Saturday 20 June 2015

-Alexander Pushkin-. (தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)


க. மோகனரங்கன் added a new photo.
June 20 at 7:42pm ·





நான் உன்னை நேசித்திருக்கிறேன்,
அநேகமாக நான் இன்னும் உன்னை நேசிக்கிறேன்,
அநேகமாக தீச்சுடர் இன்னும் மாயவில்லை :
அது என் ஆன்மாவினுள் அமைதியாக கனல்கிறது,
இனியும் அதன்பொருட்டு நீ அவலமுறாதே
அமைதியாய் மற்றும் நம்பிக்கையற்று
நான் உன்னை நேசிக்கிறேன்,
சில தருணங்களில் பொறாமையுடனும்
ஒருசில சமயங்களில் கூச்சமடைந்தும் ,
இளகியும், வாய்மையாய், என்னைபோல்
உன்னை அகமுணர்ந்து நேசிக்கும்
இன்னொருவனை தேடியடைய
கடவுள் கொடையருளட்டும்.


-Alexander Pushkin-.
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)





மீண்டும் என்னிடம் வருந்தியிளைத்த
உன் ஜியார்ஜியாவின் பாடல்களை இசைக்காதே
அவை இன்னுமொரு வாழ்வையும் , தொலைதூர கரையையும்
நினைவினுள் கொணர்ந்து சேர்க்கிறது.


உன் இரக்கமற்ற பாடல்கள்
ஸ்டெப்பி புல்வெளியை - இரவை
தொலைவில் தென்படும்
பகட்டிலா யுவதியின் எழிலியல்புகளை
நிலவொளியில் அன்மைப்படுத்துகிறது,

நான் உன்னை காண்கிறேன்
அவளது எழிலியல்புகள் மறைகிறது
நீ இசைக்கிறாய்.............. உடனே
நான் அவளை கற்பனையடைகிறேன்.

மீண்டும் என்னிடம் வருந்தியிளைத்த
உன் ஜியார்ஜியாவின் பாடல்களை இசைக்காதே
அவை இன்னுமொரு வாழ்வையும் , தொலைதூர கரையையும்
நினைவினுள் கொணர்ந்து சேர்க்கிறது

-Alexander Pushkin-.
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)





விந்தையின் நுண்கணத்தை நான் ஞாபகமுறுகிறேன்:
நீ என்முன்னே தோன்றி உயிர்த்தாய்
ஒரு தற்காலிக உருவெளி காட்சியாய்
மாசில் அழகின் ஆவியுருவாய் .


நம்பிக்கையற்ற துயரின் ஒடுக்கத்தில்
இரைச்சலுறும் நோக்கற்ற அவதியுறுதலில்
உன் கனிந்திளகும் குரலை நெடிதாய் செவியுறுகிறேன்,
என் கனவில் நின்முகம் கண்டேன்,

ஆனால் வருடங்கள் மாய்ந்தன,
சுழன்றுழலும் கடும் காற்றில் கனவுகள் சிதறி கிடக்கின்றன
உன் கனிந்திளகிய குரலை ,உன் இறைமைநிறை முகத்தை
மறதியில் கரைத்தேன்.

தனித்திருத்தலின் வன்நிழலில்
என் நாட்கள் அமைதியாய் வலிந்து நீள்கிறது,
நம்பிக்கையற்றும் மற்றும் அகவுயிர்ப்புற்றும் ,
கண்ணீரற்றும், அன்றி வாழ்வும், அன்றி நேசமும் .

என் ஆன்மாவினுள் விழித்தல் நடுக்குறுகிறது:
நீ மறுபடியும் தோன்றி உயிர்த்தாய்
ஒரு தற்காலிக உருவெளி காட்சியாய்
மாசில் அழகின் ஆவியுருவாய் .

என் நெஞ்சம் மெய்யுறு பரவசத்தில் துடிக்கிறது
புதையுண்டவை அனைத்தும் மறு-ஜனனமடைகிறது,
நம்பிக்கை மீண்டும் அரும்பி துளிர்க்கிறது, அகவுயிர்ப்பும்.
வாழ்வும் , கண்ணீரும் , மற்றும் நேசமும்.

