Friday 15 May 2015

-Ezra Pound -- & - Guillaume Apollinaire- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

ஹா சார்
எனது பூக்களுக்கு மத்தியில்
நீ மோப்பம் பிடிப்பதையும்
கண்- அயர்வதையும் பார்த்திருக்கிறேன்
அதனால் என்ன , பிராத்தனை செய், 
உனக்கு தோட்டக்கலையைப் பற்றித் தெரியுமா
நீ ஆட்டின் கால்களைக் கொண்டிருக்கிறாய் ?
வா ஆஸ்டர் , வா எபெலியோட்டா
எனது தோட்டத்தில் பான் இருப்பதைப் பார்.
ஆனால் நீ நகர்ந்தாலோ அல்லது பேசினாலோ
இது உன்னை துரத்திக் கொண்டு ஓடிவரும்
பயத்தில் உறையச்செய்யும்
தன்னையே இசிவிற்குள்ளாக்கும் .
-Ezra Pound -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam's photo.


பசும்புல்வெளிகள் நஞ்சாகியுள்ளன
ஆனால்
இலையுதிர் பருவம் அதிநேர்த்தியானது
அங்கு மேயும் பசுக்கள்
மெல்ல மெல்ல நஞ்சுடைகின்றன
பசுபுல்வெளியின் குங்குமப்பூ லில்லாக்குகள்
விழிகளை சுற்றியுள்ள சருமமாயிருக்கிறது
நீல ஊதாநிறம் இலையுதிர் பருவத்தை
சுற்றியுள்ள சருமத்தை ஒத்திருக்கிறது
உன்னுடைய விழிகளுக்கு என் வாழ்க்கை மெல்ல நஞ்சடைகிறது
குழந்தைகள் பள்ளியிலிருந்து சத்தமிட்டு வெளியே வருகின்றனர்
ஜாக்கட் அணிந்து மவுத் ஆர்கன் வாசித்துபடி விளையாடுகின்றனர்
அவர்கள் தங்கள் அன்னையரை போன்ற
பசும்புல்வெளியின் குங்குப்பூக்களை எடுக்கின்றனர்
மகள்களின்வழி மகள்கள் அவர்களது இமைகளின் வண்ணங்கள்
படபடக்கும் பூக்கள் பித்தான காற்றில் படபடக்கின்றன.
மந்தையின் மேய்ப்பன் மெலிதாய் பாடுகிறான்
பசுக்கள் மெல்ல உக்காரமிடுதலைக் கைவிடுகிறது
என்றென்றைக்குமான இந்த பசும்புல்வெளி
இலையுதிர் பருவத்தால் வற்றிய பூக்களால் நிரம்பியுள்ளன.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
Shanmugam Subramaniam 

ஆயிரத்து மூன்று வால்நட்சத்திரங்களின் டான் ஜுவான்......
எப்போதும் நாம்
முன்னேற்றமின்றி மேலும் போய்க் கொண்டிருப்போம் கிரகத்திலிருந்து கிரகத்திற்கு
நெபுலாவிலிருந்து நெபுலாவிற்கு
ஆயிரத்து மூன்று வால்நட்சத்திரங்களின் டான் ஜுவான்
பூமியினால் சிறிதும் அசைவுறாமல்
புதிய விசைகளைத் தேடுகிறான்
பேய்களை குறித்து தீவிரமாக சிந்திக்கிறான்.
எத்தனை பிரபஞ்சங்கள் மறக்கப்பட்டிருக்கின்றன
பிறகு யார்தான் மாபெரும் மறதியாளர்கள்
இந்த அல்லது அந்த உலகின் பகுதியை
நம்மை மறக்க செய்ய யருக்குத்தான் தெரியும்
கிரிஸ்டோபர் கொலம்பஸ் எங்கிருக்கிறார்
ஒரு கண்டத்தை மறக்க காரணமாயிருந்தவருக்குத்தான்
நாம் நன்றி சொல்லவேண்டும்
இழக்க
உண்மையாகவே இழக்க
அதிர்ஷ்டசாலிக்கு வழியை ஏற்படுத்தி
வாழ்க்கையை இழந்து வெற்றியைக் கண்டடைய,
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

தனது மையால் உலகை மங்கச் செய்கிறான்
தனது நேசத்திற்குரியவளின் குருதியை
குடிக்க விரும்புகிறான்
நானும் அவனை ஒத்திருக்கிறேன் என நினைக்கிறேன்.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

Shanmugam Subramaniam's photo.

