Tuesday, 24 November 2015

-Vladimir Soloviev--Nikolay Klyuev--Yakov Polonsky--Gavril Derzhavin- -Mikhail Lermontov--Nikolay Gumilev-Fedor Tyutchev---Ivan Bunin-.-Sergey Esenin--Konstantin Balmont -(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

    நமது வறிய கிராமங்கள் ஏதாயிருக்கின்றன,
    காலம் மற்றும் வெளியின் முழுமை ஏதாயிருக்கிறது?
    பிதாவின் வசம் பல மாளிகைகள் உள்ளன, ஆனால்
    அவற்றின் பெயர்கள் நாம் அறியாதனவே.


    ஆனால் வானுலகின் பேரின்பங்கள் குறித்த முன்னுணர்தல் எனக்குள்ளது,
    அன்றி வாழ்வெனப்படுவது ஒரு கனா;
    நான் மருள்-தோற்ற இன்னிழைவைத் துறக்கிறேன்
    காலத்தின் வாதையை மறுதலிக்கிறேன்.

    நலிதலும், துயருறுதலும், நசிதலும் என - நீ
    எனக்கொரு கொடிய மாலையைத் தொடுத்திருக்கிறாய்.
    வாக்களிக்கப்பட்ட புத்துயிர்ப்பு ஒருபோதும் பூமிக்கென
    எங்குமே நிறைவேற்றம் காணாது.

    -Fedor Sologub-
    (தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





    Yaazh Mozhi





    அந்தி வானில் புயல் ,
    சினந்திருக்கும் ஆழியின் பேரிரைச்சல்...........

    ஆழியின் மீதும் எண்ணங்கள் மீது புயல்-
    வதைக்கும் எண்ணிறந்த எண்ணங்கள்.


    ஆழியின் மீதும் எண்ணங்களின் மீதும் புயல் -
    எண்ணங்களின் உயர்ந்தெழும் சேர்ந்திசை -
    கரு முகிலின் பின் முகிலாய்,
    சினந்திருக்கும் ஆழியின் பேரிரைச்சல்..........

    -Afanasy Fet -
    (தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)






    மனிதத் தன்மையற்ற அவ-விதியுடன் வாதிட ஏதுள்ளது?
    என்ன போராட்டம் ?
    இவையாவும் மருள் தோற்றம்.

    ஆனால் இந்த வெளிர்-நீல அந்தியே இன்னும் என் ஆளுகையின் புலமாயிருக்கிறது.
    வானம்: கிளைகளுக்கிடையே சிவந்தும்,
    விளிம்புகள் முத்து-வர்ணம் பூண்டும் ...............
    ஒரு நைட்டிங்கேல் பறவை லில்லாக் புதரில் கானம் இசைத்திருக்க,
    ஒரு எறும்பு புல்லின் மேல் ஊர்கிறது:
    இது யாரோ ஒருவனுக்கு பயனாகும்.


    ஒருவேளை காற்றில் நான் சுவாசிப்பதிலும் கூட ஏதோவொரு பயனிருக்கவே கூடும்,
    எனது பழம்-மேலங்கியின் இடதுபுறம் சூரியாஸ்தமனத்தில் நீராடியுள்ளது ,
    அதன் வலதுபுறம் தாரகைகளில் அமிழ்கிறது.

    -Georgy Ivanov-
    (தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)





    Shanmugam Subramaniam
    December 1 at 12:49am · Edited ·



    குபிட் ஸ்பெயினிற்கு அந்நியன் அல்லன்;
    இங்கவன் விருந்தினனும் அல்லன்,
    அவன் சொந்த நாட்டில் தனது உறவினர்களுடன் இருக்கிறான்;
    காஸ்டநெட் வாத்தியத்தின் இசைத்துணையாக
    ஒரு எழிலார்- நேசப்பாடலை களிப்புடன் பாடி
    ஸ்பானியனைப் போல் நடமிடுகிறான்.


    ஒரு இளம் ஸ்பானிய நங்கையின் கன்னங்களை
    அவனது கனல் செந்நிறமாக்குகிறது,
    அவளது கொங்கைகளைத் தழல் மூளச் செய்கிறது,
    அவளது ஜீவனுள்ள விழிகளைச் சுடர்த்துகிறது,
    அவளது இதழ்களை எரியூட்டுகிறது,
    மயர்டில்- தாவரமும், கசந்த-ஆரஞ்சு தருவும் அவற்றின் நறுமணத்தை காற்றலையில் ஏந்திச் செல்கையில்.

    ஆனால் நமக்கும்கூட அவன் , தன் சர்வ-வல்லமையின் கடுமையைக் காண்பித்ததில்லை,
    வடதுருவ தட்பவெட்பத்தின் மீதுள்ள அவனது
    இரக்கமிக்க ஆர்வத்தை நம்மால் காணவியலும்:
    உனது விழிகளுக்குச் சுடர்தலை அளித்தவன் அவனில்லையா,

    பவழ அதரங்களும் உனது வாயிற்கு முத்து- நிகர் பல்வரிசையும் ,
    இந்த மென்-பட்டான கேசத்தை சுருளாக்கியும் ,
    உனது -முழுமையை மந்திர வசியத்தால் உடுத்தியிருக்கிறான்?

    -Baron Anton Delvig-
    (தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)




    Shanmugam Subramaniam
    November 30 at 12:06am · Edited ·



    நீ இன்னும் உயிர்த்திருக்கிறாயா, என் மூதாட்டியே?
    நானும்கூட உயிர்த்திருக்கிறேன்.
    வாழ்த்துகள், உனக்கென் வாழ்த்துகள் ............
    அந்தச் சொல்லடங்கா அந்தி ஒளி உனது சிறு வீட்டின் மேல் பாயட்டும்.


    அதை எனக்குச் சொல்வதற்காகவே அவர்கள் எழுதுகிறார்கள்,
    ஆயினும் நீ உனது பதற்றத்தை மறைத்தாலும்,
    எப்போதும் எனக்கென நீ அத்துனை ஏக்கமுற்று
    உனது நைந்தப் பழம்-பாணி மேலங்கியை அணிந்து
    அடிக்கடி வெளியே சாலைக்கு வருகிறாய்;

    அந்த அந்தி நீல-இருண்மையில் அடிக்கடி நீ அதையே கற்பனை கொள்கிறாய்: யாரோ ஒருவன், மதுக்கூட சச்சரவில்
    ஒரு உறைவாளை எனது நெஞ்சின் கீழ் செருகியதாய்,
    நீ கற்பனைக் காட்சியுறுகிறாய்,

    அது ஒன்றுமில்லை,என் அன்பானவளே,
    உன்னை சாந்தம் செய்:
    இது தொல்லை தரும் ஒரு மனக்கற்பிதத்தின் ஆட்டம்.
    நான் அப்படியொன்றும் உறுதியான குடியன் அல்லன்,
    முதலில் உன்னை காணாது மரிக்க.

    நான் முன்பைப் போலவே அன்பானாவன்,
    எனது ஒற்றைக் கனா ஒயாத துயரிலிருந்து மீண்டு,
    நமது சிறுவீட்டிற்கு திரும்பவது.

    நமது வெண்-தோட்டம் தனது கிளைகளை இளவேனிற்கால பாணியில் விரிக்கும் தருணம், நான் வீடு திரும்புவேன்,
    ஆனால் என்னை நீ புலர்காலையில் விழிக்கச் செய்யாதே,
    எட்டு வருடங்களுக்கு முன் செய்ததைப் போல்.

    மறைந்தழிந்த கனவுகளை மீள்-விழிப்புறச் செய்யாதே,
    எது நிஜமாகவில்லையோ அதை தொந்தரவு செய்யாதே:
    வெகு-சீக்கிரமாகவே வாழ்வு என்னிடத்தில் வீழ்ந்தது
    உளச்சோர்வையும் கையறுநிலையையும் அவதியுற.

    ஜெபிக்க என்னைப் பயிற்றுவிக்காதே. அதை செய்யாதே. இறந்தகாலத்திற்கு திரும்புதல் இனியில்லை,
    நீ மட்டுமே எனது பேருதவியும் இளைப்பாறுதலும் ஆவாய்,
    நீ மட்டுமே எனது செல்லடங்கா ஒளியாவாய்.

    ஆதலால் உனது பதற்றத்தை மறப்பாய்,
    எனக்காக அத்துனை ஏக்கமுறாதே,
    உனது நைந்தப் பழம்-பாணி மேலங்கியை அணிந்து அடிக்கடி
    சாலைக்கு வராதே.

    -Sergey Esenin-
    (தமிழாக்கம்: எஸ்.சண்முகம்)








    Shanmugam Subramaniam
    November 29, 2014 ·

    How often do we tell our own life story?
    How often do we adjust,
    embellish, make sly cuts?

    And the longer life goes on,
    the fewer are those around to challenge our account,
    to remind us that our life is not our life,
    merely the story we have told about our life.


    Told to others,
    but—mainly—to ourselves..........

    -Julian Barnes-
    (The Sense of an Ending)




    Shanmugam Subramaniam
    November 29, 2014 ·



    The man who cannot visualize
    a horse galloping
    on a tomato is an idiot....

    -André Breton-

சிரம் முதல் பாதம்வரை தடிமனான ஃபர் மேலங்கியால் 
நின்னைப் போர்த்தியுள்ளாய்,
நிசப்தமாய் சயனிக்கிறய், சாந்தமாய் துயில்கிறாய்,
இங்கு சுடரும் காற்றில் மரித்தலின் சுவாசமில்லை,
படிகமாய்த் தெளிந்த, இவ்வெண்-மெளனத்தில்.


அல்லாது , உலைவுறா ஆழ்ந்த அசைவின்மையில்,
நின்னை நான் வீணில் நாடிவிழையவில்லை.
நினது அதே படிமத்தை அகக்கண் இன்னும் காண்கிறது,
தேவதை அரசியே, பைன் தருக்களின் மற்றும் பாறைகளின் தலைவியே!

நீ மாசில் தூய்மை, மலைகளின் அப்பாலுள்ள பனி போல்,
நீ எண்ணிலா சிந்தனைகளுடன் இருக்கிறாய்,
குளிர்கால இரவைப் போல் , நீ பிரகாசிக்கிறாய்,
வடதுருவ ஒளிதீபங்களைப் போல்-

ஓ இருண்ட ஒழுங்கின்மையின் ஒளிர்- புதல்வியே!

-Vladimir Soloviev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





பொன்னால் நெய்த செப்டம்பர் நாட்களில்
பைன்- வனங்களின் விளிம்பு தேவாலயத்தின் முன்றிலெனத் தோன்றுகிறது. பைன் மரங்கள் ஜெபிக்கின்றன, மற்றும்
உனது வெறிச்சோடிய குடிசையின் மேல் நறுமணத் தூபம் எரிகிறது.

காற்றும் , வனக்காவலனும், பழங்காலத் தடங்களைச்
சலசலக்கும் உலரிலைகளால் மூடினர்,
அலங்காரமாய் வடிவமைந்த பைன்களின் வலையை அகலவிரித்திடு,
தடித்த பிர்ச்- மரத்தின் பின்புறம் உன்னைக் கணக்-காட்சி கொள்கிறேன்


கைக்குட்டையின் ஓரத்தை நான் இனமறிவேன்,
சன்னமான சிறு குரல் , சிறிதே அசைவாடும் நடை,......
பைன் தருக்கள் இருளை, சிறைகளை, கம்பிகளினூடே மினுங்கும் தாரகைகளை, -

ஒரு கொடூர யாத்திரையில் கணீரென ஒலிக்கும் மணியைப் பற்றிக் குசுகுசுக்கின்றன,
புர்யாதின் தொடுவானம்...... உங்களுக்குச் சமாதானம் ,
பைன் -தருக்களே, நீவீர் எனையீன்ற தாய்போல்
எனது சிந்தனைகளைப் புனிதம் செய்தீர்.

செப்டம்பர் மாத நினைவு நாட்களில்
உனது மகனின் இரகசியத்தைக் கண்டறிவாய்,
யார் நேசித்து -அழிந்தாளோ அவளைப் பற்றி வானுலகிற்கும் பூவுலகிற்கும் சொல்வாய்.

-Nikolay Klyuev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

*****(புர்யாத் குடியரசு)





ஃபிடில் இசைக்கும் வில் நடுங்கிக் கொண்டிருந்தது,
விளக்குகள் தோட்டங்களில் மிளிர்ந்திருந்தன,
மக்கள் உலாவிய வண்ணமிருந்தனர்; மென்காற்று மட்டுமே கண்ணயர்ந்தது , இரவின் வான் கறுமையாயிருந்தது .

பச்சையமான குளமும் கறுமையுற்றிருந்தது
அடர்த்தியான நாணற்புதர்களில் வறிய அன்னமொன்று வாடி நலிந்திருக்க, இரவின் மோனத்தில் தன்னை மறைத்தது.


நயந்து பழக்கப்பட்டும் தனிமையார்ந்தும்,
தனது மரித்தலின் -வேதனையிலும்கூட
ஒரு ராக்கெட் காற்றினுள் பறந்துயர்ந்து நெருப்பை அவன் மேல் சிதறச் செய்ததைக் கண்டதில்லை

நீர்த் தாரையின் துள்ளலாட்டத்தையும் , அன்றி
ஓடையின் கரையோ முணுமுணுப்பையும் அவன் செவி கொள்ளவில்லை,
அவனது விழிகள் சாத்தியிருந்தன,
முகில்களின் மேல் ஒரு பறத்தலை அவன் கனவுற்றிருந்தான்:

வானின் அகண்ட விரிவின் உயர்வினுள்
தன்னை ஏந்திச் செல்லும் ஒரு பறத்தலை, -.......................
அங்கவன் எத்தகைய அகத்தூண்டலின் பாடலை இசைப்பான்!

எவைகளை மானுடனிடமிருந்து புனிதமாகவும் மறைவாகவும் தனவசம் வைத்திருந்தானோ அவை அங்கு
வெண் -அன்ன கூட்ட்த்தின், மற்றும் தன் உறவினர்களின் பாடலில் எதிர்வினையைக் காணும்.

அவன் ஒரு கணத்தில் பெருமூச்செறிவதாய் கனவுற்றான்,
அவனது சிறகுகள் படபடக்கத் துவங்கின,
தளை தகர்ந்த பாடலின் ஒலிகள் காலைப் பொழுதை அறிவிக்கும்.

ஆனால் அவனது சிறகுகள் அசையவில்லை,
அவனது உள்ளத்திருந்த பாடல் பிறழ்ந்தது,
பறத்தலை செய்ய இயலாமலும்
அவனது பாடல் புகழ்ந்து இசைக்கப் பெறாமலும் ,
அரை ஒளியில் மாய்ந்தபடி இருந்தான்.

இலைகள் சலசலத்தன, நறுங்காற்று நாணற் புதர்களிடையே கடக்கும் தருணம்,சுற்றிலும் உள்ள தோட்டங்களில் ,
விளக்குகள் மிளிர்ந்திருந்தன,
ஃபிடில் இசைக்கும் வில் நடுங்கிக் கொண்டிருந்தது.