-Alexander Pushkin-.
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)




என் சிந்தையுள் நான் தொலைந்திருக்கிறேன்...................

இரைச்சல்மிகு தெருக்களில் திரிந்தலைந்து,
நெரிசலுற்றிருக்கும் தேவாலயத்துள் நுழைகிறேன்,
முகமறியா இளைஞர்களிடையே அமர்ந்திருக்கிறேன்,
என் சிந்தையுள் நான் தொலைந்திருக்கிறேன்.


நான் என்னிடமே கூறிக்கொள்கிறேன்: வருடங்கள் பறந்தோடும்,
எனினும் இன்னுமிங்கு பலருள்ளனர்,
நாமெல்லோரும் நித்திய நிலவறைகளின் கீழறங்குவோம்,
யாரோ ஒருவனின் நாழிகை ஏற்கனவே கரங்களிலுள்ளது,

தன்னந்தனி ஓக் மரத்தில் பார்வையூன்றிட,
நான் யோசிக்கிறேன், இந்த குலத்தலைவன்,
எவ்வாறென் தந்தையர்களது வயதை
கடந்து உயிர்த்திருந்தது போல்
மறதியுள் தொலைந்த
என் வயதையும் கடந்து உயிர்த்திருப்பான்.

நானொரு மழலையை கொஞ்சி பேணும் தருணம்
விடைபெற! நான் முன்கூட்டியே எண்ணுகிறேன்,
என் புலத்தை உன் விளைச்சலுக்கு அளிக்கிறேன்,
இதுவே தருணம் ;
நான் மக்கி மறையவும் நீ முகிழ்க்கவும்,

ஒவ்வொர் நாளுக்கும் நான் விடையளிக்கிறேன்,
அவைகளில்
என் சாதலின் ஆண்டுவிழா எதுவாயிருக்குமென
யூக்கிக்க முயல்கிறேன்.
எங்கு எவ்வாறு நான் மரித்த்லில் நிறைவேன்.?

சண்டையிட்டும் மற்றும் அலைகளில் பயணித்தும்,
அல்லது;
அருகிருக்கும் பள்ளத்தாக்கு
குளிர்ந்த என் துகள்களை பெறுமோ?

ஆயினும் இவையெல்லாம் ஒன்றாயிருக்க,
உணர்தலற்ற யாக்கையினில்,
நான் நேசிக்கும் புலங்களின் அன்மையில்
ஓய்வாய் அமைய விரும்புகிறேன்.

கல்லறையின் நுழைவாயிலில்
இளம் வாழ்வு ஆடிக்களிக்கட்டும் ,
வேறுபாட்டை துறந்த இயற்கையின் எழில்
ஒளிர்தலை நிறுத்திடாது.

-Alexander Pushkin-.
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)









ஒரு நங்கை தாழியை கீழே நழுவவிடுகிறாள் ,
பாறையின் மீது அதை உடைத்தாள்,
நங்கை வருந்தி அமர்ந்திருக்கிறாள் ,
காலியான சில்லை பிடித்திருக்கிறாள்,
மாயவசமாய் நீர் வற்றாதிருந்தது,
நங்கை காலமற்று அமர்ந்திருக்கிறாள்.
வரம்பிலா கால- ஓடையின் மீது சோகரூபமாய்.


-Alexander Pushkin-.
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)




என் பெயரில் உனக்கென்ன அப்படியொரு சுகமுறும் ஆறுதல்?
ஒரு நீர்பாய்வின் சப்தமாய் அழியும்,
இனமறியா கரையொன்றில் உடையும் அலையாகும்,
அடர்வனத்தில் செவியறியும் இரவின் ஒசைகளை ஒத்திருக்கும்.


