Monday 3 August 2015

-Jennifer Doane- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


பின்புறமாய் திரும்பி நோக்கும்
அனைவரின் முகத்திலும்
நானுன்னை;
உன்னையே தேடியலைகிறேன்.
மரித்தலை நோக்கி திரும்பும் சூரியனை ஒத்திருக்க,
உன்னில் அச்சமடைந்தோர் எவரை பார்வைகொள்வர்.


எங்கெங்கிலுமாக
உனது உறைப்புலத்தை விசாரித்தபடியிருக்கிறேன்.
பூமியிலமைந்த இடங்களெல்லாம்
எனக்கென வெளிப்பட்டு படர்கிறது
நான் காண்பதையெல்லாம்
என்னால் வசப்படுத்த இயலவில்லை.

இக்கணம், நானுன்னை நினைவடைந்தாலும் ,
நானதை ஒளித்திட திராணியற்றிருக்கிறேன்.
உன்னை குறித்து நுவலாதிருக்க,
சந்தை வெளியில் எனது குரலை பின்னிழுக்கிறேன்
இந்நாள் இதயமிழந்த ;
தனியர் யாரையும் நான் சந்திக்கவில்லை.
நான் நாடியலைந்தவருடன் விழைந்து
ஏற்கனவே உடனிருப்பதை
நம்பாத யாரொருவரையும் சந்திக்கவில்லை.

ஆண்கள், பெண்கள் யாவருக்கும்
அளிக்கப்பட்ட கற்கள் இவையே.
நம்மில் யாரொருவரும்
ஒருநாளேனும்
இக்கற்குவியல் மீதமர்ந்து ஜிவிக்கவியலாது.

-Jennifer Doane-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
.




ஒருவேளை எனது பாவங்களை நான் வெறுபுற்றால்,
இறைவன் என்னை நேசிப்பாரா?

”இல்லை -


ஆனால் அவருன்னை நினைவுறுங்கால்,
பின்னர் நீயும் அவரை நினைவுறுவாய்-

ஆகையால் காத்திருத்தலில் நின்றிரு.”

-Rabia al -Basri-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்