-Yakov Polonsky-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)






உயர் குன்றின் மேல் நான் துயின்றிருந்தேன் உனது குரலையும் செவி கொண்டேன்,
ஓ நைட்டிங்கேல் பறவையே. ஆழ்ந்த துயிலிலும்கூட எனது ஆன்மாவால் அதைச் செவிகொள்ள முடிகிறது-
இப்போது ஒலியதிர்கிறது , இப்போது எதிரொலிக்கிறது,
இப்போது இரங்கியழுகிறது, இப்போது என் செவிகளில் நெடும் தொலைவிலிருந்து நகைக்கிறது. மற்றும்
காலிஸ்டோவின் மெய்தழுவலில் நான் சாய்ந்து கிடந்த தருணம், பாடல்களும், பெருமூச்சுகளும் ,
அழுகையும், சீழ்கையொலியும்,
எனது இனித்த -துயிலிலும் களிப்பூட்டுகின்றன.


ஒருவேளை, நான் மரித்த பின் நீள்-சோர்விலும் , இறுதியுறா நீடித்த துயிலிலும் நான் படுத்து கிடப்பினும்,
அந்தோ, இப்போது போல் - இனி எப்போதும் என் செவிகளைச் சேராது,
ஒருவேளை மகிழ்ச்சியின் மற்றும் கிளர்ச்சியின்,
குழுப்பாடலின், நடமிடலின், சப்தங்களை நான் செவி கொள்ளாவிடினும்-
பூமியின் மீதான வாழ்வை நான்அதேபோல் துய்க்க்கூடும்,
எனது அன்பியை அவ்வப்போது இடைவிடாது முத்தமிட்டும்,
நைட்டிங்கேல் பறவையின் பாடல்களுக்கு உன்னிப்பாய் செவிமடுத்தும்.

-Gavril Derzhavin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)











Shanmugam Subramaniam
22 hrs · Edited ·



that is, in all Translation......................

The question of how to translate - should translators, like wives and husbands,
be 'faithful' or "free" ? - has continued to be controversial ever since the literal-minded Gavin Douglas rebuked Caxton for his 'counterfeit' of Virgil, and Dryden (two hundred years later) aligned himself cautiously on the others side: 'something must be lost in all Transfusion , that is, in all Translation."


-James Greene -
(Translator's Preface)
Osip Mandelstam -Selected Poems)







News Feed





Shanmugam Subramaniam
November 23 at 11:47pm ·



நள்ளிரவு வானூடே ஒரு தேவதூதன் பறந்து கொண்டிருந்தான்,
அவன் மிருதுவாய் நெகிழ்ந்து பாடினான்;
நிலவும், தாரகைகளும், குழுமிய முகில்களும் ,
அப்புனிதத் திருப்பாடலைக் கூர்ந்து செவிமடுக்கிறது.


சுவர்க்கத் தோட்டங்களின் நிழலில் தங்கும்
களங்கமில்லா ஆவிகளின் பேரின்பத்தை பாடினான்,
அவன் மகிமை நிறை ஆண்டவரைத் துதி பாடினான்,
அவனது துதிகள் மெய்யாயிருந்த்து.

தனது கரங்களில் ஒரு இளம் ஆன்மாவை ஏந்திச் சென்றான்,
விசனத்திற்கும் விழிநீருக்குமான உலகிற்கு விதிக்கப்பட்டவனாய்;
அவனது பாடலின் ஒலி தங்கியிருந்தது,
வார்த்தைளற்றிருப்பினும் உயிர்த்திருக்கிறது,
அந்த இளம் ஆன்மாவில்.

புவியில் நெடுங்காலம் அது சோர்ந்து நலிந்தது,
வியப்பார்ந்த பேரவாவினால் நிரம்பியுள்ளது,
அதன் பொருட்டு பூமியின் நீள்-சலிப்பூட்டும் பாடல்கள்
சுவர்க்கத்தின் ஒலிகளால் தம்மை மாற்றீடு செய்ய இயலாதுள்ளன.

-Mikhail Lermontov-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)












Shanmugam Subramaniam
November 23 at 1:17am · Edited ·



நம்முடன் நேசமுற்றிருக்கும் வைனும் ,
நம் நிமித்தமாய் அடுப்பிற்குள் புகும் நேர்த்தியான நன்-ரொட்டியும் ,
நாம் துய்த்து இன்புறம் நங்கையும்,
நம்மை அவள் முழுமையாய் வாதையுற வைத்த பின்னரும்
நன்றாயிருக்கிறது.


ஆனால் உயரே குளுமையுறும்
வானின்,
ரோஜா-வர்ண அஸ்தமனத்துடன் நாம் ஏது செய்ய?
எங்கு மெளனமும் நிலவுலகத்தல்லாத பேரமைதியும் நிலவுகிறதோ,அங்கு நிலைபேறுடைய கவிதைகளுடன்
நாம் ஏது செய்ய?

நின்னால் உண்ணவியலாது, அல்லது பருகவியலாது,
அல்லது அவர்களை முத்தம் செய்யவியலாது.....................
தடையின்றி கணம் சிறகடிக்கிறது,
நாம் நமது கரங்களை வலிய முறுக்குகிறோம்,
ஆனால் நாம் இன்னமும் நெருக்கமற்று பரந்தகலுகிறோம்,
குறியீட்டிலிருந்து பரந்தகல்கிறோம்.

ஒரு சிறுவனாய் மட்டுமே, தனது ஆட்டங்களை மறந்து,
இளநங்கைகள் நீராடுதலைச் சிலசமயம் கூர்ந்து நோக்கி,
புலனாகா மறைவேட்கையால் இன்னும் வதைக்கப்படுகிறான்.

முன்னொரு காலத்தைப் போன்றே வழுக்கி ஊரும் உயிரினம் ,
தனது முதுகில் உருப்பெறா சிறகுகளை உணர்கிறது,
அதீதமாய்ச் செழித்த புதர்காடுகளிலிருந்து
இயலாமையின் உணர்வுற்று ஓலமிடுகிறது-

ஆகையால் நூற்றாண்டிற்கு பின் நூற்றாண்டாக,-,
எத்துனை விரைவாக, ஓ ஆண்டவரே?--
இயற்கையின் - கலையின் வாளின் கீழ்;
நமது ஆன்மாவின் அழுகை வீறிட்டெழுகிறது,
மாம்சம் உணர்விழந்து மயங்குகிறது, அவை-
ஆறாம் அறிவின் உறுப்பைப் பிறப்பிக்கும் தருணம்.

-Nikolay Gumilev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)











Shanmugam Subramaniam
November 21 at 11:54pm · Edited ·



ஓ, இன்னும் எத்துனைக் கூடுதலான பிரியத்துடனும் குருட்டு நம்பிக்கையுடனும்
நமது தேய்ந்து தளரும் ஆண்டுகளில் நேசிக்கிறோம்...................
ஒளிவீசு, ஓ, ஒளிவீசு,
கடைசி நேசத்தவளின் பிரியாவிடை ஒளியே,
அஸ்தமனச் செவ்வான் ஒளியே!


அரை வானை நிழல் கவிந்துள்ளது,
அங்கு மட்டுமே, மேற்கு திசையில் ,
ஒரு ஒளிமினுக்கம் அலைகிறது;
துரிதப்படாதே, அந்தி ஒளியே,
நீடித்திரு ,நீடித்திரு , மந்திரவசியத்தில்.

நரம்புகளில் குருதி மெலிந்து நீர்மையாய் பாய்கிறது,
இன்னமும் நெஞ்சத்தில் மென்கனிவு தேய்வுறவில்லை...................
ஓ கடைசி நேசத்தவளே,
நீ ஆனந்தமும் விரக்தியும் இரண்டுமானவள்....

-Fedor Tyutchev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







News Feed





Shanmugam Subramaniam
November 20 at 10:50pm · Edited ·



பூக்களும், பெருவண்டுகளும், புல்லும் ,(சோளத்தின்),கதிர்களும்
நீலவானும், மதியப்பொழுதின் வெம்மையும்...........

காலம் அணுகி வரும்-
ஆண்டவர் கெட்டு- மீண்ட குமாரானை வினவுவார்:
பூமியின் மீதான உனது வாழ்வு உவந்திருந்ததா?


மேலும்; யாவையும் நான் மறப்பேன்,
புல் மற்றும் சோளக் கதிர் காடுகளின் குறுக்கே சமைந்திருக்கும்,
பாதைகள் ஒன்றையே ஞாபகமடைவேன் -மற்றும்,
(அவரது) அருளார்ந்த முழங்காலுக்கு எதிராய் அழுத்தபட்டிருக்க,
என் விழிகள் தேக்கியுள்ள உவகையின் கண்ணீருக்கு
நான் பதிலளிக்க இயலாதவனாய் இருப்பேன்.

-Ivan Bunin-.
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)











Shanmugam Subramaniam
November 20 at 1:41am · Edited ·



பொற் -தோப்பு இப்போது பிர்ச் மரங்களின் மகிழ்-மொழியில் பேசுதலை நிறுத்திவிட்ட்து,
நாரைகள், சோகமாய் சிறகடித்துக் கடக்கின்றன,
இனி எவரேனும் ஒருவர்கூட வருந்தமாட்டார்கள்.

வருந்துவதற்கென யார் உள்ளார்?
இவ்வுலகத்துள்ள ஒவ்வொரு மானுடனும் ஒருவகையில் நாடோடியாக இல்லையா?
அவன் கடந்து போகிறான், வருகை தருகிறான்,
மீண்டும் இல்லம் விட்டுத் தொலைகிறான்,
சணல்-வயல், வெளிர்நீல குளத்தின் மீதிருக்கும் அகன்ற நிலவுடன் கூடி,
தொலைவுற்று மறைந்தோர் அனைவரையும் கனவுறுகிறது.


தழைக்கா வெற்றுச் சமவெளியில் நான் தனியனாய் நிற்கிறேன்,
நாரைகளை அதிதூரம் காற்று ஏந்திச் செல்லும் தருணத்தில்,
மகிழ்வூறிய இளமையின் எண்ணங்களால் நிரம்பியுள்ளேன்,
ஆனாலும் நான் கடந்தகாலத்தின் எதை நினைத்தும் வருந்தவில்லை.

பாழுக்கு; நான் வீணிற் கழித்த ஆண்டுகளை எண்ணியும் வருந்தவில்லை,
எனது ஆன்மாவின் லில்லாக் அரும்புக்கும் வருந்தவில்லை
ரோவன் மரக்கிளைகள் தோட்ட்த்தில் தழலுற்று எரிகின்றன,
அதனால் யாரேனும் ஒருவரைக்கூட கதகதப்பூட்ட இயலவில்லை.

ரோவன்-பெரி கொத்துகள் தீக்கிரையாகாது,
நாணல் மஞ்சள் நிறமாகி நசியாது,
மரம் இலைகளை கனிவுடன் வீழ அனுமதிப்பது போன்றே,
நானும் சோகமிழையும் வார்த்தகளை வீழ அனுமதிப்பேன்.

ஒருவேளை காலம், அதைக் காற்றில் விசிறியெறிந்த பின்,
யாவற்றையும் வாரி பயனில்- குவியலாக்க வேண்டும்.......
வெறுமனே சொல், பொற் -தோப்பு இப்போது
நான் நேசிக்கும் மொழியில் பேசுதலை நிறுத்திவிட்ட்தென்று...........

-Sergey Esenin-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam
November 19 at 1:38am · Edited ·



மங்கும் நாளின் அமைதியொளியில்
நெடுஞ்சாலையின் நெடுகிலும் நடையிடுகிறேன் ;
என் நெஞ்சம் பாரமடைகிறது,
என் கால்கள் உணர்விழக்கின்றன:
என் அன்பிற்கினியவளே, நீயென்னைப் பார்க்கிறாயா?


பூமியின் மீது இருளடர்கிறது மென்மேலும் வளர்ந்து இருளடர்கிறது............
நாளொளியின் இறுதிப் பிரகாசமும் பறந்துவிட்டது........
இவ்விடம்தான் நாமிருவரும் சங்கமித்து வாழ்ந்த உலகு,
என் தேவதையே ,நீயென்னைப் பார்க்கிகிறயா?

நாளைப் பிராத்தணையின்,மனத்துயரின் பொழுதாகும்,
நாளை மரித்தலின் ஆண்டு நிறைவு. என் தேவதையே,
எங்கு ஆன்மாக்கள் வசிக்குமோ அங்கிருந்து,
என் தேவதையே, நீயென்னைப் பார்க்கிறாயா?

-Fedor Tyutchev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்-)






எத்துனை அழகைத் தரித்திருக்கிறாய் நீ ,
ஓ ஆழியே! இராப் பொழுதில் இங்கு ஒளிமயமாகிறாய்,
அங்கு சாம்பல்பூத்த நீலமாய் இருண்மையாய் ....
அது நகர்கிறது, முச்சுவிடுகிறது, நிலவொளியில் பளபளக்கிறது,
உயிர்த்திருக்கும் இனங்காணா பிராணி போலுள்ளது.


அதன் எல்லையில்லா, கட்டற்ற விரிவில், ஒளி சுடர்கிறது,
அதன் அசைவில்,கர்ஜனையில், அங்கு இடி முழங்குகிறது .........
ஓ ஆழியே, மங்கலான ஒளிர்வில் நீராடியுள்ளாய்,
நீ எத்துனை அழகைத் தரித்திருக்கிறாய்
இராப் பொழுதின் தனிமைவாசத்தில்.

ஓ மீ -அலையே , ஆழியின் பேரெழுச்சியே!
யாரின் விழாநிலையை இப்பாணியில் கொண்டாடுகிறாய்?
இடிமுழங்கியும் மின்னியும் ; அலைகள் புரள்கின்றன,
உயரேயிருந்து தாரகைகள் உன்னிப்புடன் நோக்குகிறது.............

கனவில் நிற்றலைப் போல் நிற்கிறேன்,
இக்கலக்கத்திலும் ஒளிர்விலும் தொலைகிறேன்.
ஓ, எத்தகைய ஆனந்தத்துடன் அவைகளின் மந்திர-மயக்கில்,
எனது முழு ஆன்மாவையும் முழ்கடித்திருப்பேன்!

-Fedor Tyutchev-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்-)


Original Incorrect.....












Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:32am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



...it occurred to me that perhaps in this city the crowd was essential to the individual; without it, he had nothing against which to scrape his anger, no echo for grief, and not the slightest proof that there were others more lonely than he. it was just a passing thought.


-Don DeLillo-
( Americana)








Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:31am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



It is so much simpler
to bury reality
than it is to dispose of dreams.........

-Don DeLillo-
( Americana)








Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:12am · Edited ·



I'm permanence.....












Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:12am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



We are as ignorant of the meaning
of the dragon
as we are
of the meaning of the universe.”


-Jorge Luis Borges-
( The Book of Imaginary Beings)












News Feed





Shanmugam Subramaniam shared his post.
November 18 at 10:11am ·




Shanmugam Subramaniam added 2 new photos.
November 18, 2014 ·



Too much has been forgotten
in the name of memory. ...

- Don DeLillo-
(Americana)










Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:10am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 · Edited ·



That night, after the movie, driving my father's car along the country roads, I began to wonder how real the landscape truly was, and how much of a dream is a dream.

-Don DeLillo-
( Americana)










Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:10am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



One must become a book
before
one can know what is inside it...........

-Don DeLillo-
(Americana)










Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:09am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



"Fellini says the right eye is for reality ,and the left eye is the fantasy eye.
Whenever you are ready,Glenn."

-Don DeLillo -
(Americana)






News Feed





Shanmugam Subramaniam shared his photo.
November 18 at 10:09am ·




Shanmugam Subramaniam
November 18, 2014 ·



Any life is made up of a single moment,
the moment
in which a man finds out,
once and for all, who he is.....................


