்கள்.



அதற்குப் பிறகான

நாட்களில்…

பிறகு அவர்கள்

பெரிய பெரிய பதவிகளில்

பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.



யாருக்குப் புரிந்திருக்கும்

வாழ்ந்தேயாக வேண்டியதன் அவசியம்.

முடிக்கப்படாமலிருக்கும் இந்தக்

கடிதம்

முடிக்க முடியாமல் இருக்கிறது

வாழ்க்கையைப் போல



துகள் கூடித் தசை நெளிய

இதழ் குவித்து இலை தின்னும் புழுவாய்

வலி தாங்கி நரை கூடி

முளைவிட்டு நீர் தேடி வேரலைய

நிலமதிரப் பாய்ந்து நகங்கீறி என்

பெண்மை நாணி கூனிக் குறுக

பால் கசியும் பெருங் கடல்

விலங்கின் மார்பு



நன்றி: குமரன் பதிப்பகம்,

3, முத்துகிருஷ்ணன் தெரு, தி.நகர்,

சென்னை – 600 017.

Source: http://www.tamilonline.com/thendral/CatContent.aspx?id=88&cid=34&aid=4734

பிப்ரவரி07
எழுத்தாளர்: அழகுநிலா பிரிவு: பிப்ரவரி07 வெளியிடப்பட்டது: 13 மே 2010
அழகுநிலா கவிதைகள்
 http://keetru.com/index.php/2010-05-13-05-51-46/07/8599-2010-05-13-11-32-50


மாய வித்தைக்காரன்
நம் கண்ணெதிரே ஒவ்வொன்றாக
மறைய வைக்கிறான்
எங்கே என்று கேட்கச் சொல்லி
புருவம் உயர்த்துகிறான்
நாம் கேட்கிறோம்
எங்கே? எல்லாமும் எங்கே?
மேகமும் நாமும் உருவானது
பழங்கதை
வெள்ளை வெயிலில்நாரும் இலையும் தேடியலைகிறது
மஞ்சள் குருவி

கடுகு விதையாய்
உள்நாக்கில் கசந்து
தடம் புரண்ட இரயிலாகி
கனவு மிருகமாய்
குழந்தையை மிரட்டும்
கடவுளின் ஆவி

அகலத் திறந்த ஆகாயத்தில்
சுற்றுப்பாதை விலகாத
மணல்மேட்டில்
குரைத்துக் குரைத்துச் சாகிறது
வெறிநாய்

வேரில் நீர் தேடி மலரில்
மணம் தேக்கி
உலோகத்தில் இறுகி,
காகிதத்தில் உலர்ந்து
காற்றாய் சுவாசம் நிறைத்து
கழுத்தில் உச்சந்தலையில்
உதிரம் பாய்ந்து
உள்ளே நுரையீரல்
வெளியே விரல்களென
உடல் அசையும்

பிறகு நான் மனிதர்களிடம்
பேசத் தொடங்கினேன்
‘‘ஒருவேளை நீங்கள் என்னைப்
பெற்றெடுத்திருக்கலாம். ஆனால்
நான் ஆகாயத்தின் மகள்.”
அவர்கள் என்னிடம் சொன்னார்கள்
‘‘ஒருவேளை நாங்கள் உன்னைப்
பெற்றெடுத்திருக்கலாம். ஆனால்
நாங்களும் ஆகாயத்தின் மக்களே”

நமது நம்பிக்கை ஆதாரபூர்வமானது
நமது சந்தேகம் நியாயமானது
உறுதியாக நம்புகிறோம்
ஆழமாகச் சந்தேகிக்கிறோம்
பறவையின் இந்த எச்சத்தை
இந்த விடியலை இந்த
உறக்கத்தை

ஆழ்கடலின் தரை மணலில்
கோரப்பல் வெண்சுறா விழி பிதுங்கி
புரண்டு நெளிந்து குட்டி ஈன
பாறையிடுக்கில் பதுங்கும் பாம்பென
உடல் நழுவிக் கொடி அறுந்து
அறையில் அமைதியாகத் தூங்குகிறது
குழந்தை

பிரிக்கப்பட்ட கடிதமாய்
கம்பியில் உலரும் பட்டுத் துணியாய்
பெருநகரின் மேம்பாலமாய்
உலக அழகியின் உதட்டுச் சாயமாய்
நாயின் கழுத்துச் சங்கிலியாய்
இறந்த உடலின் நுரையீரலாய்
கைமீறிப் போயிருக்கிறது காரியம்.

தூர்ந்துபோன கிணற்றில்
எட்டிப் பார்க்க என்ன இருக்கிறது.
பாம்பும் பாம்பாட்டியும்
செத்தொழிந்துவிட்டனர்
பட்ட மரத்தின் கிளைகளில்
பழங்களைத் தேடுகிறது அணில்
நம்மால் அழவும் முடியவில்லை
சிரிக்கவும் முடியவில்லை
நாம் சொல்லாவிட்டாலென்ன
கோடு போட்டது புலியென்றும்
புள்ளி போட்டது சிறுத்தையென்றும்
நம் குழந்தைகள் தாமாகவே
தெரிந்துகொள்வார்கள்.




Monday, 15 January 2018

பிலிப்பு - அ.எக்பர்ட் சச்சிதானந்தம்

http://www.valaitamil.com/phillipu_9285.html


- அ.எக்பர்ட் சச்சிதானந்தம்


பிலிப்பு

குடிசைக்குள் மயான அமைதி. கட்டிலில் வதங்கிய செடியாகப் படுத்திருக்கும் பிலிப்புவின் வெறிச்சோடிய பார்வை. படுக்கைக்கு முன் நான் மட்டும் தனியாக நாற்காலியில். பக்கவாதக் கணவனை விட்டுவிட்டு எங்குதான் போயிருப்பாள் வேதம் ? மணி ஐந்து.
வேதத்தை இரண்டாந்தாரமாக பிலிப்பு கல்யாணம் செய்துகொண்டபோதுதான் நான் கடைசியாக இந்தக் குடிசைக்கு வந்தது.
'பிலிப்பண்ணே.. ' ஐந்தாவது முறையாகக் கூப்பிடுகிறேன். பார்வையில் உணர்ச்சியற்ற லேசான அசைவு. அவ்வளவுதான்.
பளிச்சென்ற சுத்தமான தரை. பினாயிலின் மெலிதான நெடி. பக்கவாத நோயாளியின் வீடு என்று நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. பிலிப்புவின் வார்ட்பாய் அனுபவத்தை நன்றாகத்தான் கற்று வைத்திருக்கிறாள் வேதம்.
நேற்று சென்னை வந்த வில்சன்ராஜ் சொல்லவில்லையென்றால் எனக்குத் தெரியாமலேயே போயிருக்கும். பத்து வருடங்களுக்கு முன் மிஷன் ஆஸ்பத்திரியில் எறும்பின் சுறுசுறுப்புடன் வேலை பார்த்த மனிதன் இன்று இப்படி அசைவற்ற ஜடமாக...
ஜன்னலுக்கு மேலே நிறைய போட்டோக்கள். நானும் பிலிப்புவும் சேர்ந்து நிற்கும் போட்டோ ஒன்று. பிலிப்புவுக்கு என் மீது அலாதியான அன்பு.
மிஷன் பள்ளியில் முப்பது வருஷத்துக்கு மேல் வாத்தியாராக இருந்த என் அப்பாவின் பெயர் பிஷப்பிடம் எந்த உணர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், பிலிப்பு பற்றி தயக்கத்துடன் சொன்னதும், பிஷப் முகத்தில் பிரகாசத்துடன், 'பிலிப்பு சிபாரிசு பண்ணி இருக்கானா ? அப்போ வேலை கொடுத்துத்தான் ஆகணும். இல்லைனா அவன் கிராமத்துக்கு நான் வரமுடியாது. கறுப்புக்கொடி காட்டினாலும் காட்டுவான் ' என்றார் பலத்த சிரிப்புடன்.
நிறைய குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் தாத்தாவாக பிலிப்பு இருக்கும் போட்டோ. ஒவ்வொரு வருடமும் சான்டா கிளாச் வேஷத்துக்காக பஞ்சு, வேஷ்டிகளை உள்ளே திணித்து ஒரு பிரமாண்ட உருவகமாக சிவப்பு கவுனும் வெள்ளைத் தாடி முடியுமாக வயிற்றை ஆட்டிக்கொண்டு பிலிப்பு பண்ணும் சேட்டைகள் யாரைத்தான் சிரிக்க வைக்காமல் இருந்தது '
கிறிஸ்துமஸ் தாத்தா என்றாலே நினைவுக்கு வருவது ராபின் டாக்டர்தான். சென்னையிலிருந்து கிறிஸ்துமஸ் பரிசுகள் மட்டும் வாங்குவதை விட்டுவிட்டு ராபின் தன் வேலூர் வீட்டுக்கும் சேர்த்து ஆஸ்பத்திரி பணத்தில் பெயிண்ட் டப்பாக்கள் வாங்கணுமா ? யார்தான் எதிர்பார்த்திருக்கமுடியும், அர்த்த ராத்திரியில் வேனைவிட்டு இறங்கியவர்களை பளிச் பளிச்சென்று சான்டா கிளாஸ் வேடத்தில் பிலிப்பு போட்டோ எடுத்துவிடுவான் என்று ? ஸ்காட்லாந்து மிஷனரி கொடுத்த காமிரா, பிலிப்புக்கு இப்படித்தான் நிறையப் பயன்பட்டிருக்கிறது. இரண்டு கைகளிலும் பெயிண்ட் டின்களுடன் மிரளமிரள போட்டோவில் முழித்துக் கொண்டிருந்த ராபினை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.
மறுநாள் பிஷப்புக்கு பிலிப்பு எழுதிய நீண்ட மனு, அதனைத் தொடர்ந்த விசாரணைக் கமிஷன், சஸ்பென்ஷன் எல்லாம் ஆஸ்பத்திரியை ஒரு எமர்ஜென்சி பிடிக்குள் கொண்டுவந்து என்றுதான் சொல்ல வேண்டும். யோசிக்கையில் இந்தச் சம்பவம் வேறு துறை திருட்டுக்களையும் கட்டுப்படுத்தியது.
பிலிப்பு இரவில் தூங்குவது உண்டோ என்னவோ ? 'ரஞ்சிதமா லஞ்சிதமா ' என்ற தலைப்பில் ரஞ்சிதம் நர்ஸ் டிஸ்சார்ஜ் பேஷண்டிடம் காசு பறிப்பதைக் கண்டித்து, கழுத்து முழுக்க பணமாலையுடம் படம் வரைந்து நோட்டாஸ் ஒட்டியது இரவில்தான். 'ரேடியோகிராபர் ஜொள்ராஜ், வீட்டில் படுக்காமல் ஸ்பெஷல் ரூம் ஐந்தில் வாட் இஸ் டூயிங் ? ' என்று பிலிப்பு அறிவிக்க, குவார்ட்டர்ஸிலிருந்து ஓடி வந்த ஜேக்கப்ராஜ் மனைவி, தன் கணவனைக் கையும் களவுமாக வேறு ஒரு பெண்ணுடன் பிடித்ததும் ஒரு இரவில்தான்.
'ஹாரர் ஆஃப் ட்ராகுலா ' என்ற பெயர் தன் பரட்டைத் தலைக்கும் பெரிய எத்துப் பற்களுக்கும் மொச்சைக் கொட்டைக் கண்களுக்கும் இரவில் திரியும் தன் சுபாவத்துக்கும் பொருத்தமான பெயர்தான் என்று பிலிப்பு சுயவிமரிசனம் செய்து கொள்வதுண்டு.
எழுபத்தோரு வயதில் இப்போது முடி முற்றிலும் நரைத்துவிட்டிருக்கிறது. பற்கள் காணாமல் போய் குழிவிழுந்த கன்னங்கள். உடல் சதையெல்லாம் கரைந்து விட்டிருக்கிறது. இடது கை- கால், வலதுபுறத்தைவிட வெகுவாக மெலிந்த நிலையில் ' கண்கள் மூடியிருக்கின்றன, தூக்கமா ?
தன்னை எல்லோரும் மாமா, அண்ணன், தாத்தா என்று உறவு சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்பது பிலிப்புவின் ஆசை... அதுவும் குழந்தைகள் வார்டில் உள்ள பிள்ளைகள். டியூட்டி இல்லாதபோது பிலிப்பு அதிகமாக வலம் வருவது குழந்தைகள் வார்டில்தான். 'பிலிப்பு மாமா ' என்று ஏதாவது ஒரு குழந்தை பிலிப்பு முதுகில் தொங்கிக் கொண்டிருக்கும்.
ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களில் பலர் பிலிப்புவைத் தேடியதற்குக் காரணம் இருக்கிறது. அவுட் பேஷண்ட்டாக வருபவர்களுக்கு பழைய ஃபைலை உடனே தேடித் தருவது, டாக்டரிடம் அறிமுகப்படுத்துவது, மருந்து வாங்கித்தந்து பிரிஸ்கிரிப்ஷனுக்கு விளக்கம் தருவது இத்யாதி இத்யாதி. இன்பேஷண்ட்டுகளுக்குப் படுக்கை தருவது, டிபன் வாங்கித் தருவது, டாக்டர், நர்ஸ்களிடம் தனக்கு வேண்டப்பட்டவர் என்று சிபாரிசி செய்வது, ஏழையாக இருந்தால் டிஸ்சார்ஜ் ஆகும்போது ஃபீஸில், சலுகை வாங்கித் தருவது... இப்படி இருந்தால் ஏன் தேடி வரமாட்டார்கள் ?
மணி ஐந்து முப்பதிரண்டு. வேதத்தை இன்னும் காணவில்லை. பிலிப்பின் கண்கள் மூடியேதான் இருக்கின்றன. லில்லி அக்காவுடன் கூடிய கல்யாண போட்டோ பழுப்பேறிக் கிடக்கிறது. ஆஸ்துமா, சளி என்று நித்தம் நோக்காடுதான் அக்காவுக்கு.
என் கல்யாணத்துக்குப் பிறகு ஒரு மாதத்தில் லில்லியக்கா இறந்து போனது. குழந்தைகளே இல்லாமல் போனது அவர்களின் மிகப்பெரிய சோகம்.
இறந்த தகவல் வந்தபோது பிலிப்பு புதிதாக எழும்பிக் கொண்டிருந்த ஐ.சி.யூ. கட்டடத்தருகே, செங்கற்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது. மாரடைப்பு வந்த சிலர் ஆஸ்பத்திரியில் போதிய வசதியின்றி இறந்து போனதால், ஆயிரம் பேரின் கையெழுத்துடன் ஆஸ்பிட்டல் போர்டுக்கு பிலிப்பு கொடுத்த மனுவால் இந்தக் கட்டடம் உருவாகியது. லில்லியக்கா இறந்த செய்தி கிடைத்ததும், கையிலிருந்த செங்கற்களை மேலே நின்ற மேஸ்திரியிடம் கொடுத்துவிட்டு, வெகு நிதானமாகத் தன் சைக்கிளை வெளியே உருட்டிச் சென்று ஏறிய பிலிப்பு, பக்கத்தில் வந்துகொண்டிருந்த என்னைக் கவனிக்கவே இல்லை. லில்லியக்காவின் உடலருகே உட்கார்ந்தபோதும் ஆழ்ந்த மெளனம்தான். நாங்கள் ஆறுதல் கூறியபோது பிலிப்பு சொன்ன ஒரே வாக்கியம் 'கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் '.
லில்லியக்கா இறந்த அன்று மட்டும்தான் பிலிப்பு லீவ் போட்டது. ஜெபக் கூட்டம் கூட ஒரு மாலை நேரத்தில்தான் நடந்தது. ஒரு வருடத்துக்கு ஆஸ்பத்திரி காரியங்களில் தன்னை முற்றிலுமாக மூழ்கடித்துக் கொண்ட பிலிப்புவாகத்தான் பார்க்க முடிந்தது. ஐ.சி.யூ. கட்டடத்தைத் திறந்து வைத்த பிஷப் சொன்னது நன்றாக நினைவிருக்கிறது. 'இந்த ஆஸ்பத்திரியை ஒரு சிறுவனைப் போல தன் முதுகில் சுமக்கும் பிலிப்பை பாராட்டுகிறேன். ஆஸ்பத்திரியின் வெற்றி நடைக்கு பிலிப்பு ஒரு முக்கிய காரணம். '
இன்னும்நினைவில் இருக்கிறது- வேதம் கழுத்தில் ரத்தம் வழிய வழிய அழுகின்ற தன் இரண்டு மகள்களுடன் ஆஸ்பத்திரிக்கு ஓடிவந்தது. பிலிப்புவின் தூண்டுதலால்தான் அவளுக்கு முதலுதவி செய்யப்பட்டது. போலீஸ், கேஸ் என்று எம்.எஸ் பயந்ததால், தன் வீட்டுக்கே அவளை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தபோது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
வேதத்துக்கு குண்டூர் பக்கம் என்றும், அவள் கணவன் அவளை இங்கு அழைத்து வந்து குடிவைத்திருந்தான் என்றும், இரண்டு குழந்தைகள் பெற்ற பின்தான் அவனுக்கு ஏற்கெனவே மனைவி, பிள்ளைகள் இருக்கும் விஷயம் தனக்குத் தெரியவந்தது என்றும் பிலிப்பிடம் சொல்லி அழுதிருக்கிறாள். இதில் முளைத்த சண்டை அவளைக் கொல்ல முயற்சிக்கும் அளவுக்குப் போயிருக்கிறது. பிலிப்புவும் நானும் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் அவனோடு தான் வாழமுடியாது என்று மறுத்துவிட்டாள் வேதம்.
அப்போதே கவனித்தேன். வேதத்தின் மகள்கள் பிலிப்போடுதான் எப்போதும் நெருக்கமாக இருந்தனர். டியூட்டி முடிந்ததும் உடனே சைக்கிளை எடுத்துக் கொண்டு ஐயர் கடையில் பலகாரம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு விரையும் புதிய மனிதனாகப் பார்த்தேன்.
எம்.எஸ். கோயில் பிள்ளை, போதகர் மற்றும் என் முன்னிலையில் பிலிப்பு - வேதம் திருமணம் நடந்தது. வேதத்துக்கு அப்போது முப்பது, முப்பத்திரண்டு வயதுதான் இருக்கும்.
பிலிப்பு ரிட்டயர் ஆனபோது எடுத்த குரூப் போட்டோ இருக்கிறது. கால்மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருக்கும் பிலிப். எங்கள் வாயெல்லாம் சிரிப்பு. 'ஆஸ்பத்திரிய என் கண்போல உங்க கைல ஒப்படைக்கிறேன்மா ? ஸி இட் குட் ' சிரிக்காதவர்கள் கூட பிலிப்புவின் ஜோக்குக்கு சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள் போட்டோவில்.
ரிட்டயர் ஆனபிறகும் வார்ட்பாய் உத்தியோகம் ஜோசப் கிளினிக்கில் தொடர்ந்தது. இரண்டு பெண்களையும் சென்னையில் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் சேர்த்துவிட்டதை பெருமிதமாக என்னிடம் சொன்னபோது, பிலிப்பு அண்ணன் தன் சொந்தப் பிள்ளைகள் இருந்தால்கூட இவ்வளவு பெருமையாகப் பேசியிருக்க மாட்டார் என்று தோன்றியது.
லீவுக்கு வரும்போதெல்லாம் போட்டோ எடுக்கும் வழக்கம் இருக்கும்போல. நிறைய போட்டோக்கள். விதவிதமான போஸ்களில் இரண்டு மகள்களும், மாநிறமானாலும் நல்ல லட்சணம்தான் அம்மாவைப் போல '
இரண்டாவது பெண் கார் விபத்தில் இறந்துவிட்டாள். அதற்குப் பிறகுதான் பிலிப்புவுக்கு இந்த நிலை. முதல் பெண் நர்ஸிங் படிக்கிறாள் என்று வில்சன் சொன்னபோது சந்தோஷமாக இருந்தது. ஆனால், அவளும் பிலிப்புவைப் பார்க்க வருவதே இல்லை என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
நான் சென்னைக்கு மாற்றலாகிப் போனபின் இங்கு வருவது நின்று போனது துரதிருஷ்டம்தான். கிறிஸ்துமஸ் கிரீட்டிங்ஸ் போட்டுக் கொண்டோம். அதிலும் ஏதாவது ஒரு கிண்டல் வார்த்தை இருக்கும்.
மணி ஆறு பத்து. கிளம்ப வேண்டியதுதான். 'பிலிப்பண்ணே ' என்று அழைத்தேன். தலை மெதுவாக என் பக்கம் திரும்புகிறது. கண்களில் என்ன நீரா ? 'போய் வறேண்ணே ' என்றேன். பிலிப்புவின் வலதுகரம் கட்டிலுக்கு வெளியே வந்து விழுகிறது. உள்ளங்கை திறக்கிறது. நான் கை கொடுக்கிறேன். பிலிப்புவின் ஒரு விரல் என் உள்ளங்கையை மிருதுவாகத் தடவுகிறது.
பிலிப்புவின் தலை ஜன்னல் பக்கம் மீண்டும் திரும்புகிறது. வேதம் மெயின் ரோட்டில் ஒரு சைக்கிளின் கேரியரிலிருந்து கீழிறிங்குகிறாள் காலை ஊன்றியபடி. ஆஜானுபாகுவாக ஒருவன் அவளருகில்.
குடிசைக்குள் மயான அமைதி. கட்டிலில் வதங்கிய செடியாகப் படுத்திருக்கும் பிலிப்புவின் வெறிச்சோடிய பார்வை. படுக்கைக்கு முன் நான் மட்டும் தனியாக நாற்காலியில். பக்கவாதக் கணவனை விட்டுவிட்டு எங்குதான் போயிருப்பாள் வேதம் ? மணி ஐந்து.

வேதத்தை இரண்டாந்தாரமாக பிலிப்பு கல்யாணம் செய்துகொண்டபோதுதான் நான் கடைசியாக இந்தக் குடிசைக்கு வந்தது.

'பிலிப்பண்ணே.. ' ஐந்தாவது முறையாகக் கூப்பிடுகிறேன். பார்வையில் உணர்ச்சியற்ற லேசான அசைவு. அவ்வளவுதான்.

பளிச்சென்ற சுத்தமான தரை. பினாயிலின் மெலிதான நெடி. பக்கவாத நோயாளியின் வீடு என்று நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. பிலிப்புவின் வார்ட்பாய் அனுபவத்தை நன்றாகத்தான் கற்று வைத்திருக்கிறாள் வேதம்.

நேற்று சென்னை வந்த வில்சன்ராஜ் சொல்லவில்லையென்றால் எனக்குத் தெரியாமலேயே போயிருக்கும். பத்து வருடங்களுக்கு முன் மிஷன் ஆஸ்பத்திரியில் எறும்பின் சுறுசுறுப்புடன் வேலை பார்த்த மனிதன் இன்று இப்படி அசைவற்ற ஜடமாக...

ஜன்னலுக்கு மேலே நிறைய போட்டோக்கள். நானும் பிலிப்புவும் சேர்ந்து நிற்கும் போட்டோ ஒன்று. பிலிப்புவுக்கு என் மீது அலாதியான அன்பு.

மிஷன் பள்ளியில் முப்பது வருஷத்துக்கு மேல் வாத்தியாராக இருந்த என் அப்பாவின் பெயர் பிஷப்பிடம் எந்த உணர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், பிலிப்பு பற்றி தயக்கத்துடன் சொன்னதும், பிஷப் முகத்தில் பிரகாசத்துடன், 'பிலிப்பு சிபாரிசு பண்ணி இருக்கானா ? அப்போ வேலை கொடுத்துத்தான் ஆகணும். இல்லைனா அவன் கிராமத்துக்கு நான் வரமுடியாது. கறுப்புக்கொடி காட்டினாலும் காட்டுவான் ' என்றார் பலத்த சிரிப்புடன்.