உனது ஆல்பத்தின் ஏடுகள் மீது
ஒரு மாய்ந்த குறியீட்டை விட்டுச்செல்லும் ,
அறியா மொழியில் செதுக்கப்பட்டிருக்கும்.
கல்லறை கவிதையின் துல்லியமற்ற படிவங்களை
விடுத்துச் செல்லும்,

உனக்கென்ன அப்படியொரு சுகமுறும் ஆறுதல்?
நெடுங்காலமாய் மறந்தபோன,
நவமான உளக்கிளர்ச்சியின் சூறையினூடே,,
உன் ஆன்மாவிற்கு அவை ஏதுமளிக்காது,
பரிசுத்தமான மற்றும் தளிரிளம் ஞாபகங்கள்..

ஆனால் துன்புற்றாழும் மெளன நாளொன்றில்,
உன் துயரிடரில் என் பெயரை பேசு, சரியாக சொல்:
என்னின் ஞாபகம் உள்ளதென்று, சரியாக சொல் ,
நான் குடியிருக்கும் நெஞ்சமொன்று இவ்வுலகில் உண்டென.

-Alexander Pushkin-.
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)








Roselia Santos : About the picture of Lobo Antunes in this post, I bet this is the gate of the garage where he used to work for a long time. The garage belonged to a friend and he had a desk at a corner, with all the mess there is usually in garages around him. He looks like a serene, absent person, but by reading his interviews you can see there sometimes is a turmoil inside his head made of worries, anxieties, even depressive thoughts, I think. His life are his books, that's what he lives for, and he gets really obsessed about them. He has no social life, hardly a private life. Even with his family he confesses he sometimes feels strange, because he is not like his brothers and the other members of his family. I've read a lot about him, interviews mainly, and there are always that perplexed me as he is so paradoxical.


-Rosélia Santos-
(Alenquer Portugal)




Agitated on the inside by disgust
but with nothing showing
in their immobile features, absolutely still,
as unmoving as those of landscapes,
of photographs, 
of summer sunsets,
nothing showing in their ever-horizontal features,
decomposing silently in the Formica chairs.
-António Lobo Antunes-
****************
Thanks my Dear Friend, Rosélia Santos/ for sharing on this author i was just left with one novel of his read ( The Inquisitors Manual) .
But you shared a lot on this author's narrative and his literary legacy . Thanks a Lot.I owe this to you.




நீ மறந்துவிட்டாயென நான் நினைத்தேன் , நெஞ்சே.
வலிநுகர்ந்து சகிக்கும் உன் திறன்,
அந்த எளியகொடை வந்தடையுமென, நான் நினைத்தேன்,
இனியில்லை, இனியில்லை!
ஆழிரக்கமும் அகப்பரவசங்களும் கடந்தேகின,
நீ நம்பித்துய்த்த அரைக்கனவுகளும்.......
இப்போது எனக்குத் தெரியும்,
பேரெழில் உயிர்த்திருக்கும்வரை
அத்துனைக் காலமும்
கடும்துயருறும் என் பேராற்றலும் வாழும்.


-Alexander Pushkin-.
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)






two sides of the same 'nothing'........................

"You love me, Isabel , don't you?"

I hesitating to say


"I love you "

as I hesitated to say

" I hate you"

because

"I love" and "I hate "

are two sides of the same 'nothing',

- António Lobo Antunes-
(The Inquisitors Manual)




"You love me , Isabel , don't you?"

the hoopoes depluming the oak tree,
thousands of hoopoes in the white,
white tree depluming the oak tree,
the belfry of the church moving back and forth ,
back and forth , like a pendulum ,
the woman sitting on the ground and
warding us off with her open palms


" What is the meaning of this, what is the meaning of this?"

- António Lobo Antunes-
(The Inquisitors Manual)


 ·


Nothing interests me,
I feel uncomfortable being still
but would feel even more uncomfortable
if I moved.


I don't know whether speaking is painful or just boring.

I sit here, staring straight ahead,
with no desires,
no needs,
hollow.
I'm not even sad.

I feel only passivity and indifference.

- António Lobo Antunes-




I suppose
I have become a sort of living monument in Portugal.

But I come from a family
with roots all over the world,
so the idea of patriotism is not very strong in me.


My country is the country of
Chekhov,
Beethoven,
Velasquez -
writers I like,
painters and artists I admire.

