Tuesday 23 June 2015

-Paul Verlaine- (தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)

நீ ஓய்வுறும் சிறுபொழுதில் நானொரு கணம் துயில்கிறேன்...........

இங்கிருக்கின்றன , கனிகள் , மலர்கள் ,கிளைகள், தழைகள் ,
என் நெஞ்சே, இங்கும் கூட, நீ மட்டுமே கட்டளையிடுகிறாய்.
ஓ, உன் வெண்கரங்களால்
இதை துண்டு துண்டாய் கிழித்தெறியாதே,
ஆனால், உன் நேர்த்தியான விழிகளால் ,
என் புனிதயாத்திரையை ஆசீவதித்தருள்.


இன்னமும் புலர்காலை பனியால்,
நான் முழுமையாய் போர்த்தப்பட்டிருக்கிறேன்.
தவழ்ந்து கடக்கும் தென்றல் என் முகமீது குளிர்கிறது,
என் அயர்ச்சி உன் தாளில் அருளடைந்து சாந்தமுறட்டும்,
என் அன்பின் கணங்கள அதை நவமுறச் செய்யும் .

ஓ என் சிரம் உன்னிளம் மார்பினில் சாய்ந்திருக்கட்டும் ,
இப்போதும் ,உன் இறுதி முத்தத்திலும் எதிரொலிக்கிறது,
இனிந்து வீசிய புயல் இவ்வாறே சமதானத்தை ஈந்திட ,
நீ ஓய்வுறும் சிறுபொழுதில் நானொரு கணம் துயில்கிறேன்.

-Paul Verlaine-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)





ஒரு பண்டைய சுடுமண் ஃபான்
படர் பச்சைப் புல்லின் இதயத்துள் நகைக்கிறது
முன்னறிவித்த அவநிகழ்வு வந்துறும்
இந்த அமைதியின் நீள் -கணங்களுக்கு பின்னதாய்


உன்னையும் என்னையும் எது வழிநடத்தியதோ
மகிழ்வற்ற தோற்றத்தினரின் புனிதயாத்திரைகள்
இத்தருணம்வரை ,கடந்தேகி கொண்டிருக்க
டாம்பரின்களின் இசையொலிகளுக்கு இன்னுமும் சுழ்லகிறது.

-Paul Verlaine-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)




அவள் செல்ல பூணையோடு விளையாடிக் கொண்டிருந்தாள்
காண்பதற்கு மிகவும் விந்தையாய் தோன்றியது
வெண்மை கரங்கள் மற்றும் அதிவெண் உள்ளங்கைகள்
மருளொளியில் அவர்களின் களியாட்டத்தில்


அவள் மறைவாய் ஒளிந்திருந்தாள் - குற்றமுள்ளவளாய்!
மிட்டன் கையுறையின் கீழ்புறமாயுள்ள கறும் நூலிழைகள்
உயிர்மாய்க்கும் மணிக்கல் விரல்நகங்கள்
கூர்மைகுவிந்து மற்றும் சவர மென்கத்தியாய் பளிச்சிடுகிறது.

மற்றொன்றும் அடக்கமாய் தோற்றமளிக்கிறது
அறுத்திழுக்கும் வளைவுற்ற நகம் இழுக்கிறது
ஆனால், பேய்த்தனமாய் , அவள் அனத்தையும் கண்டாள்.

அறையுள் அங்கு
தொனிவிஞ்சிய நகைப்பை
அவளோ வான்மேவ ஓலிக்கிறாள்
அங்கு நான்கு பாஸ்பரஸ் சுடர்- புள்ளிள் ஒளிமிளிர்ந்தது.

-Paul Verlaine-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)



ஓ , அவளது எழிலான விழிகளை
எப்படியெல்லாம் நான் நேசித்திருக்கிறேன்,
தாரகைகள் நிரம்பிய வானைக் காட்டிலும் ஜொலித்திருக்க
அவளது விழியில் துள்ளும் குறும்பை நேசித்திருக்கிறேன்.