நிறைய குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் தாத்தாவாக பிலிப்பு இருக்கும் போட்டோ. ஒவ்வொரு வருடமும் சான்டா கிளாச் வேஷத்துக்காக பஞ்சு, வேஷ்டிகளை உள்ளே திணித்து ஒரு பிரமாண்ட உருவகமாக சிவப்பு கவுனும் வெள்ளைத் தாடி முடியுமாக வயிற்றை ஆட்டிக்கொண்டு பிலிப்பு பண்ணும் சேட்டைகள் யாரைத்தான் சிரிக்க வைக்காமல் இருந்தது '

கிறிஸ்துமஸ் தாத்தா என்றாலே நினைவுக்கு வருவது ராபின் டாக்டர்தான். சென்னையிலிருந்து கிறிஸ்துமஸ் பரிசுகள் மட்டும் வாங்குவதை விட்டுவிட்டு ராபின் தன் வேலூர் வீட்டுக்கும் சேர்த்து ஆஸ்பத்திரி பணத்தில் பெயிண்ட் டப்பாக்கள் வாங்கணுமா ? யார்தான் எதிர்பார்த்திருக்கமுடியும், அர்த்த ராத்திரியில் வேனைவிட்டு இறங்கியவர்களை பளிச் பளிச்சென்று சான்டா கிளாஸ் வேடத்தில் பிலிப்பு போட்டோ எடுத்துவிடுவான் என்று ? ஸ்காட்லாந்து மிஷனரி கொடுத்த காமிரா, பிலிப்புக்கு இப்படித்தான் நிறையப் பயன்பட்டிருக்கிறது. இரண்டு கைகளிலும் பெயிண்ட் டின்களுடன் மிரளமிரள போட்டோவில் முழித்துக் கொண்டிருந்த ராபினை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

மறுநாள் பிஷப்புக்கு பிலிப்பு எழுதிய நீண்ட மனு, அதனைத் தொடர்ந்த விசாரணைக் கமிஷன், சஸ்பென்ஷன் எல்லாம் ஆஸ்பத்திரியை ஒரு எமர்ஜென்சி பிடிக்குள் கொண்டுவந்து என்றுதான் சொல்ல வேண்டும். யோசிக்கையில் இந்தச் சம்பவம் வேறு துறை திருட்டுக்களையும் கட்டுப்படுத்தியது.

பிலிப்பு இரவில் தூங்குவது உண்டோ என்னவோ ? 'ரஞ்சிதமா லஞ்சிதமா ' என்ற தலைப்பில் ரஞ்சிதம் நர்ஸ் டிஸ்சார்ஜ் பேஷண்டிடம் காசு பறிப்பதைக் கண்டித்து, கழுத்து முழுக்க பணமாலையுடம் படம் வரைந்து நோட்டாஸ் ஒட்டியது இரவில்தான். 'ரேடியோகிராபர் ஜொள்ராஜ், வீட்டில் படுக்காமல் ஸ்பெஷல் ரூம் ஐந்தில் வாட் இஸ் டூயிங் ? ' என்று பிலிப்பு அறிவிக்க, குவார்ட்டர்ஸிலிருந்து ஓடி வந்த ஜேக்கப்ராஜ் மனைவி, தன் கணவனைக் கையும் களவுமாக வேறு ஒரு பெண்ணுடன் பிடித்ததும் ஒரு இரவில்தான்.

'ஹாரர் ஆஃப் ட்ராகுலா ' என்ற பெயர் தன் பரட்டைத் தலைக்கும் பெரிய எத்துப் பற்களுக்கும் மொச்சைக் கொட்டைக் கண்களுக்கும் இரவில் திரியும் தன் சுபாவத்துக்கும் பொருத்தமான பெயர்தான் என்று பிலிப்பு சுயவிமரிசனம் செய்து கொள்வதுண்டு.

எழுபத்தோரு வயதில் இப்போது முடி முற்றிலும் நரைத்துவிட்டிருக்கிறது. பற்கள் காணாமல் போய் குழிவிழுந்த கன்னங்கள். உடல் சதையெல்லாம் கரைந்து விட்டிருக்கிறது. இடது கை- கால், வலதுபுறத்தைவிட வெகுவாக மெலிந்த நிலையில் ' கண்கள் மூடியிருக்கின்றன, தூக்கமா ?

தன்னை எல்லோரும் மாமா, அண்ணன், தாத்தா என்று உறவு சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்பது பிலிப்புவின் ஆசை... அதுவும் குழந்தைகள் வார்டில் உள்ள பிள்ளைகள். டியூட்டி இல்லாதபோது பிலிப்பு அதிகமாக வலம் வருவது குழந்தைகள் வார்டில்தான். 'பிலிப்பு மாமா ' என்று ஏதாவது ஒரு குழந்தை பிலிப்பு முதுகில் தொங்கிக் கொண்டிருக்கும்.

ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களில் பலர் பிலிப்புவைத் தேடியதற்குக் காரணம் இருக்கிறது. அவுட் பேஷண்ட்டாக வருபவர்களுக்கு பழைய ஃபைலை உடனே தேடித் தருவது, டாக்டரிடம் அறிமுகப்படுத்துவது, மருந்து வாங்கித்தந்து பிரிஸ்கிரிப்ஷனுக்கு விளக்கம் தருவது இத்யாதி இத்யாதி. இன்பேஷண்ட்டுகளுக்குப் படுக்கை தருவது, டிபன் வாங்கித் தருவது, டாக்டர், நர்ஸ்களிடம் தனக்கு வேண்டப்பட்டவர் என்று சிபாரிசி செய்வது, ஏழையாக இருந்தால் டிஸ்சார்ஜ் ஆகும்போது ஃபீஸில், சலுகை வாங்கித் தருவது... இப்படி இருந்தால் ஏன் தேடி வரமாட்டார்கள் ?

மணி ஐந்து முப்பதிரண்டு. வேதத்தை இன்னும் காணவில்லை. பிலிப்பின் கண்கள் மூடியேதான் இருக்கின்றன. லில்லி அக்காவுடன் கூடிய கல்யாண போட்டோ பழுப்பேறிக் கிடக்கிறது. ஆஸ்துமா, சளி என்று நித்தம் நோக்காடுதான் அக்காவுக்கு.

என் கல்யாணத்துக்குப் பிறகு ஒரு மாதத்தில் லில்லியக்கா இறந்து போனது. குழந்தைகளே இல்லாமல் போனது அவர்களின் மிகப்பெரிய சோகம்.

இறந்த தகவல் வந்தபோது பிலிப்பு புதிதாக எழும்பிக் கொண்டிருந்த ஐ.சி.யூ. கட்டடத்தருகே, செங்கற்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது. மாரடைப்பு வந்த சிலர் ஆஸ்பத்திரியில் போதிய வசதியின்றி இறந்து போனதால், ஆயிரம் பேரின் கையெழுத்துடன் ஆஸ்பிட்டல் போர்டுக்கு பிலிப்பு கொடுத்த மனுவால் இந்தக் கட்டடம் உருவாகியது. லில்லியக்கா இறந்த செய்தி கிடைத்ததும், கையிலிருந்த செங்கற்களை மேலே நின்ற மேஸ்திரியிடம் கொடுத்துவிட்டு, வெகு நிதானமாகத் தன் சைக்கிளை வெளியே உருட்டிச் சென்று ஏறிய பிலிப்பு, பக்கத்தில் வந்துகொண்டிருந்த என்னைக் கவனிக்கவே இல்லை. லில்லியக்காவின் உடலருகே உட்கார்ந்தபோதும் ஆழ்ந்த மெளனம்தான். நாங்கள் ஆறுதல் கூறியபோது பிலிப்பு சொன்ன ஒரே வாக்கியம் 'கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் '.

லில்லியக்கா இறந்த அன்று மட்டும்தான் பிலிப்பு லீவ் போட்டது. ஜெபக் கூட்டம் கூட ஒரு மாலை நேரத்தில்தான் நடந்தது. ஒரு வருடத்துக்கு ஆஸ்பத்திரி காரியங்களில் தன்னை முற்றிலுமாக மூழ்கடித்துக் கொண்ட பிலிப்புவாகத்தான் பார்க்க முடிந்தது. ஐ.சி.யூ. கட்டடத்தைத் திறந்து வைத்த பிஷப் சொன்னது நன்றாக நினைவிருக்கிறது. 'இந்த ஆஸ்பத்திரியை ஒரு சிறுவனைப் போல தன் முதுகில் சுமக்கும் பிலிப்பை பாராட்டுகிறேன். ஆஸ்பத்திரியின் வெற்றி நடைக்கு பிலிப்பு ஒரு முக்கிய காரணம். '

இன்னும்நினைவில் இருக்கிறது- வேதம் கழுத்தில் ரத்தம் வழிய வழிய அழுகின்ற தன் இரண்டு மகள்களுடன் ஆஸ்பத்திரிக்கு ஓடிவந்தது. பிலிப்புவின் தூண்டுதலால்தான் அவளுக்கு முதலுதவி செய்யப்பட்டது. போலீஸ், கேஸ் என்று எம்.எஸ் பயந்ததால், தன் வீட்டுக்கே அவளை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தபோது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

வேதத்துக்கு குண்டூர் பக்கம் என்றும், அவள் கணவன் அவளை இங்கு அழைத்து வந்து குடிவைத்திருந்தான் என்றும், இரண்டு குழந்தைகள் பெற்ற பின்தான் அவனுக்கு ஏற்கெனவே மனைவி, பிள்ளைகள் இருக்கும் விஷயம் தனக்குத் தெரியவந்தது என்றும் பிலிப்பிடம் சொல்லி அழுதிருக்கிறாள். இதில் முளைத்த சண்டை அவளைக் கொல்ல முயற்சிக்கும் அளவுக்குப் போயிருக்கிறது. பிலிப்புவும் நானும் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் அவனோடு தான் வாழமுடியாது என்று மறுத்துவிட்டாள் வேதம்.

அப்போதே கவனித்தேன். வேதத்தின் மகள்கள் பிலிப்போடுதான் எப்போதும் நெருக்கமாக இருந்தனர். டியூட்டி முடிந்ததும் உடனே சைக்கிளை எடுத்துக் கொண்டு ஐயர் கடையில் பலகாரம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு விரையும் புதிய மனிதனாகப் பார்த்தேன்.

எம்.எஸ். கோயில் பிள்ளை, போதகர் மற்றும் என் முன்னிலையில் பிலிப்பு - வேதம் திருமணம் நடந்தது. வேதத்துக்கு அப்போது முப்பது, முப்பத்திரண்டு வயதுதான் இருக்கும்.

பிலிப்பு ரிட்டயர் ஆனபோது எடுத்த குரூப் போட்டோ இருக்கிறது. கால்மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருக்கும் பிலிப். எங்கள் வாயெல்லாம் சிரிப்பு. 'ஆஸ்பத்திரிய என் கண்போல உங்க கைல ஒப்படைக்கிறேன்மா ? ஸி இட் குட் ' சிரிக்காதவர்கள் கூட பிலிப்புவின் ஜோக்குக்கு சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள் போட்டோவில்.

ரிட்டயர் ஆனபிறகும் வார்ட்பாய் உத்தியோகம் ஜோசப் கிளினிக்கில் தொடர்ந்தது. இரண்டு பெண்களையும் சென்னையில் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் சேர்த்துவிட்டதை பெருமிதமாக என்னிடம் சொன்னபோது, பிலிப்பு அண்ணன் தன் சொந்தப் பிள்ளைகள் இருந்தால்கூட இவ்வளவு பெருமையாகப் பேசியிருக்க மாட்டார் என்று தோன்றியது.

லீவுக்கு வரும்போதெல்லாம் போட்டோ எடுக்கும் வழக்கம் இருக்கும்போல. நிறைய போட்டோக்கள். விதவிதமான போஸ்களில் இரண்டு மகள்களும், மாநிறமானாலும் நல்ல லட்சணம்தான் அம்மாவைப் போல '

இரண்டாவது பெண் கார் விபத்தில் இறந்துவிட்டாள். அதற்குப் பிறகுதான் பிலிப்புவுக்கு இந்த நிலை. முதல் பெண் நர்ஸிங் படிக்கிறாள் என்று வில்சன் சொன்னபோது சந்தோஷமாக இருந்தது. ஆனால், அவளும் பிலிப்புவைப் பார்க்க வருவதே இல்லை என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

நான் சென்னைக்கு மாற்றலாகிப் போனபின் இங்கு வருவது நின்று போனது துரதிருஷ்டம்தான். கிறிஸ்துமஸ் கிரீட்டிங்ஸ் போட்டுக் கொண்டோம். அதிலும் ஏதாவது ஒரு கிண்டல் வார்த்தை இருக்கும்.

மணி ஆறு பத்து. கிளம்ப வேண்டியதுதான். 'பிலிப்பண்ணே ' என்று அழைத்தேன். தலை மெதுவாக என் பக்கம் திரும்புகிறது. கண்களில் என்ன நீரா ? 'போய் வறேண்ணே ' என்றேன். பிலிப்புவின் வலதுகரம் கட்டிலுக்கு வெளியே வந்து விழுகிறது. உள்ளங்கை திறக்கிறது. நான் கை கொடுக்கிறேன். பிலிப்புவின் ஒரு விரல் என் உள்ளங்கையை மிருதுவாகத் தடவுகிறது.

பிலிப்புவின் தலை ஜன்னல் பக்கம் மீண்டும் திரும்புகிறது. வேதம் மெயின் ரோட்டில் ஒரு சைக்கிளின் கேரியரிலிருந்து கீழிறிங்குகிறாள் காலை ஊன்றியபடி. ஆஜானுபாகுவாக ஒருவன் அவளருகில்.







by Swathi   on 08 Apr 2013  0 Comments

Friday, 5 January 2018

மௌனம் மரணமாகுமா? எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலை முன்வைத்து… அப்பணசாமி

மௌனம் மரணமாகுமா?
எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலை முன்வைத்து… & அந்தோன் சேகவ்வும் அப்பணசாமியும்
அப்பணசாமி

http://appanasamy.blogspot.in/2015/08/blog-post.html

”மரணம் ஒன்றும் விவாதத்துக்கு அப்பாற்பட்டதில்லையே, சார்” என்றேன். ஏழு அடிக்கு ஆறு அடி கொண்ட அறையில் இரு நாற்காலிகளில் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். அவரது நாற்காலியைச் சுற்றி ஏராளமான புத்தகங்களும் நாளிதழ் கற்றைகளும் இதழ் தொகுப்புகளும் கும்பல் கும்பல்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தமிழின் முக்கிய, மூத்த இதழாளர் அவர். நான் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு அவரை முன்மாதிரியாகக் கொண்டிருந்தேன். வயதுமுதிர்ந்த நிலையில் அவர் மரணத்தின் மீதான விருப்பினைக் கொண்டிருந்தார். மிகவும் யதார்த்தவாதியான அவர் தனது முதிர்வை உணர்ந்து மரணம் குறித்து விவாதிக்க விரும்பியதை நண்பர்கள் விரும்பாமல் தவிர்த்து வந்தனர். எதையும் ஆழமான விசாரணைக்குட்படுத்தும் ஆற்றல் கொண்ட அவருக்கு இது சற்று அவமரியாதையாக இருந்தது. இதை அறிந்திருந்த என்னிடம் அன்று உரையாடலைத் தொடங்கினார். நானும் ஆர்வமுடன் பங்கேற்றேன்.

”மரணம் என்பது சர்வவியாபகமானது. நாமறிந்த வரைக்கும் அது பிரபஞ்ச விதியாக இருக்கிறது. மனிதன் மட்டுமே ஆதியிலிருந்து இதன் மீது விசனம் கொண்டவனாக இருக்கிறான். நவீன இலக்கியத்தில் இது அறிவுப்பூர்வமாக விவாதிக்கப்படுகிறது. தாஸ்தயேஸ்வ்ஸ்கி, டால்ஸ்டாய் முதல் சார்த்தர், காஃப்கா வரை இதையிட்டுப் படைப்புகள் வாயிலாக விசாரணை செய்துள்ளனர். எனக்கும் அது குறித்த உரையாடல்களும் விசாரணையும் உவப்பானதாக இருந்திருக்கிறது.

”மனிதன் தன் குறித்த சில தேர்வுகளை முடிவு செய்துகொள்ளும் உரிமை கொண்டவனாக இருக்கிறான், சார். இந்த வகையில் தமிழில் நகுலனின் ‘வாக்குமூலம்’ எனக்கு உவப்பான நாவல், சார். அதில் மனிதனின் ஆயுளை அறுபது ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துவதன் பலாபலன்களை அவர் ஆராய்கிறார். இதை உடனே மனிதகுலம் முழுமைக்குமான அரச கட்டளையாக்க வேண்டும் என நாவலாசிரியர் விரும்புவதாகப் பதற்றப்பட வேண்டியதில்லை. எந்த ஒரு கலைஞனும் அவ்வாறு மனப்பூர்வமாக  எண்ணமாட்டான். நகுலன் என்ற தனிப்பட்ட மனிதரின் நீண்ட நெடிய தனிமை வாழ்க்கை அவரது கலை மனதில் தொடர்ந்து அலைக்கழித்த எண்ணச் சலனங்களை விசாரணைக்கு உட்படுத்தியதே ‘வாக்குமூலம்’ நாவலாக வெளிப்பாடு அடைந்திருக்கும். நமக்கும் அந்த விசாரணை ஆசுவாசப்படுத்துமானால் அசை போடலாம். முதிர்ந்து கனியாகும் பருவம் குறித்த பக்குவத்தை இது அளிக்குமானால் அது நம்மை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லும்.
”இதே போல, உண்மையைப் பட்டவர்த்தனமாக உனர்த்தும் படைப்புகளுக்கு மரணமும் விதிவிலக்கல்ல. டால்ஸ்டாயின் ‘நீதிபதியின் மரணம்’ குறுநாவலும் மரணத்தை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை என்னிடம் உருவாக்கியது சார்” என்றேன்.
வழக்கத்துக்கு மாறாக, அவர் ஆர்வத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்து எனது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. இருவருமே பகுத்தறிவாளர்கள் என்ற நிலையில் இந்த உரையாடல் எனக்கே வித்தியாசமானதாகவும் முக்கியத்துவம் கொண்டதாகவும் தோன்றியது. பகுத்தறிவாளர்கள் உரையாடலுக்கு எதுதான் விலக்காக முடியும்?

“சார், எஸ். சம்பத் தெரியுமா? சார்’ என்றேன். “இடைவெளி என ஒரு புத்தகம் எழுதினாரே, அவரா?” என்றார். “ஆமாம் சார். அந்த நாவலை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். அது வெளியான காலத்திலிருந்து இன்னமும் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. இது சாவு குறித்த ஒரு உரையாடல். பொதுவாக நாற்பதுகளை நெருங்கும் ஒருவர் கொஞ்சம் முன்பாகவோ கொஞ்சம் பின்பாகவோ சாவு குறித்துச் சிந்திக்கவே நேர்கிறது. சிலருக்கு சிறுவயது முதலேகூட இது குறித்த விசனம் ஏற்படலாம். கடைசியில் இது மன அழுத்தத்தின் விளைவாக உணரப்பட்டுச் சில நாள்கள் மாத்திரைகளை உட்கொள்வதால் அமுக்கப்படலாம். ஒரு சராசரி வாழ்க்கைக்கு இதுவே உகந்தது. ஆனால், தொடர்ந்த தேடல் கொண்ட ஒரு கலாஆளுமைக்கு இது ஒரு விஷயமாகிறது. மனிதன் இது குறித்து ஈராயிரம் ஆண்டுகளாகச் சிந்தித்து வருவதால் அதன்மீது தாமும் எண்ணங்களைச் செலுத்த கலா ஆளுமை தூண்டுகிறது. இது மெட்டா பிஸிக்கலாக இருந்தாலுமே ‘எல்லாம் மாயை’ என்ற அனர்த்தத்துக்குச் செல்லாத வரை நாம் அதை விமர்சனத்துக்கு உட்படுத்த முடியும், சார். சாவு குறித்த அதிமுக்கியமான தத்துவ முடிவை எட்ட முடியும் என்ற நம்பிக்கையில் தீவிர விசாரணையில் ஈடுபடும் தினகரன் என்ற கதாபாத்திரம் வழியாக நாவலை எழுதிச் செல்லும் எஸ். சம்பத், நாவல் நெடுக, வாழ்வின் உயிர்ப்பான காட்சிகளையும், வண்ணங்களையும் அதே உயிர்ப்புடன் சித்திரப்படுத்தி இருப்பதுதான் நாவலின் சிறப்பு, சார்” என்றேன்.

வழக்கத்துக்கு மாறாக, பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த அவர், எஸ். சம்பத் மட்டுமல்லாமல் ஆத்மாநாம் குறித்தும் அவர்களுடைய படைப்புகள் குறித்தும் நீண்ட அறிமுக உரை நிகழ்த்தி, இருவருமே அற்பாயுளில் போய் விட்டதால் தமிழிலக்கியத்துக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு குறித்தும் தனது ஈடுபாட்டோடு கூடிய வருத்தத்தையும் தெரிவித்தார். அதுதான், சார். மரணத்தை எதிர்கொள்ளத் தயாராகத் தமது மனம் பக்குவப்பட்டிருப்பதை உணர்த்த விரும்பிய அவாவுக்கு நண்பர்கள் இடம் தராது சென்டிமெண்டாக அணுகியதே அவரது வருத்தமாக இருந்தது. இப்போது அது தீர்ந்து அவரது முகத்தில் மின்னியது.

1980-களின் தொடக்கத்தில் உலக இலக்கியங்களைத் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழில் அப்போது புதியதாக வெளிவந்த இரண்டு நாவல்கள் அதற்கு இணையாக எனக்குள் செல்வாக்கு செலுத்தின. ஒன்று ’இடைவெளி’, மற்றொன்று ’நாளை மற்றுமொரு நாளே’. அப்போது எக்ஸிஸ்டென்சியலிச சிந்தனைகளின் தாக்கமும் சார்த்தர், காம்யு, காஃப்கா, ஜேம்ஸ் ஜாய்ஸ் ஆகியோரின் செல்வாக்கும் ஏற்பட்டிருந்த காலம். ’இடைவெளி’ நாவல் என்னை ஈர்த்ததற்கு அது சாவு குறித்த தத்துவ விசாரணையை மேற்கொண்டதால் மட்டுமல்ல, ’இடைவெளி’ என்ற அதன் தலைப்பும் நாவலில் அது முக்கியத்துவப்படுத்தப்பட்டிருந்த விதமும்தான். ஏனெனில், இடைவெளி சுருங்குவது தொடர்பான சிறுபிள்ளைத்தனமான ஆராய்ச்சி விளையாட்டில் ஏற்கனவே ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அந்த விளையாட்டை ’இடைவெளி’ நாவல் உற்சாகப்படுத்தியது. அது விபத்துகள் குறித்த ஆராய்ச்சி. அதாவது பெர்முடேசன் காம்பினேசன் அடிப்படையிலும் இயற்கையின் தேர்வு விதி அடிப்படையிலும் எவ்வாறு விபத்துகள் நேர்கின்றன என்பதே எனது ஆராய்ச்சி விளையாட்டாக இருந்தது. அப்போதெல்லாம் நிறையப் பயணங்கள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்ததால் பயணங்களின்போது இந்த விளையாட்டில் ஈடுபடுவது உவப்பானதாக இருந்தது. ஒரு வளைவில், திருப்பத்தில், சந்திப்பில், நெடிய சாலையில், சாலை குறுகும் தருணத்தில் எல்லாம் இந்த விளையாட்டு உற்சாகம் கொள்ளும். ஒரு புள்ளியில் எத்தனை வாகனங்கள் கடக்கின்றன என்பதைப் பொறுத்தே விபத்துகளின் விகிதாசாரம் அமைவதாக உணர்ந்தேன். நாளிதழ்களில் விபத்து குறித்த செய்திகளை வாசிக்கும்போது உருவாகும் படபடப்பை இது தணிக்கும். ஒரு புள்ளியில் எத்தனை சாலைகள் கடக்கிறதோ அதன் 0.00000001 சதவீதத்துக்கும் குறைவாகவே விபத்துகள் நடப்பதாக அறிய முடிந்தது. இது பெர்முடேசன் காம்பினேசனில் பல்வேறு அம்சங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், இடைவெளி சுருங்குவதே விபத்தின் பாதிப்பையும் உயிரிழப்பையும் தீர்மானம் செய்கிறது என நம்பினேன். இதே போன்ற ஒரு விவாதம் ’இடைவெளி’ நாவலிலும் வந்ததால் முதல் வாசிப்பில் உற்சாகம் கொண்டேன்.