- António Lobo Antunes-





I'm just giving you some spiel,
the ludicrous plot of a novel,
a story I invented to touch your heart—
one-third bullshit,
one-third booze,
and one-third genuine tenderness,
you know the kind of thing.


- António Lobo Antunes-



Agitated on the inside by disgust

but with nothing showing

in their immobile features, absolutely still,

as unmoving as those of landscapes,

of photographs,

of summer sunsets,

nothing showing in their ever-horizontal features,

decomposing silently in the Formica chairs.



-António Lobo Antunes-




****************

Thanks my Dear Friend, Rosélia Santos/ for sharing on this author i was just left with one novel of his read ( The Inquisitors Manual) .

But you shared a lot on this author's narrative and his literary legacy . Thanks a Lot.I owe this to you.




Rosélia Santos About the picture of Lobo Antunes in this post, I bet this is the gate of the garage where he used to work for a long time. The garage belonged to a friend and he had a desk at a corner, with all the mess there is usually in garages around him. He looks like a serene, absent person, but by reading his interviews you can see there sometimes is a turmoil inside his head made of worries, anxieties, even depressive thoughts, I think. His life are his books, that's what he lives for, and he gets really obsessed about them. He has no social life, hardly a private life. Even with his family he confesses he sometimes feels strange, because he is not like his brothers and the other members of his family. I've read a lot about him, interviews mainly, and there are always that perplexe me as he is so paradoxical.
Rosélia Santos



நெடு நாட்களுக்கு முன்பு
நானொரு புத்தகத்தில் வாசித்திருக்கிறேன்
பெண்ணின் தாய்நாடு
அவள் காதலடைந்த இடம்தானென்று...


-Antonio Lobo Antunes--
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)






Write a comment...


News Feed




Shanmugam Subramaniam
Yesterday at 9:27pm ·


Whenever anyone declares
having read a book of mine
I am disappointed by the error.
That's because my books
are not to be read in the sense
usually called reading:
the only way it seems to me
to approach the novels that I write
is to catch them
in the same manner that one catches an illness.


-Antonio Lobo Antunes--





It's funny -
my wife is more jealous of my books
than of other women
because
I'm always working and thinking about my books.


-Antonio Lobo Antunes-







முத்தமிட தன் இடதுகையை அளிக்கிறாள்..................

என் மனைவி இடதுகை பழக்கத்தினள்.
மூர்க்கமான மன- திடமுள்ளவளென அது சுட்டுகிறது,
முழுநிறை அப்பாலை உலகினள்,
சற்றே விசித்திரமானவள் , பேபி,’
சிலர் எப்போதும் வித்தியாசமாக இருக்க முயல்வார்கள்
பாவம், மற்றும் வெட்கம் .


ஆயினும் , அவள் தன் வாழ்நாளெல்லாம் பொகிமியனாய் இருந்திருக்கிறாள்...................கறுமையான காலுறைகளில்
கட்டளைகளை ஏற்க மறுப்பவளாய்,
நான் பொருமையாக அமர்ந்திருக்கிறேன்,
எது சரியென அவளிடம் எடுத்துரைக்க முயல்கிறேன்.
உன் கரங்களிலுள்ள பென்சிலை எடுத்துவிடு,
நீ பின்னோக்கி எழுதுகிறாய்
எந்த பயனுமின்றி , மற்றும்

அது அவளது பணியில் பிரதிபலிக்கிறது.
இடதுகை காபி ,
இடதுகை முட்டைகள்,
இரவில் உள்ளே வரும்போது................
முத்தமிட தன் இடதுகையை அளிக்கிறாள், அட!

இத்தருணம் அவளது வயிறு இருக்கைமீது தாழ்கிறது.
கருவுற்றிருக்கிறாள் என்கிறார்கள் .இல்லை
என்னால் தீர்மானமுறவில்லை.

-Imamu Amiri Baraka -
(Leroi Jones)
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)





அவர்கள் யாரை குறிக்கிறார்கள் என வியக்கிறேன்?