-Jorge Luis Borges-










Shanmugam Subramaniam
November 18 at 12:59am · Edited ·



இன்னிசைப் பாடலின் வனப்பில் ,
ஒரு அசையா ஆடிநிகர் மேற்பரப்பில்,
எனக்கு முன்னம் யாரும் மொழியாக் கனவுகளின்
விளிம்புக் கோடுகளை நான் கணடறிகிறேன்,
பனிப்பாளங்களின் கீழ் குத்திட்டு அடைப்பட்ட தாவரங்களாய்,


அவைகளுக்கு நான் ஆனந்தக் களிப்பின் ஆற்றலைக் கொடுத்தேன்,
அதன் ஜனித்தலுக்கு எழிலின் நேர்த்தியை அளித்தேன்,
சப்தமிட்டு ரீங்கரிக்கும் பனிபாளங்களைச் சிதறடித்தேன்,
ஒலிபெறா துதிப் பாசுரங்களைப் போல்,
அபரிமிதமாய் செழித்த தாமரைகள்,
ஆடிநிகர் நீரின் விரிவில் சுவாசிக்கிறது.

ஒலிபெறா இன்னிசைப் பாடலில்,
இப்புதிய ஆடிநிகர் மேற்பரப்பில்,
அதன் வட்ட நர்த்தனம் புத்துலகை தோற்றுவிக்கிறது,
இன்னமும் முழுமையாய் வெளிப்படாது
ஆயினும் அறிந்த உலகுடன் இணைவுற்றிருக்கிறது
பிரதிபலிக்கும் நீரின் அடியாழத்தில்....

-Konstantin Balmont -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்-)

Monday, 23 November 2015


Gouthama Siddarthan liked this.





Pon Vasudevan
19 hrs ·


புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல்,
வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையென
காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே
நீலிதனைக் காண வந்தேன், நீண்ட வழியினிலே
நின்ற பொருள் கண்ட நினைவில்லை.



பாரதியார்
‘குயில் பாட்டு’ - காதலோ காதல்


Shanmugam Subramaniam liked this.


Like Page



Ray Bradbury
Yesterday at 3:43pm ·


“If you don't want a man unhappy politically, don't give him two sides to a question to worry him; give him one. Better yet, give him none. Let him forget there is such a thing as war. If the government is inefficient, top-heavy, and tax-mad, better it be all those than that people worry over it. Peace, Montag. Give the people contests they win by remembering the words to more popular songs or the names of state capitals or how much corn Iowa grew last year. Cram them full of noncombustible data, chock them so damned full of 'facts' they feel stuffed, but absolutely 'brilliant' with information. Then they'll feel they're thinking, they'll get a sense of motion without moving. And they'll be happy, because facts of that sort don't change.”
― Ray Bradbury, Fahrenheit 451



Leena Manimekalai liked this.




Nitesh Noor Mohanty updated his profile picture.
Yesterday at 4:04pm ·



Shanmugam Subramaniam liked this.



Like Page



William Faulkner
23 hrs ·


"He would not even be paid for risking his life and what remained of his reputation, until he corrected that: thinking how war and drink are the two things man is never too poor to buy."
--from "A Fable" By William Faulkner

This novel won both the Pulitzer Prize and the National Book Award in 1955. An allegorical story of World War I, set in the trenches in France and dealing ostensibly with a mutiny in a French regiment, it was originally considered a sharp departure for Faulkner. Recently it has come to be recognized as one of his major works and an essential part of the Faulkner oeuvre. Faulkner himself fought in the war, and his descriptions of it "rise to magnificence," according to The New York Times, and include, in Malcolm Cowley's words, "some of the most powerful scenes he ever conceived."


Saturday, 21 November 2015

அமிர்தகலாவின் உரைமொழிப் பதிவு - SHOBASAKTHI ANTONYTHASAN·

அமிர்தகலாவின் உரைமொழிப் பதிவு

SHOBASAKTHI ANTONYTHASAN·SATURDAY, NOVEMBER 21, 2015
https://www.facebook.com/notes/shobasakthi-antonythasan/அமிர்தகலாவின்-உரைமொழிப்-பதிவு/10153557297527911

"நீங்க என்ர பேரைப் போட்டே புத்தகம் எழுதுங்க. எனக்கு ஆருக்கும் பயமில்லை. கதைக்காமல் அமசடக்கா இருந்துதானே இப்ப இந்த கேவலங் கெட்ட சீவியமும் கண்ணீருஞ் சோறும். இயக்கத்தில என்ர பேர் நிறைமொழி..."
நீங்கள் எனது உண்மையான பெயரைக் குறிப்பிட்டு, இது இராசேந்திரம் அமிர்தகலாவின் வாக்குமூலம் எனப் பதிவு செய்யுங்கள். எனக்கு யாரிடமும் அச்சமில்லை. கதைக்க வேண்டிய நேரத்தில் கதைக்காமல் வாய்களை மூடிக்கொண்டிருக்க முடியாது. சொல்லத்தான் வேண்டும்! என்னுடைய இயக்கப் பெயர் நிறைமொழி.
2006-ம் ஆண்டு, வீட்டுக்கு ஒரு பிள்ளை கட்டாயமாகப் போருக்கு வரவேண்டும் என்று புலிகள் இயக்கம் சொன்னபோது இயக்கத்திற்குப் போனவள் நான். தந்தையில்லாத எங்களது குடும்பத்தில் பிள்ளைகள் நான்குபேர்களுமே பெண்களாகயிருந்தோம். எனவே தலைப் பிள்ளையான நான் இயக்கத்திற்குப் போனேன்.
நான் எனது விருப்பமில்லாமல்தான் புலிகளால் கூட்டிச் செல்லப்பட்டேன். எனவே பயிற்சியிலோ வேறு இயக்க நடவடிக்கைகளிலோ நான் பெரிய ஆர்வமெல்லாம் காட்டவில்லை. எப்போது இந்தச் சண்டை முடியும், எப்போது நான் எனது வீட்டிற்குப் போகலாம் என்று நினைத்துக்கொண்டேயிருப்பேன்.
ஆனால் யுத்தம் தீவிரமானபோது, புலிகளின் அணியிலிருந்த நான் திறமையாகவும் கடுமையாகவும் ஓயாமலும் போரிடுவதின் மூலம்தான் எனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் எனத் தெரிந்துகொண்டேன். சண்டையிட விரும்பாத போராளிகளும் இயக்கத்திலிருந்து ஓடிப்போக நினைத்துக்கொண்டிருந்தவர்களுமே சண்டைகளின் போது அதிகளவு இறந்தார்கள் என்பது எனது அனுபவபூர்வமான உண்மை.
நான் வனத்தின் மகள். காட்டு ராணி. சிறுவயதிலிருந்தே உழைத்து உழைத்து களைப்பறியாத உடல் எனதாயிருந்தது. இப்போது சரிவர இயங்காமல் இருக்கும் எனது இரு கால்களும் அப்போது மானைப் போலத் தாவக்கூடியவையாக இருந்தன. இப்போது வழங்காத கைகளிரண்டும் அப்போது காளியாத்தையின் கைகள் போல பத்தாகயிருந்தன. குளமும் ஆறும் நான் தவழ்ந்த தொட்டில்கள். இவற்றிற்கு எல்லாம் மேலாக நான் இறந்துபோகக் கூடாது என்ற வைராக்கியம் என்னில் உறுதியாக இருந்தது. எனவே நான் மிகத் திறமையாகப் போரிடும் சண்டைக்காரியானேன். வெகு விரைவிலேயே இயக்கத்தின் சிறப்புத் தாக்குதல் அணிகளிற்குள் நான் உள்வாங்கப்பட்டேன்.
எங்களது கடைசிச் சமர் ஆனந்தபுரம் சமர். விடுதலைப் புலிகள் எடுத்த கடைசி எத்தனமது. நான் இருந்த அணி, தளபதி வாகைச்சுடரின் தலைமையில் மார்ச் 31-ம் தேதி இரவு ஆனந்தபுரத்திற்கு வந்தது. கிட்டத்தட்ட நான்கு நான்கரை சதுர கிலோமீற்றர்கள் அளவிருந்த அந்தப் பகுதி, மரங்கள் நெருக்கமாக அடர்ந்திருந்த சமவெளியாகயிருந்தது. அன்று மாலைவரை எங்களது தலைவர் அங்கு தங்கிநின்று தாக்குதல் திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்துக்கொடுத்துவிட்டுச் சென்றதாகப் பெட்டைகள் சொன்னார்கள். பல வாரங்களாகத் தொடர்ச்சியாகப் பின்வாங்கிக்கொண்டிருந்த எங்களின் முழுப் பலத்தையும் சேர்த்துக் குவித்த தாக்குதல் திட்டமது. இயக்கத்தின் முக்கியமான தளபதிகளில் மூன்று, நான்கு பேர்களைத் தவிர மற்றவர்களெல்லோருமே அங்கே கூடியிருந்தார்கள். ஆண்களும் பெண்களுமாகக் கிட்டத்தட்ட ஆயிரத்து அய்நூறுவரையான போராளிகள் அங்கு சண்டைக்குத் தயாராக நின்றோம். நாங்கள் அங்கு கூடித் தயாரானதை இராணுவத்தினரும் அறிவார்கள். அவர்கள் எங்களிற்கு மிக அருகில்தான் இருந்தார்கள். தவிரவும் எங்களது தொலைத் தொடர்பு உரையாடல்கள் முழுவதையும் அவர்கள் ஒட்டுக் கேட்டார்கள். தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய தளபதியின் தொலைத்தொடர்புச் சங்கேத வார்த்தை 'டொங்கோ பப்பா'. டொங்கோ பப்பாவின் ஒவ்வொரு சங்கேதச் சொற்களையும் இராணுவத்தினர் உடைத்து அறிந்தார்கள்.
இராணுவத்தின் அய்ந்து படையணிகள் எங்களிற்கு எதிராகப் போரிட்டுக்கொண்டிருந்தன. நாங்களும் மூர்க்கத்துடன்தான் போரிட்டோம். காயமடைந்த போராளிகள் களப்பு வழியாக வெளியே அனுப்பப்பட்டு அதே வழியாக எங்களிற்கு உதவிகளும் உணவும் வந்துகொண்டிருந்தன. அடுத்து வந்த இரவில் அந்தக் களப்பு வழியை இராணுவத்தினர் அடைத்துவிட்டார்கள். நன்கு திட்டமிட்டு நகர்ந்த இராணுவத்தினர் எங்களை நான்கு புறங்களும் சூழ்ந்து BOX அடித்துவிட்டார்கள். பல அடுக்குகளாக அடிக்கப்பட்ட BOX அது.
அதுதான் இறுதிப் போர் எனப் போரிடும் இரண்டு தரப்புக்குமே விரைவில் தெரியத் தொடங்கியது. முற்றுகையை இறுக்க அவர்களும் முற்றுகையை உடைக்க நாங்களும் உச்சக்கட்டத் திறனுடனும் மூர்க்கத்துடனும் போரிட்டோம். அந்த மூன்று நாட்களிலும் கிட்டத்தட்ட முப்பதாயிரம் எறிகணைகள் எங்கள்மீது வீசப்பட்டன. நான்கு சதுர கிலோ மீற்றருக்குள் முப்பதாயிரம் எறிகணைகள். ஒரு போராளியை நோக்கி இருபது ஷெல்கள்.
காயமடைந்திருந்த தளபதியொருவரின் தலைமையில் பெட்டியின் ஒரு பக்கத்தில் சிறிய பொத்தலைப் போட்டோம். அந்தப் பொத்தலிற்குள்ளால் அய்நூறு போராளிகள் வரையில் வெளியேறியபோது மறுபடிம் இராணுவத்தினரால் அந்தப் பொத்தல் அடைக்கப்பட்டது. இப்போது ஆயிரம் போராளிகள் அந்தப் பெட்டிக்குள். மருந்துகளில்லை, காயப்பட்டவர்களிற்கு வைத்தியமில்லை, உணவில்லை, இறந்தவர்களைப் புதைக்கவில்லை, வேதனையால் அழுபவர்களின் குரலைக் கேட்ட அவகாசமில்லை.
டொங்கோ பப்பா உதவி கேட்டுக்கொண்டேயிருந்தது. அனுப்பப்பட்ட உதவிகளையெல்லாம் இராணுவத்தினர் வழியிலேயே மடக்கி அழித்தனர். பஸ்களிலும் லொறிகளிலும் எங்களிற்கு உதவ வந்த போராளிகள் அந்த வாகனங்களுடனேயே எரிந்து போனார்கள். கடைசியாக டொங்கோ பப்பா உதவி கேட்டுத் தொடர்பு கொண்டபோது மறுபுறத்திலிருந்து விம்மியழும் சத்தம் கேட்டது. எல்லாம் முடிந்தது.
இனி எங்களிற்கு உதவிகள் கிடைக்கப் போவதுமில்லை, எங்களால் இந்தப் பெட்டியை உடைக்கவும் முடியாது. அப்போது இராணுவத்தினர் ஒலிபெருக்கிகள் மூலம் எங்களைச் சரணடைந்துவிடுமாறு அறிவித்தார்கள். ஒவ்வொரு தென்னைமரத்தின் கீழும் இருவர் மூவராக உட்கார்ந்த போராளிகள் நிதானமாகக் குப்பிகளைக் கடிக்கத் தொடங்கினார்கள்.
பெட்டிக்குள் எஞ்சியிருந்த போராளிகள் அங்காங்கே திடீரென உயிருடன் எரியத் தொடங்கினார்கள். இராணுவம் வெள்ளை பொஸ்பரஸ் எரி குண்டுகளை வீசுகிறது. பொடியன்களும் பொட்டைகளும் கரித்தூளாகக் காற்றில் பறந்துகொண்டிருந்தார்கள்.
இராணுவத்தினர் எங்களைச் சுற்றிவர உருவாக்கிய பெட்டியின் நீளமும் அகலமும் குறைந்துகொண்டேவர அதனது உயரம் மட்டும் வளர்ந்து அந்தப் பெட்டி எங்களை மூடலாயிற்று. பெட்டிக்குள் வெள்ளை பொஸ்பரஸ் எரி குண்டுகளும் கொத்துக் குண்டுகளும் விழுந்து வெடித்துக்கொண்டேருந்தன. நெருப்புச் சதுரம். கந்தக நிலம். உதிர நீர். நச்சுக் காற்று.விழுந்துகொண்டிருந்த ஆகாயம்.
அநதப் பெரிய பெட்டி எழுநூறு சிறிய பெட்டிகளாக உருமாறிற்று. எஞ்சியிருந்த முன்னூறு பேர்களும் நான்குபுறங்களாலும் அலையலையாக வந்த பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினரிடம் எங்களை மறைத்துக்கொள்வற்காக அந்தப் பகுதி முழுவதும் பைத்தியக்கார்களைப் போலச் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தோம்.
அங்கிருந்த இரண்டு சிறிய கட்டங்களிற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகள் ஒருவரையொருவர் கட்டித் தழுவியவாறு நெருக்கியடித்து ஒளிந்துகொண்டனர். அந்த இரு கட்டடங்கள் மீதும் ஒரேநேரத்தில் இரட்டை விமானங்கள் தாக்கின. நூறு போராளிகளும் ஒருவரையொருவர் இறுகத் தழுவியவாறு பொடி இறைச்சித் துண்டங்களாக அந்தப் பெட்டி முழுவதும் சிதறினார்கள். அதைக் கண்டபோதுதான் சின்னப்பொட்டைக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்.
எங்களது தாக்குதல் அணியில் இருந்த சின்னப்பொட்டைக்கு பதின்நான்கு வயதுகள்தான் இருக்கும். குள்ளமான தோற்றமும் சிவந்த நிறமும் செம்பட்டையான சுருட்டைத் தலைமுடியும் பூனைக் கண்களும் அவளிற்கு. எப்போதும் வெடித்துச் சிரித்தவாறேயிருப்பாள். சண்டை போடும்போது கூட அவளின் முகத்திலிருந்து சிரிப்பு மாறாது. எங்களது அணியின் மிகப் பெரிய குறும்புக்காரியும் எங்களது செல்லப்பிள்ளையும் அந்தப் பூனைக்கண் சின்னப்பொட்டைதான்.
அந்த நிலம் முழுவதும் காயங்களுடன் விழுந்து கிடந்து துடித்தபடியே சாவுக்காகக் காத்திருந்த போராளிகளைக் கண்டபோது அவளிற்கு நிச்சயம் பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும். அவளது வாயில் எச்சில் கோடாய் வழிந்துகொண்டிருந்தது. அவள் தனது துப்பாக்கியை நீட்டித் தனது கண்களை மூடிக்கொண்டே இறந்துகொண்டிருந்த போராளிகளின் தலையில் சுட்டாள். அந்தப் போராளிகளின் மரண வேதனையை ஒரு துப்பாக்கிக் குண்டில் அவள் முடித்து வைத்தாள். அந்தப் பெட்டி முழுவதும் அவள் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டேயிருந்தாள். அவளது துப்பாக்கி வெடித்துக்கொண்டேயிருந்தது. அவளது துப்பாக்கியின் கடைசிச் சன்னம் அவளைச் சுட்டது. அவள் தனது துப்பாக்கியை நிலத்தில் நிறுத்திக் குனிந்து தனது நெற்றியைத் துப்பாக்கிக் குழலில் சாய்த்துத் தனது கால் பெருவிரலினால் துப்பாக்கியின் விசையை அழுத்தினாள்.
பெட்டியின் நடுவில் ஒரு மதுர மரம் நின்றிருந்தது. அதன் கீழ் நாங்கள் ஒரு சிறிய பதுங்கு குழியை வெட்டி வைத்திருந்தோம். அந்தப் பதுங்கு குழிக்குள் நானும் வித்யாவும் செல்வியும் ஒளிந்துகொண்டு எங்களிற்கு மேலாக இலைதழைகளைப் போட்டுக்கொண்டு மறைந்திருந்தோம். எங்களை இராணுவத்தினர் எப்படியும் பிடித்துவிடுவார்கள் என்பது எங்களிற்குத் தெரிந்தேயிருந்தது. மரணத்தின் கைகளிலிருந்தாலும், மரணம் இரண்டு நொடிகளில் நேரிடும் என்று தெரிந்திருந்திருந்தாலும் முதலாவது நொடியை வாழ்ந்து தீர்க்கவே நான் ஆசைப்பட்டேன்.
எங்களது தலைகளிற்கு மேலிருந்த இலைதழைகள் ஒவ்வொன்றாக மெதுவாக நீங்கப்படுவதை உணர்ந்தவாறே நான் மவுனமாகயிருந்தேன். இராணுவத்தினரின் சிரிப்பொலிகள் கேட்டன. அவர்கள் தங்களது நீட்டிய கைகளை எங்களிற்குக் கொடுத்து எங்களை மேலே தூக்கிவிட்டார்கள்.
அப்போது இராணுவத்தினரின் முகங்களில் கடுகடுப்போ மூர்க்கமோ இருக்கவில்லை. அவர்கள் வெற்றிக் களிப்பின் உச்சத்தில் கொண்டாட்ட மனநிலையில் இருந்தார்கள். உடனடியாகவே நாங்கள் மூவரும் நிர்வாணப்படுத்தப்பட்டோம். உடலில் துண்டுத் துணிகூடக் கிடையாது. அந்த நிர்வாணக் கோலத்திலேயே எங்களிற்கு இராணுவத்தினரால் பிஸ்கட்டுகளும் தண்ணீரும் வழங்கப்பட்டன. உண்மையைச் சொல்வதென்றால் அப்போது எங்களது நிர்வாணம் எங்களை உறுத்தவில்லை. இந்த உலகத்தில் எங்களை உறுத்துவதாக அப்போது வேறெதுவும் கூட இருக்கவில்லை. ஏனோ தெரியாது நான் அப்போது என்னை உண்மையாகவே காளியாத்தையாக, உலகின் மாதாவாகக் கற்பனை செய்துகொண்டேன். அன்னையின் நிர்வாணம். வெட்கம் ஏதுமில்லை. நான் பிஸ்கட்டுகளைத் தின்று தண்ணீரைக் குடித்தேன்.
அதன் பின்பு நாங்கள் எங்கே அழைத்துச் செல்லப்பட்டோம் என எனக்கு இன்றுவரை தெரியாது. நாங்கள் வெள்ளை நிறத் துணிகளால் போர்த்தப்பட்டுக் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டோம். எங்களது முகங்கள் கறுப்புத் துணிகளால் மூடப்பட்டிருந்தன. அநேகமாக நாங்கள் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் ஏதாவதொரு இரகசிய அறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தோம் என நினைக்கிறேன்.
இடம் தெரியவில்லை. நேரம் தெரியவில்லை. நாட்கள் தெரியவில்லை. அந்த அறைக்குள் ஏழு பெண்கள் முழுநேரமும் நிர்வாணமாக அடைக்கப்பட்டிருந்தோம். எங்களது கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டப்பட்டிருந்தன. இராணுவ அதிகாரிகள் எங்களை வன்புணர்ச்சி செய்தபோது கால்களிலிருந்த விலங்குகள் மட்டுமே விலக்கப்பட்டன. கைகளிலிருந்த விலங்குகள் அப்படியேதானிருந்தன.
ஒவ்வொருமுறை நான் வன்புணரப்பட்டபோதும் ஓர் ஏளனப் பார்வையுடன் நான் அதை எதிர்கொண்டேன். அவர்கள் எனது உடலிற்குள் நுழைந்தபோது எனது ஆன்மா என்னிலிருந்து வெளியேறிப் பரிசுத்தமாகயிருந்தது. ஒவ்வொரு வன்புணர்வு முடிந்ததன் பின்னாகவும் மறுபடியும் ஆன்மா எனக்குள் புகுந்தபோது நான் நிம்மதியடைந்தேன்.
நாங்கள் ஏழுபேருமே இராணுவ அதிகாரிகளிற்குச் சலித்துப்போயிருக்க வேண்டும். எங்களது யோனிகள் பெரும் புண்களும் சீழும் செம்மஞ்சள் நிறக் கொப்புளங்களும் கொண்டு அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கியபோது எங்களை அவர்கள் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பிவைக்க முடிவெடுத்தார்கள். அனுப்புவதற்கு முன்பு, கைகளிலும் கால்களிலும் விலங்கிடக்கப்பட்டிருந்த என்னைக் குப்புறப் படுக்கவைத்து என் தலையிலிருந்து கால்வரை கனமான இருப்புக் கழியை உருட்டி எனது தசையைக் கூழாக்கினார்கள். மானின் காலையொத்த எனது வேகமான கால்களைக் கட்டைகளால் முழுவதுமாக அடித்து நொருக்கி என்னை முடமாக்கிய பிறகே புனர்வாழ்வு முகாமிற்குச் சடமாக அனுப்பிவைத்தார்கள். நான் எனது ஆன்மாவையும் அழைத்துக்கொண்டு புனர்வாழ்வு முகாமிற்குச் சென்றேன். என்னால் எனது ஆன்மாவை நினைத்த நேரத்தில் என்னிலிருந்து வெளியேற்றவும் தேவைப்படும்போது அதைத் திரும்பவும் என்னுள் அழைத்துக் கொள்ளவும் முடியும் அண்ணன். (BOX கதைப் புத்தகத்திலிருந்து ஓர் அத்தியாயம்)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