டால்பின்கள் காற்றில் உயரே பாய்கிறது
ஆனால்
கடல் உப்பாகவும் கசப்பாகவும் இருக்கிறது
கனவுகள் மலராய் வெடிக்கலாம்
ஆனால் 
வாழ்க்கை இரக்கத்தை இழந்து மீதமுள்ளது.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.

கடவுளே! இராணுவ வீரனாய் இருத்தல்
எத்தனைப் பெரிய மகிழ்ச்சி
நாம் வட்டமாய் அமர்ந்து கேலிபேசியும்,
பாடிக்கொண்டும் இருக்கிறோம்
வடக்கிலிருந்து வீசும் காற்று 
நமது பெருமூச்சுகளை இணைக்கிறது
நான் மோதிரத்தை
தொடர்ந்து மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன்.
கடவுள் உன்னுடன் இருக்கட்டும்!
டிரம்பெட் இசை அழைக்கிறது
அவன் துரிதமாய் விடியலின் குறுக்க நடந்தான்
அதோ அங்கே தான் அவன் இறந்தான்
அவனது காதலியை விட்டுச் சென்றான்
அவள் ஆச்சர்யபடும்படியாக விதியைப் பார்த்து நகைத்தான் .
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.


வசியம் செய்ய உன் கண்களை யார் பழக்கியது..........
அவள் ஒரு சூனியக்காரி சிவந்த கேசத்தையுடையவள்
அவள் ஆண்களை பித்தாக்கினாள்
அவள் ஆண்களை குருடாக்கினாள்
பிஷப் அவளை விசாரணைக்காக அழைத்துவர சொன்னார்
ஆனால் அதன்பிறகு அவளை விடுவிக்க உத்தரவிட்டார்
ஓ லோரெலய் உனது கண்கள் அணிகலன்கள்
வசியம் செய்ய உன் கண்களை யார் பழக்கியது
எனது கண்கள் சபிக்கப்பட்டவை எனது இதயம் அயர்ந்துவிட்டது
என்மீது ஏவுப்பட்ட ஒருபார்வை, ஆண்கள் இறந்துபோயினர்
எனது கண்கள் அணிகலன்கள் அல்ல அவை தீப்பிழம்பு
அவர்களது மந்திரவித்தையை கண்டிக்க வேண்டும்
அவர்களது நெருப்பு என்னை எரிக்கிறது
ஓ லோரெலயி
வேறு யாரேனும் ஒருவர் உன்னை சாவதற்கு அனுப்பட்டும்
ஓ மரியாதைக்குரிய பிஷப்பே நையாண்டி செய்யாதீர்கள்
எனது ஆன்மாவிற்கு பிராத்தனைகள் தேவைப்படுகிறது
எனது சதை பணயம் வைக்கப்பட்டுள்ளது
எனது காதலன் பிரிந்து போய்விட்டான் மீணடும் வரமாட்டான்
அதனால்
என்னால் காதலிக்க இயலாது நான் எரிந்து போகிறேன்
நீ மறுதலித்த பின் என் கண்கள் எதற்காக
எனது கொடூரமான கண்கள்
எனது நாட்களை இறுதியுறச் செய்யட்டும்
எனது காதலன் பிரிந்து போய்விட்டான் நான் பறிப்போயிருக்கிறேன்
எனது இதயம் துன்புறுகிறது காதலன் பிரிந்து போய்விட்டான்
மதகுரு மூன்று அச்சமில்லா பெருவீரர்களை அழைத்தார்
இவளை ஆண்டவனின் மணப்பெண்ணாக கொண்டு செல்லுங்கள் என்றார்
கடவுளின் இல்லத்தில் வசி
ஒ லொரெலய்
உலகத்திற்காக மரி ஆனாலும் மரிக்காதே
அந்த நால்வரும் நதியை நோக்கிச் சென்றனர்
அவளது கண்கள் விண்மீன்கள் .
அவள் இந்த உதவியை கேட்டாள்
இந்த நிலங்கள் அனைத்தும் ஒருகாலத்தில் என்னுடையவை
ஆகையால்
அந்த உயரத்தில் உள்ள கல்லின் மேல் ஏறுகிறேன்
ரைன் நதியை ஒருமுறை பார்க்கிறேன்
எனது முகத்தை இறுதியாக ஒருமுறைப் பார்த்துக் கொள்கிறேன்
மலர்களையும் அந்த புல்வெளிகளையும் பார்த்து விடுகிறேன்
இளம் பெண்களுடனும் விதவைகளுடன் இணையும் முன்பு
அவளது சுருட்டை கேசம் காற்றில் சூரிய கீற்றுகளாயின
அவளை கவனித்த பெருவீரர்கள் குருடானார்கள்
நதியில் ஒரு படகு மிதந்து பயணிக்கிறது
அந்த படகின் மீது என் காதலனைக் காண்கிறேன்
எனது காதலனின் அழுகுரலால் என் இதயம் உருகுகிறது
அவள் சாய்ந்தாள் ரைன் நதியுள் வீழ்ந்தாள்
ரைன்நதி அவளது படுக்கையாக இனி எப்போதுமிருக்கும்
அவளது கண்களை தெளிந்த நீரில் கண்டாள்.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.