என்னுள்ளிருக்கும் எதை நான் நேசமென நினைத்தேனோ,
அதில் ஆயிரம் சந்தர்ப்பங்களை அச்சமாகவே காண்கிறேன்,
(மரத்தின் நிழல் நாற்காலியை சூழ்ந்து முறுக்குகிறது,
உறைந்த பட்சியின் தொலைதூர இசை குளிரில் சலசலக்கிறது,)


எங்கெல்லாம் சென்று என் தசையை கோருகிறேனோ,
அங்கெல்லாம் ஆன்மாவின் நுழைவாயில்களிருக்க
அதன் இன்புறு- ஆறுதலகள் அருவருப்பாயிருக்க
நானதை புரிந்துகொள்ள திணறுகிறேன்.

நானொரு மனிதனாக இருப்பினும்
தனது வழிமுறையின் ஜனனத்தில் யார் உரத்திருக்கிறான்,
என் ஆன்மாவின் ஒவ்வொரு மாற்றத்தையும்
பகிரங்கமாய் மறு-வரையறுக்கிறேன்,
இவைகளை நான் முற்கூறியதாயும்,அதனால்
லாபமடைந்தும், வேதாமகத்த்தினுடே,
அவர்களின் உச்சாடனங்கள் பாரமாயிருக்க ,

என் முகத்தில் தடமழிந்துள்ளது பரிச்சயம்.
ஒரு வினாவை எண்ணுகிறேன், ,
ஒரு விடை ,
நீ மரணமுறும்வரை
அமர்ந்து நிமிடங்களை கணக்கிடுவது எதுவாயினும்,

“ இது மரணித்த ’லி ராய்’ ? என அவர்கள் சொல்ல,
அவர்கள் யாரை குறிக்கிறார்கள் என வியக்கிறேன்?

-Imamu Amiri Baraka -
(Leroi Jones)
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)





மீண்டும் யாவுமே தொடர்வினையாகும்வரை....................

முதலில் நேரம் என்ன என்பதை
ஒருமணி நேரத்திற்கு மறந்துவிடு
இதை ஒழுங்காக தினமும் செய்,


அடுத்து;
இது வாரத்தின் எந்நாளென்பதை மற
இதை ஒழுங்காக ஒருவாரம் செய்
பிறகு நீ எந்நாட்டில் வசிக்கிறாயென்பதை மற
இதையும் இன்னொருவரோடு இணைந்து
ஒரு வாரம் செய்து பழகு
பிறகு ஒன்றிணைந்து
ஒரு வாரத்திற்கு
சில நாட்கள் விடுத்து செய்,

இதைத் தொடர்ந்து;
கூட்டல் பெருக்கல் எப்படி செய்வதென்பதையும் மற
அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது
ஒரு வார காலத்திற்கு பிறகு
உன்னால் இவைகளை மாற்றவியலும்
பின் இவையிரண்டுமே
எப்படி கண்க்கீடு செய்வதென்பதை
மறந்திட உதவும்

கணக்கிடுவது எப்படியென்பதை மற
உன் வயது தொடங்கி
பின்னோக்கி கணக்கிடுதலையும்
இரட்டைபடை எண்களில் துவங்கி
ரோமன் எண்களில் துவங்கி
ரோமன் எண்களின் பின்னங்கள் துவங்கி
பழைய நாட்காட்டியில் துவங்கி
பழமை எழுத்துக்களில் தொடர
எழுத்துக்களில் தொடர
மீண்டும் யாவுமே தொடர்வினையாகும்வரை.

W.S.Merwin-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)





நெடும் தொலைவுகளைப் பற்றி யோசிக்கையில்
நாம் இறவாமையினர் என
நீ நினைவுறுகிறாய்

அவர்கள் நம்மிலிருந்து விடுத்து போவதாக
அனைவருமே நம்மிலிருந்து விடுத்து போவதாக,
நீ நினைக்கிறாய்,
யாரும் மரிப்பதுமில்லை, யாரும் மறக்கப்படுவதுமில்லை


உலகெங்கிலும் அணைகளிருக்கின்றன
அவை தன் முதுகு புறமாய் சாய்ந்து
கடலை பற்றி யோசித்த வண்ணமாயிருக்கிறது.