உண்மைகளும் உண்மையென அறியப்படுபவையும்
புத்தகங்கள்
Nov 22, 2015 No Comments 73 views
http://theekkathir.in/2015/11/22/உண்மைகளும்-உண்மையென-அறிய/



எந்தப் புத்தகத்தையும் படித்து முடித்து வெளியேறிட முடியும் என நம்புகிறவன் நான். கதைகளாயினும், கட்டுரைகளாயினும் அவை முன்வைக்கும் கருத்துக்களை ஏற்றோ, மறுத்தோ நம்முடைய கை அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டிடும். நம் கண்முன்னே வார்த்தைகள் நகர்ந்து கொண்டேயிருக்கும். இப்படியான வாசக முறையை ஏற்பவரில்லை ஷோபா சக்தி. அப்படியெல்லாம் நீங்களோ, நானோ சட்டச்சடசடவென புரட்டிட அவருடைய படைப்பிற்குள் உறைந்திருக்கும் எளிய சொற்கள் நம்மை அனுமதிப்பதில்லை. வாழ்வின் துயரங்களைச் சேர்த்து கட்டியிருக்கும் கதைப் பிரதிகள் வாசகனை நிம்மதியிழக்கச் செய்பவை. அவருடைய “கொரில்லா”, “தேசத்துரோகி”,”வேலைக்காரியின் புத்தகங்கள்” ஆகியவற்றை வாசித்திருப்பவர்கள் இத்தகைய மனநிலையை அடைந்திருப்பார்கள். இலங்கை போருக்குப் பிறகான தமிழ்நிலத்தின் கதையையும், நிகழும் அரசியல் போக்கின் துயரைத் தாங்கிட முடியாது தடுமாறிடும் ஜனத்திரளின் மனநிலையையும் எழுதிட எழுத்தாளன் தேர்வு செய்கிற நிலம் வன்னி நிலம். நாவல் நிகழும் காலம் வரலாற்றின் பக்கங்களில் துரோகத்தின் அடையாளமாகவும், இன அழித்தொழிப்பின் குரூரமாகவும் பதிந்துள்ள முள்ளிவாய்க்கால் பெருந்துயருக்குப் பிறகான நாட்கள் தான். box நாவல் நாலா திசைகளிலும் காலத்தின் பெரும் பாதைக்குள் உருண்டு புரள்கிறது. வன்னிப் பெருநிலம் எனும் நிலப்பகுதி உருவாகி நிலைத்த தன்மையையும் கூட சொல்ல முடிகிறது எழுத்தாளனால். பண்டார வன்னியனை அந்நிய ஆதிக்க அரசுகளின் ஆயுதங்கள் தின்று தீர்த்தன. இறந்தே போனான் அவன் என வெள்ளைக்காரன் மட்டுமல்ல, தமிழ் இளைஞர்களும் எளிய மக்களும் கூட நம்பத் துவங்கினார்கள். ஆனாலும் பண்டார வன்னியன் பிழைத்திருக்கவே செய்கிறான். ரகசியமாக வன்னிக் காடுகளுக்குள் பதுங்கியிருந்து இனத்தின் விடுதலைக்காக இயங்குகிறான் என்பதையே நாவல் எடுத்துரைக்கிறது. எழுதப்பட்ட நாவலின் பகுதி நமக்கு எழுதப்படாத பகுதிகளையும் கூட வாசக மனதிற்குள் விரிக்கிறது. இது தான் எழுத்தின் பலம். முள்ளிவாய்க்கால் பெருந்துயரக் கொடூரங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் எனும் பெயரில் இலங்கைக்கு வருகிற ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளின் காட்சிப் பொருளாகி விட்டதே. களப்பலி நிகழ்ந்த நிலம் எனும் வாதையையும் கூட நாவல் வாசிப்பின் ஊடாக புரிந்துணர முடிகிறது. நாவலோ, சிறுகதையோ அல்லது புனைவோ கட்டுரைகளோ எவையாயினும் அதன் கட்டமைப்பை முடிவு செய்வது கருத்தியல் சார்ந்த அவதானிப்புகளே. க்ஷடீஓ கதைப் புத்தகத்தின் கட்டமைப்பும், வடிவ நேர்த்தியும் தனித்துப் பேசிட வேண்டியவை. மையக்கதையிலிருந்து நாற்பது கதைகள் சரம்சரமாக விரிந்து செல்கின்றன. அவையாவும் பெரிய பள்ளன் குள்ளம் எனும் வனம் சூழ்ந்திருக்கும் ஊரின் கதைகளாகவே காட்சிப்படுகின்றன. பெரிய பள்ளன்குளம் என்றறியப்படுகிற அந்த ஊரின் ஆழமும், அகலமுமான பெரும்குளம், மனித உழைப்பினால் வெட்டி வடிவமைக்கப்பட்ட குளமல்ல; இயற்கை அதன் சீரான மாற்றங்களினால் மனிதர்களுக்காக மட்டுமின்றி விலங்குகளுக்கும், தாவரங்களுக்குமாக இருந்தது. அந்தக் கரையில் விரிந்து படர்ந்திருக்கும் மதுரமரமும், ஆதாம்சாமி வீடும் வெறும் சடப்பொருட்கள் அல்ல. மாறாக அந்த ஊரின் பலநூறு வருட ஞாபகங்களைத் தேக்கி வைத்திருக்கும் குறிப்பேடுகள். நாற்பது கதைகளுக்கும் ஊடாகப் பிரதிகளும் சேர்த்து எழுதப்பட்டிருக்கின்றன. உபபிரதிகளுக்குள் ஷோபா சக்தி எழுதிச் செல்வது வன்னியின் வரலாற்றைத் தான். 1980களின் வரலாற்று, அரசியல் நிகழ்வுகளை நாவலுக்கு ஊடாக நகர்த்திட “உபபிரதி” எனும் சொல்முறை ஷோபாசக்திக்கு உதவுகிறது. நாவலுக்குள் வருகிற மற்றொரு முக்கியமான பகுதி உரைமொழிப் பதிவாகும். ஊரின் ஞாபகங்களை படைப்பாளியிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறவர்கள் யாவற்றையும் உரைமொழிப் பதிவாக்கித் தருகிறார்கள். அதை அப்படி, அப்படியே ஷோபா படைப்பின் இடைவெளிகளில் பயன்படுத்திக் கொள்கிறார். எல்லாவற்றையும் பற்றறுத்து துறவு நிலையை எட்டுகிற பௌத்த நெறியின் உச்சமான நிர்வாணம் குறித்த நுட்பமான வியாக்கியானங்கள் நாவலெங்கும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. மனித நிர்வாணத்தைக் காடு மறைக்கக் கூடும் என நிலவு நம்பியிருக்கிறது. அமையாள் கிழவியின் பிணம் பெரும்பள்ளன் குளத்திற்குள் மீனாக நீந்திக் கொண்டிருக்கிறது நிர்வாணமாக. மீள்குடியேற்றம் நிகழ்கிறது என அரசதிகாரம் படோபடமாக அறிவித்திருக்கிறது. ஆனாலும் எதுவும் மாறிடவில்லை. தமிழர் குடியிருப்புகளில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு ஏதிலிகளாக விரட்டப்படுவதும், மீள் குடியமர்வு எனும் பெயரில் ராணுவக் குடியிருப்பாக அவை உருமாறுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. கதைகளுக்குள் காட்சிப்படுகிற மதுரமரக் கரைவீடு “டைடஸ் லெமுவேஸ் வீடு” என்கிற வரலாற்றுப் பதிவும், அதன் உண்மைத் தன்மைக்குச் சான்றாக வைக்கப்படுகிற புகைப்படங்களும் கூட வரலாற்றையும், புனைவையும் பிரித்தறிவதற்கான சூட்சுமத்தைக் கற்றுத் தருகின்றன. தேசாந்திரியாக அலைந்து திரிந்து, தர்க்கம் செய்து லெமுவேஸ் வந்திறங்கிய வன்னி நிலம் தான் பெரிய பள்ளன் குளம் கிராமம். ஒடுக்கப்பட்டுக் கிடந்த பள்ளர் இன மக்களுக்கு கல்வியும், மருத்துவமும் தந்து சமூகப்படி நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கும். மக்களோடு விவாதித்து அதே நிலத்தில் ஆதாம்சாமி ஆகிவிட்ட ஒரு விதத்தில் அவர்களுடைய பூர்வீக சாமியான அண்ணன்மார் சாமிகளைப் போலாகி விடுகிறார். நாம் அறிந்திருக்கும் வரலாற்று விவரங்கள் தான் இவை யாவும். வெள்ளை நிறத்தோலோடு ஆசிய நிலத்தில் மதப் பிரசங்கம் செய்ய வந்திட்டவர்கள் அனைவரும் நிலத்தின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றோடு ஊடாடி இங்கேயே சமாதியாகி விட்டனர். இதற்குள் இயங்கும் மனிதநேய மனநிலைகளைப் பலரும் இங்கே விவாதித்திருக்கவே செய்திருக்கிறார்கள். க்ஷடீஓ வடிவில் எதிரிகள் எனக் கட்டமைக்கப்பட்டவர்களை சுற்றி வளைத்து தாக்குகிற போர் முறையையே நாவலின் தலைச் சொல்லாக வடித்திருக்கிறார் எழுத்தாளர். நாற்புறமும் சுத்தி வளைக்கப்பட்டு குழந்தைகளும், பெண்களும் பலியிடப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். குழந்தைகள் எல்லாம் முடிந்த பிறகும் கூட தாங்கள் கண்ணுற்ற காட்சிகளை ஒரு போதும் மறப்பதேயில்லை. ஒருவிதத்தில் அது அவர்களுடைய ஆழ்மனதின் பதிவாகவே உறைந்து விடுகிறது. அதனால் தான் அவர்களின் விளையாட்டுக்களாக அவை யாவும் புது வடிவம் பெறுகின்றன. ஓடிப்பிடி விளையாட்டு, அம்மா, அப்பா விளையாட்டு, பூப்பறிக்க வருகிறோம் எனும் மரபான விளையாட்டுகளின் இடத்தில் இப்போதெல்லாம் பதிலீடு செய்யப்படுவதாக ஷோபா சக்தி காட்சிப்படுத்தும் விளையாட்டுக்கள் நிஜத்தில் விளையாட்டா அல்லது களத்தின் போர்க் காட்சிகளா என நாவலை வாசிக்கிற நாம் தடுமாறிப் போகிறோம். பிள்ளைகள் புலிகளாகவும், ராணுவ வீரனாகவும் ஒருமாறி நிகழ்த்துகிற போர்க்களக் காட்சிகளை வாசித்திட முடியாது தடுமாறுகிறோம். இந்தக் குழந்தை விளையாட்டில் கலந்திருக்கும் சிறுவன் தொலைதூரத்திலிருந்து பெரிய பள்ளன் குளம் கிராமத்திற்கு வந்து சேர்ந்தவன். எல்லாம் முடிந்த பிறகும் கூட இன்னும் காழ்ப்பின் எச்சமும், கோபமும் படிந்திருப்பதாகவே சிங்கள அரசு எந்திரம் நீடித்திருக்கிறது என்பதையே நாவலின் கடைசிக்கதைகள் முன் வைக்கின்றன. சாதித் துவேஷத்திலிருந்து ஊரின் அடையாளத்தை துடைத்திட எண்ணிய இளைஞர்கள் பெரிய பள்ளன் குளம் கிராமத்தின் பெயரை கார்த்திகைக் குளம் என மாற்றிட முயற்சிக்கிறார்கள். ஆனாலும் நடப்பது வேறாகிறது. அருகாமை வெள்ளாங்குளத்துக்காரர்களின் முஸ்தீபும் அரசதிகாரத்தின் இயல்பான இனவெறியும் பெரிய பள்ளன் குளம் கிராமத்து மக்களை ஊரை விட்டே அப்புறப்படுத்துகிறது. எல்லோரும் வெளியேறிய பிறகும் எஞ்சியிருப்பது வாசகன் யோசித்தேயிராத காட்சிகளால் கதையை நகர்த்துகிற சாதுர்யமான எழுத்து ஷோபாசக்தியினுடையது. நிஜத்தில் ஊமைச் சிறுவனாக கிராமத்திற்குள் நுழைந்தவன் இளம் புத்த துறவி. அவன் நிலையிலிருந்து ராணுவத்தினரோடு விவாதிக்கிறான். ஊரில் இருக்கும் எவருக்கும் முழு உடல் இல்லை. அங்க`ஹீனர்களின் நிலமாக்கி விட்டீர்கள் போரின் பெயரால் என போரின் வன்மத்தைக் கட்டுடைக்கிறான் சிறுவன். வரலாறு ஒரு முழுவட்டம் தான் போல் தெரிகிறது. அசோகனுக்கு நிகழ்த்திய போதனையைப் போல போதனை தான் இருந்தது என்ன செய்ய, அரசதிகாரம் இளகாத இரும்பாயிருந்திடும் போது.