இரண்டாவதாக, எக்ஸிஸ்டென்சியலிச (இருத்தலியல்வாத) எழுத்தாளர்கள் ஏற்படுத்திய செல்வாக்கின் விளைவாகப் போரின் பேரழிவு, மனித எத்தனங்களின் அகங்காரம் போன்றவற்றால் ஏற்பட்ட வாழ்வின் மீதான விரக்தி, தற்கொலை உணர்வு ஏதோ ஒருவகையில் சாவு குறித்த எண்ணங்களைக் கிளறுவதாக இருந்தது. இந்த வகையில் காம்யுவின் ’அன்னியன்’ என்னைப் பல மாதங்கள் அலைக்கழித்தது. இதன் தொடர்ச்சியாக எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலை வாசிக்க நேர்ந்தது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. என்னவோ ஒருவகையான மனக் கிளர்ச்சியை அந்த வாசிப்பு என்னுள் உருவாக்கியது. அதனால்தான் அதன் வசீகரம் முப்பதாண்டுகளாகியும் இன்னமும் தீர்வதாகயில்லை.

நாவல் வாசித்த ஓரிரு ஆண்டுகளிலேயே சென்னைக்குக் குடிபெயர நேர்ந்தது. என்னை வசீகரித்த தமிழ் ஆளுமைகளைத் தேடித் தேடிச் சந்தித்தபோது ஆத்மாநாம், எஸ். சம்பத் ஆகியோர் காலம் ஆகி வெறுமையை உருவாக்கியிருந்தனர். அவர்களோடு பழகிய ’வயல்’ மோகனிடம் அவர்களின் இயல்பு குறித்து விசாரித்தேன்:

’’சம்பத் கனத்த உருவம் கொண்டவர். மிகவும் ஆர்வமானவர். கனத்த உருவத்துக்கு விரோதமான சுறுசுறுப்போடு செயல்படுவார். வியர்வை சட்டையை நனைக்கும் வேகத்தோடு நடந்து வருவார். நீண்டகாலம் இருக்க மாட்டோம் என்பதை முன்னரே அறிந்துதான் அவ்வளவு வேகத்தோடு செயல்பட்டாரோ என்னவோ!”

‘இடைவெளி’ நாவலின் மையக் கதாபாத்திரம் ’தினகர’னும் சற்று கனத்த உருவம். நிதானமாகச் செயல்படும் பாத்திரமாக இருந்தாலும் சிந்தனை வேகம் கொண்டு செயல்பட்டு, சம்பத்தின் பிரதிபிம்பமாகவும் கொள்ளச் செய்கிறது.

சண்முகத்தைப் போன்றே தினகரன் முன் வாழ்க்கையும் தில்லியை மையமாகக் கொண்டிருக்கிறது. இருவரும் தோல்பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இருவருமே அய்யங்கார். மற்றும் இதர விழுமியங்களையும் பார்க்கும்போது இதனை அவரது தன் வரலாற்று நாவலாகவும் கொள்ள இடம் இருக்கிறது.
“இந்த நாவல் சாவு என்கிற பிரச்சனையை மையமாகக் கொண்டிருக்கிறது. எப்போதும் அடிப்படை விஷயங்களில் உழல்பவன் நான்” என முன்னுரையில் கூறுகிறார் சம்பத். பசி, காமம், பயம் ஆகியவற்றையே மனிதனின் ஆதார விஷயங்களாகக் காணும் இருத்தலியல்வாதிகளின் செல்வாக்கு சம்பத்தினிடம் மேலோங்கி இருந்ததன் காரணமாகவே சாவு குறித்த விசாரணையை அவர் மேற்கொண்டிருக்கக்கூடும். “சாவு என்னைப் பாதித்த விதம் இவ்வாறாக அமைகிறது. ‘கடைசி பட்சத்தில் எல்லாம் போய்விடுகிறது! எல்லாமேதானே! இதற்கு என்ன செய்வது!’ இந்த ஒரு எண்ணம் என்னைச் சின்ன வயசிலேயே தொற்றியிருக்க வேண்டும்” என சம்பத் முன்னுரையில் கூறியது போலவேதான் தினகரனும் நாவலில் கூறுகிறார். மேலும், “நான் பல டாக்டர்களையும் மருத்துவ மாணவர்களையும் சந்தித்துப் பேசி விவாதித்து சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள எத்தனித்த போதெல்லாம் தோல்வி அடைந்தேன். அவர்கள் எல்லாரும், ... புத்தக எல்லைக்குள் வாழ்கிறார்கள். நான் இதை ஒரு குற்றமாகக் கண்டு குறை கூற விழையவில்லை” என்று சம்பத் கூறுகிறார். அவரது நாவலில் தினகரனும் தனது சாவு குறித்த தேடலுக்கு விடை காண கால்நடை மருத்துவரை அணுகித் தோல்வி அடைகிறார். அதற்கு அவரைக் காரணமாக்காமல் மன்னிப்பு கோரி வெளியேறுகிறார்.

’அடிப்படை விஷயங்களில்’ உழல்பவரான தினகரன் மீது டால்ஸ்டாயும், தாஸ்த்யேவ்ஸ்கியும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ”சாவின் வாயிலிலேயே சென்று திரும்பியவர் எனும் விதத்தில் தாஸ்தயேவ்ஸ்கி சாவையும் பற்றி ஏதாவது முடிவார்த்தமாகச் சொல்லியிருப்பார் என்று தினகரன் எதிர்பார்த்தார்”. ஆனால், சாவைப் பற்றி தத்துவார்த்தமான முடிவு எதையும் தாஸ்தயேவ்ஸ்கி சொல்லவில்லை என்பது தோல்விதான் என்றாலும் “அவரால் சாவைப் பற்றித் திட்டவட்டமாக ஒன்றும் சொல்ல முடியவில்லை. காரணம், அவரால் சிந்திக்க முடியவில்லை என்பதல்ல; ஒரு சட்டம் இன்னொரு உயிரை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் சாவை ஒரு சமுதாயப் பிரச்சனையாகக் கண்டு அதில் முழுத் தீவிரமாக” ஈடுபட்டதுதான் என்கிறார்.

சாவு குறித்த தத்துவ விசாரணையின் அனர்த்தமான நீட்சியாகத் தற்கொலை பற்றியும் தினகரன் சிந்திக்கிறார். ஒரு பெண் (கல்பனா) விஷயமாக அவர் தற்கொலை முடிவெடுத்து மொட்டைமாடி மீது நிற்கிறார். அப்போது, “ஒரு கணத்திற்கு, கீழே அதலபாதாளத் தரையில் பிணமாகக் கண்டார். அப்போது, அந்த நிலையில் சுற்றிலும் ஒரு மௌனம் தேங்கியிருந்தது” என உணர்கிறார். ”அப்போது அவருக்கு ஏற்பட்ட ”அனுபவத்தை என்ன பெயரிட்டு அழைப்பது?” “தன்னை முற்றிலும் காலியாக்கிக் கொண்ட பிறகு மூளையில், உடம்பில் எங்கெல்லாமோ குடிகொண்டிருந்த நிசப்தத்தை” சாவுக்கும் அப்பாற்பட்டதாக நினைத்து, தற்கொலை சாவு குறித்த விசாரணைக்குத் தீர்வல்ல எனக் கைவிடுகிறார்.

இன்னொரு விஷயமும் இருக்கிறது. அப்போது உயிரும் தினகரனிடம் முறையிடுகிறது. அவர் அங்கு நின்றபோது, ’தரை பால் போல் பொங்கி அவர் நின்ற விளிம்பு வரை மேலெழுந்து’ வந்ததாகக் கண்ட மனக்காட்சியை உயிரின் குறியீடாக எதிர்நிலையில் சம்பத் முன்வைக்கிறார். தொடர்ந்து சாவு குறித்த விசாரணை அவரைப் பித்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.

ஏற்கனவே இது போன்றதொரு அனுபவத்தால் திடுக்குற்றிருந்த தினகரனின் மனைவி பத்மா இம்முறை மேலும் துணுக்குறுகிறார். அவர்களுக்கு இடையிலான உறவு மேலும் சிக்கலாகிறது. இது போன்ற நேரங்களில் கூச்சல், கைகலப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிடுவார்கள் என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் நினைக்க மறுநாள் காலையில் காப்பி போட்டுக்கொண்டு அவளையும் குழந்தைகளையும் எழுப்பும் அளவுக்கு தினகரன் அவர்கள் மீதும் பித்தாக இருக்கிறார். உடல் இச்சை அவருள் ஏற்படுத்தியிருந்த வலுவான தாக்கத்தின் நீட்சியாகக் கண்டு தினகரன் திடுக்கிடவும் தவறவில்லை.

மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் உடல்கள் மீது அவர் கொண்டிருந்த இச்சையையும் செயல்பாடுகளையும் அவர் பட்டவர்த்தமான வெளிப்படுத்துவதால் அவர் மனைவி கொள்ளும் சீற்றமும் வெளிப்படுத்தும் ரௌத்திரமும் வாழ்நாள் பிணக்காக நீடித்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் ‘அடிப்படை விஷயங்களில்’ உழலுவதால் பொருளாயத வாழ்க்கையையும் தவற விடுவதைத் தினகரன் அறிந்தே இருந்தாலும் அவர் மீள இயலாத அளவுக்கு அமிழ்ந்து போகிறார்.

சாவு குறித்த தத்துவ விசாரணையில் அமிழ்ந்த பிறகு பத்மா மிகவும் பயந்து போகிறாள். இது ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்ததனால் ஏற்பட்ட பித்து அல்ல. அதைவிட அபாயகரமானது என நம்புகிறாள். முதலில் மற்றொரு பெண் உடல் குறித்த இச்சையாக இருக்கும் என நினைத்துப் போரிட முயல்கிறாள். பின்னர் இது ’வேறு ஒன்று’ என்பதை உணர்ந்து பேரச்சம் கொண்டு ‘நேக்கும் குழந்தைகளுக்கும் உங்களை விட்டா யார் இருக்கா?’ எனக் கெஞ்சுகிறாள். சாவு குறித்த விசாரணையைத் தற்கொலையை நோக்கிய எத்தனமாகப் பொருளாயத மனம் கண்டு அஞ்சுகிறது. அடிப்படை விஷயங்களில் உழலும் தினகரன் வாழ்தலையும் இதனையும் துல்லியமாக வேறுபடுத்திக் காண்கிறார். பெரும் பொருளாயத இழப்பு, அவர் காது கேட்கவே அவருக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாக உலகோர் பேசுவது போன்றவை தவிர பெரிய பாதிப்புகளில்லை என்பது தினகரனுக்கு நன்கு தெரிந்திருந்தது. இது தினகரனின் தத்துவ மனம் என்றால் இதனைப் படைப்புரீதியாகக் கட்டமைப்பதில் எஸ். சம்பத்தின் கலைமனம் அற்புதமாக, வியக்கத்தக்க அளவில் வெற்றி கொள்கிறது. இல்லையானால், சாவு குறித்த ஓர் விசாரணையில் வாழ்வு குறித்த இத்தனை வண்ணமயமான, உயிர்ப்புள்ள ஜீவ வர்ணனைகள் ஏன் இடம் பெற வேண்டும்?

திருவல்லிக்கேணியில் தன் பெரியப்பா வீட்டு மொட்டை மாடியில் காலையில் ஏழு மணிக்குக் கண்விழிக்க நேர்ந்தபோது வானத்தில் சூரியனின் தங்க ரேகைகள் இன்னமும் அகலாமல்’ இருப்பது தினகரனுக்கு உவப்பளிக்கிறது. இரவில் நட்சத்திரங்கள் வானத்தில் தொங்கட்டான் ஆடுவதாகத் தோன்றுகின்றன: ”சற்றே வலுத்துப் போன காற்றில் தென்னங்கீற்றுகள் ‘ஜே.ஜே’ எனக் கோஷமிடுகின்றன. அந்தக் கோஷத்தையும் மீறி அவருடைய கண்கள் தென்னங்கீற்றுகளில் லயிக்கின்றன. கீற்றுகளும் மட்டைகளும் பிரிந்து, பிரிந்து தொங்கட்டான் ஆடும் நட்சத்திரங்களைக் காட்டிவிட்டு மீண்டும் அவற்றை மறைத்துக் கொள்கின்றன”.

அதேபோல, பணமே, பொருளே முதன்மையாகக் கொண்டு வாழும் உயர், நடுத்தர வர்க்கத்தினரை எள்ளலுடனும் உணவக சர்வர், பழவண்டி வியாபாரி, சாலையோர சூதாட்டக்காரன் ஆகிய விளிம்புநிலை மக்கள் மீது கருணையுடனும் அணுகுகிறார்.
இருந்தும் சாவு குறித்த விசாரணையின்போது பித்துநிலை கொள்கிறார். அலுவலகத்தில் தமது ஆராய்ச்சி விளையாட்டில் நிம்மதியாக ஈடுபடுவதற்காகத் தமது பதவிக்கும் தகுதிக்கும் குறைவான ‘மெக்கானிக்கலான’ ஒரு வேலையைச் சில மாதங்கள் கேட்டுப் பெறுவது, ஓட்டலில் ஒரு டீயை மணிக்கணக்கில் குடிப்பது, தன்னை அறியாமல் ஒரு மணி நேரமாக நாணயத்தைச் சுண்டி விட்டுக்கொண்டே இருப்பது, பழ வண்டிக்காரனிடம் ஆரஞ்சுப் பழம் வாங்கி இரண்டு சுளைகளை இரண்டு நிமிடமா இரண்டு மணி நேரமா என்பதை உணராமல் தெருவிலேயே நின்று தின்பது, பெரியப்பாவின் உயிர் பிரிவதை இரவு முழுவதும் விழித்திருந்து கண் கொட்டாமல் பார்ப்பது, மின்விசிறியில் தூக்குக்கயிறை மாட்டிக்கொண்டு இரவு முழுவதும் தியானம் செய்வது ஆகிய நடவடிக்கைகளால் மனைவி, குழந்தைகள், மேலதிகாரிகள், சக அலுவலர்கள், ஓட்டல் சர்வர், பழ வண்டிக்காரன் மற்றும் சுற்றத்தார் அவரைப் பைத்தியக்காரன் எனக் கூறுகின்றனர்.

எதற்காகவும் தனது பித்துநிலையைக் கைவிட விரும்பாமல் தொடர்ந்து சாவு குறித்த சிந்தனையில் ஈடுபடுகிறார். அலுவலகத்திலும், கடல் குளியலிலும், சாலைகளில் நடக்கும்போதும் மனைவியின் உடலில் இயங்கும்போதும் கனவிலும் நனவிலும் அது தொடர்கிறது. இதற்கு ஒரு உறுதியான முடிவு கிடைக்குமா என குதிரை ரேஸுக்குப் போகிறார். சாலையோரச் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார். மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசிக்கிறார். தனது பெரியப்பாவின் இறுதி நிமிடங்களுக்காகத் தூங்காமல் காத்திருக்கிறார்.

இவ்வாறாக, சாவு என்பது வாழ்வுக்குக் கருணாசமுத்திரம்; சாவு என்பவர் கண்காணிப்பாளர்; சாவு என்பது பிரபஞ்சரீதியில் காத்திருப்பது என்றெல்லாம் ஆய்ந்து இடைவெளி என்ற முடிவை நோக்கி தினகரன் நகர்கிறார்.

இறுதியாக, தனது மனைவி பத்மாவின் உதவியுடன் அறையில் துக்குக் கயிறைக் கட்டி அதைப் பார்த்தபடி (தியானம்!?) நீண்ட நேரம் இருக்கிறார்.

இடைவெளிதான். வாழ்விலும் சாவிலும் இடைவெளிதான் இயங்குகிறது. வாழ்வில் உயிருக்கு அனுசரணையான இடைவெளியாகவும் சாவில் முரண்பட்ட இடைவெளியாகவும் இயங்குகிறது என்பதைக் கண்டடைகிறது. முரண்பாடுகளின் வளர்ச்சிப்போக்கு நிரந்தரமானது. அது ஒன்று மற்றொன்றாக மாறி பரிமாண வளர்ச்சியாகவும் அதே நிலையிலும் வைக்கிறதே இடைவெளி வாழ்விலும் சாவிலும் இயங்கிக்கொண்டே இருக்கிறது என்பதாக நான் புரிந்துகொள்கிறேன். இதோ தினகரன் கணிப்பு:

“வாழ்வு என்பதைப் பற்றிய என்னுடைய கணிப்பு இதுதான். எந்தப் பொருளும் அது உயிர்மயம்தான். ...அதில் ... முன்னமேயே இடைவெளி இருந்தால் அதை உயிருக்கு அனுசரணையான இடைவெளி என்கிறேன். ஆனால் அது சாவாகப் பரிமளிக்கும்போது முரண்படுகிறது. சாவு என்பது முரண்பாடுடைய இடைவெளி.

”இப்போது அவருள் இன்னொரு கேள்வி எழுகிறது.

”ஏன் இப்படி நடக்கிறது?

“தெரியாது!

“அந்த முரண்பாடுடைய இடைவெளி தானாகவே சிந்திக்கிறதா? ...

“அது தனியாகவே சிந்திக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும். ஏனென்றால் அது பல்வேறு இயற்கை விதிகளைத் தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திக்கொள்கிறது...”

”இடைவெளியே... சாவே உன்னை வணங்குகிறேன்.
....
....
”மண்டியிடு” என்றது சாவு.
“மானசீகமா? உடம்பாலும் கூடவா?”
“மானசீகமாகப் போதும்!”
“அவர் மண்டியிட்டார்.”

இப்படி ஒரு கீழைய ஆன்ம நிலையில் நாவல் முடிகிறது. பொருளாதாரத் தேடல் உட்பட மனிதனின் அறிவியல், ஆன்மிக, தத்துவத் தேடல்களெல்லாம் மரணம் குறித்ததாக, மரணத்தை வெல்வது குறித்ததாக இருந்து வருகிறது. பொதுவாக, மரணம் குறித்த மேற்கத்தியக் கண்ணோட்டம் என்பது ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பதாக உள்ளது. கீழைய தத்துவ மரபு மரணத்தை முக்தியாக, வீடுபேறாக, பெரு விடுதலையாகப் பார்க்கிறது. தொழிற்புரட்சிக்குப் பிந்தைய நவீன காலத்தில் கிழக்கும் மேற்கும் மோதலாகி நவீன சிந்தனைகள் உருவாகியதைப் போலவே சாவு குறித்தும் கிழக்கும் மேற்கும் நெருங்கி, நெருங்கி - நெரித்து, நெரித்து மோதலாகிப் புதிய சிந்தனைகளை உருவாக்குகின்றன. இதன் நீட்சியாகவே எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலைக் காண முடியும். இங்கே, கிரேக்கமும், பௌத்தமும் சாவை ஒப்பீட்டளவில் யதார்த்தமாகக் காண்பது கவனிக்கத்தக்கது. நவீன சிந்தனைகளும் கூட இதையொட்டியே இயங்க முடியும். வாழ்வு என்பது ஒரு முடிவை நோக்கிச் செல்வது; சாவு என்பது வாழ்வை முழுமையாக்குவது. சாவுக்குப் பின் ஒருவன் தனது சிந்தனைகளை மட்டுமே விட்டுச் செல்கிறான். மேலும் அதில் எந்தவித மாற்றங்களைச் செய்ய இயலாதவனாகவும் இருக்கிறான். அவன் எதை வாழ்ந்தானோ அதுவே நிசர்னமாகிறது. இவ்வாறு அவன் வாழ்வு சாவால் முற்றுப்பெறுவதுடன் முழுமையும் அடைகிறது.

எவ்வளவு பகுத்தறிவு வாதியாக இருந்தாலும் அவன் முதிர்ந்து கனியும்போது மெட்டாபிஸிக்கல் எண்ணங்கள் யாரானாலும் தவிர்க்க இயலாததாகிறது. குறைந்தபட்சம், முன்னர் நிலவிய தீவிர வறட்டுப் பொருள் முதன்மைக்கோட்பாடு முன்பு இருந்த தீவிரத்தில் இருந்து தணியவே, அதன் வறட்டுத்தனத்தில் இருந்து நீங்கும் அளவுக்காவது தணியத்தான் செய்கிறது.

எஸ். சம்பத்தைப் பொறுத்தவரை, அவரே கூறுவது போல பசி, காமம், பயம், சாவு போன்ற அடிப்படை விஷயங்களில் உழல்பவர் அல்லது உழன்றவர். குறிப்பாக, சாவு குறித்த ஆராய்ச்சி விளையாட்டைத் தீவிரமாக விளையாடியவர். கடுமையான நோய் வடிவில் காலம் அவர் வாழ்வில் விளையாடி விட்டது துரதிருஷ்டவசமானது.

முன்னர் பார்த்தபடி சாவு குறித்த கீழைய மற்றும் மேற்கத்திய தத்துவ முடிவுகள் மோதலுக்கு உள்ளாதலில் தாக்கம் அவரில் தீவிரம் கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் மேற்கத்திய பொருளாயதக் கண்ணோட்டத்தின் பிடியிலிருந்து சாவை விடுவிக்க முயலும் சம்பத், மறுபக்கத்தில் சாவை சாவுக்குப் பின்பும் நீடிக்கச் செய்யும் கீழைய தத்துவ முயற்சிகளில் இருந்தும் அறுத்து எறிகிறார். முக்தி, வீடுபேறு, மறுபிறப்பு போன்ற சங்கிலிகளில் இருந்து அதனை விடுவித்து சாவைச் சுயமாக்கும் முயற்சியில் ஓரளவுக்கு வெற்றியும் பெறுகிறார். சாவு தானாகவே நிகழ்கிறது என்ற உண்மையின் மூலம் இதனை நிரூபிக்கிறார்.

“அங்கு (மேற்கில்) சமயமும் ஒரு பொருளாதாரத் தத்துவத்தின் கண்கொண்டு பார்க்கப்படுகிறது” என்று கூறும் சம்பத், “எதையுமே ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கும் இந்தச் சமுதாயம்தான், இந்தியச் சமுதாயம்தான், கடைசியாக மனித இனத்தைப் பற்றி மீண்டும் பெரிதாக ஏதோ சொல்லப் போகிறது” என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார். கடந்த முப்பது ஆண்டு கால தத்துவ வளர்ச்சி அதாக இல்லாதபோதும் உயிர் வாழ்க்கையின் அடிப்படைகளில் ஒன்றான சாவு குறித்த விசாரணை மெட்டாபிஸிக்கல் அணுகுமுறையாக நீடிப்பது தவிர்க்க இயலாததாகிறது.