காதல்....
ஒரு சர்க்கஸ் கரடியைப் போல் ...........நடனமாடியது.......
நமது இரவுகள் நமது காலைப் பொழுதை இருளடைய செய்துவிடும்.
ஒரு முதிய ஜிப்ஸிக்கு அனைத்துமே நன்றாகத தெரியும்,
நாங்கள் பயணிக்கும் வழியில் அவளுக்கு நன்றி தெரிவித்தோம்
அவள் சொன்னதை பொய்யாக்கும் நம்பிக்கையோடு.
நாங்கள் ஒன்றாக இணைந்திருக்கும் தருணத்தில் காதல் நடமிடுகிறது
ஒரு சர்கஸ் கரடியைப் போல் நடனமாடியது
நீலப்பறவையொன்று தனது இறகுகளை இழக்கிறது
மற்றும் யாசகர்கள் தங்களது பிராத்தனைகளை மறந்துவிடுகின்றனர்
நாம் வழியைவிட்டு விலகிச் சுற்றித்திரியலாம்,
ஆனால் நமது விதியிலிருந்து விலகிச் செல்லவியலாது
ஆயினும் நாம் நம்பிக்கையோடு வழியில் காதலை கண்டடையலாம்
அந்த முதிய ஜிப்ஸி சொல்லக் கேட்டதை
கரத்தோடு கரம் பிணைந்து மறந்துவிட முயற்சிக்கலாம்.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.


எனது கோப்பை வைனால் நிரம்பியுள்ளது சுடரெளியைப் போல் நடுங்குகிறது
கேளுங்கள் , படகுக்காரன் ஒரு மென்பாடலை இசைக்கிறான்
நிலவொளி பதிந்த இரவில் ஏழு பெண்கள் வந்தபோதும்
நதியிலிருந்து எழுந்து வருகையில் அவர்களின் பச்சைநிறக் கூந்தல் நீண்டிருக்கிறது.
இப்போது பாடுங்கள் நடனமாடுங்கள் மாடி சுழலும்வரை
படகுக்காரனின் மென்பாடல் மங்கி மறைகிறது
பொன்னிற கேசமுள்ள அனைத்து அழகியப் பெண்களயும் என்னிடம் கொண்டு வாருங்கள்
அசையா பார்வையுள்ளவர்கள் பின்னலிட்ட சுருள்கேசத்தினர்.
ரைன் போதையுற்று பாய்கிறது,
அதன் வைன் இலைகள் தடங்களாகின்றன,
நடுங்கும் இரவின் பொன்னிறம் அங்கே பிரதிபலிக்கிறது,
மரணத்தில் சடசடப்பில் மென்பாடல் மெலிவடைகிறது
நீர்நங்கைகள் தங்களது பச்சைநிற கேசத்தால் கோடையை பிரமிக்கச் செய்கிறார்கள்-
ஒரு புன்னகையின் உரிக்கப்பட்ட தோலாக
எனது கோப்பை நொறுங்குகிறது.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
.
Shanmugam Subramaniam's photo.
Like · Comment · 
           