நாம் துடிப்புற நடமிடுவோம்

காதலர்களை கலக்கத்தில் நிரப்ப
நிச்சயமாக தனக்கென வழிகொண்டிருக்கிறாள்
அது அவர்களை மாயத்துலாழ்த்தியது
இதை நான் சொல்லியாக வேண்டும் !

நாம் துடிப்புற நடமிடுவோம்

ஆனால், இன்னும் மேன்மையுற்றிருக்க ,அல்லது
என் மனதிலிருந்து மறைந்தகல துவங்கியதிலிருந்து.
அவள் விடுத்து சென்ற முத்தமதை காண்கிறேன்,

நாம் துடிப்புற நடமிடுவோம்

நான் நினைவை மீட்கிறேன் , ஓ, நான் நினைவை மீட்கிறேன்
களியாட்டத்தின் சில கணங்களில்
மற்றனைத்தினும் நான் அவைகளையே
அதீத பரிசென கொள்கிறேன்

நாம் துடிப்புற நடமிடுவோம்

-Paul Verlaine-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)



வெள்ளியாய் நிலா
மரங்களில் பிரசாசித்திருக்கிறது
ஒவ்வொரு கிளையும் மென்தென்றலில்
வார்த்தைகளை கீழனுப்புகிறது
பச்சையத்தின் தொல் பிராத்தனையாய் ...............


அன்புக்குரியவளே

குளம் பிரதிபலிக்கிறது
ஆடியின் ஆழ்தல்
விளிம்புருக்கள்
எங்கு வில்லோக்கள் தாழ்கிறதோ
தளிர்க்காற்று விழிநீர் சொரிகிறது.......

கனவே ,இதுவே தருணம்

நேசிக்கும்,
விரிந்தாழ்ந்த அமைதி
இறுதியாய் தாழந்திறங்க
தாரகை ஒளிரும் வான்
வானவில்லின் மாடத்திலிருந்து.............

வானுலகு நேரிட்டுவிட்டது.

-Paul Verlaine-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)




ஆழ்ந்துபதியும் விசித்திரமான கனவை,
அவ்வப்போது நான் காண நேரிட்டிருக்கிறது
முன்னறியா யுவதி பற்றியதாய் ,
நான் யாரில் நேசம் கனிந்திருக்கிறேனோ.
என்னையவள் நேசிக்கிறாள்,
கணமுறும் ஓவ்வொர் சந்தர்ப்பத்திலும்,
அவள் முற்றிலும் வேறாயிருப்பதில்லை,
அவளுக்கு நன்கு புரிந்திருக்கிறது .


உணர்ந்துமிருக்கிறாள் என்னை நன்கறிந்திருக்கிறாள்
என் உள்ளம் தெளிந்திருக்க
அவளுக்கென மட்டுமே , அந்தோ விரித்துரைக்க ,
அவளுக்கென மட்டுமே,
வெளிரிய என் புருவத்தின் மீதுற்ற வியர்வை
அவளது விழிநீரைக் கொண்டே
தன்னையவள் கிளர்த்திட இயலும்.

அவள் சிவந்த குழலுடையவளா அல்லது ஒளிர்நிறமுடையவளா?
நான் அறிந்திலேன்
அவள் பெயர் ? உரத்தும் இனித்திருப்பதையும் நானறிவேன்
நாம் நேசித்திருந்த பலரும் இப்போது மாய்ந்திருக்கிறார்கள்

சிலைகளின் வெறித்தலை ஒத்திருகிறது அவளது பார்த்தல்,
அவளது குரலெழில் ,தொலைவாயும் மற்றும் சாந்தமாயும் ஆழ்ந்தமைய
அவளது குரலில்,
அன்பிழைந்து அன்மித்த அசைவின்மையில்
தொனி வளைவுற்றிருக்கிறது.