சாவு என்பது ஒவ்வொரு உயிரியல் வாழ்வையும் நிறைவு செய்யும் விழுமியம். அது முரண்பாடுகளின் பிறப்பாகவும் அழிவாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எந்த உயிர்களும் தப்பிக்க முடியாது. ஜடப் பொருள்கள் கூட அழிவிலிருந்து தப்பிக்க இயலாது. உயிர் வாழ்வதற்குச் சாதகமான இடைவெளியில் இருந்து அதற்கு முரண்பட்ட இடைவெளியை நோக்கிப் பயணித்துக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு முரண் முற்றிய நிலையில் சாவு தானாக நிகழ்கிறது என்கிறார். சகல உயிர்களுக்கும் இயல்பான வழி இது என்பதால் இதை ஏற்பது சிக்கல் அல்ல.

ஆனால், மனிதனைப் பொறுத்தவரை அறிவு குறுக்கீடு செய்கிறது. இங்கு சாவு தானாக நிகழ்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. மனித அறிவால் அறிவியல் உருவாகி எண்ணற்ற மனித உயிர்களின் மரணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருப்பதை விட்டுவிட்டாலும் கூட. மனித ஆணவத்தால் சாவு இலட்சக்கணக்கில் முன் தேதியிட்டு நிகழ்ந்து கொண்டிருப்பதை, சாவு தானாக நிகழ்கிறது என ஏற்க முடியவில்லை. தற்கொலையைக் கூட விட்டு விடலாம். ஏனென்றால், வாழ்க்கை என்பது எந்த வகையிலும் யாசகமல்ல. இந்த ஈகை மனதிற்கு எதிரான போராட்டத்தின் தோல்வியே தற்கொலையைத் துணிச்சலாகத் தேர்வு செய்கிறது.

எஸ். சம்பத் இந் நாவலை 1983 - 84 காலகட்டத்தில் எழுதினார். அதன் பின்னர் முப்பதாண்டுகள் கழிந்த நிலையில், என்னென்னவெல்லாமோ நிகழ்ந்திருக்கிறது.
ஈழத்தில் கொல்லப்பட்ட லட்சத்துக்கும் அதிகமான தமிழ் உயிர்கள் தாமாகவா போயின?
இந்திரா காந்தி உயிர் பறிக்கப்பட்டதும், அதே நாளில் ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் கொல்லப்பட்டதும் தாமாகவா நிகழ்ந்தன?

தண்டகாரண்ய காடுகளில் சல்வா ஜுடும் என்ற பெயரில் பறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனவாசிகளின் உயிர்கள் தாமாகவா வெளியேறின?

ஈராக்கில், ஆஃப்கனில், குரேஷியாவில், போஸ்னியாவில், சிரியாவில், யேமனில், லெபனானில், பாலஸ்தீனத்தில், சூடானில், காங்கோவில், எகிப்தில் என உலகம் முழுவதும் அற்பாயுளில் பறிக்கப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமான உயிர்கள் தாமாக வெளியேறியிருக்குமா என்ன?

இக்கேள்விகளும் இந்த நாவலை வாசித்த பின் எழாமலில்லை.
-நன்றி: கல்குதிரை இளவேனிற்கால இதழ் ஏப்ரல் 2014

அந்தோன் சேகவ்வும் அப்பணசாமியும்

செகாவ் எப்போதும் எனது மனதுக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். ஏனென்றால், அவர் மனிதர்களில் மிகவும் உண்மையானவர். செகாவ் வாழ்க்கை பற்றி புத்தகம் எழுதியுள்ள புரசு. பாலகிருஷ்ணன் அதில் விதந்து பரிந்துரைக்கும் அம்சம் இது: ”செகாவ் மிகச் சிறந்த மனிதர். அவர் எதிரில் அமர்ந்திருக்கும் எந்த ஒரு நபரும் மனிதாபிமானம் தாண்டி எதையும் வெளிப்படுத்த இயலாது. மனிதத்தை மறந்துவிட்டு எந்தவொரு வார்த்தையையும் அவரிடம் வெளிப்படுத்த இலயலாது. அவர் முன் அமரும்போது மனதின் கசடுகள் அந்த நேரத்துக்காகவாவது அகன்று போகின்றன.” இவை பாலகிருஷ்ணனின் நேரடி வார்த்தைகள் இல்லையென்றாலும் அவர் இவ்வாறுதான் அர்த்தப்படுத்துகிறார் என்பதுதான் எனது மனப்பதிவு. இதுதான் இன்றளவும் செகாவை நோக்கி என்னைத் தள்ளிக்கொண்டே இருக்கிறது என்பதைக் கூச்சத்தை விட்டுச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். செகாவையும் என்னையும் தொடர்புபடுத்தி நண்பர் உதயசங்கர் எழுதியுள்ள சிறிய மனப்பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
-appanasamy
அந்தோன் சேகவ்வும் அப்பணசாமியும்
உதய சங்கர் | Saturday, 24 March 2012 | 3 comments
http://udhayasankarwriter.blogspot.in/2012/03/blog-post.html
chekhov.nஇப்போது யோசிக்கும் போது இப்படியெல்லாமா இருந்திருக்கிறோம் என்று ஆச்சரியம் வருகிறது. பழைய நினைவுகளை அசைபோடும் போது தோன்றும் அபூர்வமான முகபாவம் தோன்றுகிறது. இதழோரத்தில் சிறு கீற்று நிரந்தரமாய் தங்கியிருக்கிறது. அடடா என்ன வாழ்க்கை! எனக்கு மட்டுமா இப்படி நேர்ந்தது. நிறைய்ய நண்பர்களுக்கு இப்படி நேர்ந்து விட்டதே. ஏதோ உன்மத்தம் பிடித்தமாதிரி அலைந்து திரிந்தோமே விட்டேத்தியான, பற்றற்ற, தீவிரமான அந்த நாட்கள் இனி வருமா? அந்த அர்ப்பணிப்பின் கதகதப்பில் ஏற்கனவே கந்தகபூமியான கோவில்பட்டி மேலும் சூடாகிப் போனதே. கடந்த காலம் கடந்த காலம் தான். ஆனால் அதன் உயிர்த்துடிப்பு மிக்க ஸ்பரிசம் இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது.


கோவில்பட்டிக்கு வந்த சிறிது நாட்களிலேயே ஜோதிவிநாயகம் நண்பர்களிடம் ஆலோசித்து தேடல் என்று ஒரு பத்திரிக்கை அவர் தங்கி வேலை பார்த்த விளாத்திகுளம் முகவரியில் தொடங்கினார். பத்திரிக்கை வேலை சம்பந்தமாக எப்போதும் யாராவது ஒருவர் விளாத்திகுளத்தில் இருப்பதாக ஆகிவிட்டது. சிலசமயம் சாயங்காலம் கோவில்பட்டி நண்பர் குழாமே விளாத்திகுளத்திற்கு வந்துவிடும். பல நேரம் நான் இருப்பது விளாத்திகுளமா கோவில்பட்டியா என்ற சந்தேகம் ஏற்படும். அதே காரசாரமான விவாதங்கள் விமரிசனங்கள், உரையாடல்கள், இடம் மட்டும் மாற்றம் கோவில்பட்டியில் காந்தி மைதானம். விளாத்திகுளத்தில் வைப்பாறு. கொஞ்ச நாட்களுக்கு விளாத்திகுளமும் அதிர்ந்தது. கோவில்பட்டிக்கு வருகிற இலக்கியவாதிகள் எல்லோருமே விளாத்திகுளத்திற்கும் போனார்கள். எனவே நான் எந்த நேரத்தில் எங்கே இருப்பேன் என்று எனக்கே தெரியாது. வீட்டில் ஒருபக்கம் வேலைக்குப் போகாமல் சுற்றுகிறானே என்ற கவலை இருந்தாலும், இன்னொரு பக்கம் பெரிய அறிவாளிகளுடனல்லவா, சுற்றுகிறான். பரவாயில்லை என்று ஆறுதலும் இருக்கும். இப்படி சுற்றிக் கொண்டிருக்கும் போது எங்கள் நண்பர் கூட்டத்தில் புதிய வரவாக அப்பணசாமி வந்து சேர்ந்தார் புதிய ஊர் சுற்றியாக. அவர் முத்துச்சாமியின் நண்பர். முத்துச்சாமியே அவரை அறிமுகப்படுத்தினார். பார்த்தவுடன் எந்தப் மனப்பதிவையும் ஏற்படுத்தாத முகமுடைய அப்பணசாமி கோவில்பட்டி மெயின் ரோட்டில் அப்பாவுடன் சேர்ந்து துணி வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தார். பிளாட்பாரக்கடை. சில நேரம் அவருடைய அப்பா இருப்பார். சில நேரம் அப்பணசாமி இருப்பார். எந்த நேரத்தில் யார் இருப்பார்கள் என்பது எங்களுக்குக் கடைசி வரைக் குழப்பம் தான். ஆனால் அவர்களுக்குள் ஒரு ஓப்பந்தம் இருந்தது போல் தான் தெரிந்தது. சிலசமயம் ஒன்றிரண்டு நாட்களுக்கோ அல்லது அதற்கு மேலோ அப்பணசாமியின் அப்பா கடையில் இருக்கமாட்டார் அப்பணசாமியிடம் கேட்டால் தெரியாது என்பார். இரண்டு பேரும் எப்போது சந்தித்து எப்போது பிரிவார்கள் என்றும் தெரியாது. அபூர்வமாகச் சந்திக்கும் வேளை ரெண்டு பேரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ள மாட்டார்கள். அவர்களது நடவடிக்கைகள் ஒரு விசித்திரமான கணித சூத்திரம் போலவோ அல்லது ஒரு தத்துவார்த்தமான மெளன நாடகக் காட்சி போலவோ இருக்கும்.


என்ன தான் முத்துச்சாமி அப்பணசாமியை அறிமுகப்படுத்தினாலும் முதலில் எங்களில் யாரையும் அப்பணசாமியிடம் நெருங்கவிடவில்லை. காரணம் தினசரி சாயங்காலம் அல்வாவும் மிக்சரும் அப்பணசாமி வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இல்லையென்றால் இரவில் புரோட்டா சால்னா வாங்கிக் கொடுப்பார். இந்த ரகசியத்தை எப்படியோ கண்டுபிடித்து சாரதி தான் சொன்னார். அவ்வளவு தான் டீக்கும் சிகரெட்டுக்கும் அல்லாடிக்கொண்டிருந்த நாங்கள் விடுவோமா. முத்துச்சாமிக்கு முன்பாகவே அப்பணசாமியிடம் ஆஜராகி கடையில் உட்கார்ந்து இலக்கியம் பேசிக் கொண்டிருப்போம். அவரிடம் ஒரு டீயும் சிகரெட்டும் வாங்கிய பிறகே அந்த இடத்தை விட்டு அகன்று போவோம். நாளாக நாளாக எந்த நேரமாக இருந்தாலும் அப்பணசாமியைத் தேடிப்போவது என்றாகி விட்டது. அவருக்கும் அது பிடித்துப் போய் விட்டது.


ஒரு ஆறுமாசம் கழிந்திருக்கும் திடீரென அவருடைய கடை திறக்கப்படவில்லை. பலநாட்களாக திறக்காமல் போகவே நாங்கள் அப்பணசாமியைத் தேடி அவருடைய வீட்டிற்குப் போனோம். எந்த உணர்ச்சியுமில்லாத முகபாவத்தோடு எங்களாடு பேசிக்கொண்டிருந்தார். இனி கடை திறக்க முடியாது. அப்பணசாமி இருந்த நேரத்தில் துணி விற்ற பணத்தை அப்பணசாமி எடுத்து செலவு பண்ணியிருக்கிறார். அதே போல அவருடைய அப்பா இருந்த நேரத்தில் விற்ற பணத்தை அவருடைய அப்பா எடுத்துச் செலவு செய்திருக்கிறார். பிறகென்ன ? அப்பணசாமியும் எங்கள் கூட்டத்தில் சேர்ந்து விட்டார்.


தீவிர படிப்பாளியாக திகழ்ந்த அப்பணசாமி மிகக் குறைவாகவே பேசுபவராகவும் ஆனால் எழுத்தில் அழுத்தமாக தன் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். கோவில்பட்டி யிலிருந்து சென்னை வந்து நண்பர்கள் வட்டத்தில் இணைந்தார். சென்னையின் அத்தனை நெருக்கடிகளுக்கும் ஈடுகொடுத்து தன்னை ஒரு சுதந்திரப்பத்திரிகையாளராக நிலைநிறுத்திக் கொண்டார். பின்னர் தமிழின் முதல் இணையதளப்பத்திரிக்கை ஆறாம் திணை ஆசிரியராகவும் இருந்தார். இப்போதும் சென்னையில் ஒரு வலுவான பத்திரிக்கையாளனாக நாடகாசிரியராக செயல்பட்டுக் கொண்டிருக்ககூடிய அப்பணசாமியின் தென்பரை முதல் வெண்மணி வரை என்ற நூல் தமிழ் இலக்கியத்தில் வாய்மொழி வரலாறு நூல்களில் ஒரு முக்கியமான பங்களிப்பு எனலாம். சென்னைக்குப் பஸ் ஏறிய போது நிச்சயமற்ற வாழ்க்கையை எதிர்கொள்ள அப்பணசாமியிடம் இருந்த தைரியம் எங்களுக்கில்லை.


அன்று பெளர்ணமி, விளாத்திகுளம் வைப்பாற்றுக்கு நடந்து போகிறோம். நான், ஜோதிவிநாயகம், அப்பணசாமி வைப்பாற்றின் மணல் நிலவின் வெள்ளையொளியில் மின்னுகிறது. ஏகாந்தமான வெளி, நிழலுருவங்களாக நாங்கள் வைப்பாற்றின் நடுவே மிதந்து சென்று கொண்டிருந்தோம். மணல் பரப்பின் குளர்ச்சி உடலெங்கும் பரவ அப்படியே உட்கார்ந்தோம். ஏதோ பேசிக் கொண்டு வந்தோம். எப்படியோ பேச்சு அந்தோன் சேகவ்வின் கதைகளைப் பற்றித் திரும்பிவிட்டது. எங்களுக்குள் உற்சாகம் பொங்கி விட்டது. ஒருவர் மாற்றி ஒருவர் சேகவ்வின் கதைகள சொல்லிக் கொண்டு வந்தோம். ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் (1860  1904) உலகச் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவர். நாற்பத்தி நான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த சேகவ் தன் வாழ்நாளில் ஐநூற்று அறுபத்தியெட்டு சிறுகதைகளயும் நாடகங்களையும் எழுதியுள்ளார். அவருடைய சிறுகதைகளில் யதார்த்த வாழ்வினூடே தெரியும் அசாதாரணத்தை சொல்லுவார். உப்புசப்பற்ற சலிப்பான வாழ்க்கையை விவரிக்கும் போதே அதற்குள் இருக்கிற சுவாரசியத்தை சொல்கிற கலை அவருடையது. மகத்தான அந்த எழுத்துக் கலைஞனின் எழுத்துக்கள நாங்கள் கொண்டாடினோம். எங்களுக்கு மிகவும் பிரியத்திற்குரிவராக மாறியிருந்தார் அந்தோன் சேகவ்.


அப்பணசாமி சேகவ்வின் டார்லிங் என்ற கதையைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். பேசப்பேச எங்கிருந்தோ ஒரு உன்மத்த நிலை அந்த நிலவு வெளியினூடே வந்து உடலில் புகுந்தது போல சிரிக்க ஆரம்பித்தார். நாங்களும் சிரித்தோம். எங்கள் சிரிப்பின் ஒலி குறைந்து நின்ற பிறகும் அப்பணசாமியின் சிரிப்பொலி கேட்டுக் கொண்டேயிருந்தது. அது ஆந்திரேய் எபீமிச்சின் சிரிப்பாக இருந்தது. ஜோதிவிநாயகம் ஒரு கணம் பயந்து விட்டார். ஆனால் அந்த சிரிப்பின் ஒலிக் கோர்வை ஒரு இசைக் கோவையைப் போல நீண்டு கொண்டேயிருந்தது. ஆம் நாங்கள் சேகவின் ஆறாவது வார்டிலுள்ள பைத்தியங்களாக மாறியிருந்தோம். கலையின் உன்மத்தம் பிடித்த பைத்தியங்களாக அந்த இரவில் திரிந்தோம். மறக்கமுடியாத அந்த வைப்பாற்று இரவை மனம் கூடுகட்டிப் பாதுகாத்துக் கொண்டேயிருக்கிறது. அவ்வப்போது எடுத்துத்துடைத்து விளக்கிப் புதுக்கி மீண்டும் அடைகாத்துக் கொள்கிறது. மீண்டும் வருமா அந்த நாட்கள் ! பைத்தியங்களாக சுற்றிய அந்த நாட்கள் ! எங்கள் அன்புக்குரிய அப்பணசாமி அந்தோன் சேகவ்வாக மாறிய அந்த நாட்கள் ! மீண்டும் வருமா !


சேகவ் எதையும் பலத்தகுரலில் பிரகடனம் செய்வதில்லை வாசகருக்கு நேரடியாய் அறிவுறுத்த முற்படுவதில்லை. ஆனால் சேகவின் கதைகள் படிப்போரைக் கலங்கச் செய்கிறவை. துயரம் தோய்ந்த புன்னகை புரிகிறவை. மென்மையானவை. அவரது தலைசிறந்த படைப்பாக ஆறாவது வார்டை ஜோதி விநாயகம் குறிப்பிடுவார். அதன் பலபகுதிகளை வாசித்தும் காட்டுவார். ஆம் நான் நோயுற்றவன் தான். ஆனால் நூற்றுக்கணக்கான பைத்தியக்காரர்கள் சுதந்திர மனிதர்களாய் வெளியே இருந்து கொண்டிருக்கிறார்கள். சித்த சுவாதீனமுள்ளவர்களிடமிருந்து இவர்களை வேறுபடுத்தி இனங்கண்டு கொள்ளத்தெரியாத மூடர்களாய் இருக்கிறீர்கள் நீங்கள். இந்த ஒரே காரணத்தால் இவர்கள் சுதந்திரமாக வெளியே இருக்கிறார்கள். பிறகு ஏன் நானும் பரிதாபத்துக்குரிய இவர்களும் இங்கே கிடந்து அழிய வேண்டுமாம்...


எத்தனை சத்தியமான வார்த்தைகள். ஆறாவது வார்டு வேறொன்றுமில்லை நமது சமூகம் தானே என்றார் அப்பணசாமி. நான் அந்தோன் சேகவ்வை ஆராதிக்கிறேன்... என் மானசீகக் குருவாக வணங்கி மகிழ்கிறேன். பிரியத்துடன் அவர் கைகளப் பற்றிக்கொள்கிறேன். அந்தக் கைகளில் அப்பணசாமியின் சிரிப்பு அதிர்ந்து கொண்டிருந்தது.

(எனது முன்னொரு காலத்திலே என்னும் நினைவுகளின் தொகுப்பிலிருந்து..)
நன்றி: http://udhayasankarwriter.blogspot.in/2012/03/blog-post.html
Posted by அப்பணசாமி at 9:58:00 முற்பகல்
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்

Labels:படைப்புகள், நேர்காணல், பார்வை, விமர்சனம் அந்தோன் செகாவ், அப்பணசாமி, உதயசங்கர், கோவில்பட்டி, பார்வை, ரஷ்ய இலக்கியம்

Monday, 18 December 2017

பற்றியெரியும் பாதங்கள் இந்திய தலித் இயக்கம் பற்றிய ஆய்வு டி.ஆர். நாகராஜ் :: உன்னதம் காலாண்டிதழ் 4 ஜூன் 95

பற்றியெரியும் பாதங்கள்

இந்திய தலித் இயக்கம் பற்றிய ஆய்வு

டி.ஆர். நாகராஜ்
உன்னதம் www.padippakam.com 
  ஜூன் 1995 
படிப்பகம் 
www.padippakam.com

D.R. NAGARAJ கன்னடத் தற்காலக் கவிதையில் பிஎச்.டி செய்த டாக்டர் டி.ஆர். என். தற்காலக் கன்னட இலக்கிய விமரிசனத் தில் ஒரு சக்தியாக விளங்குபவர். ஆங்கிலத்திலும் கன்னடத்தி லும் சமூகப் பிரச்சனை களையும் இலக்கிய விமர்சனத் தையும் எழுதும் நாகராஜ், நாடகம், டாக்கு மென்டரி திரைப்படம், சுற்றுச்சூழல் செயல்பாடுகள் என்று பல்வேறு ஈடுபாடுகள் கொண்டவர். தலித் இலக்கியச் சிந்தனையில் தனித்த நிலை பாடுள்ள நாகராஜ் அம்பேத் கரையும் காந்தியை யும் இணைப்பதில் நம்பிக்கை யுள்ளவர். கன்னட இலக்கியவாதிகளின் கோட்டையாக விளங்கும் 
பெங்களுர் கன்னடத்தறையில் பணியாற்றும் நாகராஜ் தற்சமயம் டெல்லியி லுள்ள, வளர்ந்துவரும் சமூகங் கள் பற்றிய உயராய்வு மையத் தில் Senior Fellow 6ură, go sirsIIIi. G8. வி. சுப்பண்ணா பெற்ற மாக்ஸ்லே பரிசுப்பணத்தில் வெளிவரும் கன்னட நூல் வரிசையின் பொறுப்பாசிரிய ரான நாகராஜ் அவ்வரிசையில் தமிழுவனின் தமிளு காவ்ய மீமாம்சே என்ற நரலையும் வெளியிட்டுள்ளார். நாகராஜ் sI(sgäu THE FLAMMING FEET 1993 புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.

