Tuesday 30 June 2015

-Margaret Atwood - (தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)

சுடப்பட்ட பறவை காற்றில் கவிழ்கிறது,
பிறரதை உன்னிக்க
எது நடக்கிறதென அவர்கள் அறியத் தேவையிருக்கிறது.
மர இலைகள் சடசடக்கிறது,
மான் வாலை இசிவுற்றிழுக்கிறது, 
முயல்கள் செவிகளை சுழற்றிட .
புற்களை மேய்வன பதுங்குகின்றன,
மாசகற்று உயிரிகள் தங்கள் பற்களை நக்கின,
சிந்திச் சிதறிய வாழ்வு அவர்களை கிலியுறச் செய்யவில்லை .
நம்மை எது எச்சரிக்கிறது?
நாம் எதில் உணவடைகிறோம் ?
நாம் அனைத்தையும் உள்ளிழுக்க
காயம் ஒன்றன்பின் இன்னொன்றாக நீளும்,
சிதறிய இடிமானம் - இடிமானமென துப்பாக்கி உரைக்கிறது
நம் முகங்கள் கண்ணாடி மினுக்கலில் மிளிர
புகையென கிளம்பும் இரவு.
ஓ; உன் விழிகளை ஒளித்து வை -
ஓலியமுங்கிய அறையில் சற்றே அமர்தல் நலம்,
கதவுகள் பூட்டப்பட்டுள்ளன, சாதனங்கள் பிடுங்கப்பட்டுள்ளன
ஏதுமின்மையுடன் ;
சென்றோடிய கோடையில் வாங்கிய
நயாகரா புகைப்பட காட்சியின்
நீரனைத்தும் தணிவு கிளர்த்தும்
செங்குத்துப்பாறையில் மெதுவாயியங்கும் காட்சி வழிந்து,
வெதுவெது பச்சைய இனிப்பு பாய,
நீச்சலிடும் பலவீனனை
அல்லது
தங்களது மஞ்சள் படகிலுள்ள இரு மழலைகளை
காணாதிருகக் முயற்சிக்கிறது.
-Margaret Atwood -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)



That God is Coloring Newton does shew
And the Devil is a Black Outline, all of us know .
-William Blake -

இரகசியத்தனம் உன்னுடாக பாய்கிறது
வேறு தன்மையதான குருதி.
ஒரு துர்மிட்டாயை
நீ உட்கொண்டதைப் போல்,
வாய்க்குள் இட்டது போல்,
அது இனித்தபடியே நாவில் இளகிச் சரியட்டும்
உரைத்தலின் நேரெதிர் பயணமாய்,
குரலவளையொலியிலும் மற்றும் சீறொலியிலும்
வார்த்தை கரைந்தழிகிறது
நிதானமான சுவாச உட்கொள்ளுதல் -


இப்போது அது உன்னுளிழைகிறது, இரகசியத்தனம்.
பண்டையதாய் மற்றும் கயமையாய், மதுரமிகுந்தினிக்க,
அடர்கருமை வெல்வெட்
உன்னகத்தில் முகிழ்கிறது,
மையாலான பாப்பி .

உன்னால் வேறொன்றை குறித்தும் யோசிக்கவியலாது.
அது உன்னிடம் இருக்குமாயின் , மிகுதியாய் வேண்டுவாய்.
எத்தகைய மீ-ஆற்றலை கையளிக்கிறது!
அறிந்திராமலே அறிந்திடும் மாசக்தியை அளிக்கிறது,

கற்கதவத்தின் ஆற்றலும் ,
இரும்பு முகத்திரையின் ஆற்றலும்,
நொறுக்குண்ட விரல்களின் ஆற்றலும்,
மூழ்கடிக்கப்பட்ட எலும்புகளின் ஆற்றலும்

கிணற்றின் ஆழ்மையிலிருந்து பீறிடும் கூக்குரலொலி.

Margaret Atwood -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)






Touch comes before sight,
before speech.

It is the first language and the last,
and it always
tells the truth.