Paul Verlaine-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)




வான் கூரையினும் நெடிதுயர்ந்திருக்கிறது:
அப்படியொரு நீலம், அப்படியொரு ஓசையின்மை,
கூரையைக் கடந்து நெடிதுயர்ந்து துளிர்த்த மரம்
தன் உள்ளங்கையை உலுக்கியசைக்கிறது


மணியினை , நீலம் கவிந்த வானில் காண்கிறேன்
சாந்தமாய் ஒலிக்கிறது
மரத்தின் மீதமர்ந்த பறவை
வருந்தி கிளர்ச்சியற்று இசைக்கிறது

என் இறைவனே , என் இறைவனே , உலகு அருகிருக்கிறது
வாழ்வு தன்னிச்சையாய் தொடர்கிறது
நான் கேட்கும் ,மோனத்தின் முணுமுணுப்பு
நகரத்திலிருந்து எழுகிறது

அவர்கள் எங்குற்றார்கள் , ஓ உன்னை நான்
இடையறா கண்ணீர் உகுத்தலில் பார்க்கவும்,
அவர்கள் எங்குற்றார்கள், ஓ எனக்கு பதிலளிக்க.,
உன் முன்னிளம் வருடங்கள் ?.

-Paul Verlaine-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)





உன்னுடன் இயைந்து நான் கேட்ட இசை
இசையைக் காட்டிலும் இன்னும் மிகை,
உன்னுடன் இயைந்து நான் முறித்த அப்பம்
அப்பத்தைக் காட்டிலும் இன்னும் மிகை
இக்கணப் பொழுதில் நீயியற்றிருக்கிறேன். யாவுமே பாழில்;
முன்னொரு கணத்தினில் திளைத்த அழகு
இப்போது உயிர்நீங்கியிருக்கிறது.


முற்பொழுதொன்றில்
இந்த மேசையை ,வெள்ளியை நின்கரங்கள் தீண்டியுள்ளன,
இக்குவளையை நின் விரல்கள் பற்றியிருந்ததை கண்ணுற்றிருக்கிறேன்,
இங்குள்ள பொருட்கள் உன்னை ஞாபகம் கொள்வதில்லை, அன்புக்குரியவளே-
ஆயினும் நின் தீண்டலின் தடயம்
அவைகளில் மறைந்தொழியாது,

அவைகளை நின் கரங்களாலும் நின்விழிகளாலும் ஆசிர்வதித்தருளேன்;
அவை என் நெஞ்சில் ஞாபகமடையும் என்றென்றைக்கும்
அவை உன்னை முன்பறிந்திருக்கும் ,
ஓ மீ-எழிலே, நிறை ஞானமே.

-Conrad Aiken-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)




The Poet
is a madman
lost in adventure.

-Paul Verlaine-









Everything,
in the world,
exists to end up
in a book.
-Stephane Mallarme-




I've got you on my mind, I'm feeling kind of sad and low.
Got you on my mind, feeling kind of sad and low.
I'm wondering where you are, wondering why you had to go.


[Chorus:]
Tears begin to fall every time I hear your name.
Tears begin to fall every time I hear your name.
But since you went away, nothing seems to be the same.

No matter how I try,
My heart just don't see why
I can't forget you.
If ever it should be
You want to come back to me,
You know I'd let you.

[Repeat First Verse]

[Chorus]

[Repeat First Verse]

I'm wondering where you are, wondering why you had to go.
I'm wondering where you are, wondering why you had to go.





Bell bottom blues, you made me cry.........................


Bell bottom blues, you made me cry.
I don't want to lose this feeling.
And if I could choose a place to die
It would be in your arms.


Do you want to see me crawl across the floor to you?
Do you want to hear me beg you to take me back?
I'd gladly do it because
I don't want to fade away.
Give me one more day, please.
I don't want to fade away.
In your heart I want to stay.

It's all wrong, but it's all right.
The way that you treat me baby.
Once I was strong but I lost the fight.
You won't find a better loser.

[Chorus 2x]

Bell bottom blues, don't say goodbye.
I'm sure we're gonna meet again,
And if we do, don't you be surprised
If you find me with another lover.