குறிப்புகள்: தமிழவன்

1. தலித் இயக்கத்தின் வேர்களில் சுயமரியாதையும் சுயபுனிதத்துவமும் டாக்டர் அம்பேத்கரின் அரசியல் போக்கினைப் புரிந்துகொள்ள காந்தியடிகளின் அரசியல் ஆளுமையுடன் அதனை ஒப்பிட்டுப் பார்த்தல் அவசியம்.இருவருக்குமிடையே யுள்ள வெளிப்படையான வேற்றுமைகளின் மூலம் அம்பேத்கர் எதிர்கொண்ட தனித்துவமிக்க பிரச்னைகளை கண்டுகொள்ளலாம். இருவருக்குமிடையேயுள்ள சரி கட்டமுடியாதத்தன்மை இயல்பானதா?அடிப்படையானதா? இந்தக் கேள்விக்கான பதில் தலித்தியத்திற்கான உறுதியான திர்மானங்களுக்கு இட்டு செல்லுமென்பதால் கவனத்துட னும் எச்சரிக்கையுடனும், ஆழமாய் வேரூன்றியுள்ள சார்புத்தன்மைகளை மீறிய நல்லெண்ணத் துடனும் அணுகுவது அவசியம். தலித் இயக்கமென்பது, திண்டத்தகாதவர்களின் பிரச்னைகளை எதிர்கொள்ளும் காந்தியத்தைதிர்மானமாக புறக்கணிக்கிற மனோநிலையின் விளைவென்றும், தனது கொள்கைகளையும் எல்லைகளையும் தானாக ேவ வகுத்துக் கொண்ட ஒரு இயக்கமென்றும் சொல்லலாம். ஆனால் இன்று, வரலாற்றுச் சூழ்நிலைகளின் மாற்றங்களும் அதன் விளைவுகளும், தலித் இயக்கத்தை செம்மைப்படுத்திய சக்திகளின் வேர்களையும் அதன் அமைப்புகளையும் மறுபரிசீலனை செய்யநிர்பந்திக்கின்றன. இப்பரிசீலனை நாம் இதுவரை அறிந்திருக்காத சில ஒட்டுறவுகள் இருப்பதனை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு விநோதமான ஆச்சரியத்தை தருமென்றாலும் அதற்கும் நாம் தயாராயிருக்க வேண்டும். முதலில் காந்தி - அம்பேத்கார் உறவுகள் பற்றின ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களைப் பரிசிலிப்போம். இந்த ஆய்வின் போது நமக்கு ஏற்கனவே தரப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு நாம் அடிமையாகிவிடக்கூடிய அபாயமிருப்பதால் மிகுந்த எச்சரிக்கை தேவை. அம்பேத்காரின் அரசியல், காந்திய தத்துவங்களிலிருந்தும் 1947 வரை தேசத்தை ஆட்கொண்டி ருந்த கலாச்சார அரசியலிருந்தும் தீர்மானமாக வேறு பட்டது. தேசிய அரசியலின் மையமாகக் கருத்தபட்ட காந்தி யடிகளோடு ஒத்துப்போகாத நிறையபேர், விசித்திரமானவர் களாய் கருத்தப்பட்டனர். காந்தி அம்பேத்கர் இருவருமே எதையாவது சாதித்தாக வேண்டுமென்கிற உந்துதலில் பொறுமையை இழந்து வரலாற்றில் மூழ்கிப்போனவர்கள். இதன் காரணமாகவே ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டார்கள். வரலாற்று செயல்களென்பது ஆக்கப்பூர்வமான பொறுமையின்மையின் மகாசமாதிநிலையே! காந்தி அம்பேத்கர் இருவருமே காரியத்தில் இறங்கியதன் மூலம்
பொறுத்தவரை அவர்கள் மாற்றங்களை விரும்பாத மரபுரீதியான அடிப்படைவாதிகளுடனே ஒத்துழைத்தார்கள். 
சமூக நீதி மற்றும் நிஜமான வேற்றுமைப்படுத்தல் என்கிற பெயரில் வேலை மற்றும் பிற பொருளாதார ரீதியான பலன்களை அடைவதற்கான இந்த இயக்கத்தின் முயற்சியை சில வேளைகளில் முரட்டுத்தனம் கலந்ததாயிருந்தாலும்கூட, அகௌரவமானதும்கூட எனலாம். இவ்வியக்கத்தின் முகம், சாதி அமைப்பினை எதிர்த்து சவால் விடும் சக்திகளைச் சார்ந்தே அழகோ குரூரமோ பெறுகிறது. இந்தியாவின் சாதி அமைப்பு கலாச்சார மதிப்பீடுகளின் கட்டமைப்பு மட்டுமல்ல சாதிய வரிசைப்படியிலமைந்த பலவிதமான அரசியல் அதிகாரம், செல்வம் போன்றவற்றின் சமச்சீரற்ற பங்கீட்டிற்கான ஒரு தீர்மானிக்கப்ட்ட மாதிரியும்தான். சாதி அமைப்புக்கெதிரான இயக்கத்தின் புரட்சியில் ஆன் மிக அழகினை கண்டு பாராட்டுகிறவர்கள், பொருளியல் ரீதியான தேவைகளை குறித்த கோரத்தையும் ஜீரணித்துக் கொள்ளத்தான் வேண்டும். 
-இப்புரட்சியின் ஆன்மிக அழகினை காந்தியடிகளால் ரசிக்க முடிந்திருக்கும் என்றாலும் அதன் பொருளியல் குரூரத்தினால் மனச் சங்கடங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. 

இன்றைக்கும்கூட சாதிய அநீதிகளுக்கெதிரான போராட்டங்களுக்குக் கிடைக்கிற பலவீனமான ஒத்துழைப்பு, இயக்கத்தின் சுயேச்சையான ஆதரவாளர்களின் ஆர்வத்தை தொடர்ந்து பாதிக்கிறது. அரசியல்காரியங்களில் ஆர்வமாய் முன்வருகிற இவர்கள் மண்டல் கமிஷன் போன்ற முக்கியமான பிரச்சனைகளில் இயக்கம் ஈடுபடும்போது, விசித்திரமாக கோபம் கொள்கிறார் கள். 

சாதீய மேலாண்மையை எதிர்த்துப் போராடுகிற உன்னதத்தன்மையும், கல்வி வேலை வாய்ப்புகளுக்கென போராடுகிற லௌகிக யதார்த்தத தன்மையும் இணைகிற புள்ளியே தலித் இயக்கத்தின் தொடக்கம். இருந்த சூழ்நிலைகளுக்கெதிராக அம்பேத்கர் பிரா மணரல்லாத இயக்கத்தினைக் குறித்து நடைமுறைக்கு சாத்தியமான ஒரு கண்ணோட்டத்தினை வைத்திருந்தார். சென்னை மாகாணப் பொதுத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி படுதோல்வி அடைந்தபோது அவர் ஆற்றிய உரையில் அவரது கண்ணோட்டம் தெளிவாகத் தெரிகிறது. பிரமாண வகுப்பிற்கும் தங்களுக்குமிடையே என்ன வித்யாசங்கள் என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. இவர்கள் அனைவரும் பிராமணர்களை தீவிரமாக விமர்சித்தாலும் அந்த விமர்சனங்களின் அடிப்படைகள் கொள்கை பூர்வமானது என்பதை அவர்களில் எவரொருவராவது சொல்ல முடியுமா? இவர்களுக்குள் எந்தளவு பிராமணத்துவம் ஊறியிருந்தது? தாங்களும் நெற்றியில் நாமத்தைப் போட்டுக் கொண்டு தங்களை இரண்டாம் வகுப்பு பிராமணர்களாகக் கருதிக்கொண்டனர். பிராமணியத்தை முற்றிலும் கைவிடுவதற்கு பதிலாக பிராமணியத்தின் தாத்பர்யத்தை, சீரியதென்கிற முறையில், பற்றிக் கொண்டிருந்தனர். இரண்டாமிடத்தை தங்களுக்கு விதித்ததொன்றே பிராமணியத்தின் மீதான அவர்களின் கோபமாக இருந்தது. 

இளைஞர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வேலைவாய்ப்பினைப் பெற்றுத் தருதல் என்பதை தனது முதன்மை அக்கறையாகக் கொண்டிருந்தது பிராமணரல்லாதோர் கட்சியின் அரசியல் திட்டத்திலிருக்கிற ஒரு குறையாகும். அது நியாயமானது - சட்டபூர்வமானது என்பது மறுக்க முடியாததுதான். ஆனால் இருபது வருட காலத்தின் போராட்டத்தின் பயனாய் பொதுத் துறையில் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ள இளைஞர்கள் தங்களது சம்பளத் தை கையில் வாங்கிய பிறகு கட்சியை நினைத்துப் பார்கிறார்களா? பொறுப்பிலிருந்த இருபது வருட காலமும், கிராமங்களில் வட்டிக்கடைக்காரர்களின் பிடியில் சீர்குலைந்த வாழ்வினை நடத்தும் 90% பிராமணரல்லாத ஜனங்களை கட்சி மறந்துவிட்டது. 
முதலில் தலித்துகளுக்குள்லிருந்து ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் முன்னேற்றமும், மத்திய தரத்தினரின் பண்பு நலன்களை அடைவதுமான நிலை. இந்நிலை பிற பிரிவினரிடையே ஒரு சக்திவாய்ந்த திட நம்பிக்கையை உருவாக்குகிறது. இந்த திட நம் பிக்கையின் அடிப்படை - நிஜம், கற்பனை இரண்டுமாகவே அமைகிறது. குறிப்பிட்ட பிரிவினர் பொதுத் துறையில் வேலை வாய்ப்பை பெறுவது நேரிடையான நிஜம். ஆனால் இக்குறிப்பிட்ட சிறுபான்மை எண்ணிக்கையிலுள்ள பிரிவினர் அடைந்த சமூக அந்தஸ்தினை முழுமையான சமூகக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படாதவரை, தலித் சமூகம் முழுவதுமாய் அடைவதென்பது கற்பனையானதே1 தேர்ந்தெடுத்த ஒரு பிரிவின் முன்னேற்றம் என்பதின் உண்மையானப் பிரச்சனை வேறெங்கோ உள்ளது. இதனை முன்னேற்பாடான மறதியென்றுகூட சொல்லலாம். 


இன்னும் தீர்மானமாகச் சொல்லப்போனால் தன் இறந்த காலத்தைப் பற்றிய அறிந்த மறதியெனலாம். ஜஸ்டிஸ் கட்சியின் தோல்வியினைக் குறித்து பேசும்போது அம்பேத்கர் இப்பிரச்சனையைத்தான் முன் வைத்தார். தங்களின் வேலைக்கான முதல் சம்பளத்தை வாங்கிய பிறகு பிராமணரல்லாத இளைஞர்கள் கட்சியைப்பற்றி நினைத்துப் பார்க்கிறார்களா? சாதி அமைப்பின் செயல்பாடுகள். தாழ்த்தப்பட்ட தனிநபரின் மனதில் சுய சந்தேகம், சுய நிராகரிப்பு. சுய வெறுப்பு போன்ற மனோநிலைகளை தோற்றுவிக்க முயலும். இம் மனோநிலைகள் அனைத்தும் திரட்டப்பட்டு தனிநபரின் மனதில் அபத்திரத்தை விதைக்கிற கூட்டு சக்தியாகின்றன. இழிவு படுத்தப்பட்ட இனங்களிலிருந்து ஒரு நவீன மனிதனின் பிறப்பு என்பது இனத்துடனான உறவுகளை அவன் வேதனையுடன் துண்டித்துக் கொள்தல் என்பதோடு மட்டுமில்லாது தனது இறந்த காலத்தினை அறிந்தே மாற்றிக்கொள்வதற்கான முயற்சியாகவும் இருக்கிறது. 

அம்பேத்கர் தன்னுடைய உரைவில் சொன்ன இரண்டாவது கருத்து தனிமனித அளவில் மட்டுமல்லாமல் இயக்கம் முழுவதிற்குமான மாற்று கலாச்சார மதிப்புகளை வரையறுக்கிற பிரச்சனை. இறந்த கால மறதி நிலையென்பது. பழங்கலாச்சாரத்தை புறந்தள்ளுவதோடே புதிய காலச்சாரத்தையும் நிர்மாணிக்கிற கடுமையான முயற்சியை அதைரியப்படுத்துகிற ஒரு மயக்க நிலையை ஏற்படுத்தும் அம்பேத்காரினால் இந்த கலாச்சார ஜடத்துவத்தை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடிந்ததில்லை. அவரது வாழ்வு மொத்தத்தையுமே இந்த மனோநிலையினை எதிர்த்த தளர்ச்சியற்ற போராட்டம் என்று சொல்லலாம். 

ஒரு இயக்கத்திற்கும் அதன் நினைவு அடுக்குகளுக்குமிடையேயுள்ள உறவினை தீர்மானிக்கிற பிரச்சனைகளில் அவரை இந்தப் போராட்டம் கொண்டு தள்ளியது. காந்தியும் அம்பேத்கரும் கசப்புடன் மோதிக்கொண்ட பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. காந்தியைப் பொறுத்தவரை இந்து சமயக் குறியீடுகளை உபயோகிப்பது இந்துத்துவத்தை சார்ந்ததாகவே இருந்தது. அடிப்படைத் தீவிரத்தோடு இந்து குறியீடுகளை உபயோகிக்க அவர் கையாண்ட முறைகள், பலரை உற்சாகப்படுத்துவதாய் அமையவில்லை. இந்துத்துவத்திக்கு எதிரான ஒரு கற்பனை முறையைக் குறித்த பரந்த அறிவும் ஆழமும் காந்தியின் இந்துத்துவ முறைக்கு தேவையாகிறது. காந்தியின் அரிசனத் தொண்டர்கள் மட்டுமில்லாமல் அவரின் ஜாதி இந்துத் தொண்டர்கள் கூட, ராஜாஜி,லோகியா போன்றோர்களைத் தவிர. இந்து குறியீடுகளை உபயோகப்படுத்தும் இந்த ஆபத்தான (இரு முனை கத்தி) வழியை பின்பற்ற முடியவில்லை. இவர்களில் பெரும்மான்மையோர் இம் முறைகளின் தகாவு பரிமாணங்களை அறிந்து கொள்ளாமல் வெறும் கொண்டாட்டங்களாக மட்டும் கடைபிடித்தார்கள். ஆலயப் பிரவேச இயக்கத்தின் போதுதான் அவர்கள் தாக்குதலுக்குள்ளாகிற நிலையினை எதிர்கொண்டனர். ஆனால் காந்தியின் விரோதிகள் அவரின் திட்டங்களுடைய பாதிப்புகளை நன்றாக புரிந்து கொண்டதுதான் அவைகளை எந்தவித தடையுமில்லாது அனுமதித்தார்கள். காந்தியின் தொண்டர்கள் தோல்வியுற்றபோதெல்லாம் அவருடன் முரண்பட்டவர்கள் வெற்றிகண்டார்கள். 

- அம்பேத்கரை பொறுத்தவரை காந்தியடிகளால் உபயோகப்படுத்தப்பட்ட தர்க்கபூர்வமான முறைகள் சிக்கலானவையாகவும் உபயோகமற்றதாயுமுள்ள இந்துத்துவத்தின் கேடுகளை எதிர்த்துப் போராடுகிற கருவிகளாகவே கருதினர். இந்துத்துவத்தைப் பற்றிய அது விதமான மூடி மறைக்கும் போக்குகள் சாதீய கட்டமைப்பு பற்றிய முணுமுணுப்புகளை சுலபமாக தோற்றுவிப்பதாகிறது. இதுதான் காந்தியடிகளின் பெரும்பாலான தொண்டர்களிடையே ஏற்பட்டது. ஒரு புதிய தேவாலயத்தை கட்டமைக்க அம்பேத்கருக்கு ஒரு வலுவான அடித்தளம் தேவைப்பட்டது. ஆனால் இதற்கெதிராக இந்துத்துவமோதற்காலிகமான ஒரு எதிர்ப்பை மட்டுமே அனுமதித்தது. அவ்விதமான தற்காலிகமான எதிர்ப்பென்பது புரட்சிக்கெதிரான செயலற்ற மௌனத்திற்கே சமமானது. ஆனாலும் கூட கிராமிய இந்தியாவைப் பற்றிய அம்பேத்கரின் உணர்ச்சி ததும்புகிற வருத்தம் நிறைந்த கருத்துக்கள் காந்தியின் குரலிலேயே ஒலிப்பதை நாம கவனிக்க வேண்டும். 1930 களில் இருவரும் எதிர் எதிர் நிலைகளில் நின்று மோதிக்கொண்டாலும் அதன்பின் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டார்கள். என்றாலும் இந்த அங்கீகாரம் பல தொடர்ச்சியான மோதல்களுக்குப் பின்னரே சாத்தியமாயிற்று. 

- தீண்டாமையென்பது தனிமனித 'சுயத்தின் ' ஒரு பகுதியே. எனவே தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை அவர் "சுயத்தை புனிதப்படுத்தக்கூடிய ஒரு பவித்ரமான சடங்காகவே கருதினார். | உன்ன தம் 


தனிமனித 'சுயத்தின் மீதான மத ஆக்கிரமிப்பை 1932 ல் புனாவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பின்னனியில் பார்க்க வேண்டும். இந்த உடன்படிக்கையே காந்தியடிகளுக்கும் அம்பேத்காருக்குமிடையேயான சரிகட்ட முடியாத முரண்பாடுகளைக் குறித்த தீர்மானங்களுக்கு இட்டு செல்கிறது. சமூகப் பொருளாதார அரசியல் அதிகாரங்களின் கட்டமைப்பில் தலித்துகளுக்கு ஒரு சுயேச்சையான அரசியல் அடையாளத்தை நிறுவுவதே தீண்டாமையென் அமிபேத்கர் வரையறுத்தார். ஆனால் காந்தியடிகளைப் பொறுத்தவரையில் இப்பிரச்சனை முற்றிலும் மதசம்பந்தமான ஒன்றாகவே இருந்தது. அதிலும் இந்து மதத்தின் உள்விவகாரமாக மட்டுமே அவரால் பார்க்கப்பட்டது. இந்த வரையறை குறித்த மோதலில், நமக்கு தெரிந்த சரித்திர சாட்சிகளை வைத்துப் பார்க்கும் போது. காந்தியடிகளே வெற்றி பெற்றிருக்கிறார் என்று தெரிகிறது. இன்னும் கூட அம்பேத்கரின் தொண்டர்களிடையே தோல்வியின் வடுக்கள் இருப்பதை பார்க்கலாம். காந்தியின் மரணத்திற்குப்பின்னர் தலித்துகள் மாபெரும் பழிவாங்கலுக்கு ஆளாவார்களே என்கிற பயமே அம்பேத்கரை பூனா உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளச் செய்தது. ஆனாலும் மற்றெல்லா விஷயங்களுமே தேசத் தந்தைக்கு சாதகமானதாகவே இருந்தது. அதிர்டவசமாக வரலாற்றின் தற்காலிக வெற்றிகளைக் குறித்து பெருமை கொள்கிற மனிதராக காந்தியடிகள் இருக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை வாய்மையே மிக முக்கியமானது. அவருடைய ஆழ் மனதில் தன்னுடைய இந்த வெற்றி நிரந்தரமற்றது என்று அவர் அறிந்தே வைத்திருந்தார். மானசீகமான , நடைமுறையிலான இரண்டு விதங்களிலும் காந்தியின் தார்மீக நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே எர்வாடா உண்ணாவிரதம் விளங்கியது. தர்மத்திற்கும் சத்தியத்திற்குமிடையேயான இடைவெளியினை இம்முறை ஆழமாக உணர்ந்த அவர், அம்பேத்காரின் தீண்டாமையைக் குறித்த பார்வையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இருப்பதால் அதை பரிசோதிக்க வேண்டும் என்று நினைத்தார். இதுவே இந்திய வரலாற்றில் வசீகரமான ஒரு மோதலின் ஆரம்பமாக அமைந்ததற்கு அரிஜன் நாளிதழின் பக்கங்கள் சாட்சிகளாகின்றன. 
தீண்டாமையை ஒழிப்பதற்கு மட்டுமே இயக்கத்தினை ஏன் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்? மொத்தமாக சாதி அமைப்பினையே ஏன் ஒழிக்கக் கூடாது? என்ற கேள்விக்கு காந்தியின் பதில் : 

இந்துத்துவத்தில் நடைமுறைப் படுத்தக்கூடிய தீண்டாமையென்பது என்னைப் பொறுத்தவரை, கடவுளுக்கெதிரான மனிதருக்கெதிரான ஒரு பாவம். எனவே அது ஒரு விஷத்தைப் போல மெல்ல மெல்ல இந்துமதத்தின் முக்கியத்துவங்களை அரித்துத் தின்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் எண்ணற்ற சாதிகள் இருக்கின்றன. அவை ஒரு சமூக நிறுவனங்களாகவே இயங்குகின்றன. அவை பல உபயோகமான காரணங்களுக்காக பணியாற்றுகின்றன. இன்றும் கூட ஒரு குறிப்பிட்ட அளவு வரை அவை பணியாற்றுகின்றன. அதில் எதுவும் பாவமானது கிடையாது. ஆன்மீக முன்னேற்றத்திற்கு அவை தடையேற்படுத்திய தில்லை எனவே, சாதி அமைப்பிற்கும் தீண்டாமைக்கும் உள்ள வேறுபாடு என்பது தரத்திலானது அல்ல அது வேறு விதமானது . வகையானது. 

காந்தியின் இக்கருத்துகளும் வர்ணாசிரமதர்மத்தில் அவருக்கு இருந்த நம்பிக்கைகளும் அடிப்படைவாதிகளினால் விமர்சிக்கப்பட்டன. வேறொரு விதத்தில் இந்த அறிக்கையை பார்க்கும் போது இது பெருவாரியான இந்துக்கள் எந்தவித சிரமுமில்லாமல் ஏற்றுக்கொள்ளக் கூடிய சாதிய சமத்துவத்தை சொல்கிறது. - 

குறிப்பாக உயர்சாதி, மத்திய சாதியினரின் அறிவு ஜீவிகள் சாதி அமைப்பின் நம்பிக்கைதரும் அம்சங்களை தனது உறுப்பினர்களுக்கு அடையாள உணர்வளிக்கும் விதத்தில் வரையறுத்தனர். இதற்கெதிராக சாதி அமைப்புகள் தலித்துகளுக்கு அடையாள உணர்வையும் பாதுகாப்பையும் அளிப்பதற்கு பதிலாக தாழ்வுமனப்பான்மையும் அவமானத்தையுமே தொடர்ந்தளித்தனர். அதுபோலவே அடையாளமென்பது அழிக்க இயலாத களங்கத்தை தந்தது. சாதிய அமைப்பை ஒரு நம்பிக்கை தருவதாக காட்டவோ அல்லது ஆதரிப்பதோ தலித் இயக்கத்தினரால் சந்தேகிக்கப்பட்டது. இந் நிலையையே மேற்சொன்ன கேள்விக்கு அம்பேத்கர் அளித்த பதில் தெளிவாக்குகிறது.
 
- " ஜாதி பகிஷ்கரிப்பு என்பதே சாதி அமைப்பின் உபப்பொருளே ஜாதிகள் இருக்கும் வரையில் ஜாதி பகிஷ்கரிப்பும் இருந்து கொண்டிருக்கும். ஜாதி அமைப்பினை நொறுக்காத வரையில் ஜாதி பகிஷ்கரிப்பை விடுவிக்க முடியாது. மோசமான வெறுக்கத்தக்க கொள்கைகளை  காபரும் PERADE- TRTITLEET at Uts NaTURE GENTE AF11 - கழித்துக்கட்டுவதை தவிர வேறெதுவுமி எதிர்வரும் போராட்டத்தில் இந்துக்களை காப்பாற்றி அவர்களின் இருப்பை உறுதி செய்ய உதவாது" THAT THEmes 3&ID SETTE காந்தியின் கண்ணோட்டத்தை மறுக்கிறவகையில் வெளியிடப் பட்ட இக்குறுகிய அறிக்கையே கடந்த இரண்டு பத்தாண்டுகளாக தலித் இயக்கத்தின் அறிக்கையாக இருந்து வருகிறது. பிற சூத்திரர் மறுப்பு வடிவங்களினின்று தலித் இயக்கத்தை வேறுபடுத்திக் காட்டக்கூடிய ஒரு தனித்துவ அடையாளத்தினை இவ்வறிக்கையின் தாத்பர்யம் வடித்துக் கொடுத்தது. 1930 களிலேயே ஜாதி அமைப்பினைக் குறித்த காந்தியின் ஆதரவு நிலை பல கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது. அதை அவர் எப்போதுமே முற்றிலுமாக மறுக்கவும் முடியவில்லை. மனிதத்துவத்தை உருக்குலைக்கின்ற நவீன நாகரிகத்தின் அம்சங்களை வெறுத்த காந்தி, அதற்கிணையான அபாய்மாயிருக்கிற சாதி அமைப்பின் கட்டமைப்புகளைப் பொறுத்து சிறிது மென்மையாகவே நடந்து கொண்டார். சாதி அமைப்பின் நிர்ணய விதிகளில் காந்தி எந்தக் குறையையும் காணவில்லை. ஆனால் அதன் நடைமுறை அம்சங்களில் இருக்கிற தவறுகளையே குற்றம் சாட்டினார். உறுதியான இயக்கமொன்றே இதனை சரிசெய்ய முடியும் அடிப்படைவாதிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நிர்ணய விதிகளுக்கும் நடைமுறை விதிகளுக்கும் இடைய உள்ள வேற்றுமைகளென்று நியாய ரீதியிலோ தத்துவ ரீதியிலோ நிருபிக்க முடியாதவையாகும். நம் 
HD இதற்கு மாற்றாகவுள்ள ஒரே வழி, ஏற்கனவே உள்ள விதிகளை எல்லா நிலைகளிலும் மறுக்கிற புதிய விதிகளை வரையறுத்து இணைத்தலேயாகும். ஜாதி அமைப்பின் நிர்ணய விதிகளின் காந்திய வரையறைகளை மறுத்த போதும் கூட, அம்பேத்கார் காந்தியின் விதிகளையொட்டியே செயலாற்றினார். அம்பேத்கார் தன் தொண்டர்களுடன் இணைந்து நடத்திய ஆலய பிரவேச இயக்கம் இதனை தெளிவுபடுத்துகிறது. 1929 ல் பார்வதி ஆலய பிரவேசமும் 1930-35களில் நாசிக்கில் நடந்த கலாராம் ஆலயப்பிரவேசமும் குறித்து ஜொலியாட் எழுதுகிறார்.  