எவ்வாறு சித்திரவதைக்கு உள்ளானவர்களும் சித்திரவதையாளர்களும் ஒரே இடத்தில் - ஆரியல் டோப்மேன்., டிபாசாவிற்கு மீள்வருகை ஆல்பெர் காம்யு- தமிழில் :நம்பி கிருஷ்ணன் |


Shanmugam Subramaniam liked this.



Ashok-yogan Kannamuthu
2 hrs ·


எவ்வாறு சித்திரவதைக்கு உள்ளானவர்களும்
சித்திரவதையாளர்களும் ஒரே இடத்தில்
சமாதானமாகி வாழமுடியும்?

ஒடுக்குமுறையால் பீதியூட்டப்பட்ட ஒரு நாட்டில்
வெளிப்படையாக பேசுவது பற்றிய பயம் இன்றளவும்
எங்கெங்கும் நிறைந்திருக்கும் ஒருநாட்டில் எவ்வாறு
அந்த நாட்டை வேதனைகளிலிருந்து மீட்க முடியும். ?


பொய்மையே வழமையாகிவிட்ட போது
உண்மையை எப்படித்தான் எட்டுவது?

வரலாற்றின் கைதிகளாக நாம் ஆகாமல் எப்படி
கடந்த காலத்தை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வது?

வருங்காலத்திலும் இவை நேரலாம் என்று கருதாமல்
எவ்வாறு அதை முற்றிலும் மறுத்தல் முடியும் ?

கடந்த காலத்தை நாம் மறுத்துவிடும் போதும்
நிராகரிக்கும்போதும் உண்மை நம்மிடம் வந்து
முணுமுணுக்கும் போதும் கதறும்வேளையிலும்
அதன்விளைவுகள் என்னவாக இருக்கும்.?

ஆரியல் டோப்மேன்.

நாடக ஆசிரியர் /கவிஞர்/ விமர்சகர் /மொழிபெயர்ப்பாளர்.
நன்றி : யமுனா ராஜேந்திரன்




டிபாசாவிற்கு மீள்வருகை
ஆல்பெர் காம்யு- தமிழில் :நம்பி கிருஷ்ணன் | இதழ் 140 | |



மெடியா! நெஞ்சிலே நெருப்புடன் நெடுந்தூரம் சென்றுவிட்டாய்
உன் தந்தையின் இல்லத்திலிருந்து. எத்தனை கடல்களில்
எத்தனை பாறைகளாலான வாசல்களை கடந்திருப்பாய்
இதோ இப்போது இந்த அன்னியக் கரையில் உறங்குவதற்காக.

மெடியா



ஐந்து நாட்களாக அல்ஜியர்சில் மழை ஓயாமல் பெய்து இப்போது கடலையே தொப்பலாக நனைத்துவிட்டது. முடிவில்லாதது போல் தோற்றமளிக்கும் வானத்தின் உயரங்களிலிருந்து பிசுபிசுப்பான அப்படி ஒரு கனமழை வளைகுடாவில் மோதி வீழ்ந்தது. பெரும் நீருறிஞ்சிப்பஞ்சைப் போல மென்மையாகவும் சாம்பல் நிறத்துடனும் வடிவமற்ற அந்த விரிகுடாவில் கடல் பொங்கி அமிழ்ந்தது. ஆனாலும் இடையறாது வீழும் மழையின் கீழ் அதன் நீர்ப்பறப்பு அனேகமாக அசைவின்றி காட்சியளித்தது. பரந்த உணரமுடியாத அசைவின் மூலம் இருளார்ந்த ஆவித்திரளொன்றை நீண்ட இடைவெளிகளுக்கிடையே கடலிலிருந்தள்ளி வட்டவடிவில் துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த முற்றிலும் நனைந்த மரவரிசைகளுக்கு கீழே உருட்டிச் சென்றது. ஈரம் வழிந்தோடும் வெள்ளைச் சுவர்கள் கொண்ட இந்த ஊரே மற்றொரு ஆவித்திறளை எழுப்பியது. அது முதல் ஆவித்திரளை சந்திப்பதற்காக அலைபோல் எழுந்தது. எந்தப்பக்கம் திரும்பினாலும் நீரை மட்டுமே சுவாசிக்க முடிந்தது, காற்றிலிருந்தே நீரைக் குடித்துவிடலாம் போலிருந்தது.

டிசம்பர் மாதம் முழுதும் நான் மூழ்கிக்கொண்டிருக்கும் இந்தக் கடலையும், இன்னமும் எனக்கு கோடைகளின் நகரமாகவே விளங்கும் அல்ஜியர்சையும் பார்த்துக்கொண்டு அலைந்து திரிந்தேன். காத்துக்கொண்டுமிருந்தேன். ஐரோப்பாவின் இரவையும், அதன் குளிர்கால முகங்களையும் துறந்து நான் ஓடிவந்திருந்தேன். ஆனால் இந்த கோடைகளின் ஊர் கூட நீர் வழிந்தோடும் கூனல் முதுகுகளையே எனக்களித்தது. மாலையில் கணகணவென்று விளக்கிடப்பட்ட கஃபேகளில் நான் தஞ்சம் புகுந்தபோது அவர்களின் பெயர்களை அறியாமலே அவர்களின் முகங்களில் என் வயதை அடையாளம் கண்டுகொண்டேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் என்னுடன் ஒரு காலத்தில் இவர்கள் இளமையாக இருந்தார்கள் என்பதும் இப்போது இளமை இவர்களைவிட்டு எங்கோ சென்றுவிட்டது என்பதும்தான்..

எனினும் தங்கியிருந்தேன், எதற்காக காத்திருக்கிறேன் என்பதைப் பற்றிய தெளிவான எண்ணங்களின்றி, டிபாசாவிற்கு மீண்டும் செல்வதற்கான தருணத்தின் எதிர்பார்ப்பைத் தவிர. இளமையில் புழங்கிய இடங்களுக்கு மீண்டும் செல்வதும், இருபது வயதில் உவகையுடன் அனுபவித்துச் செய்தவற்றை நாற்பதில் மீண்டும் செய்ய விழைவதும் அனேகமாக எப்போதுமே தண்டிக்கப்படக்கூடிய ஒரு மூடத்தனமே. ஆனால் இம்மூடத்தனத்தை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். எனது இளமையின் முடிவை அடையாளப்படுத்தும் அந்த போர் வருடங்களுக்குப் பின், வெகு விரைவிலேயே டிபாசாவிற்குச் சென்றிருந்தேன். என்னால் மறக்கவே முடியாத சுதந்திரத்தை அங்கு மீண்டும் கண்டெடுக்கும் நம்பிக்கையில் தான் அங்கு சென்றேன் என்று நினைக்கிறேன். இதோ இங்கு தான், இருபது ஆண்டுகளுக்கு முன், இடிபாடுளில் அலைந்து திரிந்து, காஞ்சிரையின் வாசத்தை முகர்ந்துகொண்டு, கற்களின் வெப்பத்தில் என்னை வெதுவெதுப்பாக்கிக் கொண்டு, சிறிதுகாலமே வாழ்ந்தாலும் வசந்தகாலம் வரையிலும் உயிரை தக்கவைய்த்துக் கொண்டிருக்கும் ரோஜாக்களைக் கண்டுபிடித்துக் கொண்டும் நான் என் காலைகளைக் கழித்தேன். சில்வண்டுகளைக் கூட மௌனமாக்கிவிடும் வெப்பம் மிகுந்த மதியத்தில் நான் அனைத்தையும் ஆட்கொள்ளும் அந்த ஜ்வாலிக்கும் கிளரொளியைத் தப்பியோடுவேன். சிலசமயம் இரவில் விண்மீன்கள் நிறைந்தொழுகும் வானத்தின் கீழ் திறந்த கண்களுடன் படுத்திருப்பேன். நான் உயிர்த்திருந்த கணங்கள் அவை. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு எனது இடிபாடுகளை மீண்டும் கண்டெடுத்தேன். முதல் அலைகளிலிருந்து சில அடிகளில், மறக்கப்பட்ட நகரத்தின் கசப்பான மரங்கள் நிறைந்திருக்கும் பரப்புகளினூடே அதன் சாலைகளை பின்தொடர்ந்தேன்; விரிகுடாவை மேலிருந்து நோக்கியிருக்கும் மலைகள் வரையிலும் கூட, ரொட்டியின் நிறத்தை ஒத்திருக்கும் அவற்றின் தூண்களை இன்னமும் கூட என்னால் தொடமுடிந்தது. ஆனால் இப்போது அவ்விடிபாடுகள் வரிமுட் கம்பியால் வேலியிடப்பட்டிருந்தன. அதிகாரப்பூர்வமான வாசல்களின் வழியாகத்தான் அவற்றை இப்போது அடைய முடியும். மேலும் அங்கு இருட்டிய பிறகு நடப்பதற்கு ஒழுக்கத்தின் பேரில் இப்போது தடைவிதிக்கப் பட்டிருக்கிறது என்றும் நினைக்கிறேன்; காலையில் சென்றால் அங்கு ஒரு அரசாங்க காவலரைச் சந்திக்கக் கூடும். அன்று காலையில், சந்தேகமில்லாமல் எதேச்சையாகத் தான், இடிபாடுகளின் முழுப்பரப்பு நெடுகிலும் மழை பெய்துகொண்டிருந்தது. தனிமையான மழைதோய்ந்த அந்த நாட்டுபுறத்தில் ஒரு விதமான பிரமிப்புடன் நடக்கையில், என்னை எப்போதுமே கைவிடாத அந்த மனவலிமையை மட்டுமாவது மீடக முயன்றேன். என்னால் மாற்றமுடியாது என்பதை நான் உணர்ந்தபின் நடப்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையளிக்கும் வலிமையது. நிச்சயமாக காலத்தில் பின்சென்று நெடுநாட்களுக்கு முன் ஒரே நாளில் மறைந்த நான் விரும்பிய அந்த முகத்தை உலகில் மீண்டும் மீட்டளிக்க என்னால் முடியாது. செப்டெம்பர் இரண்டு 1939-இல் திட்டமிட்டபடி நான் க்ரீஸிற்குச் செல்லவில்லை. அதற்குப் பதில் போர் எங்களை முதலிலும் பின்னர் க்ரீஸையும் சூழ்ந்துகொண்டது. அன்று கருநீரால் நிரப்பப்பட்ட கல்லறைகளை பார்த்துக்கொண்டிருக்கையிலும் ,மழைத்துளி சொட்டிக்கொண்டிருக்கும் தாமரிஸ்க் மரங்களின் கீழ் நின்றுகொண்டிருக்கையிலும் வெதுவெதுப்பான இந்த இடிபாடுகளையும் முட்கம்பிகளையும் குறுக்கிட்டுப் பிரிக்கும் காலமும் தொலைவும் என்னுள்ளேயும் இருப்பதை நான் உணர்ந்தேன். இன்றும் இந்த கண்கொள்ளா அழகைத் தான் என்னுடைய ஒரே சொத்து என்று கருதுகிறேன். அதில் வளர்க்கப்பட்ட நான் செழிப்பில் தொடங்கியிருப்பதை இப்போது தான் உணர்கிறேன். முட்கம்பியெல்லாம் பிறகு வந்தவை தான் – அடக்குமுறைகள், போர், கண்காணிப்புகள், போராடுவதற்கான நேரம் இவற்றை தான் குறிப்பிடுகிறேன். இரவின் நியதிகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது : காலைநேரத்தின் அழகென்பது ஒரு நினைவு மட்டுமே. சகதிக்கூடமான இந்த டிபாசாவில் அந்த நினைவு கூட மங்கிக் கொண்டிருந்தது. அழகிற்கெல்லாம் இப்போது இடமில்லை, நிறைவிற்கும், இளமைக்கும் கூட! சுவாலைகளின் வெளிச்சத்தில் உலகம் தன் சுருக்கங்களையும் நோய்களையும் (பழையது, புதியது இரண்டையுமே) காட்டி நிற்கினறது. திடீரென்று வயதாகிவிட்டது அதற்கு, நமக்கும் கூட. நான் தேடிவந்த ஆர்வமும் உக்கிரமும் அதை எதிர்பார்க்காத ஒருவரிடத்தில் தான் உயிர்த்தெழும் என்பதை நான் அறிவேன். சிறிது அப்பாவித்தனம் இல்லாமல் காதல் இல்லை. ஆனால் அப்பாவித்தனம் எங்கே? வல்லரசுகள் நொறுங்கித் துகளாகுகின்றன, மனிதர்களும், நாடுகளும் ஒருவர் தொண்டையை மற்றவர் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் : நமது வாய்கள் அசுத்தப்படுத்தப்பட்டு விட்டன. நம்மை அறியாமலே முதலில் அப்பாவிகளாக இருந்தோம், இப்போதோ திட்டமிடாமலே குற்றத்தை சுமந்து நிற்கிறோம்: எவ்வளவிற்கெவ்வளவு தெரிந்து கொண்டோமோ அவ்வளவிற்கவ்வளவு மர்மமும் அதிகரித்திருக்கிறது. இதனால் தான் (ஓ, என்னவொரு கேளிக்கை) நன்னடத்தையில் மும்முரமாக நம்மை ஈடுபடுத்திக் கொண்டோம். நலிவுற்ற ஆன்மாவுடன் நான் நேர்மையைப் பற்றி கனவு கண்டேன்!. களங்கமற்ற நாட்களில் ஒழுக்கம் என்றொன்றிருப்பதையே நான் அறிந்ததில்லை. இப்போது அதைப் பற்றி அறிந்திருந்தாலும் அதன் நியதிகளுக்கு ஏற்ப வாழமுடியவில்லை. ஒரு காலத்தில் நான் பெரிதும் நேசித்த கடல்முகத்தின், பாழடைந்த கோயிலின் முற்றிலும் நனைந்த தூண்களுக்கிடையே யாரோ ஒருவனைப் பின்தொடர்ந்து செல்வது போலிருந்தது. கல்லறைக்கற்கள் மீதும், மொசைக்கின் மீதும் ஒலித்த அவனது காலடிகளை என்னால் கேட்கமுடிந்தாலும் அவனை என்னால் பிடித்துவிட முடியாது என்பதையும் நான் அறிந்திருந்தேன். மீண்டும் பாரிஸுக்குத் திரும்பிச் சென்றேன். சில வருடங்கள் அங்கு இருந்துவிட்டு மீண்டும் வீடு திரும்பினேன்.

