Friday 23 January 2015

Shared publicly  -  14 Dec 2013

காற்றின் திசையெங்கும்
உயிர் கொண்டு
அலையும்
இறகொன்று
முடிவுறா தொடர்ச்சியில்
முடிவுறும் கவிதை
            -கைலாஷ் சிவன்



        வறட்சி
வானுக்கு இல்லை இரக்கம். பூமிக்கு
வெயில் என்று வருகிறது நெருப்பு.
காற்றுக்கு விடை சொல்லித்
துக்கித்து இருக்கிறது வீதி
அடி உறைகளும், கிணற்றுக்குள், வாய் வறண்டு
சுருண்டு விட்டன
தாகித்து அணுகிற வாளிக்கு
என்ன சொல்வது பதில்?
கறங்குவெள் அருவி கல் அலைத்து  ஒழுகிய
பறம்பும் இன்று வெறும் பாறை
                           ராஜ சுந்தரராஜன்