-W.S.Merwin-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)





Shanmugam Subramaniam
June 17 at 9:48pm · Edited ·


ஒவ்வொரு வருடத்தையும் அறிந்துணராது
நாளொன்றை நான் கடத்துகிறேன்
அந்தமுறும் தீ என்னை நோக்கி கையசைத்து போகிறது,
மெளனம் விடுத்துப் போகிறது
அயர்வில்லா பயணி
ஒளியற்ற தாரகையின் மின் -கதிராயிருக்க,


இனி; எப்போதும் விநோதமான உடையில்
என் வாழ்வை நான் கண்டறியப் போவதில்லை
பூமியால் பெருவியப்புற்று
தனியொரு யுவதியின் நேசமும்
ஆண்களின் வெட்கமின்மையும்
மழையுள் ஆழ்ந்த மூன்று நாட்களுக்குப்
பிந்தைய பொழுதினில் எழுதுகையில்
சிறுபுள் இசைக்க வீழ்தல் நிறுத்தமுற
எதற்கென அறியாது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

-W.S.Merwin-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)




ஆன்மாவின் மேதைமையன்றி, பித்தமென்பதென்ன..................

இருன்மையின் பொழுதொன்றில், விழிகள் நோக்கத் துவங்கின,
ஆழ்மையுறும் நிழலினில் என் நிழலை சந்திக்கிறேன்;
எதிரொலித்திருக்கும் வனத்தினில்
என் எதிரொலியை செவியுற்றேன்,-
இயற்கை-தெய்வம் தருவிடம் அழுதிருந்தது,
மலை விலங்குகளுக்கும் குகை சர்ப்பங்களுக்கும்
நாரைக்கும் மற்றும் இசை- பட்சிக்குமிடைய
நான் வாழ்வடைகிறேன்,.


ஆன்மாவின் மேதைமையன்றி பித்தமென்பதென்ன,
சூழ்நிலையுடனான வேற்றுமைகள் எழ?
நாள் தீயினுள் அமிழ்கிறது,
தூய அவசத்தின் மீ-தூய்மையை நானறிவேன்,
வியர்த்திருக்கும் சுவரில் என் நிழல் குத்தப்பட்டுள்ளது,
பாறைகளுக்கிடையான நிலத்திலிருப்பதென்ன குகையா,
அல்லது சுழன்றெழும் பாதையா?
விளிம்பொன்றே என்னிடமுள்ளது.

தொடர்புகளின் இடையறாத பொழிவில்,
பட்சிகள் பாய்ந்தோடும் இரவில்,
விளிம்புகளழிந்த கந்தை நிலா,
விரிந்தகன்ற காலைப்பொழுதின் வெளிச்சத்தில்
நள்ளிரவு மீள்- சம்பவிக்கிறது!
தான் யாரென்ன அறிய ஒருவன் நெடும் தொலைவுற்றான்,
சுயத்தின் மரித்தல் கண்ணீரற்ற இரவாய் நீட்சியுற,
இயற்கையின் பன்-வடிவங்கள் செய்ற்கை ஓளியில் ஜுவாலையாக கிளர்ந்தெழுகிறது,

இருள்; இருளே என் ஒளி, மற்றும் இருளடர் வேட்கை,
என் ஆன்மா, வெப்பத்தில் பித்தமுற்ற கோடை பூச்சியாகி,
சன்னலில் ரீங்கரிக்கிறது, எந்த நான் என் நானாகவுள்ளது?
ஒரு வீழ்ந்த மனிதனாய்,
எனது அச்சத்துள்ளிருந்து நான் மேலேறுகிறேன்,
மனம் அதுவாகவே உள் நுழைகிறது, மற்றும்
கடவுள் மனமாய்,
ஒன்றென்பது ஒன்றாகவுள்ளது,
கிழித்தெறியும் காற்றில் கட்டற்றிருக்கிறது.

-Theodore Roethke-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)