ஆனால் அவ்வருடங்களில் ஏதோ ஒரு விவரிக்க இயலாத இழப்பை என்னுள் உணர்ந்தேன். ஒருமுறை தீவிரமாக காதலிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துவிட்டாலே போதும், வாழ்க்கை முழுவதும் அதே ஒளியையும், அதே உக்கிரத்தையும் தேடுவதிலேயே கழிந்துவிடுகிறது. அழகையும், புலனுணர்வால் கிட்டும் மகிழ்ச்சியையும் துறந்து நிர்ப்பாக்கியத்திற்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொள்வதற்கு ஒரு விதமான பெருந்தன்மை தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பெருந்தன்மையை நான் பெற்றிருக்கவில்லை என்பதையும் உணர்கிறேன். ஆனால் அவ்விரு துருவத்தில் ஒன்றை மட்டுமே பிரத்தியேகப்படுத்தும் எதுவுமே உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. தனிமைப்படுத்தப்பட்ட அழகு முகச்சுளிப்பினில் சென்று முடியும், ஒற்றைக்கட்டையாய் தனித்திருக்கும் நீதியோ அடக்குமுறையில். ஒன்றைத் துறந்து மற்றொனறிற்கு மட்டுமே சேவை செய்ய விழைபவர் எவருக்குமே சேவை செய்வதில்லை, அவர்களுக்கும் கூட. இறுதியில் அவர்கள் அநீதிக்கு மட்டுமே இருமடங்கு துணைபோகும் பணியாட்களாகிறார்கள். வளைந்துகொடுக்க முடியாததால் நம்மை எதுவுமே எப்போதும் ஆச்சரியப்படுத்த முடியாத நாளொன்றும் வரும்; அனைத்தையுமே அறிந்ததால் எஞ்சியிருக்கும் வாழ்க்கை முழுவதும் மீண்டும் தொடங்குவதிலேயே கழிந்துவிடும். நாடு கடத்தப்பட்ட , வரண்ட, உயிரற்ற ஆன்மாக்களின் காலமாகவே அது இருக்கும். மீண்டும் உயிர்த்து வர நமக்குக் கிருபையும், தாயகமும், நம்மையே மறப்பதற்கான திறனும் தேவைப்படுகிறது. சில காலைகளில், தெருமுனையில் திரும்புகையில் அதியற்புதமான நீர்த்திவலையொன்று நம் நெஞ்சின் மீது விழுந்து மறைகிறது. சில காலத்திற்கேனும் அதன் புதுப்பசுமை நீடிக்கிறது. ஆனால் இது போதும். நம் வரண்ட நெஞ்சத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய. டிபாசாவிற்கு மீண்டும் திரும்பிச் செல்வதற்கான அவா என்னை ஆட்கொண்டது. .



அல்ஜியர்சில் இரண்டாவது முறையாக, நான் அறுதியானது என்று எண்ணியிருந்த புறப்பாட்டு தினத்திலிருந்து தொடர்ந்து பெய்துகொண்டிருக்கும் அதே மழையில் நடந்து கொண்டு… மழையும் கடலும் கலந்த வாசத்தில் தோய்ந்த அளவற்ற ஒரு விதமான துயரத்தின் மத்தியில், பனிமூடிய வானத்தையும், மழைக்கு பயந்தொடுங்கும் மக்களின் பின்புறங்களையும், அனைவரின் முகத்தையும் சிதைந்தழுகச் செய்யும் கஃபேக்களின் கந்தக வெளிச்சத்தையும் பொருட்படுத்தாது நான் விடாப்பிடியாக என் நம்பிக்கைகளில் நிலைத்திருந்தேன். இரண்டு மணியளவிலேயே பெருக்கெடுத்தோடி பல ஏக்கர் நிலத்தை சின்னாபின்னப்படுத்தி, பின்னர் ஒரே நொடியில் வற்றிவிடும் என் நாட்டின் ஆறுகளைப் போல எப்போதிற்குமே பெய்யப்போவதைப் போல் பாவனை செய்துவிட்டு பின் திடீரென நின்று விடும் இந்த அல்ஜியர்ஸ் மழையைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன ? ஒரு நாள் மாலை, மழை உண்மையாகவே நின்றுவிட்டது. கண்கூசும்படியாக திரவமான ஒரு காலை கடலின் மீது எழுந்தது. வானத்திலிருந்து, ரோஜாவைப் போல் புத்தம் புதிதாக, நீரினால் மீண்டும் மீண்டும் கழுவப்பட்டு, ஒவ்வொரு கழுவலிலும் அதன் மிக நுண்மை நிரம்பிய துல்லியமான இழை நயத்திற்கு செப்பம் செய்யப்பெற்ற ஒரு துடிதுடிக்கும் ஒளி வீழ்ந்தது. ஒவ்வொரு வீட்டிற்கும், மரத்திற்கும் உணரக்கூடிய வடிவத்தையும், வியக்கத்தக்க புதுப்பொலிவையும் அது வழங்கியது. உலகம் பிறந்த தினத்தன்று இப்படிப்பட்ட ஒரு காலையொளியில் தான் இந்த பூமி உயர்த்தெழுந்திருக்க வேண்டும். மீண்டுமொரு முறை திபாசிவிற்கு செல்வதற்காக நான் புறப்பட்டேன்.



அறுபத்தி ஒன்பது கி.மீ கொண்ட இந்த நெடுஞ்சாலையில் நினைவுகளையும் உணர்ச்சிகளையும் என்னுள் கிளர்த்தெழச் செய்யாத ஒரு அடி கூட இல்லை. வன்முறை நிறைந்த குழந்தைப்பருவம், பஸ் இஞ்சின்களின் ரீங்காரத்துடன் விரியும் பதின்ம பருவத்தின் பகற்கனவுகள், இளம் கன்னிகளின் புதுமை, கடற்கரைகள், எப்போதுமே இறுகிய வாலிபத் தசைகள், பதினாறு வயது நிரம்பிய ஒரு நெஞ்சத்திற்கு மாலை உடனழைத்து வரும் மெல்லிய மனக்கிலேசம், வாழ்வதற்கான் விழைவு, மேன்மை, மற்றும் வற்றாத அதன் திறனும் ஒளியும் காலத்தின் துணையாக விளங்கும் எப்போதுமே மாதக்கணக்காக மாறாதிருக்கும் அதே வானம் – மதியத்தின் இழவு நாழிகையில் கடற்கரையில் சிலுவையில் அறைந்தாற்போல் படுத்துக்கிடக்கும் தனது இரைகளை ஒவ்வொன்றாக அது ஆறாப்பசியுடன் விழுங்கியது. அனேகமாக அதே கடலும் கூட – காலைக்காற்றில் உணர்வதற்கரியாதபடியும், ஆனால் சஹேலையும் அதன் வெண்கல நிறத்து திராட்சைத் தோட்டங்கள் நிறம்பிய மலைகளையும் விட்டு சாலை கடற்கரையை நோக்கி இறங்குகையில் தொடுவானத்தில் தன்னை மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டும்…ஆனால் நான் அதை நின்று ரசிக்கவில்லை. ஒரே துண்டமாக செதுக்கப்பட்டு டிபாசா விரிகுடாவின் மேற்குபுறமாக நீண்டு பின்னே கடலுக்குள் சரிந்துவீழும் அந்த கனத்த திண்ணிய மலையான செனோவாவை மீண்டும் பார்க்க நான் துடித்துக் கொண்டிருந்தேன். அங்கு அடைவதற்கு முன்னதாக, வேகு தூரத்திலிருந்தே கடலுடன் கலந்தபடி நிற்கும் ஒரு மெல்லிய இளநீலப் புகைச்சலாக அதை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் அருகே வர வர அது படிப்படியாகச் செறிவி சூழ்ந்திருக்கும் நீரின் நிறத்தைப் பெற்றுக்கொண்டு அமைதியான் கடலின் மீது மோதிவீழும் கணத்தில் மூர்க்கமாக உறைய வைக்கப்பட்ட ஒரு அசைவற்ற அலைபோல காட்சி தரும். வெகு அண்மையில், கிட்டத்தட்ட டிபாசாவின் வாசல்களுக்கருகே அதன் முகம் சுளிக்கும் திணிவை நீங்கள் காணலாம் : காவியும் பச்சையுமாக, என் போன்ற அதன் புதல்வர்களுக்கு துறைமுகமாகவும் புகலிடமாகவும் விளங்கும் அசைக்கமுடியாத தொன்மைமிக்க பாசிபடர்ந்த தெய்வம். முட்கம்பியை ஒருவழியாக கடந்து இடிபாடுகளை அடைகையில் நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த டிசெம்பர் வெளிச்சத்தில், சகலவிதமான ஆசீர்வாதங்கள் நிரம்பிய வாழ்க்கை என்று பிற்காலத்தில் விவரிக்கப்படக்கூடிய, வாழ்வில் ஒரு முறை அல்லது இரண்டு முறைகள் மட்டுமே நடக்கக்கூடிய சம்பவமொன்று நிகழ்ந்தது. எதைத் தேடி இங்கு வந்தேனோ, காலத்தையும் உலகையும் மீறி அது இந்த புறக்கணிக்கப்பட்ட இயற்கையில் எனக்களிக்கப்பட்டது. ஆலிவ்கள் சிதறிக் கிடக்கும் ஃபோறத்திலிருந்து (forum) கீழே வீற்றிருக்கும் கிராமத்தைக் காண முடிந்தது. அதிலிருந்து ஒரு சிறு சத்தம் கூட எழவில்லை; மெல்லிய புகைக் கற்றைகள் துலக்கமான காற்றுமண்டலத்தில் எழும்பின. இடையறாது வீழும் குளிர்ந்த ஒளி மழையின் கீழ் சுவாசமற்று இருப்பது போல் கடலும் மௌனமாகக் கிடந்தது. செனோவாவிலிருந்து தூரத்துச் சேவலொன்றின் கூவல் மட்டுமே அந்த நாளின் எளிதில் உடையக்கூடிய பெருமைகளைப் பாடியது. இடிபாடுகள் தெடுகிலும், கண்கள் பார்க்கக் கூடிய தூரம் மட்டிலும், குழித்த கற்கள், காஞ்சிரைச் செடிகள், மரங்கள், ஒளி ஊடுருவக்கூடிய படிகவெளியில் நிற்கும் குறைபாடற்ற தூண்கள் இவற்றைத் தவிர வேறெதுவுமே இல்லை. அளப்பதற்கறிய கணம் ஒன்றில் சூரியன் ஸ்தம்பித்து காலை அசைவற்றுக் கிடந்தது போலிருந்தது. இந்த ஒளியிலும் மௌனத்திலும் வருடக்கணக்காக குவிக்கப்பட்டிருக்கும் இருளும் ஆத்திரமும் சிறிதுசிறிதாக உருகி மறைந்தன. நீண்டகாலமாக நின்றுவிட்டிருந்த என் நெஞ்சு இப்பொது மெதுவாக அடிக்கத் தொடங்கியது போல், என்னுள் உறைந்துகிடந்த, கிட்டத்தட்ட நான் மறந்துவிட்ட ஒலியை நான் கேட்கத் தொடங்கினேன். இப்போது விழித்துக்கொண்டதால் மௌனத்தை கட்டியெழுப்பும் அந்த உணர்வதற்கறிய சத்தங்களைக் ஒன்றன்பின் ஒன்றாக இனம் கண்டுகொண்டேன்: இடையறாது ஒலிக்கும் பறவைகளின் basso continuo, பாறைகளுக்கடியே சுருக்கமாக ஒலிக்கும் கடலின் மென்மையான பெருமூச்சு, மரங்களின் துடிப்பு, காஞ்சிரைச் செடிகளின் முணுமுணுப்பு, கள்ளத்தனமான பல்லிகள்…இவை அணைத்தையும் கேட்கவும் என்னுள்ளெழும் மகிழ்ச்சியலைகளை உணரவும் என்னால் முடிந்தது. என்னுடைய புகலிடத்திற்கு ஒரு வழியாக வந்துசேர்ந்து விட்டேன் போலிருந்தது, ஒரு கணத்துக்கேனும்; மேலும் இப்போது தொடங்கிய அக்கணம் எக்காலத்திற்கும் நீடிக்கும் போலவும் இருந்தது. அதன் பிறகு விரைவிலேயே சூரியன் தெள்ளத் தெளிவாக வானத்தில் ஒரு பாகை உயர்ந்தது. ஒரு கரும்பறவை தன்னுடைய கிறீச்சொலியில் எழுப்பிய ஆலாபனையைத் தொடர்ந்து பல பறவையொலிகள் வலிமையுடனும், கிளர்ச்சியாரவாரத்துடனும், உவகையான முரண்பாட்டுடனும், அளவில்லா மகிழ்ச்சியுடனும் வெடித்தெழும்பின. நாள் கழிந்து சென்றது, என்னை மாலை வரையிலும் சுமந்தபடி…