  • Jamalan Tamil"புன்னகையின் உரிக்கப்பட்ட தோல்” அருமையாக உள்ளது இந்த படிமம் அல்லது அதை கற்பனை செய்வதற்கான பிம்பம். கவிதை வரிகளின் இடைவெளி ஒரு மெல்லிய இசையை அல்லது ஒலிப்பை உருவாக்கிறது என்பது எனது வாசிப்பு. இக்கவிதைகளில் அதை கவனம் கொள்ளலாம். வரிகளை பிரிக்கும்போது அந்தஒலியை காதில் கெட்பது அவசியம். இந்த கவிதையில் அந்த ஒலி இடறுவதாக உள்ளது. மொழிபெயர்ப்புடன் ஒலிப்பெயர்ப்பை கவனம் கொள்வது கவிதை பெயர்ப்பிற்கு அவசியம். இந்த ஒலி நமது கவிதை மரபில் உள்ளதுபோலச் செய்வது கவிதையை சிறப்பாக தரும். இக்கவிதை நன்றாக எழுதப்பட்டு உள்ளது. ஒரு தேவதைக்கதையை நினைவுட்டும் கதைப்பாடல்பொல.
    Like · Reply · 3 · 17 hrs
  • Jamalan Tamilசான்றாக...

    கேளுங்கள் , படகுக்காரன் ஒரு மென்பாடலை இசைக்கிறான்

    நிலவொளி பதிந்த இரவில் ஏழு பெண்கள் வந்தபோதும்
    நதியிலிருந்து எழுந்து வருகையில் அவர்களின் பச்சைநிறக் கூந்தல் நீண்டிருக்கிறது.

    கேளுங்கள் , 
    படகுக்காரன் 
    ஒரு மென்பாடலை இசைக்கிறான்
    நிலவொளி பதிந்த இரவில் 
    ஏழு பெண்கள் வந்தபோதும்
    நதியிலிருந்து 
    எழுந்து வருகையில் 
    அவர்களின் பச்சைநிறக் கூந்தல் 
    நீண்டிருக்கிறது.

    - இரண்டின் ஒலிப்பிலும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து பார்த்தால் அதன் இசைப்பு மாறி வருவது சுவராஸ்யமாக உள்ளது.
    Like · Reply · 3 · 17 hrs


  • Shanmugam Subramaniam என்ன சார் உங்களுக்கும் ஓசை கேட்க ஆரம்பித்துவிட்டதா? கேட்கிறதா? சீக்கிரம் வீடு வந்து சேருங்க செப்பலோசையா? அல்லது துள்ளலோசையா?
    மொபைல் மற்றும் கால்வெஸ்டனிற்கும் இடையில்
    ஒரு பெரிய பூந்தோட்டம் பூத்துக் குலுங்குகிறது
    ரோஜாக்கள் கூடவே
    தன்வசம் ஒரு வீட்டை வைத்திருக்கிறது
    அதுவே ஒரு மிகப் பெரிய ரோஜாவாயிருக்கிறது.
    அங்கே ஒரு யுவதி சிலசமயங்களில் நடைபயில்கிறாள்
    தனது செடிகளுக்கிடையில் தன்னந்தனியாக,
    அவளது எலுமிச்சை அவென்யூவில்
    நான் அவளைக் கடந்து செல்லும் தருணத்தில்
    நாங்கள் பார்வை கணங்களைப் பரிமாறிக் கொள்வோம்.
    அவள் பின்பற்றும் சமயப் பிரிவு
    மெனோனைட்டின் பெயரைத் தாங்கியுள்ளது,
    அவளது ஆடையில் பொத்தான்கள் இல்லை,
    ரோஜாக்களுக்கும் இலைகளுக்கும் இடையே
    மொட்டுகள் ஏதுமில்லை.
    எனது சட்டைக் கையிலிருந்து இரண்டு காணாமல் போய்விட்டன
    அந்த யுவதியின் இரகசிய நடைமுறைகளும்
    என்னுடையவையும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளது.
    -Guillaume Apollinaire-
    (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
    *(Mennonite : originating in Europe in the 16th century, that opposes infant baptism, practices baptism of believers only, restricts marriage to members of the denomination, opposes war and bearing arms, and is noted for simplicity of living and plain dress.)
    Shanmugam Subramaniam's photo.
    Like · Comment · 