காந்திய வழிமுறையில் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவைகள் காந்தியாலோ காங்கிரஸாலோ ஒப்புததல் அளிக்கப்படவில்லை காந்தியின் பெயர் சொல்லப்படாவிட்டாலும் கூட, இந்த சதியாகிரகங்களுக்கான திட்டங்களும் தூண்டுதல்களும் சந்தேகத்திற்கிடமில்லாமல் காந்திய பாடங்களிலிருந்தே பெறப்பட்டன. 1 பெ தலித்துகள் ஆலயப் பிரவேசத்தையும் சமத்துவ சாதி உரிமையையும் கேட்பதன் மூலம் தங்களின் புதிய அடையாளத்தை வலியுறுத்துகிறார்கள். ஏற்கனவேயுள்ள ஒரு மத சம்பிராதாயம் அவர்களது சுய மரியாதையை இழிவு படுத்துமென்றால், அச் சம்பிரதாயங்களில் தங்களின் மரபுவழிப் பங்களிப்பினை அளிக்க மறுப்பதன் மூலம் தங்களது பெருமையை கௌரவத்தை வலியுறுத்துகிறார்கள். அப்போது தலித் இயக்கத்தின் நிலை மிக எளிமையானது அப்படிப்பட்ட மறுதலிப்புகளை அது ஆதரிக்க வேண்டியதாகிறது. இதற்கெதிராக ஆலயப் பிரவேசப் பிரச்சனையில் அதுபல கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. மறுதலிப்பை ஆதரிப்பதன் மூலம் எந்த குறியீட்டு கட்டமைப்பை எதிர்த்துப் போராட சூளுரைத்திருக்கிறதோ அதையே ஆதரிக்கிற குற்றச்சாட்டிற்கு ஆளாகிறது. உறுதியான மறுப்பென்பது (மக்களிடமிருந்து தனிப்பட்டு விடுகிற பலத்தினை தவிர) பொருளியல் ரீதியான அதிகாரம் பெருமை ஆகியவற்றின் கட்டமைப்பு என்கிற கோயிலின், ஆலயத்தின் முக்கியமான ஒரு பரிமாணத்தை மறுத்து ஒதுக்குவதற்கு ஒப்பானதாகும். 

இப்பிரச்சனையின் இன்னொரு குறிப்பிடத்தக்க பரிமாணமும் இருக்கிறது. ஒரே கடவுளை வழிபடக்கூடிய உரிமையென்பது (வெவ்வேறு வடிவங்களின் மூலமாக) மத்திய கால பக்தி இயக்கத்தின் முக்கியமான கருத்தாக அமைந்தது. மேல் சாதி சைவத் துறவிகளின் பெரும் வெறுப்புக்குண்டான 'அசைவ'வழிமுறையில்சிவனைத் தொழுத கண்ணப்பன் என்கிற வேடனின் கதை தமிழ் கன்னட மத்தியகால பக்தி இலக்கியங்களில் இருப்பதை உதாரணம் காட்டலாம். 

காந்தியின் ஆலயப் பிரவேச விதிகளோடு செயலாற்றினபடியே அம்பேத்கார் இன்னொரு மாற்று வழியை கட்டமைக்க முயன்றார். இது குறித்து பொது நீர் நிலையின் தண்ணீரை உபயோகிக்க தீண்டத்தகாதோரின் உரிமையை வலியுறுத்துவதற்காக 1927ல் நடத்தப்பட்ட மதக் கலகத்தை கவனிக்க வேண்டும். கோயிலுக்கும் குளத்திற்குமிடையே பெரும் வித்தியாசம் உள்ளது. இப்போராட்டதை அம்பேத்கர் வழி நடத்திய விதம் அவருக்கும்  


காந்திக்குமிடையேயான வித்யாசத்தை புரிந்து கொள்ள உதவுகிறது. மகத் கலகத்தின் மூலம் அம்பேத்கார் அளித்த போராட்ட மாதிரியில் தீண்டாமையென்பது ஒரு சமூக உரிமை குறித்த பிரச்சனையாகக் கையாண்டார். இந்நிலையில், கிருஸ்துவர்களோ முஸ்லீம்களோ எந்த மதசார்பற்றவர்களும் ஒரு மதத்தின் தனிப்பட்ட பிரச்சனையில் தலையிடுகிற குற்றவுணர்ச்சி இல்லாமல், போராட்டத்திற்கு ஆதரவளிக்க முடியும். கேரளத்தில் நடந்தவைக்கம் சத்யாகிரகப் போராட்டம் அப்படிப்பட்ட ஒரு தன்மையை அடைய இருந்த தருவாயில் அதனை மதச்சார்பற்ற பிரச்சனையாக்கும் முயற்சியை காந்தி மறுத்துவிட்டார். அவரைப் பொறுத்தவரையில் அந்தப் பிரச்சனை முற்றிலுமாக இந்துத்துவத்தின் ஒரு உள் விவகாரமே. நவீன ஜனநாயக முறைகளுக்கிடையே இதில் எந்த பங்களிப்பும் கிடையாது. தீண்டாமையை ஒரு சமூக உரிமைப் பிரச்சனையாக்கும் போது, இயல்பாகவே, பிற சமூகபொருளாதார அரசியல் சக்திகளும் கூட, மத உரிமைப் பிரச்சனையென்கிற அணுகலுக்கெதிரான ஒரு பலம் வாய்ந்த அணியினை உருவாக்க இணைந்து கொள்ளும். 

உண்மையில் அப்படிப்பட்ட சவால்கள் 'ஹரிஜன' பக்கங்களில் அதிகரித்ததன் வாயிலாக, இனத்தின் ஒட்டுமொத்த பொருளாதார மேம்படுத்தலில் முக்கியத்துவம் காட்டுவதன் அவசியம் உணரப்பட்டது. ஆக்ரா ஹரிஜன் மகாநாட்டைப் பற்றிய தீர்மானங்களை காந்தி இப்படி பதிவு செய்கிறார். "கல்வி பொருளாதாரப் பிரச்சனைகளைவிடவும் ஆலய பிரவேச பிரச்சனையில் ஹரிஜன இயக்கம் கவனம் செலுத்துகிறது. ஆலயப் பிரவேசம் என்பது ஹரிஜனங்களே விரும்பாத ஒரு திட்டம் ஏனெனில், இது அடிமை மனப்பான்மை குருட்டு பக்தி மற்றும் பிற கெடுதல்களை விளைவித்து ஹரிஜனங்களின் திறனை பழுதுபடுத்துவதாக அமையும். பூசாரிகளின் அடக்குமுறைக்கு ஆளாகி அரிஜனங்கள் அவர்களின் அடிமைகளாகிவிடுவார்கள். எனவே கல்வி பொருளாதார முன்னேற்றங்களில் கவனம் செலுத்த வேண்டியதின் பெருத்த அவசியம் இருக்கிறது. கலப்புத் திருமணங்களும் சமபந்தி போஜனமும் ஹரிஜன இயக்கத்தின் திட்டங்களில் இடம் பெற வேண்டும்”. 
தீர்மானத்தின் முதல் அம்சத்தினை அங்கீகரித்து பேசுகிற அதே சமயம் காந்தி கோயில்களை ஹரிஜனங்களுக்கு திறந்து வைக்காது முன்னேற்றம் என்பது முழுமை பெறாது என்றார். கோயில்களில் பிரவேச அமைப்பென்பது ஹரிஜனங்களின் மத சமத்துவத்தை ஒத்துக்கொள்வதாகும். ஆனால் கலப்பு மணம் சமபந்தி போஜனம் ஆகிய விஷயங்களை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விவகாரங்களில் சனாதனிகளின் விரதத்தில் தலையிடுவதை அவர் விரும்பவில்லை. தனது சொந்த மகனின் கலப்பு மணத்தை ஆதரித்தபோதுங்கூட அவர் அந்நிகழ்வின் தெளிவான தீவிர மிக்க ஜாதிப்பிரச்சனைகளை பூசி மெழுகவே முயற்சித்தார். அப்படிப்பட்ட ஊசலாட்டங்களே அடிப்படைவாதிகளை அவரின் மீது சந்தேகக்கண் கொண்டு பார்க்க வைத்தது. 

ஹிந்து தனிமனிதனின் தான் , சுயம் புனிதப்படுத்தலென்கிற பிரச்சனை பொது மேன்மை என்கிற குரலுடன் தனிமனிதனின் சுய சிறப்பிற்கு வழிவகுத்தது. தேசியப் போராட்டம் புகழ்பெற்றிருந்த பகுதிகளில் இந்து வைதீகத்திற்கு எதிரான தியாகம் மனோதிடம் மற்றும் போராட்டங்கள் ஆகிய காந்திய கதைகள் குடும்ப விஷயங்களாகவே பேசப்பட்டன. பிற பகுதிகளில் வரவேற்பு விமர்சனம் இரண்டையுமே ஏற்படுத்தத்தக்க ஒரு வரலாற்றுத் தகுதியைப் பெற்றது. இந்து சநாதனிகளும்கூட இதனால் பாதிக்கப்பட்டார்கள் அரிஜனங்களுக்காக காந்தியிருந்த வரலாற்று முக்கியத்துவம்மிக்க உண்ணாவிரதத்தினால் பாதிக்கப்பட்டு சநாதனி பிராமணர் ஒருவர் உத்திர பிரதேசத்தில் திகுவா என்ற இடத்தில் 18-5-33ல் ஒரு ஆரம்பபள்ளியின் கழிப்பறைகளை ஒரு பெரும் திரளான மக்களின் முன்னிலையில் சுத்தம் செய்தார். 

-தன்னை (சுய) புனிதப்படுத்தலென் கிற கற்பனையான துன்பவியல் நாடகத்தில் காந்தியென்கிற ஒரே ஒரு கதாநாயகனுக்கு மட்டுமே வாய்ப்பிருந்தது. இப்படிமதத்தை இன்னும் சற்றே விரிவுபடுத்தினால் ஆன்மீகத் தனிமைப்படுத்தலினால் துன்ப்படுகிற ஒருகதாநாயகனின் திறனைக் கொண்டாடுவதாகவே அமைகிறது. ஆனால் துரதிர்டவசமாக காந்தியை அவதாரப்படுத்தின ஜாதி இந்துக்களால் மட்டுமே இது அரங்கேற்றப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளும் வகையில் காந்தியே இவ்வாறு எழுதினார்: அரிஜனங்களின் ஆலயப் பிரவேசம் என்பதைவிட அரிஜனங்கள் ஆலயப் பிரவேசத்தை தடுப்பது தவறு என்ற வைதீகக் கருத்தில் ஏற்படுகிற மாற்றமே முக்கியம் இக்கருத்தே 'மனமாற்றக்கொள்கை' என்றழைக்கப்படுகிறது. 

|
சாதி இந்துவின் மனசெல்லாம் நிலம், சொத்து, சமூக அரசியல் அதிகாரம் என்று எல்லாப் பக்கங்களிலும் சிதறியுள்ளது. இதை மாற்றியமைக்காதவரை மனமாற்றம் என்பது சாத்தியமாகாது. என்று அடிப்படைவாத விமர்சகர்கள் குற்றம் சாட்டினார்கள். 

தன்னை புனிதப்படுத்தலென்கிற நடைமுறையின் இயல்பான வீழ்ச்சியை காந்தி முன்னமேயே கண்டுக்கொண்டிருந்தாரா என்று உறுதியாக சொல்ல முடியாது. வெவ்வேறு விதமான மனிதர்களுக்கு வெவ்வேறு வகையான விஷயங்களை அர்த்தப்படுத்தியதே காந்திய பிராயசித்த வழிமுறையின் சோகமான முடிவுக்குக் காரணம். ஒரு கொள்கை வாத ஜாதி இந்துவிற்கு அது தவிர்க்க முடியாத சுமக்கிற ஒரு சிலுவையாகவும், கோபம் கொண்ட தலித்திற்கோ அது தாழ்த்தப்பட்ட இனங்களின் அடிப்படை போராட்ட சக்தியை பழக்கி அடக்குவதற்கான நுட்பமான வலையாகவும், இறுதியாக பழமைவாத இந்துவுக்கோ அது மிகுந்த சகிப்புத் தன்மையோடு செயல்படுத்தப்பட வேண்டிய கடுமையான பயிற்சியாகவும் அமைந்தது. 

இந்நிலையில் காந்திய வழிமுறையை நிராகரிப்பதைதவிர அம்பேத்காருக்கு வேறு வழியேதுமில்லை. வரலாற்று மேடையில் அப்படிப்பட்ட ஒரு நாடகத்தில் ஒரே இராத்திரியில் தலித்துகள் கதாநாயகர்களாக ஆகிவிட முடியாது. கதாநாயகன் தனது சொந்த இருப்பினைக் குறித்த கேள்விகளையும் சிறப்பினையும் காண கண்ணாடியாக மட்டுமே இருக்க முடியும். 
மே 1933ல் காந்தி தனது இரண்டாவது உண்ணாநோன்பின் போது தீண்டாமையை பணத்தினாலோ, வெளிநிறுவனங்களினாலோ அல்லது அரசியல் அதிகாரத்தினாலோ அழிக்க முடியாது. என்றார் இதனை அவர் சொல்லும்போது டாக்டர் அம்பேத்கரின் அறிக்கையை ஆன்மீகவாதிகளின் மொழியில் மொழிபெயர்க்கிறார்- அம்பேத்கரின் பொருளாதார வாய்ப்புகள் பணமென்றும், சமூக உரிமையென்பது அரசியல் அதிகாரம் என்றும் மொழிமாற்றம் பெறுகிறது. சந்தர்ப்பவசமாக இம்மூன்றுமே அம்பேத்கரால் குறிப்பிடத் தகுந்த முன்னுரிமைகளாக வரையறுக்கப்பட்டிருந்தன. 

காந்தி அம்பேத்கரின் ஆளுமையின் பரிமாணங்களை கண்டுகொள்ள மறுத்தார். காந்தியைப் பொறுத்தவரை பொருளியல் ரீதியான அணுகுமுறையே அம்பேத்காரின் பலவீனமென்று நினைத்தார். இதற்கெதிராக ஆன்மீக அணுகுமுறையே காந்தியின் பலவீனமென அம்பேத்கர் நினைத்தார். இருவரிலுமே இருக்கிற பொருளியல் மற்றும் ஆன்மீகரீதியான இரண்டு அணுகுமுறைகளையுமே, இத்தனித்துவ நிலைகள் மறைத்திருப்பது தெளிவாகிறது. 

- மே 1933 உண்ணாவிரத்தின்போது, காந்தியை சந்திக்க வருகிற அரிஜன சிறுவன் மே 29ம் தேதி மதியம் பழரசம் கொடுத்து அவரின் உண்ணாவிரதத்தினை முடித்து வைக்க சம்மதிக்கிறான் .ஆனால் உண்ணாவிரதத்தினை முடிக்கபழரசம் கொடுத்தது அரிஜன சிறுவன் அல்ல - தகார்சே அம்மையார்! வருவதாய் வாக்களித்திருந்த அரிஜன சிறுவனை வராது தடுத்தது எது? 
ஒரு புனிதமான பரிதாபத்திற்கு ஆளாகும் அபாயத்திலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவே அந்த அரிஜன சிறுவன் சொன்னபடி வரவில்லை! அச்சிறுவனே பின்பு தலித் இளைஞனாக பிறப்பெடுக்கிறான். 
அம்பேத்கரும் காந்தியும் ஒருவர் மற்றொருவரால் உருமாறிக் கொண்டார்கள் என்பதற்கான சாட்சிகள் உண்டு. எவ்வகையில் அவர்கள் இருவரும் உருமாறினார்கள்? அம்பேத்கர் தீண்டாமையை ஒரு மதப் பிரச்சனையாக சொல்வதை எப்போதுமே எதிர்த்தார். இப்பிரச்சனையில் மதத்தின் முதன்மையிடத்தை அவர் ஒத்துக்கொண்டார். காந்தியினால் பொருளாதார மேம்பாடு என்கிற அம்சத்திற்கு அளித்த முக்கியத்துவத்தை அம்பேத்கார் மதத்திற்கு அளித்தார். ஒரு விஷயத்தை ஏற்றுக்கொண்டு அதனை கூடவே மாற்றத்திற்கு உட்படுத்துகிற வழிமுறையில் இந்துத்துவத்தையே முற்றிலுமாக விட்டொழித்தலே அம்பேத்கரின் மாற்றுவழி. 1935ல் யேலா என்கிற இடத்தில் 'நான் ஒரு இந்துவாக மரணமடைய மாட்டேன்' என்று அம்பேத்கர் கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு காந்திய மாதிரியின் தீர்வை அடையக்கொடிய வழிவகைகளை புறகணித்த போதும் கூட அதன் நியாயப்பூர்வமான அம்சத்தை அங்கீகரிப்பதாகவே இருக்கிறது. பொருளாதார மேம்பாடு என்பதே உண்மையான மாற்றுவழி உண்மைதான். ஆனாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்கத்தை மாற்றியமைப்பதை விட்டு கிராமம் முழுவதையுமே சீர்திருத்தியமைப்போம். இதுவே அம்பேத்கரின் தன்மையில் ஏற்றுக்கொண்ட காந்திய அறிக்கை. 


காந்தி அம்பேத்கர் இருவரையுமே ஒருவரையொருவர் பூர்த்தி செய்பவர்களாகக் கொள்ள வேண்டியது அவசியமென்பதை சொல்லத்தேவையில்லை. . தலித்துகள் மீதான வன்முறையும் கிராமத்தின் மறைவும் 
தலித்துகளின் மீதான எல்லாத் தாக்குதல்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டு ஆராயும்போது தெளிவாய் அடையாளங்காட்டத்தக்க இரண்டு வகை வன்முறைகளை காண முடியும். முதல் வகையான வன்முறையை கொஞ்சம் விவரமாக அணுகுவோம். 

மரபு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி முறைகள், சமூக ஒழுக்கங்கள், காதல் மற்றும் ஆண்பெண் பாலுறவு சம்பந்தமான நெறிகள் ஆகியவற்றை மீறுகிற வகையில் ஒரு தனிப்பட்ட தலித்தோ அல்லது தலித் பிரிவினரோ செயல்படும் போது. அச்செயலை சமூக நீதியினை மீறியதொன்றாக ஜாதி இந்துக்கள் தீர்மானித்து குற்றம் சாட்டப்பட்டவர்களை கடுமையாக தண்டிக்கிறார்கள். கிராம இந்து சமூகத்தின் நீதிமுறைகளும் வழக்கங்களும் சாதி அமைப்பினுடைய பண்புகளின் அங்கமாகவே இணைக்கப்பட்டுள்ளது. நீதியின் கட்டமைப்பும் கிராமத்தின் ஒருமித்த உடன்பாட்டினையே சார்ந்திருக்கிறதென்பது மேல் ஜாதியினரின் கேள்விகேட்க முடியாத அதிகாரத்தையே குறிக்கிறது. இதன் பிண்ணனியிலேயே அம்பேத்கர் கிராமம் என்பது நீதியின் அடிப்படை அலகு என்கிற கருத்தை மறுத்தார். 
பம்பாய் சட்டசபையில் பஞ்சாயத்து மசோதாவின் மீதான விவா தங்களின் போது அம்பேத்கர் நிகழ்த்திய உரைகளிலிருந்து காந்திய கிராம பஞ்சாயத்து திட்டங்களிலிருந்து அவர் வேறுபடுவது தெளிவாகிறது. இந்திய கிராமங்களில் நடைமுறையிலிருக்கிற நீதியின் ஒருமித்த கண்ணோட்டத்தினை காந்தி ஆதரித்தார். நீதி முறைகளுக்கும் சாதி அமைப்பின் மதிப்பு குறித்த அதன் உள்ளடக்கத்திற்கும் உள்ள இடைவெளிக்கு துரதிடவசமாக அவர் முக்கியத்துவம் அளிக்கவில்லை. பிரச்சனைகளை மத்தியஸ்தம் செய்து வைக்கிற பழைய கிராமிய முறைகள் நவீன நீதிமன்ற முறையினை விட திறன் வாய்ந்ததென்பது உண்மையென்றாலும் கிராம நீதி முறையின் பண்புகள் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளவேண்டிய சாதி அமைப்பில் ஆழமாக வேரூன்றியிருந்தது. இந்த அமைப்பினை சரியாகக் கணித்திருந்த அம்பேத்கர் நவீன ஜனநாயகக் கருத்துக்கள் கிராம இந்தியாவின் புரிதலுக்கு அப்பாற்பட்டதென்றும் கருதினார். அவரது கருத்து நிலை தலித்துகளுக்கு ஒரு பாதுகாப்பினை அளித்ததால் அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். பெருகி வரும் தலித்துகளின் வலிமையை ஏற்றுக்கொள்ளாத மேல் ஜாதியினரின் பிடிவாதமும் மாறிவருகிற சிக்கலான கிராம சமுதாய சூழ்நிலையும் கிராமிய இந்தியாவைக் குறித்த காந்தியின் கருத்துகளுக்கு எதிராக அமைகிறது. அதாவது மேல் ஜாதியினருக்கும் தாழ்த்தப் பட்டோருக்குமிடையே இருந்து வந்த ஒரு சுமுகமான இணைப்பு (கண்டிப்பான மேலாண்மை அடுக்குகளின் எல்லைக்குள்ளாகவே) என்பது வேகமாக மறைந்து வருகிறது. மரபு ரீதியான நியாயங்களையும் நீதிகளையும் தலித் தனிநபர்கள் மீறும்போது இரண்டு விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. திருட்டு என்கிற கண்ணோட்டத்தில் நடத்தை நியாயமற்றதாகிவிடுவது ஒன்று. ஜாதி இந்து சமூகம் வேற்றுமைப்படுத்துகிற உணர்வை இழந்துவிட கிராம நீதியமைப்போ தனது நீதி மற்றும் அரசியல் அதிகாரத்துடனான ஒரு சக்தியாகவே மாறிக்கொள்கிறது. இன்றைய நடைமுறையில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த நியமங்களை வரையறுப்பதே சரியானதாகும். இந்த ஒழுங்கு மீறல்களை கவனித்துக்கொள்ள அரசு நீதி எந்திரங்கள் உள்ளன. நன்று நிறுவப்பட்ட தனது முறைமைகளின் மூலம் அது குற்றத்தின் அளவை தீர்மானித்து சட்ட முறையிலான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது. இழைக்கப்பட்ட குற்றத்தை அளவிடும் முறையை அறியாமலோ அல்லது அதன் தேவையை உணராதவர்களாவோதான் கிராம.சமுதாயம் இருந்து வந்திருக்கிறது. இதயமில்லாதவர்களாக மட்டுமில்லாது மனித நடத்தைகளில் ஒழுக்கத்தை வலியுறுத்துகிற திறனில்லாதவர்களாகவும் இருந்தனர். இதன் விளைவே தலித்துகள் மீதான கொடூரமான வன்முறை. 