மதியம், ஒரு பாதி மட்டுமே மணலால் நிரப்பப்பட்டு, கடந்த சில நாட்களின் ஆத்திரமிக்க அலைகள் திரும்பிச் செல்கையில் விட்டுச்சென்ற நுரையைப் போலிருக்கும் கருஞ்சிவப்பு மலர்களைக் கொண்ட செடிவகைகள் சிதறிக்கிடக்கும் சரிவுகளில் நின்றபடி கடலைப் பார்த்திருந்தேன். கடல் எழும்பி பின்னர். சோர்வுற்றது போல் வீழ்ந்தாலும், நமது ஆன்மாக்கள் வரண்டு போகாமலிருக்க வேண்டுமானால் நாம் என்றுமே புற்க்கணிக்க முடியாத: காதலிப்பதற்கான தாகம் ,கண்டு அதிசயிப்பதற்கான தாகம் ஆகிய இரண்டு தாகங்களையும் தணித்தது. ஏனெனில் காதலிக்கப்படாமலிருப்பது வெறும் துரதிருஷ்டம் மட்டுமே, ஆனால் காதலிக்காமலிருப்பதோ ஒரு ஆழ்துயர்நிலை. இன்று நாம் அனைவருமே இவ்வாழ்துயரத்தால் இறந்து கொண்டிருக்கிறோம். குருதியும் வெறுப்பும் நம் இதயங்களையே வெட்டவெளியில் அம்மணப்படுத்துகின்றன; நீதிக்கான் நீண்ட கோரிக்கை அதை உயிர்ப்பித்த அன்பையே களைப்படையச் செய்துவிடுகிறது. நாம் வாழும் இந்த கூச்சலிடும் ஆரவாரத்தில் காதல் அசாத்தியமானதாகவும் நீதி போதுமற்றதாகாவும் ஆகிவிட்டன. இதனால் தான் ஐரோபா பகல்வெளிச்சத்தை வெறுக்கிறது. செய்வதறியாமல் ஒரு அநீதியை மற்றொரு அநீதியைக் கொண்டு எதிர்கொள்கிறது. நீதி சுருங்கி இறுதியில் வரண்ட கசக்கும் பழக்கூழ் கொண்ட ஒரு ஆற்புதமான ஆரஞ்சைப் போல் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவதை தவிர்க்கவேண்டுமாயின் நம்முள் பசுமையையும் மகிழ்ச்சியூற்றொன்றையும் நாம் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் எனபதை நான் கண்டறிந்தேன்; அநீதி என்றுமே தீங்குறுத்த முடியாத இந்த பகல்வெளிச்சத்தை காதலித்து அதை வெற்றிச்சின்னமாக கையிலேந்தி மீண்டும் கோதாவில் இறங்குவதற்கான மனவலுவையும் இவ்வூற்று நமக்களிக்கும். இங்கே, மீண்டுமொரு முறை பழம்பெரும் அழகொன்றை நான் கண்டெடுத்தேன், பித்துபிடித்த நமது மிக மோசமான வருடங்களிலும் இந்த வானத்தின் நினைவு என்னை விட்டுப் பிரியவில்லை என்பதை நான் உணர்ந்த போது என் நல்லாசிகளை எண்ணிக்கொண்டேன். இறுதியில் இது மட்டுமே நம்பிக்கையற்ற மனக்கசப்பிலிருந்து என்னைக் காப்பாற்றியது. நமது நீர் வெளியேற்றப்பட்டச் செயற்கைத் துறைமுகங்கள் அல்லது நம் இடிபொருள் குப்பைக் கூள்ங்களைக் காட்டிலும் டிபாசாவின் இடிபாடுகள் இளமையானவை என்பதை நான் எப்போதுமே அறிந்திருந்தேன். டிபாசாவில் எப்போதுமே புதிதாக இருக்கும் வெளிச்சத்தில் உலகம் ஒவ்வொரு நாளும் பிறக்கிறது. ஓ! ஓளி! செவ்வியல் துயர் நாடகங்களில் தங்கள் விதிகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் பாத்திரங்களின் கூக்குரலது. அவர்களின் இறுதிப் புகலிடம் நம்முடையதும் கூட என்பதை நான் அறிந்திருந்தேன். குளிர்காலத்தின் ஆழங்களில் என்னுள்ளே ஒரு அழிக்கமுடியாத கோடை இருப்பதை நான் இறுதியாகக் கற்றுக் கொண்டேன்.



மீண்டுமொரு முறை டிபாசாவை விட்டு ஐரோபாவையும் அதன் போராட்டங்களையும் எதிர்கொள்வதற்காக திரும்பிச் சென்றேன். ஆனால் அந்த நாளின் நினைவு என்னை இன்னமும் பேணித் தாங்குகிறது. இன்பதுன்பம் இரண்டையும் சமநிலையோடு ஏற்பதற்கு எனக்கு உதவுகிறது. நாம் எதிர்கொண்டிருக்கும் கடினமான காலத்தில் ஒன்றையுமே நிராகரிக்காமல், கருப்பு மற்றும் வெள்ளைச் சரடுகளைக் கொண்டு அறுபடும் புள்ளி வரையிலும் இறுக்கப்பட்ட ஒற்றைக் கயிற்றைப் பின்னுவதற்கான சக்தியைத் தவிர நாம் எதை எதிர்பார்க்க முடியும்? இதுவரையில் நான் செய்தது கூறியது எல்லவற்றிலும் என்னால் இந்த இரு விசைகளை , அவை ஒன்றோடொன்று முரண்பட்டிருந்தாலும் கூட, அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். எந்த ஒளியில் நான் பூமியில் தோன்றினேனோ அந்த ஒளியை என்னால் மறுக்க இயலாது. எனினும் நமது காலத்தின் கடமைகளையும் நான் தட்டிக்கழிக்க விரும்பியதில்லை டிபாசாவின் மென்மையான பெயருக்கு எதிராக பிற கம்பீரமான, கொடூரமாகத் தொனிக்கும் பெயர்களை ஒப்பனை செய்வது மிக எளிதான காரியம் தான் : இன்று மனிதனுக்கு உள்நோக்கிய பாதையொன்று இருக்கிறது. அது மனதின் உச்சங்களிலிருந்து குற்றத்தின் தலைநகரத்திற்கு அவனை அழைத்துச் செல்லக்கூடியது. இதை நான் நன்கறிவேன் ஏனெனில் நான் அதில் அவ்விரு வழிகளிலும் பயணித்திருக்கிறேன். மேலும், சந்தேகமில்லாமல் ஒருவர் இளைப்பாறுவதற்காக மலைச்சாரலில் உறங்கலாம் அல்லது குற்றம் செய்வதில் ஆழ்ந்துவிடலாம். ஆனால் இருப்பவற்றில் ஒரு பகுதியை மட்டும் நாம் துறந்தால் நாமே நம் இருப்புகளை துறக்கவேண்டி வரும்; அப்போது நாம் வாழ்வதையே துறந்து காதலை பதிலாள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் கேவலங்களுக்குத் தள்ளப் படுவோம். ஆக, வாழ்க்கை நமக்களிக்கும் எதையுமே நிராகரிக்காமல் வாழ்வதற்கான இச்சையை தக்கவைத்துக் கொள்வது : இவ்வுலகில் இந்த நற்பண்பையே நான் மிகவும் மதிக்கிறேன். எப்போதாவது, சில முறையேனும் அதை நான் கடைபிடித்திருக்கலாம் என்று ஏங்கியதுமுண்டு. கீழ்மையையும் உன்னதத்தையும் சமமாக எதிர்கொள்ளுவதை மற்ற எல்லா காலங்களையும் விட நம்முடையதே அதிகமாகக் கோருவதால் எதையும் தட்டிக்கழிக்காமல் இரட்டை நினைவொன்றை தக்கவைத்துக் கொள்வதையே நான் செய்ய விரும்புகிறேன். ஆமாம், அழகிருக்கிறது ஆனால் இழிவு செய்யப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இச்செயல்திட்டத்தை நிறைவேற்றுகையில் ஏற்படும் எந்த இக்கட்டிற்காகவும் நான் ஒன்றையோ மற்றொன்றையோ, இரண்டையுமே விட்டுக்கொடுக்க மாட்டேன்,



ஆனால் இதெல்லம் ஒழுக்கவியல் போலத் தான் இன்னமும் தொனிக்கிறது. நாம் வாழ்வதோ ஒழுக்கவியலைக் கடந்த ஒன்றிற்காக. அதை நம்மால் சுட்ட முடியுமென்றால் என்னவொரு மௌனம் உண்டாகும் என்பதை யோசித்துப் பாருங்கள். டிபாசாவிற்கு கிழக்கே, புனித சல்ஸாக் குன்று, மாலை உயிர்ப்பிக்கிறது. இன்னமும் வெளிச்சம் தான் ஆனாலும் ஒளியின் ஒரு விதமான கண்ணுக்கு புலப்படாத கம்முதல் அஸ்தமனத்தை அறிவிக்கிறது. இரவைப் போல் மென்மையாக காற்று எழுகிறது. திடிரென கவலைகளற்ற கடல் தனது வழியை தேர்வு செய்து ஒரு மாபெரும் மலட்டு நதியைப் போல் தொடுவானத்தின் குறுக்கே ஓடுகிறது. வானம் கருக்கிறது. அதன் பிறகோ மர்மத்தின் தொடக்கம், இரவை ஆளும் தெய்வங்கள் மற்றும் இனபத்திற்கும் அப்பாலிருக்கும் ஏதோவொன்று. ஆனால் இதை எப்படி விவரிப்பது? இங்கிருந்து நான் எடுத்துச் செல்லும் சிறு நாணயத்தின் தெளிவான பக்கத்தில் இந்நாள் முழுதும் நான் கற்றுக்கொண்டதை நினைவுபடுத்தும் ஒரு அழகான பெண்ணின் முகம். ஆனால் வீடு திரும்புகையில் விரலால் உரசிப்பார்க்கும் அதன் மற்றொரு பக்கமோ அரிக்கப்பட்டிருக்கிறது. எனக்குள்ளிருந்து என் அறியாமையையும், என் மகிழ்வையும் தினம்தோரும் எனக்கே கற்றுத்தரும் அந்த மர்மமான மற்றொரு குரல் கூறுவதைத் தவிர வேறெதை இந்த உதடுகளற்ற வாய் கூறப்போகிறது :


நான் தேடிக்கொண்டிருக்கும் ரகசியம் ஆலிவ் மரங்களாலான ஒரு பள்ளத்தாக்கில் புதைந்திருக்கிறது, திராட்சைக் கொடியின் வாசத்தை நினைவுபடுத்தும் ஒரு பழங்காலத்து வீட்டைச் சுற்றிலுமிருக்கும் புல் மற்றும் குளிர்ந்த ஊதாச் செடிகளுக்கடியே அது கிடக்கிறது. இருபது வருடங்களுக்கு மேலாக ,ஆடுமேய்க்கும் ஊமைகளிடம் கேள்வி கேட்டுக்கொண்டும் வெறுமையாகக் கிடக்கும் இடிபாடுகளின் கதவுகளைத் தட்டிக்கொண்டும் இந்தப் பள்ளத்தாக்கிலும் இதைப் போன்ற மற்ற பள்ளத்தாக்குகளிலும் அலைந்து திரிந்திருக்கிறேன். சில சமயங்களில், நுண்மையான ஒளிமழையொன்றின் கீழ், தெளிவான வானத்தில் முதல் நட்சத்திரம் பிரகாசிக்கையில், எனக்குத் தெரியும் எனறு நினைத்துக் கொள்வேன். எனக்கு தெரிந்திருந்தது தான் உண்மையும் கூட. ஓருகால் இன்னமும் கூட எனக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் இனி இந்த ரகசியத்தைப் பற்றி எவருக்குமே அக்கறையில்லை. சந்தேகமில்லாமல் எனக்கே கூட அந்த ஆசையில்லை, என் மக்களிடமிருந்து என்னால் என்னை துண்டித்துக் கொள்ள முடியாததால். நான் என் குடும்பத்துடன் வாழ்கிறேன். அவர்கள் கறக்ளைக் கொண்டும் மூடுபனியைக் கொண்டும் கட்டப்பட்ட செல்வம் செழிக்கும் கோரமான நகரங்களை ஆண்டுகொண்டிருப்பது போல் பாவனை செய்து கொண்டிருக்கிறார்கள். பகலிலும் இரவிலும் அது தன் குரலை உயர்த்துகையில் அனைத்துமே அதற்கு வளைந்து கொடுக்கிறது. ஆனால் அதுவோ எதற்குமே தலை வணங்குவதில்லை: அனைத்து ரகசியங்களுக்கும் அது செவிடாக இருக்கிறது. அதன் வலிமையே என்னைத் தாங்கிப்பிடிக்கிறது என்றாலும் என்னை அது சலிப்பூட்டுகிறது. அதன் கூக்குரல்கள் என்னை சோர்வடையச் செய்கின்றன. ஆனால் அதன் மகிழ்ச்சியின்மை என்னுடையதும் கூட, எங்களிருவருக்குள் ஓரே ரத்தம் தான் ஓடுகிறது. நானும் ஒரு நோயாளி தானே. கற்களின் மத்தியில் கூக்குரலிடும் இரைச்சல் மிக்க உடந்தை தானே? ஆகவே மறக்க முயற்சிக்கிறேன் இரும்பும் தீயும் நிரம்பிய நமது நகரங்களினூடே நான் நடந்து செல்கிறேன், இரவை தோக்கி தைரியத்துடன் முறுவலிக்கிறேன், சூறாவளிகளை வரவேற்கிறேன், நம்பிக்கைக்குரியவனாகவே இருப்பேன். உண்மையில், நான் மறந்துவிட்டேன்: இனி செவிடனாகவும் செயல்திறன் மிக்கவனாகவும் இருப்பேன். ஆனால் ஒருகால்,ஏதோ ஒரு நாள், அறியாமையினாலும், சோர்வாலும் நாம் இறக்கத் தயாராக நிற்கும் போது, நமது கிறீச்சிடும் கல்லறைகளைத் துறந்து அந்தப் பள்ளத்தாக்கிற்கு சென்று மீண்டும் படுத்துக் கொள்வேன். அங்கே, மாற்றமில்லா அதன் ஒளியில் இறுதி முறையாக நான் ஏற்கனவே அறிந்திருந்ததை மீண்டும் ஒரு முறை கற்றுக் கொள்வேன்.
மூலம்: 1952 Albert Camus

- See more at: http://solvanam.com/?p=42777#sthash.gdfacYPG.dpuf

Friday, 20 November 2015

குரு தத் - கருந்தேள் ராஜேஷ்



http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமா-ரசனை-25-இவர்கள்-விட்டுச்சென்ற-பாதையில்/article7899670.ece?widget-art=four-all

- கருந்தேள் ராஜேஷ்
காகஸ் கி பூல்


குரு தத் - ‘பியாஸா’


‘’




தரமான ரசனையை நோக்கி மக்களைத் திருப்பும் வேலையைச் செய்துவரும் இந்திய ‘ஆஃப்பீட்’(off-beat) திரைப்படங்களைத் தந்த முன்னோடிகள் சிலரைப் பற்றி பார்த்தோம். இதுபோன்ற படங்களை எடுத்த குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ரிஷிகேஷ் முகர்ஜி, பாஸு சட்டர்ஜீ, பாஸு பட்டாச்சார்யா ஆகியோரைக் கடந்த வாரம் அறிந்துகொண்டீர்கள். இந்தப் பட்டியலில் குறிப்பிடத் தக்க மற்றொருவர் குரு தத்.