  • டெக்ஸாஸ் கடற்கரையில்
ஆயிரத்து மூன்று வால்நட்சத்திரங்களின் டான் ஜுவான்......
எப்போதும் நாம்
முன்னேற்றமின்றி மேலும் போய்க் கொண்டிருப்போம் கிரகத்திலிருந்து கிரகத்திற்கு
நெபுலாவிலிருந்து நெபுலாவிற்கு
ஆயிரத்து மூன்று வால்நட்சத்திரங்களின் டான் ஜுவான்
பூமியினால் சிறிதும் அசைவுறாமல்
புதிய விசைகளைத் தேடுகிறான்
பேய்களை குறித்து தீவிரமாக சிந்திக்கிறான்.
எத்தனை பிரபஞ்சங்கள் மறக்கப்பட்டிருக்கின்றன
பிறகு யார்தான் மாபெரும் மறதியாளர்கள்
இந்த அல்லது அந்த உலகின் பகுதியை
நம்மை மறக்க செய்ய யருக்குத்தான் தெரியும்
கிரிஸ்டோபர் கொலம்பஸ் எங்கிருக்கிறார்
ஒரு கண்டத்தை மறக்க காரணமாயிருந்தவருக்குத்தான்
நாம் நன்றி சொல்லவேண்டும்
இழக்க
உண்மையாகவே இழக்க
அதிர்ஷ்டசாலிக்கு வழியை ஏற்படுத்தி
வாழ்க்கையை இழந்து வெற்றியைக் கண்டடைய,
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
Like · Comment · 
மேரி நீ திரும்பி வரவே மாட்டாயா..................
நீ சிறுமியாக இருந்தபோது அங்கே நடனமாடினாய்
நீ வயதுமுதிர்ந்த பின்பும்கூட அங்கே நடனமாடுவாயா
அவர்கள் பின்னங்காலில் குதித்தும் 
துள்ளியும் நடனக்கூடத்தில் ஆடுவார்கள்
ஒருநாள் எல்லா மணிகளும் ஒலிக்கும்
மேரி நீ திரும்பி வரவே மாட்டாயா
நாம் அணிந்துள்ள முகமூடிகள் எத்தனை நேர்த்தியானது
இசை வெகுதொலைவில் ஒலிப்பதாய் தோன்றுகிறது
எங்கு வானமும் தொடுவானமும் சந்திக்குமோ
அங்கு
ஆமாம் நான் உன்னை காதலிக்கிறேன் ஆனால் அரைமனதோடு
எது என்னிடம் தவறானதாக இருக்கிறதோ அது இனிமையானது.
பறவைக் கூட்டம் பனியில் விடுவித்து விடப்பட்டுள்ளன
அந்த பனித்துகள்கள் கம்பளியின் வெள்ளிப் புள்ளிகள்
சில போர்விரர்கள் கடந்து போகிறார்கள்
நான் ஏன் வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது
என்னிடமுள்ள இதயம் அப்படியொன்றும் குளிர்ந்ததல்ல
அதன்பிறகு வெதுவெதுப்பாயிருக்க
ஆயினும் எனக்கு என்ன தெரியும்
உன் கேசம் மங்கப் போவது ஏனென்று எனக்கு தெரியுமா
சினம் கொண்ட கடலாய் கேசம் சுருள்கிறது
உன் கேசம் மங்கப் போவது ஏனென்று எனக்கு தெரியுமா
இலையுதிர்கால இலைகளாய் நாமிருக்க
நாம் செய்த உறுதிமொழிகள் சிதறிக் கிடக்கின்றன
சியன் ஊடாக நான் நடைபயின்று இருக்கிறேன்
எனது கைகளுக்கு அடியில் ஒரு பழம் புத்தகம்
எனது வலியை ஒத்திருக்கிறது அந்த நதி
தாகம் தணிக்க இயலாமலும் அமைதியாயும் பாய்கிறது
வார இறுதி மீண்டும் எப்போது வரும்.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
Like · Comment · 

