Tuesday 24 February 2015

ஈழக்கவிஞர் மஹாகவியின் ஒரு கவிதை

ஈழக்கவிஞர் மஹாகவியின் ஒரு கவிதை

www.sramakrishnan.com

சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்

சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்

கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்

கடல் மீது இவள் கொண்ட பயம் ஒன்று காணும்

வெறு வான வெளி மீது மழை வந்து சேரும்

வெறிக் கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்

எறிகின்ற கடல் என்று மனிதர்கள் அஞ்சார்

எதுவந்ததெனினென்ன அதை வென்று செல்வார்

இருளோடு வெளியேறி வலை வீசினாலும்

இயலாது தரவென்று கடல் கூறலாகும்

ஒருவேளை முகில் கீறி ஒளி வந்து வீசும்


ஒருவேளை துயர்நீள உயிர் வெந்து சாகும்