Friday 12 May 2017

மரத்தடியில் துயிலும் ஒருவன் - தேவதேவன்

http://poetdevadevan.blogspot.in/2011/03/blog-post_2503.html

SUNDAY, MARCH 6, 2011

மரத்தடியில் துயிலும் ஒருவன்  

தேவதேவன்

புரண்ட விலாவினில்
ஒட்டியிருக்கிற மணல்
பூமியைப் பிரிந்ததால்
தன் உக்கிரமிழந்து தவிக்கிறது
கருணைகொண்ட மரக்கிளைகள்
தன் கந்தல் நிழலின் வெயில் எரிப்பை
ஈடு செய்ய விசிறுகின்றன
வீசிய காற்று
விலா மணலை உலர்த்தி உதிர்க்கிறது
அதேவேளை
உடம்பின் இன்னொரு விலாவை அழுத்துகிறது
உயிருடன் அவனை விழுங்க இயலாத பூமி