கடவுள் தன்னைத்தானே பணிவுபடுத்திக் கொள்கிறார்...........
இங்கே மீண்டும் நீ என் அருகாமையில்
போரில் உயிர்நீத்த என் நண்பர்களின் நினைவுகள்
காலத்தின் ஆலிவ்,
பல-நினைவுகள் ஒரேயொரு நினைவை உருவாக்குகிறது
எப்படி நூறு பர்-மென்னிழைகள் ஒரு கோட் உருவாக்குகிறதோ
இந்த ஆயிரம் காயங்கள் தினசரியில் ஒரேயொரு கட்டுரையாகிறது
உன்னைப் போன்று இருண்டு உணரவியலாது
மாறும் என் நிழலின் வடிவத்தை
நீ எடுத்துக் கொண்டாய்
ஒரு செவ்விந்தியன் நித்தியதில் காத்திருத்தலோடு படுத்திருக்கிறான்
நிழல்,
நீ என்னருகில் ஊர்ந்து வருகிறாய்
ஆனால் நீ என்னை கேளாதிருக்கிறாய்
நான் இசைக்கும் இறைமையின் கவிதைகளை உன்னால் அறிந்து கொள்ள இயலாது
ஆயினும் என்னை பொருத்தவரையில்
என்னால் உன்னை கேட்கவும் உன்னைப் பார்க்கவும் முடிகிறது
விதியின் ,
பன்மை நிழல்கள்
சூரியன் உன்னை உன்னிப்பாய் கவனிக்கட்டும்
நீ என்னைப் போதுமான அளவு நேசித்தால் விட்டகல மாட்டாய்
சூரியன் முன் நடனமிடும் நீ புழுதியைக் கிளப்பவுதில்லை
நிழல்,
சூரியனின் மை
எனது ஒளியின் கையெழுத்து
வருத்தங்களின் தளவாட வண்டி
கடவுள் தன்னைத்தானே பணிவுபடுத்திக் கொள்கிறார்.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
Like · Comment · 

நானொரு புதரின் இளந்தளிரைக் கையிலெடுத்தேன்
இலையுதிர்காலம் இறந்துவிட்டது
மறந்துவிடாதே
நாம் மீண்டும் சந்திக்கப் போவதில்லை 
ஆயினும்
புதரின் இளந்தளிரில் காலத்தின் நறுமணம்
நான் இன்னும் காத்திருக்கிறேன் மறந்துவிடாதே.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
எனது வகுப்பறை ஒரு கூண்டு
கம்பிகளின் ஊடாக சூரியன் ஒரு கரத்தை நீட்டுகிறது
சுருட்டுகளை பற்றவைக்க ஏதுவாய்
இவை பிரஞ்சு பாடங்கள் ஒரு ஜோக்
நான் பாடம் நடத்த விரும்பவில்லை
புகைபிடிக்க விரும்புகிறேன்.
-Guillaume Apollinaire-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam's photo.
Like · Comment · 

I sing the joy of wandering
and the pleasure
of the wanderer's death.
-Guillaume Apollinaire-
'I sing the joy of wandering 
and the pleasure 
of the wanderer's death.

-Guillaume Apollinaire-'
Like · Comment ·