இதே போல பிதரல்லி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி. பிரச்சனையின் இன்னொரு முகத்தையும் காட்டுகிறது. தலித் இளைஞனொருவன் மேல் ஜாதி பெண்ணொருத்தியை கிண்டல் செய்து விட்டதாக பயங்கர மோதல் நிகழ்கிறது. அவன் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்ததாய் குற்றம் சாட்டப்பட்டு, தலித்துகள் முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்படுவது என்பதில் போய் முடிந்தது. கிராமத்திலிருந்து குடி தண்ணீர் கூட எடுக்கக்கூடாது என்கிற அளவிற்கு அது கடுமையானதாயிருந்தது. 

தனிமனிதனால் இழைக்கப்படுகிற குற்றத்திற்கு மொத்த தலித் சமூகமே தண்டிக்கப்படுவதுதான் இங்கு முக்கியமான விஷயம். ஜாதிய மேலாண்மையினை பிரயோகிப்பதில் தனிமனிதன் என்கிற விஷயம் தங்களை குருடாக்கிவிடக்கூடாது என்பதை இந்திய மரபுவழி சமுதாயத்தினர் ஏற்றுக்கொள்ளவேயில்லை. உயர்சாதி தனிமனிதன் அதேவிதமான குற்றத்தைச் செய்யும்போது குற்றவாளி தனிமனிதனாகவே கருதப்படுகிறானேயொழிய, அவனது குற்றம் அவன் சார்ந்த இனத்துடன் தொடர்புபடுத்தப்படுவதில்லை. உயர்சாதியினரின் மரபிலிருந்து நழுவிப்போகிற இயல்பினைப் பொறுத்தவரை தனிமனிதன் என்கிற விஷயம்கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. என்றும் கூறலாம். 
தன் இனத்தை சார்ந்த தனி மனிதனால் செய்யப்பட்ட சில்லறை குற்றத்திற்காக, அந்த உயர்சாதி இனம் முழுக்க கிராமிய அமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டது என்கிற செய்தியை இனிமேல்தான் கேட்க வேண்டும். சமுதாயத்தின் நேர்மை , நியாய விதிகளை மீறின மன்னிக்க முடியாத உயர்சாதியினரின் செயல்களைப் பற்றிய உதாரணங்கள் இந்திய இலக்கியத்தில் மண்டிக்கிடந்தாலும் கூட. அங்கெல்லாம் தனிமனிதன் மட்டுமே குற்றத்திற்கு பொறுப்பாக்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம். இதை வேறுவிதமாக சொல்வதென்றால் ஒவ்வொரு ஜாதியினருக்கும் அழிக்கவியலாத ஒரு குணாம்சத்தை பொருத்தியிருப்பதே சாதி அமைப்பின் தன்மை. அக்குணாம்சங்கள் சாதி அமைப்பின் அடுக்கில் அந்த சாதியிருக்கிற இடத்தையும் வரிசையையும் பொறுத்தமைகின்றன. இந்திய மொழிகளின் பழமொழிகளையும் வாய்மொழி வழக்குகளையும் கவனமாக ஆராயும் போது, சாதி அமைப்பின் வெளித்தெரியாத ஓரவஞ்சனைகளையும் சார்புத்தன்மைகளையும் கவனிக்க முடியும், உயர்சாதியினரின் குற்றங்களை எதிர்கொள்ளும்போது, தனிமனித விளக்கத்திற்கு வாய்ப்பளிக்கிற அதே அமைப்பு, தாழ்த்தப்பட்டோருக்கான அதே நிலை வரும்போது தனிமனிதத் தளத்தையே கண்டு கொள்ள மறுக்கிறது. திண்டத்தகாதவர்களுக்கு எதிரான வன்முறையினை கிளர்த்துவது மதிப்பு சார்ந்த அமைப்பேயாம். 
- இந்த தளத்திற்கு எதிராகவே 'அநியாயமான. ஏற்றுக்கொள்ளவியலாத நடத்தை' என்கிற விஷயத்தை விவாதிக்க வேண்டும். குறிப்பாக ஆண் பெண் உறவுகளைப் பொறுத்து எது அசிங்கமானதாக குறிப்பிடப்படுகிறதோ அதுவே சாதி அமைப்பின் தடைகளை மீறிய தெய்வீகக் காதலாகவும் மாறுகிறது. சமூகத்தை மறுத்து குற்றஞ்சாட்டுகிற இளைஞர்களின் மாறும் மதிப்புகளில் இது தீவிரமான தாக்குதலைத் தருகிறது. மிக பலவீனமான ஒரு பாலியல் புரட்சி முளைக்கும் போது மரபு சார்ந்த சமூகம் அதன் வளர்ச்சியைத் தடுக்க தீர்மானிக்கிறது. சாதிய அடுக்கு என்பது இதை எதிர்க்கொள்ள வசதிப்படுகிறது - சங்கிலியால் பலவீனமான இணைப்பைத் தகர்ப்பதற்கு நிகராக - கிராமிய இந்தியாவில் உயர் சாதியினரை காதலித்தல் குற்றத்திற்காக கொலை செய்யப்பட்ட தலித்துகள் குறித்த பல கதைகள் உண்டு. 
இந்திய கிராமசமுதாயத்தின் முக்கிய பிரச்சனையே, வன்முறையை கைக்கொள்ளாமல் மாற்றங்களை எதிர்கொள்ள முடியாததுதான். இதுவே தீண்டத்தகாதோரினைப் பொறுத்து என வரும்போது, இருக்கிற கொஞ்ச நஞ்ச சகிப்புத் தன்மையும் இல்லாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்ட வன்முறையான சூழ்நிலைமைகளை எதிர்கொள்ளும்போது தலித் இயக்க வாதி ஒருவித முரண்பட்ட நிலைக்குத் தள்ளப்படுகிறான். அந்நிலையில் தடுக்க முடியாதவொன்றை அவன் தடுக்க முடிவதில்லை. ஆனால், நியாயமாக சட்டப்பூர்வமாக தவறிழைக்கிறதென இந்த சமூகத்திற்கு நினைவுபடுத்துவதும் தேவையாகிறது. மோதிக்கொண்டிருக்கும் இரண்டு சமூகத்தினருக்கும். வழி வெவ்வேறானாலும் நியாயம் குறித்த புதிய உணர்வுகளைத் தருவிக்க வேண்டிய மிகப்பெரியப் பொறுப்பு அவனுடையதாகிறது. தலித் இயக்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத காரியமொன்றை செய்கிற நபரை, அவரின் நடத்தை மரபு ரீதியான சமுதாய அமைப்பின் விதிகளை அனுசரிக்க வேண்டுமென சமாதானப்படுத்துகிற சூழலும் கூட அவனுக்கு அமைகிறது. அதேபோலவே ஜாதி இந்து சமூகமும் கூட நவீன ஜனநாயக அமைப்பின் விதிகளை கடைப்பிடிக்குமாறு சொல்லப்படவேண்டும். அதாவது ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறான சமூக மதிப்பீடுகளைப் பற்றிக் கொண்டு நடத்தலாகும். 
இந்த சூழ்நிலையில்தான் இருமுனை அணுகுமுறையினை தலித் இயக்கம் கையாண்டது. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுங்கையும் நன்னடத்தையையும் வலியுறுத்துவதன் முலம் விலகிச்செல்கிற நபரை ஒழுங்குபடுத்துகிறது. அதே சமயத்தில் ஆண் பெண் உறவின் 
பரிமாணங்களைப்பொறுத்து மனிதத் தன்மையின்றியும், உணர்வுகெட்டும் இருந்த சமூக விதிகளுக்கெதிராக ஒரு போரையும் தொடுத்தது. இதுவே கலப்பு மணத்தை ஊக்குவித்து ஒதுக்கப்பட்ட சமூக இனங்களின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிற்று. 

இரண்டாம் வகையான வன்முறை சிக்கலானது. என்றாலும் தலித்துக்களுக்குள் சாதிய ஒடுக்குமுறைக்குறித்த புதுவிதமான விழிப்புணர்ச்சியின் தீவிரமான வளர்ச்சியின் நிச்சயமான அடையாளமாகும். மூதாதையர்களால் அனுபவிக்கப்படாத பழைய சமூகத்தினரால் நியாயமென்று ஒத்துக்கொள்ளப்படாத உரிமைகளை, அடைவதற்காக தலித்துகள் செய்த தீவிரமான முயற்சியின் பலனேயிது. இவ்வுரிமைகளில் சில குடியுரிமை தொடர்பானது. இன்னும் சில அதனையும் தாண்டியது. சமூகம் குறித்த புதிய கருத்தினையே இதுகுறிக்கிறது. அச் சமூகத்திற்கும் தனிமனிதனுக்குமுள்ள உறவானது தலித்துகளின் கற்பனைக்கு அருகிலானது. சமூகத்தின் குறிப்பிட்ட சில பலம் வாய்ந்த பிரிவுகள் பழைய அமைப்பினையேப் பற்றிக் கொண்டிருக்கின்றன. பழைய அமைப்பில் அவர்களது நோக்கம் நன்கு நிறைவேறினபடியிருப்பதினால், அதில் எந்தவொரு மாற்றத்தையும் அவர்கள் ஒத்துக்கொள்வதாயில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு புதிய உரிமைகளைத் தர பழைய பாதுகாவலன் தயாராயில்லாத அதே நேரத்தில், புதிய ரௌத்ர இளைஞனும் எல்லையின்றி காத்திருக்கவும் தயாரில்லை. எந்த ஒரு நாகரிக சமுதாயத்திலும் கொள்கை அளவிலாவது இப்படிப்பட்ட முரண்பட்ட சூழ்நிலைகளில் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதாயிருக்கும் - அது நல்ல முடிவினை அடையுமென்கிற உத்திரவாதமில்லாவிட்டாலும்கூட ! ஆனால் நிலைப்பிரபுத்துவ கிராமங்களில் நேரடி மோதலும் வன்முறையும் தவிர்க்க முடியாததாகிவிடுகின்றன. அத்தகைய கிராமங்களில் இதனைத் தவிர்க்க நிர்வாக எந்திரங்கள் இல்லையென்று அர்த்தமில்லை. ஆனால் நெருக்கடியான காலகட்டத்தில் அதனைப் பிரயோகப்படுத்த இயலாது என்பதுதான். புதிய உரிமைகளை தலித்துகள் வேண்டுவதென்பதை அமைப்பியல் சிக்கலென வரையறுக்க வேண்டும் - ஏனெனில் மரபு ரீதியான கிராமம் முழுக்க எல்லா சாதியினராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட அடுக்கின் விதிகளினால் சுமுகமாக பிரிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாக இருக்கிறது. பழைய விதிகளை தாழ்த்தப்பட்ட சாதிகள் அனுசரிக்க மறுக்கும் போது அமைப்பியல் சிக்கலென்பது தவிர்க்க முடியாததாகிறது. 

புதிய உரிமைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது. நிலம் நீர் காடுகள் மற்றும் அவை சார்ந்த விஷயங்களில் சொந்தம் கொண்டாடுகிற அமைப்பியல் உரிமை. இரண்டாவது சமமான சமூகத் தகுதிக்கான உரிமையெனலாம். பொது இடங்களில் நுழைவது அவற்றை உபயோகிப்பது என்பவை இவற்றில் அடங்கும். சிலவேளைகளில் விளையாட்டுகளில் பங்கெடுப்பது பற்றியும் கூட கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக் குறித்தும் இதில் அடங்கும். வேறுவிதத்தில் சொல்வதென்றால், கிராமிய வாழ்க்கையின் மையமாய் இயங்கும் சாதியின் பிடியிலிருந்து எதுவொன்றும் தப்ப இயலாது. மூன்றாவது உரிமைதான் மிகவும் சவாலானது கூடவே தலித் இயக்கத்தினை சலிப்பு கொள்ள வைப்பதுமானது. இதை நாம் கலாச்சாரத்தளம் சார்ந்த உரிமையெனலாம். ஏற்கனவேயிருக்கிற மதச்சம்பிரதாயங்களில் பங்கெடுக்கிற சமமான உரிமையைக் கோருவதற்கான முயற்சியின்போது பயங்கர வன்முறையும் இரத்தப் பெருக்கும் நிகழ்ந்திருக்கின்றன. அதேபோல தலித்துகளுக்கு கேவலமான பங்களிப்பினைத் தரச் செய்யும் மத, கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதில்லை என்கிற முடிவும் கூட வன்முறையையே வரவழைக்கும். கடந்த இருபதாண்டுகளாக தங்களுக்கு மரியாதையளிக்காத கிராமிய விழாக்களில் பங்கெடுப்பதில்லை என்கிற முடிவினை பெருத்த எண்ணிக்கையில் தலித்துக்கள் எடுத்ததினால், சாதி இந்துக்களுடனான பலத்தப் பிரச்சினை வந்து சேர்ந்ததை நாம் பார்க்கலாம். 

அமைப்பியல் உரிமைகளை கோரும் போது. சுற்றுக்சூழல் இயக்கங்களுடன் சுமுகமற்ற ஒரு உறவினையே தலித் இயக்கம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், தலித் இயக்கங்கள் உடனடியான குறைந்த கால தேவைகளுக்கு அவற்றின் பின் விளைவுகளுக்குமுள்ள உறவினைக் குறித்து தீவிரமான யோசித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தலித் இயக்கமும், சுற்றுச்சூழல் இயக்கங்களும் ஒருங்கிணைந்து தங்களது நோக்கில் ஒரு பொதுக் கருத்தை அடையவில்லையென்றால் அவ்வியக்கங்களின் உரிமைகள் குறித்த கருத்துக்கள் அவைகளை விரோதிகளாக்கிவிடும். 

அதுமட்டுமல்லாமல், தங்களது அடிப்படைகளையும் வலுவினையும் அதிகரித்துக் கொள்வதற்கு பதிலாக இரண்டுமேதத்தமது எல்லைக்குள் குறுகிவிடுகிற அபாயமும் இருக்கிறது. 

-
புதிய உரிமைகளை தலித்துகள் நிறுவ முற்படும் போது ஏற்கனவேயுள்ள பழையவைகளும் மறைந்து போய்விடுகிற சோகம் இருக்கிறது. வாழ்தலின் வன்முறையென்பது இறந்து போனவைகளைக்கூட சும்மாவிடாது. சாதி இந்துக்கள் பாதுகாத்திட விளைந்த இன்னொரு அமைப்பு மிகவும் பேசப்பட்ட கிராம பஞ்சாயத்து. தலித்துகளின் வாழ்வில் வேறெந்த அமைப்பும் இதனளவு முக்கியமான பங்கை ஆற்றியிருக்க முடியாது. கிராம பஞ்சாயத்து போலிஸ் ஸ்டேஷனாகவோ நீதி மன்றமாகவோ சுலபமாக மாறிவிடும். தன்னையே நீதி மன்றமாக்கிடும் இதன் சக்தி அபரிமிதமானது. சாதி மற்றும் பாலியல் ரீதியான பிரிவினையின் உறுதியான நம்பிக்கை கொண்ட அமைப்பிது. சில பிரச்சனைகளும் அவற்றின் விளைகளுக்கும் பின்னர் தலித்துக்கள் இதில் பங்கெடுத்துக்கொள்ள மறுத்தார்கள். காரணம் அவர்களது உரிமைகளை இவ்வமைப்பால் பாதுகாக்க முடியாதென அறிந்துகொண்டதே. 
முதல் வகையான பயமுறுத்தலும் வன்முறையும் தலித்துக்கள் மீது கட்டவிழ்க்கப்படும் போது ஒரு அடிப்படை கேள்வி எழுகிறது. தனித்துவமிக்க உணர்ச்சிக் குறியீடென்கிறகிராமம் மறைந்து போகிறதென இதனை அர்த்தப்டுத்திக்கொள்ளலாமா? இதற்று பதில் 'ஆமாம்' உடன்படுதல் மற்றும் மறைமுகப்பயமுறுத்தலின் ஒருவித அடையாளமான பழைய கிராமிய அமைப்பு என்பது உறுதியாக செத்துவிட்டது. ஏனெனில் அவ்வமைப்பின் முக்கியமான அடுக்கொன்று பழைய அதிகார விதிகளுக்கு உறுதியாக விடைகொடுத்தாகிவிட்டது. தாழ்த்தப்பட்டோரின் கண்ணோட்டத்தில் பழைய கிராமத்தை கட்டுண்டிருந்த கொள்கைரீதியான உணர்ச்சிபூர்வமான வளையம் காலாவதியாகி விட்டது. மிக நெருக்கமானதாக உணரப்பட்ட அவர்களின் சமூகதளத்தை அவர்கள் முகத்திலறைவதாகக் கண்டார்கள். இந்நிலையில் கிராமம் குறித்த காந்தியடிகளின் கருத்துக்களை விவாதிப்பதன் மூலம் நகரமயமாக்குதலின் கூறுகளுக்கிடையேயான உறவுகள் மற்றும் கிராமிய ஏழைகள் குறிப்பாக தலித்துக்கள் மீதான அவற்றின் பாதிப்புகள் குறித்து தலித் இயக்கம் எவ்வித நிலையை சார்ந்திருப்பது என்கிற சிக்கலான பிரச்சனையை பார்க்க முடியும். காந்தியடிகளின் கிராமம் குறித்த சித்திரம் நிஜம், கற்பனை இரண்டு மடங்கியது. பொருளாதார தொழில்நுட்ப அளவில் இந்திய கிராமத்தின் பழைய மற்றும் புதிய சிதைவுகள் அனைத்தும் நிஜமானைவை. இதன் கற்பனையம்சங்கள் என்பது கிராமத்தின் சமூகக் கலாச்சார நடைமுறைகள் தொடர்பானது. இதனையே காந்தியடிகள் சாதகமான விளைவுகளை தரவல்லதென நம்பி பரிந்துரைத்தார். வேறு விதமாக சொல்வதென்றால் காந்தியடிகள் என்றுமே இல்லாத ஒரு கிராமத்தைப் பற்றியே பேசினார். யதார்த்தவாதியான அம்பேத்கர் அப்படியொரு அழகான கிராமம் இருக்கமுடியாதென்பதனை புரிந்து கொண்டிருந்தார். கிராமங்களை அழித்து பெருநகரங்களையும் நகரங்களையும் உருவாக்குகிற சர்வதேச முதலீடு மற்றும் நவீனமயமாக்கலின் கருணையற்ற தர்க்கத்திற்கு பதிலாகவே காந்தியடிகள் கிராமங்களின் முக்கித்துவத்தை வளர்த்தார். இக்குறிப்பிட்ட நிலையில், அவரது எல்லா யோசனைகளிலும் நடந்தது போலவே, அவரது கருத்து மதிப்பு மிக்கதாகவும் உண்மையாகவுமானது. எதிர்கால வரலாற்றைத் தீர்மானித்த நிலையில் கிராமங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த காந்தியடிகள் அதனை கடந்தகால நிகழ்கால வரலாற்றுடன் பொருத்தி, தனது கற்பனாவாத கருத்துக்களில் ஏதும் விபத்து நேராமல் தவிர்க்க முயன்றார். கற்பனையான சொர்க்கம் அதன் இடைவெளிகளினாலேயே உபயோகமற்றதாகிட காந்தியடிகள் தனது கிராமம்' (சொர்க்கம்) குறித்த கற்பனையான திட்டங்களின் வீரியமின்ளையிலிருந்து தப்பித்துக்கொள்ள, கிராமிய வடிவிலான வாழ்க்கையை வரலாற்றின் இருண்ட சாக்கடையிலிருந்து மீள்வதற்கான ஒரு வழியாக முன்மொழிந்தார். இது கிராமங்களை குலதெய்வமாகக் கொண்ட அறிவு ஜீவிகளுக்கான வெற்றுப்பேச்சல்ல-இந்நிலையில் ஒருதீர்மானமான வரலாற்றுத் தோல்வியை வெற்றியாக மாற்றிக் கொள்ளக்கூடிய காந்தியடிகளின் திறனே அவரது சாதனையாகிறது. 

- கிராமம் என்கிற வாழ்நிலையை அம்பேத்கர் கடந்தகாலசித்திரங்களுடன் பொருத்தியே பார்த்திருந்தார் எனவே அதனை மீட்க முடியாதது என்று பெயரிட்டார். வரலாற்றின் படிப்படியான வளர்ச்சியினைக் குறித்த அவரின் நம்பிக்கை பெரு நகர்மயமாக்கலை வரலாற்றின் இயல்பான வெளிப்பாடாகவே உணர்த்தியது. இது கிராமிய வாழ்வை ஆழமாக சந்தேகித்தது. விமர்சன நவீனவாதியான அம்பேத்கர் நவீனமயமாக்கலின் பூரண பக்தி நிலையிலிருந்து விமர்சக நவீனவாதியாய் மாற்றியது பௌத்தமே! அவரைப் பொறுத்தவரை உடனடியான உறுதியான அனுபவங்களே நிஜமானவை. காந்தியடிகளை பொறுத்தவரை அவரது நிகழ்கால கடந்தகால புரிதல்களை எதிர்காலமே உருவாக்கியதென்றால், 