[Chorus]

I don't want to fade away.
Give me one more day please.
I don't want to fade away.
In your heart I long to stay.

- Eric Clapton -



I've never missed a gig yet.
Music makes people happy,
and that's why I go on doing it -
I like to see everybody smile.


-Buddy Guy-






Everybody is a stranger,
but
that's the danger in going my own way.

- John Mayer-









Who I am as a guitarist
is defined
by my failure to become Jimi Hendrix.

-John Mayer-...See More


City Love (Live) by John Mayer (Crossroads Guitar Festival)
Yes I know, everyone says John Mayer is a bone-head, slime ball but this song is pretty damn good and isn't that what really counts?





I've got you on my mind, I'm feeling kind of sad and low.
Got you on my mind, feeling kind of sad and low.
I'm wondering where you are, wondering why you had to go.


[Chorus:]
Tears begin to fall every time I hear your name.
Tears begin to fall every time I hear your name.
But since you went away, nothing seems to be the same.

No matter how I try,
My heart just don't see why
I can't forget you.
If ever it should be
You want to come back to me,
You know I'd let you.

[Repeat First Verse]

[Chorus]

[Repeat First Verse]

I'm wondering where you are, wondering why you had to go.
I'm wondering where you are, wondering why you had to go.








கேளுங்கள்
உலர்நில பூர்வகுடிகளே
யாழ்மீட்டும் பாணன் விரல்களிலிருந்து
மழையுறுகிறது.


-W.S.Merwin -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம)



நாள் இன்னும் கனிந்திரா பொழுதில்
மரித்த செஸ்நட் இலைகளின்
நூற்றாண்டுகள் மீது நடை பதிக்கிறேன்,
துயர்படரா இடத்தில்
ஒரீயோல் பறவை எனினும்
மற்றுமொரு ஜீவதத்திலிருந்து என்னை கதகதப்பூட்டுகிறது
நான் விழித்திருக்கவும்


இருன்மை ஆழ்ந்திருக்கும் கணமதில் மழைசொரிந்திருக்கும்
பொன்னொளிர் காளான்கள்
என்னினல்லாத துயிலுதலுக்குள் உந்திசெல்ல
என் துயிலவிழும்
அவ்விதம் மலையேகி அவைகளை காணவும் வந்தேன்

அவை தோன்றியெழுமிடம் நானங்கு முன்னம் இருந்திருக்கிறேன்
அவைகளின் அமானுஷ்ய பீடித்தலை
இன்னொரு ஜீவிதத்தை ஞாபகமடைவதாய் இனம்காண

வேறெங்கு நான் நடைபதிக்கிறேன்
என்னை கண்ணுறவே இக்கணம்.

-W.S.Merwin -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)



அவர்கள் உன் ஆடையை அணியத் துவங்கியதும்
அவர்களது கனவுகள் உன்னுடையதைப் போலிருக்க நேர்கிறதா
யாரைப் போல் அவர்கள் தோன்றுகிறார்கள்

அவர்கள் உன் மொழியை புழங்கத் துவங்கியதும்
நீ கூறுவதையே அவர்களும் கூறுகிறார்களா
உன் வார்த்தைகளில் அவர்கள் யாராயிருக்கிறார்கள்


உன் பணத்தை அவர்கள் செலவிட துவங்கியதும்
உன்னுடைய தேவையை ஒத்திருக்கிறதா அவர்கள் தேவையும்
அன்றி பொருண்மையில் ஏதேனும் மாறுபடுகிறதா

அவர்கள் உன் கடவுளுக்கு உகந்தவராய் மாற்றப்பட்டதும்
அவர்கள் யாரிடம் பிராத்திக்கிறார்களென நீ அறிவாயா
பிராத்திருக்கிறவர்கள் யாரென நீ அறிவாயா
நீ அங்கிருக்க போவதில்லை.

-W.S.Merwin -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)