-Margaret Atwood-





உன்னை நேசிப்பவன் அண்டையறையில்
தனக்குத்தானே உரையாடிக் கொள்ளுவதைக் கேட்டாயா.
நீ செவியுறுவதை அவன் அறிந்திருக்கவில்லை .
உன் செவியை சுவரின்மேல் பதிக்கிறாய் ஆனால்
ஒருவகையான உறுமல் சத்தம் மிக -
வார்த்தைகளை உன்னால் ஈர்த்தறிய இயலவில்லை
அவன் சினந்திருகிறானா? அன்றி உறுதி கூறுகிறானா?
கவிதையின் இருன்மையுற்ற நீள் பக்கமொன்றின் அடிக்குறிப்பா?
அல்லது ஒருவகை உரைகூறலா
கார் சாவியொத்த ஏதோ ஒன்றை
தன்வசமிருந்த்தை இழந்து தேடியலைகிறானா?
பின்பு சட்டென இசைக்கிறான்
நீ திகைத்ததிர்ந்தாய் , ஏனென்றால்
இது புதிதாயாயிருந்ததது ஆயினும்
நீ கதவுகளை திறக்கவில்லை, நீ உட் புகவுமில்லை,
ஆழ்தொனியிலவன் இசைத்திருந்தான்- சீரற்ற ஸ்தாயையில்
ஊதா பச்சை சலித்திருக்கும் ஒற்றைத்தொனி,
அடர்ந்த ஹீதரின் புதராக.
அவன் உனக்கெனவோ அன்றி,
உன்னைச் சுட்டியோ இசைக்கவில்லை.
அவன் மற்றொன்றின் மூலம் மகிழ்கிறான்
இவையேதும் உன்னைச் சார்ந்ததல்ல-
அவன் அறிந்திரா யாரோ ஒருவன்
தன்னந்தனியனாய் சொந்த அறையில் இசைக்கிறான்,
ஏனித்துனை வதையுணர்ந்தாய், ஆர்வமடைந்தாய்,
மகிழவும் செய்தாய்
கட்டற விடுவிக்கபட்டாய்?


-Margaret Atwood -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)








ஆடியின் ஊடாக சென்றடைந்து
உங்கள் மழலைகள் கண்ணாடியில் கைகளை
அறுத்துக் கொள்கிறார்கள்
அங்குதான் அன்பிற்கினியவர்கள் ஒளிந்திருந்தார்கள்.


சிறிதேனும் இதை நீ எதிர்பார்க்கவில்லை :
அவர்களுக்கு மகிழ்ச்சியே பிரதானமென நினைத்தாய்,
உள-சிறாய்ப்புகளல்ல.

மகிழ்ச்சி எளிதாய் முன் தோன்றுமென
நீ நினைத்திருந்தாய்
பிரயத்தனமேதுமின்றி அல்லது
எவ்வித வினையாற்றலின்றி

பறவையின் அழைப்பிசையாய் அல்லது
நடைவழி மலராய்
வெள்ளி கயல்திரளாய்

இப்போதவர்கள் காதலின் நிமித்தமாய்
தங்களையே அறுத்து
இரகசியமாய் கதறியழுகின்றனர்
உங்கள் சொந்த கரங்களே மரமரக்கின்றன

ஏனென்றால் உங்களால் இயல்வது ஏதுமில்லை
அப்படி செய்யாதேயென - நீ உரைத்தலில்லை;
ஏனென்றால்
நீயும் அதை அவசியமென எண்ணியிருக்கவில்லை
இப்போது நொறுக்குண்ட கண்ணாடித் சில்லுகள் இரைந்திருக்கின்றன
உங்கள் மழலைகள் செந்நிறம் தோய்ந்த கைகளுடனிருக்க

இறுக பற்றிய
நிலா மற்றும் எதிரொலிகள், , ஏதுமின்மை ,மற்றும் நிழல்
இன்னமும்
நீயதைச் செய்த நேர்த்தி.

-Margaret Atwood -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)






The Eskimos had fifty-two names for snow
because
it was important to them:
there ought to be as many for love.


-Margaret Atwood-