131 



அம்பேத்கரைப்பொறுத்து அவரது நிகழ்காலமே கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அர்த்தப்படுத்தியது. இவர்களின் முரண்பட்ட கருத்துக்கள் கிராமம் குறித்த வரையரைகளில் தெளிவாவதை காணலாம். கிராமம் குறித்த கருத்தில் அம்பேத்கர் நேருவின் கருத்துகளுக்கு அருகாமையிலிருந்தார். திரும்பத் திரும்ப தலித்துகளின் அமைப்பியல் பிரச்னைகளை அம்பேத்கர் பேசின போதும் காந்தியடிகளுடனான இந்த முரன், பிரச்சனைகளை கலாச்சார ரீதியாக அணுகுகிறவராய் மாற்றியது. இதற்கு கமியூனிஸத்துடனான அவரது நுணுக்கமான வேறுபாடுகளை உதாரணமாக்கலாம். மதரஸ் என்ற இடத்தில் நடந்த இந்துத்துவத்துடன் முழு இணைப்பு என்கிற உறுதியான வரலாற்று அனுபவமே கிராம சமுதாயத்தின் மீதான அவநம்பிக்கையை அவருக்குத் தந்திருக்கும். பக்தி இயக்கமும்கூட இந்த அவநம்பிக்கைக்கு பங்களித்திருக்கிறதெனலாம். கிராம அமைப்புடனான அம்பேத்கரின் பிரச்னைக்குரிய உறவு இன்னும் பல ஆழமான பரிமாணங்களையும் பெறுகிறது. சதியாகிரகத்தை ஒரு போராட்ட உத்தியாக அவர் ஏற்றுக்கொள்ளாததும்கூட ஒரு பரிமாணமே இந்திய கிராமங்களில் கீழ்படிதல் நன்னடத்தையாகும். கீழ்படியாமையே புரட்சியின் முதல் அடியாக கிராமிய மரபுகள் வகுத்திருக்கின்றன. பக்தி இயக்கமும் இக் கீழ்படிதலின் எளிமையாக்கப்பட்ட வகையினையே கொண்டுள்ளது. பக்தன் தன்னை கடவுளிடம் முழுமையாக சமர்ப்பிப்பதன் மூலம் தன்னை ஒன்றுமில்லாதவனாக்கிக் கொள்கிறான். இதன் மூலம் முக்தியை அடைகிறான். காந்தியின் சத்யாகிரக முறையிலும் இதன் கூறுகள் இருக்கின்றன. இதனை அம்பேத்கர் மறுத்தார். எதிரியை உண்மையை உணருமாறு தொடர்ந்து கேட்பதே இம்முறையின் அடிப்படை. மனிதத்தன்மையின் பங்கீடு என்கிற விஷயம் இதன் மையமாகிறது. எனவே எதிரி என்பது சுயத்தின் முரண்பட்ட வடிவம் என பொருள்படுகிறது. இதுவே தலித்துகளின் மீதான வன்முறையை எதிர்கொள்ளத் தேவையான உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களை பற்றின கேள்விகளை எழுப்புகிறது. வன்முறையை எதிர்கொள்ள அம்பேத்கர் கல்வி, நிறுவனம் மற்றும் போராட்டம் போன்ற உத்திகளையே தேர்ந்தெடுத்தார். இது தலித் இயக்கத்தின் வளர்ச்சியில் அற்புதங்களை நிகழ்த்தியது. மேலும் சமூகத்தின் பலவீனமான அங்கங்களின் மீது நிகழும் கொடூரங்களை தடுப்பதில் பெரும்பங்காற்றியது. காந்தியின் சுய புனிதப்படுத்தல் என்கிற முறையின் தடைகளை இந்த முறை ஒரேயடியாகத் தகர்த்தது. கருணையையும் தாராளத்தையும் எதிர்பார்த்து காத்திருப்பது அகற்றப்பட்டது. சாதி இந்து சமூகத்திடையே ஏற்பட்ட பயம், தலித்துகளுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கியது ஒருவிஷயம். தாக்குதலின் பயமே அவர்களை தயக்கம் கொள்ள செய்திருந்தது. குறைந்த கால மாற்றமென்றாலும்கூட இது விளைவே தரவல்லதானது. சுய புனிதப்படுத்துதல் முறையின் தடைகளை அகற்றி அதே நேரத்தில் அம்பேத்கரின் இத்திட்டம் வேறொரு புதிய பிரச்சனையை கொண்டு வந்தது - ஒரு வித அபத்திரமான, பயமான சூழல் உருவானது. நாடு முழுவதும் தலித்துகளிடையே எழுச்சிப்பெற்ற இனரீதியான ஒடுக்குமுறை குறித்த விழிப்புணர்ச்சி அம்பேத்கரின் சுயமரியாதை முறையின் வெற்றியைச் சொல்கிற அதே நேரத்தில் தீண்டாமையின் உளவியல்ரீதியான ஊற்றுக்களைக் குறித்த சிக்கலான கேள்விகளையும் எழுப்புகிறது. இந்த ஊற்றுக்கள் எங்குள்ளன? அம்பேத்கரின் முறையில் நோய் வெற்றிகரமாக குணமாக்கப்பட்ட போதும் பலிகொள்பவனோடு கொண்ட தொடர்பினால் பலியானவன் நோயால் பாதிக்கப்பட்டான். ஆனால் இறுதியாக இதன் ஊற்று வர்ணாசிரம அமைப்பின் மனதிலும் இதயத்திலுமே இருக்கிறது. சாதி அமைப்பின் கூறுகளான பயமும் அவநம்பிக்கையும் இப்போது வேறு நிலைகளில் உருவானது. தலித்துகளின் தன்னம்பிக்கை சாதி இந்துக்களின் பயமாக உருக்கொண்டது. எனவே, அடைந்துவிட்டதாகக் கருதப்பட்ட அமைதி துர்பலமானதாகியது. இரு பிரிவினருக்குமிடையே ஏற்படுத்தப்பட்ட பலவீனமான சமநிலை எந்த நிமிஷமும் ஒன்றுமில்லாததாகிவிடுகிற நிலை ஏற்பட்டது. இந்நிலையில்தான் காந்தியின் சுய புனிதப்படுத்துதல் முறையையும் அம்பேத்கரின் சுயமரியாதை முறையையும் இணைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால் இவ்விணைப்பை செய்கையில் சுயமரியாதை முறையினை அடிப்படையாகக் கொள்வதன் மூலமே தலித்துகள் அல்லாதோரின் மேலாண்மையினை தவிர்க்க முடியும். 
காந்தியடிகள் அம்பேத்கர் இருவரையும் தொடர்ந்து வாட்டிக் கொண்டிருந்த கிராமம் குறித்த கண்ணோட்டத்தின் முரண்பாடுகள் தான் இன்று இந்திய அரசியலையும் மேலும் தீவிரத்துடன் வாட்டிக் கொண்டிருக்கின்றன. உழவர்களுக்கும் தலித் இயக்கத்திற்குமான கடுமையான உறவுகளே இத் தீவிரத்தின் தெளிவான சாட்சிகள் கிராமமிய இந்தியாவினை 
உன்ன 
தம் 
14 



புத்துயிர்ப்பிக்கிற காந்தியடிகளின் கொள்கையை விவசாயிகள் இயக்கம் தன்னகப்படுத்திக்கொண்ட போதிலும் கிராம மறுமலர்ச்சித் திட்டங்களில் அவர் வகுத்திருந்த பல முக்கிய அம்சங்களை தவறவிட்டிருந்தார்கள். இதன் மூலமாக விவசாயிகள் இயக்கத்தின் சாதி இனத் தன்மையைப் பற்றின தீவிரமான சந்தேகங்களை கிராமிய ஏழைகளிடம் தோற்றுவித்தது வேற்றுமைகளற்ற முழுமையான கிராமத்தையே தனது தளமாக வரையறுத்த விவசாயிகள் இயக்கத்தின் தொண்டர்கள் கிராமத்திற்குள் முரண்பட்ட கொள்கைகள் கொண்ட இயக்கங்களை அடையாளம் காணும் எந்த முயற்சியையும் சந்தேகித்தார்கள். விவசாயிகள் சங்கத்தின் அனுமதியின்றி எந்த அரசு அதிகாரியும் கிராம எல்லைக்குள் நுழையக்கூடாதென கிராமத்தின் எல்லையிலேயே அறிவித்து நிற்கிற விவசாயிகள் சங்க அறிவிப்புப் பலகையே இவ்வகை அணுகுமுறைக்கான குறியீடெனலாம். விவசாயிகள் இயக்கம் கிராமத்தைப் பொறுத்து அதிகாரக் கட்டுப்பாட்டினை நிறுவ முற்பட்டது என்பதே இதன் பொருளாகும். கடந்த காலத்தின் ஜாதி இந்துக்களின் மேலாண்மை நெடியை இதில் நுகர்ந்த தலித்துகள் இவ்வியக்கம் குறித்து ஜாக்கிரதையாகவே இருந்தார்கள். 
-வேற்றுமைகளற்ற கிராமம் என்பதை எண்ணத்திலும் செயலிலும் அரசியல் நேர்மையுடையதாக தலித் இயக்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. அம்பேத்கரின் கண்ணோட்டத்தல் இவ்வித நல்லெண்ண வாழ்நிலையென்பது ஒரு மாபெரும் கற்பனையென்று சொல்லலாம் எனவேதான் இவ்விரு இயக்கங்களையும் இணைப்பது சிரமமாயிற்று.சுரண்டல் மற்றும் அநீதிகள் குறித்த கண்ணோட்டமும் அக்காரியங்களை தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிற நிறுவனங்களைக் குறித்த கருத்து முரண்பாடுகளுமே இவ்வியக்கங்களை எதிரெதிர் தளத்தில் நிறுத்தியுள்ளன. என்றாலும் இவ்விரண்டையும் ஒரு புள்ளியில் இணைக்கிற சில பொது அம்சங்களை நாம் தீர்மானிக்க முடியும். இன்றைய தேசிய சர்வதேசிய பொருளாதார நடைமுறைகளின் விளைவாக கிராமிய ஏழை விவசாயிகளும் தலித்துகளும் ஒரே ஏழ்மை மற்றும் ஆதரவற்ற நிலைக்கேத் தள்ளப்படுவார்கள் என்பதால் இவ்விருதரப்பினரும் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து ஒரு பொதுக் காரணியின் அடிப்படையை ஏற்படுத்த வேண்டும். இவ்விணைப்புசுலபமல்ல. காலங்காலமாக இனம் கலாச்சார ஜாதி வேற்றுமைகளால் பிளவுப்படுத்தப்பட்ட இந்த சக்திகளை அர்த்தமுள்ள ஒரு காரண தளத்தில் ஒன்றினைப்பது சுலபமல்ல. நாட்டில் எழுந்துள்ள மத அடிப்படைவாதம் பல பிரச்னைகளை ஏற்கனவே இருட்டடிப்பு செய்துள்ளதுக்குறித்து இவ்வியக்கத்தினர் கவனிக்க வேண்டும். தனிப்பட்ட காந்திய இயக்கமொன்று சாத்தியமில்லையென்றாலும், நவீன நாகரிகம் குறித்த காந்தியப் பார்வையும் புரிதலும் விவசாய, தலித் இயக்கங்களின் கருத்துத் தளங்களை வலுப்படுத்தக் கூடும். 
இந்த அடிப்படையில் விவசாயிகள் தலித்துகள் இருவருமே தங்களது பொறுப்புகளை உணரவேண்டும். தங்களின் இருத்தல் மற்றும் திறன் நிலைகளில் எக்காலத்திலும் பலியாகிக் கொண்டிருக்கும் அவர்கள் ஒருவருக்கொருவர் குறைகளையும் அதீதங்களையும் நிவர்த்தித்துக் கொள்ள வேண்டும். இச்செயல்களில் முதன்மை பொறுப்பு விவசாயிகள் இயக்கத்தினுடையதே கிராமங்களில் நடைபெறும் தலித்துக்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க இவ்வியக்கம் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஒடுக்கப்பட்ட இனங்களின் ஆதரவின்றி எந்தவொரு கிராமிய இயக்கமும் நிலைபெறுவது கடினம். கிராமிய இந்தியாவினை பாதுகாக்க வேண்டுமென்றால் தலித்துகளை பாதுகாப்பது அவசியம் என்பதே காந்தியப்பார்வை. ஆனால் தற்போதைய நடைமுறையில் தலித்துகளோ பிற தாழ்த்தப்பட்ட இனங்களோ கிராம சமுதாயத்தினைக் குறித்து பெருமை கொள்ள எந்த காரணமும் இல்லை. நீதி நேர்மை குறித்து அங்கிருக்கிற கண்ணோட்டங்களே இதற்கான காரணமாகும். மாற்று விதிகளைக் குறித்த கற்பனையை அவர்களிடையே தூண்டப்பட்ட நிலையில் அவர்கள் தங்களின் அனுபவங்களையே மறுமதிப்பீடு செய்யத் துவங்கியுள்ளனர். 3. கலாச்சார நினைவு 
சென்னபுரா என்கிற கிராமத்தில் வறண்டு போன ஒரு குளத்தின் படுகையில் தலித் இயக்கத்தினர் சிலரை சந்தித்தேன். மந்திரி ஒருவரின் முயற்சியில் வருவாய் துறை அதிகாரிகள் இந்தகுளத்தை வீட்டு மனைகளாக மாற்றத்திட்டமிட்டிருக்க, அந்த வீட்டுமனைகளை சுற்றுவட்ட கிராமத்தின் நிலமற்ற தலித்துகளுக்குபட்டாவாக்கித்தரக்கோருவதென அந்த உறுப்பினர்கள் தெரிவித்தனர். பட்டா வழங்குவதை தங்களின் போராட்டத்தின் வெற்றியென அவர்கள் 


15 


கருதினார்கள். ஆனால் நானோ அந்த குளத்தினை பாதுகாக்கப் போராடியாக வேண்டுமென அவர்களிடம் வலியுறுத்தினேன். எனது காரணங்கள் சூழலியல் சார்ந்ததாகவே இருந்தது. அது அவர்களைத் திருப்தியடைய செய்யாததால் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலங்களை தலித்துகளுக்காக போராடிப் பெறாது போனால் எப்படியும் கிராம உயர் சாதியினர் அவைகளை அபகரிக்கப் போகிறார்கள் என்ற ரீதியில் அவர்கள் விவாதிப்பது சரியானதுதான். நவீன நகரமென்கிற மாயாபஜாரில் பழைய குளங்களுக்கென்ன மதிப்பிருக்க முடியும்? எப்படியும் அந்த குளம் மறைந்துப்போகத்தான் போகிறது. என்றாலும் குளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்திக் கொண்டிருந்தேன், 
ஆதிக்க சக்திகளினால் தொடங்கப்பெற்ற நவீனமயமாக்கும் திட்டங்களுக்கு ஒடுக்கப்பட்ட இனத்தினரின் எதிர்வினையில் கலாச்சார ஞாபகங்களை இழத்தல் என்கிற பிரச்சினைக்குரிய ஒன்றே முக்கியமான கருத்தாகும். புதியதொரு ஞாபக அடுக்கினை உருவாக்குவதும் கூட இதில் முக்கியப் பகுதியாகும். அழிக்க முடியாதவைகளை அழிக்க முயற்சிக்கும் பணி. இந்தநூற்றாண்டில் தாழ்த்தப்பட்டோர் இயக்கங்களை பல சிக்கலான பிரச்சனைகளில் கொண்டு தள்ளுகிறது. இதன் அடிப்படையில் இப்பிரச்சனையை எதிர்கொள்ள மூன்று விதமான வழிமுறைகளை நாம் அறியலாம். 
முதலாவது M.C. ராஜா மற்றும் பிற அரசு ஆதரவாளர்களால் முன்மொழியப்பட்டது. இவர்கள் அடிப்படையில் கலாச்சாரக் குறியீட்டியலையும் கலாச்சார நினைவுகளைக் குறித்த கேள்விகளையும் வித்யாசப்படுத்தவில்லை. இவர்களைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்டோரின் கலாச்சார ஞாபகப் பிரச்சனையைவிட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் அதிகார அளவுகளில் அவர்கள் அடையும் முன்னேற்றமே மிகவும் முக்கியமானது. லௌகிக அடிப்படையிலான பலன்களை குறிகோளாக கொண்டதினால் கலாச்சார மாறுதல்களைக் குறித்து ஆர்வம் காட்டவில்லை. இதுவே அவர்களது செயல்படுத்தாமையும் கூட. சமூகக்குறைபாடுகளை சாதாரண சமூக இயக்கத்தின் மூலமாக சரிபடுத்த இயலுமென்று நினைத்தார்கள். வரலாற்று பூர்வமாகவே மத்திய காலகட்டங்களில் தாழ்த்தப்பட்டோரிடையே பல குழுக்களும் கலாச்சார ஒழுங்குப்படுத்தல் என்பது அரசியல் சமூக சக்திகளுக்கு கீழ்படியும் என்ற கருத்தினையே கொண்டிருந்தனர். 
-ஒரு இனத்தின் ஆன்மீக நம்பிக்கைகளும் அதன் சமூக நடைமுறைகளும் முற்றிலும் வெவ்வேறானவை என்கிற தன்னிலையற்ற நிலையே இத்தகைய கருத்துக்குழுக்களை வழி நடத்தியது. கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் சமூக நடைமுறைகள் போன்றவை சந்தித்து இணைந்து மாற்றம் கொள்கிற தளங்களைப்பற்றிமிக சொற்பமாகவே அக்கறை கொண்டார்கள். சூத்திர தீவிரவாதிகளால் பொதுவாக கையாளப்பட்ட, மேலாதிக்க சக்திகளை எதிர்க்கிற சாதுக்களின் முறையை அவர்கள் முயற்சி செய்யவில்லை. 
இத்தகைய கருத்துத் தளத்தில்தான் தமிழகத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. இந்துக் கலாச்சாரத்திற்கு எதிராக இவ்வியக்கம் முன்வைத்த கலாச்சார பயமுறுத்தல் பயங்கரமான உண்மையாகவும் தத்துவார்த்த தளத்தில் அந்நியத் தன்மை பெற்ற எளிமையாகவும் இருந்தது. 
இத்தகைய ஒரு மாதிரியினை இன்றைய தலித் இயக்கம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் இம் மாதிரியின் மூலம் நியாயவாதிகளுடனான பயன்தரதக்க ஒரு உடன்படிக்கையை இந்திய கலாச்சாரத்தின் விரிந்த தளத்தில் ஏற்படுத்தி கொள்ள முடியாது. மேலும் இதன் மூலம் தலித் இயக்கம் எதிர்கலாச்சாரத்தின் அபாயங்களுக்கும் ஆளாக நேரிடும். இந்திய மத நியாயவாதிகள் மிக தீவிரமானவர்களாகவும் மூடப்பழக்கங்களை விமர்சிப்பதில் கடுமையானவர்களாகவும் இருந்தார்கள். இருந்தபோதும் அவர்கள் பெரியதொரு ஆன்மீக அமைப்பின் பகுதியாகவும் இருந்தார்கள். 
இரண்டாவது வழிமுறையினை அடிப்படைவாத புனருத்தாரணம் எனலாம். இதனைப் பொறுத்து சமூகத்தின் விளிம்புகளில் இருக்கிற அடுக்குகளை மையத்திற்கு கொண்டு வரும் சாத்தியங்களில் கவனம் கொள்கிறது. பஞ்சாப் தலித்களின் AdDharm இயக்கம் இதற்கு சரியான உதாரணம். சில குறிப்பிட்ட தீண்டத்தகாதோரின் இந்துத்துவத் தோடான ஆழமான கொள்கை பிடிப்பினை கண்டு கொள்ள முடியும். மத்திய கால இந்தியாவில் பெரும்பாலான தாழ்த்தப்பட்டோரால் இந்த முறையே பின்பற்றப்பட்டது. ஏற்கனவே உள்ள ஆதிக்க முறைகளை ஆன்மிகக் கூறுகளாக்கி அவற்றை தினசரி இருப்பின் பகுதிகளாக்க விரும்பினார்கள். மான்கூராம் என்பவரால் தலைமையேற்று நடத்தப்பட்ட AD Dharm இயக்கம் இதில் தீவிரமாக 

16 - 



இருந்ததது கடந்த காலத்தின் புனருத்தாரண முயற்சிகளை விட அடிப்படை வாத கூட்டு சுயத்தை விரும்பியதெனலாம். 
காலனியாதிக்கத்தின் விளைவான நவீன அரசியல் கருத்துக்கள் ஒருமித்த சமூக இனக் கருத்தாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது. இங்குக் காண்கிற தீண்டப்படாதோரின் சுய பிம்பம் மிக சக்திவாய்ந்தது. இந்த சக்தியே கற்பனையில் மிக நிஜமானதொரு வரலாற்றினை ஒடுக்கப்பட்ட இனத்திற்கென மன்றாடியது. 
இந் நாட்டின் உண்மையான குடிமக்கள் நாங்கள் -AD Dharm எங்களின் மதம். வெளியிலிருந்து வந்த இந்துக்கள் எங்களை அடிமைப்படுத்திவிட்டனர். இந்துக்களை நாங்கள் நம்பினோம். ஆனால் அவர்கள் துரோகிகளாகினர். சகோதரர்களே. விழித்தெழும் நேரம் வந்துவிட்டது. அரசு நம் துயரக் குரல்களை கவனிக்கிறது. இந்தியாவை நாம் ஆண்டிருந்த காலமும் இருந்தது. இரானிலிருந்து வந்த இந்துக்கள் நம்மை அழித்துவிட்டனர். நம்முடைய முதலாளிகளாய் மாறின அவர்கள் நம்மையே வெளிநாட்டவர் என்கிறார்கள். நமிவரலாற்றையே அழித்து விட்டார்கள் - இது AD Dharm இயக்கத்தின் அறிக்கை அடிப்படைவாத புணருத்தாரன முறையின் தீவிரத்தினை புரிந்துகொள்ள வழிவகுக்கும் அறிக்கையிது. மூன்றாவது வழி முறையினை பதிலி நினைவுகளுக்கானது எனலாம். இதனை அம்பேத்கருடன் சேர்த்துப் புரிந்துகொள்ளுதல் சுலபமானது. தலித்துகளின் வாழ்வியல் அனுபவங்களில் விடுதலைக் கூறுகள் இருப்பதனை நம்பாததே இம்முறையின் முக்கியமான பண்பாகும். 
இங்கு தலித் இயக்கத்தினை செழுமைப்படுத்திய முக்கியமான காரணிகளை நாம் கவனிக்க முடியும்.ஏற்கனேவேயுள்ள மரபியலை முற்றிலுமாக மறுக்கும் அம்பேத்கரின் கருத்து இதில் ஒன்றாகும். 
சாதி அமைப்பென்பது இந்திய சமூகத்தின் எல்லா அம்சங்களிலும் கூறுகளாகியிருக்கிறது என்பதே அம்பேத்கரின் கலாச்சார அரசியலின் முக்கியமான முன் கணிப்பாகும். வரலாற்றின் நூற்றாண்டுகளில் எல்லா நிறுவனங்களின் அடிப்படையிலும் ஜாதியக் கூறுகள் இருந்து வருகின்றன. இவற்றை எதிர்த்துக் கிளம்பின எல்லா முயற்சிகளும் தூள் தூளாகிவிட்டன. இந்தப் புரிதலே அம்பேத்காரின் தொண்டர்களின் மத்தியில் நவீன வளர்ச்சியின் பாலான கவர்ச்சியினை ஏற்படுத்தியது. இயந்திரங்களும் பெரு நகரங்களும் இணைந்து தீண்டாமையென்பதற்ற ஒரு புது சமுதாயத்தின் வரவிற்கு கட்டியம் கூறின. முதலாளித்துவ நிறுவனங்கள் சாதி அமைப்பின் பிடியிலிருந்து விடுபட்டவை என்று அம்பேத்கர் நம்பியதன் காரணமாகவே நவீனத்துவ நடைமுறையில் ஆதரவாளராக இருந்தார். நவீனத்துவம் தலித்துகளின் வாழ்க்கை தரத்தில் போதுமான அளவு ஏற்படுத்திய உண்மையான மாற்றங்கள் முன்னேற்றத்தின் பால் கவர்ச்சியை ஏற்படுத்தியது. ஆங்கில ஆட்சியில்கூட சட்டத்தின் பார்வையில் ஒரு புதிய தரத்தினை சம்பிராதாய அளவிலேனும் அனுபவித்தார்கள் எனலாம். தேசத்தின் கட்டமைப்பில் மேற்கத்திய பாதிப்புகளை பற்றி ஆராயும் போது தலித்துகளின் வாழ்வில் ஏற்பட்ட இந்த முக்கியமான தரமான மாற்றத்தினை புறக்கணித்துவிட 
முடியாது. 
ஆனால் நவீன வரலாற்றில் விதியின் திருவிளையாடல் வேறு விதமாயிருந்தது. அம்பேத்கரும் பிற தலைவர்களும், நவீனத்துவ சத்திகளுக்கும் சாதி அமைப்பின் மேல் தட்டினருக்குமிடையே ஏற்பட்ட துரோக உடன்படிக்கையை முன்கூட்டி தீர்மானிக்க வில்லை. புதிதாய் முளைத்தெழுந்த நவீன வளர்ச்சி மையங்கள் உயர் சாதியினரோடு சேர்ந்து ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு சொற்பமான பங்களிப்பினைத் தருகிற வகையில் ஒரு கூட்டு இயக்கத்தை தயாரித்திருந்தது. அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவை உயர் சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டன. இதன் விளைவாகத்தான் பொற்கொல்லர் இனத்தை சேர்ந்த மாணவன் கூட உலோகத்துறை உயர்படிப்பில் இடம் பிடிக்க தனித்த முன்னுரிமை தேவைப்படுகிறது. தனித்துவமிக்க தொழில் நுட்பங்கள் கூட அவைகளின் மரபியல் உரிமையாளர்களிடமிருந்து முதலாளித்துவ நவீனவாதிகளினால் பிரிக்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. தனித்துவமிக்க தொழில் நுட்பங்களின் அழிவு நம் நாட்டின் தாழ்த்தப்பட்ட இனங்களுக்கு விழுந்த மிகப்பெரிய நாகரிகச் சிதைவினைத் தரும் அடியாகும். எல்லாவற்றையும் முதலிலிருந்து புதிதாகத் தொடங்க வேண்டும். இதனாலான வெற்றிடம் நம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு பல புதியப் பிரச்சனைகளை உருவாக்குகிறது. 
தமிழில் : எம். கோபாலகிருஷ்ணன். 


17 
படிப்பகம்