Monday 26 September 2016

இதிகாசம் - Jorge Luis Borges



Balasubramanian Ponraj
30 August 2014 ·



I dedicate my first translation of Jorge Luis Borges to my beloved Sister AMJ...

இதிகாசம்

ஏபெலின் மரணத்திற்கு பிறகு காயினும் ஏபெலும் ஒருவரை ஒருவர் நோக்கி வந்தனர். அவர்கள் பாலையினூடாக நடந்து கொண்டிருந்தினர், அவ்விரு மனிதரும் அதி உயரமானவர்கள் என்பதால், தூர வரும்போதே ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டனர். இரு சகோதரர்களும் நிலத்தில் அமர்ந்து, நெருப்பு மூட்டி, புசித்தனர். அந்தி சரிகையில் விந்தையான மனிதர்கள் செய்வதைப் போல மெளனமாக அமர்ந்திருந்தனர். வானில், இன்னுமே பெயர் இடப்பட்டிருக்காத போதும், ஒரு நட்சத்திரம் மின்னியது. நெருப்பின் வெளிச்சத்தில் காயின், ஏபெலின் நெற்றி கல்லின் தழும்பை தாங்கியிருப்பதைக் கண்டு, வாய்க்கு எடுத்துச் சென்ற ரொட்டியை கீழே போட்டுவிட்டு, தன்னை மன்னிக்கும்படி சகோதரனிடம் கேட்டான்.


"நீதான் என்னை கொலை செய்ததா அல்லது நான் தான் உன்னை கொன்றதா? ஏபெல் பதிலளித்தான். "நான் எதையும் நினைவு கூறப்போவதில்லை, இங்கே நாம் இருக்கிறோம், முன்பு போலவே சேர்ந்து".

"இப்போது நான் அறிகிறேன் நீ என்னை உண்மையாகவே மன்னித்தாயென", காயின் சொன்னான், "மறப்பதே மன்னித்தலாக இருக்கிறது. நானும் கூட மறக்க முயல்கிறேன்".

"ஆம், ஏபெல் மெதுவாக சொன்னான். "வருந்துதல் எவ்வளவு நீடிக்கிறதோ, குற்றமும் அவ்வளவு நீடிக்கும்".




%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

Meenakshipuram Deivakumar Muthukumaraswamy and Yavanika Sriram commented on this.


Karthigai Pandian M
5 hrs · 

- போர்கேஸ் (Inferno I, 32)
பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில், விடியலின் மங்கிய ஒளியிலிருந்து அந்திப்பொழுதின் மங்கிய ஒளி வரை, சில மரச்சட்டகங்களையும் , சில செங்குத்தான இரும்புப் பாளங்களையும், வெகு வித்தியாசமான ஆண்களையும் பெண்களையும், ஒரு சுவரையும், மேலும் அனேகமாக காய்ந்த இலைகள் நிரம்பிய கற்சாக்கடையையும், ஒரு சிறுத்தை பார்த்துக் கொண்டிருந்தது. அன்புக்கும் குரூரத்துக்கும் எதையும் துண்டம் துண்டமாகக் கிழித்தெறிகிற கொதிக்கும் வேட்கைக்கும் மானின் மணத்தை ஏந்தி வரும் தென்றலுக்குமான தன்னுடைய ஏக்கம் அதற்குத் தெரியாது, தெரியவும் முடியாது, ஆனால் ஏதோவொன்று அதற்குள்ளாகவே இருந்தபடி மூச்சைத் திணறடிக்கவும் எதிர்க்கவும் செய்தது, கடவுள் அதனிடம் ஒரு கனவில் பேசினார்: “நானறிந்த மனிதனொருவன் குறிப்பிட்ட முறை உன்னைப் பார்த்து, உன்னை மறக்காமல், உன்னுடைய உருவத்தையும் சின்னத்தையும் ஒரு கவிதையில் வைக்க அது இந்த பிரபஞ்சத்தின் தந்திர ஒழுங்கில் தனக்கான துல்லியமானதொரு இடத்தைப் பிடிக்குமென்பதால், இந்தச் சிறையினுள்ளே வாழ்ந்து இதற்குள்தான் நீ மடிவாய். அடைபட்டதன் வேதனையை அனுபவிக்கிறாய், ஆனால் ஒரு கவிதைக்கான வார்த்தையை நீ தந்திருப்பாய்.” கனவில், கடவுள் அந்த முரட்டு விலங்கின் அறியாமையை அகற்றினார், அவருடைய நியாயங்கள் புரிந்ததால் மிருகம் தனது விதியை ஏற்றுக்கொண்டது, ஆனால், அது விழித்தபோது, இவ்வுலகின் இயக்கம் ஒரு முரட்டு விலங்கின் எளிமைக்கு அப்பாற்பட்ட சிக்கல்களைக் கொண்டிருப்பதால், வல்லமைமிக்கதொரு அறியாமையும் தெளிவில்லாத விரக்தியும் மட்டுமே அதனுள் நிறைந்திருந்தன.

வருடங்கள் கழித்து, மற்ற எந்த மனிதனைப் போலவே நியாயமற்ற வகையிலும், தனிமையில் உழன்றும், ராவென்னாவில் தாந்தே இறந்து கொண்டிருந்தார். ஒரு கனவில், அவருடைய வாழ்க்கை மற்றும் பணியின் ரகசிய நோக்கத்தை கடவுள் அவரிடம் அறிவித்தார்: வியப்புணர்வில் ஆழ்ந்த தாந்தே தான் யாரென்பதையும் என்னவாக இருந்தோமென்பதையும் அறிந்து கொண்டார், தனது வாழ்க்கையின் கசப்பையும் ஆசிர்வதித்தார். விழித்தபோது, முடிவேயில்லாத ஒன்றைத் தான் பெற்றதாகவும் பின் தொலைத்ததாகவும் அவர் உணர்ந்தார், அவரால் அதிலிருந்து மீண்டுவரவியலாத அல்லது குறைந்தபட்சம் பார்க்கக்கூட முடியாத ஏதோவொன்று, ஏனெனில், உலகின் இயக்கம் மனிதர்களின் எளிமைக்கு அப்பாற்பட்ட சிக்கல்களைக் கொண்டிருக்கிறது என்பதே மரபாயிருக்கிறது.

- போர்கேஸ் (Inferno I, 32)

தமிழில் - கார்த்திகைப் பாண்டியன்

நன்றி - பாலசுப்ரமணியன் பொன்ராஜ் Balasubramanian Ponraj