Tuesday 16 June 2015

-Theodore Roethke- (தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)



மாண்டவர்கள் கிடைக்கோட்டினர், இயக்கமிழந்தவர்கள்,
கல்லறையை குறிக்கும் சிறுகல்லினும்
குறைவான இடத்தை புழங்குபவர்கள்.

ஆனால்,
பாறையின் விரிசலிடுக்கில் வளரும் பூக்களாய்
அவர்கள் பேசும் வார்த்தைகள்,


மரங்களுக்கிடையே நகரும் மனிதர்களாய்,
அவர்களின் பேய்மை
வார்த்தைகளிடையே எளிதாய் நகரும்.

புலனாகா கனலின் எரிபொருளாக
கதிரொளியும் .நாட்களும் சேகரமாகின்றன.


-Emyr Humphreys-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)










நீ அறிவாயா
எது உண்மையென்று
எது சரியாய் அல்லது
பிழையாய் கூறபட்டதென்று,


எது அறிவார்த்தமாய்
அல்லது பொருத்தமாய் எது
தப்பிதமாக , அல்லது
சரியாக செய்யபட்டதென்று ,

அப்படியிருப்பின் அல்லது
அப்படியில்லாதிருப்பின், சரியாகயிருப்பின்,
நான் எண்ணுகிறேன்
நான் எண்ணுகிறேன் மற்றும்
எண்ணி எண்ணிக்கொண்டே

ஓரிடத்தில்
நான் அம்ர்ந்திருக்கிறேன்,
அங்கு ,அது இருக்க ,
ஒரு சிறிய

தெளிவற்ற பொருண்மை
அரிதாயுணர, அது
ஒருவகை
சின்னஞ்சிறு ஏதுமின்மை.

-Robert Creeley-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)





Love is not love
until
love's vulnerable.

-Theodore Roethke-

'Love is not love
 until 
love's vulnerable.

-Theodore Roethke-'


என் அன்மையிலிருப்போரில் யாராயிருக்கிறாய் நீ?

நான் துயிலுறவே விழிக்கிறேன்,
நடையிடலை நான் மெதுவாக செய்கிறேன்.
எதனில் அஞ்சாதிருக்கிறனோ,
அதனில் என் விதியை உணர்கிறேன்
நான் எங்கு சென்றடைய வேண்டுமோ
அவ்விடத்தை போதலில் கற்றறிகிறேன்


உணர்தலில் நாம் சிந்திக்கிறோம் .
அறிவதற்கென்ன உள்ளது.
செவியிலிருந்து செவிக்கிடையே
என் இருத்தலின் நடமிடலை செவியுறுகிறேன்,
நடையிடலை நான் மெதுவாக செய்கிறேன்.

அணுக்கமாய்
என் அன்மையிலிருப்போரில் யாராயிருக்கிறாய் நீ?
இறைவன் பூமியை ஆசீர்வதிக்கட்டும்!
அங்கு மெதுவாக நடக்கிறேன்,
நான் எங்கு சென்றடைய வேண்டுமோ
அவ்விடத்தை போதலில் கற்றறிகிறேன்.

ஓளி தருவை அகப்படுத்துகிறது,
எப்படியென யாரால் இயம்பவியலும் ?
ஒரு அற்ப புழு சுழல்படிக்கட்டில் ஏறிச்செல்கிறது,
நான் துயிலுறவே விழிக்கிறேன்
நடையிடலை நான் மெதுவாக செய்கிறேன்.

உனக்கும் எனக்குமாய் செய்ய
பேரியற்கைக்கு மற்றொன்றிருக்கிறது, ஆகையால்
மேலும் அழகாய் உயிர்ப்புள்ள இளங்காற்றை ஏற்றிடு,
நான் எங்கு சென்றடைய வேண்டுமோ
அவ்விடத்தை போதலில் கற்றறிகிறேன்.

இந்த அசைவாட்டம் என்னை திடப்படுத்துகிறது,
நான் அறிந்துணர வேண்டும்.
எது அப்பால் வீழ்ந்திருக்கிறதோ அது அருகிருக்கிறது .
நான் துயிலுறவே விழிக்கிறேன்
நடையிடலை நான் மெதுவாக செய்கிறேன்.
நான் எங்கு சென்றடைய வேண்டுமோ
அவ்விடத்தை போதலில் கற்றறிகிறேன்.

-Theodore Roethke-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)