பெயரை மாற்றிக்கொண்ட கலைஞன்

முப்பத்தொன்பதே வருடங்கள் வாழ்ந்து மறைந்த குரு தத், இவர்களை விடச் சற்றே வித்தியாசமானவர்.பெங்களூருவில் பிறந்தவர். சிறுவயது முதலே கல்கத்தாவில் வளர்ந்தார். அறிவுஜீவியாகவே வாழ்ந்தவர். வசந்த குமார் சிவ்ஷங்கர் படுகோனே என்ற இயற்பெயருக்குப் பதில், குரு தத் என்ற பெயரை கல்கத்தாவில்தான் வைத்துக்கொண்டார். இதனாலேயே, இவர் ஒரு பெங்காலி என்று பலரும் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

பூனாவின் பிரபாத் பில்ம் கம்பெனி என்ற பிரபல ஸ்டுடியோவில் மூன்று வருட ஒப்பந்த வேலையில் 1944-ல் சேர்ந்தார் குரு தத். அதற்கு முன்னர் டெலிஃபோன் ஆபரேட்டராக இருந்தார். இந்த ஸ்டுடியோவில் சேர்ந்த பின்னர்தான் திரைப்பட ஆர்வம் அவருக்குள் எழுந்தது. பின்னர் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அங்கே தனது வாழ்நாள் நண்பராக மாறிய தேவ் ஆனந்தின் நவ்கேதன் நிறுவனத்தில் தனது முதல் படத்தை (பாஸி - 1951) இயக்கினார்.

மறுபடியும் அதே நிறுவனத்தில் தேவ் ஆனந்தை வைத்து அவர் இயக்கிய ‘ஜால்’ இரண்டாவது படமாக அமைந்தது. இதன்பின்னர் ‘பாஸ்’, ‘ஆர் பார்’, ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் 55’ ஆகிய படங்களில் அவரே நாயகனாக நடித்து இயக்கினார். இப்படங்கள், இந்தித் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக குரு தத் இயக்கியவை. எனவே ஜனரஞ்சகப் படங்களாகவே இவை விளங்கின.

‘பியாஸா’

இந்தப் படங்களுக்குப் பின்னர் இவர் இயக்கிய ‘பியாஸா’என்ற திரைப்படம்தான் இன்றளவும் குரு தத்தின் பெயரை உலகெங்கும் கொண்டுசேர்த்தது. ஒரு ஏழைக் கவிஞன், அவனது கல்லூரிக் காதலி, இவனது கவிதைகளால் ஈர்க்கப்பட்டு இவனைக் காதலிக்கத் தொடங்கும் ஒரு பாலியல் தொழிலாளி, கல்லூரிக் காதலியின் கணவன் ஆகிய கதாபாத்திரங்களைக் கொண்டு, இயல்பான, உணர்வுபூர்வமான ஒரு கதையைப் படமாக்கியிருந்தார் குரு தத்.

ஒரு கட்டத்தில் அவரது கதாபாத்திரம் இறந்துவிட்டதாகக் கருதப்படும். இவரைச் சுற்றியிருக்கும் அனைவரும் சுயநலவாதிகள் என்பதைப் புரிந்துகொண்டு, தன்னை விரும்பிய பாலியல் தொழிலாளிப் பெண்ணுடன் இறுதியில் கிளம்பும்படியான கதை. ஸாஹிர் லுத்யான்வி என்ற புகழ்பெற்ற கவிஞரின் கதையில் இருந்து எடுத்த சில அம்சங்கள் இப்படத்தின் இயல்புத்தன்மையை உறுதிப்படுத்தின. படம் மிகுந்த பிரபலமடைந்தது.

இப்படத்துக்குப் பின்னர் குரு தத்தின் ‘காகஸ் கி பூல்’ வெளியாகியது. அச்சமயத்தில் படுதோல்வி அடைந்தாலும், பின்னாட்களில் திரைப்பட ரசிகர்களிடையே மிகுந்த பிரபலம் அடைந்த படங்களில் அதுவும் ஒன்று. இந்தப் படத்தில் ஒரு திரைப்பட இயக்குநராக குரு தத் நடித்திருப்பார். மனைவியின் குடும்பத்தினர் இவரை இளப்பமாக நடத்துவார்கள்.

காரணம், அச்சமயத்தில் திரைப்பட இயக்குநர் என்பது சமூகத்தில் அந்தஸ்து குறைந்த வேலையில் இருப்பவர் என்று கருதப்பட்டது. இதனால் மனம் உடைந்த நிலையில் இருக்கும் ஒரு நபர், எதேச்சையாகச் சந்திக்க நேர்ந்த ஒரு பெண்ணைக் கதாநாயகியாக்கி, அவள்மீது காதல் கொள்ளும் கதை. இதனால் ஏற்கெனவே திருமணமான அவரது வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இவரது மகள் இறைஞ்ச, அப்பெண் மனம்மாறி, கதாநாயகி வாழ்க்கையைத் துறந்து ஒரு பள்ளியில் ஆசிரியை ஆகிவிடுகிறாள். அனைவரும் அவரை விட்டுப் பிரிந்த நிலையில் குடிக்கு அடிமையாகி, இறுதியில் இயக்குநர் நாற்காலியில் இவர் உயிரை விடுவதோடு படம் முடியும்.

திரையும் வாழ்வும்

நிஜ வாழ்விலும் இதேபோல் தனது முப்பத்தொன்பதாம் வயதில், மதுபானத்தோடு அளவுக்கதிகமாகத் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டதால் 1964 அக்டோபர் பத்தாம் தேதி இரவில் குரு தத் இறந்துபோனார். இதற்கு முன்னரே இரண்டு முறைகள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

..........................

Wednesday, 18 November 2015

Dead EyesBy Manash Bhattacharjee, The Still Point of the Turning World: T.S. Eliot Go, go, go, said the bird: human kind cannot bear very much reality.” By Maria Popova

For Paris, for the World

Montmartre - La Bataille de Neige sur la Butte Montmartre. [The Snow Battle on Montmartre Hill] Vintage photographic postcard, circulated in 1905, divided back, published by G.C.A., Paris. © Casas-Rodríguez Collection, 2008.
Dead Eyes
 “It’s raining my soul, it’s raining, but it’s raining dead eyes.”
― Guillaume Apollinaire, ‘April Night 1915’

 Ulysses, no longer from Greece,
Did not make his travel plans himself
He, banished wanderer,
Roams in Paris hiding a gun,
There is no Penelope
Waiting back home, he sees whores
In women from other lands,
Asylum is hell —
He has left god in another country,
He has left himself, his soul,
Not in Ithaca, but in Syria, in Beirut,
Ravaged by a flood of heads
The world calls exodus,
Even animals flee their territory
More easily than this,
He picks up a gun to forget
His house, its fruits,
Tonight he will shoot at them all,
His jealousy will kill their song
Tonight every lover will be his martyr,
Tonight it will rain dead eyes
In Paris, for a god died in a man’s dream
And he is out to avenge it.

 By Manash Bhattacharjee
https://www.brainpickings.org/2015/11/18/t-s-eliot-reads-burnt-norton/

The Still Point of the Turning World: T.S. Eliot Reads His Timelss Ode to the Nature of Time in a Rare Recording

“Go, go, go, said the bird: human kind cannot bear very much reality.”

The Still Point of the Turning World: T.S. Eliot Reads His Timelss Ode to the Nature of Time in a Rare Recording
“[Is] only the present comprehended?” Patti Smith asked in her marvelous meditation on time and transformation. Generations earlier, at the same moment in history when Virginia Woolf was busy contemplating the elasticity of time and Einstein and Gödel were redefining our understanding of it, T.S. Eliot (September 26, 1888–January 4, 1965) — another supreme poet for the ages — penned what remains the most beautiful ode to the nature of time: Burnt Norton, the first of his epic Four Quartets, eventually included in his Collected Poems (public library).
In this rare archival recording, Eliot reads this timeless masterpiece, which contains one of the most exquisite phrases ever written in the English language: “the still point of the turning world.” Please enjoy:
Time present and time past
Are both perhaps present in time future
And time future contained in time past.
If all time is eternally present
All time is unredeemable.
What might have been is an abstraction
Remaining a perpetual possibility
Only in a world of speculation.
What might have been and what has been
Point to one end, which is always present.
Footfalls echo in the memory
Down the passage which we did not take
Towards the door we never opened
Into the rose-garden. My words echo
Thus, in your mind.
But to what purpose
Disturbing the dust on a bowl of rose-leaves
I do not know.
Other echoes
Inhabit the garden. Shall we follow?
Quick, said the bird, find them, find them,
Round the corner. Through the first gate,
Into our first world, shall we follow
The deception of the thrush? Into our first world.
There they were, dignified, invisible,
Moving without pressure, over the dead leaves,
In the autumn heat, through the vibrant air,
And the bird called, in response to
The unheard music hidden in the shrubbery,
And the unseen eyebeam crossed, for the roses
Had the look of flowers that are looked at.
There they were as our guests, accepted and accepting.
So we moved, and they, in a formal pattern,
Along the empty alley, into the box circle,
To look down into the drained pool.
Dry the pool, dry concrete, brown edged,
And the pool was filled with water out of sunlight,
And the lotos rose, quietly, quietly,
The surface glittered out of heart of light,
And they were behind us, reflected in the pool.
Then a cloud passed, and the pool was empty.
Go, said the bird, for the leaves were full of children,
Hidden excitedly, containing laughter.
Go, go, go, said the bird: human kind
Cannot bear very much reality.
Time past and time future
What might have been and what has been
Point to one end, which is always present.
II
Garlic and sapphires in the mud
Clot the bedded axle-tree.
The trilling wire in the blood
Sings below inveterate scars
Appeasing long forgotten wars.
The dance along the artery
The circulation of the lymph
Are figured in the drift of stars
Ascend to summer in the tree
We move above the moving tree
In light upon the figured leaf
And hear upon the sodden floor
Below, the boarhound and the boar
Pursue their pattern as before
But reconciled among the stars.
At the still point of the turning world. Neither flesh nor fleshless;
Neither from nor towards; at the still point, there the dance is,
But neither arrest nor movement. And do not call it fixity,
Where past and future are gathered. Neither movement from nor towards,
Neither ascent nor decline. Except for the point, the still point,
There would be no dance, and there is only the dance.
I can only say, there we have been: but I cannot say where.
And I cannot say, how long, for that is to place it in time.
The inner freedom from the practical desire,
The release from action and suffering, release from the inner
And the outer compulsion, yet surrounded
By a grace of sense, a white light still and moving,
Erhebung without motion, concentration
Without elimination, both a new world
And the old made explicit, understood
In the completion of its partial ecstasy,
The resolution of its partial horror.
Yet the enchainment of past and future
Woven in the weakness of the changing body,
Protects mankind from heaven and damnation
Which flesh cannot endure.
Time past and time future
Allow but a little consciousness.
To be conscious is not to be in time
But only in time can the moment in the rose-garden,
The moment in the arbour where the rain beat,
The moment in the draughty church at smokefall
Be remembered; involved with past and future.
Only through time time is conquered.
III
Here is a place of disaffection
Time before and time after
In a dim light: neither daylight
Investing form with lucid stillness
Turning shadow into transient beauty
Wtih slow rotation suggesting permanence
Nor darkness to purify the soul
Emptying the sensual with deprivation
Cleansing affection from the temporal.
Neither plentitude nor vacancy. Only a flicker
Over the strained time-ridden faces
Distracted from distraction by distraction
Filled with fancies and empty of meaning
Tumid apathy with no concentration
Men and bits of paper, whirled by the cold wind
That blows before and after time,
Wind in and out of unwholesome lungs
Time before and time after.
Eructation of unhealthy souls
Into the faded air, the torpid
Driven on the wind that sweeps the gloomy hills of London,
Hampstead and Clerkenwell, Campden and Putney,
Highgate, Primrose and Ludgate. Not here
Not here the darkness, in this twittering world.
Descend lower, descend only
Into the world of perpetual solitude,
World not world, but that which is not world,
Internal darkness, deprivation
And destitution of all property,
Dessication of the world of sense,
Evacuation of the world of fancy,
Inoperancy of the world of spirit;
This is the one way, and the other
Is the same, not in movement
But abstention from movememnt; while the world moves
In appetency, on its metalled ways
Of time past and time future.
IV
Time and the bell have buried the day,
the black cloud carries the sun away.
Will the sunflower turn to us, will the clematis
Stray down, bend to us; tendril and spray
Clutch and cling?
Chill
Fingers of yew be curled
Down on us? After the kingfisher’s wing
Has answered light to light, and is silent, the light is still
At the still point of the turning world.
V
Words move, music moves
Only in time; but that which is only living
Can only die. Words, after speech, reach
Into the silence. Only by the form, the pattern,
Can words or music reach
The stillness, as a Chinese jar still
Moves perpetually in its stillness.
Not the stillness of the violin, while the note lasts,
Not that only, but the co-existence,
Or say that the end precedes the beginning,
And the end and the beginning were always there
Before the beginning and after the end.
And all is always now. Words strain,
Crack and sometimes break, under the burden,
Under the tension, slip, slide, perish,
Will not stay still. Shrieking voices
Scolding, mocking, or merely chattering,
Always assail them. The Word in the desert
Is most attacked by voices of temptation,
The crying shadow in the funeral dance,
The loud lament of the disconsolate chimera.
The detail of the pattern is movement,
As in the figure of the ten stairs.
Desire itself is movement
Not in itself desirable;
Love is itself unmoving,
Only the cause and end of movement,
Timeless, and undesiring
Except in the aspect of time
Caught in the form of limitation
Between un-being and being.
Sudden in a shaft of sunlight
Even while the dust moves
There rises the hidden laughter
Of children in the foliage
Quick now, here, now, always —
Ridiculous the waste sad time
Stretching before and after.
Complement this poetic perspective on time with the psychology of why time slows down when we’re afraid and speeds up as we age and Thomas Mann on time and the soul of existence, then revisit Eliot’s readings of his delightful 1947 poem “The Ad-Dressing of Cats” and his beloved classic “The Love Song of J. Alfred Prufrock.”